Wednesday, June 2, 2021

“ அக்கேயுஸ்…நான் யாரென்று நீ சாட்ச்சியம் கூறு “

 

 

“ அக்கேயுஸ்…நான் யாரென்று நீ சாட்ச்சியம் கூறு “


    ஸ்வாமி இயேசு ராஜாவின் புகழ் கலிலேயா கடற்பட்டிணங்கள் அனைத்திலும் வெகுவாக பாராட்டி பேசப்பட்டது.  எனவே கப்பர்னாஹூம் என்னும் கடற்கறைப்பட்டிணத்தில் இருந்த  தேவாலயத்தில் அன்று இயேசுநாதர் போதிக்கப்போகின்றார் என்ற செய்தி பரவியதும் அங்கு ஏறாளமான கூட்டம் கூடியது இயேசுநாதர் தேவாலயத்தில் பிரவேசித்ததும்  மக்கள் மிகுந்த சந்தோஷத்தால் பெரும் ஆரவாரம் செய்து கரகொஷம் எழுப்பினர். போதகர் வருகின்றார் , அவருக்கு வழிவிடுங்கள். ஆண்டவர் பெயரால்  வருகின்றவர் ஆசிபெற்றவர். உன்னதராகிய மெசியாவுக்கு ஓசான்னா என்ற வாழ்த்துக்களால் அவரை வரவேற்றனர். ஆனாலும்  சிலருக்கு இவ்வாழ்த்துக்கள் பிடிக்காமல் போயிற்று. இது அவர்கள் முகபாவங்களால் தெளிவாக தெரிந்தது. இதையும் இயேசுநாதர் கவனிக்கவே செய்தார். ஆயினும் இவர்களை கண்டுகொண்டதாக அவர் காட்டிக்கொள்ளவில்லை. ஆலயத்தில் நுழையும்போது அவர் தன் கரங்களை விரித்து ஆண்டவரின் ஒளியையும் அவருடைய சத்தியமான வார்த்தைகளையும் கேட்க்க வந்திருக்கும் அனைவருக்கும் சமாதானம் உண்டாவதாக என்று வாழ்த்தியபடியே  தேவாலயத்தின் உள்ளே வந்து அங்குள்ள  ஆலய தலைவருக்கு ஷலோம் என்று முகமன் கூறி தன் ஆசனத்தை அடைந்தார். ஏற்கனவே தன் வாழ்நாளின் பாதிபாகத்தை கடந்துவிட்ட அந்த ஆலய தலைவர் இயேசுவிடம்,” நீர் போதிக்க தயாராக இருகின்றீரா? உமக்கு எந்த மாதிரியான  வேதாகம சுருள் வேண்டும்?” என்றார்.

      இயேசுநாதர் அவரிடம்,” எனக்கு ஏதாவது ஒரு வேதாகம சுருளை கொடுங்கள். பரிசுத்த ஆவியானவர்  நம்மை வழி நடத்துவாராக “ என்றர். அவரும் ஒரு சுருளைக்கொடுக்க  அதன் ஒருபகுதியை அவர் சுட்டிக்காட்டி இதைப்பற்றி இன்று போதியுங்கள் என்றார். அந்தப்பகுதி ஜோஷுவா  ஆகமத்தின் ஒரு பகுதி. இயேசுநாதர் எழுந்து நின்று அந்தபகுதியை வாசிக்கலானார்.

ஆது  இப்படி இருந் தது.” நீ எழுந்திரு. ஜனங்களை பரிசுத்தம் பண்ணு. அவர்களுக்கு நீ சொல்ல வேண்டியது யாதெனில் நாளைய தினத்துக்கு உங்களை பரிசுத்தம் பண்ணிக்கொள்ள வேண்டும். ஏனெனில் இஸ்ராயேலின் தேவனாகிய கர்த்தர் உங்களைபார்த்து,” இஸ்ராயேலே சாபம் உங்கள் நடுவிலே இருகின்றபடியால் இந்த தோஷம் யாராலே வந்ததோ அவன் உன்னிடத்தினின்று நிர்மூலமாகுமட்டும் நீ உன் சத்துருக்களுக்கு முன்பாக நிற்பதில்லை” ஜோஷுவா ஆகம ம்.  7: 13.

இந்த இடத்தில் நேயர்கள் மேற்கூறப்பட்ட வர்த்தமானங்களின் பின்னனியை அறிந்திருப்பது அவசியம்.

    ஜோஷுவாவின் தலைமையில் சுமார் ஒரு இரண்டாயிரம் படை வீரர்கள் ஆயிப்பட்டிணத்தை பிடிக்க சென்றனர். ஜோஷுவா தன் வீரர்களிடம் எதிரிகளின் மட்டில் எச்சரிக்கையாய் இருங்கள். பட்டிணத்தில் கொள்ளையிடும் பொருட்க்களில் வெள்ளி, தங்கம், இரும்பு போன்ற பொருட்க்கள் கடவுளுக்குறியவை. அவை கடவுளின் கருவூலத்தில் சேர்க்கப்பட வேண்டும் மற்ற எந்த பொருளும் சாபத்துக்குள்ளானவை. அவற்றை தீக்கிரையாக்க வேண்டும். எனவே சாபத்துக்குள்ளான எந்த பொருளையும் அல்லது கடவுளுக்குறிய எந்தப்பொருளையும் நீங்கள் சொந்தமாக்கிகொள்ள கூடாது. அவ்வாறு செய்தால் நீங்கள் அழிக்கப்படுவீர்கள். இது ஆண்டவரின் கட்டளை. எனவே எச்சரிக்கையாக செயல்படுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.  

        ஆனால் நடந்தது வேறு போரில் இஸ்ரேயேலர்கள் தோற்றனர். இது ஜோஷுவாவுக்கு பெரும் அவமானமாக இருந்தது. அவரும் அவருடைய போர்த்தளபதிகளும் காலை துவங்கி மாலைவரை தவமிருந்து அழுது புலம்பி இத்தோல்விக்கு காரணம் என்ன என்று  ஆண்டவரிடம்  விசாரித்தனர்.

    அப்போது ஆண்டவர் ஜோஷுவாவிடம்,” ஏன் அழுது புலம்பிக் கொண்டிருக்கின்றாய். இஸ்ராயேல் மக்கள். நமக்கு  எதிராக பாவம் செய்தனர். அவர்களுடன் நாம் செய்திருந்த உடன்படிக்கையை மீறிவிட்டனர். அவர்கள் அழிவுகுறியதிலிருந்து எடுத்துக்கொண்டனர். களவு செய்தனர், வஞ்சித்தனர், சாபாமான பொருட்க்களை தங்களுடன் சேர்த்துக்கொண்டனர். ஆகவேதான் இஸ்ராயேல் மக்கள்  தங்கள் எதிரிகளின் முன் நிற்க முடியாமல் புறமுதுகு இட்டு ஓடினர். அவர்கள் அழிவுக்குறியவர்கள். உங்கள் நடுவிலிருந்து அழிவுக்குறியவற்றை நீங்கள் அழிக்காவிட்டால்  நான் இனி உங்களுடன் இருக்க மாட்டேன். மக்களை புனிதமாக்க  நாளைய தினம்  உங்களை தூய்மை படுத்திக்கொள்ளுங்கள் என்றார்

  இஸ்றாயேல் மக்கள் தூய்மை சடங்கிற்கு உட்படுத்தப்பட்டபின்  இந்த அழிவுக்கு காரணமாகிய யூதா கோத்திரத்தை சேர்ந்த  சேராகின் குடும்பத்தை சேர்ந்த சபதி வீடு பிடிபட்து. அவ்வீட்டிலுள்ளவர்களை விசாரித்தபோது  கர்மியின் மகனாகிய ஆக்கான் என்பவன் பிடிபட்டான்.  ஜோஷுவாவின் ஆட்க்கள் அவனுடைய கூடாரத்தை சோதனையிட்டபோது அவன் கொள்ளைப்பொருட்க்களில் சிலவற்றை பூமியில் புதைத்துவைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் கடவுளின் நீதி அவன்மீது இறங்கியது.  ஆக்கானும் அவன் குடும்பத்தார் அனவரும்  கல்லால் ஏறிந்து கொல்லப்பட்டனர்..

   

 அந்த கற்கள் எல்லாம் ஒரு பெரும் குவியலாக இன்றளவும்  ஆக்கான் பள்ளத்தாக்கு என்னுமிடத்தில்  உள்ளது. சாபத்துக்குள்ளான பொருட்களும் அதற்கு காரணமாகியவனும் அழிக்கப்பட்தால் கடவுளின் கோபம் தணிந்தது.. மீண்டும் ஜோஷுவா தொடுத்த போரில்  ஆயிப்பட்டிணம்  பிடிபட்டு முற்றிலும்  தீக்கிறையாக்கப்பட்டு அழிக்கப்பட்டது. எச்சரிக்கை  கடவுளுக்குறியதை களவாடுபவர்களுக்கு ஆக்கானுக்கு நேர்ந்த கதி தான் ஏற்படும். இன்றளவும் அந்த ஆயிப்பட்டிணத்திற்கு  நேர்ந்த பேரழிவுக்கு சாட்ச்சியமாக 

தீக்கிறையாக்கப்பட்ட  அந்த ஆயிப்பட்டிணத்தின் இடிபாடுகளை இன்றளவும் காணலாம்.

    இப்போது நான் மீண்டும் கதைக்கு வருகின்றேன்.

   இயேசுநாதர்  வேதாகம சுருளை படித்து முடித்துவிட்டு அதை  தேவாலய தலைவரிடம் கொடுத்தார். அப்போது கூட்டத்திலிருந்து ஒருவன் ,” இதோ இஸ்ராயேலை ஆளப்போகும் அரசர்.. வாக்களிக்கப்பட்டவர், நம் ஜனங்களை ஒன்றாக கூட்டிசேர்ப்பவர் “ என்று கட்டியம் கூறினான்.

         இயேசுநாதர் தம் கரங்களை விரித்து கூட்டத்தினரை அமைதிப்படுத்தி தன் பிரசங்கத்தை ஆரம்பித்தார்.

   “ உங்களை அர்ச்சிக்க வந்தவர் எழுந்துவிட்டார். அவர் இந்த அலுவலுக்காக  தம்மையே தயாரித்து  தம் இல்லத்தின் மறைவிலிருந்து வெளியே வந்துவிட்டார். அவர் உங்களுக்கு  சுத்திகரிப்பின் முன்மாதிரிகை காட்டும்படியாக தம்மை சுத்திகரம் செய்துகொண்டார். தேவாலத்திலிருகிற வலியவர்களுடனும் கடவுளுடைய பிரஜைகளுடனும்  தம் ஸ்தானத்தை உறுதி செய்துகொண்டார். அவர் இப்போது உங்கள் நடுவில் இருகின்றார். அது நானே. புகைபடர்ந்த மனங்களுடனும், அமைதியற்ற இதயங்களுடனும் உங்களுள் சிலர் எண்ணுவதையும் எதிர்பார்ப்பதையும் போலல்ல. எதிர் காலத்தில் தான் அரசனாக இருக்கப்போவதும் உங்களை அழைக்கப்போவதுமான இராஜ்ஜியம் அதைவிட அதிகம் பெரியதுமாகும்.

       இஸ்ராயேலே… மற்றேல்லா ஜனங்களுக்குள்ளும்  முன்னே உன்னை நான் அழைக்கிறேன். ஏனென்றால் இந்நேரத்தின் வாக்குறுதியை  உங்கள் பிதாக்களின் பிதாக்களிடத்தில் நீங்கள் பெற்றுக்கொண்டீர்கள். ஆனால் அவருடைய இராஜ்ஜியம் ஆயுதம் அணிந்த கும்பல்களாலோ அல்லது காட்டுத்தனமான  இரத்தம்  சிந்துதலாலோ ஏற்படுத்தப்படாது. பலவந்தக்காரரும், மக்களை அடக்கி ஆள்பவர்களும், ஆங்காரிகளும், கோபக்கார்களும், காய்மகாரர்களும், இச்சைப்படுவோரும்,, பொருளாசைகாரரும் அதில் நுழைய மாட்டார்கள். மாறாக  நல்லவர்களும், சாந்தமுள்ளவர்களும், பொருமை உள்ளவர்களும், கடவுளையும், தங்கள் அயலாலரையும் நேசிகிறவர்கள் மட்டுமே  அதில் அனுமதிக்கப்படுவார்கள்….

          இஸ்ராயேலே… புற எதிரிகளுடன்  நீ சண்டையிடும்படி கேட்க்கப்படவில்லை. உங்கள் அக எதிரிகளோடு சண்டையிடுங்கள். உங்கள் எல்லோருடைய இருதயங்களிலும்  இருக்கின்ற எதிரிகளுக்கு எதிராகவே சண்டையிடுங்கள். ஆயிரமாயிரமான  உங்கள் பிள்ளைகளின் இருதயங்களில் இருக்கிற எதிரிகளுக்கு எதிராகவே போரிடுங்கள் .நாளை… கடவுள் உங்களை ஒன்றுகூட்டி சேகரிக்க  வேண்டுமென நீங்கள் விரும்பினால், என் ஜனங்களே  யாராலும் தோற்கடிக்கப்பட முடியாதது உங்கள் இராஜ்ஜியம். அதை உங்கள் எதிரிகள் தோற்கடிக்கவோ அதன்மேல் படைஎடுக்கவோ, நசுக்கிவிடவோ முடியாது என்று ஆண்டவர் உங்களிடம் கூறும்படி விரும்பினால் உங்கள் எல்லோர் இதயங்களிளும் இருக்கின்ற பாவம் என்னும் தடையை அகற்றுங்கள்.

          இஸ்ராயேலே கேள். நாளை… அது எந்த நாள்….ஒரு ஆண்டு… அல்லது ஒருமாத காலத்தில் வருவதா?. அதை துருவி அறிய  விரும்ப வேண்டாம். குற்றமுள்ள  மந்திரவாதத்தை போன்ற வழிகளால்  எதிர்காலத்தை ஆய்ந்தறியும் தவறான ஆசைக்கு இடமளிக்க வேண்டாம். காலங்களின் இரகசியத்தை  நித்திய கடவுளுக்கு விட்டுவிடுங்கள். நாளை… இன்று மாலைக்குப்பின் வரும் காலையில் இன்று இரவுக்குப்பின் சேவல்கூறும் நேரத்தில் எழும் காலையில் வந்து  உண்மையான தபசினால் சுத்திகரமடையுங்கள்.

         இஸ்ராயேலே கேள்… மன்னிப்படையும்படியாகவும்  தேவனின் இராஜ்ஜியத்துக்கு ஆயத்தம் அடையும்படியாகவும் பச்சாதாபப்படுங்கள். பாவம் என்னும் தடுப்பை உங்களிடமிருந்து அகற்றுங்கள். ஒவ்வொருவனிடமும் தன் தன் பாவத்தடை இருகின்றது. நித்திய  இரட்ச்சண்யத்திற்கான பத்துக்கற்பணைகளுக்கு எதிரான பாவம் ஒவ்வொரு மனிதனிடத்திலும் இருகின்றது. நேர்மையுடன் உங்கள் மனசாட்ச்சியை சோதித்து பாருங்கள். அப்போது உங்கள் தவறுகளை கண்டுகொள்வீர்கள். உண்மையான தாழ்ச்சியுடன் மனஸ்தாபப்படுங்கள். நீங்கள் கட்டாயமாக மனம் திரும்ப வேண்டும். உங்கள் வாயால் மட்டுமல்ல. உங்களால் கடவுளை பரிகசிக்கவோ அல்லது ஏமாற்றவோ முடியாது. நீங்கள் வாழும் முறைகளை மாற்றக்கூடிய உறுதியான மனதோடு தேவனுடைய சத்தியதிற்கு  திரும்பிவரும் வகையில் மனஸ்தாபப்படுங்கள். மோட்ச்ச ராஜ்ஜியம் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்ரது. அதுவே நாளை…

       இஸ்ராயேலே கேள்…நாளையா என்று நீங்கள் கேட்க்கலாம். ஓஓஓஓ…. கடவுளின் நேரம் எப்போதுமே சீக்கிரத்தில் வருகின்ற நாளை தான். பிதாப்பிதாக்களின் வாழ்நாளைப்போல  நீண்ட வாழ்வின் இறுதியில் வந்தாலும் அது அப்படித்தான். நீங்கள் கணக்கிடுகின்ற நாள், மாதம், வருடம்,நூற்றாண்டு  என்பதெல்லாம்  உங்களை உயிருடன் வைத்திருகின்ற  நித்திய இஸ்பிரீத்துவின்  இருதய துடிப்புகள்தான். உங்கள் ஆன்மாக்கள் நித்தியமானவை. ஆதலால் நீங்களும் உங்கள் ஆன்மாக்களுக்கு உங்கள் சிருஸ்ட்டிகர் கொள்வதுபோன்ற கால அளவையே கொள்ளவேண்டும். ஆகையால் நீங்கள் நாளை என்பது என் மரணத்தின்  நாள் என்றே சொல்ல வேண்டும். ஆனால்  விசுவாசம் உடையவருக்கு அது மரணமல்ல. அது எதிர்பார்த்திருக்கும் இளைப்பாற்றி. மெசையா வந்து மோட்ச்ச கதவை திறக்கும்படி அவருக்காக காத்திருத்தல் ஆகும்.

         இஸ்ராயேலே கேள்… இதோ நான் உங்களுக்கு கூறுகிறேன். இங்கே இருகிறவர்களில் இருபதேழு பேர் மாத்திரமே இறந்து அப்படி காத்திருப்பீர்கள். மீதிப்பேர் தங்கள் மரணத்திற்க்கு முன்பே நியாயத்தீர்ப்படைவார்கள். அவர்களுடைய மரணம்  எந்த தாமதமும் இல்லாமல் ஒன்றில் கடவுளிடம்  செல்வதாக இருக்கும். அல்லது சாத்தானிடம் செல்வதாக இருக்கும். ஏனென்றால் மெசையா வந்துவிட்டர். அவர் உங்கள் நடுவில் இருகின்றார். உங்களுக்கு சுவிசேசத்தை கொடுப்பதற்காக  உங்களுக்கு சத்தியத்தை போதித்து உங்களை மோட்ச்சத்தில் பாதுகாப்பதற்காக  உங்களை அழைக்கிறார்.

    இஸ்ராயலே   என் ஜனமே  கேள்…. தவம் செய்யுங்கள். மோட்ச இராஜ்ஜியத்தின் நாளைய தினம் அருகில் இருகின்றது. நீங்கள் நித்திய நாளை சொந்தம் ஆக்கிக்கொள்ளும்படியாக நீங்கள் தூய்மையாய் இருப்பதை அந்த நாள் காண்பதாக. சமாதானம் உங்களோடு இருப்பதாக.”

      இஸ்ராயேலே  கேள்…உங்கள் ஆங்காரத்திற்காகவும்….உலகப்பிரகாரமாய் உங்களை ஒரு தேசம் என்று நீங்கள் கருதியதற்காகவும் யாவே உங்களை தண்டித்திருகின்றார். ஆனால் அவர் உங்களை எவ்வளவு நேசிகின்றார்… உங்களுடன் எவ்வளவு பொருமையாய் இருகின்றார். மற்ற யாவரையும் விட உங்களிடம் அப்படி இருகின்றார்.  தன் மெசியாவான இரட்ச்சகரை உங்களுக்கு தந்திருகிறார். நீங்கள் அவருக்கு செவிகொடுத்து  கடவுளின் கோபத்தின் நேரத்திற்கு முன்பே காப்பாற்றும்படியாகத்தான் அவர் பொருமையாக இருகின்றார். நீங்கள் இனிமேலும் பாவிகளாய் இருக்க அவர்  விரும்பவில்லை.. அவர் கடந்துபோகின்ற உலக காரியங்களில் உங்களை தண்டித்து அந்தக்காயம் உங்கள் ஆத்துமாக்களை குணப்படுத்தவில்லை, மாறாக அது உங்களை மேலும் மந்தமாக்குகின்றது என்று அவர்  கண்டதினால்  அதற்குமேல் உங்களுக்கு வேறு தண்டனையை அனுப்பாமல் உங்களுக்கு இரட்சண்யத்தை தருகின்றார். உங்களை குணப்படுத்துகின்ற உங்களை இரட்ச்சிகிற உங்களுடன் பேசுகின்ற என்னை உங்களுக்கு அனுப்பி இருகின்றார்.

    இயேசுநாதர் இவ்வாறு பிரசிங்கித்துக்கொண்டிருக்கும் போது கூட்டத்தில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. குற்றம் கண்டுபிடித்தே பேர்வாங்கும் புலவர்கள் இருப்பதுபோல இயேசுநாதரின் போதகத்தில் குற்றம் குறை காணும் நோக்கில் சில பரிசேயர்கள் அவர் மட்டில் எரிச்சல் பட்டுக்கொண்டார்கள். இவர் தன்னை மெசியா என்றும் நம்மை இரட்ச்சிக்க வந்த இரட்ச்சகர் என்றும் கூறுகின்றாரே இதென்ன போதனை.. இது நிச்சயமாக தவறான போதனை தான் என்று முனுமுனுத்தனர்.

      ஒருவன் துணிந்து எழுந்து,” இதுவரை இஸ்ராயேலுக்கு வந்த எந்த தீர்க்கதரிசியும் உம்மைப்போல் தன்னை  கடவுளீன் பிரதிநிதி என்று துணிந்து கூறவில்லை.ஆனால்…நீர் யார்?...இப்படிப்பேசுகின்ற நீர் யாருடைய ஆணையின் மேல் பேசுகின்றீர்.? என்றான்.

 ‘” நான் என்னைப்பற்றிக்கூறுவதை தீர்க்கதரிசிகள்  தங்களைப்பற்றிக்கூற முடியவில்லை. நான் யார்.?. நான் எதிர்பார்க்கப்பட்டவர். வாக்களிக்கப்பட்டவர். நீங்கள் ஏற்கனவே கேட்டு இருக்கின்றீர்கள்.” ஆண்டவருடைய வழியை ஆயத்தம் செய்யுங்கள். இதோ ஆண்டவறகிய கடவுள் வருகின்றார். அவர் உண்மையான பாஸ்காவின் செம்மறியாக இருந்தாலும் ஓர் ஆயனைப்போல்  தம் மந்தைக்கு உணவளிப்பார்.. உங்களில் அனேகம் பேர் அந்த வார்த்தைகளை முன்னோடியிடமிருந்து கேட்டீர்கள். மேலும் வான மண்டலங்கள் ஒளியால் மிளிர அந்த ஒளி ஒரு புறாவின் வடிவில்  இறங்குவதை அவர்கள் கண்டார்கள். நான் யார் என அந்தக்குரலையும் கேட்டார்கள். நன் யாருடைய ஆணையின் மேல் பேசுகின்றேன்? இருக்கின்றவரும் என்னை அனுப்புகிறவருமான அவருடைய ஆணையின்மேல் பேசுகின்றேன்..”

   நீர் இப்படி சொல்லுகின்றீர். ஆனால் நீர் ஒரு பொய்யனாகவோ அல்லது கனவு காண்பவனாக கூட இருக்கலாம் அல்லவா?. உம்முடைய வார்த்தைகள் புனிதமானவைகளகத்தான் இருகின்ரன. ஆனால் சில சமயங்களில் சாத்தான் புனிதத்தால் பூசப்பட்ட ஏமாற்று வார்த்தைகளை மக்களை ஏமாற்றுவதற்காக  உபயோகிகிறானே. உம்மை நாங்கள் அறியவில்லை?”

“ நான் இந்த உலகத்தின் பிரகாரமாக தாவீதின் கோத்திரத்தில் சூசையினுடைய யேசு. நான் பெத்லஹேம்  என்னும் எப்பிரத்தாவில்  வாக்களித்தபடியே பிறந்தேன். நாசரேத்தில் வாழ்ந்ததால். நசரேயன் என்று அழைக்கப்படுகின்றேன். கடவுள் பிரகாரமாக  நான் அவருடைய தூதுவன். என்னைப்பற்றி என்னுடைய சீடர்கள் அறிந்திருகின்றார்கள்.”

“ ஓஓஒ. அவர்களா… அவர்கள் தாங்கள் சொல்வதை அல்லது நீர் அவர்களுக்கு சொல்லிக்கொடுத்ததை சொல்ல முடியும்.. இந்த சாட்சியத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது  உம்மை இதற்குமுன் நாங்கள் அறிந்திருக்கவில்லை.   

  “ அப்படியானால் என்னை அறியாத அல்லது என்னை நேசியாத  இன்னொருவன் சொல்லுவான் நான் யாரென்று இங்கிருகின்ற ஜனங்களுள் ஒருவனை கூப்பிடுகின்றேன். சற்று பொறு”

  இயேசுநாதர்  அங்கிருக்கும் பெரும் கூட்டத்தை பார்க்கின்றார். இந்த கூட்டத்தில் பலருக்கு  இந்த விவாதம் எரிச்சலாகவும் சிலருக்கு மிகுந்த ஆர்வமாகவும் இருந்ததால் கூட்டம் இரண்டாக பிரிகின்றது. சிலர் இயேசுநாதருக்கு ஆதரவாகவும் சிலர் அவருக்கு எதிராகவும் பேச ஆரம்பித்தனர்.

   இயேசு கூட்டத்திலிருந்த ஒருவனைப்பார்த்து, “ அக்கேயுஸ்.. இங்கே வா..இது என் கட்டளை” என்றார்.

   அப்போது கூட்டத்தில் ஒரு பரபரப்பு காணப்படுகின்றது. ஒரு மனிதன் எழுந்து வருவதற்கு ஒரு வழி விடப்படுகின்றது. அந்த மனிதன் உடல் முழுவதும் நடுங்குகின்றான். ஒரு ஸ்த்ரீ அவனை தாங்கி வருகின்றாள். அவள் அந்த மனிதனுடைய தாயாக இருக்கக்கூடும். இயேசு தன்னிடம் கேள்வி கேட்டவனை பார்த்து…” மனிதா… இந்த மனிதனை உமக்கு தெரியுமா”? என்றார்.

   அந்த மனிதன்” ஓஓஓஓ. இவனை எங்களுக்கு நன்றாகத்தெரியுமே… இவன் இந்த கப்பர்னாஹூம் ஊரை சேர்ந்த மலாக்கியின் மகன் அக்கேயுஸ். இவனை ஒரு அசுத்த ஆவி பீடித்திருகின்றது. திடீர் வலிப்புகளால் அவனை வாதிக்கின்றது.”

 இயேசுநாதர்,” இந்த மனிதனுக்கும்  எனக்கும்  எந்த விதத்திலேயாவது தொடர்பு இருந்தென்றோ அல்லது இருக்கின்றது என்றோ உங்களாள் கூற முடியுமா? இந்த மனிதன் என்னிடம் சில நிமிட நேரமாவது பேசி இருகின்றான் என்று யாராவது கூற முடியுமா “

“ இல்லை.. இல்லை.. இந்த மனிதன் அரைப்புத்தி  உடையவன். எங்களுக்குத்தெரிந்து அவன் யாரிடமும் பேசுவதில்லை. அவன்  வீட்டைவிட்டு வெளியே வருவதும் இல்லை. உம்மையும் அவனையும் சேர்த்து வைத்து  நாங்கள் யாரும் பார்த்ததுமில்லை “.

     “ அப்படியானால் அந்த மனிதனை என் முன்னே கொண்டு வாருங்கள்.

அந்த மனிதனுடன் வந்த ஸ்த்ரீ அவனை தள்ளிக்கொண்டும், இழுத்துக்கொண்டும் வருகின்றாள்… அவனோ மேலும் மேலும் நடுங்குகின்றான். அப்போது ஜெப ஆலயத்தலைவன்  இயேசுவிடம்,” ராபி.. ஜாக்கிரதை… இந்த மனிதனை அசுத்த ஆவி பீடிக்கும்போது அவனை மிகவும் வாதிக்கும். அப்போது அவன் தன்னை சுற்றி இருப்பவர்களை மிகுந்த ஆக்ரோஷத்தோடு தாக்குவான். கடிப்பான்… குதறுவான்..பெரும் காயங்களை ஏற்படுத்துவான் .. எனவே அவன் மட்டில் மிகுந்த கவனம் தேவை “ என்றார்.

இயேசுநாதர்  தன்னிடம் நேருக்கு நேராக நிற்கும் அந்த மனிதனைப்பார்த்து,” அக்கேயுஸ்… நான் யார் என்று நீ சாட்ச்சியம் கூறுவாயாக” என்றார்.

அக்கேயுஸ் என்னும் அந்த மனிதன் யாரோ தன் வாயை கட்டவிழ்த்து விட்டதுபோல முக்கினான் … முனகினான். அழுதான்… ஆர்பாட்டம் செய்தான்.பிறகு பெரும் குரலெடுத்து ,”நாசரேத்தூர் இயேசுவே… எங்களுக்கும் உமக்கும் என்ன இருக்கின்றது. எதற்காக எங்களை வாதைப்படுத்த வந்திருக்கின்றீர். பரலோக பூலோக ஆண்டவராயிருகின்ற நீர் எதற்காக எங்களை அழிக்க விரும்புகின்றீர். நீர் யாரென எங்களுக்குத்தெரியும். நீர் கடவுளின் பரிசுத்தர். மானிட சரீரமுள்ள யாரும் உம்மைவிட பெரியவன் இல்லை. ஏனென்றால் உம்முடைய இந்த மானிட சரீரத்தில் நித்திய ஜெய சீலருடைய ஆவி உள்ளடக்கபட்டிருகின்றது.ஏற்கனவே நீர் எங்களை வென்றுவிட்டீர்”

“ போதும்… இனிமேல் நீ பேச வேண்டாம். அமைதியாய் இரு. இந்த மனிதனைவிட்டு வெளியேறும்படி நான்  உனக்கு கட்டளையிடுகின்றேன். “

அவ்வளவுதான். அக்கேயுஸ் என்னும் அந்த மனிதனை பீடித்திருந்த அந்த அசுத்த ஆவி அவனைவிட்டு வெளியேறியது.  அப்போது அந்த மனிதனுக்கு நூதனமான வலிப்புகள் ஏற்படுகின்றன. பெரும் ஊளைச்சத்தத்துடன் அவனை படாதபாடு படுத்திவிட்டுத்தான்  அவனைவீட்டு நீங்கியது.

இயேசுநாதர் தன்னிடம் கேள்விகேட்ட அந்த பரிசேயனைப்பார்த்து ,” அக்கேயுஸின்  சாட்ச்சியத்தை கேட்டாயல்லவா… இப்போது என்ன சொல்லுகின்றாய்.?” என்றார்.

அந்த பரிசேயனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தன் தோல்வியை ஒப்புக்கொண்டவனாய் தன் தலையை தொங்கப்போட்டுக்கொண்டு அனைவர்முன்னிலையிலும் தான் அவமானமாக தோற்றவனைப்போல் அந்த கூட்டத்திலிருந்து வெளியேறினான். இயேசுநாதருக்கு முன்னால் தன்னால் எதுவும் பேசமுடியாததைக்கண்டு வேறுவழியின்றி தன் பற்களை நறநறவென்று கடித்துக்கொண்டும் தன்தோள்களை ஆட்டிக்கொண்டும் தேவாலயத்தைவிட்டு வெளியேறினான்.

தன்னிடமிருந்த அசுத்த ஆவி வெளியேறியதைக்கண்ட அக்கேயுஸ் ஏதோ புதுப்பலம் பெற்றவனைப்போல நின்றுகொண்டிருந்த அவன் தடாலென இயேசுநாதரின் கால்களில் விழுந்து கண்ணீர் மிகவும் பெருக்கி, “ நன்றி இயேசுவே… நன்றி இயேசுவே என்று அவர் பாதங்களில் அனேக முத்தி செய்துகொண்டே இருந்தான். இயேசுநாதர் அவனை தூக்கிவிட்டு,” அக்கேயுஸ்… இனிமேலும் நல்லவனாக இரு … போய் உன் வாழ்க்கையை நல்லவிதமாக அமைத்துக்கொள் “ என்று வாழ்த்தி அவனை அனுப்பினார். பிறகு அங்கிருந்த அனேகருக்கு அனேக நன்மைகள் செய்து வாழ்த்தி அனுப்பினார். இந்த நிகழ்ச்சிக்குப்பிறகு இயேசு நாதரின் புகழ் மேலும் அதிகமாக பரவியது.

என் குறிப்பு.: இந்த கதையை நான் வாசித்ததுமே இந்த சம்பவம் என் மனதில் ஆழப்பதிந்துவிட்டது. இதைப்போல் ஏறாளமான சம்பவங்களை நான் இந்த புத்தகத்தில் வாசித்திருகின்றேன்.

   இயேசுநாதரின் நாளை என்பது என்ன என்னும் வசனம் கவனிக்கத்தக்கது. அன்று அவர் சொன்ன வார்த்தை இன்றுவரை மிகவும் பொருந்தமாக இருகின்றது. நாளை நாம் இருப்போமா என்னும் காலகட் டதில் நாம் இருகின்ரோம். வேதாகமத்தில் சொல்லியபடி இந்த சாபம் ( கொரானா) யாராலே எப்படி வந்து என்பதை  ஆறாய்வது வீண்வேலை.  அதற்குப்பதில் இந்த சாபத்திலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள நம்மை நாம் சுத்திகரம் செய்துகொள்வோம் நாம் விடும் ஒவ்வொரு மூச்சுக்காற்றும் பரிசுத்த ஆவி நமக்கு கொடுத்த மிகப்பெரும் கொடை. இந்தக்கொடை நீடித்திருக்க வேண்டுமானால் நாம் நம்மிடையே இருக்கும் பாவம் என்னும் தடையை அகற்றுவோம். மீண்டும் கடவுளுடம் ஒப்புறவு ஆவோம்.

     தூத்துக்குடி ரோசா மிஸ்டிகா பதிப்பகத்தாரின் வெளியீடான கடவுள் மனிதன் காவியம் என்னும் இந்த புத்தகம்  பத்து புத்தகங்கள் கொண்டது. அனைத்தும் தங்ககுடம் புதையலாக கிடைத்து போன்ற பரவசம்  படிப்போர் உள்ளத்தில் ஏற்படுத்தும். பதிப்பகத்தாருக்கு நன்றி.ஒவ்வொரு கிரிஸ்த்துவன் வீட்டிலும் பைபிளுக்கு அடுத்தபடியாக இருக்க வேண்டிய ஒரு புத்தக தொகுப்பு.கடவுள் மனிதன் காவியம்.

 


Wednesday, May 26, 2021

“ இயேசுநாதருக்கும் அவருடைய 12 அப்போஸ்த்தலர்களுக்கும் என்ன உறவு?”

 


“ இயேசுநாதருக்கும் அவருடைய 12 அப்போஸ்த்தலர்களுக்கும் என்ன உறவு?”

முடியாதுஎன்னால் இனியும் வாய்மூடி மௌனியாய்  இருக்க முடியாது. நான் இயேசுநாதரைப்பற்றி  வித்தியாசமான முறையில் அறிந்துகொண்ட பிறகு அவருடைய நற்செய்திகளையும் அவர் செய்த புதுமைகளையும் அத்தகைய சூழ்நிலைகளையும் நான் அறிய வந்தபிறகு நான்  அடைந்த மகிழ்ச்சிகளை வார்த்தைகளில்  விவரிக்க முடியாது. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதுபோல  நீங்களும் அனுபவிக்க வேண்டும்  என்னும்  ஒரு ஆவலில் இக்கதையை எழுதுகிறேன்.

   முதலில் இயேசுநாதருக்கும் அவருடைய அப்போஸ்த்தலர்களுக்கும் என்ன உறவு என்பதை தெளிபடுத்திக்கொண்டால் பலருடைய மனங்களில்  இருக்கும் பல சந்தேகங்கள் தீர்ந்துவிடும். பல கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிடும்.

    உண்மையில் இயேசுநாதருக்கு உடன்பிறந்த சகோதரர்கள் இருந்தனரா? இந்தக்கேள்விக்கு விடையாகவே நான் இந்தக்கட்டுரையை எழுதுகின்றேன்.

     ஸ்வாமி இயேசு ராஜா தான் வளர்ந்த ஊராகிய நாசரேத்தில்  மேலும் வசிக்கப் பிடிக்காமல் தன் தாயாரோடு கப்பர்னாம் என்னும்  ஊருக்கு குடி பெயர்ந்தார். சொந்த ஊரில் எந்த தீர்க்க தரிசிக்கும் மரியாதை இல்லை என்பதே இதற்கு காரணம்.கப்பர்னஹூம் என்பது கலிலேயாக்கடலின்  வடக்கு கரையில் அமைந்துள்ள ஒரு  பட்டிணம். இங்குதான் லேவி என்னும் ஒரு சுங்க அதிகாரி இருந்தார். இவர் இயேசுநாதருக்கு உறவினர். எவ்வாறு என்றால் இயேசுநாதருடைய தகப்பனாக இந்த பூமியில்  இருந்த புனித சூசையப்பருடைய  சொந்த மூத்த சகோதரர்தான் அல்ஃபேயுஸ் என்பவர். இந்த அல்ஃபேயுஸின்  முதல் மனைவிக்கு பிறந்தவர்தான் லேவி எனப்படும் சுங்க அதிகாரி. இயேசுநாதர் இவரை தடுத்தாட்கொண்ட பிறகு இவர் தன் பெயரை மத்தேயு என்று மாற்றிக்கொண்டார். இந்த மத்தேயுவின் அழைப்பின் பேரில்தான் இயேசுநாதர் தன் தாயாருடன் கப்பர்னாஹூம் வந்து  மத்தேயுவின் வீட்டிலேயே வசிக்கலானார்.

     அல்ஃபேயுஸ் தன் முதல் மனைவி இறந்த பிறகு தன் வீட்டிலேயே வேலைசெய்துவந்த ஒரு கருப்பின பெண்ணை திருமணம்  செய்துகொண்டார். இந்த கருப்பின பெண்ணுக்கு பிறந்தவர்தான் தீவிரவாதி என்றழைக்கப்பட்ட சீமோன் என்பவர். இந்த சீமோன் என்பவர்தான் தொழுநோயால் பீடிக்கபட்டு பிறகு யேசுநாதரால் குணமாக்கப்பட்டபின் அவருடைய சீடர் ஆனார்.அல்ஃபேயுஸ் தன் இரண்டாம் மனைவியான அந்த கருப்பினப்பெண் இறந்த பிற்பாடு மேரி என்னும் பெண்ணை மூன்றாம் தாரமாக்கிக்கொண்டார். இந்த மேரி வேறு யாரும் அல்ல.இயேசுநாதரின் தாயாராகிய மரியாளின் சொந்த மூத்த சகோதரியின் மகள் ஆவார். இந்த மேரியும் தேவத்தாயாரும் ஏறக்குறைய சம வயதுடையவர்கள். இந்த மேரியின் தந்தைதான் கிளியோப்பா என்பவர். அல்ஃபேயுஸ் மேரி தம்பதிகளுக்கு பிறந்தவர்கள்தான்  சின்ன  யாகப்பர் மற்றும் யூதா ததேயு எனப்படும் அப்போஸ்த்தலர்கள். ஆக மத்தேயு, தீவிரவாதி என்றழைக்கப்பட்ட சீமோன், சின்ன யாகப்பர், யூதாததேயு ஆகிய  நான்கு அப்போஸ்த்தலர்களைத்தந்த  அல்பேயுஸ் அதாவது இயேசுநாதரின் பெரியப்பா தன் வாழ்நாளின் கடைசிவரை இயேசுநாதரை மெசியாவாக ஏற்றுக்கொள்ளவே இல்லை. இது இயேசுநாதருக்கு மிகுந்த வருத்த த்தை தந்தது. அல்ஃபேயுஸுக்கு தன் முதல் மற்றும் இராண்டாம் மனைவியருக்கு பிறந்த வேறு சில ஆண் பிள்ளைகளும் இருந்தனர். அவர்களும் தங்கள் வாழ்நாளின் கடைசிவரை யேசுநாதரை  மெசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை.

    அல்ஃபேயுஸ் இறந்தபின் அவருடைய மூன்றாம் மனைவி மேரி இரண்டாம் முறையாக ஷாபாஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு அனஸ்தாசியா என்றும் கோச்சாரியா என்றும் இரு பிள்ளைகள் பிறந்தனர். இந்த இருவரும் இயேசுநாதரின்  அப்போஸ்த்தலர்களாகாமல் அவருடைய 70 சீடர்களுள் இருவர் ஆயினர். மேரி தன் இரண்டாம் கணவர்  இறந்த பிறகு மூன்றாம் முறையாகா ஜோனா என்பவரை திருமணம் செய்துகொண்டு சிமியோன் என்பவரை பெற்றுக்கொண்டார். இவரே ஜெருசலேமின் சிமியோன் என்றழைக்கப்படும் அப்போஸ்த்தலர். இவர்  நீதிபதியாக பதவி வகித்தார் என்று ஒரு வரலாறு உண்டு. சின்ன யாகப்பர் ஜெருசலேமின்  ஆயராக இருந்து பின் வேத சாட்ச்சியாக மரித்தபிறகு இந்த ஜெருசலேமின் சிமியோன் ஆயராக பதவி வகித்தார் என்கின்றது ஒரு வரலாறு.\

      தலைமை சீடர் இராயப்பரும் அவர் சகோதர் பிலவேந்திரர் எனப்படும் ஆண்ட்ரூவும் ஜோனா என்பவரின் குமாரர்கள்.  இந்த ஜோனா என்பவர் இராயப்பரின் மாமனாரின் இளைய சகோதரர்.  ஜோனா  அவர்  மனைவி  மறைந்த பிறகு  அல்ஃபேயுஸின் மேரியின் மூன்றவது கணவராக  ஆனார். ஆக இயேசுநாதருக்கு இராயப்பரும் அவர் சகோதர் பிலவேந்திரரும் நேரடியாக சகோதரர் முறை என்றாகாமல் தன் தாய்வழி வந்த உறவின் முறையில் சகோதரர்கள் ஆகின்றனர்.

     மேலும் சில அப்போஸ்த்தலர்கள்.   தேவத்தாயாரின் பெரியம்மா அதாவது தன் தாயார் அன்னம்மாளின் மூத்த சகோதரி சோபி.இந்த சோபிக்கு சாலமோன் என்பவரை திருமணம் செய்து வைத்தார்கள். இந்த சோபி சாலமோன் தம்பதியினருக்கு சலோமி என்னும் பெண் பிறந்தாள். இந்த சலோமிக்கு சபதேயு என்பவரை திருமணம் செய்து வைத்தாகள். சலோமி சபதேயு தம்பதியினருக்கு பிறந்தவர்கள் தான்    பிற்காலத்தில் சந்தியாகப்பர்  என்றழைக்கப்பட்ட பெரிய யாக்கோபு மற்றும் சுவிஷேகரான அருளப்பர் ஆகியோர். இந்த சபதேயு, தலைமை அப்போஸ்த்தலர்  இராயப்பர், அவரது இளைய சகோதரர் பிலவேந்திரர் , பார்த்தலோமியோ நாத்தானியேல் மற்றும் பிலிப்பு  ஆகியோர் கலிலேயாகடலின் கிழக்கு கறையில்  அமைந்துள்ள பெத்ஸாயிதா என்னும் பட்டிணத்தை சேர்ந்தவர்கள். சபதேயுவுக்கு இந்த ஊரில் பல நாவாய்கள் ( படகுகள் ) மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தால் அந்த ஊரின் பணக்கார் பட்டியலில் அவருக்கும் ஒரு குறிப்பிடும்படியான ஒரு இடம் இருந்தது. எனவே சபாதேயுவை அனைவரும் முதலாளி என்றே  அழைத்தனர்.

பார்த்தலோமியோ நாத்தானியேலும் பிலிப்புவும் பால்ய நண்பர்கள். இருவருமே மிகப்பெரும் பணக்காரர்கள். பார்த்தலோமியோ நாத்தானியேலின் தந்தையார் மத்திய தரைகடலின் ஓரத்தில் அமைந்துள்ள காஸா பட்டிணத்திலிருந்து கலிலேயாக்கடலுக்கும் கலிலேயாக்கடலிலிருந்து செங்கடலுக்கும் செங்கடலிலிருந்து காஸாவுக்குமாக சரக்கு கையாளும் தொழில் செய்து வந்தார் என்றால் அவர் எவ்வளவு பெரும் பணக்காராக இருந்திருக்க வேண்டும் என்பதை வாசகர்கள் புறிந்துகொண்ள வேண்டும். காணா ஊர் கல்யாண மாப்பிள்ளையே அவர்தான். இந்த திருமணத்தை நடத்தியவர் இயேசுநாதர்.மணப்பெண் பெயர் சாராள். இவர் தேவத்தாயாரின் தாயாராகிய அன்னம்மாளின் ஒன்றுவிட்ட சகோதரியான எலிஸபெத்தாம்மாளின் உறவினர் மகள். அவரது தாயார் இஸ்ராயேல். சற்றே விந்திவிந்தி நடப்பவர். எனவே தேவத்தாயார் தன் உறவினரின் பெண்ணாகிய சாராளின் திருமணத்திற்கு பொருப்பேற்றுக்கொண்டதால் தான் கல்யாண வீட்டில் இரசம் தீர்ந்த பிரச்சனையை தீர்க்க தன் மகனை வேண்டிக்கொண்டார்.

   இயேசுநாதருக்கும் யோவான் ஸ்நாபகருக்கும் என்ன இரத்த உறவு. இயேசுநாதரின் தாயார் மரியாளுக்கு யோவான்  ஸ்நாபகரின் தயார்  எலிஸபெத்தம்மாள் பெரிய அம்மா முறை ஆகின்றது எனவே அவருடையமகன் யோவான்  இயேசுநாதருக்கு சகோதரன் முறை ஆகின்றார்.

      அன்னம்மாளுக்கும் எலிசபெத்தம்மாவுக்கும் என்ன உறவு.? அன்னம்மாவின் தாயார்  இஸ்மேரியாவும் எலிஸபெத்தம்மாவின் தாயார் எமரென்ஸியாவும் உடன்பிறந்த சகோதரிகள். இந்த இரு சகோதரிகளின் தாயார் பெயர் எம்ரோணியம்மாள். தந்தையார் பெயர் ஸ்டோலனஸ்.

    அடுத்து  வெரோணிக்கம்மாள். எலிசபெத்தம்மாளின் கணவர் சக்காரியாஸ். இவரது சகோதர் உறவின் முறையில் சீரியாக்கு என்பவரின் மனைவிதான் வெரோணிக்கம்மாள். உண்மையில் இவரது இயற்பெயர் செராபி என்பதாகும். இவருக்கு ஜெருசலேம் பட்டிணத்தில் ஒரு வீடு இருந் தது யேசுநாதர் தன் 12 ஆம் வயதில் தேவாலயத்தில் தங்கிவிட்டதால் அவரைக்கண்ட செராபி யேசுவை அந்த மூன்று நாளும் தன் வீட்டில் வைத்து பராமரித்து வந்தாள். இன்றளவும் அந்த வீடு ஜெருசலேமில் ஊள்ளது. அதுதான் இயேசுநாதரின் கல்வாரிப்பயணத்தில் ஆறாம் ஸ்தலமாகும். இந்த செராபி எனப்பட்ட வெரோணிக்கம்மாவும் இராயப்பரின் மனைவி  பெப்ரோணியம்மாளும் அவர் மகள் பெத்ரெசியாவும் சமையல் கில்லாடிகள். இயேசுநாதரின் கடைசி இராப்போஜனத்தின்போது இவர்களுடைய சமையல் திறமையை இயேசுநாதரே பாராட்டியுள்ளார்.

    அடுத்து தோமையார். அவர் காலத்தில் இவர் பெரும் பணக்கார். அதிகம் கற்றவர். நூற்றுக்கணக்கான ஒட்டகங்களுடன் அவரது இளைய சகோதர் அடாய்யுடன் ஒரு பெரும் படை வருவதுபோல் பவனி வருவார். தோமையாரும் அவர் சகோதரர் அடாயும் இரட்டைப்பிறவிகள். இவர்களூம் இயேசுநாதருக்கு உறவின் முறையில் சகோதரர் ஆகின்றனர். எவ்வாறு எனில் இயேசுநாதரின் தகப்பனாக இருக்க பேறுபெற்ற சூசையப்பர்  அவரது குடும்பத்தில் எட்டாவது பிள்ளையாக பிறந்தார்.    திருக்காட்ச்சி வரம் பெற்ற புனித கேத்தரின் எம்மெரிக்  புனித சூசையப்பர்  ஆறு பிள்ளைகள் கொண்ட அவர் குடும்பத்தில் மூன்றாவது குமாரணாக  பிறந்தார் என்று கூறுகின்றார். நான் அறிந்தவரை  எலியாக்கீம், டயோபென், க்ளியோபாஸ், அல்ஃபேயுஸ்  ஆகியோர்  சூசையப்பர் சகோதரர்கள்.

புனித சூசையப்பரின் தந்தையார் பெயர் யாக்கொபு. யாக்கோபுவின் தந்தையார் பெயர் மாத்தான்.  சூசையப்பரின் தாத்தா மறைந்தபின் அவருடைய மனைவி லேவி என்பவரை திருமணம் செய்துகொண்டு மாத்தாடு என்பவரை பெற்றார். இந்த மாத்தாடுவின் மகன்தான்  சுவக்கீன் எனப்படும் எலியாக்கீம். இவர்தான் தேவத்தாயாரின் தந்தையார். மரியாளின் தாயார்  அன்னம்மாவின் கணவர்.

  சுவக்கீன், அன்னம்மா இவர்களின் முதல் குழந்தை பெயரும் மேரி  இந்த மேரியை அவரது தந்தையின் பெயரோடு சேர்த்து ஏலியின்மேரி ( mary of heli ) என்றழைப்பார்கள். இந்த ஏலியின் மேரியை கிளியோப்பாவுக்கு திருமணம் செய்தனர். இந்த  தம்பதியினருக்கும் ஒரு மேரி பிறந்து. அதற்கு கிளியோப்பாவின் மேரி ( mary of cleopas )   என்றழைத்தனர். இந்த  கிளியோப்பாவின் மேரியை  சூசையப்பரின்  மூத்த சகோதர் அல்ஃபேயுஸுக்கு திருமணம் செய்து அவர்களுக்கு சின்ன யாகப்பர் மற்றும் யூதா ததேயு என்னும் அப்போஸ்த்தலர்கள் பிறந்தனர்.

   புனித சூசையப்பரின் மூத்த சகோதர்   எலியாகீம்  பிள்ளை இல்லாமல் இறந்து போகவே அவரது மனைவி  ரோவா அக்கால யூத முறைப்படி இறந்த  தன் கணவரின் அடுத்த இளைய சகோதரன் டியோபன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த டயோபன்  ரோவா தம்பதியினருக்கு பிறந்தவர்கள்தான் தோமையும் அடாயும்.

    தோமையாரின் மனைவியின் பெயர் சிப்போரா. இவரும்  தேவமாதாவைபோன்று  சிறுவயதுமுதல் தேவாலயத்திலேயே வளர்க்கப்பட்டபடியால் தேவத்தாயாருக்கு தோழி ஆவார்.  இந்த பெண்ணைப்போல்   ஏழு குமாரத்திகள் தாய் தகப்பன் இல்லாது போய்விட்டபடியால்  தேவத்தாயாரோடு அவர் தாய் அன்னம்மாள் அவர்களையும் தன் இல்லத்திலேயே வைத்து காப்பாற்றி அவர்களுக்கு வாழ்க்கை அமைத்து கொடுத்தார்.

தோமையார்  வியாபார விஷயமாக எங்கு வெளியூர் சென்றாலும் தன் மனைவி சிப்போராவை தேவத்தாயாரின் பாதுகாப்பில் விட்டுசெல்வது வழக்கம்.

  அடுத்து யூதாஸ் இஸ்காரியோத்து. ஒருவிதத்தில் யூதாசின் தந்தை  சீமோன் சூசையப்பரின் உறவினர்தான்.சீமோனின் முதல் மனைவிக்கு பிறந்தவர்தான் யூதாஸ். ஆனால் இயேசுநாதரின் காலத்தில் யூதாஸின் தாயாராக இருந்தது  சீமோனின் இரண்டாம் மனைவிதான். இவர் இயேசுநாதரின் மிச்சிறந்த பக்தையாக விளங்கினார். யூதாஸ் இஸ்காரியோத்து காஸாவில்  தோல்பதனிடும் தொழில் நடத்தியவரும் தொழநோயாளியாகவும் இருந்த சீமோனின் மருமகனாகவும் இருந்தார். எப்படியோ பிலவேந்திரரின் நட்ப்பினால் இயேசுநாதருக்கு சீடர் ஆனார்.இயேசு நாதருக்கு யூதாஸை பார்த்த மாத்திரத்தில் அவன் யார் என்பதும் அவன் எப்படிப்பட்டவன் என்பதும் புறிந்துபோனது. ஆனால் தன் பரமபிதாவின் சித்தம் அவரை தன் சீடராக ஏற்றுக்கொள்ள வைத் தது. யூதாஸைப்பற்றி ஒரு விஷயம் குறிப்பிட்டே ஆக வேண்டும். யேசுவின் அனைத்து அப்போஸ்த்தலர்களிலும் குறைந்த வயதுடையவனும், மிகுந்த புத்திக்கூர்மை உடையவனும், அழகனும்  அதிகம் படித்தவனும் ஜெருசலேம் தேவாலயத்தில் உயர் பதவி வகித்தவனும், சிறந்த பரிசேயனுமாக விளங்கியவனும் அவனே.

 அடுத்தது பிலிப்பு. இவரும் நாத்தானியேல் பார்த்தலோமியோவும் இயேசுவின் பால்ய சினேகிதரர்கள்   பிலிப்புவும் அவர்காலத்தில் பெரும் பணக்கார். இவர்கள் பெத்ஸாயிதா பட்டிணத்தை சேர்ந்தவர்கள்.பிலிப்புவுக்கு இயேசு நாதருக்கும் எந்த உறவின் முறையும் இருப்பதாக தெரியவில்லை. பிலிப்புவுக்கு மரியா என்றொரு மனைவியும் மரியா என்னும் பெயர்கொண்ட மூன்று குமார்த்திகளும் உண்டு. அனைவருக்குமே எப்பேசு பட்டிணத்தில் கல்லரைகள் உண்டு.

     ஆக  இயேசுவின் பன்னிரெண்டு அப்போஸ்த்தலர்களும் ஒன்று தாய் வழியில் சித்தப்பா அல்லது பெரியப்பா பிள்ளைகள். அப்படியே தன் தகப்பனார் சூசையின் வழியில் சித்தப்பா அல்லது பெரியப்பா பிள்ளைகள் இந்த உறவின் முறைகளைவைத்துப்பார்க்கும்போது கூடுமானவரை அனைத்து அப்போஸ்த்தலர்களும் இயேசுவுக்கு சகோதரர்  முறையே ஆகின்றனர். ஏதோ என்னால் முடிந்தவரை சில வேதாகம கதா பாத்திரங்களை நேயர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டேன். இதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் விருப்பத்தை பொறுத்தது.  இந்த உறவின் முறைகள் எனக்கு கிடைத்த சில புத்தகங்களின் மூலம் நான் அறிந்துகொண்ட விஷயங்கள் ஆகும் எதற்கும் ஆதாரங்கள் என்னிடம் இல்லை. இருப்பினும் ஆதாரம் தேவை என கேட்ப்பவர்களுக்கு பதில் கூறவேண்டி சில  புத்தகங்களின் பெயர்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

1..திருக்காட்ச்சிவரம் பெற்ற புனித காத்தரின் எம்மரின் என்னும் கன்னிகாஸ்த்ரீ எழுதிய The life of Jesus christ. இந்த புத்தகத்தின் முற்பகுதியில் மாதாவின் வாழ்க்கை வரலாறு முற்றிலுமாக கூறப்பட்டுள்ளது.

2. திருக்காட்ச்சி வரம்பெற்ற சகோதரி மரியா வோல்டரொட்டா எழுதிய  கடவுள் மனிதன் காவியம். இதில் விவிலியத்தில் குறிப்பிடப்படாத  இயேசுநாதரைப்பற்றிய பல வேதாகம சரித்திர நிகழ்வுகள் கதைவடிவில் சொல்லப்பட்டுள்ளன.

3. இன்டெர்னெட்  தகவல் தேடுதல் செய்பவர்களுக்கு  அவசியமான ஒரு எச்சரிக்கை. பல வலைத்தலங்கள் தவறான  தகவல்களை தருகின்றன. சரியான வேத ஞானம் இல்லாவிடில் இருக்கும்  ஞானத்தையும் விசுவாசத்தையும் இழந்து விடுவீர்கள். வீணாக குழப்பதிற்கு ஆளாகலாம்.

    இதற்கு மேலும் நேயர்களுக்கு சந்தேகங்கள் இருக்குமானால் தகுந்த வழிகாட்டுதல் கிடைக்கும் இடங்களில் தங்களை தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.

அதுசரி…மேற்கூறப்பட்ட உறவின் முறைகளில் ஏன் இத்தனை மறுமணங்கள். யூதர்களைப்பொறுத்தமட்டில் அவர்களுடைய நாடு சிறியது. அவர்களுடைய மொத்த  ஜனத்தொகையும் குறைவு. அவர்களை சுற்றிலும் பகைவர் அதிகம். இடைவிடாத போர்களினால் போரிடும் ஆடவர் குறைந்தனர். எனவேதான்  யூத சங்கம் ஒருகட்டளை பிறப்பித்தது. திருமணத்துக்கு தகுதியுள்ள இஸ்ராயேல் குமார்த்திகளே நீங்கள் திருமணம் செய்துகொண்டு கடவுளுக்கும் உங்கள் தேசத்துக்கும் உங்கள் குடும்ப முன்னேற்றத்திற்கும் பிள்ளைகளை  பெற்றுக்கொள்ளுங்கள் எனவே யூதர்கள் தங்கள் சொத்துக்களை பாதுகாக்கவும் ஆணோ பெண்ணோ  தவறான வழியில் செல்லாதிருக்கவும் சமுதாய பாதுகாப்புக்காகவும் மறுமணத்தை ஆதரிகின்றனர் இது யூதர்களுக்கு அவசியமானதாகவும் இருகின்றது.