Tuesday, September 11, 2018

“ இனிமேல் உன் பெயர் இரட்டைக்கனி எனப்படும் எபிராயீம்.”


“ இனிமேல் உன் பெயர் இரட்டைக்கனி எனப்படும் எபிராயீம்.”
“ அடேய் கருப்பா… உன் கதையை கேட்க கேட்க ஏதோ  ஒரு அழகிய கவிதையை கேட்பது போல் இருக்கிறது. எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பதே இல்லை. இருந்தாலும் நேரம் போக வேண்டுமல்லவா… சொல் உன் கதையை கொஞ்சம் விலாவாரியாகத்தான் சொல்லேன்.”
 “ஆடப்போங்கப்பா… நானும் என் கதையை எத்தனையோ தடவை சொல்லிவிட்டேன். சொல்லி சொல்லி எனக்கும் அலுத்துப்போய் விட்டது.”
“ அடப்பரவாயில்லை அப்பா.. பழைய நினைவுகள் ஒருபோதும் அலுப்பதுமில்லை. மறப்பதுமில்லை. இன்னும் சொல்லப்போனால் அவை நமக்கு நம் இளமையை மீட்டுத்தரும் அருமருந்தாக உதவுகின்றன. பசி வயிற்றைக்கிள்ளுமுன் அதை மறக்க உன் கதையை ஆரம்பி”
அவன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு தன் கதையை ஆரம்பித்தான்.
   நான் ஒரு ராஜ குமாரன்.அபிசீனியா ( இன்றைய எத்தியோபியா ) என் தாய் நாடு. என் நாடு ஒரு பொன்னான நாடு. இயற்கை அன்னை எங்கள் நாட்டுக்கு எல்லா வளங்களையும் அள்ளி அள்ளி கொடுத்திருந்தாள். எங்கும் தங்கம் மின்னின. வைரமும் வைடூரியமும் எங்கும் கொட்டிக்கிடந்தன. மாணிக்கமும் மரகதமும் எங்கள் குழந்தைகளின் விளையாட்டுக்கற்கள் ஆயின.
எங்கள் நாடு சூரிய பகவானால் மிகவும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததினால் எங்கள் மேனியும் தக தக என்று மின்னும் கருநிறத்திற்கு மாறின. இதனாலேயே நாங்கள் எத்தியோப்பிய கருப்பு என்னும் பட்டப்பெயர் வைத்து அழைக்கப்பட்டோம். இந்த நிறமே எங்களுக்கு பாது காப்பானதாகவும் ஆனது.
  ஆப்ரிக்க தேசங்கள் முழுவதும் கருப்பு நிறத்தவர் நிறைந்திருந்தாலும் எங்கள் நாட்டவரைப்போல் மின்னும் கருநிற தேகம் உடையவர்கள் உலகிலேயே யாரும் இல்லை. சூரிய பகவானின் உக்கிரமம் எங்களை மட்டுமின்றி எங்கள் நாட்டில் வாழும் மிருகங்களையும் விட்டு வைக்கவில்லை. எங்கள் நாட்டு மிருகங்கள் மிக்க வலிமை வாய்ந்தவை ஆயின. பாம்புகளும் தேள்களும் கொடும் விஷம் கொண்டவை ஆயின.ஆனாலும் அவைகள் எங்கள் நாட்டுக்கே ஒரு தனி அடையாளம் ஆயின. எங்கள் நாட்டில் விளையும் சாம்பிராணி மரங்களும் அதன் பிசின்களும் மிகுந்த வாசனை மிக்கவை.
 எங்கள் நாட்டு இளவரசிதான் ஷேபா நாட்டின் அரசியாகவும் இருந்தாள். எங்கள் நாட்டு சட்டப்படி அரசி திருமணம் செய்துகொண்டால் அவள் அரச பதவியை இழந்து விடுவாள். அவள் கணவன் அரசனாக வேண்டும். இப்படி இருக்கையில்  ஜெருசலேமில் மாபெரும் மன்னர் சாலமோனின் ஞானத்தைப்பற்றி எங்கள் நாட்டின் வெளி உறவு அமைச்சர் மூலம் அறிய வந்த எங்கள் ஷேபா நாட்டு அரசி அவருடைய ஞானத்தை பரிசோதிக்க விரும்பி ஜெருசலேம் சென்றார். அங்கே விதி விளையாடியது. என்னதான் மாமன்னர் சாலமோனுக்கு நூற்றுக்கணக்கான கட்டிய மனைவியர் இருந்தும் அவருக்கு இன்னும் குழந்தை பாக்கியம் இல்லாமலிருந்தது. இந்த சமயத்தில் எங்கள் ஷேபா நாட்டு அரசி அங்கே சென்றதும் மாமன்னர்  சாலமோன் அவளையும் திருமணம் செய்துகொண்டார்.
   அவருடைய வயிற்றில் முத்தாக விளைந்தான் இஸ்ராயேல் தேசத்தின் முதல் இளவரசன். மாமன்னர் சாலமோனின் யூத குலத்தின் ஒரே நேரடி வாரிசு ஒரு வெளி நாட்டுக்காரியின் வயிற்றில் உதித்தது பற்றி அவருடைய பட்டத்து ராணிகளுக்கு பெரும் வயிற்றேரிச்சலை கிளப்பியது. இது ஒரு சதியில் முடியலாம் என்று பயந்த எங்கள் ஷேபா நாட்டின் ராணி யூதேய சிங்கம் மாமன்னர் சாலமோனின் வாரிசை தன் வயிற்றில் தாங்கியபடி தன் நாடு திரும்பினாள். அவள் கணவர் மாமன்னர் சாலமோன் எங்கள் நாட்டு சட்டப்படி அரசராகவே மாமன்னர் சாலமோனின் மனைவி அவர் பெயராலே ஆட்சி செய்தார். அவள் வயிற்றில் பிறந்து வளர்ந்த யூத குல வாரிசு இந்த பூமியில் பிறந்தான். அவனுக்கு இப்னா ஹக்கீம் என பெயரிடப்பட்டது. தக்க வயது வந்ததும் அவனை  மாமன்னர் சாலமோன் தன் நாட்டுக்கு வரவழைத்து அவனுக்கு இளவரசு பட்டம் சூட்டினார். ஆனால் இளவரசர் இப்னா ஹக்கீம் தான் தாய் நாடு திரும்பும்போது தன் தந்தையார் ஜெருசலேமில் கட்டியிருந்த புகழ்வாய்ந்த தேவாலயத்திலிருந்த உடன்படிக்கை பெட்டகத்தை திருடிச்சென்றான். இதை அறிய வந்த மாமன்னர் சாலமோன் மிகுந்த விசனமுற்றார். இருப்பினும் தன் மகன் மீதுள்ள பாசத்தால் அங்கிருக்கும் இஸ்ரேலிய தேவனுக்கு பலி ஆராதணை செலுத்த நூற்றுக்கணக்கான  ஆலய குருக்களை எத்தியோப்பாவுக்கு அனுப்பினார். அவர்கள் எத்தியோப்பியர்களுடன் கலந்தனர். அவர்தம் வாரிசுகளுக்கு கருப்பு யூதர் என பெயரிடப்பட்டது.”
 “ அதெல்லாம் சரிதான்… உன் கதையை சொல்லப்பா கருப்பா” என்றான் ஒருவன்.
  “ இப்படிப்பட்ட அரச குலத்திலிருந்து வந்தவன் தான் நான். எனக்கென அழகிய மனைவியும் மக்களும் இருந்தனர். கருப்பு யூத குலத்திலிருந்த வந்திருந்த எனக்கு ஆண்டவன் கொடுத்திருந்த பத்து கட்டளைகளை அனுசரிக்க மிகுந்த விருப்பம் இருந்ததால் எனக்கு பிறன் மனைவியை விரும்பும் எண்ணதிற்கே இடமில்லாமல் போயிற்று. நான் எனக்கிருந்த அறிவினாலும் ஆற்றலினாலும் பெரும் வியாபாரி ஆனேன்.  என் நாட்டில் கிடைக்கும் தங்கம் வைரம் வைடூரியம் மரகதம் மற்றும் பெரும் யானைத்தந்தம், வாசனை திரவியங்கள் அரிய வகை மூலிகைகள் சாம்பிராணிகள் இவற்றை ஏற்றுமதி செய்தும், எங்கள் நாட்டில் கிடைக்காத முத்து பவளம் பட்டு துணிமணி வகைகள், தங்க வெள்ளி நகைகள் ஆகியவற்றை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்தும் பெரும் பணம் சம்பாரித்தேன். என் சொந்தங்கள், பந்தங்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் வழங்கியும் நல்ல ஊதியம் கொடுத்தும் பலவாறாக அவர்களை முன்னேற்றினேன்.
 ஆனால் என் வளர்ச்சி பிடிக்காத சிலர் என்னை கவிழ்க சதி செய்தனர்.   அடிமேல் அடியாய் அடித்தால் அம்மியும் நகரும் என்பது போல் நான் மெல்ல மெல்ல மதுவுக்கு அடிமை ஆனேன்.  பிறகு மெல்ல மெல்ல பெண்களை நாடினேன். என்னிடமிருந்த பணத்தாலும் அதிகாரத்தாலும் கன்னியரை அடிமைப்படுத்தினேன். மெல்ல மெல்ல நான் ஒரு காம வெறிபிடித்த மனிதனானேன். என் எதிரிகள் தங்கள் எண்ணத்தில் ஜெயித்தார்கள். நான் அடியோடு தோற்றுப்போனேன். என் செல்வத்தை மட்டுமல்லாது என் மனைவி மக்கள் சொந்தங்கள் பந்தங்கள் அனைத்தையும் இழந்தேன். இப்போது எல்லோராலும் ஒதுக்கப்பட்டு இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என்றான் அந்த கருப்பன். பிறகு மாலை மாலையாய் கண்ணீர் சிந்தி பெரிதாய் அழத்துவங்கினான். அந்த இடத்திலிருந்த அனைவரும் சற்றே அமைதியாய் இருந்தனர்.
பிறகு அந்த கருப்பன்,” அடேய் வெள்ளையா நான் என் கதையை கூறிவிட்டேன்..  நீ உன் கதையை கூறு என்றான். வெள்ளையன் தன் கதையை சொல்ல ஆரம்பித்தான்.
  “ நண்பர்களே … என் கதையும் உன் கதை போன்றதுதான். ஆனால் சற்றே மாறுபட்டது. நான் உன்போல் அரச குலத்திலிருந்து வரவில்லை. ஆனாலும் ஒரு இளவரசனுக்கு இருக்க வேண்டிய அனைத்து குணங்களும் எனக்கு இருந்தது. எனக்கு எல்லாவிதமான போர்ப்பயிற்சியும் இருந்தது. என் வாள் வீச்சு எதிரியை நிலை குலைய வைக்கும். என் கடற்பயணங்களால் எனக்கு  கடலும் கடல் சார்ந்தவைகளும் நிலமும் அது சார்த்தவையும் பருவங்களும் அதன் சுழற்சிகளும் எனக்கு கற்றுத்தந்த பாடங்கள் மிக அதிகம். நான் ஒரு கடல் வாணிகன். எனக்கு இந்த மத்திய தரைக்கடல் ஓரங்களிலுள்ள அனைத்து நாடுகளும் அத்துபடி.  நான் பிறந்தது பொனீஷியாவில்.( இன்றைய லெபனான் ) இந்த பொனீஷியர்கள் கடல் வாணிபத்தில் கில்லாடிகள். இவர்களிடம் பல விதமான தொழில்கள் இருந்தாலும் மிகுந்த வருமானம் தரும் தொழில் சாயப்பட்டறைகள் தான். இவர்கள் கடல் வாழ் உயிரினங்கள் சில வெளிப்படுத்தும் சாயத்தால் சில வர்ண சேர்மங்களை சேர்த்து விதவிதமான வண்ணக்கலவைகளை துணிகளில் தோய்த்து அவைகளை தூர தூர தேசங்களில் விற்று மிகுந்த லாபம் பார்த்தனர். இந்த வண்ணக்கலவை ரகசியங்களை தகப்பன் மகனுக்கு கூட சொல்லிக்கொடுக்க விரும்பியது இல்லை.அவ்வளவு ரகசியமாக தங்கள் தொழில் ரகசியங்களை பாதுகாத்து வந்ததினால் இந்த பொனீஷிய நாடு பொருளாதாரத்தில் மிகவும் வளர்ந்துகொண்டே இருந்தது. நானும் இந்த வண்னக்கலவை ரகசியத்தை தெரிந்துகொள்ள எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டேன். ஆனால் முடியவில்லை. பிறகு அந்த முயற்சியை கைவிட்டு இத்தகைய வண்ணத்துணிகளை பல நாடுகளூக்கு கொண்டு சென்று அவற்றை விற்று பெரும்பொருள் சம்பாரித்தேன். காலமும் காற்றும் ஒரே மாதிரி  செல்வதில்லை. எனக்கும் விதி சதி செய்தது. அது என் மைத்துனன் உருவில் வந்தது. பொதுவாக யூதர்கள் யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்பி விடுவதில்லை. ஆனால் என் மைத்துனனே என்னை மோசம் செய்வான் என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.  என்னை மோசடி செய்ய அவன் பல முயற்சிகளை மேற்கொண்டான். கொஞ்ச நாளில் நான் மதுவுக்கு அடிமை ஆனேன். பிறகு எல்லா பணக்காரர்களூக்கும் ஏற்படும் பெண்கள் ஆசைக்கு நானும் அடிமை ஆனேன். கொஞ்ச காலத்தில் என் நிலைமை தலை கீழாய் மாறிப்போனது. எனக்கு வியாபாரத்தில் நாட்டம் இல்லாமல் போனதால் பெரும் நஸ்ட்டம் ஏற்பட  எனக்கு கூட்டாளிகளாய் இருந்தவர்களால் என் கடன் சுமை காரணமாக நான் என் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டேன். என் மனைவி மக்கள் கதி என்னவாயிற்று என்று எனக்குத்தெரியவில்லை. இது நடந்து இப்போது பத்து ஆண்டுகள் ஆயிற்று. இப்போது உங்கள் முன் நிற்கிறேன் ” என்றான் அந்த வெள்ளையன்
“ நீயாவது பரவாயில்லையப்பா… என் கதை இன்னும் மோசம் எனக்கும் இப்படி ஒரு நிலைமை வரும் என்று கனவிலும்கூட நான் நினைத்தது இல்லை. நான் ஒரு பெரும் கப்பல் வியாபாரி. வெனிஸ் என் பூர்வீகம். நாடு நாடாக நான் சென்று கப்பல் வியாபாரம் செய்ததினால் எனக்கு பெரும் செல்வம் உண்டாயிற்று. அதனால் ஏற்பட்ட மோசமான சகவாசத்தால் எனக்கு உடலில் வெண் புள்ளிகள் உண்டாயிற்று. நாளடைவில் அது மிகப்பெரிதாக என் உடல் முழுவதும் பரவி என் அடையாளத்தையே மாற்றிவிட்டது. இந்த பொனீஷியவில் நான் கால் வைத்தவுடன் இந்த கப்பல் துறைமுக அதிகாரி என்னை சிறையிலிட்டு என்னை பரிசோதித்து எனக்கு குஸ்ட்ட வியாதி இருப்பதாகவும் அதனால் என்னை நாடு கடத்துவதாகவும் கூறி என் கப்பலை பறிமுதல் செய்து அதை அதன் விலைமதிப்பில்லா  சரக்குகளுடன் நடுக்கடலில் எரித்துவிட்டான். நான் ஒரே நாளில் பிச்சைக்காரன் ஆனேன். என் வியாதி தெரிந்த அனேகர் என்னை கைவிட்டனர். துரத்தோ துரத்து என துரத்தினர். பல நாடுகளாய் நான் அலைந்து திரிந்து இப்போது உங்களுடன் இருகின்றேன்” என்றான் அவன்..
  இவர்கள் ஏதோ ஒரு உலக மஹா வட்ட மேஜை மா நாட்டில் தங்களின் சாகசங்களையும் வெற்றிகளையும் பெரும் விளக்கங்களுடன் சொல்லினர் என்று நேயர்கள் நினைத்துக்கொண்டீர்களா ?. அதுதான் இல்லை. அவர்கள் அனைவரும் ஒரு பத்து பேர் கொண்ட குழுவாய் வாழ்ந்த பெரும் குஸ்ட ரோகிகள். சரி நீ உன் கதையை சொல்… நீ உன் கதையை சொல் “ என்று அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களின் வீரப்பிரதாபங்களையும் தாங்கள் வீழ்ந்த கதை பற்றியும் தங்களுக்கு எப்படி இந்த பாழும் குஸ்ட வியாதி எப்படி வந்தது என்பது பற்றியும் தங்களுக்குள்ளே ஆறுதல் சொல்லிக் கொண்டும் நேரத்தை போக்கிக்கொண்டும், நமக்கும் ஒரு வாழ்வுகிடைத்தால் அதை எப்படி நல்ல முறையில் நிர்வாகிக்க வேண்டும் என்று ஆண்டிகள் மடம் கட்டிய கதையாய் அப்படியே தூங்கிப்போயினர்.  குஸ்ட நோயின் கொடுமையும் மக்களின் வெறுப்பும் அவமானமும் ஒருவாய் சோற்றுக்கும் நாயாய் பேயாய் அலைந்து திரிந்தவர்களுக்கு ஒரு திறந்த வெளி குகைதான் அவர்களுக்கு மெய்யாகவே சொர்க்கம் போல அடைக்கலம் கொடுத்தது.
     அவர்களுக்கு இருந்த பசிதாகம் அவர்களை தூங்க விடவில்லை. மீண்டும் எழுந்து அமர்ந்தார்கள். ஒருவன்,” நமக்கும் ஒரு வாழ்வு கிடைத்தால்… அதாவது தெய்வாதீனமாக கடவுளே நேரில் வந்து நமக்கு விமோட்ச்சனம் கொடுத்தால்…. நம் குஸ்ட நோயினின்று நம்மை விடுவித்தால்.. அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள் “ என்றான் உள்ளூர்கார குஸ்ட ரோகி. அடேய் மடையா…குஸ்டம் என்றால் உனக்கு என்ன தெரியுமா…அது ஆண்டவனின் சாபத்தால் வரும் நோய். இந்த நோய் கண்டவன் உருவிழந்து புண்களால் நிறைந்து மிகுந்த வலி வாதை பட்டு சாக வேண்டும்.இந்த வியாதிக்கு மருந்தில்லை. மரணம் மட்டுமே முடிவு” என்றான் வெள்ளையன்.” நண்பர்களை இதை நான் அறிவேன். ஆனாலும் நான் சொன்னபடி நடந்தால் அதாவது அப்படி ஒரு நன்மை நமக்கு ஏற்பட்டு விட்டால் நீங்கள் எல்லாம் என்ன செய்வீர்கள்?”
    அடப்போய்யா… அப்படி எல்லாம் ஒன்றும் நடந்து விடாது உன் வாக்கு மட்டும் பலித்துவிட்டால்… நான் மட்டும் மீண்டும் பழையபடி என் உடல் நலம் பெற்றுவிட்டால் ஆஹா … அதை நினைக்கும்போதே என் உடம்பு புல்லரிகின்றது…என்னை இந்த நிலைக்கு ஆளாக்கின அந்த பாவியை… அந்த துரோகியை கொண்று பழிக்குப்பழி தீர்த்துவிட்டுதான் நான் மறு வேலை பார்ப்பேன்” என்றனர் அந்த ஒன்பது குஸ்ட ரோகிகளும் ஒரே குரலாக..
“ இல்லை நண்பர்களே… நாம் நம் எதிரிகளை மன்னிப்போம்… நமக்கு வந்த துன்பம் நம் எதிரிக்குகூட வரக்கூடாது என்று நினைப்போம். நாம் யாரும் ஆண்டவனுக்கு எதிராக எந்த குற்றமோ.. பழிபாவமோ செய்யவில்லை.எனவே இந்த குஸ்ட்டம் ஆண்டவரின் சாபத்தா;ல் வரவில்லை …மாறாக நாம் நம்மனம் பொருந்தி செய்த பழிபாவத்தாலேயே வந்தது என்று ஏற்றுக்கொள்வோம்” என்றான் அந்த பத்தாவது நபரான உள்ளூர்கார குஷ்ட்ட ரோகி. அவன் பிறந்து வளர்ந்த ஊர் சமாரியா.
 “ நாம் அளவுக்கு மீறி நல்லவர்களாக இருந்ததுதான் நாம் செய்த குற்றம்.. என் நண்பர்களுக்கும் சொந்த பந்தங்களுக்கும் நான் எவ்வளவோ செய்திருந்தும் அனைவரும் நம்மை கை விட்டனர்.ஏமாற்றினர். அரசியலும் வியாபாரமும் சுபாவத்தில் ஒன்றுதான். இரண்டுக்கும் பொதுவான நோக்கம் ஒன்றே.ஒன்றுதான். அது நாம் வளர வேண்டும் எதிரி சாக வேண்டும். என்பதே. இதைமட்டும் நான் அன்றே உணர்ந்திருந்தால் நமக்கு இந்த துன்பம் வந்தே இருந்திருக்காது என்றான் கருப்பன். சரி. நடந்து முடிந்த கதையை பற்றியோ  நிறைவேறாத ஆசைகளை பேசியோ பயன் இல்லை. நமக்கு மட்டும் நல்லது நடக்க வேண்டுமென விதி இருக்குமானால்…… சபிக்கப்பட்டவர்களாகிய நம்மால் மனிதரை நோக்கிபோக முடியாது. ஆண்டவனை நோக்கியே போக வேண்டும். பகவானுக்கு மட்டும் மனம் இருந்தால் அவரே நம்மை தேடிவருவார் என்றான் வெள்ளையன் விரக்தியாக. அவன் வாக்கு பலித்தது. அடுத்த நாள் இயேசுநாதர் அவர்கள் இருக்கும் குகைக்கு அருகில் வந்தார்.
   இயேசுநாதர் தங்கள் ஊர் வழியாக வருகின்றார் என்று அறிந்ததும் அந்த பட்டிணத்து வாசிகள் பெரும் கூட்டமாக சாலையில் கூடிவிட்டனர். இயேசுநாதர் தன் சீடர்களுடன் இங்கே வந்ததும் அந்த சமாரிய மக்கள்,” இயேசுவே… தாவீதின் குமாரனே எங்கள் மேல் இரக்கம் வையும். எங்களை ஆசீர்வதியும்… எங்களோடு பேசும்” என்றனர். ஆனால் இயேசுநாதர்..” இல்லை…நான் உங்களோடு பேச முடியாது. அதற்கு எனக்கு நேரம் இல்லை” என்றார். அப்போது ஒரு சிறுவன்  தன் தோட்டத்திலிருந்த சில மாதுளம் பழங்களை பறித்துவந்து இயேசுவிடம் கொடுத்து,” ஆண்டவரே எனக்கு உம்மிடம் கொடுக்க வேறு ஒன்றும் இல்லை. நாங்கள் பிறப்பால் தாழ்ந்தவர்கள். தாங்கள் உயர்ந்த ஜாதியை சேர்ந்தவர். ஆயினும் நான் உம்மை நேசிக்கிறேன். என் காணிக்கையை தயவாய் ஏற்றருளும் சுவாமி” என்றான்.
    அவனது அன்பில் தன்னை மறந்த இயேசுநாதர்,” மகனே…கடவுளுடைய படைப்பில் ஏற்றத்தாழ்வுகள் ஏதுமில்லை. எல்லாம் சாத்தானின் தூண்டுதலால் மனிதர்களே தங்களை தாங்களே பிரித்துக்கொண்டார்கள். கடவுள் தான் இந்த உலகை படைக்கும்போது எல்லாம் நல்லதெனவே கண்டார். சாத்தானின் சதியால் ஆதாம் பாவம் செய்தபிறகு எல்லாம் தலைகீழாய் மாறிப்போனது. நாடுகள் பிரிந்தன. அவற்றில் உள்ள மக்களும் பிரிந்தனர்.. இனத்தால் குணத்தால், நிறத்தால், பணத்தால் என்று எங்கும் பிரிவினையும் தவறான போதனையும் பரவியதால் உண்மை என்னவென்று மக்கள் கண்டறிய முடியாதபடி பேதம் முழுவீச்சில் பரவியது. ஆனாலும் ஒரு காலம் வரும். அப்போது எல்லா மக்களும் ஆண்டவனின் குழந்தைகள் என்னும் உண்மை கண்டறியப்படும். இதற்கு தேவையானது தன்னைப் படைத்த தேவனைப்பற்றிய அறிவும் அவர்மீது அன்பும் நம்பிக்கையும் விசுவாசமும் மட்டுமே. இதோ இந்த மாதுளை கனிகளைப்பார். இந்தக்கனியை எப்படி சாப்பிடுவது என்று தெரியாமல் அப்படியே கடித்து சாப்பிடுபவன் முட்டாள். அவன் இதை கடித்து சாப்பிட்டுவிட்டு இந்தக்கனி கசக்கிறது. இதைப்படைத்த கடவுளுக்கு அறிவே இல்லை என்பவனை கேடு சூழட்டும். ஆனால் துரதிர்ஸ்ட்ட வசமாக இப்படித்தான் பலர் கடவுளைப்பற்றிய  தெளிவான சிந்தனை இல்லாமலும் அவருடைய  ஞானத்தையும் ஆற்றலையும் உணராமலும் இருகின்றனர். இந்தக்கனியின் மேல் தோல் அதன் உள்ளே இருக்கும் மாணிக்க கற்கள் போன்ற விதைகளுக்கு எவ்வளவு பாதுகாப்பாக இருக்கின்றன. அந்த சிவந்த நிறமும் ருசியும் என்னவாய் மனிதர்களை கவர்கின்றன.  இவற்றிலுள்ள கனிகளை பிரிக்கும் மெல்லிய சுவர் போன்ற ஒரு சவ்வு சிறிதே கசப்பானது ஆனாலும் அதுவும் ஒரு மருந்துதான். இந்த சிறிய மெல்லிய சவ்வை ஒரு சிறுமிகூட எளிதாக பிரித்துவிடமுடியும். இப்படித்தான் ஒரு காலத்தில் சகோதரர்களாக இருந்த யூதர்களும் சமாரியர்களும் பிற்காலத்தில் பெரும் ஏற்றத்தாழ்வுக்கு ஆளாயினர். ஒருவரை ஒருவர் மதிப்பதே இல்லை. ஆக பிரிவினையை களையுங்கள். அண்ணன் தம்பிகளாக சேர்ந்து வாழுங்கள் இந்த மாதுளை கனிகளைப்போல “ என்றார். இதற்குள்ளாக  இயேசுநாதர் தாங்கள் வாழும் அந்த ஒதுக்கப்பட்ட குகை அருகே வந்துவிட்டார் என்று அறிந்ததும் அந்த பத்து குஸ்ட ரோகிகளும்  தங்கள் குகையைவிட்டு வெளியே வந்து,” ஆண்டவரே , இயேசுவே..எங்கள் மேல் இரக்கமாயிரும் என்று கத்திக்கதறினர். இவர்களின் கூக்குரல் இயேசுவை அடைந்தது. அவர் அவர்களை நோக்கி ,” உங்களுக்கு என்ன வேண்டும் என்றார். ஆண்டவரே  எங்களுக்கு இந்த குஷ்டவியாதி குணமாக வேண்டும்” என்றனர். அதற்கு இயேசு,” நீங்கள் போய் உங்கள் தேவாலய குருக்களிடம் காண்பித்து சுத்திகரம் செய்துகொள்ளுங்கள்” என்று கூறி ஆசீர்வதிதார்.
   அந்த பத்து குஸ்ட்ட ரோகிகளும் தாங்கள் தேவாலயத்துக்கு செல்லும் வழியிலேயே  தாங்கள் குணப்படுத்தப்பட்டதை அறிந்து மிகுந்த சந்தோஷப்பட்டு தங்கள் வழியே சென்றனர். ஆனால் ஒருவன் மட்டுமே ஆண்டவறாகிய இயேசுவிடம் திரும்பி வந்தான். அவன் வேறு யாரும் அல்ல. அந்த உள்ளூர்கார சமாரியன் தான். அவன் ஆண்டவரின் முன்னிலையில் வந்து அவர் பாதங்களில் முகம் குப்புற விழுந்து,” ஆண்டவரே என் தேவனே உமக்கு என் தாழ்ந்த நமஸ்காரம். எனக்கு மறு வாழ்வுகொடுத்து என்னை மீண்டும் ஒரு மனிதனாக மாற்றி நல்ல உருகொடுத்த உமக்கு அனந்தகோடி நமஸ்காரமும் ஸ்த்தோத்திரமும் உண்டாகுக. உம்முடைய திரு நாமம் இந்த உலகத்திலும் பரலோகத்திலும் போற்றப்படுவதாக. உம்மை அனுப்பியவராகிய பிதாவானவர் போற்றி ஸ்துதிக்கப்படுவாராக.உம்முடைய இஸ்பிரீத்து சாந்துவின் திரு நாமமும் ஸ்துதிக்கப்படுவாராக. உம்மை பெற்றடுத்த உம் திருமாதாவின் திருநாமம் வாழ்தப்படுவதாக..என்று மிகவும் சப்த்தமாக வாழ்த்தினான்
    ஆனால் அங்கிருந்த மக்களும் அப்போஸ்த்தலர்களும் கூட ஒரு குஸ்ட்ட ரோகி ஆண்டவரின் திருமுன் சப்த்தமாக பேசுவதை ஆட்சேபித்தார்கள். ஆனால் அந்த சமாரியன் மேலும் உரத்தகுரலில்,” என் ஆண்டவர் எனக்கு செய்திருக்கின்ற மகத்தான காரியங்களைப்பற்றி நான் ஏன் பேசக்கூடது? அவரை நான் ஏன் வாழ்த்தக்கூடாது. என்னை ஏன் தடை செய்கின்றீர்கள்” என்றான்.
 “ நீ குணமடைந்துவிட்டாய் அல்லவா… அவரை உன் இதயத்தில் வைத்து அவரை வாழ்த்தி கணம் பண்ணு. அது போதும் “ என்றனர். ஆனால் அவனோ,” மாட்டேன் முடியாது. என்னால் அவரை மகிமைப்படுத்தாமல் இருக்கவே முடியாது. என்னுள் இருக்கும் இஸ்பிரீத்துவானவர் என்னில் இருந்து பேசுகின்றார்.என்னை இரட்ச்சித்து தேற்றுகிறவாகிய ஆண்டவரின் ஸ்த்துதிகளை நான் பாடுகிறேன். என்னைத்தடுக்க நீங்கள் யார்? என் உள்ளம் மகிழ்ந்து களி கூறுகின்றது.  நீங்களும் அவரை வாழ்த்தி ஸ்த்துதியுங்கள் “ என்றான் ஆண்டவரால் குணம் பெற்ற அந்த சமாரியன்.
   அப்போது இயேசுநாதர்,” போதும்… மனிதரே ..உம் விசுவாசம் உம்மை குணப்படுத்தியது. உம்மை இரட்சித்திருகின்றது. நீ பெற்றுக்கொண்ட இந்த ஞான ஒளியில் தொடர்ந்து முன்னேறு.  நீ உன் வழியே போகலாம் “ என்றார். அந்த சமாரியன் அவருக்கு நன்றி சொல்லி சிறிது தூரம் சென்றான். பிறகு மீண்டும் அவரிடம் திரும்பிவந்து,” ஆண்டவரே தேவரீரிடம் ஒரு விண்ணப்பம்” என்றான். “ என்னிடம் உனக்கு கொடுக்க ஒன்றுமில்லை.  இன்னும் சொல்லப்போனல்.. இப்போது எங்களிடம் உனக்கு கொடுக்க ஒரு ரொட்டித்துண்டு கூட இல்லை.” என்றார்.
 அந்த சமாரியன் அவர் திருமுன் மீண்டும் விழ்ந்து ” ஆண்டவரே தேவரீர் எனக்கு புது வாழ்வு கொடுத்திருகின்றீர். என்னுடைய குஸ்ட்டத்தின் நிமித்தம் என மூளை எல்லாம் அரித்துப்போய்விட்டது. இப்போது எனக்கு புது வலிமை புது யவ்வனம்.. புதிய ஞானம் என எல்லாம் புதிதாக இருக்க நான் காண்கின்றேன். என் பெயரே எனக்கு மறந்து போய்விட்டது. எனக்கு ஒரு புதிய பெயரை தாருங்கள் என்றான் அவன்.
 இயேசுநாதர் அவனிடம்,” மனிதா…. இந்த ஊரின் பெயர் என்ன?” என்றார். அவன் ,” ஆண்டவரே இந்த ஊரின் பெயர் எப்பிராயீம்” என்றான். இயேசுநாதர்,” மனிதா… இனிமேல் உன் பெயர் எப்பிராயீம் எனப்படுக. எப்பீராயீம் என்பதற்கு இரட்டைக்கனி என்பது பொருள். இப்போது உன் பெயருக்கான அர்த்தம் புறிந்ததா…உனக்கு கடவுள் இரட்டை ஆயுளை கொடுத்திருகின்றார். மீண்டும் ஒரு புது வாழ்வை கொடுத்திருகின்றார். உன்னில் இப்போது பழையது என ஒன்றுமே இல்லை. நீ புதிதாக பிறந்த பிறவி போல உருவெடுத்திருகின்றாய் அல்லவா..ஆகவே உனக்கு இந்த எப்பீராயீம் என்னும் பெயர் சரியான பொருத்தம் தான்…. சரி… நான் பத்து பேரை குனப்படுத்தவில்லையா..நீ மட்டும் தானே திரும்பிவந்து எனக்கு நன்றி கூறினாய்… மெய்யான தேவனை மகிமைப்படுத்தினாய்.. மற்ற ஒன்பது பேரும் எங்கே?” என்றார்.
         ஆண்டவரே அவர்கள்  தாங்கள் குணமடைந்ததும் மிகுந்த சந்தோசத்தினால் உங்களை மறந்து தத்தம் வழியே போய்விட்டார்கள். அவர்கள் எனக்குத்தெரிந்து தங்களுடைய பழைய வாழ்க்கையை தேடி போய்விட்டதாக நினைகின்றேன்” என்றான் அந்த சமாரியன். அப்போது இயேசுநாதர் சில வார்த்தைகளை முனுமுனுத்தார். அது,” இந்த மக்கள் தங்கள் நாவால் என்னை ஆண்டவரே  என் தேவனே என்மேல் இரக்கமாயிரும் என்று அழைகின்றார்கள். ஆனால் அவர்கள் இதயமோ என்னைவிட்டு வெகு தூரத்தில் இருக்கின்றது” என்றார். மீளவும் அவர் இந்த மீதி ஒன்பது பேரின்மீதும் நான் பரிதாபப்படுகின்றேன். தாங்கள் இழந்ததை மீண்டும் கைப்பற்ற அவர்கள் எடுக்கும் முயற்சி தேவையான ஒன்றுதான். ஆனால் அதை அடையும் வழியில் ஒரு நீதி நேர்மை இருக்க வேண்டும். ஆனால் பொதுவாக இவர்களுடைய முயற்சி பழி பாவத்தில் தான் முடியும்.”  இந்த நேரத்தில் இயேசுநாதர் சற்றே தன் கண்களை மூடி தியானித்தபின்,” அவர்களுடைய பிந்திய நிலைமை முந்தைய நிலைமையைவிட மோசமானதாக இருக்க காண்கிறேன் “ என்றார்.
  பிறகு ,” கடவுளிடம் அழுது அழுது பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்களையும்  வரங்களையும் நேர்மையான முறையில் பயன்படுத்தவில்லை என்றால் அந்த வரமே அவர்களுக்கு எதிராகத்திரும்பி அவர்களுக்கே அது சாபமாக முடியும் . ஆண்டவரின் அருள் என்பது நல்லோர் மீதும் தீயோர் மீதும் பொழியப்படும் மழையை போன்றது. அவரவர் அதை பயன்படுத்தும் விதத்தில்தான் அது வரமாகவோ அல்லது சாபமாகவோ அமையும். ஆயினும் நான் அவர்கள் ஒன்பது பேரின்மீதும் இன்னும் இரக்கம் உள்ளவராகவே இருகின்றேன்” என்றார். மேலும் ,” நான் அவர்களிடம் நன்றியை எதிர்பார்க்கவில்லை.  ஆயினும் நன்றி நவிலல் ஒரு சிறந்த குணம். அது மனிதரால் மிகவும் விரும்பப்படுவது. மேலும் நன்றி நவிலல்பல நன்மைகளை பெற்றுத்தரும் என்பதை அவர்கள் ஏன் உணரவில்லை.?. நனறி மனிதனுக்கு மனிதனை மட்டுமல்லாது கடவுளையும் மனிதனையும் கூட இணைக்கிறது.” என்றார்.
  அந்த சமாரியன் ஆண்டவரின் திருப்பாதத்தில் வீழ்ந்து,”ஆண்டவரே… மீண்டும் ஒரு விண்ணப்பம்” என்றான். ஆண்டவர் ,”  எப்பிராயீம்…நீ நம்மிடம் வேண்டுவதென்ன?” என்றார்.
 “ ஆண்டவரே… என் தேவனே.. எனக்கு இந்த உலக வாழ்க்கை என்னவென்று புறிந்துவிட்டது. ஒருவன் கையில் காசும் பணமும் அதிகாரமும் சேர்ந்து கொண்டால் அவன் மீண்டும் ஒரு நல்ல மனிதனாக இருக்க முடியாது, அவன் சாத்தானுக்கு அடிமை ஆவதைத்தவிர அவனுக்கு வேறு வழி இல்லை. சாத்தானின் ஆயுதம் மூன்று. அவை மது மங்கை பணம். இந்த உலகில் உள்ள அனைத்து வகையான பிரச்சனைகளுக்கும் போர்களுக்கும் சண்டை சச்சரவுகளுக்கும் இந்த மூன்றும் தான் காரணம். ஒன்று அவை தனித்தோ இரண்டாகவோ அல்லது மூன்றும் சேர்ந்தோ வரும் பட்ச்சத்தில் அதிலிருந்தே அனைத்து வகையான பாவங்களும் உற்பத்தி ஆகின்றன. இந்த உலகில் எந்த நாட்டிலும் இந்த மூன்று காரணிகள் இல்லாத அரசாங்கமும் கிடையாது, வியாபாரமும் கிடையாது. பணத்தை விரும்பாத மனிதனோ, பெண்னை விரும்பாத மனிதனோ, மதுவை விரும்பாத மனிதனோ இந்த உலகில் யாருமே இல்லை. வேண்டுமானால் இவற்றில் ஏதாவது ஒன்றை விரும்பாதவனாக இருப்பான். இது நான் கற்றுக்கொண்ட பாடம். மேலும் எனக்கு மனைவியோ அல்லது குழந்தை குட்டிகளோ எதுவும் கிடையாது. செல்வத்தின் மீதும் எனக்கு பற்று இல்லை. இந்த அடிமையை தேவரீர் ஏற்றுக்கொள்வீர்களா ?’ என்றான் அந்த சமாரியன்..இவனது கூற்றின் உண்மையை அறிந்துகொண்ட இயேசுநாதர், “எபிராயீம்….. எம்மை பின் செல்வதால் உனக்கு துன்பமே ஏற்படும். ஆனாலும் உனக்கு நான் ஒரு உறுதி அளிக்கிறேன். என் பரலோக இராஜ்ஜியத்தில் உனக்கும் ஒரு இடம் தர என்னால் முடியும். என்னை பின் செல். இராயப்பா.. இந்த மனிதரையும் நம்மோடு சேர்த்துக்கொள்” என்றார்.
   புதிதாகவந்து சேர்ந்துகொண்ட இந்த சமாரியனுக்கும் பரலோகத்தில் இடம் ஒதுக்கியதால் இயேசுநாதர் அவன் மீது எவ்வளவு அன்பும் இரக்கமும் கொண்டிருக்க வேண்டும் என்று உணர்ந்த இராயப்பர்,” இதோபார்  எபிராயீம் நான்தான் முதலாமவன். இயேசுநாதரின் முழு அன்பும் பாசமும் எனக்குத்தான் முதலில் இருக்க வேண்டும். தெரிந்ததா. இதோபார் பரலோகத்தின் திறவுகோல் என்னிடம்தான் இருகின்றது எச்சரிக்கை” என்றார். அதற்கு அந்த சமாரியன்,” என் எஜமானே ..தேவரீர் பெரிய மனதுவைத்து அந்த பரலோக வாசலின் உள்ளே என் ஒருகாலை மட்டும் வைக்க அனுமதி கொடுங்கள். எனக்கு அவ்வளவு இடம் போதும். சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டான் என்பது சரிதான் போலும் ” என்றான்.
   இவர்களின் சம்பாஷனையை கேட்ட இயேசுநாதர்,” இராயப்பா…அன்று ஒருநாள் இரவு அஞ்சாராக்குகையில் நாம் அனைவரும் என் தாயாருடன் தங்கி இருந்தபோது நான் சொன்னதை மறந்துவிட்டாயா? உன்னை என் திருச்சபையின் தலைவராகத்தான் நான் நியமித்திருந்தேன். ஆனால் என் நேசத்தாயாரை என் திருச்சபைக்கு பாதுகாவலியாக நியமிக்கிறேன் என்று நான் கூறியதை மறந்துவிட்டாயா”? ஒரு தாய்க்கு திருச்சபையில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் அன்பு சமமாக இருக்க வேண்டும் அல்லவா. இதில் எபீராயீம் மீது உனக்கென்ன இவ்வளவு காய்ச்சல் “ என்றார்.   
     அவ்வளவுதான் இராயப்பர். “ ஆண்டவரே… தேவரீர்  என்னை முழுவதுமாக அறிவீர்.” என்றார். பிறகு அந்த சமாரிய ஊழியன் எப்பிராயீம் இடுப்பில் கைவைத்து நட்புடன் “ வாரும் என் தோழரே.. ஆண்டவரின் இராஜ்ஜியத்தில் நீரும் ஒரு பிரஜையாய் இரும்.” என்றார்.
   இந்த அஞ்சாரா குகையை பற்றிய ஒரு சிறு குறிப்பு. இது ஜோர்டான் நாட்டில் அஜ்ஜலோன் என்னும் மலைப்பகுதியில் அமைந்திருக்கும் ஒரு குன்றுதான் அஞ்சாரா குன்று. இந்த குன்றின் உச்சியில் உள்ள ஒரு குகைதான் அஞ்சாராக்குகை எனப்படுகின்றது. இந்த குகைதான் தற்போது ஒரு தேவாலயமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு சிறிய குன்றின் மீதுள்ள ஊரில்தான் தான் மா பெரும் தீர்க்கதரிசி எலியாஸ் பிறந்ததாக வரலாறு கூறுகின்றது.
  எலியாஸ்
தீர்க்கதரிசியின் நினைவாக இந்த இடத்தில் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்த தேவாலயம் இப்போது சிதிலமடைந்த நிலையில் உள்ளது. ஆனாலும் அங்கிருக்கும் ஞானஸ்நான தொட்டியும் அங்கே பதியவைக்கப்பட்டுள்ள அழகான மொசைக்கற்களும் இன்றளவும் காணக்கூடியவனாக உள்ளன. அவற்றில் புனித எலியாஸ் தீர்க்கதரிசியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.
மேலும் மாமன்னர் தாவீது தன் மகன் அப்சலொமின் கலகத்தால்  ஜெருசலேமிலிருந்து தப்பி ஓடிவந்து இந்த மலையில் உள்ள  குகையில்தான் தஞ்சம் அடைந்தார் என்றும் ஒரு தகவல் உள்ளது. இந்த மலையின் மீதுள்ள அஞ்சாரா குகையில்தான் இயேசுநாதரும் அவரது தாயரும் அவர் தம் சீடர்களும் ஒருமுறை தங்கியிருந்ததாகவும் அங்கிருந்த இடத்தில்தான் தான் தன் நேசத்தாயாரை திருச்சபையின் பாதுகாவலியாக நியமித்ததாகவும் ஒரு தகவல் உண்டு. உண்மையில் இந்த அஜ்ஜலோன் மலைத்தொடரில் பல குகைகள் உள்ளன. இவற்றுள் பலவற்றில் இயேசுநாதர் அவ்வப்போது தங்கி இருந்தாலும் தன் நேசத்தாயரை தன் திருச்சபையின்  பாதுகாவலியாக நியமித்தது எந்த குகையில் என்று நிச்சயமாக சொல்ல முடியவில்லை. ஆனாலும் இந்த அஞ்சாரா குகையின் வரலாற்று சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அது இந்த குகையாகத்தான் இருக்கும் என்று நம்பத்தோன்றுகிறது. இது உண்மை என்பதுபோல் நடந்த ஒரு சம்பவம் வரலாற்று முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
  கடந்த 2010 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதி  இங்குள்ள மாதா சுரூபத்தையும் அவரது பீடத்தையும் இங்குள்ள கன்னியரும் அவருடன் பணிபுரிந்த மூன்று உள்ளூர் வாசிகளும் சுத்தம் செய்யும்போது மாதாவின் முகம் உயிர் பெற்றதாகவும் அவரது கண் இமைகள் திறந்து மூடியதாகவும் சற்று நேரத்தில் அவரது கண்களிலிருந்து மனித இரத்தம் வடிந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் சாட்ச்சியம் கூறுகின்றனர்.  இந்த நிகழ்வைப்பற்றி பல உறுதியான மருத்துவ அறிக்கைகளும் தேவாலய பிதாப்பிதாக்களின் அறிக்கைகளும்  இந்த சம்பவம் உண்மை என்றே சாட்ச்சியம் கூறுகின்றன.
         இந்த தேவாலயமானது ஜெருசலேமின் பிதாப்பிதாக்களால் நிர்வாகிக்கப்படுகின்றது.  இந்த நிகழ்வை ரோமன் கத்தோலிக்க திருச்சபையும் உறுதிசெய்து ஒரு சிறந்த திரு யாத்திரை ஸ்தலமாக அங்கீகரித்திருகின்றது. இந்த அஞ்சாரா மலையிலுள்ள இந்த மாதா ஆலயம் மலைமேல் மாதா என்றழைக்கப்படுகின்றது. இந்த திருயாத்திரை ஸ்தலம் ஜோர்டான் தலை நகர் அம்மானி;லிருந்து  வடக்கே ஒன்றரை மணி நேரம் பயணித்தால் அடைந்துவிடலாம்..
மேலும்  அந்த பத்து குஸ்ட ரோகிகளின் வசித்துவந்த அந்த குகை இன்று தூய ஜார்ஜ் ஆலயம் என்று அழைக்கப்படுகின்றது இந்த தேவாலயம் கிரேக்க பழமை ரீதி திருச்சபையின் ஆதிக்கத்தில் இருகின்றது. இந்த குகை தேவாலயம் சமாரியாவில் எப்பீராயீம் என்னும் பட்டிணத்தில் புர்கீ என்னும் சிற்றூரில் அமைந்திருக்கின்றது. தற்போது இந்த குகை தேவாலயம் சிறந்த திரு யாத்திரை ஸ்தலமாக மாறிவிட்டது. இஸ்ராயேல் தலை நகர் ஜெருசலேமிலிருந்து சமாரியா நோக்கி வடக்காக சுமார் ஒன்றரை மணி நேரம் காரில் பயணித்தால் இந்த புர்கி என்னும் ஊர் வரும்
.

Sunday, August 19, 2018

“ சாட்சி சொன்ன சேவல்கள்.”


                   “ சாட்சி சொன்ன சேவல்கள்.” 

  

   அந்த மாலைப்பொழுது…சூரியன் மறைந்த நேரம்… முக்காடிட்ட இரண்டு பெண்கள் தங்கள் கண்களில் கண்ணீரை தேக்கிபடி யாரையோ சந்திக்கவேண்டிய அவசரத்தில் ஜெருசலேம் தேவாலயத்தை நோக்கி செல்லும் சாலையில் பயணிப்பதாக தெரிகிறது. அப்போது தேவாலயத்தில் இயேசுநாதர் தன்னுடைய புகழ்பெற்ற பிரசங்கத்தை முடிக்கும் நிலையில் இருந்தார்.” நானே ஒளியும் வழியும் சத்தியமுமாக இருகின்றேன். என்னை பின் செல்பவன் இருளில் நடவான். உயிரில் ஒளியை கொண்டிருப்பான். உங்கள் உயிர் வாழ ஜீவிய தண்ணீர் என்னிடம் உள்ளது. இந்த  தண்ணீரை குடிப்பவனுக்கு தாகம்  என்பதே இராது.” என்பது போன்ற பிரசங்கத்தை அவர் அப்போதுதான் முடித்திருந்தார். யேசுநாதரின் பிரசங்கம் முடித்த உடனே கூட்டம் கலைந்தது. அதைத்தொடர்ந்து யேசுநாதரும் ஜெருசலேம் வீதிகளில் நடக்கத்துவங்கினார். அப்போது மேற்சொன்ன இரண்டு பெண்களும் யேசுநாதரின் பாதம் பணிந்து,” போதகரே.. எங்கள் மேல் இரக்கம் வையும்.வாழ்வுதரும் வார்த்தைகள் உம்மிடம் இருந்தே வருகின்றன.என்பதை நாங்கள் நம்புகிறோம் விசுவாசிகிறோம்.” என்றனர். ” பெண்களே ..உங்களுக்கு சமாதானம். உங்களுக்கு என்ன வேண்டும்..நீங்கள் யார்…தயவுசெய்து  எழுந்திரியுங்கள் ” என்றார் இயேசுநாதர் கனிவோடு.  ஆண்டவரே, நீர் யாராக இருகின்றீர் என்பதை நாங்கள் நன்றாகவே அறிவோம். எங்களை விட  எங்கள் கணவர்கள் நீர் யார் என்பதை மிகவும் நன்றாகவே அறிவார்கள். அவர்களை தேவரீர் பெரிய மனது வைத்து மன்னித்தேன் என்று ஒரு வார்த்தை சொல்லும்வரை நாங்கள் உம் பாதத்தைவிட்டு எழுந்திரிக்கப் போவதில்லை “ என்று அவரது பாதங்கள் முத்தி செய்தனர். எனக்கு நினைவு தெரிந்து நீங்கள் எந்த தவறும் செய்ததாக எனக்கு தோன்றவில்லை. ஆயினும் முதலில்  எழுந்திரியுங்கள்” என்று அவர்களை தேற்றி எழச்செய்தார். பின்னர் “ இப்போது சொல்லுங்கள்.நீங்கள் யார்?. உங்கள் கணவர் யார் யார்?” என்றார்.
  “ போதகரே. இந்த ஜெருசலேமில் இஸ்ரயேல் குலத்தில் பிறந்த பாவப்பட்ட பெண் ஜென்மங்கள் நாங்கள். கடவுள் ஏன் எங்களுக்கு இப்பேர்பட்ட ஒரு ஜென்மத்தை கொடுத்தார். எங்களுக்கு ஏன் இப்படிப்பட்ட கணவர்களை கொடுத்தார் என்று நாங்கள் மிகவும் மனமொடிந்து போய் இருகிறோம். எங்களுக்கு இந்த உலக வாழ்க்கையே வெறுத்துப்போய்விட்டது. நாங்கள் நரகத்துக்கு பாத்திரவான்கள் ஆகிவிட்டோம்.என்று நினைக்கும்போது நாங்கள் பிறவாதிருந்தாலே நலமாயிருந்திருக்கும் என்று நினைக்க தோன்றுகின்றது.” என்று அழுதனர். “ பெண்களே. முதலில் நீங்கள் அழுவதை நிறுத்துங்கள். உங்கள் துன்பதிற்கு காரணம் என்ன.? யார்/ யார்? என்றார். “ ஆண்டவரே.. எங்கள் துன்பதிற்கு காரணம் எங்கள் கணவரே? என்றனர். “ சரி அவர்களைப்பற்றி சொல்லுங்கள். அவர்கள் உங்களுக்கு செய்த துன்பம் என்ன?.“ என்றார்.
    “ பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார் “
இருவருள் ஒருத்தி பேச ஆரம்பித்தாள். ஆண்டவன் அருளில் எங்களுக்கு எந்த குறையும் இல்லை. போதும் போதும் என்னும் அளவுக்கு வீடுகளும் நிலங்களும் பழத்தோட்டங்களும் நகைளும் பணமுமாக எந்த விதமான செல்வங்களும் எங்களுக்கு குறைவில்லாமல் இருந்தன. எனக்கு மணமுடிக்கும் வயது வந்ததும் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார் என் தந்தை. அதற்கேற்றபடி நல்ல அழகும், சிவந்த நிறமும், இந்த தேவாலயத்தில் ஒரு பொறுப்பில் இருந்த ஒரு கணவான் என்னை பெண் பார்க்க வந்திருந்தார். அவரைப்பார்த்த மாத்திரத்தில் எனக்கு அவரை மிகவும் பிடித்துப்போயிற்று. அவருக்கும் என்னை பிடித்துப்போயிற்று. ஒரு நல்ல நாளில் எங்கள் திருமணம் நடந்தது. எங்கள் திருமண வாழ்க்கை கொஞ்ச நாட்க்களாக நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் சில காலங்களிலேயே அவருடைய சுய ரூபம் வெளிப்பட்டது. என் கணவர் ஒரு பெண் பித்தர் என்பதும் பெரும் பணப்பசி கொண்டவர் என்றும் பணத்திற்காகவே அவர் என்னை திருமணம் செய்துகொண்டார் என்பதும்  பாழும் பணத்திற்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் என்றும் எனக்கு போகப்போக புறிந்தது. அப்போது கூட நான் அவரை நேசித்தேன். வாலிபத்தில் எல்லா ஆண்களின் குணமும் அப்படித்தான் இருக்கும்.  போகப்போக எல்லாம் சரி ஆகிவிடும்  என்று  எனக்கு  நான் சமாதானம் சொல்லிக்கொண்டேன். ஏரோதின் வைப்பாட்டி ஆக்ளே என்னும் வெளிநாட்டு விபச்சாரியிடம் தவறாக நடக்கப்போய் அவளிடம் மானம் மரியாதையை இழந்தது பற்றி நான் அறிய வந்தபோது என் மானமே பறிபோய்விட்டது. ஆனாலும் தேவாலயத்தில் ஒரு பதவியில் இருப்பவர் இறைமக்களால் மதிக்கப்படவேண்டியவர் இவ்வளவு தூரம் தாழ்ந்த கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவார் என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எங்கள் திருமணத்திற்கு முன்பாக அவர் ஒரு பெண்ணை விரும்பி அது திருமண நிச்சயதார்த்தம் வரை சென்று பிறகு அவரால் நிறுத்தப்பட்டுவிட்டது. அவள் ஏழையாக இருந்தாள் என்னும் ஒரே காரணத்திற்காக அவளை அவர் நிராகரித்தார். இத்தனைக்கும் அந்தப்பெண் ஜோஹான்னாவின் தாயார் அன்னாவும் இவருடைய தாயார் சீமோனின் மேரியும் பால்ய சினேகிதிகள். இருவருடைய சம்மதத்தின் பேரிலும் தான் அந்த நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் தடைபட்டதால் அந்த மணப்பென் ஜோஹன்னா மனம் உடைந்தாள். அது கடைசியில் அவளது உயிரைப்பறித்தது.  தன்னால் ஒரு அப்பாவி ஏழைப்பெண் வாழ்விழந்ததை பற்றியோ அவள் இன்னுயிர் பறிபோனதை பற்றியோ எதைப்பற்றியும் சிறிதும் கவலைப்படாமல் இந்த சம்பவத்தை மறைத்தே என்னை திருமணம் செய்துகொண்டார்.” என்றாள் அந்தப்பெண்.
“ சரி .முடிந்துபோனதைப்பற்றி இப்போது பேசி என்னவாகப்போகின்றது. திருமணம் என்பது அவரவர் விருப்பு வெறுப்பைப்பொறுத்தது. ஆனாலும் உன் கணவர் செய்தது முற்றிலும் தவறான காரியம்தான். மேற்கொண்டு என்ன ஆயிற்று.? அவர் உன்னை எவ்விதத்திலாவது கொடுமை படுத்தினாறா?”
“ போதகரே… அவர் செய்யும் அனைத்து காரியங்களும் என்னை பயமுறுத்துகின்றன. என்னால் நிம்மதியாக இருக்கவே முடியவில்லை. ஆனாலும் அவர் என் கணவர். அவரை நான் என் மனசாட்சிப்படி மிகவும் நேசிக்கிறேன். அவர் எனக்கு செய்த துரோகங்களை நான் மன்னிக்கிறேன். ஆனால் அவர் உமக்கு செய்யும் துரோகங்களைத்தான் என்னால் மன்னிக்க முடியவில்லை. அவர் தேவதுரோகம் செய்கின்றார். அவர் உம்மை கொல்ல தேடுகின்றவர்களுக்கு துணைபோகின்றார் என்று நான் தெரிந்துகொண்டேன். இதைப்பற்றி நான் அவரிடம் கேட்டால் அவர் என்மீது மிகவும் கோபம் கொள்கின்றார். எங்கே என் கணவர் தேவ சாபதிற்கு ஆளாகிவிடுவாரோ என்று நான் அஞ்சுகிறேன்.” என்றாள் அவள்.
  “ பெண்ணே . என்னை கொல்லத்தேடுபவர்கள் பலர் என்று நான் அறிவேன்.   உன் கணவரைப்பற்றிய உன் குற்றச்சாட்டுகளுக்கு ஏதேனும் ஆதாரம் உண்டா.? கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்ப்பதும் பொய் என்பது நீ அறியாததா? வெறும் வாய் வார்த்தைகள் …ஹேஸ்யங்கள் எதுவும் சபையில் நிற்காது. சாட்சியங்கள் மிகத்தெளிவாக இருக்க வேண்டும்.. ஆனாலும் என்னை கொல்லத்துணியும் சதியில் உன் கணவனும் சம்பந்தப்பட்டிருப்பதால் அவன் யார் என்று அறிய நான் ஆசிகிறேன். உன் கணவணைப்பற்றி சொல்லு” என்றார் இயேசுநாதர்.
“ போதகரே..என் கணவர் உமக்கு மிகவும் பரிச்சயமானவர்தான். அதோ .அங்கே தூரத்தில் தெரிகின்றாரே அவர்தான்” என்று ஒருவனை சுட்டிக்காட்டினாள். அவள். அங்கே இவர்களைப்பற்றி கவனியாமல் தனியே போய்க்கொண்டிருந்தான் அவள் கணவன் யூதாஸ். “ ஓ… இவன்தான் உன் கணவனா?. நான் அப்போதே நினைத்தேன் “ என்றார். இயேசுநாதர். பிறகு அடுத்தவளைப்பார்த்து,” பெண்னே உன்னைப்பற்றி சொல்லு” என்றார்.
   “ நசரரேத்தூர் இயேசுவே…நானும் வசதியான ஒரு உயர்குலத்தில் பிறந்தவள்தான். என்னைப்போல் ஒரு துரதிஸ்ட்டம் பிடித்த பெண் இந்த உலகத்தில் வேறு யாரும் இருக்க முடியாது.” என்று ஆரம்பித்தாள் அவள்.   “ஏன்.. உனக்கென்ன அவ்வளவு துன்பம்” “ ஆண்டவரே நான் ஒரு கேடுகெட்ட பிறவி. என் பிறப்பைக்கண்டு நான் மிகவும் வேதனைப்படுகின்றேன்.” என் தகப்பன் ஒரு கொலைகாரன். என் கணவனும் ஒரு கொலைகாரன்.” என்று கூறி மிகவும் அழுதாள். இப்படிப்பட்ட ஒரு பெண்ணுக்கு சமுதாயத்தில் என்ன மரியாதை இருக்கப்போகிறது? என்றாள் அவள்.
“ பெண்ணே.. நீ ஒரு கொலைகார குடும்பத்திலிருந்தா வந்திருக்கின்றாய். உன் நிலை கண்டு நான் மிகவும் பரிதாபப்படுகின்றேன். சரி.. யார் அவர்கள்.?”
“ ஆண்டவரே… என் தந்தையார்தான் அன்னாஸ் எனப்படும் மூத்த முன்னாள் தலைமை குரு. அவர்தான் உம்மை கொல்லத்தேடும் முதல் கொலைகாரன். என்கணவர் கைபாஸ்தான் இப்போதைய தலைமை குரு. இவர்தான் உம்மை கொல்லத்தேடும் இரண்டாம் கொலைகாரன். இப்போது தெரிந்ததா நான் யாரென்று?”. அவர்கள் உம்மை கொல்லத்தேடுவதற்கு உண்மையான காரணம் நீர் யாரென்று உண்மையிலேயே அவர்கள் அறிந்திருப்பது தான். நீரே உண்மையான மெசியா. நீரே இந்த உலகை மீட்க வந்திருக்கும் சர்வேசுரனின் மனிதாவதாரம் என்று மிக சத்தியமாக அவர்கள் அறிந்திருப்பதுதான் உண்மையான காரணம்..போதகரே… லாசரின் உயிர்ப்பு எப்பேர்ப்பட்டது. இறந்து நான்கு நாட்க்களாகி, அழுகி, புழு வைத்து, நாற்றமடித்து,, நாறிப்போன அந்த லாசரின் சடலத்தை ஒரே வார்த்தையில் உயிர்த்தெழவைத்த இந்த புதுமையை இந்த பரந்த உலகத்தில் எந்த மனிதனாலும், எந்த தீர்க்கதரிசியாலும் செய்ய முடியாது. கடவுள் ஒருவரால் மட்டுமே இதை செய்திருக்க முடியும். அந்த கடவுள் மனித உருவில் வந்திருக்கும் நீரே என்பதை நாங்கள் அனைவரும் முழுமனதாக விசுவாசிகிறோம். இந்த கேடுகெட்ட மனிதர்களுக்கு  உம்முடைய  கடவுளின் தன்மையை நம்பவைக்க இதைவிட பெரிய புதுமையை உம்மால் இனிமேலும் செய்ய முடியாது. செய்யவும் கூடாது. இந்த புதுமையை நம்பாதவன் இதைவிட பெரிய புதுமை எதை நீர் செய்தாலும் அதையும் நம்பமாட்டான்.
  லாசரின் உயிர்ப்புக்குப்பிறகு மிகவும் சாதாரண இந்த பெத்தானி வாசிகள் முதல் ஜெருசலேம் வாசிகள் வரை கல்வி கற்றோர் முதல் கல்வி அறிவே இல்லாதவர் வரை நீரே மெசியா என்பதை சந்தேகத்திற்கிடமின்றி அனைவரும் அறிந்திருப்பதால் வேத பண்டிதர்களாக இருப்பவர்களும் வேத பாடங்களையும் தீர்க்க தரிசனங்களையும் கரைத்து குடித்தவர்களூமான என் தந்தைக்கும் என் கணவருக்கும் இது தெரியாமலா இருக்கும்?. எங்கே உம்மை  மெசியாவாக ஏற்றுக்கொண்டால் . தங்கள் கௌரவம் பாதிக்கப்படும் தங்கள் வருமானம் வீழ்ந்துவிடும். தங்களைக்கண்டால் தரைமட்டும்க் தாழ்ந்து பணியும் மரியாதை இனி கிடைக்காது என்பன போன்ற காரணங்களால் அவர்கள் உம்மை எதிர்கிறார்கள்.தாங்களே உண்மையான இஸ்ராயேல் கடவுளின் வழிவந்த பிதாப்பிதாக்கள், யூத குலத்தை காக்கவந்த மெய்காவலர்கள் எனறு மார்தட்டிக்கொள்கின்றார்கள்.
 தேவரீர் லாசரை உயிர்பித்திருந்திருக்கவே கூடாது. அதனால் நீர் உம் உயிருக்கு இவ்வளவு விரைவில் உலை வைத்துக்கொண்டீர்…இப்போது என் நிலை புறிகிறதா உமக்கு. பாவி நான் என்ன செய்வேன் சுவாமி. நான் என் பெற்றொர் மீது கொண்ட பாசத்தாலும் என் கணவர் மீது கொண்ட பாசத்தாலும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறுகிறேன். தேவரீர் அவர்களை மன்னிக்க வேண்டுகிறேன். தேவனின் கோபமும் சாபமும் பொல்லாதது..மிகவும் கொடுமையானது இந்த தேவ கோபமும் சாபமும் என் கணவர் மீதும் என் தந்தையார் மீதும் கொடுமையாய் இறங்கும் ” என்றாள் அவள்.
“ பெண்னே..உன் நிலை மிகவும் பரிதாபமானது. நான் உன்மீது மிகவும் இரக்கமுள்ளவராக இருகின்றேன். உன் கணவர் மற்றும் உன் தந்தையார் மீது சுமத்தப்படும் தேவ கோபம் உன்மீது இறங்காது. உண்மை எதுவென தெரிந்தும் அதை ஏற்றுக்கொள்ளாதவர் பொய்க்கு தூப ஆராதணை காட்டுகின்றனர். பொய்யிலே நிலைத்திருக்கவே விரும்புகின்றனர். அனைத்தையும் படைத்த கடவுள் உண்மையானவர். அவரது எதிரி சாத்தான் பொய்யன். .உண்மையை வெறுத்து பொய்யை ஆசிப்பவன் கடவுளை எதிர்கிறான். பகைக்கிறான். இதுவே தேவ துரோகம். நானே உண்மையும் ஒளியும் சத்தியமும் ஜீவியமுமாய் இருகின்றேன். நான் இந்த உலகத்தில் இருக்கும் வரை நான் இரக்கமுள்ளவராகவே இருகின்றேன். அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டு என்னிடம் சரணடையட்டும். நான் என் பிதாவின் சித்தப்படியே போக வேண்டியதாக இருக்கின்றது. நீ அவர்களுக்காக பரம பிதாவிடம் வேண்டிக்கோள். கடவுளின் சுபாவம் கோபம்கொள்ளும் ஒரு தகப்பனைப்போன்றது. ஆனால் அவரிடம் அன்பும் இரக்கமும் அபரிமிதமாக இருகின்றது என்பதை நம்புங்கள். உங்கள் கணவரின் துரோகத்தால் நான் சிந்தப்போகும் என் இரத்தம் அவர்களையும் இரட்சிக்கட்டும். நானும் உங்களுக்காக என் பரமபிதாவிடம் ஜெபிகிறேன்..நீங்கள் இருவரும் சமாதானமாக சென்று வாருங்கள் என்று அவர்களை ஆசீர்வதித்து அனுப்பினார்.
     இதே நாள் விளக்கு வைத்தபிறகு இயேசுநாதர் ஜெத்சேமனி தோட்டத்தில் தன் சீடர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். “ இராயப்பா..இதே கெதிரோன் சாலை வழியாக ஜெருசலேமுக்கு ஒரு நாள் நான் வருவேன். இப்போதுபோல் ஒரு ஏழையாக அல்ல. பெரும் மா மன்னராக, அரச பதவியில் வீற்றிருப்பவராக, இந்த உலகை நடுத்தீர்ப்பவராக..உண்மை கடவுளாக” என்றார். பிறகு இந்த இரவிலே நான் காட்டிக் கொடுக்கப்படுவேன். ஆயனை சிதறடிப்பேன். ஆடுகள் சிதறிப்போகும் என்பது எழுதப்பட்டு உள்ளபடியே நிகழும்.உங்களில் ஒருவன் என்னை காட்டிக்கொடுக்க போகின்றான் “ என்றார். அதற்கு இராயப்பர்,” ஆண்டவரே எல்லோரும் உம்மைவிட்டு ஓடிப்போனாலும் நான் உம்மைவிட்டு போகமாட்டேன். இதில் என் உயிரே போனாலும் சரி.. நான் உம்மைவிட்டு போகவே மாட்டேன்.” என்றார். “ இராயப்பா… இந்த இரவே சாத்தான் உன்னை புடைத்தெடுக்க என் பரம தந்தையிடம் அனுமதி பெற்றுவிட்டான். நானும் உங்களுக்காக நீங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்க என் பரம பிதாவிடம் மன்றாடுகிறேன். இந்த இரவில் இருமுறை கோழி கூவு முன்பாக நீ என்னை மூன்று முறை மறுதலிப்பாய்” என்றார். அப்படியே ஆயிற்று. அந்த பெரிய வியாழன் அன்று இரவில் ஜெத்செமெனி தோட்டத்தில் யூதாஸ் இயேசுநாதரை காட்டிக் கொடுத்தான்.
  இயேசுநாதர் கைப்பாஸின் அரண்மனையில் விசாரணைக்காக காத்திருக்கையில் இராயப்பர் அங்கே என்ன நடக்கின்றது என்று காண வந்திருந்தார். அப்போது ஒருத்தி,” உன்னைப்பார்த்தால் கலிலேயன்போல் தோன்றுகிறது. நீ அந்த இயேசுவின் சீடன் தானே” என்றாள். இராயப்பர்.” இல்லை அம்மா.. அது நான் அல்ல” என்றார். இன்னொருவன்,” தோட்டத்தில் உன்னை நான் அந்த ஆளோடு காணவில்லையா” என்றான். அதற்கு இரயப்பர் ,” நீ யாரையோ பார்த்துவிட்டு அவன் நான்தான் என கூறுகின்றாய்” என்றார். இப்போது இரண்டாம் முறையாக இயேசுவை மறுதளித்தார். மீண்டும் ஒருவன்,” உண்மையிலேயே நீயும் அவனுடைய சீடர்களில் ஒருவன்தான். அது உன்னைப்பார்த்தாலே தெரிகின்றது,” என்றான். அப்போது இராயப்பர்,” யார் அந்த இயேசு. அவரை எனக்கு தெரியவே தெரியாது. அவர் நாசமாகப்போக “ என்று சபிக்கவும் ஆணையிடவும் செய்தார்.  அப்போது கைப்பாசின் அரண்மனை வாசலில் இருந்த ஒரு செவல் கொக்கரக்கோ என இரண்டுமுறை கூவியது. அப்போது இயேசுநாதர் இராயப்பரை பார்த்தார். அந்த பார்வை அவருக்கு ஆயிரம் கதை சொல்லியது. இன்று மாலையில்தானே நீ என்னை மும்முறை மறுதலிப்பாய். அப்போது இருமுறை கோழி கூவும் என்று சொன்னேன் என்று சொல்லியது. இதை நினைத்துப்பார்த்த இராயப்பர் இனியும் அங்கிருக்க பிடிக்காமல் தான் இயேசுவை மறுதளித்தது பற்றி மிகவும் வருந்தி அழத்துவங்கினார்..
    அன்று மாலையி;ல் இயேசுநாதரை சந்தித்து வீடு திரும்பிய யூதாசின் மனைவிக்கு அந்த இரவில் தன் கணவன் இயேசுநாதரை காட்டிக் கொடுத்தது பற்றி எதுவும் தெரியாமல் உறங்கிப்போனாள். காலையில் எழுந்து நல்ல ஒரு விடலை கோழியை சமைத்தாள்.  இயேசுநாதரை காட்டிக்கொடுத்த யூதாஸ் அவருக்கு சிலுவை சாவு கொடுக்கப்பட்டது என்று கண்டு மிகவும் மனம் உடைந்தான். தான் வாங்கியிருந்த லஞ்சப்பணத்தை தேவாலய குருக்களிடம் வீசி எறிந்துவிட்டு தன் வீடு திரும்பினான். தன் மனைவியிடம் தான் செய்த துரோகசெயல்களை கூறி தான் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தை கூறினான். அவன் மனைவி அவனிடம் தான் நேற்று மாலை இயேசுநாதரை சந்திதது பற்றி கூறினாள். இயேசுநாதர் இந்த உலகத்தில் இருக்கும்வரை அவரிடம் இரக்கம் உள்ளதால் அவரிடம் சென்று மன்னிப்புகேள். நீர் அவருக்கு செய்த துரோகத்துக்கு தண்டனையாக உன் ஆத்துமா நித்தியத்துக்கும் எரி நரகத்தில் தள்ளப்படுவதைவிட இப்போதே ஆண்டவரிடம் மன்னிப்பு பெற்றுக்கொள். எனவும் இன்னும் பல சமாதான வார்த்தைகளால் தேற்றியும் அவன் இயேசுநாதரை சந்திக்க. வற்புறுத்தினாள். ஆனால் அவன் காதில் எதுவும் ஏறவில்லை. அவன் இயேசுவின் இரக்கத்தை நம்பவில்லை. அவன் இதயம் முழுவதையும் சாத்தானும் அவனது தூதர்களும் ஆக்கிரமித்திருந்தார்கள்.  இயேசுநாதர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து வந்து தன்னை தண்டிப்பார் என்பதையே திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டு தன்னுடைய தற்கொலை பற்றிய எண்ணத்தில் உறுதியாக இருந்தான். அவனது எண்ணத்தை மாற்ற விரும்பிய அவன் மனைவி, “ இதோ பாரும்.இயேசுநாதர் மீண்டும் உயிர்க்கப்போவது உண்மைதான். அவரிடம் இரக்கம் இருப்பதும் உண்மைதான் .இந்த விஷயத்தில் நான் மிக உறுதியாக இருகின்றேன் அதற்கு ஆதாரமாக நான் சமைத்துவைத்துள்ள இந்த கோழி சாட்ச்சியம் சொல்லட்டும். ஓ…சேவலே எனக்கு சாட்ச்சியம் கூறுவாயாக… இயேசுநாதர் மேல் ஆணை” என்றாள். அப்போது அவள் சமைத்து வைத்திருந்த அந்த கோழி உயிர் பெற்று எழுந்துவந்து “ கொக்கரக்கோ “ என்று இருமுறை கூவி மறைந்து போனது.
      இதைக்கண்ட யூதாசுக்கு தலை சுற்றிப்போனது. இயேசுநாதரின் உயிர்ப்புக்கு இறந்த கோழி சாட்ச்சியம் கூறுகின்றது. அப்படியானால் இயேசுநாதரின் உயிர்ப்பும் சர்வ நிச்சயம் என்று உணர்ந்தவனாக அவரது இரக்கத்தை நம்பாமல் போய் தூக்கு போட்டுக்கொண்டு செத்தான். இந்த கதை கிரேக்க ரீதி திருச்சபையில் சொல்லப்பட்டு வருகின்றது.
    இதைப்போல இன்னும் ஒரு கதை. இது கதை அல்ல நிஜம்.
    இந்த கதை எப்போது நடந்தது என்பது குறிப்பிடப்படவில்லை. ஆனால் இந்த கதை நடந்தது நிஜம் என்கின்றது இந்த ஊரில் பொறித்து வைக்கப் பட்டுள்ள ஒரு சிலுவை. மேற்கு ஐரோப்பாவில் போர்த்துக்கல் தேசம் உள்ளது. இதில் பார்சிலோஸ் என்னும் ஒரு பட்டிணத்தில்தான் இந்த சிலுவை ஊரின் நடுப்பகுதியில் நிற்கின்றது. இனி கதைக்குப்போகலாம்.
      ஸ்பெயின் தேசத்தில் கி.பி. எட்டாம் நூற்றாண்டிலிருந்து புனித சந்தியாகப்பரின் பக்தி பரவியது. ஸ்பெயின் தேசத்தின் பாதுகாவலராக புனித பெரிய யாகப்பர் என்றழைக்கப்பட்ட சந்தியாகப்பரின் சமாதி அமைந்துள்ள  சந்தியாகு தெ கம்போஸ்த்தலா என்னும் ஊர் பெரும் திருயாத்திரை ஸ்தலமாக கருதப்படுகின்றது.. இந்த ஊருக்கு ஐரோப்பாவிலிருந்து  அக்காலத்திலிருந்தே பெரும்பாலான கிறிஸ்த்துவர்கள் திருயாத்திரை செல்வது வழக்கம். எனவே புனித சந்தியாகப்பருக்கு திருயாத்திரை செல்வோரின் பாதுகாவலர் என்னும் பட்டமும் உண்டு. இந்தனை பெருமை நிறைந்த இந்த சந்தியாகு தெ கம்போஸ்த்தலா என்னும் ஊருக்கு திருயாத்திரை செல்வதற்காக புனித சந்தியாகப்பரின் மேல் நம்பிக்கை வைத்து தனக்கு வழித்துணையாக நீரே வர வேண்டும் என்னும் வேண்டுதலையும் வைத்து தன் நடைபயணத்தை ஆரம்பித்தான் ஒரு கிறிஸ்த்துவன் பல நாட்க்கள் நடந்து பார்சிலோஸ் என்னும் பட்டிணத்தை அடைந்தான் அவன். இந்த பட்டிணத்தில் சில நாள் ஓய்வெடுக்க விரும்பி ஒரு விடுதியில் தங்கினான். ஆனால் அவனுக்கு இந்தப்பட்டிணம் ஒரு கொடும் பழியையும் மரண தண்டனையையும் தரும் என்பது அப்போது அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
  இந்த பார்சிலோஸ் பட்டிணத்தில் ஒரு பெரும் பணக்காரன் இருந்தான். துரதிர்ஸ்ட்ட வசமாக அவனது வீட்டிலிருந்த பெரும்பாலான வெள்ளி தங்க நகைகளும் பணம் காசுகளும் யாராலோ கொள்ளையடிக்கப்பட்டுவிட்டன. ஊரார் அனைவருக்கும் இந்த விஷயம்தெரிந்துவிட்டதால் இப்படிப்பட்ட கொள்ளைகாரனை கண்டுபிடிக்க ஆவலாக இருந்தார்கள். ஒருவழியாக கள்ளனை பிடித்துவிட்டார்கள். அவன் வேறு யாரும் அல்ல. நம் கதாநாயகன் தான். தான் சந்தியாகப்பரின் தேவாலயத்திற்க்கு செல்லவிருக்கும் ஒரு திருயாதிரீகன் என்றும் இந்த ஊருக்கு வந்து தங்கியிருக்கும் ஒரு வழிப்போக்கன் என்றும் தனக்கும் இந்த கொள்ளைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது சந்தியாகப்பரின் மேல் சத்தியம் என்று எவ்வளவு சத்தியம் சொல்லியும் அந்த ஊர் மக்கள் அவனை நம்பாமல் நையப்புடைத்தார்கள். பொருளை பறிகொடுத்த அந்த ஊர் பணக்காரனோ அவனை அந்த நாட்டு அதிபதியிடம் ஒப்படைத்தான். அந்த அதிபதி அவனுக்கு மரண தண்டனை விதித்தான். தண்டனை நிறைவேற்று முன் அவனது கடைசி ஆசையை கேட்டனர். அவன் தன் கூற்றை நிரூபிக்க ஒரு கடைசி சந்தர்ப்பம் வேண்டும் எனவும் அதற்காக அந்த நாட்டு அதிபதியை பார்க்க ஒரு வாய்ப்பு வேண்டுமென கேட்டான். அவனுக்கு அந்த வாய்ப்பு அனுமதிக்கப்பட்டது. ஆனால் அங்கும் அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
     அவனை அதிபதி சந்திக்கும் வேளையில் அவர் பெரும் விருந்து ஒன்றில் அமர்ந்திருந்தார். அவர் முன்பாக பலவிதமான பதார்த்தங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று கோழி வறுவல்.இதைக்கண்ட மாத்திரத்தில் அந்த அதிபதிக்கு வாயில் எச்சில் ஊறியயது. இருப்பினும் தன்னைக்காண வந்திருந்த அந்த தூக்கு தண்டனைக்கைதி பேச ஒரு நிமிடம் வாய்ப்பளித்தான். ஆனால் அவன் கூறியது எதையும் அவன் காதில் போட்டுக்கொள்ளவில்லை. அவனோ தான் மாசற்றவன் என்றும் தனக்கும் இந்த கொள்ளைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தன் மரண தண்டனையை நீக்குமாறும் எவ்வளவோ மன்றாடினான். ஆனால் அந்த அதிபதி மிகுந்த எரிச்சலுற்று “ இந்த மரண தண்டனைக்கைதியை கொண்டுபோய் தூக்கிலிடுங்கள்.  பசி என்வயிற்றை பிடுங்கி எடுக்கின்றது “ என்று கோபத்துடன் கத்தினான். அப்போது அந்த கைதி,” நான் சந்தியாகப்பரின் பக்தன் என்பது உண்மையானால், நான் நிரபராதி என்று கூறும் என் சாட்சியம் உண்மையானால் நான் மரிக்கும்முன், நீர் உண்ணப்போகும் இந்த செத்த கோழி சாட்சியம் கூறட்டும் “ என்றான். அவனை ஊருக்கு நடுவில் உள்ள முச்சந்தியில் ஒரு குதிரையின்மேல் அமரவைத்து அவன் கழுத்தில் சுறுக்கு கயிரை மாட்டினர். தண்டனை நிறைவேறட்டும் என்னும் ஆணை கிடைத்ததும் வீரன் ஒருவன் அந்த குதிரையை சவுக்கால் ஒரு அடித்தான். அவ்வளவுதான். அந்த குதிரை வேகமாக ஓடிவிட்டது. கைதியின்  மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. அடுத்த வினாடி விருந்தில் இருந்த  அந்த தட்டில் வைக்கப்பட்டிருந்த கோழி உயிர்பெற்றது. “ கொக்கரக்கோ” என்று உரத்தகுரலில் இருமுறை கூவிவிட்டு எங்கோ ஓடி மறைந்தது. இதைக்கண்ட ஆளூநன் மிகவும் பயந்து போனான். “ ஆஹா … நான் தவறு செய்துவிட்டேன். அநியாயமாக ஒரு நிரபராதிக்கு தூக்கு தண்டனை கொடுத்துவிட்டேன்… நிறுத்துங்கள்…நிறுத்துங்கள் “  என்று கூறிக்கொண்டே அந்த தூக்கு மேடைக்கு ஓடினான். அவனே அந்த கைதியை தாங்கி பிடித்துக் கொண்டு அவனை காப்பாற்றினான். நல்ல வேலையாக அந்த தூக்கு தண்டனை கைதிக்கு உயிர் இருந்தது. அந்த கைதி விடுவிக்கப்பட்டான். நடந்த சம்பவதிற்காக அந்த நாட்டு அதிபதி அவனிடம் மன்னிப்பு கோறினார். அதுமுதல் புனித சந்தியாகப்பர் இயேசுவின்  பெரும் வல்லமையான அப்போஸ்த்தலர் என்பதும் அவர் திருயாத்திரீகர்களின் பாதுகாவலர் என்பதும்  ஐரோப்பிய மக்களுடைய பெரும் நம்பிக்கை ஆனது. இந்த நம்பிக்கை உலகம் முழுவதும் பரவியது.
 இந்த நிகழ்ச்சி நடந்து பல காலம் கழித்து அந்த யாத்திரீகன் இதே பார்சிலோஸ் நகருக்கு மீண்டும் வர நேரிட்டது. தன் மரண தண்டனை பற்றிய காட்ச்சியை அந்த ஆளுநன் ஒரு சிலுவையில் பொறித்து அதே முச்சந்தியில் நிலை நாட்டி இருக்க கண்டான். மேலும் சேவல் சின்னத்தை போர்த்துகல் நாட்டின் தேசீய பறவையாக அறிவித்திருந்தான்...
    இப்படியாக சாட்ச்சி சொன்ன சேவல்கள் பல இருகின்றன. ஆனாலும் சரித்திரத்தில் சேவல்களைப்பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை கூற நான் விரும்புகிறேன்.
      சேவல் இல்லாமல் அதிர்ஸ்ட்டம் ஏது? .உங்களுக்கு அதிர்ஸ்ட்டம் வேண்டுமா.. உங்கள் வீட்டில் ஒரு சேவலின் படம் மாட்டி வையுங்கள்.பல நூற்றாண்டுகளாக சேவல் செழுமையின் அடையாளமாக இருகின்றது. சேவலின் கொக்கரக்கோ என்னும் சப்த்தம் அசுத்த ஆவிகளை விரட்டும். சேவல் ஆண் தன்மையின் அடையாளம்.  எதிபாராமல் ஒரு சேவல் உங்கள் வீட்டு சமையல் அறைக்கு வந்துவிட்டதா? சந்தோஷப்படுங்கள். அதிர்ஸ்ட்ட தேவதை உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டாள்.
     பெட்டைக்கோழி தாய்மையின் அடையாளம். இயேசுநாதர் தன் நற்செய்தியில் இந்த பெட்டைக்கோழிக்கும் ஒரு இடம் கொடுத்திருகின்றார். அதுதான் ஜெருசலேம் நகரின் அழிவைப்பற்றியது. தன்னை ஒரு தாய்க்கோழியாக பாவித்து,” ஜெருசலேமே..ஜெருசலேமே..பெட்டைகோழி தன் செட்டைக்குள் தன் குஞ்சுகளை அணைத்து காப்பதுபோல் நான் உன்னை காக்க வந்தேன். என்னும் வேத வசனத்தை நினைவு கூருங்கள்.  
  ஏதோ ஒரு காரியமாக வீட்டை விட்டு வெளியே போகின்றீர்களா ? உங்கள் எதிரே ஒரு சேவலோ அல்லது பெட்டையோ  தென்பட்டால் போகும் காரியம் வெற்றிதான். அது நல்ல சகுணம் எங்கின்றனர் மேல் நாட்டினர்.
 சேவலின் கொக்கரக்கோ என்னும் சப்த்தம் ஆண்டவரின் ஆசீரை கூவி அழைப்பதாக இருகின்றது. எழுந்திருங்கள். இருள் விலகிவிட்டது. அதிகாலையில் எழுந்து ஆண்டவரை தொழுங்கள். ஆண்டவருக்கு புதியதோர் பாடலை பாடுங்கள் . அல்லேலூயா என்று அது உங்களுக்கு உரக்கக்கூவி நினைவூட்டுகின்றது. இதற்காகவே அது இரவு முழுவதும் கவனமாக காத்திருகின்றது.
சேவல் திசைக்காட்டும் கருவியில் அமர்ந்திருக்கின்றது.
     தேவாலயங்களில் சேவல்…
 சேவல் ஒரு பலிப்பொருள். ஒருவிதத்தில் அது இயேசு நாதரை ஒத்திருகின்/றது. இயேசுநாதர் உலகின் பாவங்களை தன்மேல் சுமந்துகொண்டு தன்னையே பலி ஆக்கினார் அல்லவா… இப்படியாகத்தான் அக்காலத்தில் தங்களுடைய பாவங்களுக்கு பரிகாரமாக ஒரு சேவலை எடுத்து எனக்கு பதிலாக நீ மரணிக்க வேண்டும் என்று அதற்கு சொல்லி தன்தலைமீது அதை மூன்று முறை சுழற்றி அதை பலி கொடுப்பார்கள். திருச்சபையின் தலைவராக புனித இராயப்பர் இருகின்றார். அவர் பெயர் சொல்லுமிடம் எல்லாம் யாரும் இந்த சேவலை மறக்க முடியாது. எனவே அந்த சேவலுக்கு இராயப்பரின் கோழி என பெயரிடப்பட்டுள்ளது. பெரிய வியாழன் நிகழ்ச்சிகள் நினைவு கூறப்படும் அனைத்து கிறிஸ்த்துவ தேவாலயங்களின் உச்சியில் சிலுவையின் மீது இந்த கோழியின் சிற்பமும் வைத்திருக்கப்பட வேண்டுமென அக்காலத்திய பாப்புமார்கள் புனித சிங்கராயர் எனப்படும் லியோ மற்றும் நிக்கோலாஸ் போன்றவர்கள் வாய்மொழி உத்திரவுகள் போட்டதாக சில தகவல்கள் உண்டு. ஆனால் காலப்போக்கில் அந்த உத்திரவு மறைந்து போய்விட்டது.
    ஆனால் பரிசுத்த பிதா பாப்பு பெரிய கிரகோரியார் ஒரு சேவலின் படம் வரைந்து அதற்கு புனிதர்களுக்கு இடப்படும் ஒளிவட்டத்தையும் போட்டு பெரும் மதிப்பு கொடுத்திருகின்றார். அந்த படம் இன்னும் வத்திக்கானில் இருகின்றது.

 இன்றும்கூட ஜெருசலேமில் கைப்பாஸின் வீட்டின் மேற்கூறையில் சிலுவைக்கு மேலாக அங்கு நடந்த கோழிகூவிய சம்பவத்தை நினைவுகூறும் வகையில் ஒரு சேவலின் சுரூபம் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கைப்பாசின் வீட்டுக்கு சேவல் கூவிய தேவாலயம் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 கொக்கரக்கோகோ….கொக்கரக்கோகோ…கொக்கரக்கோகோ..



Sunday, August 5, 2018

“ இரண்டு ஏதேன் தோட்டங்கள். ”



             “ இரண்டு ஏதேன் தோட்டங்கள். ”
       கிறிஸ்த்து பிறந்த வருடம்:. அந்த அமைதி பொழியும் இரவில் இந்த உலகத்தையும் ஈரேழு லோகங்களையும், அண்ட சராசரங்களையும் …” உண்டாகுக” என்னும் ஒரே வார்த்தையில் படைத்த சுதனாகிய சர்வேசுரன் மனிதாவதாரமாக ஒரு குழந்தையாக அந்த பெத்லஹேமின் மாட்டுக்குடிலில் அவதரித்திருந்தார். வானோர்களின் பாடல்களால் சாமக்காவல் காத்துக்கொண்டிருந்த இடையர்கள் தங்கள் குடும்பத்தாருடன் பிறந்திருக்கும் உலக இரட்ச்சகரை தரிசிக்க வந்திருந்தனர்.
இன்னும் யார் யாரோ வந்திருந்தனர். ஆனால் வந்திருந்தவர்களில் முக்கியமானவர்கள் கீழ்த்திசை நாடுகளை சேர்ந்த கஸ்பார் என்னும் கந்தப்ப ராசாவும் ( இவருடைய நாடு இந்தியாவில் தமிழ் நாடு ) மெல்கியோர் மற்றும் பல்த்தசார் ஆகியோரும் ஆவர். இவர்களில் வயதில் மூத்தவராகிய கந்தப்ப ராசா என்னும் கஸ்பார் ஓபீரின் சுத்த தங்க நாணயங்களைக்கொண்டு வந்திருந்தார். மற்றவர்கள் மிகவும் அரிதான மூலிகைகளையும் கடவுளுக்கே உறித்தான அபிசீனிய சாம்பிராணிகளையும் கொண்டு வந்திருந்தனர். தங்கம் அரசருக்கே உறித்தானது. சாம்பிராணி கடவுளுக்கு உறித்தானது. மிகவும் விஷேஷமாக இதன் சில சேர்மங்களைக்கொண்டு ரகசியமான முறையில் தயாரிக்கப்பட்ட தூபங்களையே மன்னர் சாலமோனும் அவருக்கு பின் வழிவந்தவர்களும்  ஜெருசலேம் தேவாலயத்தில் கடவுளுக்கு ஆராதனையாக காட்டினார்கள்.( மிகவும் அரிதான மூலிகைகளை உபயோகித்தே யேசு நாதரின்அடக்கமும் நிறைவேற்றப்பட்டது.)
 தோபித்து ஆகமம். 13..13 கூறுகிறது.   “ உலகின் எல்லைவரை உம் பேரொளி சுடர்க. தொலைவிலிருந்து பல நாடுகள் எருசலேமிடம் வரும். உலகின் எல்லா எல்லைகளிடமிருந்தும் மக்கள் உமது திருப்பெயர் விளங்கும் இடதிற்கு வருவார்கள். விண்ணக வேந்தருக்கு தம் கைகளில் காணிக்கை ஏந்தி வருவார்கள். எல்லா தலைமுறைகளும் உன்னில் மகிழ்ந்து பாடும். தெரிந்துகொள்ளப்பட்ட  நகரின் பெயர் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கும்.”
  வார்த்தையாகிய தேவசுதனின் மனிதாவதாரத்தைக்கண்டு அவரை சாஸ்டாங்கமாக விழுந்து ஆராதித்து தாம் கொண்டு வந்திருந்த அன்பளிப்புகள் அனைத்தையும் மாதாவிடம் சமர்ப்பித்தனர். பிறகு தேவத்தாயாருக்கும் குழந்தை யேசுவுக்கும் வாழ்த்துகள் பல சொல்லியும் அவர்களிடம் ஆசீர்வாதங்கள் பல பெற்றுக்கொண்டும் தத்தம் தாய்நாடு திரும்பினர்.
 இந்த சரித்திர நிகழ்வு நடந்து சரியாக 32 வருடங்களுக்குப்பிறகு…. இயேசுநாதரும் அவருடைய சீடர்களும் சாக்கடலின் பகுதிகளில் நடந்து வருகின்றார்கள். அப்போது தீவிரவாதி எனப்பட்ட சீமோன் “ ஆண்டவரே இந்த பகுதிகள் எல்லாம் எனக்கு மிகவும் நன்றாகத்தெரியும். எனக்கு தொழு நோய் கண்டிருந்த போது மக்களின் பார்வையினின்று விலகி நான் இந்தப் பகுதியில்தான் வாழ்ந்து வந்தேன். இந்தபகுதியில் எங்கெங்கு குடிக்கும் நீர் கிடைக்கும், சாப்பிட தேன் எங்கு கிடைக்கும் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். தேவரீருடைய கிருபையால் நான் நலம் பெற்று உம் சீடர்களில் ஒருவனாக நான் உயர்த்தப்பட்டது அடியேன் செய்த பெரும் பாக்கியம் “ என்றார். அப்போது யூதாஸ் “ஆண்டவரே இந்த உப்புக்கடல் ஏன் இவ்வளவு அசுத்தமாகிப்போயிற்று. கடவுள் இதை படைக்கும்போதே இப்படித்தான் படைத்தாரா?” என்றான்.
   இல்லை யூதாஸ். கடவுள் இதைப்படைக்கும்போது எல்லாம் நன்றாகத்தான் படைத்தார். மிக்க அழகுள்ளதாகத்தான் படைத்தார். ஒரு காலத்தில் ஏதேன் தோட்டம் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த இடம்தான் சரியான உதாரணம் என்பதுபோல் அழகிய தோட்டங்களும் ஆங்காங்கே நீறூற்றுகளும் பசும் புல்வெளிகளும் அழகான ஒரு பட்டிணமாய் இருந்ததுதான் இந்த சாக்கடல். காலப்போக்கில் மனிதன் பாவத்தில் மூழ்கித்திளைத்தபோது எல்லாம் தலை கீழாக மாறிப்போயின. இந்த உலகின் ஐம்பூதங்களும் இந்த இடத்தில் வெறியாட்டம் போட்டன. தேவகோபம் இந்த இடத்தில் இறங்கியதால் பூமி பிளந்து பாதாளம் வெளிப்பட்டது. அதிலிருந்து வெளியேறிய எண்னணகீள்கள் தீப்பற்றி எரியத்துவங்கின. நீர் நெருப்பு காற்று இடி மின்னல் என அனைத்து சத்துவங்களும் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக்கொண்டு இங்கே தங்களின் வெறியாட்டத்தை நடத்தியதால் இந்த இடம் பெரும் பள்ளமாகவே மாறிவிட்டது. ஏதேன் தோட்டத்திலிருந்து பாய்ந்து வந்திருந்த நதி இப்போது இருக்கும் இடம் தெரியாமல் மறைந்தது விட்டது.. இப்போது வரும் ஜோர்தான் நதி இதில் வந்து முடிகிறது. இந்த சாக்கடலில் விழும் எந்த நீரும் மேலே ஆவியாகிப்போய்விடுவதால் இங்குள்ள நீர் எப்போதும் உப்பு நிறைந்ததாகவே இருக்கும். மேலும் இந்த ஜோர்தான் நதி நீர் இங்கு விழும் அளவைவிட இந்த ஏரியிலிருந்து சூரிய வெப்பத்தால் ஆவியாகும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் இந்த ஏரி எப்போதும் நிரம்புவதே இல்லை. எனவே அதன் உப்புத்தன்மை மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே இருகின்றது.” என்றார்.
    “ ஆஹா ஆண்டவரே … அப்படியானால் இங்குள்ள அனைத்து நீரையும் வெளியேற்ற முடிந்தால் அடியில் தங்கியுள்ள அந்த பழைய நகரத்தை மீண்டும் காண முடியுமா?” என்றான் யூதாஸ்.
“நான் உனக்கு வாக்களிக்கிறேன் யூதாஸ். எந்தக்காலத்திலாவது மனிதன் இங்குள்ள நீர் அனைத்தையும் வெளியேற்றினால் ஆதாம் ஏவாள் காலம் துவங்கி ஒரு நூற்றாண்டுக்குப்பின்னர் இங்கே மக்கள் வாழ்ந்த பட்டிணங்களின் அடையாளத்தை நிச்சயம் பார்க்கலாம். இங்குள்ள உப்பும் சுண்ணாம்புச்சத்தும் ஜோர்தான் நதியின் மணல்களும் இந்த பட்டிணத்தின் வீடுகளின் மீது அடுக்குகளாகப்போர்த்தி வைத்திருப்பதால் அவை அழியாமல் அப்படியே பாதுகாக்கப்பட்டுள்ளன.” என்றார் இயேசுநாதர்.“ ஆண்டவரே இந்த இடம் ஏதொ ஒரு நீதி அல்லது படிப்பினையை கற்பிப்பது போல் இல்லையா?’” என்றார் இராயப்பர்.
“ ஆம். உண்மைதான் இராயப்பா..இந்த உலகில் எத்தனையோ கடல்கள் இருந்தாலும் கடவுள் தாம் வசிப்பதற்க்கு ஏற்ற இடமாக இந்த கலிலேயாக்கடலைத்தான் தெரிந்துகொண்டார். காரணம் இல்லாமல் இல்லை. இந்த கலிலேயாக்கடலின் நீர் ஆதாரம் அதன் வடக்கே உள்ள பனிமேகம் சூழ்ந்த உயர்ந்த ஹெர்மாஸ் மலை. அதிலிருந்து இறங்கிவரும் நீர் கலிலேயாக்கடலில் கலக்கிறது. பின் அதன் வெளியேற்றமாக ஜோர்தான் நதி இறங்கிவருகின்றது. அது பாலஸ்தீனம் ஜோர்டான் நாடுகளுக்குள் பாய்ந்து அவற்றை வளமாக்கியபின் இங்கே சாக்கடலில் அசுத்த நீராக விழுகின்றது. அதில் விழுந்த நீர் அனைத்தும் சாக்கடலால் விழுங்கப்பட்டுவிடும். இதை எதற்க்கு ஒப்பிடலாம் என்றால் மோட்ச்சத்தில் கடவுள் படைத்த ஆன்மா இந்த உலகில் புதிதாய் பிறக்கும் ஒரு குழந்தையின் உடலில் செலுத்துவது போல ஹெர்மாஸ் மலையில் உருவாகும் நீர் பரிசுத்தமான புதிதாய் பிறந்த குழந்தையின் ஆன்மா போல கலிலேயாக்கடலில் கலக்கிறது. அது ஜோர்தான் நதிபோல அங்கிருந்து வெளியேறுகிறது. பல இடங்களில் அது பயணித்து அந்த இடங்களை வளமாக்கிய பிறகு வெற்று நீராக அது சாக்கடலில் விழுகின்றது. புதிதாக பிறந்த குழந்தை வளர்ந்து ஆளாகி பாவி ஆகி சபிக்கப்பட்டவனாகி பாதாளம் என்னும் நரகத்திற்குள் மூழ்குகின்றது.” என்றார் இயேசுநாதர்.
 அப்படியானால் ஆண்டவரே மனிதனுக்கு விமோச்சனமே இல்லையா “ என்றார் இராயப்பர்.
ஏன் இல்லை இராயப்பா. அதற்காகத்தானே நான் வந்திருகிறேன்.ஆண்டவரே உம்மில் நான் என் நம்பிக்கையை வைக்கிறேன். உம்மை நான் அன்பு செய்கிறேன். என்னை காத்து இரட்ச்சியும் என்று என்னை நோக்கி மன்றாடுபவர்களை நான் இரட்ச்சிக்கிறேன். நீ கலிலேயாக்கடலில் மூழ்கும்போது ஆண்டவரே என்னை காப்பாற்று என்று என்னை நோக்கி நீ கதறவில்லையா அப்படித்தான் இதுவும். உன் சம்மதம் இல்லாமல் உன்னைப்படைத்த உன் ஆண்டவருக்கு  உன் சம்மதம் இல்லாமல் உன்னை மீட்கவும் முடியாது. பாவத்தால் மூடிக்கொண்ட உன் இதயக்கதவுகளை நீயாகத்திறந்தால் அன்றி உன்னைப்படைத்த கடவுளால்கூட உன் இதயத்தில் பிரவேசிக்க இயலாது. நீயாக உன் உள்ளார்ந்த அன்பினால் என்னை அழைக்கும்போது உன் இல்லத்திலும் உன் உள்ளத்திலும் நாம் பிரவேசிக்க முடியும். ஆனாலும் ஒன்று நிச்சயம். இன்று மனிதனோ மிருகமோ அல்லது ஊர்வன பறப்பன ஆகிய எதுவுமோ வாழ முடியாத இந்த சாக்கடலும்கூட ஒரு காலத்தில் மாறிப்போகும். மேற்கூறிய அனைத்தும் வாழக்கூடிய தகுதி பெற்று செழிப்பான இடமாக மாறிப்போகும். இப்படித்தான் மனிதனுடைய வாழ்க்கையும். நல்லவன் கெட்டவனாவதும், கெட்டவன் நல்லவனாவதும் அவரவர் மனமாற்றத்தை பொறுத்ததே. அதுசரி நீ ஏன் சோகமாக இருகின்றாய் யூதாஸ்? உனக்கு ஏதாவது புறிந்ததா ” என்றார் இயேசுநாதர்.” புறிந்தது ஆண்டவரே ”. என்றான் யூதாஸ். பிறகு இந்தப்பேச்சை மாற்ற விரும்பி “ ஆண்டவரே நடந்து நடந்து எனக்கு கால்கள் வலிக்கிறது. எங்காவது நல்ல இடமாகப்பார்த்து தங்கினால் நன்றாக இருக்கும்” என்றான். “ சரி… இன்னும் அழியாமல் கடவுள் காப்பாற்றி வைத்துள்ள  சின்ன ஏதேன் தோட்டத்திற்கு செல்லலாம். வாருங்கள். அங்கே எனக்காக மூன்று ஜீவன்கள்  காத்துக்கொண்டிருகின்றார்கள்.” என்றார் இயேசுநாதர்.
 சின்ன ஏதேன் எனப்படும் எங்கேடி பட்டிணம்.
“ கடவுள் படைத்த ஏதேன் என்னும் சிங்கார வனம் இப்படித்தான் இருந்திருக்குமோ. ஆதாமும் ஏவாளும் இப்படிப்பட்ட தோட்டத்திலா வாழ்ந்தார்கள். அடடா … என்ன அழகு என்ன அழகு… இதன் உயர்ந்த மலைகளும் அதினின்று பொங்கி வழியும் நீர் வீழ்ச்சிகளும் எங்கும் பசுமையான பேரீச்சம் பழ சோலைகளும் திராட்சை பழ தோட்டங்களும் பூங்காக்களும் அடடா…இங்குள்ள மூலிகைகளும் வாசனை மரப்பிசின்களும் மனிதனின் சிந்தைகளை மயக்குவனவாக உள்ளன. இங்குள்ள மலை ஆடுகளும் நீண்ட கொம்பு உள்ள மான்களும் குரங்குகளும் அவற்றின் கூச்சல்களும் வண்டுகளும் அவற்றின் ரீங்காரமும் அழகிய பறவைகளும் அவற்றின் பாடல்களும் பாடலுக்கேற்ற தாளம்போல் அங்கு குதித்தாடும் நீர்  வீழ்ச்சிகளும் அடடா… எவ்வளவு பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டே இருக்கத்தூண்டும் அதிசய உலகம் இது.
மாமன்னர் சாலமோன் காலத்தில் அவர் தம் கருமை நிற காதல் அழகி எத்தியொப்பாவின் ஷெபா நாட்டு இளவரசியை மணமுடித்த பின்னர் இங்கேதான் தன்னுடைய வசந்த காலத்தை கழித்தார். இந்த இடத்தின் அழகை தன் மனைவியின் அழகோடு ஒப்பிட்டு அவர் பாடிய பாடல்கள்தான் உன்னத சங்கீதம் எனப்படுகின்றது.
 “ ஆம். கடவுள் படைத்திருந்த ஏதேன் தோட்டம் வார்த்தைகளால் வர்ணிக்கப்பட முடியாதிருந்தது. ஆனாலும் அதன் அழகையும் மகிமையும் மனிதன் ஒரு அளவுக்காவது புறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் இந்த எங்கேடியை விட்டு வைத்திருக்கின்றார். வாருங்கள் இங்குள்ள நீர் வீழ்ச்சியில் குளித்துவிட்டு உணவு உண்டபின் ஊருக்குள் செல்வோம்” என்றார. இந்த நீர் வீழ்ச்சி இன்றளவும் இருகின்றது. தாவீதின் நீர் வீழ்ச்சி என்று இதற்குப்பெயர். இதைப்போல இன்னும் இரண்டு நீர் வீழ்ச்சிகள் சற்று தள்ளி தள்ளி இருகின்றன.
 இந்த தாவீது நீர் வீழ்ச்சியின் அருகில்தான் தாவீது அரசர் சவுல் மன்னருக்கு பயந்து ஒளிந்து வாழ்ந்தார்.. மேலும் இந்த உயர்ந்த மலைமேல் பல விதமான குகைகள் `பல இடங்களில் உள்ளன. தற்காப்புக்காக இந்த குகைகளில் அவர் அடிக்கடி தன் வசிப்பிடங்களை மாற்றிக்கொண்டிருப்பார். இந்த குகைகளுக்கு மேல் ஏறிசெல்வது மிகவும் கடினமான காரியம். அவர் தினமும்  பல தடவைகள் இந்த குகைகளுக்கு ஏறிச்செல்ல வேண்டியிருந்ததால் அவர் எவ்வளவு வலு உள்ளவராக இருந்திருக்க வேண்டும். ஒருமுறை சவுல் மன்னர் இந்த குகை ஒன்றில் தன் படைவீரர்களுடன் தங்கியிருந்த போது தாவீது யாரும் அறியாமல் அந்த குகையினுள் பிரவேசித்து சவுல் மன்னருடைய ஆடையின் விளிம்பை கத்தரித்து எடுத்துக்கொண்டு அவரது தண்ணீர் குவளையும் எடுத்துவந்தார். இது அவரது வீரத்தையும் தைரியத்தையும் எடுத்துரைக்கின்றது. இந்த நீர் வீழ்ச்சியிலிருந்து சில கிமி தூரம் பயணித்தால் பழைய எங்கெடி பட்டிணம் வரும்.
     இயேசுநாதர் தன் சீடர்களுடன் இந்த எங்கேடிப்பட்டிணத்திற்குள் பிரவேசித்தார் .மக்கள் கூட்டம் அதிக அளவில் கூடிவிட்டது. அங்கிருந்த ஒரு தேவாலயத்தினுள் இயேசு நாதர் பிரவேசிக்க அந்த தேவாலயத்தின் குருவானவர் அபிரஹாம் அவரை வரவேற்றார்.( இந்த தேவாலயத்தின் இடிபாடுகள் இன்றளவும் உள்ளன. அவற்றுள் ஒரு அழகிய சிக்கலான ஒரு மொசைக் தரையும் நல்ல நிலையில் உள்ளது. இந்த தேவாலயம் நிச்சயமாக யேசுநாதர் போதித்த தேவாலயம் என்று சொல்ல முடியாவிட்டாலும் இது முதல் நூற்றாண்டிலிருந்து மூன்றாம் நூறாண்டிரற்குள் இருக்கலாம் என்று தொல்லியல் துறை கூறுகின்றது.)
.” ஆவலுடன் நான் ஆண்டவருக்காக காத்திருந்தேன் அவரும் என்னை கனிவாக கண்ணோக்கினர். என் ஆண்டவரே உமது யோசனைகளில் உமக்கு சமமானவன் ஒருவனுமில்லை.  நீர் பலிகளையும் காணிக்கைகளையும் விரும்புவதில்லை. ஆனால் என் செவிகளை திறந்துள்ளீர்.. மஹா சபையில் உம்மைக்குறித்து எப்போதும் பிரசங்கித்தேன். உமது பிரமாணிக்கத்தையும் இரட்சண்ய கிருபையும் பற்றி பேசினேன். ஆண்டவரே உமது கிருபைகளை என்னைவிட்டு அகற்றி விடாதேயும் என்னும் சில தாவீதரசரின் சங்கீதங்களை பாடி அவர் இயேசுநாதரை வரவேற்றார். பிறகு,” ஆண்டவரே, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எம் முன்னோர் பலர் உம்மை தரிசிக்க விரும்பியும் அவர்களாள் உம்மை காண முடியவில்லை. பூர்வீகத்தில்  எம்பிதாப்பிதாக்கள் அபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு  ஆகியோர் கூட உம்மை  பார்க்க முடியவிலை ஆனால் நாங்கள் வாழும் இக்காலத்தில் நீர் வந்திருகின்றீர். ஆகவே நானும் இந்த எங்கேடி வாசிகளும் பேறு பெற்றோம். நான் என் மெசியாவை கண்டுகொண்டேன். நீர் என்னை இப்போதே வந்துவிடு என்று கூப்பிட்டாலும் நான் உடனே வந்துவிட சித்தமாயிருகின்றேன்” என்று கூறி அழுதார்.  அங்குள்ள  மக்கள் அந்த வயதான குருவை யேசுவுக்கு அறிமுகம் செய்துவைத்தனர்.
   இயேசு நாதர் அவரை அனைத்துகொண்டு,”சர்வேசுரனுடைய நீதியுள்ள முதிய ஊழியருக்கு சமாதானம்“என்றார். பிறகு“உங்களைப்பற்றிக்கூறுங்கள்.” என்றார். அந்த முதியவர்  பெரும் உணர்ச்சிப்பிழம்பால் தத்தளிக்க அங்கிருந்த மக்கள் அவரைபற்றி கூறினர். அவர் பெயர் அபிரஹாம் எனவும் அவரது மனைவியின் பெயர் கொலம்பா என்றும் அவரது மகள் எலிசா என்றும் அவரது மகன் எலிஷா என்றும் அவர்களுடடைய மகள் சில குழந்தைகளை பெற்ற பிறகு இறந்துவிட்டாள் என்றும் அவரது மகன் பத்துவயதாக இருக்கும்போதே எங்கோ காணாமல் போய்விட்டதாகவும் இத்தனை துன்பங்களௌம் போதாது என்பதுபோல் தங்கள் பேரக்குழந்தைகளும் தங்களோடு வைத்து பராமரிப்பது அவர்களுடைய வாழ்க்கையை மிகவும் சோகத்துக்கு உள்ளாக்கியது என்றும் இந்த  துன்பங்களுக்கு மேலும் துன்பம் சேர்ப்பதாக அவள் தன் கண்களையும்  இழந்ததாகவும் அனைத்துக்கும் மேலாக இந்த துன்பங்களை தாங்க முடியாமல் அவளுக்கு பைத்தியம் பிடித்து விட்டதாகவும் இத்தனை நிலைகளிலும் அவர் கடவுளின் மீதுள்ள விசுவாசத்தினால் இங்குள்ள தேவாலயத்தில் குருவாக இருப்பதாலும் நாங்கள் அவருடைய முன்மாதிரிகையை கண்டு பாவித்து அவரது பிரசங்கங்களை கேட்டு மகிழ்வதால் வரப்போகும் மெசியாவை அவருடன்  நாங்களும் தரிசிக்க  வேண்டும் என்னும் ஆவலால் உம்மைக்காண வந்தோம் என்றும் கூறினர்.
            இயேசுநாதர் மிகுந்த சந்தோஷப்பட்டு விசுவாசத்தைப்பற்றிய ஒரு நீண்ட பிரசங்கத்தை ஆரம்பித்தார். அப்போது அந்த முதியவர்,” ஆண்டவரே உம்முடைய  போதனையை கேட்க என் மனவி கொலம்பாவுக்கு அருள் செய்ய மாட்டீரா?” என்று கேட்டார். அதற்கு இயேசுநாதர்,” தந்தையே… விசுவாசத்தோடு கேட்கப்படும் எந்த மன்றாட்டுக்கும் கர்த்தர் மும்மடங்காக சம்பாவணை அளிப்பார் என்பதை நீர் முதலில் நம்ப வேண்டும்” என்றார். பிறகு “ தந்தையே  இத்தனை துன்பங்களுக்கு மத்தியிலும் நீர் என்ன விசுவாசிப்பதன் காரணம் என்ன?” என்றார். அதற்கு அந்த முதியவர்,” ஆண்டவர் நீரே நான் விசுவாசிக்கும் மெசியா என்பதை முப்பது வருடங்களுக்கு முன்பே அறிந்திருந்தேன். அப்போது எனக்கு வயது ஐம்பது. என் மகளுக்கு திருமணம் நிச்சயமாகி இருந்தது. என் மகனுக்கு பத்துவயது. என்மனைவி கொலம்பா மிக்க அழகுள்ளவளாயும் நல்ல ஆரோக்கியமானவளாகவும் இருந்தாள். கொலம்பாவின் தாய்வழி சீதனமாகிய திராட்ச்சை தோட்டத்தில் வேலை செய்ய நான் என் மகன் எலிஷாவுடன் சென்றிருந்தேன். நீண்ட நேரம் வேலை செய்திருந்ததால் மிகவும் களைப்புற்றிருந்தபோது மாலையில் ஒரு பெரும் வாணிபர்கூட்டம் என் திராட்ச்சை தோட்டத்திற்குள் புகுந்தது.
   அவர்களுள் தலைவர் என்னிடம் வந்து,” ஐயா… நாங்கள் இந்த இரவு இங்கே தங்க வேண்டும் கூடாரம் அடிக்க இடம் தருவீர்களா? என்றார். அதற்கு நான் ,” ஐயா… ஊருக்குள் தங்குமிடங்கள் உள்ளன.” என்றேன். அவர்கள்,” இல்லை முடியாது நாங்கள் ஏரோது மன்னரால் தேடப்படுகின்றோம்.. நாங்கள் எந்த நேரத்திலும் கண்டுபிடிக்கப்பட்டால் கைது செய்யப்படுவோம். அவன் விரும்பினால் நாங்கள் எந்த இடத்திலும் வெட்டிக்கொலை செய்யப்படலாம். அது சாலையாக இருக்கலாம். அல்லது தோட்டமாக இருக்கலாம்.அவன் இராஜ்ஜியத்தில் எங்கு வேண்டுமானாலும் இது சாத்தியமாகக்கூடும்.
இந்த இடம் எங்களுக்கு பாதுகாப்பாக உள்ளதால் நாங்கள் இங்கே தங்க விரும்புகின்றோம். எங்களால் உங்களுக்கு ஏதேனும் நஷ்ட்டம் ஏற்பட்டால் அதற்கு நஸ்டஈடும் கட்டணம் ஏதும் உண்டானால் அதையும் தருவோம் “ என்றார். அதற்கு நான்,” ஐய்யா. எங்களுக்கு கட்டணமோ நஷ்ட ஈடோ எதுவும் தேவை இல்லை. முதலில் நீர் அனைவரும் யார்?. பெரிய ஏரோது ஏன் உங்களைத்தேடுகின்றார். அவருக்கு எதிராக நீங்கள் செய்த குற்றம் என்ன? என்பதற்கு விளக்கம் சொல்லுங்கள்” என்றேன்.
 அதற்கு அந்த முதலானோர் கூறியது. “ என் பெயர் கந்தப்பராசா எனப்படும் கஸ்பார். நான் தென் இந்தியாவில் தமிழ் நாட்டை சேர்ந்தவர். இவர் பல்த்தசார். இவர் மெசப்பதோமியாவில் பெர்சியாவையும், மெல்கியோர் அரேபியாவையும் சேர்ந்தவர்கள். நாங்கள் அரசர்கள் ஆயினும் வான சாஸ்த்திரிகளும் கூட. வானில் தெரிந்த வின்மீனைக்கண்டு அது உலகை ஆளப்போகும் மாபெரும் பேரரசர் பிறந்துள்ளார் எனக்கண்டு அவரை ஆராதிக்க அந்த வின்மீன் வழிகாட்டியபடி மூவரும் சேர்ந்து ஜெருசலேம் வந்தோம். ஜெருசலேம் மன்னர் பெரிய ஏறோதை சந்தித்து,” உலகையே ஆளப்போகின்ற அந்த குழந்தை எங்கே பிறந்துள்ளது” என்று கேட்டோம். ஆனால் அவர் எங்களை ,” நீங்கள் அவரை கண்டு பிடித்து ஆராதித்த பின்னர் என்னிடம் வந்து சொல்லுங்கள். நானும் அவரை பார்த்து  ஆராதிப்பேன் “ என்றான். ஆனால்  மன்னர் ஏறோதுக்கு அந்த குழந்தையை பிடிக்க வில்லை. தனக்கு போட்டியாக வந்த குழந்தையை கொல்ல நினைத்தான். எங்களை தந்திரமாக அனுப்பிவிட்டு அந்த குழந்தையை கொல்ல நினைத்தான்.
ஆனால் நாங்கள் கடவுளின் கிருபையால் அந்த குழந்தையை பெத்லஹேமில் கண்டு ஆராதித்தோம். நாங்கள் கொண்டு வந்திருந்த அன்பளிப்புகளை அவரது சார்பாக அவரது திருத்தாயார் தேவமாதாவிடம் சமர்ப்பித்து அவர்களிடம் ஆசீர்பெற்று திரும்பும் வேளையில் சம்மனசானவர் ஒருவர் எங்களிடம் அடுத்து நடக்கப்போவதைப்பற்றி பேசினார். அவர் ஏறோதின்  மனதில் குழந்தையை கொல்ல வேண்டும் என்னும் சதித்திட்டம் பற்றியும் இதிலிருந்து  தப்பிச்செல்லும் வழியையும் கூறியனார். அதன்படியே நாங்கள் இங்கு வந்துள்ளோம்” என்றனர்.
நான் அவர்களிடம்,” ஐய்யா… இந்த எங்கேடி  பட்டிணம் பேறுபெற்றது. எங்கோ தொலைவிலிருந்து ஆயிரக்கணக்கான மைல் தூரங்களைக்கடந்து வந்திருந்து எம் பெருமான் மெசியாவை கண்டு ஆராதித்த பேறு பெற்றவர்களை இந்த பட்டிணம் வரவேற்கிறது. என்னாலோ என் மகனினாலோ உம்மைப்பற்றிய எந்த தகவலையும் நாங்கள் வேறு யாவருக்கும் தெரியப்படுத்த மாட்டோம். இது என் மெசியாவின் மீது ஆணை” என்று வாக்கு கொடுத்தோம். அந்த நேரம் முதல் எனக்கும் பெத்லஹேம் சென்று உம்மை ஆராதிக்க வேண்டும் என்னும் ஆசை எழுந்தது.  என் ஆசைகளை அவர்களிடம் வெளிப்படுத்தினேன். ஆனால் அந்த முதிய அரசர் அதற்கு சம்மதிக்கவில்லை. அந்த திவ்ய குழந்தையை பற்றிய எந்த தகவலையும் அவர் எங்களிடம் கூறவில்ல. அது குழந்தை இயேசுவின் உயிருக்கு உலை வைத்ததாக ஆகிவிடும் என்பதால் அவர் மறுத்துவிட்டார். அதுமட்டுமல்ல. அடுத்து நடக்கப்போகும் சில பயங்கரங்களைப்பற்றியும் கூறினார். ஜெருசலேமிலும் யூதேயா மற்றும் சமாரியா எங்கும் ஏறோதின் ஆதிக்கத்துக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் யேசுவின் நிமித்தம் அனேக குழந்தைகள் வெட்டி கொல்லப்படுவார்கள் என்றும் பெரும் கலவரம் நடக்கப்போகின்றதென்றும் அதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படுவார்கள் என்றும் கூறினார். ஆகவே இந்த நேரத்தில் நான் அங்கு செல்வது பெரும் ஆபத்தில் முடியும். என்னப்பற்றி விசாரிக்கும் பட்சத்தில் நீர் ஏதாவது உளரிக்கொட்டினால் அது உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் இந்த அழகிய எங்கேடி பட்டிண வாசிகளுக்கும் பெரும் ஆபத்தாக முடியும் என்பதால் இயேசுவைப்பற்றிய எந்த தகவலையும் அவர் என்னிடம் கூறவில்லை. ஆகவே  நாங்கள் இங்கே வந்து தங்கியதுபற்றி யாரேனும் விசாரித்தால் இந்த அழகிய சின்ன ஏதேன் எனப்படும் எங்கேடிப்பட்டிணத்தை பார்க்க சில வியாபாரிகள் வந்து போனதாக மட்டும் கூறிவிடு” என்றார்.
ஆனால் எங்களுக்கு ஒன்று மட்டும் உறுதியாக கூறினார். மெசியாவை காணவேண்டும் என்னும் உம் ஆசை நிறைவேற்றப்படும். நீயாகப்போய் அவரை சந்திக்க வேண்டாம் . மாறாக ஒரு நாள் அவராகவே உம்மை சந்திக்க வருவார் என்னும் உறுதிதான் அது. நானும் அந்த நாளுக்காகத்தான் விசுவாசத்துடனே காத்து வந்திருகின்றேன். அந்த நாள் இந்த நாள் தான் என்றும் நான் சந்திக்க விரும்பிய மெசியா நீர் தாம் என்றும் நான் நிச்சயமாக விசுவாசிகிறேன்.” என்றார் அவர்.
    யேசுநாதர் புன்னகைத்து தம் போதனையை ஆரம்பித்தார்.” விசுவாசத்தின் பலன் மிகப்பெரியது. கடவுள் இருகின்றார் என்பதை விசுவாசிப்பதிலிருந்து விசுவாசப்பிரமாணம் துவங்குகிறது. ஆதாம் பாவியாக இருந்தாலும் கடவுள் இருகின்றார்… அவரே நம்மை சிருஸ்டித்தார்… நான் அவரை கண்டிருக்கின்றன். அவரை நான் முழுதாக அறிந்திருகின்றேன் என்ற விசுவாச சத்தியம் அவரிடமிருந்து நமக்கு கிடைத்த பரம்பரை சொத்தாக இருகின்றது. தந்தை அபிரஹாம் விசுவாசித்ததினால் அவர் அடைந்த பேறுகள் எத்துணை.. அவைகள் எப்பேர்பட்ட மகிமையானவை என்பதை நீங்கள் அறிந்திருகின்றீர்கள் என்று ஆரம்பித்து வேதாகமத்தில் பல சரித்திர நிகழ்வுகளை அவர் தெரியப்படுத்தினார்  இறுதியாக விசுவாசத்தை தம்முள் உறுதியாக பற்றிக்கொண்டிருப்பவன் ஜீவியத்திற்கான வழியை தன்னகத்தே கொண்டிருகின்றான். ஆகவே  துன்பப்படுகின்றவர்கள் என்னிடம் வாருங்கள். ஜீவியத்தை விரும்புகிறவர்கள் என்னிடம் வாருங்கள்.  எவ்வித பயமுமின்றி என்னிடம் வாருங்கள். ஏனென்றால் நானே இரக்கமும் நேசமுமாக இருக்கின்றேன்.” என்றார்.
     அப்போது கூட்டத்திலிருந்த ஒரு வயோதிக ஸ்த்ரீ,”ஆண்டவரே…நீரும் உம்மை அனுப்பினவருமானவரும் ஸ்தோத்தரிக்கப்படுவீர்களாக. உம்மை சுமந்த திருஉதிரம் சகல பெண்களுடையவும் உதிரங்களிலெல்லாம் மேலானதாக இருப்பதாக. உம்மை பெற்ற உம் தாயின் திருநாமம் போற்றப்படுவதாக “என்று உரத்த சப்த்தமாக கூவினாள். அப்போது கூட்டத்தினர்.” ஆஹா புதுமை.. கொலம்பா பார்வை பெற்றுவிட்டாள். அவளது உன்மத்தமும் குணப்படுத்தப்பட்டுவிட்டது. ஆண்டவர் பெயரால் வந்திருப்பவர் ஆசீர் பெற்றவர்” என்று முழங்கியது. பிற்பாடு கூட்டம் கலைந்தது.
  அடுத்த நாள் இயேசுநாதர்  இந்த எங்கேடி பட்டிண வாசிகளிடம் விடைபெற்றார். அவருடன் அந்த பெரியவர் வெகுதூரம் வரை அவருடன் வந்துகொண்டே இருந்தார். அவர் யேசு நாதருடன் ஏதோ கேட்க வேண்டும் என்பதுபோல் தோன்றவே யேசுநாதர்,” பெரியவரே… நீர் ஏன் இன்னும் உம்மை வருத்திக்கொள்கிறீர். நீர் சென்று வரலாமே” என்றார். அதற்கு அவர்,” ஆண்டவரே… தேவரீர் எனக்கு எவ்வளவோ செய்திருகின்றீர். ஆனாலும் எனக்கு இன்னும் ஒரு வேண்டுதல் இருகின்றது. ஏற்கனவே நான் என் தகுதிக்கும் அதிகமாக பெற்றுவிட்ட பிறகும் மேலும் மேலும் உம்மிடம் கேட்பது நியாயமாகாது அல்லவா?” என்றார். அதற்கு ஆண்டவர்,” பரவா இல்லை. உமக்கு வேண்டுவதைக்கேளும்.” என்றார். ஆண்டவரே, தேவரீர் என் மகன் எலிஷாவை குணப்படுத்த வேண்டும். என் மகன் சிறுவயதிலேயே காணாமல் போய்விட்டான் என்பது உண்மை அல்ல. அவனுக்கு தொழு நோய் கண்டிருந்ததால் சமூகம் என்னையும் என் குடும்பத்தாரையும் தள்ளி வைத்துவிடும் என பயந்தே நான் அவனை மறைத்து வைத்திருகின்றேன். தேவரீர் அவன்மீதும் என் மீதும் இரக்கம் வைக்கும்படியாகவும் மன்னிக்கும்படியாகவும் உம்மை மன்றாடுகின்றேன்” என்று மிகவும் அழுதார். அதற்கு யேசுநாதர்,” பெரியவரே அனைத்தையும் நான் அறிவேன். கடந்த முப்பது வருடங்களாக உம் உள்ளக்குமுறலை நான் கேட்டு வந்திருகின்றேன். உன் மனைவி கொலம்பாவின் கண்ணீரையும் நான் கண்டு வந்திருகின்றேன். உம் மகன் எலிஷாவின் கதறலையும் நான் அறிவேன். கேட்காத எந்த ஒரு வரமும் அருளப்படாது. ஆனால் நாம் உம் மூவர் மட்டிலும் மிகுந்த தயவாயிருகின்றோம். உம்மகனை எங்கே பாதுகாத்து வைத்திருக்கின்றீர்?”
  “ ஆண்டவரே அந்த மலையின் உச்சியில் தாவீது அரசர் வசித்து வந்தார் அல்லவா அதுபோன்ற ஒரு குகையில்.” என்றார். பெரியவர். “ சரி அவனை கூப்பிடுங்கள் நான் அவனை  பார்க்க வேண்டும் “ என்றார்.இயேசுநாதர்.
“மகனே எலிஷா… இதோ யேசுநாதர் …நம் இரட்ச்சகர் வந்திருகின்றார். வெளியே வா…” என்று பலமாக கூவினார். அவர் பலமுறை கூவி அழைத்தும் பதில் வரவில்லை. தன் மகன் ஒருக்கால் வியாதியின் காரணமாக இறந்திருப்பானோ என்று நினைத்த பெரியவர் பலமாக அழத்துவங்கினார். “ பெரியவரே … நம்பிக்கை இழக்க வேண்டாம். மீண்டும் அவனை சப்தமாக கூப்பிடுங்கள். அவன் பசி மயக்கத்தில் இருகின்றான்” என்றார். இயேசு. பெரியவர் மீண்டும் பலமாக‘ எலிஷா பதில்கொடு ‘ இங்கே யேசு நாதர் உன்னை குணப்படுத்த வந்திருகின்றார். வெளியே வா” என்று கத்தினார்.அப்போது மிகவும் பஞ்சையாகிப்போன ஒரு மனித உருவம் வெளியே வந்தது.
 குஸ்டரோகத்தின் கொடுமையாலும் பசி தாகத்தினாலும் மிகவும் சோர்ந்தும் களைத்தும் பேசக்கூட முடியாமல் தன் கைகளை நீட்டி” அப்பா… நான் மரித்துக்கொண்டிருகிறேன். இனிமேல் எனக்கு நிரந்தர விடுதலை கிடைத்துவிடும். நீங்கள் போய்வாருங்கள் அப்பா “ என மெல்லியதாக பேசினான். இவன் நிலை கண்ட யேசுநாதர் அவன்மீது மிகுந்த பரிவுகொண்டு,” எலிஷா…நீ மரிக்க அல்ல… நீ குணப்படுத்தப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். அதற்காகவே நான் உன்னிடம் வந்திருகிறேன். உன் கைகளை என்னிடம் நீட்டு “ என்றார். எலிஷா தன் கைகளை நீட்டினான். அவன் கைகளைப்பற்ற யேசுநாதரும் அவனிருக்கும் இடத்திற்கு மேலே ஏறிச்சென்று அவன் விரல் நுனியை தொட்டு,” நான் விரும்புகிறேன்…நீ குணமாகு” என்றார். அந்த நேரமே எலிஷா குணமடைந்தான். அவன் தோற்றம் ஒரு நாற்பது வயது வாலிபன்போல் மாறியது. மகன் கீழே வந்ததும் தன் வயதையும் பொருட்படுத்தாமல் அவனை கட்டி அணைத்து முத்தம் கொடுக்க ஓடினார். ஆனால் ஆண்டவர் அவரை தடுத்து ,” மகன் மீதுள்ள பாசம் வேதப்பிரமாணத்தை மீறிவிடக்கூடாது.. அவனை வேதம் சொல்லும் முறைப்படி சுத்திகரித்து பிற்பாடு அவனோடு சந்தோஷமாக இரும்” என்று அவர்களுக்கு வாழ்த்துகூறி அவர்களிடமிருந்து விடை பெற்றார்.        விசுவாசத்தை கடைபிடிப்போரின் வேண்டுதல் ஒன்றுக்கு மூன்றாய் அவர்கள் கேட்பதற்கும் மேலாக சேர்த்துக்கொடுக்கப்படும்.
 இது ஆண்டவரின் அருள் வாக்கு.
பின் குறிப்பு:  ஒரு காலத்தில் ஆதாம் ஏவாள் வாழ்ந்து வந்த ஏதேன் தோட்டதிற்கு ஈடான தோட்டமாக இருந்த அக்காலத்திய சாக்கடல் பகுதி இப்போதுவரை உப்புக்கடலாகவே இருகின்றது. ஆனால் இந்த சாக்கடலைப்பற்றிய இயேசுநாதரின் தீர்க்கதரிசனம் நம்காலத்திலேயே கூடிய விரைவில் நிறைவேறப்போகின்றது.. ஏற்கனவே செத்த கடல் எனப்படும் சாக்கடல் மேலும் அழிவுறும் நிலையில் இருகின்றது. இன்னும் சில காலத்தில் அது முற்றிலும் வறண்டுவிடும் அபாயத்தில் உள்ளதால் இதைக்காபாற்ற இஸ்ரேயேலின் தென் திசை எல்லையாகிய ஏலாத்தில் செங்கடலிலிருந்து ஒரு பெரும் கால்வாய் வெட்டி அதை இந்த சாக்கடலில் இணைப்பார்கள். அப்போது இந்த சாக்கடலுக்கு நீர் வற்றாது கிடைத்துவிடும். பல மில்லியன் டாலர் பொருட்சிலவில் இத்திட்டம் ஆரம்பிக்கப்போவதால் இஸ்றேலும் ஜோர்டானும் ஒரு ஒப்பந்தம் நிறைவேற்றி கைஎழுத்து போட்டிருகின்றார்கள். இத்திட்டம் நிறைவேறினால் சாக்கடலில் உயிரினம் பெருகும். மீன்வளம் அதிகரிக்கும். இந்த செத்த கடல் என்னும் பெயர் மாறி நல்ல கடல் என்னும் பெயர் பெறும்.அதன் எல்லை இந்த இரண்டாம் ஏதேன் எனப்படும் எங்கேடி பட்டிணம் வரை விரியும். அந்த காலம் வெகு தொலைவில் இல்லை.