Friday, March 14, 2014

" இசைக்குயில் புனித செசீலியம்மாள்."


 
                                               " இசைக்குயில் புனித செசீலியம்மாள்."

      இந்த நாளில் இது நடக்கும் என்று தெரிந்துவிட்டால் அப்புறம் வாழ்க்கையில் சுவாரஸ்யம் என்பதே இருக்காது. இப்படித்தான் அன்றோரு நாள் கண்விழித்தார் யேசுசபையை சேர்ந்த ஒரு குருவானவர். இத்தாலியிளுள்ள ஃப்லொரன்ஸ் பட்டிணத்தில் பணியாற்றிவந்த அந்த வெனிஸ் என்னும் குருவானவருக்கு அன்றையநாளில் தன் வாழ்வில் ஒரு வானம்பாடி வந்து தன் வழ்கையையே புரட்டிப்போடும் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. [இந்த ஃப்லோரன்ஸ் பட்டிணத்திலிருந்த சலவைக்கற்களைக்கொண்டு வந்துதான் வத்திக்கான் அரண்மனையும் கட்டப்பட்டது. உலகமஹா சிற்பி மைக்கேல் ஆஞ்சலோவின் பல உயிர் ஓவியமான சிறப்பங்கள் அனைத்தும் இங்கிருந்துகொண்டுவந்த சலவைக்கற்களால்தான் செய்யப்போட்டன. அந்த உலகமஹா சிற்பி மைக்கேல் ஆஞ்சலோவின் சமாதியும் இந்த ஃப்லொரன்ஸ் பட்டிணத்தில்தான் உள்ளது.].
            தன் மடத்து சிரேஸ்ட்டர் தன்னை அழைக்கிறார் என்றதும் உடனே அவரை சந்தித்தார் ஃபாதர் வெனிஸ்.
" பாதர் வெனிஸ்... உங்களை நம்பி ஒரு பெரும் பொருப்பு உங்களிடம் ஒப்படைக்கப்போகிறேன். நம் பயிற்சி மாணவர்களுக்கு நீங்கள் ஒரு மூன்று நாள் தியானம் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த தியானம் பாத்தர் நோஸ்த்தர் அதாவது பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே என்னும் ஜெபத்தின் விரிவுறையாக இருக்க வேண்டும். பரலோக பிதாவைப்பற்றியும் மோட்ச பேரின்பம் பற்றியும் நீங்கள் அதிகமாக சொல்ல வேண்டும். இது உங்களால் முடியும் என நான் நினைகிறேன். உங்களுக்கு ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்கலாம். ஒன்றும்  கட்டாயம் இல்லை." என்றார்.
" கணம் சிரேஸ்ட்டர் அவர்களே...நீங்கள் இந்த காரியத்தை என்னை நம்பி ஒப்படைப்பதற்கு மிகவும் நன்றி. எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. மேலும் மோட்ச ராஜ்ஜியம் பற்றி  அறிய எனக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நான் இதைப்பற்றி பல காரியங்கள் அறிய வேண்டி உள்ளது. எனக்கு ஒரு மூன்று நாள் அவகாசம் கொடுத்தால் நான் என்னை தயார் செய்துகொள்ள தோதாக இருக்கும்" என்றார் ஃபாதர் வெனிஸ்.
" ஒன்றும் அவசரம் இல்லை.. தியானம் அடுத்த வாரம்தான் ஆரம்பமாகப்போகின்றது. எனவே நீங்கள் வேண்டிய கால அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார் அந்த சிரேஸ்ட்டர்.
       சிரேஸ்ட்டரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு தன் அறையில் பிரவேசித்த ஃபாதர் வெனிஸ் தன் நாட்குறிப்பில் அன்றைய தேதி 19.7.1600 என்று ஆரம்பித்து அன்றைய நாளீல் தான்  செய்ய வேண்டியிருக்கும் அனைத்து காரியங்களையும் எழுதிவைத்தார். பின் தனக்கு இடப்பட்ட தியான தலைப்புக்கு வேண்டிய சகல ஆதாரங்களையும் குறிப்புகளையும் எழுத ஆரம்பித்தார். அப்போது வானம்பாடி என்றும் கோகிலா என்றும் அழைக்கப்படும் ஒரு பறவை தன் மேஜையின் மீது வந்து உட்கார்ந்து தன் இனிய குரலால் ஒரு பாடலை பாட ஆரம்பித்தது.
" அட வானம்பாடி... நீ இங்கே எப்படி வந்தாய்..." என்று கேட்டுக்கொண்டே தன் நாட்குறிப்பில் இந்த வானம்பாடியின் வருகையைப்பற்றியும் எழுதிவைத்தார். அவ்வளவுதான்.
       இந்த வானம்படி தன் பிரம்மிக்க வைக்கும் இசைப்பாடலால் இந்தப்பாதிரியாரை கவர்ந்திழுத்தது. பாதிரியார் வெனிஸ் எழுதுவை நிறுத்தினார். அந்த பேனாவின் மூடிகூட மீண்டும்  மூடப்படவில்லை. வானம்பாடி அப்படியே வெளியே செல்ல ஆரம்பித்தது.. அதைப்பின்பற்றி பாதிரியார் வெனிஸும் செல்ல ஆரம்பித்தார். அப்போது அவருக்கு வயது சுமார் நாற்பதுதான்  இருக்கும். பிறகு அவர் சரித்திரத்திலிருந்து காணாமல் போய்விட்டார். எங்கு தேடியும் அவரைப்பற்றி எதுவும் அறிந்துகொள்ள முடியவில்லை. அவரைப்பற்றிய தேடல்கள் அனைத்தும் வீனாயின.
                      கி.பி. 250. ரோம்.
         அந்த ரோமாபுரிப்படிணத்தின் நடுவில் பிரதான சாலையின் ஓரத்தில் ஒரு பெரும் வீடு. அந்த வீட்டில் வசித்துவந்தது ரோமை அரசணையில் ஏறக்கூடிய தகுதிவாய்ந்த ஒரு அரசிளம்  குமரியின் பெற்றோர். இவர்களுக்கு ஒரு மகள் செசீலி என்ற பெயரோடு மாபெரும் அழகியாகத்திகழ்ந்தாள். இவளுக்கு தகுதியான ஒரு மாப்பிள்ளை பார்க்க முடிவெடுத்தனர் அவளது பெற்றோர்.
" அம்மா செசீலி...உனக்கு கல்யாண பருவம் வந்துவிட்டதல்லவா...ஏன் திருமணத்திற்க்கு சம்மதிக்க மாட்டேன் என்கிறாய்" என்றாள் அவளது தாய்.
" போ அம்மா... எனக்கு திருமணத்தில் நாட்டமே இல்லை...நான் உண்டு .. என் இசை உண்டு என்றிருகிறேன்..இப்படியே என் வாழ்நாளைக்கழித்துவிடவும் ஆசைப்படுகின்றேன்.. என்னை தொந்திரவு செய்யாதே...அடடா இந்தப்படலை இந்த ராகத்தில் பாட வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதற்குள் நீ வந்து கெடுத்துவிட்டாய். இனிமேல் நான் மீண்டும்  ஆரம்பத்திலிருந்து வரவேண்டும்". என்றாள் செசீலி.
          அப்போது எங்கிருந்தோ வந்தது ஒரு வானம்பாடி என்னும் ஒரு இசைக்குயில். அது வந்து செசீலியாவின் தோளில் அமர்ந்து தன் இனிமையன குரலால் அழகிய ராகமெடுத்துப்பாடியது. அந்த ராகத்தில் தன்னை மெய்மறந்த செசீலி புதியதோர் ராகத்தில் அந்தப்பாடலைப்பாடினாள்.
" ஆண்டவருக்கு புதியதோர் பாடலை பாடுங்கள்.. அல்லேலூயா...அல்லேலூயா....
எக்காள தொனி முழங்க ஆண்டவரின் புகழ்பாடுங்கள்....அல்லேலூயா...அல்லேலூயா"
ஒரு வழியாக பாட்டு முடிந்தது. நல்ல வேளை அம்மா. இந்த இசைக்குயில் வந்து எனக்கு ஒரு புதிய ராகத்தை நினைபூட்டியது. பாடல் எப்படியம்மா இருகிறது...ராகம் நன்றாக  அமைந்துள்ளதா.. என்று கேட்டுக்கொண்டே தன் தாயாரின் மீது சாய்ந்தாள் செசீலியா..
" என்னமோ செசீலியா...நீயும் உன் பாட்டும்...உன்பாட்டு கேட்க நன்றாகத்தான் உள்ளது... ஆனால் இந்த வானம்பாடி வந்ததுதான் எனக்கு கவலையாக இருகிறது. நமது ரோம கிரேக்க இதிகாசத்தில் வானம்பாடி அவ்வளவு நல்ல சகுனமாகத்தெரியவில்லை...அது துன்பத்தின் துவக்கம் என்று கூறுவார்கள்.. இப்படியே பாடிக்கொண்டே போனால் அப்புறம் நீ  சீக்கிரமே கிழவியாகிப்போய்விடுவாய்..உன் திருமணமும் அவ்வளவுதான்... இனிமேலும் நீ என்னை ஏமாற்ற முடியாது. எவனாவது ஒரு நல்ல பையன் வந்தால் உனக்கு ஒரு  முடுச்சுப்போட்டுவிட வேண்டியதுதான். உன்னோடு பேசிக்கொண்டிருந்தால் அப்புறம் சாப்பாடு அவ்வளவுதான்.. போய் வேலையைப்பார்க்க வேண்டும். தலைக்கு மேல் நிறைய வேலை  இருக்கின்றது. " என்றாள் அவள் தாயார்.
         தினமும் இந்த வானம்பாடி வரும்... தினமும் ஒரே இசைக்கச்சேரிதான்.. அப்போது இந்த வானம்படிதான் பாடுகின்றதா... அல்லது நம் செசீலியா தான் படுகின்றாளா என்பது அவரவரின் கற்பனையைப்பொருத்தது. இப்படி இருக்கையில் ஒருநாள்.
       தன்னை மறந்து பாடிக்கொண்டிருந்தாள் செசீலியா...இடையிடையே அந்த வானம்படியின் குயிலோசையும் கேட்டது...அழகிய கிண்ணரங்களும் இசைக்கக்கேட்டன. சுருக்கமாக  சொல்லப்போனால் ஒரு மாபெரும் இசைக்கலாவாணியின் இன்னிசைக்கச்சேரி அங்கே அரங்கேறிக்கொண்டிருந்தது. இந்த இசைவெள்ளம் இந்த வீட்டிலிருந்து வெளியே சாலையிலும்  கேட்டதால் இந்த இசை வெள்ளத்தில் நீங்தி களிப்புற்றனர் சாலையில் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள். இவர்களிடையே தன்னை மறந்து ரசித்துக்கொண்டிருந்தான் ஒரு மஹ பிரபூ. அவன் பெயர் வலேரியன். இந்த இசைக்கச்சேரி முடிந்தபின் அவள் வீட்டின் உள்ளே பிரவேசித்து முதலில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். அவனை பார்த்த மாத்திரத்திலேயே  செசீலியாவின் தாயாருக்கு அவனை பிடித்துப்போயிற்று. தன் மகளிடம் அவனை அறிமுகப்படுத்தினாள். வலேரியன் ஆரம்பித்தான்.
" பெண்னே செசீலியா..உன் குரல் வளம் மிகவும் கம்பீரமானது... அருமையான பாடல்கள் பாடுகின்றீர்கள்.. உங்களூக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு இசை ஞானம்.? ஏதோ கேட்க  வேண்டும் என்று தோன்றியது . அதனால் கேட்டேன். உங்களோடு கிண்ணரம் வாசித்தது யார்...குயிலோசையும் கேட்டதே...அது இந்த வானம்பாடி பாடியதா...மிகவும் பிரமாதம் " என்று  பாராட்டவும் செய்தான். ஆனால் அவனோடு பேசுவதென்பது செசீலியாவுக்கு அவ்வளவாகப்பிடிக்கவில்லை. அதை சொல்லியும் காட்டிவிட்டாள்.
" அன்பரே.. உமது பாராட்டுக்கெல்லாம் மிகவும் நன்றி.. நான் மனிதருக்காகப்பாடுவதில்லை...மாறாக கடவுளுக்கே பாடுகிறேன். அதில் கிடைக்கும் ஆத்ம திருப்த்தியே எனக்குப்போதும். நீர் எம்மை வந்து பார்த்து பாராட்டியதற்கு மிக்க வந்தனம்..தாங்கள் போய் வருகிறீர்களா...தயவு செய்து நீங்கள் எனக்காக ஒரு பெரும் உதவி செய்ய வேண்டும்"
" பெண்ணே... நீ கேட்கும் எந்த உதவியையும் இந்த வலேரியன் தயங்காமல் செய்வான். சொல்லு."
" ஐய்யா.. தாங்கள் தயவு செய்து இந்த வீட்டுக்கு இனிமேல் வரவேண்டாம்... இதுதான் தாங்கள் எனக்கு செய்யும் பெரும் உபகாரமாக இருக்கும் "
         இத்தகைய பதிலை சற்றும் எதிர்பாறாத வலேரியன் முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு வெளியேறினான். ஆனாலும் செசீலியாவின் தாயார் அவனை சந்தித்து தான் அவள்  மனதை மாற்றுவதாக உறுதியளித்தாள். எனவே மனதில் சற்றே ஆசையை வளர்த்துக்கொண்டு அடுத்த நாள் மீண்டும் அவள் இல்லம் சென்றான். அதற்குள் செசீலியாவின் தாயார்  அவளிடம் பலவிதமாகப்பேசி அவளை பெண்பார்க்க வர சம்மதம் வாங்கிக்கொண்டாள்.   அடுத்தநாள் வலேரியன் அவளைப்பெண்பார்க்க அவள் இல்லம் வந்தான். அவள் தாயார்  வலேரியன் குடும்பத்திற்க்கு நல்ல வரவேற்பு அளித்தனர்.
       அப்போது செசீலியா வலேரியனை தனியே அழைத்து " ஐய்யா... எனக்காக சில நிமிடம் ஒதுக்குவீர்களா? " என்றாள். செசீலியாவும் வலேரியனும் சற்றே தனிமையில் உறையாடினர். அப்போது செசீலியா கூறினாள்," அன்பரே,...நான் சொல்கிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம்... எனக்கு இந்த திருமண பந்தத்தில் இஸ்ட்டமே இல்லை. என் தாய் தகப்பனின் இஸ்ட்டத்திற்காகவும் அவர்களின் வற்புறுத்துதலுக்காகவுமே நான் இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்க வேண்டியதாயிற்று. நீ ஏன் என்னிடம் இவ்வளவு ஆசைப்பட்டீர்...நான் தான் அன்றே மீண்டும் என்னை சந்திக்க வேண்டாம் என்று கூறினேன் அல்லவா..பிறகு ஏன் இதெல்லாம்?" என்றாள்.
" பெண்ணே செசெலியா...இந்த விஷயத்தில் பெண்கள் மறுப்பு தெரிவிக்கும்போதுதான் ஆண்களுக்கு இன்னும் அதிகம் ஆசை ஏற்படுகிறது. உன்னைக்கண்டது முதல் என் மனது சதா உன்னையே நினைக்க ஆரம்பித்துவிட்டது. உன் தேன் போன்ற இசை அப்படியே என் செவிகளில் நிலைத்து நின்றுவிட்டது. அந்த வானம்பாடியின் இசையும் என்னை படாதபாடு  படுத்திவிட்டது. கிரேக்க புராணங்களில் சொல்வது போல என் நிலையும் அந்த ஹெர்குலீஸ் மாவீரனின் கதையும் ஒரே மாதிரி ஆகிவிட்டது. எல்லாம் அந்த பீலோமீளா என்னும்  வானம்பாடியால் வந்த வினை" என்றான் வலேரியன்.
பீலோமீளா வானம்படியா... அது என்ன என்றாள் செசீலியா.
" பெண்ணே செசீலியா...நீயே ஒரு வானம்பாடி... உனக்கு அந்த இசைக்குயில் பீலோமீளாவைப்பற்றி தெரியாதது ஆச்சரியமாகத்தான் இருகின்றது. சுருக்கமாக சொல்கிறேன் கேள்" என்று  ஆரம்பித்தான் வலேரியன்.
     ஒரு சமயம் கிரீஸ் நட்டை சேர்ந்த ஏதென்சை பாந்தியன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு புரோக்னீ என்னும் மகள் இருந்தாள். இந்த சமயத்தில் தன் நாட்டுக்குவந்த  பெரும் ஆபத்துக்கு திரான்ஸ் தேச மன்னன் தேரியு என்பவனின் உதவியுடன் போரிட்டு தன் எதிரிகளை போரில் வெற்றிகொண்டான் பாந்தியன். இந்த போரில் தனக்கு உதவிய  திரான்ஸ் மன்னன் தேரியுவுக்கு நன்றியாக தன் மகள் புரோக்னியை மணமுடித்துக்கொடுத்தான். ஐந்து ஆண்டுகள் எல்லாம் நல்லபடியாகத்தான் போயிற்று. இந்த தம்பதியருக்கு  இடைஸ் என்னும் ஒரு மகனும் பிறந்தான். புரோக்னியுவுக்கு தன் தங்கை பீலோமீளாவைப்பார்க்க வேண்டும் என்னும் ஆசை ஏற்பட்டது. எனவே தன் கணவன் தேரியுவிடம் சொல்லி  பீலோமீளாவை கப்பலில் அழைத்துவரச்செய்தாள். ஆனால் கடற்பயணத்தில் பீலோமீளாவுக்கும் அந்த கப்பலின் தலைவனுக்கும் காதல் ஏற்பட்டது. ஏற்கனவே தன் மனைவியின்
தங்கையான பீலோமீளாவின் மீது ஒருதலைக்காதல் கொண்டிருந்த மன்னன் தேரியுவுக்கு இவர்கள் காதல்விவகாரம் தெரிய வரவே தன் எண்னம் ஈடேறாததைக்கண்ட தேரியு அந்த  கப்பல் தலைவன்மீது அடங்காத கோபம் கொண்டான்.
       அடுத்தகரியமாக அந்த கப்பல் தலைவனை வெட்டிக்கொன்று கடலில் வீசினான். அவன் மனைவின் தங்கை பீலோமீளாவை கற்பழித்தான். இந்த தீச்செயலை எங்கே இவள் வெளியே சொல்லிவிடுவாளோ என்ற பயத்தில் பீலோமீலாவின் நாக்கை அறுத்தான். தன் தேசத்தை அடைந்ததும் பீலோமீளாவை ஒரு காட்டில் தனிமை சிறை வைத்தான். தன்  அரண்மனை வந்து அவன் மனைவி புரோக்னியிடம் அவள் தங்கை பீலோமீளா கடலில் கப்பலில்வரும்போது நோய்வாய்பட்டு இறந்துவிடவே ஜலசமாதி செய்யப்பட்டதாக கூறினான்.
             ஆனால் பீலோமீளா காட்டில் ஒரு கிழவியை சந்தித்து தனக்கு ஏற்பட்ட கதியை தன் சகோதரியான புரோக்னியிடம் தெரிவிக்குமாறு கூறினாள். அந்த தீவின் வழக்கப்படி டயோனிசியன் திருவிழா என்று கொண்டாடபட்டது. அதன்படி அன்று வருடத்திற்கொருமுறை ஒருநாள் மட்டும் பெண்கள் மிகவும் சுதந்திரமாக விடப்படுவர். ஆடவும் பாடவும் மது  அருந்தவும் கேளிக்கையில் ஈடுபடவும் அனுமதிக்கப்படுவர். இந்த திருவிழாவுக்காக வந்திருந்த ராணீ புரோக்னியை காட்டிலிருந்து வந்த கிழவி சந்தித்து அவள் சகோதரி உயிரோடு
இருப்பதாகவும் அவள் கணவனால் அவளுக்கு ஏற்பட்ட கொடுமைகளையும் கூறினாள். இதை அறிந்த புரோாக்னி தன் கணவனை பழிவாங்குவதற்காக தன் மகன் இடைசை கொன்றாள். தன் தங்கையை பீலோமீலாவை தன்னுடன் அரண்மனைக்கு அழைத்துவந்தாள்.. தன் வண்டவாளம் வெளிப்பட்டதை அறிந்த திரான்ஸ் மன்னன் தேரியு இந்த
இருபெண்களையும் வெட்டி கொல்லத்துணிந்தான். இதனால் கோபமுற்ற வனதேவதை ஒன்று புரோக்னியை ஒரு குருவியாகவும் பீலோமீளாவை ஒரு பாடும் வானம்பாடியாகவும் மாற்றி அவனிடமிருந்து காப்பாற்றியது..
அன்றிலிருந்து இந்த வானம்படி பீலோமீளா வானம்படி என பெயர் பெற்றது.
      அது தன் காதலனை இழந்த சோகம் தாங்காமல் பாடிக்கொண்டே இருக்கும். யாரையாவது
அதற்குப்பிடித்திருந்தால் பெரும் குரலெடுத்துப்ப்பாடும். சம்பந்தப்பட்டவர் அதன் குரலோசையிலிருந்து தப்பிக்கவே முடியாது. அதன் குரலோசையில் மயங்கி அதன் பின்னாடியே  போய்விடுவார்கள். இப்படித்தான் அன்று மாவீரன் ஹெர்குலீசும் இதன் குரலின்பத்தில் மாட்டிக்கொண்டான். எனவே எங்கே தான் இந்த கப்பல் பயணத்திலிருந்து கடலில் குதித்து  அந்த வானம்பாடியின் பின்னாலேயே போய்விடுவோமோ என்று பயந்து கப்பல் தலைவனை அணுகி தன்னைஇந்த கப்பலின் கொடி மரத்தோடு சேர்த்து கட்டிவிடும்படி கேட்டுக்கொண்டான். அவனும் அவ்வாறே கட்டப்பட்டதால் அவனால் அந்த பீலோமீளா வானம்பாடியின் குயிலோசையில் மயங்கி அதன் பின்னாலே போய்விடமுடியவில்லை.
        ஆனால் நான் தான் இந்த செசீலியா என்னும் வானம்பாடியின் இசையில் கவர்ந்திழுக்கப்பட்டு வசமாக மாட்டிக்கொண்டேன். ஆனால் ஒரு வித்தியாசம். ஹெர்குலீஸ் அன்று அந்த  பீலோமீளா வானம்படியிடமிருந்து தப்பித்துக்கொள்ளப்பார்த்தான். ஆனால் நான் இந்த செசீலா வானம்பாடியிடமிருந்து தப்பிக்க விரும்பவில்லை. அதனிடம் மாட்டிக்கொள்ளவே விரும்புகிறேன்." என்றான்.
      அப்போது செசீலியா," அன்பரே கதை நன்றாகத்தான் இருக்கின்றது. அது ஒரு புறம் இருக்கட்டும். நிஜத்திற்கு வாரும். நான் உண்மையை சொல்லுகிறேன். எனக்கு தாம்பத்தியத்தில் நாட்டமில்லை. நீர் என்னை திருமணம் செய்துகொண்டு எந்த சுகத்தையும் என்னிடம் அடையவே முடியது. இது உறுதி. இதற்கு மேலும் நான் உம்மை
வற்புறுத்தப்போவதில்லை.. இனிமேல் உம் இஸ்டம்" என்றாள்.
         அதற்கு வலேரியன்,' செசீலியா..நான் உன்மீதுகொண்ட நேசம் உண்மையானது. இது சத்தியம். இந்த திருமணத்திற்கு நீ சம்மதித்ததே போதும். உன்னை அடைவதைத்தவிர இந்த உலகத்தில் எனக்கு வேறு இன்பமே இல்லை." என்றான்.
      ஒரு நல்ல நாளீல் வலேரியனுக்கும் செசீலியவுக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமண விருந்தில் செசீலியா பாடினாள்.. அவள் பாடலுடன் மேள தாள, கிண்னர வாத்தியங்கள்  முழங்கின. அந்த வானம்பாடியும் சேர்ந்துகொண்டது...எங்கிருந்தோ வந்த வெண்பஞ்சிக்கூட்டம் அனைவர் கண்களையும் மறைத்தது. இனம்புறியாத பரலோக சுகந்தாம் அனைவர் நாசியிலும் சூழ்ந்தது. ஆனால் வலேரியனின் பார்வையில் மட்டும் எந்தவிதமான மாற்றமுமில்லை. இரு அழகிய வாலிபர்கள் செசீலியாவுடன் வாத்தியங்கள் வாசித்துக்கொண்டும்
அவளோடு ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருக்கக்க்ண்டான். வலேரியனின் மூளையில் ஏதோ சுர் என்று தைத்தது. சற்று நேரத்தில் அனைவரும் தங்கள் பழைய நிலைக்கு வந்தனர்.
         செசீலியாவின் தேன்மதுரக்குரலில் நடைபெற்ற அந்த பாட்டுக்கச்சேரியை அனைவரும் பாராட்டினர். அன்று இரவு செசீலியாவுக்கும் வலேரியனுக்கும் முதலிரவு ஆனது. ஆசையோடு தன் காதல் மனைவியை அனுகினான் வலேரியன். ஆனால் அவனை ஒரே வார்த்தையில் அடக்கினால் செசீலியா.." அன்பரே...நில்லுங்கள் அங்கே..திருமணம் என்னும்  பந்தத்தால் என் உடல் மீது உமக்கு உரிமை இருக்கலாம்... ஆனால் நான் உம்மை இப்போது எச்சரிக்கிறேன்.. என்னை நீர் நெருங்கக்கூடாது. மீறினால் நீர் கொல்லப்படுவது உறுதி" என்றாள்.. அப்படியே ஆடிப்போனான் அவள் கணவன் வலேரியன். " செசீலியா....நீ என்ன சொல்கிறாய்...நீ என்னைக்கொல்வாயோ?...நான் உன்னைகட்டிய கணவன் அல்லவா...பின் நீ எப்படி என்னைக்கொல்லத்துணிவாய்?" என்றான்.
       அதற்கு செசீலியா," அன்பரே நான் உம்மைக்கொல்லப்ப்போவது இல்லை. அது என்னால் ஆகக்கூடிய காரியமும் அல்ல. ஆனால் எனக்குள் குடியிருக்கும் என் காவல் சம்மனசு என் கன்னிமைக்கு அபாயம் ஏற்படும்பட்ச்சத்தில் உன்னைக்கொல்வார். நான் ஏற்கனவே மண ஒப்பந்தம் ஆனவள்.. ஆனால் எந்த ஒரு மானிட ஆடவனுடனும் அல்ல. நான் என் கடவுளாகிய  இயேசுநாதருக்கு என் கன்னிமையை நேர்ந்துள்ளதால் அவரின் ஆணைப்படி எனக்குள் இருக்கும் என் காவல் சம்மனசு என்னைகாப்பார்." என்றாள்.
" செசீலியா.. அப்படியானால் நீ ஒரு கிறிஸ்த்துவளா?"
" ஆம்..நான் ஒரு கிறிஸ்த்துவள்தான்... அதனால்தான் நான் உன் காதலை அன்று நிராகரித்தேன். நீர்தான் விடாப்பிடியாக என்னை திருமணம் செய்துகொண்டீர்."
" நீ இதை அன்றே சொல்லி இருக்கலாமே...நீ ஒரு கிரிஸ்த்துவள் என்று தெரிந்திருந்தால் அன்றே நான் என் காதலை மறந்திருப்பேனே?"
" அன்பரே அன்று நான் சொல்லியதை இப்போது நன்றாக நினைவுக்கு கொண்டுவந்து பாருங்கள்.நமக்கு இது சரிப்பட்டு வராது. நீர் என்னைத்திருமணம் செய்துகொண்டு என்னிடம்  எந்த சுகத்தையும் அனுபவிக்கமுடியாதென கூறவில்லையா. இப்போது வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்?"
" சரி, இதற்கு என்னதான் விமோச்சனம்.?"
" அன்பரே திருமண பந்தத்தில் எனக்கும் உமக்கும் இனிமேல் இந்த உலகில் இடமில்லை என்றாகிவிட்டது. இருப்பினும் கடவுள் ஏற்படுத்திய திருமண பந்தத்தை நானும் மதித்து ஏற்றுக்கொள்கிறேன். இதுவும் கடவுளின் திருச்சித்தமே. அவருடைய திருச்சித்தத்தை ஏற்றுக்கொண்டு நானும் உம்மை என் கணவறாக ஏற்றுக்கொள்கிறேன். நம்முடைய சந்தோஷமெல்லாம் மறு உலகத்தில்தான். அதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை. நீர் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். தயவுசெய்து நீர் இனிமேல் என்னை நெருங்காதீர். என் கற்பை என்ஆண்டவறாகிய யேசுகிறிஸ்த்துவுக்கே நான் ஒப்புக்கொடுத்திருப்பதால் என் ஆன்மாவில் என் ஆண்டவன் யேசுநாதர் குடிகொண்டுள்ளார். அவரைத்தவிர என் ஆன்மாவிலும் உடலிலும் வேறு ஒருவருக்கும் இடமில்லை. ".
" அப்படியானால் நான் அவரைப்பார்க்க வேண்டும். உன்னோடு இன்று இரு வாலிபர்கள் பாடவும் ஆடவும் செய்தார்களே... அவர்கள் யார்? "
" அன்பரே ...புரிகிறது. பார் ஆளும் மன்னன் முதல் நாட்டின் கீழ்மட்ட ஆடவன் வரை எல்லா ஆண்களும் இந்த விஷயத்தில் ஒன்றுதான். ஆண்களின் சந்தேகப்பார்வையிலிருந்து எத்தகைய பெண்ணும் தப்பிக்க முடியாது...அதுவும் பெண்கள் அழகும் அறிவும் சேர்ந்தவர்களாக இருந்துவிட்டால் அவர்கள் நிலை இன்னும் பரிதாபத்துக்குறியதுதான். உம்முடைய சந்தேகம் எல்லாம் தீரவேண்டும். அப்படித்தானே. நேரே அப்பியன் சாலைக்கு செல்வீராக .அங்கே மூன்றாவது மைலுக்கும் நான்காம் மைலுக்கும் இடைப்பட்ட தூரத்தில் கலிஸ்த்தா குகை வரும் . அங்கே செல்லும் ..உமது அனைத்து சந்தேகங்களுக்கும் அங்கே விடைகிடைக்கும்."
" பெண்னே செசீலியா...நீ உத்தமப்பெண் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.. உன் கூற்றினால் தான் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. நீ தெய்வாம்சமானவள் என்பது  உண்மையானால் நான் வாழும் வரை உன்னை தொடப்போவதில்லை... மாறாக உன் நடத்தையில் சந்தேகம் என்று நான் உணரும்பட்ச்சத்தில் அவனுடன் சேர்த்து உன்னையும்  நான் கொல்லாமல் விடப்போவதில்லை. இது உறுதியும் சத்தியமும்." என்றான் வலேரியன்.
     அடுத்த நாள் காலையிலேயே அந்த அப்பியன் சாலையிலுள்ள கலிஸ்த்தா குகையை அடைந்தான் வலேரியன். அங்கே ஒரு வயதான ஒரு முதியவர் தோன்றினார். அவர் தான் அந்தக்காலத்தில் பரிசுத்த பிதாவாகிய பாப்பானவர் அர்பன். கி.பி. 250 ஆண்டுகளில் அன்றைய ரோமைய சர்வாதிகாரியாக இருந்தவன் அலெக்ஸாண்டர் செவேருஸ்.. அவனது  ஆணைப்படி கிறிஸ்த்துவர்கள் தீண்டத்தகாதவர்களாகவும்,அரசாங்க விரோதிகளாகவும் சித்தரிக்கப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் தண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். எனவே அன்றைய கிறிஸ்த்துவ மதத்தலைவர்களும் சாதாரண கிறிஸ்த்துவ மக்களும் மறைந்து வாழ வேண்டியதாயிற்று.
      இந்த சூழ்நிலையில் அங்கே வந்த வலேரியன் தன் உள்ளக்குமுறளை அவரிடன் பகிர்ந்துகொண்டான். அந்த வயதான பாப்புவின் அறிவுறைகளில் கவரப்பட்டான் வலேரியன்.. நாளடைவில் அவனும் ஒரு கிறிஸ்த்துவனாக மாறினான். அப்போது ஆண்டவரின் காட்சி அவனுக்கு அருளப்பட்டது. அப்போது அங்கே வந்தாள் செசீலியா. அவளிடமிருந்து வெளிப்பட்ட அவளது காவல் சம்மனசு அவர்கள் இருவரையும் ஆசீர்வதித்து அவர்கள் இருவரின் தலைகளிலும் வேத சாட்ச்சிக்கான மலர் கிரீடம் சூட்டியது. " வலேரியா...உன் மனைவியின் இசைவெள்ளத்தில் யேசுநாதர் அதிக ஆர்வமாக  இருகின்றார். எப்போதும் அவள் இறைவனை துதித்து பாடிக்கொண்டே இருப்பது அவருக்கு மிகவும் பிரியமான ஒன்று. ஆனால் அவள் மானிடப்பிறவி அல்லவா..அவள் ஆன்மா  ஒருபோதும் துயில் கொள்வதில்லை. ஆனால் அவள் சரீரம் சோர்ந்துவிடும். எனவேதான் நாங்கள் அவளுக்கு துயில்வருவிக்க மோட்ச்ச கீதங்கள் இசைத்து தாலாட்டுவோம். அவள் விழித்துவிட்டால் அவள் பாட ஆரம்பித்துவிடுவாள். அதற்குத்தயாராக நாங்களும் வாத்தியக்கருவிகளோடு காத்திருப்போம். சம்மனசுகளுக்கு சரீரம் இல்லாதாகையால் மனிதர்கள் எங்களை உணரும்பொருட்டே கடவுள் எங்களூக்கு மனிதவடிவம் கொடுத்து அனுப்புகிறார். அன்று அவளோடு இருந்த வாலிபர்கள் எம்போன்ற சம்மனசுகளே..இப்போது உன் மனைவி  யார் என்று புறிந்ததா? " என்றது.
      வலேரியன் புது மனிதன் ஆனான்..தன்மனைவி தெய்வீக வரம் பெற்றவள் என்பதை அறிந்து பேருவகை கொண்டான். தான் யேசுநாதரை கடவுள் என்று ஏற்றுக்கொண்டதனிமித்தமும் தன் மனைவியின் தெய்வீகத்தை சந்தேகப்பட்டதற்காகவும் மிகவும் வருந்தினான். அதற்கு பிராயசித்தமாக தன் கௌரவத்தை விட்டொழித்தான்.. தன் வாழ்நாளை ஆண்டவறாகிய யேசுநாதருக்கு அர்ப்பணித்தான்...தான் பெற்றுக்கொண்ட கிறிஸ்த்துவ வாழ்வை தன் சகோதரனான திபெர்த்தியுவுக்கும் சொல்லிக்கொடுத்து  அவனையும் கிறிஸ்த்துவை ஏற்றுக்கொள்ள செய்தான். ஆக இந்த இருவரும் இந்த உலக மேன்மைகளையும், பகட்டுகளையும் விட்டொழித்து தங்கள் வாழ்வை யேசுநாதருக்கு ஒப்புக்கொடுத்து சாதாரண வேலை செய்தார்கள்.. அதாவது வெட்டியான் வேலை. 
  அவர்கள் பிறந்த மேட்டிமையான குலம் என்ன ... கோத்திரம் என்ன...வசதி வாய்ப்புகள் என்ன... அடடா... எல்லாவற்றையும் யேசுவுக்காக ஒப்புகொடுத்து அவற்றை விட்டொழித்தார்கள். யேசுகிறிஸ்த்துவுகாக மரிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்பதை அவர்கள் உணர்ந்ததால்  யேசுவுகாக உயிரைவிட்ட அந்த கிறிஸ்த்துவர்களின் சடலங்களை ரகசியமாக புதைக்கும் புனிதமான பணியை அவர்கள் ஆர்வத்துடன் தேர்ந்துகொண்டார்கள். ஆண்டவரும் இந்த  இருவரையும் மகிமைப்படுத்த விரும்பினார். ரகசியமாக அந்த அப்பியா சாலையில் கலிஸ்த்தா குகையில் வெட்டியான் வேலை செய்து வந்த அவர்களை ஆளுநன் அமால்கியுஸிடம்  காட்டிக்கொடுத்தனர் வேத விரோதிகள்.
                ஆளுநன் தெர்சியுஸ் அமால்கியுசுக்கு தன் கண்களையும் நம்ப முடியவில்லை..காதுகளையும் நம்பமுடியவில்ல. வலேரியனும் அவன் தம்பி திமிர்த்தியுவும் கிறிஸ்த்துவர்களா?  இது என்னடா கொடுமை...இவர்களுக்கு ஏன் இப்படி புத்தி போயிற்று? கூப்பிடு அவர்களை...நான் அவர்களை விசாரிக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் வலேரியனும் அவன்  தம்பி திமிர்த்தியுவும் ஆளுநன் அமால்கியுஸ் முன்பாக விசாரணைகாக நிறுத்தபட்டார்கள்.
        ஆளுநன் அமால்கியுஸ்," வலேரியா...திமிர்த்தியு..நீங்கள் கூடவா புத்தி மாறிப்போய் அந்த கிறிஸ்த்துவமதத்தை தழுவினீர்கள்.? அந்த யேசுநாதர் என்ன பேயா அல்லது பிசாசா.. கண்டவர் அனைவரையும் பிடித்துக்கொள்ள..நம்பேரரசர் அலேக்ஸாண்டர் செவேருஸ் கிறிஸ்த்துவமதத்தை தடை செய்ததுள்ளது உமக்குத்தெரியும் தானே? அரசாங்க கட்டளையை மீறுவது கொடும் தண்டனைக்குறிய குற்றம் அல்லவா? குற்றம் என்று தெரிந்திருந்தும் அதை மீறுவது பெரும் சுத்தமான வடிகட்டின முட்டாள்தனமல்லவா ? ஏன் இப்படி செய்தீர்?
        அதற்கு வலேரியன் ," ஆளுநர் அவர்களே, நாங்கள் உண்மையை உண்ர்ந்துகொண்டுதான் கிறிஸ்த்துவ மதத்தில் சேர்ந்துகொண்டோம். யேசுவே கடவுள்..அவரே இந்த அகில  உலகத்தையும் படைத்தார்.இந்த உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தையும் படைத்துக்காத்துவருவதும் அவரே...மற்ற தெய்வங்கள் எல்லாம் போலியாக சித்திரிக்கப்பட்டவைகளே. இதை எல்லாம் உண்ர்ந்துதான் நாங்கள் யேசுகிறிஸ்த்துவை ஆண்டவறாக கடவுளாக ஏற்றுக்கொண்டோம். யேசுக்கிறிஸ்த்துவை யாரும் பின்பற்றக்கூடாது என்று சொல்ல யாருக்கும்  உரிமையும் இல்லை..அதிகாரமும் இல்லை." என்றார்.
       ஆளுநன் அமால்கியுஸ் கடும் கோபம் கொண்டார்." அடேய் வலேரியா..நீ யாருக்கு புத்தி சொல்லுகிறாய் என்று தெரிந்துதான் பேசுகிறாயா?. உன் யேசுநாதரைப்பற்றிய பிரஸ்த்தாபங்கள்  எதுவும் எனக்குத்தேவை இல்லை.இந்த ரோமைய சாம்ராஜ்ஜியத்தில் அதிகார வம்சத்தில் பிறந்து வளர்ந்து இன்று கிறிஸ்த்துவை ஏற்றுக்கொண்டதினால் பாவப்பட்ட ஜென்மங்கள்  செய்யும் வெட்டியான் வேலை செய்யும் அளவுக்கு தாழ்ந்து போனாயே... உனக்கு அப்படி என்ன கிரக ஆச்சாரம் பிடித்திருகின்றது.? உன் குடும்ப கௌரவத்தை முன்னிட்டும் உன்  முன்னோர்கள் இந்த ரோமை சாம்ராஜ்ஜியம் வளர அவர்கள் செய்த தியாகங்களை முன்னிட்டும் உனக்கு ஒரு வினாடி அவகாசம் தருகிறேன்..ரோமைய சாம்ராஜ்ஜியபதி அலெக்ஸாண்டர்  செவேருஸ்தான் கடவுள் என்று அறிக்கையிட்டு அவருக்கும் நம் முன்னோர்கள் வணங்கிவந்த ரோமைய கிரேக்க தெய்வங்களுக்கு தீப தூப ஆராதணை காட்டி இங்கிருந்து ஓடிப்போய் பிழைத்துப்போ..எடு அந்த தீபத்தை..வா என் முன்னால்."
      அதற்கு வலேரியன்," ஆளுநர் அவர்களே," நீர் எனக்கு தயை காட்ட வேண்டாம். நீர் எத்தகைய பசப்பு வார்த்தை காட்டினாலும், அச்சுருத்தினாலும் என் மனம் மாறாது..யேசுவே என் ஆண்டவர்..யேசுவே என் கடவுள்... வாழ்க என் யேசுவின் திருநாமம்" என்று தன் தம்பி திபுர்த்தியனுடன் சேர்ந்து சப்த்தமாக கூவினர். அப்போது அவர்கள் இருவரின் முகமும் ஒருவித பரலோக ஒளியாள் சூழப்பட்டது. இதனால் மிகவும் கடுப்பான ஆளுநன் அமால்க்கியுஸ் " இந்த இரு முட்டால்களையும் சிறையில் அடைத்து சித்திரவதை செய்யுங்கள்" என்றான்.
        வலேரியனும் அவன் தம்பி திமிர்த்தியுவும் சிறைக்காவலன் மாக்ஸிமியனிடம் ஒப்படைக்கப்பட்டனர். அந்த இரவு முழுவதும் அவர்களுக்கு சாட்டை அடி கொடுக்கப்பட்டு உடல் முழுக்க ரத்தவிளாருகளாயின. அந்த நிலையிலும் அவர்கள் இருவரும் ," யேசுவின் திரு நாமம் ஸ்துதிக்கப்படுவதாக" போன்ற வார்த்தைகளை சொல்லிக்கொண்டே இருந்தனர்.
     அடுத்த நாள் ஆளூநன் அமால்கியுஸ், " என்ன வலேரியா. இரவு முழுவதும் நல்ல சாப்பாடு கிடைத்ததா?" என்று ஆகடியம் செய்தான். " இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை.. அந்த யேசுவை விட்டுவிடுவதாக சொல்.. உங்கள் இருவரையும் நான் உயிரோடு விட்டுவிடுகிறேன்" என்றான். அதற்கு அவர்கள் இருவரும் ஒரே குரலில்," யேசுநாதரை விட்டுவிடுவதற்கு பதில் நாங்கள் எங்கள் உயிரை விட்டுவிடுகிறோம்" என்றனர். மீண்டும் கடுப்பானான் ஆளூநன் அமால்கியுஸ். " அடேய் மாக்ஸிமியா. இனிமேலும் இந்த இருவருக்கும்  இரக்கம் காட்டக்கூடாது. இவர்கள் இருவரையும் தலையை வெட்டிக்கொண்றுபோடு " என்றான்.
        அதன்படி சிறைகாவலன் மாக்ஸிமியன் வலேரியன் அவர் தம்பி திமிர்த்தியு ஆகிய இருவரின் தலையையும் வெட்டினான். அந்த கடைசி நேரத்திலும் அவர்கள் இருவரும் சேர்ந்து " யேசுவுக்கே புகழ்...யேசுவே துணை...யேசுவே ரட்ச்சியும்" என்று கூறியபடியே இறந்தார்கள். அப்போது நடந்த புதுமையானது. இறந்த வலேரியன் மற்றும் அவர்தம்பி திமிர்த்தியுவின் உடலிலிருந்து கிளம்பிய அவர்களின் ஆன்மாக்கள் பரலோகத்தில் யேசுவின்
பாதத்தில் போய் சேரும் காட்சியை இந்த தண்டனையை நிறைவேற்றிய சிறைகாவலன் மாக்ஸிமியன் கண்டான். " ஆஹா... இவர்கள் எப்பர்ப்பட்ட புண்ணியவான்கள்.. இவர்களையா  நான் கொன்றேன்.. நான் எப்பேர்ப்பட்ட பாவி... இந்த பாவத்துக்கு நான் என்ன பரிகாரம் பண்ணுவேன்.. கடவுளே என்னை மன்னிப்பாயா? " என்று நெஞ்சு நெஞ்சாக அடித்துக்கொண்டு  புலம்பினான்.
       இந்த செய்தியும் வலேரியனும் அவ்ன் தம்பி திபுர்த்தியனும் தலைவெட்டப்பட்டு இறந்த செய்தியும் ஆளுநன் அமால்கியுஸுக்கு தெரிவிக்கப்பட்டது. அடுத்த நாள் சிறைகாவலன் மாக்ஸிமியன் ஆளுநன் முன் விசாரணைக்காக நிறுத்தப்பட்டான்.
" என்ன மாக்ஸிமியா... வலேரியனைக்கொன்ற பாவம் உன்னை ரொம்பவும் பாதித்துவிட்டதாமே?"
" எஜமான்.. அது உண்மைதான்..அவர்களைக்கொன்ற பாவம் இனி என்னை சும்மா விடாது."
" அதற்காக நீ என்ன செய்யப்போகின்றாய்?. நீயும் கிறிஸ்த்துவனாக மாறப்போகிறாயா?"
" இனிமேல் மாறப்போவதில்லை எஜமான்..நான் நேற்றே மாறிவிட்டேன். யேசுநாதரை கடவுளாக ஏற்றுக்கொண்டேன்.."
" என்ன ..விட்டால் யேசுநாதரே நேரில்வந்து என்னை ஏற்றுக்கொண்டார்...என்னைகட்டிப்பிடித்துக்கொண்டு மொச் மொச் என்று முத்தமிட்டார். என்று சொல்லுவாய் போலிருகிறதே"
" ஆம் எஜமான்.. உண்மையில் நேற்று அப்படித்தான் நிகழ்ந்தது. வலேரியன் அவன் தம்பி ஆகியோரின் மரண தண்டனையை நிறைவேற்றிய பிறகு அவர்கள் இருவரின் ஆன்மாக்களும் பரலோகத்தில் யேசுநாதரின் பாதம் சேரக்கண்டேன். யேசுநாதரின் பார்வையில் கனிவு தெரிந்தது. அந்தப்பார்வையில் அவர் என்னை அழைத்ததும் தெரிந்தது..அவரது அழைப்பை நானும்  ஏற்றுக்கொண்டேன்" என்றான்.
" அடே முட்டால்.. யாரிடம் விடுகிறாய் உன் கதையை..உனக்கு யேசுநாதரிடம் போக வேண்டும். அவ்வளவுதானே...சரி போ...நான் தடுக்கவில்லை.. அதற்கு நீ மரணிக்க வேண்டும் தெரியுமோ" என்றான் ஆளுநன்.
" எஜமான் நான் தயாராக இருகிறேன் எஜமான்...என் யேசுநாதருக்காக நான் சாகத்தயாராக இருகிறேன் எஜமான்..உங்கள் ஆசையை நிறைவேற்றிக்கொள்ளுங்கள்" என்றான் மாக்ஸிமியன் என்னும் அந்த சிறைகாவலன்.
" அடேய் மாக்ஸிமியா... உனக்கு பட்டுமா புத்திவரவில்லை...உன் மரணம் மற்ற எல்லோருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்... அடேய் யாரங்கே இவனை உயிர் போகுமட்டும் சவுக்கால் அடித்தே கொல்லுங்கள்" என்று வெறி பிடித்தவன்போல் கத்தினான் ஆளுநன் அமால்கியுஸ். ஆளுநனின் ஆணை உடனே நிறைவேற்றப்பட்டது.. 
         சிறைகாவலன் மாக்ஸிமியன் உயிபோகும்வரை சவுக்கால் அடிபட்டே மரித்துப்போனார். அவருக்கு நினைவிருக்கும் வரை அவர்வாயில் "யேசுவே என் நேச ரட்ச்சகரே " போன்ற ஜெபங்கள் கேட்டுக்கொண்டே இருந்ததாக அதை நேரில் கண்டவர்கள் சாட்சியம் கூறினார்கள். இத்தனைக்கும் மாக்ஸிமியன் கிறிஸ்த்துவறாக மாறுவதற்கு ஞாஸ்நானம் கூட வாங்கவில்லை.அதற்கு அவருக்கு  அவகாசம் கிடைக்கவில்லை. அவர் மனம் மாறினார். அதுவே அவருக்கு போதுமானதாக இருந்தது. சில ரகசிய கிறிஸ்த்துவர்கள் வேத சாட்ச்சிகளாக இறந்துபோன மாக்ஸிமியன், வலேரியன், அவர் தம்பி திபுர்த்தியன் ஆகியோரின் உடலை சிறைகாவலர்களுக்கு கையூட்டு கொடுத்து வாங்கிச்சென்று ரகசியமாக புதைத்தார்கள். 
  சனியன் இத்தோடு விட்டதா என்றால் அதுதான் இல்லை.
      இறந்த வலேரியன் மனைவி செசீலியாவின் பேரழகு பற்றியும் அவளது பாடும் திறமை பற்றியும் அவர்களுடைய கணக்கில் அடங்காத சொத்துக்கள் பற்றியும்  ஆளூநனிடம் நன்றாகப்போட்டுக்கொடுத்தனர் வேத விரோதிகள். அதுவும் நன்றாகத்தான் வேலை செய்தது.
       தன் கணவனும் அவர் தம்பி திமிர்த்தியனும் சிறைகாவலன் மக்ஸிமியனும் வேத சாட்ச்சிகளாய் இறந்த செய்தி கேட்டு மிகவும் அழுது புலம்பினாள் நம் செசீலியா.. இப்படிஎல்லாம்  நடக்கும் என்று செசீலியாவுக்கு தெரியும் என்றாலும் ஆண்டவரின் சித்தத்துக்கு தன்னை முற்றிலும் ஒப்புக்கொடுத்தாள். தனக்கு வரப்போகும் ஆபத்துக்கு தன்னை கையளிக்க தன்னை  தயார் படுத்திக்கொண்டாள். செசீலியா எதிர்பார்த்தபடியே சிறைகாவலர் வந்து அவளை அழைத்துக்கொண்டுபோய் ஆளுநன் முன்பாக விசாரணைகாக நிறுத்தப்பட்டாள்.
" செசீலியா... நான் கேள்விப்பட்டது உண்மையா...நீ எல்லாம் ஒரு கிறிஸ்த்துவளா..நீ அரசிளங்குமரி..பெரும் பத்ரீசிய குடும்பத்தில் பிறந்தவள்..உனக்கு ஏன் இந்த வீன் வேலைகள்?"
" ஆளுநர் அவர்களே..நடந்ததையும் நான் அறிவேன்..நடக்கப்போவதையும் நான் அறிவேன்..நேரத்தை வீனடிக்க வேண்டாம்...நான் என் பரலோக பர்த்தாவையும் என் பூலோக  பர்த்தாவையும் காண வேண்டும். உம்மால் கூடுமானால் நேரத்தை வீனடிக்காமல் உடனே எனக்கு மரண தண்டனை கொடுங்கள்"
" ஓ... செசீலியா.. மரணம் என்ன உனக்கு அவ்வளவு சீக்கிரம் கிடைத்துவிடும் என்று நினைக்கிறாயா... முடியாது.. அது உடனே நடக்க நான் அனுமதிக்க மாட்டேன். நீ  நன்றாகப்பாடுவாயாமே.. எங்கே எனக்காக நம் மன்னரை புகழ்ந்து ஒரு பாட்டு ஒன்று பாடு"
" அடே நிர்மூடா...என் கணவர் இறந்து ஒரு முழுநாள் கூட இன்னும் முடியவில்லை.. அதற்குள் உனக்கு பாட்டு வேண்டிகிடக்கிறதாக்கும்..என்னுடைய இந்த வாயும், நாவும், மனமும் என் இறைவன் யேசுநாதராம் உலக ரட்சகரைப்பற்றியே பாடும் அல்லாது வேறு எந்த மனிதப்பதரையும் பற்றிப்பாடாது..நன்றாக நினைவில் கொள்..ஒரு நாள்வரும்.. அந்த நாளில் நாங்கள் முடிவில்லா வாழ்வுக்கு உயிர்த்தெழுவோம்...நீயும் உம் மன்னனும் முடிவில்லா நரகத்திற்க்கு செல்ல எழுவீர்கள். மீண்டும் அப்போது சந்திப்போம். அதுவரை நடத்திக்கொள்  உன் நாடகத்தை" என்றாள் செசீலியா.
" ஓ செசீலியா..கோபத்திலும் உன் முகம் எவ்வளவு அழகாக இருகின்றது. உன்னைகொல்வதில் எனக்கு அவ்வளவாக உடன்பாடு இல்லை...எனக்கு நீ வேண்டும்..உன் அழகு  வேண்டும்...உன் தேன்மதுரக்குரல் வேண்டும்...உன் சொத்து வேண்டும் ..உன் சுகம் வேண்டும்...இவை எல்லாம் எனக்கு ஒன்றுகூட குறையாது வேண்டும். அது கிடைகாதவரை
உனக்கு மரணம் கிடைக்காது..."
" அடச்சீ மதி கெட்டவனே...என்னைக்கட்டிய கணவனுக்கு கூட கிடக்காத சுகத்தையா நான் உனக்கு கொடுத்துவிடப்போகிறேன். என்னை மீறி என்னைத்தொட்டவன் கதி என்ன ஆகும் தெரியுமா? அவன் உடனே கொல்லப்படுவான். கூடுமானால் முயன்றுபார். உனக்குத்தைரியம் இருந்தால் என் முன்னே வா.. என் பரலோக பர்த்தா எனக்குகொடுத்த வாக்குறுதி அது..சோதித்துப்பார்கிறாயா?" என்றாள். அவள் பேச்சின் வீரத்தில் ஒரு வினாடி ஆடித்தான் போனான் ஆளுநன். இருப்பினும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஒரு  அடி முன் வைத்தான். அவ்வளவுதான் செசீலியாவின் கண்களில் நெருப்பு பறந்தது. பதறியடித்துப்பின்வாங்கினான் ஆளுநன்.
     " மதிகெட்ட ஆளூநனே...உனக்கு கிறிஸ்த்துவர்களின் சொத்து வேண்டும். சுகம் வேண்டும். ரத்தம் வேண்டும். ஆனால் அவர்கள் வணங்கும் யேசுநாதர் வேண்டாம்..அவர் வாழும் பரலோகம் வேண்டாம்..இதற்கு அரசாங்கத்தின் ஆணையை உபயோகித்துக்கொள்கிறாய்.. வெட்கமாக இல்லை...காசுக்கு உடலை விற்கும் வேசிகள் உன்னிலும் ஆயிரம் மடங்கு உயர்ந்தவர்கள். நீ என்னிடம் கேட்ட அனைத்திலும் ஒன்றுகூட உனக்கு கிடைக்காது..உன்னால் முடிந்ததை செய்துகொள்."
      செசீலியாவின் இந்த வீரமான பேச்சினால் பெரும் அவமானமடைந்தான் ஆளூநன் அமால்கியுஸ். தன் கோபத்தை அடக்கிக்கொண்டு ," செசீலியா...இறந்துபோன உன்  கணவனுக்கு ஏறாளமான சொத்துக்கள் இருகிறதாமே... அவற்றை என்ன செய்யப்போகிறாய். ராஜ துரோகம் குற்றம் சாட்டப்பட்டு மறித்துப்போன கிறிஸ்தவர்களின் சொத்துக்கள்  பரிமுதல் செய்யப்பட வேண்டும். அவை அரசாங்கத்தை சேரவேண்டும். மரியாதையாக அவற்றை என்னிடம் ஒப்படைத்துவிடு " என்றான்..
" அமால்க்கியா, உன் அரசாங்கத்தின் சட்டமும் உன் புத்தியும் தெரிந்துதான் என் கணவர் தான் மரிப்பதற்குமுன் அவர் சொத்துக்கள் அனைத்தையும் ஏழைகளுக்கு தானபத்திரமாக கொடுத்துவிட்டார். இதை அவர் முழுமனத்துடனும் சுய நினைவுடனும் எழுதிக்கொடுத்துவிட்டபடியால் அதை உன் சட்டமும் அங்கீகரிக்கிறது. அவர் பெயரில் ஒரு சல்லிக்காசுகூட  இப்போது இல்லை ".
      வலேரியனின் சொத்துக்கள் அனைத்தையும் தான் வளைத்துப்போட்டுக்கொள்ளலாம் என்று நினைத்த ஆளுநன் அமால்க்கியுஸ் பெரும் ஏமாற்றம் அடைத்தான். அந்த ஏமாற்றம் அவன் வார்த்தைகளாகவும் வெளிப்பட்டது. " ஆ...பெண்ணே...நீயும் உன் கணவனும் என்னையும் அரசாங்கத்தையும் நன்றாக ஏமாற்றிவிட்டீர்கள். நான் இப்போதே உன்னை தீர்வை இடுகிறேன். நீ எம்மை அவமானப்படுத்திப்பேசவில்லை. எம் அரசாங்கத்தை அவமானப்படுத்தி இருகிறாய். ரோமைய பேரரசர் அலெக்ஸாண்டர் செவாருஸை அவமானப்படுத்தி இருகிறாய். எம் தெய்வங்களுக்கு தீப தூப ஆராதணை காட்டாதபடியால் எம் தெய்வங்களையும் அவமானப்படுத்தி இருகிறாய். இதெல்லாம் மீறி நம் அரசாங்கத்தால்  தடை செய்யப்பட்டுள்ள கிறிஸ்த்துவ மதத்தை பின்பற்றி இருக்கிறாய். இதெல்லாம் ராஜ துரோக குற்றமாகும். இதன்படி உனக்கு கொடும் மரண தண்டனை அளிக்கப்படுகிறது. உன்னை சித்திரவதை செய்யவும் மானபங்கப்படுத்தவும் எனக்கு அதிகாரம் இருகிறது. இதெல்லாம் சேர்த்து உனக்கு கொடுக்கப்படும். பிறகே உனக்கு மரண தண்டனை கொடுக்கப்படும். இவளை முச்சந்தியில் நிற்க வைத்து இவளை மானபங்கப்படுத்தி முடிந்தவரெல்லாம் கற்பழியுங்கள்" என்றான்.
       அதன்படி செசீலியா அந்த நகரத்தின் பேர் பெற்ற ஒரு விபச்சாரியிடம் ஒப்படைக்கப்பட்டாள். ஒரு முச்சந்தியில் அவள் நிற்க வைக்கப்பட்டு அவளை நிர்வாணமாக்க முயற்சிக்கையில் ஆண்டவறாகிய யேசுநாதர் அவளைக்காத்தார். சட சட வென்று அவள் உச்சந்தலைமுதல் அவள் கால்பாதம் வரை அவளது கேசம் வளர்ந்தது. அது அவளது நிர்வாணத்தை யாரும்  காணாதபடி அவளைக்காத்தது. இதைகண்ட பொதுமக்களை அச்சம் ஆட்கொண்டது. ஓஓஓ... இவள் தெய்வாம்சமானவள்...இவளை நெருங்குபவன் கொல்லப்படுவான் என அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அந்த பேர்பெற்ற விபச்சாரி செசீலியாவின் காலை கட்டிப்பிடித்துக்கொண்டு தன்னை மன்னிக்கும்படி மன்றாடினாள்.. அப்போதே தன் பழைய வாழ்கையை  விட்டுவிடுவதாக வாக்குறுதி அளித்தாள். நடந்த புதுமையை கேள்விப்பட்ட ஆளுநன் அமால்கியுஸ் செசீலியாவிடம் வந்தான். கடும் குரலெடுத்து கோபாவேசத்தோடு பேசினாள் செசீலியா..
       ." அமால்க்கியா...பார்த்தாயா.. இந்த அதிசயத்தை. உன்னால் என்னையோ என் கடவுளையோ ஜெயக்கவே முடியாது. தீமை அனைத்தினின்றும் என் பரலோக பர்த்தா என்னைகாப்பார்.. எந்த நல்ல கணவணாவது தன் மனைவியை மானபங்கப்படுத்த அனுமதிப்பானா? இதோ என் பரலோக பர்த்தா இந்த அநீதியிலிருந்து என்னை எப்படி காப்பாற்றினார் பார்த்தாயா... எந்த நல்ல கணவணாவது தன் மனைவியை யாரேனும் துன்புறுத்த அனுமதிப்பானோ ? அந்த தவறை தானும் செய்ய மாட்டான். மற்றவர்களையும் அனுமதியான். என் பரலோக பர்த்தாவின் அனுமதி இல்லாமல் யாராலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது." என்று கூறி ஆண்டவருக்கு தோத்திரமாக உச்சஸ்தாயியில் பாடினாள்.
" என் ஆண்டவரின் கையில் நான் இருக்கும்வரை வாதையோ தீமையோ என்னை அணூகாது,
உயர்ந்த பர்வதத்திலிருந்து அதலபாதாலத்தில் என்னை வீசினாலும்,
இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நான் நடக்க நேரிட்டாலும்
சமுத்திரத்தின் அடி ஆழத்தில் என்னை அமிழ்த்தினாலும்,
எரியும் கந்தகக்கடலில் வீழ்த்தினாலும்
நான் அஞ்சமாட்டேன்....ஏனெனில் நான் என் ஆண்டவரின் பத்தினி. எந்த கொடுமையான தீமையினின்றும் அவர் என்னைக்காப்பார்.
யேசுகிறிஸ்த்துவின் அன்பினின்று என்னை பிரிக்ககூடுபவன் யார்? "
இவள் பாடிக்கொண்டிருக்கும்போது குறுக்கிட்டான் ஆளுநன். " பெண்ணே நிறுத்து உன் பாடலை. உன் பாடல் எல்லாம் பெரும் துயர கீதமாகப்போகிறது..என்ன சொன்னாய்.. எரியும் கந்தகக்கடலில் வீழ்த்தினாலும் நீ அஞ்சமாட்டாயோ? உனக்கு என்னமாதிரியான ஆக்கினை கொடுக்க வேண்டும் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன்..நீயே எனக்கு நல்ல உபாயம் கூறினாய். நல்லது செசீலியா..நீ சொல்லியபடியே உன்னை நெருப்பில் ஆழ்த்துகிறேன் பார்... அடேய் யாரங்கே.. இவளை இவள் வீட்டிலேயே அவள்   குளியலறையில் மூச்சுமுட்டும்படி எரியூட்டிக்கொல்லுங்கள்" என்றான். 
   அதன்படி அவளது வீட்டிலேயே அவள் குளியலறையில் பெரும் அக்கிணிக்குண்டம் தயாரானது. மூச்சுமுட்டும்படியாக வாழை மட்டைகளும் சேர்க்கப்பட்டது. அது புகைந்து புகைந்து பெரும் புகைச்சலை ஏற்படுத்தியது. இதன் நடுவில் செசீலியா இறக்கப்பட்டாள். அப்போது அவள் பெரும்குறலெடுத்து பாடல் ஒன்றைப்பாடினாள்.
" பிதா, சுதன், பரிசுத்த ஆவி என் சிரசைக்காக்க,
அன்னை மரியாள் என் முகத்தைகாக்க,
நீதியின் சர்வேசுரன் என் நெஞ்சை காக்க,
வானோர் என் வலது தோளைகாக்க,
திவ்ய இஸ்பிரீத்து சாந்து என் இடது தோளைக்காக்க,
என்னையும் என் குடும்பத்தையும் காக்க."
இந்தப்பாடல் ஒரு பெரும் ஜெபமாக அமைந்தது. செசீலியாவின் அந்தப்பாடல் அமரத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அது வழிப்பயணம் மேற்கொள்பவர்களும், யாரும் அசுத்த  ஆவியால் பீடிக்கபடாதிருக்கவும் பழங்கால கிறிஸ்த்துவர்களால் பக்தியுடன் சொல்லப்பட்டு வந்தது. இப்போதும் இந்த மந்திரத்தை தெரிந்தவர்கள் அதை சொல்லிக்கொண்டுதான் இருகிறார்கள்.
       இந்தப்பாடலின் மகத்துவத்தினால் ஆண்டவரும் பெரும் அதிசயம் ஒன்றை செய்தார். ஒருவாரம் அளவாக இந்த அக்கிணிக்குண்டத்தில் பெரும் புகை மண்டலத்தில் நம் செசீலியா யாதொரு துன்பமும் நேரிடாதபடி அமைதியாக ஆண்டவரின் திரு நாம கீர்த்தனைகளை பாடிக்கொண்டிருந்தாள். அவளுக்கு வியர்வைகூட ஏற்படவில்லை என்று இந்த  தண்டனையை நிறைவேற்றியவன் தன்னுடைய வாக்கு மூலத்தில் கூறியிருக்கிறான்.
     இந்த ஒருவார காலத்தில் செசீலியா சாம்பலாகத்தான் போயிருப்பாள் என்று அவளைப்பார்க்க  வந்திருந்தான் ஆளூநன் அமால்கியுஸ். ஆனால் செசீலியா இன்னும் ஆண்டவரை போற்றி பாடிக்கொண்டிருந்ததை பார்த்ததும் அவன் அடைந்த ஆச்சரியம் வார்த்தையில் சொல்லி மாளாது. இருப்பினும் அவனது வீம்பு அவனை விடவில்லை. அவளை வெளியே கொண்டுவந்து எப்படியும் அவளை கொன்றே ஆக வேண்டும் எனமுடிவெடுத்தான்.
அவனது ஆணைப்படி செசீலியா வெளியே கொண்டுவரப்பட்டாள்.
       " என்ன அமால்கியா.. என் தெய்வத்தின் வல்லமையைப்பார்த்தாயா? அவரின் ஆற்றலைப்பார்த்தாயா? ஒரு வாரமாக இந்த அக்கினியும் புகையும் என்னை ஒன்றும் செய்ய முடியதபடி என் ஆண்டவறாகிய யேசு கிறிஸ்த்து என்னக்காத்தார். இப்போதும் ஒன்றும் குடிமுழுகிப்போய்விடவில்லை.. என் ஆண்டவரை நம்பு, யேசுகிறிஸ்த்துவை உன் கடவுளாக ஏற்றுக்கொள்.. அப்போது அவர் உன்னையும் மன்னித்து ஏற்றுக்கொள்வார். வீனாக அவரது கோபாக்கினிக்கு ஆளாகாதே..அவரது பொருமையை சோதிக்காதே." என்றாள் செசீலியா.
" பெண்னே செசீலியா...நீ எனக்கு ஆயிரம் உபதேசம் கூறினாலும் என் மனது யேசுவை கடவுளாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. நான் என் அரசாங்க ஆணையை நிறைவேற்றியே  ஆக வேண்டும்.. உன் கடவுள் உன்னைக்காப்பாற்றுவாறா பார்க்கலாம். உன்னை சிரச்சேதம் செய்ய உத்திரவிடுகிறேன். அது இங்கேயே.. இப்போதே.. நடக்கட்டும்." என்றான் ஆளுநன்.
      அவன் உத்திரவுப்படி பெரும் வீரன் ஒருவன் ஒரு பெரும் வாளைக்கொண்டு வந்தான். ஒரே வீச்சில் அவள் தலை துண்டாகும்படி வாளை வீசினான். ஆனல் அப்போதும் ஒரு புதுமை  நடந்தது. அந்த வாள் அவள் கழுத்தில் ஒரு சிறு காயத்தை மட்டுமே ஏற்படுத்தியது.
" அடே முட்டாள் நாயே.. நீ எல்லாம் ஒரு வீரனோ... ஒரே வீச்சில் அவள் தலையை துண்டித்திருக்க வேண்டாமோ.. மீண்டும் வீசு" என்றான் ஆளுநன்.
" எஜமான்.. என்னை மன்னியுங்கள் போர்க்களத்தில் நான் எத்தனையோ எதிரிகளின் தலையை என் ஒரே வீச்சில் வெட்டி இருகிறேன்.. ஆனால் இவள் அறியாப்பெண்.. இவளிடம்  என் வாள் வீச்சு ஏன் பலிக்கவில்லை என்று புறியவில்லை" என்றான் அந்த வீரன்.
" அட நாயே... பேசுவதை விட்டுவிட்டு காரித்தைப்பார்...இந்த முறை அவள் தலை வெட்டப்பட வேண்டும் " என்றான் ஆளூநன். வீரனின் வாள் வானுக்கு எழும்பிது. தன் பலம்  கொண்ட மட்டும் ஓங்கி வெட்டினான் அவன். ஆனால் அது செசீலியாவின் கழுத்தில் மேலும் ஒரு காயத்தை ஏற்ப்படுத்தியதே தவிர சிரசை வெட்டமுடிய வில்லை. இந்தப்புதுமைக்கண்டும் மனம் மாறாத ஆளுநன் அமால்கியஸ் அந்த கோபத்தை அந்த வீரனிடம் காண்பித்தான்.
" அடேய் அறிவு கெட்டா நாயே... என்னை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்தாயோ? இது உனக்கும் அவமானமாகப்படவில்லையா?. நீ எல்லாம் ஒரு வீரன். அடச்சீ. வெட்க்கமாக இல்லை உனக்கு. ஒரு சிறு பெண்னை வெட்டமுடியாத நீ போர்க்களத்தில் என்ன செய்து இருப்பாய்.. உனக்கு மற்றுமொரு சந்தர்ப்பம் தருகிறேன்.. இந்த முறை நீ அவளை இருகூறாக வெட்டவில்லை என்றால் அப்புறம் நடப்பதே வேறு.. வீசு வாளை " என்றான் அமால்கியுஸ்.
" ஆளுநர் அவர்களே... என்னை மன்னியுங்கள்... என்னை நம்புங்கள்.. இங்கே என்னமோ நடக்கிறது..என் தோல்வியைக்கண்டு என் மனம் கூசுகிறது. என் வாள் வீச்சு எப்படி இப்படி  ஆகிறது என்று எனக்கு தெரியவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் நான் என் முழு பலனையும் உபயோகிகிறேன் என் மீண்டும் வாளை வீசினான். அந்த மூன்றாவது வாள்வீச்சில் செசீலியாவின் கழுத்தில் ஒரு பெரும் ஆழமான காயத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் அவள் சிரசு முழுமையாக வெட்டப்படவில்லை. அவள் தொண்டைக்குழியில் பிரதான ரத்தக்குழாய்
வெட்டப்பட்டு ஏறாளமான ரத்தம் குபுகுபு வென்று வெளியேற ஆரம்பித்தது. இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த ஆளுநன் மிகுந்த வெறிகொண்டு எப்படியும் அவள் தலையை துண்டித்தே ஆக வேண்டுமென ஆணையிட்டான்.    
       அந்த வீரனும் வாளை ஓங்கினான். ஆனால் அங்கிருந்த படைத்தலைவன் அந்த வீரனை நோக்கி," நிறுத்து...வாளைகீழே போடு " என்றான். அப்போது ஆளுநன் அமால்கியுஸ்," வீரனே... என் ஆனையை நீ எப்படி தடுக்கலாம்...உனக்கு என் ஆணையை மீற அதிகாரம் கொடுத்தது யார்?" என்றான்.
அப்போது அந்த படைத்தலைவன்," எஜமான்..நம்முடைய ரோமைய சட்டம் அப்படி சொல்லுகிறது. சிரச்சேதம் தண்டனை பெற்ற குற்றவாளிக்கு மூன்று முறைக்குமேல் வாளை வீசக்கூடாது. அப்படியும் அவர் பிழைத்திருந்தால் அவருக்கு உயிர் பிச்சை அளிக்கப்படும் என்றிருக்கிறது..அது தங்களுக்கும் தெரியாததல்ல. ஆனாலும் இந்த பெண் கழுத்தில் இரத்தக்குழாய் வெட்டுப்பட்டுவிட்டதால் இவள் இன்றோ ..நாளையோ இறப்பது உறுதி. அதனாலேயே நான் நான்காம் முறை அவள் வெட்டப்படுவதை நான் தடுத்தேன். இதற்கு படைத்தலைவன் என்ற முறையில் எனக்கு அதிகாரம் இருகின்றது" என்றான்.
" ஒரு சின்னப்பெண்னை என்னால் பணிய வைக்கமுடியவில்லை.. இது எனக்கு பெருத்த அவமானம்...இதற்கு நாண்டுகொண்டு சாகலாம்" என்றான். எப்படியும் செசீலியா இன்றே இறந்துவிடுவாள் என்று எண்ணியவனாக அவள் வீட்டைவிட்டு தலையை தொங்கப்போட்டுக்கொண்டு வெளியேறினான் . இருப்பினும் எதோ நினைத்தவனாய் செசீலியாவின் அடுத்த வீடுக்காரனை அழைத்து," செசீலியாவுக்கு எவ்வளவு சொத்துக்கள் தேரும். சும்மா...ஒரு தோராயமாக சொல்லு.. அவள் பெரும் பணக்காரி என்று கேள்விப்படுகிறேன்" என்றான்.
       அதற்கு அவன்," ஐய்யா..முந்தாநாள் வரை செசீலியாவுக்கு ஏறாளமான சொத்துக்கள் இருந்ததென்னவோ வாஸ்த்தவம் தான். ஆனால் இன்று அவள் பெயரில் ஒரு சல்லிக்காசுகூட இல்லை. அவள் கணவர் வலேரியனுடன் சேர்ந்து தன் சொத்துக்கள் அனைத்தையும் ஏழைகளுக்கு தானம் செய்துகொடுத்துவிட்டாள். அவள் வீடுகூட அவளுக்குப்பின் எனக்கு சேரும்படி தானப்பத்திரம் கொடுத்திருகிறாள். எனக்கு பத்து பிள்ளைகள்..என் நிலைமை தெரிந்து இலவசமாக எனக்கு கொடுத்த அந்த்ப்புண்ணியவதி நன்றாக இருக்கவேண்டும்". என்றான்.
" அப்படியானால் நீ கிறிஸ்த்துவனா..அதனால்தானே அவள் உன் பெயருக்கு அதை தானம் செய்திருகிறாள்?"
" இல்லை ஐய்யா..நான் கிறிஸ்த்துவன் அல்ல... அந்த அம்மையாரும் அவர் கணவர் வலேரியனும் தங்கள் சொத்துக்களை இல்லாத ஏழை எளியவர்களுக்குத்தான் தானமாக கொடுத்தார்களே தவிர அவர்கள் கிறிஸ்த்துவர்களா அல்லது பிற மதத்தினரா என்று பார்த்துகொடுக்கவில்லை." என்றான்.
" அடச்சே...இவனிடமும் நான் அவமானப்பட்டது தான் மிச்சம் " என்று தன்னை நொந்துகொண்டு தன் வீடு சென்றான் ஆளூநன் அமால்கியுஸ்.
     ஆளுநன் போனதை உறுதிப்படுத்திக்கொண்ட அந்த மனிதன்," அடேய் கொடுங்கோல் நாயே...செசீலியம்மா அந்த வீட்டை என்னிடம் கொடுத்தது எதற்காகத்தெரியுமா? தான் இறந்த பிறகு ஒருகாலத்தில் அவர் வீட்டை ஒரு தேவாலயமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடுதன் என்னை நம்பி அந்த வீட்டை ஒப்படைத்தார்கள். பரிசுத்தபிதா முதலாம் அர்பனிடம் நாளைக்கே அந்த வீட்டை ஒப்படைக்கப்போகிறேன்" என்றான்.
      கழுத்து அறுபட்ட நிலையிலும் தன் வீட்டிலேயே மரணப்படுக்கையில் கிடந்தாள் நம் செசீலியா... அப்போதும் ஆண்டவறாம் யேசுகிறிஸ்த்துவுக்கு துதிப்பாடலும் நன்றிப்பாடலும் பாடிக்கொண்டே இருந்தாள்.இவ்விதமாக மூன்று நாள் கடந்தது. இனிமேலும் தன் பத்தினியை வேதனையில் கஸ்ட்டப்பட யேசுநாதர் விரும்பவில்லை. எனவே அவளை தன்னுடனே அழைத்துக்கொள்ள சித்தம் கொண்டார். மூன்றாம் நாள் இரவு அவள் வீட்டிலேயே பரலோகம் இறங்கியது. செசீலியாவை சூழ்ந்திருந்த பல ரகசிய கிறிஸ்த்துவ பெண்கள் கூட்டம் இந்த அதிசயத்தை கண்டார்கள். வீட்டின் மேல் விதானம் மறைந்து ஒரு பரலோக ஒளிவெள்ளம் சூழ்ந்தது. ஆண்டவராம் யேசுகிறிஸ்த்து தன் அன்பான விசுவாசமான பத்தினியை தன்னுடன் வர அழைத்தார். நம் செசீலியாவின் உடல்முழுவதும் ஒருவிதமான ஒளிவெள்ளத்தால் சூழப்பட்டு மின்னியது. செசீலியாவின் ஆன்மா ஒரே ஒளிப்பிரவாகமாக  அவளிடமிருந்து எழும்பியது. அது அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே காற்றில் கறைந்து போனது. ஆண்டவறாகிய யேசுகிறிஸ்த்து தன் விசுவாசமான அன்பான பத்தினியை  தன் வானக வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போய்விட்டார்.    
     எப்போதுமே செசீலியாவுடன் அவள் தோள் மீது அமர்ந்து பாடிக்கொண்டிருந்த அந்த இசைக்குயிலும் சோககீதம் எடுத்துப்பாடியது. சற்று நேரத்தில் அதன் குரலோசை அடங்கியது. தன் எஜமானி இல்லாமல் அதற்கும் வாழப்பிடிக்கவில்லையோ என்னமோ தலையை தொங்கப்போட்டுக்கொண்டு  மீளாத்துயிலில் ஆழ்ந்தது.
      செசீலியாவின் மரணத்திற்குபிறகு அவளது உடலை ரகசிய கிறிஸ்த்துவர்கள் ரகசியமாக அந்த கலிஸ்த்தா குகையிலேயே புதைத்தார்கள். அப்போதைய பரிசுத்தபிதா முதலாம் அர்பன் அவர்கள் செசீலியாவின் உடலை வேத சாட்ச்சிகளாய் மரித்துபோன பரிசுத்தபிதாக்களின் சமாதிக்கு அருகிலேயே புதைத்தார்கள். இப்போதும் அந்த சமாதி இருகின்றது.
    கி.பி. 250 ஆண்டுகளில் மரித்ததாக சொல்லப்படும் நம் செசீலியாவின் சமாதி கி.பி.நான்காம் நூற்றாண்டில் மீண்டும் திறந்து பார்க்கப்பட்டது. அப்போதும் ஆண்டவறாகிய  யேசுகிறிஸ்த்து தன் பத்தினியாகிய செசீலியாவின் திரு உடலுக்கு ஒரு புதுமையை செய்திருந்தார். ஆம்... செசீலியாவின் திரு உடல் அப்படியே நேற்று இறந்தாற்போல் இருந்தது.
        செசீலியம்மாள் இறந்து ஒன்பதாம் நூற்றாண்டில் அவர் விருப்பப்படியே அவர் வீடு அவர் பெயரில் புனித செசீலியம்மாள் தேவாலயம் என்று கட்டப்பட்டது. அந்த ரகசிய கலிஸ்த்தா குகைக்கல்லறையிலிருந்து கொண்டுவரப்பட்ட அவரது அழியாத திரு உடல் அவரது வீடு தேவாலயமக மாற்றப்பட்டபிறகு அங்கேயே வைக்கப்பட்டது. அந்த ஆலயத்தின் பிரதான பீடத்திலும் அவரது சமாதி இருந்த அந்த கலிஸ்த்தா குகையிலும் அவரது உயிரோவியமான சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. செசீலியம்மாள் இறந்தபோது அவரது விரல்கள் மூன்றுமட்டும் நீட்டியபடியே இருந்தது. அவை பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்னும் தம திருத்துவத்தை குறிப்பதாக வேத விற்பன்னர்கள் கூறுகிறார்கள்.
       மேலும் செசீலியம்மாளின் சரீரமும், அவருடைய கணவர் வலேரியனின் உடலும், அவர் சகோதரன் திபெர்த்தியுவின் உடலும், இவர்களோடு யேசுவுக்கு சாட்ச்சியாய் மரித்துப்போன  அந்த சிறைக்காவலாளி மாக்சிமியன் உடலும் அவரவர் சமாதிகளிலிருந்து மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு இந்த புனிதை செசீலியம்மாளீன் தேவாலயத்திற்கு கொண்டுவரப்பட்டு  அங்கேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
         உயிரோடு வாழ்ந்த காலத்தில் கணவன் மனைவியாக சேர்ந்து வாழாதவர்கள் சாவிலும் பிறிந்தே இருந்தனர். ஆம் ...புனித செசீலியம்மாள் சரீரம் அவரது தேவாலயத்தில் நடுப்பீடத்தின் மேலே உயரத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது கணவர் வலேரியோயன் சரீரம் தனியே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மரணத்தில்கூட  அவர்கள் ஒன்றாக மரிக்கவில்லை. கல்லறையில் கூட அவர்கள் ஒன்றாக வைக்கப்படவும் இல்லை.
        கி.பி. 1599 ல் புனித செசீலியம்மாளின் கல்லறையை திறந்து பார்த்தபோதும் அவரது திருசரீரம் அழியாமல் அப்போதுதான் இறந்ததுபோல் இருக்கக்கண்டதாக ரோமன் கத்தோலிக்க செய்திக்குறிப்பு கூறுகின்றது. இந்த சிலைவடித்த சிற்பி தான் புனித செசீலியம்மாவின் திரு உடலை எப்படிப்பார்த்தாரோ அப்படியே அவரது சிலையை வடித்ததாக கூறுகின்றார்.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையும், ஆங்கிலிக்கன் திருச்சபையும், கிழக்கு ரீதி பழமை திருச்சபையும் கிழக்கு ரீதி கத்தோலிக்க திருச்சபையும் இவரை புனிதராக அங்கீகரித்து அவர்  திருநாளை நவம்பர் 22 ஆம் தேதி கொண்டாடுகின்றன. அனைத்து திருச்சபைகளும் புனித செசீலியம்மாளை இசைகுழுக்களுக்கு பாதுகாவலராக போற்றுகின்றனர். பழமையான ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்றில் புனித செசீலியாவுக்கு ஒரு தனி இடம் உண்டு.
" வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தாற்கு
யாண்டும் இடும்பை இல."


.