Wednesday, May 26, 2021

“ இயேசுநாதருக்கும் அவருடைய 12 அப்போஸ்த்தலர்களுக்கும் என்ன உறவு?”

 


“ இயேசுநாதருக்கும் அவருடைய 12 அப்போஸ்த்தலர்களுக்கும் என்ன உறவு?”

முடியாதுஎன்னால் இனியும் வாய்மூடி மௌனியாய்  இருக்க முடியாது. நான் இயேசுநாதரைப்பற்றி  வித்தியாசமான முறையில் அறிந்துகொண்ட பிறகு அவருடைய நற்செய்திகளையும் அவர் செய்த புதுமைகளையும் அத்தகைய சூழ்நிலைகளையும் நான் அறிய வந்தபிறகு நான்  அடைந்த மகிழ்ச்சிகளை வார்த்தைகளில்  விவரிக்க முடியாது. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதுபோல  நீங்களும் அனுபவிக்க வேண்டும்  என்னும்  ஒரு ஆவலில் இக்கதையை எழுதுகிறேன்.

   முதலில் இயேசுநாதருக்கும் அவருடைய அப்போஸ்த்தலர்களுக்கும் என்ன உறவு என்பதை தெளிபடுத்திக்கொண்டால் பலருடைய மனங்களில்  இருக்கும் பல சந்தேகங்கள் தீர்ந்துவிடும். பல கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிடும்.

    உண்மையில் இயேசுநாதருக்கு உடன்பிறந்த சகோதரர்கள் இருந்தனரா? இந்தக்கேள்விக்கு விடையாகவே நான் இந்தக்கட்டுரையை எழுதுகின்றேன்.

     ஸ்வாமி இயேசு ராஜா தான் வளர்ந்த ஊராகிய நாசரேத்தில்  மேலும் வசிக்கப் பிடிக்காமல் தன் தாயாரோடு கப்பர்னாம் என்னும்  ஊருக்கு குடி பெயர்ந்தார். சொந்த ஊரில் எந்த தீர்க்க தரிசிக்கும் மரியாதை இல்லை என்பதே இதற்கு காரணம்.கப்பர்னஹூம் என்பது கலிலேயாக்கடலின்  வடக்கு கரையில் அமைந்துள்ள ஒரு  பட்டிணம். இங்குதான் லேவி என்னும் ஒரு சுங்க அதிகாரி இருந்தார். இவர் இயேசுநாதருக்கு உறவினர். எவ்வாறு என்றால் இயேசுநாதருடைய தகப்பனாக இந்த பூமியில்  இருந்த புனித சூசையப்பருடைய  சொந்த மூத்த சகோதரர்தான் அல்ஃபேயுஸ் என்பவர். இந்த அல்ஃபேயுஸின்  முதல் மனைவிக்கு பிறந்தவர்தான் லேவி எனப்படும் சுங்க அதிகாரி. இயேசுநாதர் இவரை தடுத்தாட்கொண்ட பிறகு இவர் தன் பெயரை மத்தேயு என்று மாற்றிக்கொண்டார். இந்த மத்தேயுவின் அழைப்பின் பேரில்தான் இயேசுநாதர் தன் தாயாருடன் கப்பர்னாஹூம் வந்து  மத்தேயுவின் வீட்டிலேயே வசிக்கலானார்.

     அல்ஃபேயுஸ் தன் முதல் மனைவி இறந்த பிறகு தன் வீட்டிலேயே வேலைசெய்துவந்த ஒரு கருப்பின பெண்ணை திருமணம்  செய்துகொண்டார். இந்த கருப்பின பெண்ணுக்கு பிறந்தவர்தான் தீவிரவாதி என்றழைக்கப்பட்ட சீமோன் என்பவர். இந்த சீமோன் என்பவர்தான் தொழுநோயால் பீடிக்கபட்டு பிறகு யேசுநாதரால் குணமாக்கப்பட்டபின் அவருடைய சீடர் ஆனார்.அல்ஃபேயுஸ் தன் இரண்டாம் மனைவியான அந்த கருப்பினப்பெண் இறந்த பிற்பாடு மேரி என்னும் பெண்ணை மூன்றாம் தாரமாக்கிக்கொண்டார். இந்த மேரி வேறு யாரும் அல்ல.இயேசுநாதரின் தாயாராகிய மரியாளின் சொந்த மூத்த சகோதரியின் மகள் ஆவார். இந்த மேரியும் தேவத்தாயாரும் ஏறக்குறைய சம வயதுடையவர்கள். இந்த மேரியின் தந்தைதான் கிளியோப்பா என்பவர். அல்ஃபேயுஸ் மேரி தம்பதிகளுக்கு பிறந்தவர்கள்தான்  சின்ன  யாகப்பர் மற்றும் யூதா ததேயு எனப்படும் அப்போஸ்த்தலர்கள். ஆக மத்தேயு, தீவிரவாதி என்றழைக்கப்பட்ட சீமோன், சின்ன யாகப்பர், யூதாததேயு ஆகிய  நான்கு அப்போஸ்த்தலர்களைத்தந்த  அல்பேயுஸ் அதாவது இயேசுநாதரின் பெரியப்பா தன் வாழ்நாளின் கடைசிவரை இயேசுநாதரை மெசியாவாக ஏற்றுக்கொள்ளவே இல்லை. இது இயேசுநாதருக்கு மிகுந்த வருத்த த்தை தந்தது. அல்ஃபேயுஸுக்கு தன் முதல் மற்றும் இராண்டாம் மனைவியருக்கு பிறந்த வேறு சில ஆண் பிள்ளைகளும் இருந்தனர். அவர்களும் தங்கள் வாழ்நாளின் கடைசிவரை யேசுநாதரை  மெசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை.

    அல்ஃபேயுஸ் இறந்தபின் அவருடைய மூன்றாம் மனைவி மேரி இரண்டாம் முறையாக ஷாபாஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு அனஸ்தாசியா என்றும் கோச்சாரியா என்றும் இரு பிள்ளைகள் பிறந்தனர். இந்த இருவரும் இயேசுநாதரின்  அப்போஸ்த்தலர்களாகாமல் அவருடைய 70 சீடர்களுள் இருவர் ஆயினர். மேரி தன் இரண்டாம் கணவர்  இறந்த பிறகு மூன்றாம் முறையாகா ஜோனா என்பவரை திருமணம் செய்துகொண்டு சிமியோன் என்பவரை பெற்றுக்கொண்டார். இவரே ஜெருசலேமின் சிமியோன் என்றழைக்கப்படும் அப்போஸ்த்தலர். இவர்  நீதிபதியாக பதவி வகித்தார் என்று ஒரு வரலாறு உண்டு. சின்ன யாகப்பர் ஜெருசலேமின்  ஆயராக இருந்து பின் வேத சாட்ச்சியாக மரித்தபிறகு இந்த ஜெருசலேமின் சிமியோன் ஆயராக பதவி வகித்தார் என்கின்றது ஒரு வரலாறு.\

      தலைமை சீடர் இராயப்பரும் அவர் சகோதர் பிலவேந்திரர் எனப்படும் ஆண்ட்ரூவும் ஜோனா என்பவரின் குமாரர்கள்.  இந்த ஜோனா என்பவர் இராயப்பரின் மாமனாரின் இளைய சகோதரர்.  ஜோனா  அவர்  மனைவி  மறைந்த பிறகு  அல்ஃபேயுஸின் மேரியின் மூன்றவது கணவராக  ஆனார். ஆக இயேசுநாதருக்கு இராயப்பரும் அவர் சகோதர் பிலவேந்திரரும் நேரடியாக சகோதரர் முறை என்றாகாமல் தன் தாய்வழி வந்த உறவின் முறையில் சகோதரர்கள் ஆகின்றனர்.

     மேலும் சில அப்போஸ்த்தலர்கள்.   தேவத்தாயாரின் பெரியம்மா அதாவது தன் தாயார் அன்னம்மாளின் மூத்த சகோதரி சோபி.இந்த சோபிக்கு சாலமோன் என்பவரை திருமணம் செய்து வைத்தார்கள். இந்த சோபி சாலமோன் தம்பதியினருக்கு சலோமி என்னும் பெண் பிறந்தாள். இந்த சலோமிக்கு சபதேயு என்பவரை திருமணம் செய்து வைத்தாகள். சலோமி சபதேயு தம்பதியினருக்கு பிறந்தவர்கள் தான்    பிற்காலத்தில் சந்தியாகப்பர்  என்றழைக்கப்பட்ட பெரிய யாக்கோபு மற்றும் சுவிஷேகரான அருளப்பர் ஆகியோர். இந்த சபதேயு, தலைமை அப்போஸ்த்தலர்  இராயப்பர், அவரது இளைய சகோதரர் பிலவேந்திரர் , பார்த்தலோமியோ நாத்தானியேல் மற்றும் பிலிப்பு  ஆகியோர் கலிலேயாகடலின் கிழக்கு கறையில்  அமைந்துள்ள பெத்ஸாயிதா என்னும் பட்டிணத்தை சேர்ந்தவர்கள். சபதேயுவுக்கு இந்த ஊரில் பல நாவாய்கள் ( படகுகள் ) மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தால் அந்த ஊரின் பணக்கார் பட்டியலில் அவருக்கும் ஒரு குறிப்பிடும்படியான ஒரு இடம் இருந்தது. எனவே சபாதேயுவை அனைவரும் முதலாளி என்றே  அழைத்தனர்.

பார்த்தலோமியோ நாத்தானியேலும் பிலிப்புவும் பால்ய நண்பர்கள். இருவருமே மிகப்பெரும் பணக்காரர்கள். பார்த்தலோமியோ நாத்தானியேலின் தந்தையார் மத்திய தரைகடலின் ஓரத்தில் அமைந்துள்ள காஸா பட்டிணத்திலிருந்து கலிலேயாக்கடலுக்கும் கலிலேயாக்கடலிலிருந்து செங்கடலுக்கும் செங்கடலிலிருந்து காஸாவுக்குமாக சரக்கு கையாளும் தொழில் செய்து வந்தார் என்றால் அவர் எவ்வளவு பெரும் பணக்காராக இருந்திருக்க வேண்டும் என்பதை வாசகர்கள் புறிந்துகொண்ள வேண்டும். காணா ஊர் கல்யாண மாப்பிள்ளையே அவர்தான். இந்த திருமணத்தை நடத்தியவர் இயேசுநாதர்.மணப்பெண் பெயர் சாராள். இவர் தேவத்தாயாரின் தாயாராகிய அன்னம்மாளின் ஒன்றுவிட்ட சகோதரியான எலிஸபெத்தாம்மாளின் உறவினர் மகள். அவரது தாயார் இஸ்ராயேல். சற்றே விந்திவிந்தி நடப்பவர். எனவே தேவத்தாயார் தன் உறவினரின் பெண்ணாகிய சாராளின் திருமணத்திற்கு பொருப்பேற்றுக்கொண்டதால் தான் கல்யாண வீட்டில் இரசம் தீர்ந்த பிரச்சனையை தீர்க்க தன் மகனை வேண்டிக்கொண்டார்.

   இயேசுநாதருக்கும் யோவான் ஸ்நாபகருக்கும் என்ன இரத்த உறவு. இயேசுநாதரின் தாயார் மரியாளுக்கு யோவான்  ஸ்நாபகரின் தயார்  எலிஸபெத்தம்மாள் பெரிய அம்மா முறை ஆகின்றது எனவே அவருடையமகன் யோவான்  இயேசுநாதருக்கு சகோதரன் முறை ஆகின்றார்.

      அன்னம்மாளுக்கும் எலிசபெத்தம்மாவுக்கும் என்ன உறவு.? அன்னம்மாவின் தாயார்  இஸ்மேரியாவும் எலிஸபெத்தம்மாவின் தாயார் எமரென்ஸியாவும் உடன்பிறந்த சகோதரிகள். இந்த இரு சகோதரிகளின் தாயார் பெயர் எம்ரோணியம்மாள். தந்தையார் பெயர் ஸ்டோலனஸ்.

    அடுத்து  வெரோணிக்கம்மாள். எலிசபெத்தம்மாளின் கணவர் சக்காரியாஸ். இவரது சகோதர் உறவின் முறையில் சீரியாக்கு என்பவரின் மனைவிதான் வெரோணிக்கம்மாள். உண்மையில் இவரது இயற்பெயர் செராபி என்பதாகும். இவருக்கு ஜெருசலேம் பட்டிணத்தில் ஒரு வீடு இருந் தது யேசுநாதர் தன் 12 ஆம் வயதில் தேவாலயத்தில் தங்கிவிட்டதால் அவரைக்கண்ட செராபி யேசுவை அந்த மூன்று நாளும் தன் வீட்டில் வைத்து பராமரித்து வந்தாள். இன்றளவும் அந்த வீடு ஜெருசலேமில் ஊள்ளது. அதுதான் இயேசுநாதரின் கல்வாரிப்பயணத்தில் ஆறாம் ஸ்தலமாகும். இந்த செராபி எனப்பட்ட வெரோணிக்கம்மாவும் இராயப்பரின் மனைவி  பெப்ரோணியம்மாளும் அவர் மகள் பெத்ரெசியாவும் சமையல் கில்லாடிகள். இயேசுநாதரின் கடைசி இராப்போஜனத்தின்போது இவர்களுடைய சமையல் திறமையை இயேசுநாதரே பாராட்டியுள்ளார்.

    அடுத்து தோமையார். அவர் காலத்தில் இவர் பெரும் பணக்கார். அதிகம் கற்றவர். நூற்றுக்கணக்கான ஒட்டகங்களுடன் அவரது இளைய சகோதர் அடாய்யுடன் ஒரு பெரும் படை வருவதுபோல் பவனி வருவார். தோமையாரும் அவர் சகோதரர் அடாயும் இரட்டைப்பிறவிகள். இவர்களூம் இயேசுநாதருக்கு உறவின் முறையில் சகோதரர் ஆகின்றனர். எவ்வாறு எனில் இயேசுநாதரின் தகப்பனாக இருக்க பேறுபெற்ற சூசையப்பர்  அவரது குடும்பத்தில் எட்டாவது பிள்ளையாக பிறந்தார்.    திருக்காட்ச்சி வரம் பெற்ற புனித கேத்தரின் எம்மெரிக்  புனித சூசையப்பர்  ஆறு பிள்ளைகள் கொண்ட அவர் குடும்பத்தில் மூன்றாவது குமாரணாக  பிறந்தார் என்று கூறுகின்றார். நான் அறிந்தவரை  எலியாக்கீம், டயோபென், க்ளியோபாஸ், அல்ஃபேயுஸ்  ஆகியோர்  சூசையப்பர் சகோதரர்கள்.

புனித சூசையப்பரின் தந்தையார் பெயர் யாக்கொபு. யாக்கோபுவின் தந்தையார் பெயர் மாத்தான்.  சூசையப்பரின் தாத்தா மறைந்தபின் அவருடைய மனைவி லேவி என்பவரை திருமணம் செய்துகொண்டு மாத்தாடு என்பவரை பெற்றார். இந்த மாத்தாடுவின் மகன்தான்  சுவக்கீன் எனப்படும் எலியாக்கீம். இவர்தான் தேவத்தாயாரின் தந்தையார். மரியாளின் தாயார்  அன்னம்மாவின் கணவர்.

  சுவக்கீன், அன்னம்மா இவர்களின் முதல் குழந்தை பெயரும் மேரி  இந்த மேரியை அவரது தந்தையின் பெயரோடு சேர்த்து ஏலியின்மேரி ( mary of heli ) என்றழைப்பார்கள். இந்த ஏலியின் மேரியை கிளியோப்பாவுக்கு திருமணம் செய்தனர். இந்த  தம்பதியினருக்கும் ஒரு மேரி பிறந்து. அதற்கு கிளியோப்பாவின் மேரி ( mary of cleopas )   என்றழைத்தனர். இந்த  கிளியோப்பாவின் மேரியை  சூசையப்பரின்  மூத்த சகோதர் அல்ஃபேயுஸுக்கு திருமணம் செய்து அவர்களுக்கு சின்ன யாகப்பர் மற்றும் யூதா ததேயு என்னும் அப்போஸ்த்தலர்கள் பிறந்தனர்.

   புனித சூசையப்பரின் மூத்த சகோதர்   எலியாகீம்  பிள்ளை இல்லாமல் இறந்து போகவே அவரது மனைவி  ரோவா அக்கால யூத முறைப்படி இறந்த  தன் கணவரின் அடுத்த இளைய சகோதரன் டியோபன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த டயோபன்  ரோவா தம்பதியினருக்கு பிறந்தவர்கள்தான் தோமையும் அடாயும்.

    தோமையாரின் மனைவியின் பெயர் சிப்போரா. இவரும்  தேவமாதாவைபோன்று  சிறுவயதுமுதல் தேவாலயத்திலேயே வளர்க்கப்பட்டபடியால் தேவத்தாயாருக்கு தோழி ஆவார்.  இந்த பெண்ணைப்போல்   ஏழு குமாரத்திகள் தாய் தகப்பன் இல்லாது போய்விட்டபடியால்  தேவத்தாயாரோடு அவர் தாய் அன்னம்மாள் அவர்களையும் தன் இல்லத்திலேயே வைத்து காப்பாற்றி அவர்களுக்கு வாழ்க்கை அமைத்து கொடுத்தார்.

தோமையார்  வியாபார விஷயமாக எங்கு வெளியூர் சென்றாலும் தன் மனைவி சிப்போராவை தேவத்தாயாரின் பாதுகாப்பில் விட்டுசெல்வது வழக்கம்.

  அடுத்து யூதாஸ் இஸ்காரியோத்து. ஒருவிதத்தில் யூதாசின் தந்தை  சீமோன் சூசையப்பரின் உறவினர்தான்.சீமோனின் முதல் மனைவிக்கு பிறந்தவர்தான் யூதாஸ். ஆனால் இயேசுநாதரின் காலத்தில் யூதாஸின் தாயாராக இருந்தது  சீமோனின் இரண்டாம் மனைவிதான். இவர் இயேசுநாதரின் மிச்சிறந்த பக்தையாக விளங்கினார். யூதாஸ் இஸ்காரியோத்து காஸாவில்  தோல்பதனிடும் தொழில் நடத்தியவரும் தொழநோயாளியாகவும் இருந்த சீமோனின் மருமகனாகவும் இருந்தார். எப்படியோ பிலவேந்திரரின் நட்ப்பினால் இயேசுநாதருக்கு சீடர் ஆனார்.இயேசு நாதருக்கு யூதாஸை பார்த்த மாத்திரத்தில் அவன் யார் என்பதும் அவன் எப்படிப்பட்டவன் என்பதும் புறிந்துபோனது. ஆனால் தன் பரமபிதாவின் சித்தம் அவரை தன் சீடராக ஏற்றுக்கொள்ள வைத் தது. யூதாஸைப்பற்றி ஒரு விஷயம் குறிப்பிட்டே ஆக வேண்டும். யேசுவின் அனைத்து அப்போஸ்த்தலர்களிலும் குறைந்த வயதுடையவனும், மிகுந்த புத்திக்கூர்மை உடையவனும், அழகனும்  அதிகம் படித்தவனும் ஜெருசலேம் தேவாலயத்தில் உயர் பதவி வகித்தவனும், சிறந்த பரிசேயனுமாக விளங்கியவனும் அவனே.

 அடுத்தது பிலிப்பு. இவரும் நாத்தானியேல் பார்த்தலோமியோவும் இயேசுவின் பால்ய சினேகிதரர்கள்   பிலிப்புவும் அவர்காலத்தில் பெரும் பணக்கார். இவர்கள் பெத்ஸாயிதா பட்டிணத்தை சேர்ந்தவர்கள்.பிலிப்புவுக்கு இயேசு நாதருக்கும் எந்த உறவின் முறையும் இருப்பதாக தெரியவில்லை. பிலிப்புவுக்கு மரியா என்றொரு மனைவியும் மரியா என்னும் பெயர்கொண்ட மூன்று குமார்த்திகளும் உண்டு. அனைவருக்குமே எப்பேசு பட்டிணத்தில் கல்லரைகள் உண்டு.

     ஆக  இயேசுவின் பன்னிரெண்டு அப்போஸ்த்தலர்களும் ஒன்று தாய் வழியில் சித்தப்பா அல்லது பெரியப்பா பிள்ளைகள். அப்படியே தன் தகப்பனார் சூசையின் வழியில் சித்தப்பா அல்லது பெரியப்பா பிள்ளைகள் இந்த உறவின் முறைகளைவைத்துப்பார்க்கும்போது கூடுமானவரை அனைத்து அப்போஸ்த்தலர்களும் இயேசுவுக்கு சகோதரர்  முறையே ஆகின்றனர். ஏதோ என்னால் முடிந்தவரை சில வேதாகம கதா பாத்திரங்களை நேயர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டேன். இதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் விருப்பத்தை பொறுத்தது.  இந்த உறவின் முறைகள் எனக்கு கிடைத்த சில புத்தகங்களின் மூலம் நான் அறிந்துகொண்ட விஷயங்கள் ஆகும் எதற்கும் ஆதாரங்கள் என்னிடம் இல்லை. இருப்பினும் ஆதாரம் தேவை என கேட்ப்பவர்களுக்கு பதில் கூறவேண்டி சில  புத்தகங்களின் பெயர்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

1..திருக்காட்ச்சிவரம் பெற்ற புனித காத்தரின் எம்மரின் என்னும் கன்னிகாஸ்த்ரீ எழுதிய The life of Jesus christ. இந்த புத்தகத்தின் முற்பகுதியில் மாதாவின் வாழ்க்கை வரலாறு முற்றிலுமாக கூறப்பட்டுள்ளது.

2. திருக்காட்ச்சி வரம்பெற்ற சகோதரி மரியா வோல்டரொட்டா எழுதிய  கடவுள் மனிதன் காவியம். இதில் விவிலியத்தில் குறிப்பிடப்படாத  இயேசுநாதரைப்பற்றிய பல வேதாகம சரித்திர நிகழ்வுகள் கதைவடிவில் சொல்லப்பட்டுள்ளன.

3. இன்டெர்னெட்  தகவல் தேடுதல் செய்பவர்களுக்கு  அவசியமான ஒரு எச்சரிக்கை. பல வலைத்தலங்கள் தவறான  தகவல்களை தருகின்றன. சரியான வேத ஞானம் இல்லாவிடில் இருக்கும்  ஞானத்தையும் விசுவாசத்தையும் இழந்து விடுவீர்கள். வீணாக குழப்பதிற்கு ஆளாகலாம்.

    இதற்கு மேலும் நேயர்களுக்கு சந்தேகங்கள் இருக்குமானால் தகுந்த வழிகாட்டுதல் கிடைக்கும் இடங்களில் தங்களை தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.

அதுசரி…மேற்கூறப்பட்ட உறவின் முறைகளில் ஏன் இத்தனை மறுமணங்கள். யூதர்களைப்பொறுத்தமட்டில் அவர்களுடைய நாடு சிறியது. அவர்களுடைய மொத்த  ஜனத்தொகையும் குறைவு. அவர்களை சுற்றிலும் பகைவர் அதிகம். இடைவிடாத போர்களினால் போரிடும் ஆடவர் குறைந்தனர். எனவேதான்  யூத சங்கம் ஒருகட்டளை பிறப்பித்தது. திருமணத்துக்கு தகுதியுள்ள இஸ்ராயேல் குமார்த்திகளே நீங்கள் திருமணம் செய்துகொண்டு கடவுளுக்கும் உங்கள் தேசத்துக்கும் உங்கள் குடும்ப முன்னேற்றத்திற்கும் பிள்ளைகளை  பெற்றுக்கொள்ளுங்கள் எனவே யூதர்கள் தங்கள் சொத்துக்களை பாதுகாக்கவும் ஆணோ பெண்ணோ  தவறான வழியில் செல்லாதிருக்கவும் சமுதாய பாதுகாப்புக்காகவும் மறுமணத்தை ஆதரிகின்றனர் இது யூதர்களுக்கு அவசியமானதாகவும் இருகின்றது.