Monday, December 30, 2013

" மார்செலீனோ என்னும் ஒரு சிறுவன் " " யேசுவுக்கு ரொட்டியும் ஒயினும் கொடுத்தவன் " .



      " மார்செலீனோ என்னும் ஒரு சிறுவன் "    " யேசுவுக்கு ரொட்டியும் ஒயினும் கொடுத்தவன் " .
          இத்தாலியில் ஜெனேவா நகரைச்சேர்ந்த கிரிஸ்டோபர் கொலம்பஸ் ஸ்பெயின் தேசத்திலிருந்து புறப்பட்டு கி.பி.1500களில் அமெரிக்காவைக்கண்டுபிடித்தாலும் கண்டுபிடித்தார்.
பல ஐரோப்பிய நாடுகள் கடல் வாணிபத்தை முன்னிட்டு ஒன்றன்பின் ஒன்றாய் அமெரிக்காவுக்கு படை எடுத்துச்சென்றன. முக்கியமாக ஸ்பெயின் அந்த நாட்டை ஆக்கிரமித்து அங்கு தன் ஆதிக்கத்தை நிலை நாட்டியது. அதிலும் முக்கியமாக மெஃஸிகோ நாடு அதன் காலனி நாடாய் ஆனது. இவ்விதமாக போர்த்துக்கள்,ஸ்பெயின்,ஃப்ரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து,
டச்சு போன்ற நாடுகள் தங்கள் வியாபாரத்தை பெருக்கவும், தங்கள் ஆதிக்கத்தை ஆங்காங்கே நிலைநாட்டவும் உலகின் பல பாகங்களுக்கும் சென்று அங்கிருந்த அரசுகளை வென்று  தங்கள் காலனி நாடுகளாக்கி தங்கள் வசதி வாய்ப்புகளை பெருக்கிகொண்டன. பின் அவைகள் ஆதிக்க சக்திகளாய் மாறின. தாங்கள் வென்ற அந்தந்த காலணி நாடுகளில் தங்களுடைய மதமான கிறிஸ்த்துவ மதத்தை பரப்பினர். இவ்விதமாகத்தான் உலகின் பெருவாறியான நாடுகளில் கிறிஸ்த்துவ மதம் பரவியது.
     இந்தக்காலக்கட்டங்களில் கி.பி. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஸ்பெயின் தேசம் அப்போதுதான் ஃப்ரான்ஸ் தேசத்தில் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டிருந்தது. ஆனாலும் உள்ளூரிலிருந்த பல சுயேட்ச்சை கட்சிகள் தங்களுக்கும் அரசு அங்கீகாரம் வேண்டியும் ஆட்சியில் பங்கு வேண்டியும் சமத்துவம் வேண்டியும் போர்க்கொடி தூக்கின. இப்படியாக உள்ளூரிலிருந்த
ஒரு இயக்கம் மெக்சிகர்களின் ஆதரவு பெற்று தங்களுக்கும் சுதந்திரம் வேண்டும் என்று ஆயுதம் தூக்கினர். எனவே ஸ்பெயின் அரசாங்கம் இவர்கள் எல்லோரையும் சமாளிப்பதிலேயே அதிகம் பொருளும் நேரமும் செலவிட்டது.
       இந்த காலகட்டங்களில் சாதாரண பொதுமக்களின்பாடு மிகவும் அச்சபடும் நிலைக்கு ஆளானது. எங்கு பார்த்தாலும் ஆயுதம் ஏந்தியவர்களின் அட்டகாசம் இருந்ததால் அவர்கள் பாடு கொஞ்சம் கஸ்ட்டம்தான்.. பொது மக்களின் நிலை இப்படி என்றால் துறவிகளின் பாடு மிகவும் கவலைகிடமாக இருந்தது. அவர்களை மதிப்பவர் மதித்துக்கொண்டுதான் இருந்தனர்.
மிதிப்பவர்கள் மிதித்துக்கொண்டுதான் இருந்தனர். அன்றாடம் சாப்பாட்டுக்கே அவர்கள் பொதுமக்களிடம் வாங்கி சாப்பிடும் நிலைக்கு ஆளாயினர். எப்படி இருப்பினும் அந்த துறவிகள்  தங்கள் வேலையை செய்துகொண்டும் மற்றவர்களை நல்வழி நடத்தும் பொருட்டு பூசை வைத்துக்கொண்டு மக்களுக்காகவும் தங்களுக்காகவும் அவர்கள் தங்கள் வேண்டுதலை
நிறைவேற்றி கொண்டுதான் இருந்தார்கள்.
          இப்படி இருக்கையில் ஒரு நாள் ஸ்பெயின் தேசத்தின் சாத்தா மரியா கிராமத்தில் ஒரு மலை உச்சியில் அமைந்திருந்த ஒரு மடாலயத்தில் அதிகாலையில் மணி அடித்தார் ஒரு துறவி. அவரது பெரிய சொட்டைத்தலையை வைத்தே அவர் பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையை சேர்ந்தவர் என்று கூறி விடலாம்.   ஊதுகிற சங்கை ஊதி வை...அது விடியும்போது விடியட்டும் என்பதுபோல் அவர் பாட்டிற்கு காலை மணியை நேரம் தவறாது அடித்துவிடுவார். ஆனால் அதிகாலையில் கண்விழித்து இந்த குன்றின் மீதிருந்த தேவாலயத்திற்கு யார்   வரப்போகிறார் என்ற எண்ணத்தோடு உடனே கதவை சாத்திக்கொண்டார் அவர். ஆனால் ஒரு பிறந்த பச்சிளம் குழந்தையின் அழுகுரல் அவரை தடுத்து நிறுத்தியது. தான் கேட்டது ஒரு   பச்சிளம் குழந்தையின் அழுகுரல்தான் என்பதை நிச்சயித்துக்கொள்ள மீண்டும் கதவைத்திறந்தார்..
      ஆம் ..சந்தேகமில்லை...இது ஒரு குழந்தையின் அழும் குரல் தான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டார் அவர். தேவாலயத்தின் கதவுக்கருகில் ஒரு அழகிய ஆண் குழந்தை துணிகளால் சுற்றப்பட்டு அனாதையாக விடப்பட்டிருந்தது. அதன் துணியும் அந்தக்குழந்தையின் தோற்றமும் அந்தக்குழந்தை ஒரு மெக்ஸிய தம்பதியருக்கு பிறந்திருக்கும் என தோன்றியது.  அருகில் யாரும் இல்லாததாலும் மிகுந்த பனியாலும் பசியாலும் இந்த குழந்தை அழுகின்றது என புறிந்துகொண்ட அந்த பாதிரியாருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.  ஆனாலும் இப்போதைக்கு இந்த குழந்தையை காப்பாறாவிட்டால் அது இறந்தே போய்விடும் என்று நினைத்த அந்த பாதிரியார் அதைத்தூக்கிக்கொண்டு மடாலத்தினுள் நுழைந்தார்.
" இங்கா...இங்கா " என்று குழந்தை வீறிட்டழுததால் மற்ற பாதிரியார்கள் உடனடியாக அங்கு வந்தார்கள்.." குசினி ஃபாதர்...என்ன இது...ஏது இந்த குழந்தை " என்றனர்..அதற்குள்   மடத்து தலைவரும் வந்துவிடவே அந்த சமயற்காரரான குசினி பாதிரியார் நடந்ததை விவரித்தார். மடத்து தலைவர் மிகுந்த கண்டிப்பானவர்.." யப்பா...குசினி..ஏதோ நடக்கக்கூடாதது
நடந்து விட்டது...அதைப்பற்றி இனிமேல் ஏதும் பேசிப்பயன் இல்லை...நம் மடத்து கட்டளைப்படி இங்கு பெண்களும் குழந்தைகளும் தங்கக்கூடாது..காலை உணவு முடிந்ததும்   ஊருக்குள் சென்று குழந்தை யாருடையது என்று கண்டுபிடித்து அதை உரியவரிடம் ஒப்படைத்துவிட்டு வந்து விடு...இது குருமடம்...அனாதை விடுதி அல்ல..சரிதானே போய் அவரவர்
அவரது வேலையைப்பாருங்கள் " என்றார். ஆனாலும் இந்தக்குழந்தை அங்கிருந்த எல்லா பாதிரியார்களையும் தன் அழகான சிரிப்பால் வளைத்துப்போட்டு கொண்டது.
        அந்த குசினி பாதிரியாருக்கு அந்தக்குழந்தையை பிரியவே மனம் வரவில்லை... ஆயிற்று... காலை உணவு முடிந்ததும் சில குருக்கள் இந்த குழந்தையை தூக்கிக்கொண்டு ஊருக்குள்  சென்றால் அவர்களை சுற்றி பெரும் கூட்டம் கூடி அவர்களை கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்கியது. இதில் முதன்மையாக இருந்தவர் அந்த ஊரின் மேயர்தான். " என்னப்பா...
ஒருவழியாக இந்த பிள்ளையை பெற்று எடுத்துவந்து விட்டீர்களா..அந்த புண்ணியவதி யாரோ? அவள் எந்த ஊரோ?... அவளை என்ன செய்தீர்கள்? கொண்றுவிட்டீர்களா?  இல்லை பணம் காசு கொடுத்து அனுப்பிவிட்டீர்களா ?...இந்தக்காலத்தில் யாரையுமே நம்பமுடிவில்லையப்பா " என்று பலம்கொண்டமட்டும் கத்திக்கொண்டிருந்தான். குருவானவர்களை
மட்டம்தட்டுவதென்றால் அவனுக்கு கொள்ளை இன்பம்..ஒரு பச்சிளம் குழந்தையோடு இந்த பாதிரியார்கள் ஊருக்குள் வரவே ஊரே குபார் ஆனது.. ஆனாலும் இந்த குருவானவர்களின்   மேல் பக்திகொண்ட பலர் அப்போதே மேயரைக்கண்டித்தனர்...இத்தகைய இழிவான பேச்சினால் மனம் நொந்து போன பாதிரியார்கள் அன்று முழுவதும் அதன் பெற்றோரை தேடி அது
கிடைக்காமல் போகவே கிடைத்த அன்பளிப்பு பொருளோடு தங்கள் மடாலயத்திற்கு மாலை வந்தடைந்தனர். மீண்டும் குழந்தை தங்கள் இல்லம் வந்ததில் பல பாதிரியார்களுக்கு   சந்தோஷம் தான்.
            அந்த மடாலயத்து தலைவராகிய ரெக்டர்," சகோதரர்களே...இந்த குழந்தையால் நம் தவ வாழ்வுக்கு இடையூறு வரும்போல் தெரிகிறது..எனவே கூடிய விரைவில் இக்குழந்தையின்   பெற்றோரைக்கண்டு பிடிக்க பரமன் யேசு அருள்வாறாக... மடத்து விதிகளையும் மீறி நான் இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டியதாய் இருக்கிறது....இக்குழந்தை நம்மிடையே இருக்கும் வரை
இங்கிருக்கும் ஒவ்வொரு குருவும் இக்குழந்தைக்கு தகப்பனாக நடந்துகொள்ள வேண்டுகிறேன்..ஒருவரே அதை பராமரிக்க முடியாது...நம் குசினி இக்குழந்தையை வளர்க்க பெரும்   முயற்சி எடுப்பதால் அவரே இக்குழந்தைக்கு பாதுகாப்பாளராக இருக்க நான் உத்திரவிடுகிறேன்..நமக்குள்ள சாப்பாடு பிரச்சினையால் இக்குழந்தை பாதிக்காமலிருக்கும்படி நமக்கு  இனிமேல் குடிக்க பாலோ தயிரோ தவிர்க்கப்படுகிறது ". என்றார்.
        ஒவ்வொடு நாளும் ஊருக்குள் சென்று இக்குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்க செல்வதும் அது முடியாமல் போவதும் மாலையில் திரும்பிவருவதும் இந்த குருக்களுக்கு பெரும் தோல்வியானாலும் பெரும் தொல்லையாய் இருந்ததென்னவோ உண்மைதான். இந்த குழந்தையின் காரணமாக பல குருக்களுக்கு கட்டளை ஜெபம் கூட சொல்ல முடியாமல் போனது.  பல குருக்களுக்கு இந்த குழந்தையால் ஏற்படும் கடமைதவறிய பாவங்கள் யாவும் பொதுவாக மன்னிக்கப்பட்டன. குசினி பாதிரியார் தன் வேலை கெடாமலும் அதே நேரத்தில் இந்த   குழந்தையை தாலாட்டி தூங்க வைக்கவும் சில உபாயம் செய்தார்..ஒரு நாணற்கூடையில் குழந்தையை வைத்து அதன் ஒரு முனையை தன் கையோடு கயிற்றால் கட்டிக்கொள்வார்.
அப்படியாகவே பாடிக்கொண்டே வெங்காயம் நறுக்குவார்... உருளைக்கிழங்கு சீவுவார்.. காய்கறி நறுக்குவார்... இப்படியாக அந்த தாலாட்டில் குழந்தை நன்றாக தூங்கிப்போகும்...
        ஒருநாள் அந்த நகரத்து மேயர் இந்த மடாலயம் வந்தான்...மரியாதை நிமித்தம் மடத்து தலைவர் அவரை வரவேற்றார்..." இதோபார் பெரிசு...நீ தான் இந்த மடத்து ரெக்ட்டரோ...  இந்த குழந்தையை நான் தத்து எடுத்துக்கொள்கிறேன்...என்ன சொல்லுகிறீர்...அன்பளிப்பு எவ்வளவு வேண்டும்?" என்று திமிறாகப்பேசினான். அதற்கு ரெக்டொர்," ஐய்யா...நாங்கள்
அனாதையாக வந்த இந்தக்குழந்தையை அதன் பெற்றோரிடம் சேர்க்கவே விரும்புகிறோம்...நாளைக்கு எப்போதாவது அதன் பெற்றோர் வந்து அதன் அங்க அடையாளங்களைக்கூறி  மீண்டும் தங்கள் குழந்தை வேண்டும் என்றால் எங்கள் நிலை என்னாகும் என்பதை சற்றே யோசித்துப்பாரும்..." என்றார்.. அதற்கு மேயர்," யோவ் பெரிசு...நான் என்ன கேட்கிறேன்...
நீர் என்ன பேசுகிறீர்..குழந்தையை நான் வளர்க்க விரும்புகிறேன்...மீறி எவனாவது வந்து கேட்டால் அவனை என்னிடம் அனுப்பும்... நான் பார்த்துக்கொள்கிறேன்...இல்லாவிட்டால் அந்த  தரித்திரம்பிடித்த குழந்தை செத்துப்போயிற்று என்று சொல்லி தொலைந்தது சனியன் என்று நிம்மதியாய் இருப்பீரா... அதை விட்டுவிட்டு என்னிடம் ஏதேதோ கதை அளந்துகொண்டு
இருகிறீர்கள்... எங்கேஅந்த குழந்தை ?" என்றான் மேயர்.
         மடத்து தலைவருக்கு அப்படியே கோபம் பொத்துக்கொண்டு வந்தது...ஒரு குழந்தையின்மட்டில் எவ்வளவு வர்மம்..எவ்வளவு திமிரான் பேச்சு...இவனிடம் குழந்தையை கொடுத்தால்  அவனிடம் அக்குழந்தை எப்படி வளரும்...இல்லை ...இல்லை...இவனிடம் குழந்தையை கொடுக்கக்கூடாது என்று மனதில் நினைத்துக்கொண்டு," ஐய்யா. .மேயர் அவர்களே...குழந்தையை உங்களிடம் ஒப்படைக்க முடியாது..நீங்கள் வேறுகுழந்தையை தத்து எடுத்துக்கொள்ளுங்கள்" என்றார். இதனால் பெரும் அவமானமடைந்தான் மேயர்.  கோபத்தால் தன் பற்கலை நற நற வென்றுகடித்துக்கொண்டு
  " அப்படியா சேதி.. என் அதிகாரம் எவ்வளவு என்று உங்களுக்குத்தெரியாது..எனக்கு வானளாவ அதிகாரம் உண்டு..
என் அதிகாரத்தைப்பயன்படுத்தி உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள்...உங்கள் மடாலயத்தை இழுத்து மூடிவிட்டுத்தான் இனி நான் மறுவேலை பார்ப்பேன்" என்றவனாய்   விருட்டென்று எழந்து வெளியே சென்றான்.
        மடாலயத்தலைவரின் முகத்தில் கவலை ரேகை படர்ந்தது. அந்தக்குழந்தையை என்னிடம் கொண்டுவாருங்கள் என்றார். அந்தக்குழந்தையை கையில் ஏந்திக்கொண்டு," அடேய் சின்னபைய்யா...உன்னை தகுதியானவர்களிடத்தில் மட்டுமே சேர்ப்பேனே தவிர இந்த மாதிரி அற்பனிடம் ஒருபோதும் கொடுக்க மாட்டேன்...இதனால் என் மடாலயமே காலியானாலும்   சரி... என்னை என்ன வென்று நினைத்துக்கொண்டான் அந்த அற்பன்..நான் பணம் காசுக்கு விலைபோய்விடக்கூடியவனா... அல்லது பயமுறுத்தினால் வணங்கிவிடக்கூடியவனா...  அதற்கு அவன் வேறு ஆளைப்பார்த்துக்கொள்ளட்டும்...சகோதரா குசினி...நாளைக்கு இந்த குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுப்போம்...கூடியவரை எல்லோருக்கும் நல்ல சாப்பாடு  தயார் செய்..." என்றார்... அதற்கு மற்ற சகோதர குருக்கள்,
 " கணம் ரெக்டொர் அவர்களே...உங்களுக்கு எங்கள் வாழ்த்துகளும் நன்றியும் உரித்தாகுக..எங்கே இந்த குழந்தை நமக்கு  தொல்லையாக இருகிறதே என்று மனம் மாறி அந்த மேயருக்கு கொடுத்துவிடுவீர்களோ என்று பயந்திருந்தோம்...நல்ல வேளையாக நீங்கள் அந்த முடிவை எடுக்கவில்லை " என்று   அனைவரும் நன்றியின் அடையாளமாக அவர் கையை முத்தமிட்டனர். சற்றே புன்முறுவலோடு அந்த நன்றியின் அடையாளத்தை ஏற்றுக்கொண்டார் ரெக்ட்டர் சாமியார்.
           அடுத்த நாள் அந்த குழந்தைக்கு மார்சலீனோ என்று பெயரிட்டு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. அப்போது அந்தக்குழந்தை யேசுநாதர் குழந்தையாய் இருந்தபோது அப்படித்தான்   இருந்திருப்பார் என்று எண்ணும்படி அவ்வளவு அழகாக இருந்தது. மடத்தலைவர்கூட சற்று நேரம் அந்த குழந்தையை தன் கைகளிலேயே வைத்து யாரும் பார்காதபோது அதன்
கண்ணத்தில் முத்தமிட்டுக்கொஞ்சினார்...அவரது கண்டிப்பான குணத்துக்கு நடுவிலும் இந்த குழந்தையின் மட்டில் இவ்வளவு பாசம் வைத்திருகின்றாரே என்று சக சன்னியாசிகள்  ஆச்சரியப்பட்டார்கள்...ஆயிற்று...குழந்தை இங்கு வந்து ஒரு வாரம் என்றாகி ஒரு மாதமும் ஆனது...ஆனால் அதன் தாய் தகப்பனை மட்டும் இன்னும் கண்டு பிடிக்கவே முடியவில்லை.
தினமும் குழந்தையை தூக்கிக்கொண்டு ஊருக்குள் செல்வதும் மாலையில் திரும்பவும் மடாலயத்துள் திரும்பி வருவதும் வாடிக்கையாகி விடவே தலைவர் ஒரு முடிவுக்கு வந்தார்.
         இனிமேல் குழந்தையை ஊருக்குள் தூக்கிக்கொண்டு போக வேண்டாம்... அவன் இங்கேயே வளரட்டும்..இனிமேல் யாராவது குழந்தையை தேடி வந்தால் இங்கேயே வந்து பார்த்து   கேட்கட்டும்...கடவுளின் சித்தம் எப்படி என்று பார்ப்போம்...காரணமில்லாமலா இக்குழந்தையை இங்கே கொண்டுவந்து சேர்த்திருப்பார்...இனி எல்லாம் அவன் செயல்" என்றார். .
      கடவுளின் சித்தமோ எண்னவோ தெரியவில்லை...யாரும் மடாலயம் வந்து குழந்தையை பார்க்கவும் இல்லை...தங்களுடையது என்று கேட்கவுமில்லை.இப்படியாக ஐந்து வருடங்கள்  உருண்டோடிவிட்டது. இந்த ஐந்து வருடத்துக்குள் அந்த குழந்தை மார்சலீனோ அந்த மடாலத்தில் வாழ்ந்துவந்த அத்தனை சன்னியாசிகளுக்கும் மிகுந்த செல்லப்பிள்ளை ஆனான்.
       மிகுந்த சுட்டிப்பிள்ளையாகவும் ஆனான்.. அவன் செய்யும் குறும்புகளில் தங்களை மறந்தனர் மடத்தில் வாழ்ந்த அத்தனை சாமியார்களும். இதில் ஒரு சாமியார் மிகுந்த வயதானவர்...  கடுமையான சளியினால் துன்புற்ற அவர் நடக்கவும் சக்தியற்று கட்டிலே கதி என்றானார்..நம் மார்சலீனோ அவரிடம் சென்று அவருடைய மழிக்கப்பட்ட தலையை வருடிவிட்டு,
 " தாத்தா..நான் கடவுளைக்கண்டால் உங்களுக்காக செபிப்பேன் " என்பான்.. அதற்க்கு அவர்," மகனே மார்சலீனோ..நீ எனக்காக மன்றாடவேண்டாம்...எனக்கு இந்த உலகில் வாழ   இஷ்டமே இல்லை..ஒருக்கால் நீ கடவுளைக்கண்டால் என்னை அவரிடம் சேர்த்துக்க சொல்லி கேள்" என்றார்..நம் மார்சலீனோ," தாத்தா...தாத்தா..." என்று அவர் நெஞ்சில் தன்  தலையை வைத்துக்கொள்வான்.. பெரியவருக்கு அப்படியே புளகாங்கிதமாகப்போகும். இப்படியாக ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருமாதிரியாக தன்னுடைய பாசத்தை வெளிப்படுத்துவான்
மார்சலீனோ.
      ஒருநாள் ரெக்டர் பாதிரியாருக்கு ஒரு யோசனை தோன்றியது.
  " பையனுக்கு இப்போது ஐந்து வயதாகிவிட்டது...இனிமேல் அவனை யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்.  ஊருக்குள் சென்று ஒரு நல்ல குடும்பமாகப்பார்த்து அவர்களிடம் நம் மார்சலீனோவை ஒப்படைத்துவிட்டால் அவனுக்கு தாயின் அரவணைப்பு கிடைக்கும். அவனோடு ஒத்த பிள்ளைகளோடு வளர்வது அவனுக்கும் நலமாக இருக்கும்...நீங்கள் என்ன நினைகிறீர்கள்" என்றார். எலோருக்கும் இது ஒரு நல்ல யோசனையாகப்படவே மீண்டும் ஒரு நல்ல தாய் தந்தை
தேடும்படலம் ஆரம்பித்தனர். ஊருக்குள் அப்போது ஏதோ திருவிழா...அதற்காக வேடிக்கை காட்டி பிழைக்கும் கழைக்கூத்தாடிகளும் சர்க்கஸ் கூடாரங்களும் ஊரில் நிறைந்திருந்தன.
        நம் மார்சலீனோ அடுக்கிவைத்திருந்த பழக்கூடைகளில் அடியிலிருந்து ஒன்றை உறுவினான்.. அது என்னடாவென்றால் எல்லா பழங்களும் சரிந்து சாலையில் விழுந்து   உருண்டோடிவிட்டன.. பழக்கடைக்காரன் அதற்க்கு நஸ்ட்ட ஈடு கேட்டான்..ஆனால் பாதிரியாரிடம் சுத்தமாக காசே இல்லை... அவனிடமிருந்து மார்சலீனோவை   விடுவித்து வருவதற்குள் அந்த பாதிரியாருக்கு போதும் போதும் என்றாகி விட்டது. மறு நாள் இதேபோல சர்க்கஸ் கூடாரங்களில் அடைக்கப்பட்டிருந்த கொடிய விலங்குகளை திறந்து
விட்டான் மார்சலீனோ. பாவம் அவனுக்கு என்னதெரியும்..அதன் பின் விளைவுகள் மிகுந்த மோசமான விளைவுகளை ஏற்படுத்தின. நல்ல வேளையாக அவனால் விடுவிக்கப்பட்ட  அந்த கொடிய விலங்குகள் ஊருக்கும் போகும்முன்பே பிடிக்கப்பட்டு மீண்டும் கூண்டில் அடைக்கப்பட்டன.. இந்த சம்பவத்தை தன் ஆதாயத்துக்காக பயன்படுத்தினான் அந்த  நகர மேயர்..இந்த பையன் இந்த மலையில் வாழும் சாமியார்களுக்கு முறைதவறிப்பிரந்த பையன்..அவனுடன் இந்த மடாலயத்தை சேர்ந்த துறவிகள் அனைவரும்   வெளியேற்றப்படவேண்டும் என்று அரசாங்கத்திடம் நன்றாகப்போட்டுக்கொடுத்தான்... ஆனால் கடவுள் நம் மார்சலீனோவுடன் இருந்ததால் அவனது கோரிக்கை   நிராகரிக்கப்பட்டது. இதனால் அந்த நகர மேயர் அரசாங்கத்திடம் கெட்ட பெயர் சம்பாரித்துக்கொண்டார்... இதனால் அந்தப்பையன் மட்டிலும் அந்த மடாலயத்தின் அனைத்து சந்நியாசிகள்
பேரிலும் அவனுக்கு துவேஷம் அதிகமாயிற்று. இவர்களை இன்னும் நன்றாக மாட்டிவிட சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தான்.
       ஒரு இரண்டு நாள் கழித்து ஒரு பாதிரியார் நகரில் ஒரு பெரிய பணக்காரர் கொல்லுப்பட்டரை வைத்திருகிறார்...நமக்கு அடிக்கடி உதவிகள் பல செய்திருகிறார்...நல்ல கிறிஸ்த்தவன்.  நல்ல குடும்பம்.. நல்ல பையனாக தங்களுக்கு வேண்டும் என்று கேட்கிறார்கள்...நம் மார்சலீனோவை அங்கு கொண்டுபோய்விடலாமா என்றார். ரெக்டரும் சம்மதிக்கவே
நம் மார்சலீனோவை அழைத்துக்கொண்டு அந்த கொல்லுப்பட்டரைகாரனிடம் சென்றார்கள்...இந்த பையன் மார்சலீனோவைக்கண்ட மாத்திரத்தில் கொல்லுப்பட்டரைகாரனுக்கு மிகவும்  பிடித்துப்போயிற்று. ஃபாதர்...இவனை இப்படியே என்னிடம் விட்டுவிட்டுப்போய்விடுங்கள்...கவலையை விடுங்கள்... அவனை நான் பார்த்துக்கொள்கிறேன்...நான் அவனை ராஜா மாதிரி
வளர்ப்பேன் " என்றான்...பாதரும் சரி நம் மார்சலீனோவுக்கு நல்ல புகளிடம் கிடைத்துவிட்டது என்று சந்தோஷப்பட்டுக்கொண்டார்.. அப்போது அந்த கொல்லுப்பட்டரைக்காரன் மனைவி  பாதிரியாரை தனியே அழைத்து," பாதர் ..நான் சொல்லுகிறேன் என்று தப்பாக நினைக்க வேண்டாம்... தயவு செய்து பிள்ளையை உங்களுடனே கூட்டிச்செல்லுங்கள்..  பையனைப்பார்த்தால் அழகும் பண்பும் உள்ளவனாகத்தெரிகிறான்...அவன் இங்கே இருந்தால் கெட்டுப்போவான்... என் கணவனுக்கு பத்து பிள்ளைகள்...ஊருக்கு பெரும்தனக்காரணாக  காட்டிக்கொள்லும் இவர் உண்மையில் பெரும் கஞ்சன்... இங்கு வேலை செய்யும் என் பிள்ளைகளுக்கே பசிக்கு சோறு கிடைக்காது..இதில் உம்முடைய வளர்ப்பு பிள்ளையும் சேர்ந்தால்
அதுவும் பத்தோடு பதினொன்றாகத்தான் வளரும். சோறுபோடாமலேயே வேலை வாங்கியே பிள்ளையை கொண்றுவிடுவான்...இதெல்லாம் உமக்குத்தேவையா...நான் சொல்ல   வேண்டியதை சொல்லிவிட்டேன்...பிறகு உம் இஷ்ட்டம்" என்றாள் அந்தப்புண்ணியவதி.
   " நல்ல வேளை ...இந்தப்பெண் உண்மையை சொன்னாள் " என்று தம் மடாலயம் திரும்பினார்.  ஆனால் வழியிலேயே நம் மேயர் என்னும் சனியன் அவரை எதிர்பட்டான்...அதற்குள்ளாக பாதிரியாருக்கு தெரிந்த ஒருவர் அவரைக்கூப்பிடவே அவர் அவனுடன் சென்றார். இந்த
சந்தர்ப்பத்தில் தரையிலிருந்த சேற்றை தன் கோட்டில் தடவிக்கொண்டு பையனின் கையிலும் சேற்றை தடவிவிட்டார் மேயர். அருகிலிருந்த காவல் நிலயத்தில் இவ்வாறாக புகார்   செய்தான் மேயர்." இந்த முறைதவறிப்பிறந்த பையன் மஹா துஷ்ட்டன்...பெரும் ரௌடியாக வளர்கிறான். இப்போதுகூட பாருங்கள் இவனிடம் சற்று நேரம் பேசலாம் என்று வந்த என்னிடம்
சகதியால் உருண்டை செய்து என் கோட்டின்மீது எறிந்துவிட்டான்..ஊருக்குள் பெரிய மனிதனாக வரும் என்னை எப்படி அவமானப்படுத்திவிட்டான் பாருங்கள்.. சந்தேகமிருந்தால்  அவன் கையைப்பாருங்கள்.. எவ்வளவு சகதி அவனிடம் இருகிறது பாருங்கள் என்றான். பெரிய மனிதன் பேச்சு எடுபட்டது. அப்போது அங்கு வந்த பாதிரியார் கையில் சகதி எடுத்து
அவரது அங்கியின்மேல் பூசிக்கொண்டார்..இவர் நடந்ததை நேரில் பார்த்துவிட்டர் என்று அறிந்த மேயர் பேசாமல் வழக்கை வாபஸ் பெற்றுவிட்டார்.
     இந்தப்பையன் மார்சலீனாவுடனும்   இந்தப்பாதிரியார்களிடமும் எப்போதெல்லாம் மோதுகிறோ அப்போதெல்லாம் நாம் அவமானப்பட்டுப்போகிறோம்..இதை இப்படியே விட்டுவிடக்கூடாது..மீண்டும் ஒரு நல்ல சந்தர்ப்பம் நமக்கு  வராமலா போய்விடும் ..அப்போது பார்த்துக்கொள்லலாம்...அடே மார்சலீனோ என்னை யார் என்று நினைத்துக்கொண்டாய்...உன்னைகொல்லாமல் விடமாட்டேன்டா " என்று மனதுக்குள் கருவிக்கொண்டான் மேயர்.
         " நம் பையன் மார்சலீனோவை நாம் நம்முடனே வளர்ப்பது அவனது வளர்ச்சிக்கு இடையூறாகப்போகும்..இவனை வளர்கத்தான் ஆள் கிடைக்கவில்லை.. இவனுக்கு தோழனாக   இருக்கும்படியாக ஏதாவது ஒரு பையனைப்பாருங்கள்.அவனுடன் இவன் காலைமுதல் மாலை வரை இருக்கட்டும் மாலையில் நாம் வைத்துக்கொள்வோம்... அப்படிப்பட்ட ஒரு பையனும்   தாயும் இருக்கும்படியான ஒரு குடும்பத்தை பாருங்கள் " என்றார் ரெக்டர் பாதிரியார். இதன்படி ஒரு குடும்பம் அவர்கள் பார்வையில் பட்டது. அது ஒரு மெக்சியக்குடும்பம். மெக்சிய  நாட்டிலிருந்து இந்த ஸ்பெயின் தேசத்திற்கு வந்தேறிய பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டமாக சுமார் 100 ஆண்டுகளாக இங்கே வாழ்ந்து வந்தார்கள்..அவர்களும் தங்களது
கோரிக்கைகளுக்கு அவ்வப்போது துப்பாக்கி தூக்குவதுண்டு. ஆனால் ஸ்பெயின் ராணுவம் அவர்களை அடக்கிவிடும்..இப்படியாக இவர்களின் தலைவன் டையஸ் எனப்பட்டவன்   ஸ்பெயின் ராணுவத்துக்கு பெரும் தலைவலியாக இருந்தான்..இவனை உயிரோடு பிடிக்கும் முயற்ச்சியில் பலமுறை ராணுவம் தோல்விகண்டது. இந்த மெக்சிய கலஹக்காரணாகிய
டையஸுக்கு ஒரு மனைவியும் நம் மார்சலீனோவை ஒத்த ஒரு பையனும் இருந்தார்கள். எனவே பாதிரியார் ரோட்ரிக்ஸ் நம் மார்சலீனோவை அழைத்துக்கொண்டு டயசின் மனைவியிடம்   வந்தார்." பாதர் ரோட்ரிக்ஸ் தங்கள் வரவு நல் வரவு ஆகுக.. என்ன விஷேஷம்" என்றாள் டயசின் மனைவி.
" அம்மணி... நம் மார்சலீனொவுக்கு இப்போது தாய் அன்பு தேவையாய் இருகின்றது. மேலும் அவனை ஒத்த பையனோடு பழகுவது அவனது முன்னேற்றத்துக்கு உதவியாக இருக்கும்.  இவனை உன்னுடன் காலை முதல் மாலை வரை வைத்துக்கொள்...மாலையில் நாங்கள் வந்து அவனை அழைத்துச்செல்கிறோம்...நீ மாட்டேன் என்று சொல்லமாட்டாய் என்று
நினைகிறேன்" என்றார். அந்தப்பெண்," ஃபாதர்..நம் மர்சலீனோவை நாங்கள் வைத்துக்கொள்வது எங்களுக்கு ஒன்றும் கஷ்டமல்ல...ஆனால் எங்கள் நிலையே நித்திய கண்டம்   பூர்ணஆயுசு என்பதுபோல் உள்ளதே" என்றாள். அதற்கு அவர் " அம்மணி..நடப்பது நடக்கட்டும்..முதலில் பையன் உங்களுடன் பழகட்டும்..பிறகு பார்க்கலாம்" என்றார். இப்படியாக  இரண்டு சுட்டிப்பசங்களும் அடித்த லூட்டி காண்பவர் யாவருக்கும் நகைப்பாக இருக்கும்..கள்ளம் கபடமற்ற பிள்ளைகள் எது செய்தாலும் அவை அழகுதான்..அவை ரசிப்பதற்கு
ஏற்றதாகும். இந்த இரண்டு வாண்டுகளும் மடாலயத்தில் விளையாடுவார்கள்..அப்போது ஃபதெர் மாலோ என்பவர் தம்பி உங்களுக்கு எப்படி வேட்டையாடுவது என்று சொல்லித்தருவேன்   என்று கவன் விளையாட்டை சொல்லித்தந்தார். அதன்படி மார்சலீனோ கவனில் ஒரு கல்லை வைத்து வேகமாக சுழற்றியடித்தான்.
  அப்போது அந்த குசினி பாதர் எதையோ குனிந்து  எடுத்துக்கொண்டிருந்தார். கவனிலிருந்து வேகமாக வந்த கல் குசினி பாதரின் பின்பாகத்தை நன்றாகப்பதம் பார்த்துவிட்டது. அவவளவுதான்.. இந்த பயல்கள் இருவரும் பிடித்தனர் ஓட்டம். இருவரும் ஓடி ஒளிய மாடிப்படி ஏறினார்கள். அப்போது குசினி பாதிரியார் " டேய் பசங்களா...நில்லுங்கள்... ஓடாதீர்காள்.. என்பேச்சை கேளுங்கள்" என்றார்.அவர்கள் இருவரும்  மாடிப்படியிலேயே நின்றார்கள்.  ஒருவழியாக இவர்களிடம் வந்த குசினி பாதர்," டேய் பசங்களா...மேல் மாடிக்கு போகாதீர்கள்..அங்கே பூச்சாண்டி இருகிறான்..அவன் சின்னப்பசங்கள்
யாராவது வந்தால் அவர்களைப்பிடித்து சாக்கில் போட்டுக்கட்டி தூக்கிக்கொண்டு போய்விடுவான்...தெரிஞ்சதா " என்றார்..அந்த இருவரும் அபோதைக்கு பூச்சாஞ்ண்டிக்கு பயந்து கொண்டு மேலே போய் விளையாட மாட்டோம் என்றார்கள்.
" மார்சலீனோ...உனக்கு ஓனான் பிடிக்கத்தெரியுமா...உடும்பு பிடிக்கத்தெரியுமா...இல்லை என்றால் சொல் .நான் உனக்கு அவற்றை எப்படிப்பிடிப்பது என்று சொல்லித்தருவேன்" என்றான் ஹென்றி என்னும் அவன் நண்பன்..இப்படியாக தினம் ஒரு பூச்சியாய் பிடிக்ககற்று கொண்டான் மார்செலீனோ.. ஆனால் விளையாட்டு வினை ஆகியது. அது விபரீதத்தில்
முடிந்தது.. அன்று ஒரு நாள் காலையில் ஃபாதெர் மாலோ இவனை கொண்டு வந்து ஹென்றியுடன் விளையாடவிட்டுவிட்டு ஹென்றியின் தாயாருடன் பேசிக்கொண்டிருந்தார்.
         அப்போது மார்செலீனோ ஒரு பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததை கவனித்துவிட்டார்..." மார்சலீனோ... வேண்டாம்... அது பாம்பு...அதை பிடிக்க முயற்சி செய்யாதே... அது  விஷமுள்ள பாம்பு...அதை பிடிக்காதே" என்று கத்திக்கொண்டு ஓடி வருவதற்குள் விதி வேலை செய்து விட்டது.. அந்தக்கட்டு விரியன் மார்செலீனோவை காலில் நன்றாகக்கடித்து
விட்டது.காலில் ரத்தம் கொட்டியது. அதன் வேதனையில் மார்சலீனோ அலறிய அலறல் அந்த கிராமத்தையே உலுக்கிவிட்டது. பாதர் மாலோ நம் மார்சலீனோவை அப்படியே அலாக்காக   தூக்கிக்கொண்டு மடாலயத்துக்கு ஓடிவந்தார். மடாலயத்திலிருந்த அத்தனை குருக்களும் கையை பிசைந்துகொண்டனர்.. ஏதேதோ முதலுதவி செய்தனர்..யார் முகத்திலும் ஈ
ஆடவில்லை.. எல்லோர் முகத்திலும் கவலை ரேகை படர்ந்தது. அப்போது மூர்ச்சை ஆன மார்சலீனோ இரவு விளக்கு வைக்கும்வரை கண் திறக்கவே இல்லை..இந்த இராப்பொழுதில் ஹென்றியின் தாயாரும் அவள் சகோதரியும் ஹென்றியுடன் வந்தனர். மார்சலீனுக்கு சாமியார்கள் செய்த முதல் உதவியால் திருப்தியடையாத அவர்கள் தங்கள்   மெக்சிகோ நாட்டில் செய்யும் பாம்புகடி வைத்தியம் செய்தனர். அதன்படி நன்றாக பழுக்க காய்ச்சிய ஒரு கத்தியால் பாம்பு கடித்த கடிவாயில் இந்த கத்தியால் நன்றாக சூடு போட்டு
விஷத்தை முறித்து மேலும் பல பச்சிலைகள் வைத்துக்கட்டினார்கள்..இரவு மணி பத்து ஆகும்போது மார்சலீனுக்கு நினைவு திரும்பியது. அப்போது ஃபாதர் ரோட்ரிக்ஸ் " அம்மணி..  மடாலய விதிப்படி பெண்கள் இங்கே தங்கக்கூடாது. மேலும் மார்சலீனுக்கு நினைவு திரும்பிவிட்டது...இனிமேல் அவனுக்கு உயிருக்கு அபாயம் இல்லை...நீங்கள் இப்போது சென்று  நாளை வரலாமே" என்றார். ஹென்றியின் தாயாரும் அவள் சகோதரியும் மடாலயத்திலிருந்து திரும்பிவந்துகொண்டிருந்ததை மறைந்துகொண்டிருந்த பல ராணுவ சிப்பாய்கள்  கவனிக்கத்தவறவில்லை.
       ஒருவன்," கேப்டன்... சத்தம்போடாமல் இந்த மூன்று பேரையும் முடித்துவிடலாமா?" என்றான். " இல்லை...இவர்கள் கதையை முடிப்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை..நமக்கு வேண்டியது அவர்கள் தலைவன் டியஸ் தான்..இப்போது இவர்களை சுட்டால் அந்த சப்த்தத்தில்   அவர்கள் உஷார் ஆகிவிடுவார்கள்...இவர்களைப்பின் தொடர்ந்து செல்வோம்...அங்கு டயஸ் இருந்தால் அவனை சுட்டுப்பிடிப்போம் . அவன் மனைவியையோ அவன் பையனையோ   சுடுவதில் எனக்கு விருப்பம் இல்லை" என்றான் கேப்டன். அதன்படி பெண்கள் இரண்டுபேரையும் சப்த்தம்போடாமல் பின் தொடர்ந்தது ராணுவம்.. இந்த இரண்டு பெண்களும் அவர்தம் குடும்பத்தோடு சேர்ந்ததும் ஆரம்பித்தது போர். இந்த நிலையில் டயசின் ஆட்களும் பதிலுக்கு திரும்ப தாக்கினர். சிறுவன் ஹென்றியை தூக்கிக்கொண்டு ஓடினாள் அவன் தாயார்..
ஆனால் எங்கிருந்தோ பாய்ந்து வந்த ஒரு குண்டு ஹென்றியின் முதுகில் பாய்ந்தது. சற்று நேரத்தில் வாடிய ரோஜாவாக அவன் தாயின் கரத்திலேயே மரித்துப்போனான் ஹென்றி.
       தன்மகன் ஹென்றியின் மரணம் பற்றி அறியவந்தான் டயஸ்...துக்கமும் ஆத்திரமும் அவன் நெஞ்சை அடைத்தது..ஒரு வழியாக தன்னை தேற்றிக்கொண்டு.தன் சகாக்கள் துணையுடன் ராணுவ கேப்டனை சிறை பிடித்தான் டையஸ்.. பிறகு ஒரு வாரம் யார் கண்னிலும் காணாமல் மறைந்து போயினர் டயஸும் அவன் ஆட்களும்.
   இந்த ஒரு வார காலத்தில் நம் மர்சலீனோ நன்றாகத்தேறிவிட்டான். மீண்டும் பழையபடி விளையாட ஆரம்பித்தான்.. அவன் கண்கள் அவன் தோழன் ஹென்றியைத்தேடின. அந்த மடாலயம் இருந்த மலையின் சரிவுகளில் சோளம் நன்றாக விளைந்திருந்தது. அங்கு வந்தான் நம் மார்சலீனோ. அங்கு அவன் கண்ட காட்சி அவனை திடுக்கிட வைத்தது.
அந்த சோளக்கொல்லையில் ஒரு வாரகாலமாக யார் கண்ணிலும் படாமலிருந்த டயஸ் தன் வீரர்களுடனும் கைதியாக்கி கொண்டு வரப்பட்டிருந்த ராணுவ கேட்டனுடன் அங்கு தோன்றினான். ராணுவ கேப்படனை நிற்க வைத்து சுட்டான்..இதைப்பார்த்துவிட்டான் நம் மார்சலீனோ... ஒரு மெக்சிகன் " டயஸ்..நீ செய்த காரியத்தை ஒரு சிறுவன் பார்த்துவிட்டான்.  அவனை தப்பிக்கவிடாதே.சுடு அவனை" என்றான்..மார்சலீன் யார் என்று டயஸுக்கு தெரியும் ஆதலால் அவனுக்கு அவனை சுட மனது வரவில்லை. " இல்லை... அவன் சிறுவன்
என்று நினைக்காதே... அவனால் உனக்கும் நமக்கும் பின்னால் பிரச்சனை வரும்...நீ செய்த கொலைக்கு அவன் நேரடி சாட்சி...நாளைக்கு கோர்ட்... வம்பு.. வழக்கு என்று வரும் . அப்போது இந்த சிறுவனின் சாட்சியம் எடுபடும்...அப்போது உன் நிலையும் நம் நிலையும் என்னவாகும் என்று சற்றே எண்னிப்பார்...சுடு அவனை...சுடு அவனை" என்றான்.
            அப்போது சற்றுமுன்னர் கேட்ட அந்த துப்பாக்கி சப்தம் அந்த மலையின்மீதிருந்த மடாலயத்திலும் கேட்டது. மதிய உணவுக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அந்த   மடாலய குருக்கள்," அது என்ன துப்பாக்கி சப்தம்... ஐய்யோ...நம் மார்சலீன் எங்கே?" என்று அலறியபடி மடலாயத்தைவிட்டு வெளியே வந்தார்கள்..இவர்கள் வருவதைக்கண்ட
மெக்சிகோ கலவரக்காரர்கள் ஓடிப்போனார்கள். மர்சலீனோ மடாலயத்துள் கொண்டு செல்லப்பட்டான்.
           அடுத்த நாளே அந்த மடாலயத்துள் மிகுந்த கோபாவேசத்தோடு பிரவேசித்தான் அந்த மெக்சிகனான டயஸ்.  டமால்..டுமீல் என்னும் துப்பாக்கி வேட்டுச்சத்தங்கள் அவன் வருகையை  தெரியப்படுத்தின. இதனால் அந்த மடாலயமே கிடுகிடுத்து கலங்கியது.. இவன் வருகை எத்தகையதோ என்று கலங்கினார் ரெக்ட்டர்.
" பாதர் எங்கே அந்த பொடியன் மார்சலீனோ... அவனை நான் கொல்லாமல் விடமேட்டேன்" என்றான். அதற்குள் அவன்மனைவிஅவனைக்கட்டிக்கொண்டு," அன்பரே .. வேண்டாம் இந்தக்கொலை வெறி...நாம் நம் பையன் ஹென்றியை இழந்தது போதும்..மார்சலெனோவும் நம் மகன் போலத்தான். நீர் செய்த கொலைக்கு இந்த மார்சலீனோ நேரடி சாட்சி என்பதற்காக அவனைக்கொல்ல நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்...திரும்பிப்போ.." என்றாள்.
   அப்படியே வெலவெலத்துப்போனார் அந்த மடத்து தலைவர். " மகனே டயஸ்.. வேண்டாம்... மார்சலெனோவை விட்டுவிடு...அவன் உயிருள்ள ஒரு சம்மனசு..அவனால் உனக்கு யாதொரு துன்பமும் நேராதபடி நான் பார்த்துக்கொள்கிறன்..என்னை நம்பு...அவனை நான் எங்காவது கண்காணாத இடத்துக்கு அனுப்பிவிடுகிறேன்" என்றார்.      இத்தகைய பதிலால் திருப்தியுற்ற டயஸ் " பாதர் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.. எனக்கு வேறு வழி தெரியவில்லை. அவனை எங்காவது கண்காணாத இடத்திற்கு அழைத்துச்சென்று விடுங்கள்...மீண்டும் இந்த ஊரில் நான் அவனைப்பார்த்தால் நான் அவனைக்கொல்வது உறுதி " என்றான்.
        அந்த சபைத்தலைவருக்கு அந்த நேரத்தில் மார்சலெனோவை காப்பாற்றிவிட்டோம் என்பதில் மகிழ்ச்சிதானே தவிர அவனை எங்கே அனுப்புவது என்ற எண்ணம் வந்ததும் அவருக்கு கவலை பிடித்துக்கொண்டது. " அடக்கடவுளே ஒரு ஐந்து வயது அனாதைப்பையனுக்கு இவ்வளவு எதிர்ப்பா... ஆண்டவரே இவன் அப்படி என்ன பாவம் பண்ணினான்..அன்று அந்த
மேயர் வந்து இவனை கொல்லாமல் விடமாட்டேன் என்றான்... இன்று இந்த டயஸ் வந்து இவனைக்கொல்லாமல் விடமாட்டேன் என்கிறான்.. இனி நான் என்ன செய்ய வேண்டும்.   யேசுவே நம் மார்சலீனோவுக்கு ஒரு நல்ல வழி காட்டமாட்டீரா... அவன் மேல் இரக்கம் வையும் ஸ்வாமி " என்று மன்றாடினார்.
          இந்த நிகழ்சிக்குப்பின் இரண்டு நாட்களுக்கு மார்செலீனை வெளியே கொண்டு செல்ல மடத்து ரெக்டர் அனுமதிக்க வில்லை. ஒரு ஐந்து வயதுப்பையனை எவ்வளவு நேரம்தான்   அடக்கி வைக்க முடியும். இந்த நாட்களிள் மார்செலினீன் மனது குறுகுறுக்க ஆரம்பித்தது. மேல் மாடியில் என்ன இருக்கிறது...அங்கே யாரோ பூச்சாண்டி இருகின்றான் என்று குசினி
பாதர் சொல்லி இருகிறாறே...போய்தான் பார்ப்போம் என்று மாடிப்படி ஏறினான். ஒரு நாலு படிதான் ஏறி இருப்பான் ..அதற்குள்ளாக இந்த வயதான தாத்தா சாமியாருக்கு மூச்சுவாங்கவே   துணைக்கு யாரேனும் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவறாய் தன்னிடம் கொடுக்கப்பட்டிருந்த ஊதலை ஊதினார். உடனே பதறியடித்து ஓடிவந்தான் மார்செலீனோ..
அவரை மார்பில் தடிவிகொடுத்து அவரது பெரிய சொட்டையில் முத்தமிட்டு அவரை அமைதிப்படுத்தினான்..பிறகு மீண்டும் மாடிப்படி ஏறினான்..மாடியில் உள்ளே ஒரு அறை உடைந்த கதவோடு இருந்தது. அந்தக்கதவையும் திறந்துகொண்டு உள்ளே சென்று பார்த்தால் அங்கே பழைய தட்டுமுட்டு சாமாங்களும் விவசாய கருவிகளும் இருந்தன. போதாததற்கு ஒரு
பெரும் பாடுபட்ட சிலுவையும் அங்கே நிற்கவைக்கப்பட்டிருந்தது. அந்த சிலுவையிலிருந்த யேசுவைக்கண்டமாத்திரத்தில் மார்செலீனோ பயந்து அதோ பூச்சாண்டி என்று அலறிக்கொண்டு தட தடவென்று கீழே ஓடிவந்து தன்னுடைய அறையில் படுத்துக்கொண்டான்.. ஆனாலும் அந்த பூச்சாண்டியின் முகம் அவனை பயமுறுத்தியதாக தெரியவில்லை.
ஏதோ ஒரு பயம்... அவ்வளவுதான் என்று தன்னைதேற்றிக்கொண்டான் மார்செலீனோ.
      மறுநாள் எல்ல பாதிரியார்களும் அவரவர்கள் வேலையைபார்க்கப்போனபின்பு நம் மார்சலெனோ மெதுவாக மாடிப்படி ஏறினான்.. ஒரு இரண்டு படி ஏறுவதற்குள் அந்த வயதான சாமியார்
அவனைப்பார்த்து," மார்சலீனோ...மார்சலீனோ" என்றழைத்தார். ஆனால் அவனோ அவரை பொருட்ப்படுத்தாமல் மேலே சென்றுவிட்டான். இதக்கண்ட அந்த சாமியார்," மார்சேனோ   இப்போது முன்புபோல் இல்லை...ஊம் ..கிழவன் பேச்சு கிண்ணாரத்துக்கு ஆகுமா என்று சும்மாவா சொல்லி இருகிறார்கள்" என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு மீண்டும் இருமுறை இருமிவிட்டு தூங்கிப்போனார்.
          மேல் மாடிக்கு போகும் முன்பாக அதன் முன் அறையில் இருந்த ஒரு பெரும் கோலை எடுத்துக்கொண்டு மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு," அடே பூச்சாண்டி... தைரியம் இருந்தால் என் முன்னே வா.." என்றான். ஆனால் அங்கிருந்து எந்த சப்தமோ பூச்சாண்டியோ வரவில்லை. அவனிடமிருந்த கோலால் மேலே இருந்த ஜன்னலை திறந்துவிட்டுப்பர்த்தால்  சிலுவையில் யேசுநாதரின் முழு உருவமும் தெரிந்தது.. அவரது ஒட்டிய வயிறைப்பார்த்த நம் மார்சலெனோ," அடடா...இந்த மனிதருக்கு ரொம்ப பசி போலிருகிறது.அதுதான் பேச மாட்டேன் என்கிறான்" என்று நினைத்து," ஐய்யா...பூச்சாண்டி... அங்கேயே இரும்...நான் உனக்கு சாப்பிட எதாவது கொண்டுவருகிறேன் " என்றவனாய் கீழே இறங்கி வந்து குசினியில்  [ சமையல் அறையில்] இருந்த ஒரு ரொட்டியையும் ஒரு தம்லர் நிறைய ஒயினையும் எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்றான். கதவை சாத்திக்கொண்டு,"ஐய்யா பூச்சாண்டி... இதோ ரொட்டியும் ஒயினும் கொண்டுவந்திருக்கிறேன்... இறங்கி வந்து சாப்பிடும்" என்றான். அப்போது அந்த பேரதிசயம் நடந்தது.
           அதுவரை அந்த பழைய சிலுவையில் சிலையாக இருந்த யேசுநாதர் இப்போது உயிரோடு வந்தார். அந்த அறை முழுவதும் பரலோக காந்தியால் நிறைந்தது. அந்த காட்சியைக்கண்ட மார்சலெனோ திகைத்து நின்றான். அவன் முகமும் கூட பிரகாசமாக மாறியது. சிலையாக இருந்தவர் இப்போது உயிரோடு என்றால் அந்த சிறுவன் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே
இல்லை.." ஐய்யா... உம் பெயர் என்ன... பூச்சாண்டியா?" என்றான். அதற்கு யேசுநாதர்," இல்லையப்பா... என் பெயர் பூச்சாண்டி இல்லை" என்றார்.. " அப்படியானால் உம் பெயர்தான் என்ன?" என்றான் மார்சலெனோ..அதற்கு யேசுநாதர்," என்னை எல்லோரும் இம்மானுவேல் என்றழைப்பார்கள் " என்றார்.." சரி ஐய்யா..உம்மை இனிமேல் நானும் இம்மானுவேல் என்றே
கூப்பிடவா?" என்றான்." சரி அப்படியே கூப்பிடு..எனக்கு குழந்தைகள் என்றால் கொள்ளைபிரியம்.." என்றார் யேசுநாதர்.
" சரி இம்மானுவேல்...உனக்கு பசியாக இருக்கும்..இப்போது சாப்பிடு..என்னை குசினி பாதர் தேடுவார்.. அவருக்கு என்மீது பாசம் அதிகம்" என்றான் மார்சலீன்.இதற்குள் யேசுநாதர் நம்   மர்சலெனோ கொண்டுவந்த ரொட்டியையும் ஒய்னையும் சாப்பிட்டு முடித்திருந்தார்..தான் கொண்டுவந்திருந்த தட்டையும் தம்ளரையும் எடுத்துக்கொண்டு," சரி இம்மானுவேல்..  நாளைக்கும் இதே நேரம் சந்திப்போம்.. உம்மைகண்டதில் எனக்கு மிகுந்த சந்தோஷம் " என்றான் மார்சலீன். இப்படியாக ஒவ்வொருநாளாக சென்றது.
         ஏற்கனவே தரித்திர வார்த்தைப்பாடு கொடுத்திருந்த அந்த மடத்து சாமியார்களுக்கு தினமும் ஒருவருக்கு ரொட்டியும் ஒய்னும் இல்லாமல் போனதில் கொஞ்ச்ம் வருத்தம்தான். மடத்து   ரெக்டர் கூட தன் அதிருப்த்தியை குசினி சாமியாரிடம் தெரிவித்துக்கொண்டார். குசினி பாதருக்கும் தினமும் ஒரு ரொட்டி எப்படி காணாமல் போகிறது...நம்மிடையே யாரோ ஒரு
சாமியார் வெளியே தெரியாமல் அதிகம் சாப்பிடுகிறார்...தினமும் ஒய்னும் குறைகிறதே.. இத்தனை பேருக்கும் சாப்பாட்டுக்கு பொருப்பான இந்த குசினி பாதர்தான் தினமும்   ஒருவேளைக்கு பட்டிணி கிடக்க வேண்டி இருகிறது. இதன் மர்மம் என்னவாக இருக்கும் என்று மண்டையை குடைந்துகொண்டார். எனவே அவர் இதன் மர்மத்தை கண்டுபிடிக்க சுட்ட ரொட்டிகைள் எண்ணி எண்ணி வைத்தார்.. எப்படிப்பார்த்தாலும் தினமும் ஒரு ரொட்டியும் ஒரு தம்லர் ஒயினும் குறைவதால் அவருக்கு சந்தேகம் அதிகமாகி இந்த காரியத்தை செய்யும்   அந்த திருட்டு சாமியாரைப்பிடித்து நன்றாக நாலு கேள்விகள் கேட்க வேண்டும் என்று முடிவு பண்ணிக்கொண்டார். ஆனால் திருடன் தான் அகப்படவே இல்லை. எத்தனை நாள் தான் இந்த திருட்டு நாடகத்தை நடத்தமுடியும்..
    ஒருநாள்..மார்சலெனோ எடுத்துச்சென்ற ஒய்ன் கொஞ்சம் கீழே சிந்தி அதன் சுவடுகள் மாடி வரை சென்றது. அதை பின்தொடர்ந்த குசினி பாதர் மார்சலீன் யாரோ ஒருவருடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டார்.ஆனால் அவர் யார் என்று அப்போது அவரால் கண்டுபிடிக்கமுடியவில்லை.
இப்படி ஒரு குரல் உடைய பாதிரியார் நம்மிடையே இல்லை... அவர் யாராக இருக்கக்கூடும்... சரி சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவனிடம் கேட்டுவிடவேண்டியதுதான் என்று கீழே இறங்கி  வந்துவிட்டார். அன்றைய பூசையில் ரசம் ஊற்ற குமிளை சாய்த்தபோது அதில் சுத்தமாக ஒயின் இல்லை. அன்று நிறைவேற்ற வேண்டிய திருப்பலியை யேசுநாதரே நிறைவேற்றிவிட்டது பாவம் அந்த பாதிரியார்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. இப்படி இருக்கையில் ஒரு நாள்.
            இன்றும் சத்தம்போடாமல் ஒரு ரொட்டியையும் ஒயினையும் எடுத்துக்கொண்டு யேசுவை சந்திக்கப்போனான் மார்சலீன். வழக்கம்போல யேசுநாதரும் சிலுவையிலிருந்து கீழே இறங்கி  வந்து மார்சலெனோ எடுத்துவைத்த அந்த நாற்காலியில் அமர்ந்தார். அவர்களுகிடையே சம்பாஷணை ஆரம்பித்தது.
" ஆமாம் நண்பா எம்மானுவேல்...உம் சொந்த ஊர் எது "
" ஓ... அதுவா...அது பரலோகத்தில் இருகிறது"
" அது இங்கிருந்து வெகு தூரத்தில் இருகிறது..அப்படித்தானே?"
" ஆம்... ஆனால் அப்படி ஒன்றும் அது வெகு தூரத்தில் இல்லை"
" அங்கே யார் யார் எல்லாம் இருகிறார்கள்?"
" எனது தாயார்...எனது தந்தையார்..எல்லாம் இருகிறார்கள்"
" எம்மானுவேல்... என் நண்பன் ஹென்றி கூட கொஞ்சநாள் முன்பாக இறந்துபோய்விட்டான்.அவனை நினைத்தால்தான் எனக்கு கவலையாக இருகிறது."
" மார்சலீன்..உன் நண்பனைப்பற்றி இனிமேல் கவலைப்படாதே.. உனக்கு நான் வேறுபெயர் வைக்கிறேன்..."
" எனக்கு வேறு பெயரா...அது என்னா?"
" ஆம்...பான்..ஈ...வையின்...அதாவது நமக்கு நீ ரொட்டியும் ஒயினும் தந்தவன் என்பது பொருள் "
" பான் ஈ வையின்..அதுவும் நன்றாகத்தான் இருகிறது...பார்த்தீரா... மறந்தே போனேன்...எம்மானுவேல் சாப்பிடும்...சாப்பிடும்போது தலையில் எதுவும் இருக்கக்கூடாது. இதை நான்  எடுத்துவிடவா?"
" சரி ..எடுத்துவிடு...என்னை யூதர்களின் அரசன் என்று என் தேசத்தவர் எனக்கு கொடுத்த கிரீடம் அது.."
" நண்பா.. அதை ஏன் இன்னும் தலையில் வைத்திருகிறீர் "
" என் நண்பர்கள் எனக்கு ஆசையாகக்கொடுத்த பரிசு அது... அதை எப்படி நான் கீழே வைக்கமுடியும் "
" சரி..எனக்கு புதுப்பெயர் வைப்பதாகக்கூறி சும்மா பான் ஈ வையின் என்று அழைத்தால் போதுமா..ஞாஸ்நானம் கொடுக்க வேண்டாமா... ஞாஸ்நானத்தின்போதுதானே குழந்தைக்கு பெயர் சூட்டுவார்கள்? "
" சரி வா...பிதா சுதன் பரிசுத்தா ஆவியின் பெயராலே நான் உனக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன் என்று அவன் கொண்டுவந்திருந்த ஒயினை தன் விரலால் நினைத்து அவனுக்கு  தன் கையாலேயே ஞானஸ்நானம் கொடுத்தார் யேசுநாதர். அன்றோடு அந்த நாள் காட்ச்சி முடிந்தது.    மார்சிலெனோவும் கீழே இறங்கி வந்தான். அப்போது அந்த தாத்தா பாதர்
அவனைக்கூப்பிட்டார். " தாத்தா...இனிமேல் என்னை மார்சலீனோ என்று கூப்பிடாதீர்கள்...பான் ஈ.வைன் என்றுகூப்பிடுங்கள்" என்றான்." ஏனப்பா...உனக்கு இப்படியொரு பெயரை  கொடுத்தது யார்?" என்றார் அவர்... "அதுவா தாத்தா என் நண்பன் எம்மானுவேல் எனக்கு கொடுத்தபெயர் அது " என்றான் மார்சலெனே. அறியாப்பையன் எதோ தெரியாமல்
சொல்கிறான் என அந்த பெரியவரும் இதை பொருட்படுத்தவில்லை..ஆனாலும் அவனை அள்ளி அணைத்து கொஞ்சினார்.. அப்போது அவரது சுவாசத்தில் பரிமள தைலத்தின் வாசமும்
பரலோக சுகந்தமும் வீசவே அவர் தன்னுடைய சுவாச நோயிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுவதை உணர்ந்தார். இவர்களுடைய சம்பாஷணையை குசினி ஃபாதர் மறைந்திருந்து கேட்டுக்கொண்டிருந்தார். அவரது மனதில் ஆயிரத்தெட்டு கேள்விகள் தோன்றி மறைந்தன. தன்னை இந்த குசினி சாமியார் கவனிப்பதை உணர்ந்தான் மார்சலீனோ...
அடுத்தநாள் இந்த குசினி பாதரின் கண்னில் மண்னைத்தூவிவிட்டு எம்மானுவேலுடம் சம்பாஷிக்க சமயம் பார்த்தான் நம் மார்சலெனோ.. ஆனால் அவர் தன் இருப்பிடத்திலிருந்து   நகருவதாகக்கானோம். எனவே சப்த்தமாக," குசினி பாதர் வாசலில் யாரோ சிலர் வந்திருகிறார்கள்" என்று கத்தினான். இதை உண்மை என்று நம்பிய அவர் வாசலுக்கு ஓடினார்.
            இந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த மார்சலீனோ சரேலென ஒரு ரொட்டியை உறுவினான். ஒரு ஒயின் பாட்டிலையும் எடுத்துக்கொண்டு மேல் மாடிக்கு ஓடினான். உள்ளே போய்  கதவை தாளிட்டுக்கொண்டான்.. காட்சி ஆரம்பமானது..
       யேசுநாதர் தன் சிலுவையிலிருந்து கீழே இறங்கி வந்து அவர் ஆசனத்தில் அமர்ந்தார். அவன் கொண்டுவந்திருந்த ரொட்டியையும் ஒயினையும் சாப்பிட்டார். அவர்கள் சம்பாஷணை  ஆரம்பித்தது.
" எம்மானுவேல்...என் நண்பன் ஹென்றியை உமக்குத்தெரியுமா...அவனைப்பற்றி நான் கவலைப்பட வேண்டாம் என்று நேற்று கூறினீரே"
" ஆமாம்..கூறியிருந்தேன்.. அவன் இப்போது என்னுடந்தான் பரலோகத்தில் இருகிறான். அதனால் தான் அவனைப்பற்றி கவலைப்பட வேண்டாம் என்று கூறி இருந்தேன்."
" அப்படியானால் என் தாயார்?"
" அவரும் இப்போது என்னுடன் தான் பரலோகத்தில் என்னுடனே இருகிறார் "
" ஹை...அப்படியானால் நான் பரலோகம் வந்தால் என் தாயாரை பார்க்கமுடியுமா? எனக்கு அவரைப்பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசையாக இருகின்றது"
" இல்லை நண்பா...முதலில் நான் என்னுடைய தாயாரை இங்கே அழைத்துவருகிறேன்.. அதன்பின் உன்னுடைய தாயாரை நீ பார்க்கலாம் "
" இல்லை இல்லை...இம்மானுவேல் நீ என்னை ஏமாற்றப்பார்கிறாய்... முதலில் என் தாயாரைக்காட்டு..பிறகு நான் உன் தாயாரைப்பார்க்கிறேன்.
" சரி நண்பா. இந்த எம்மானுவேல் தன்னை நம்பிவந்த யாவரையும் ஏமாற்றுபவன் அல்ல. நீ முதலில் உன் தாயாரை பார்க்க வேண்டும் அப்படித்தானே..அப்படியானால் நீ சாக வேண்டும்"
" சாவதென்றால் எனக்கு புறியவில்லை."
" நீதானே உன் நண்பன் ஹென்றி மரித்துப்போனான் என்றாயே ...அப்படித்தான்"
" அப்படியானால் நான் சாகத்தயார்... எப்படியாவது என் நேச தாயாரை நான் சந்திக்க முடியுமானல் நான் சாகத்தயார். ".
" சரி வா... வந்து என்னைக்கட்டி அணைத்துக்கொள் " என்றார்.
இத்தனை சம்பாஷணைகளையும் கதவுக்கு வெளியே ஒட்டுக்கேட்டுக்கொண்டிருந்த அவனை வளர்த்த குசினி சாமியாருக்கு இப்போது எல்லாம் புரிந்து விட்டது. ஆஹா..நான்  ஆசையாய் வளர்த்தபிள்ளை மார்சலெனோ...இப்போது நம்மை எல்லாம் விட்டுவிட்டு யேசுவோடு போகப்போகிறான் என்றதுமே அவருக்கு துக்கம் நெஞ்சை அடைத்தது...ஓஓஓ..  என்று பெரும் கூக்குரலிட்டு அழுதார்..இவரது பெரும் அழுகை சப்த்தம் கேட்ட மற்ற பாதிரிமார்கள் ஓடிவந்தார்கள்... என் சகோதரர்களே... நாம் ஆசையாய் வளர்த்தபிள்ளை நம் அருமை மார்சலெனோ நம்மை எல்லாம் விட்டுவிட்டு யேசுவோடு போகிறான் .. வந்து பாருங்கள் என்று பெரும் குறலெடுத்து அழுதார். மார்சலெனோ இருந்த அந்த மேல் மாடி
பரலோக ஒளியால் சூழப்பட்டிருந்தது. முடியாமல் படுத்திருந்த அந்த பெரியவர் கூட எப்படியோ எழுந்து மாடி ஏறி வந்து பார்த்தார்...அவர்கள் கண்ட காட்சி இந்த மானிட சந்ததிக்கு கிடைத்திறாத பெரும் பாக்கியம்.
    அனைவரது கண்களும் மெய் மறந்து நின்றன. யேசுவின் சிலுவையில் அவரது திரு உருவம் இல்லை..வெறும் சிலுவையே இருந்தது. நம் மார்சலீனோ  யேசுவின் கரங்களில் துவண்டு படுத்திருந்தான். அவனது முகம் பரலோக காந்தியுடன் ஒளி வீசியது. சற்று நேரத்தில் அவன் உடல் அந்த மேஜையின் மீது கிடத்தப்பட்டிருந்தது.
      அந்த மேஜையில் யேசுநாதர் உண்டதுபோக மீதம் இருந்த ரொட்டியும் ஒயினும் இருந்தன. வெறுமையாக கிடந்த சிலுவையில் மீண்டும் யேசுநாதரின் திரு உருவம் தோன்றியது.
" மார்சலெனோ மேல் மாடிக்குப்போகாதே...அங்கே ஒரு பூச்சாண்டி இருக்கிறான்.. உன்னைப்போல் சிறு பிள்ளைகள் வந்தால் அவன் ஒரு சாக்குப்பையில் அவர்களை   பிடித்துக்கொண்டு போய்விடுவான் " என்று அந்த குசினி சாமியார் எந்த முஹூர்த்தத்தில் சொன்னாறோ... அவ்வாறே பலித்தது. யேசுநாதர் அவருக்கு உகந்த பிள்ளையை தன்னுடனே
அழைத்துக்கொண்டு போய்விட்டார்.. இந்த மடாலயத்திலிருந்த அந்த பழைய சிலுவையை வைத்தே ஒரு புதிய தேவாலயம் கட்டி அதன் அருகிலேயே நம் மார்சலீனுக்கு ஒரு  கல்லறை கட்டி இருகிறார்கள்.. அதில் மார்சலீனோ..இவன் யேசுவுக்கு ரொட்டியும் ஒயினும் தந்தவன் என்று எழுதி வைத்து இருகிறார்கள்.
       உலகத்துக்கே படியளப்பவருக்கு, பசியால் வயிறு ஒட்டிப்போயிருந்த ஆண்டவறாகிய யேசுநாதருக்கு, அவர் பசிக்கு ரொட்டியும் தாகத்துக்கு குடிக்க ஒயினும் கொடுத்த   அந்த பாக்கியமான பிள்ளை மார்செலீனோவுக்கு ஆண்டவர் தன் திருக்கையாலேயே மரணத்தைக்கொடுத்து எடுத்துக்கொண்டார் என்றால் அது அவன் செய்த பாக்கியமா அல்லது
அவன் பெற்றோர் செய்த பாக்கியமா என்று எனக்கு சொல்ல தெரியவில்லை.
       இந்தக்கதை 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. மூலக்கதை ஜொசே மரியா சாஞ்சே சில்வா எழுதி திரைப்படமாக எடுக்கப்பட்டது.
    ஸ்பெயின் தேசத்தவரால் 1950 களில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் எங்கும் சக்கைபோடு போட்டது. பல பரிசுகள் வாங்கியது. இந்தக்கதையில் ஈர்க்கப்பட்ட நான் நம் பிள்ளைகளும் இக்கதையை தெரிந்துகொள்ளும்பொருட்டு எனக்கு தெரிந்தபடி எழுதி உள்ளேன். ஊரின் பெயரும் கதா பாத்திரங்களின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது. வணக்கம்.

Sunday, December 22, 2013

" 300 வருடம் தூங்கியவர்கள்."



" 300 வருடம் தூங்கியவர்கள்."

" நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டைக்கெடுத்ததுடன் தானும் கெட்டான்.
சிலர் அல்லும் பகலும் வெறும் கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஸ்ட்டம் இல்லை என அலுத்துக்கொள்வார்..
விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக்கொண்டார்...
சில பொருப்புள்ள பெரியோரின் தூக்கத்தினால்...
பல பொன்னான வேலை எல்லாம் தூங்குதப்பா." ..கவிஞர் கண்ணதாசன்.
இந்தப்பாடல் அமரத்துவம் வாய்ந்தது. எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியது. இந்தப்பாடலைக்கேட்ட மாத்திரத்தில் யாருக்கும் தூக்கம் பறந்தோடிவிடும். அவ்வளவு உத்வேகமான பாடல் இது. ஆனால் இந்தப்பாடல் சுமார் 1700 வருடங்களுக்கு முன் வாழ்ந்து 300 வருடங்களாக தூங்கியவர்களுக்கு பொருந்தாது. காரணம் அவர்களை அவ்வளவு காலமும் தூங்க
வைத்தது கடவுள். இந்த மனித இயல்பையும் மீறி...உலக நியதியையும் மீறி... இயற்கையையின் விதியையும் மீறி ஒரு ஏழு பேர் சுமார் 300 ஆண்டுகளாய் அன்ன ஆகாரமில்லாமல் காற்றும் இல்லாமல் தூங்கினார்கள் என்றால் கடவுள் தன் வல்லமையை வெளிப்படுத்தும் பொருட்டே அவர்களை அவ்வளவு காலமும் தூங்க வைத்திருந்தார் என்றால் இதை நாம்
நம்பித்தான் ஆக வேண்டும்...இனி நாம் கதைக்கு செல்வோம்...
             அன்றைய கான்ஸ்டாண்டி நேபிள்ஸ் [ இன்றைய இஸ்தான்புல்..துருக்கி] சக்கரவர்த்தி தேசியன் தன் அரசாங்க விஷயமாக எப்பேஸுப்பட்டிணம் விஜயம் மேற்கொண்டுள்ளார்   என்றதுமே அந்த எப்பேஸுப்பட்டிணம் சிறந்த முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே செல்வ செழிப்பால் கொழித்திருந்த அந்தப்பட்டிணம் ரோமர்கள் ஆதிக்கத்தில் பெரும்   வெற்றித்திருநகராக திகழ்ந்தது.. கல்வி, கேள்வி.கலை.சுகாதாரம், மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம் அனைத்திலும் சிறந்து விளங்கிய அந்த துறைமுகப்பட்டிணமாகிய எப்பேசு
பட்டிணம் ரோமர்களுக்கு பெரும் பெருமைதேடித்தத்தது.
       கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கும் மூன்றாம் நூற்றாண்டிற்கும் இடையில் வலியவந்த அதிகாரத்தை கைப்பற்றிய திராஜன்  தேசியுஸ் ராயன் தன் பெருமையை நிலை நாட்டும் பொருட்டு இந்த எப்பேசுப்பட்டிணத்தில் தன் கப்பலில் இருந்து இறங்கினான். பெரும் ஆரவாரமாக துறைமுகத்தில் இருந்த
சிப்பாய்களும் பொது மக்களும் அவனை வரவேற்றார்கள். எந்தப்பக்கம் திரும்பினாலும் மக்கள் வெள்ளம் அவன் மீது கொண்ட பாசத்தினால் வாழ்க... வாழ்க... தேசியுஸ் ராயன் வாழ்க...  ரோமர்கள் ஆதிக்கம் வாழ்க...காத்தியர்களை புறமுதுகிட்டு ஓடச்செய்து வெற்றி கொண்ட வீராதி வீரர் வாழ்க என்று பெரும் ஜெய கோஷங்கள் எழுப்பினார்கள்...ரோமைய சிப்பாய்களின்  ராணுவ அணி வகுப்புகளும்..இசை வெள்ளமும் காண்போரை மட்டுமல்லாது அரசன் தேசியுஸ் ராஜனையும் மகிழ்ச்சிகொள்ள வைத்தது. தன் இன்முகத்தால் எல்லப்பக்கமும்   சூழ்ந்திருந்த மக்களை கை அசைத்து தன் மகிழ்ச்சியை தெரிவித்துவந்த ராஜனுக்கு ஆங்காங்கே தெரிந்த சிலுவை அடையாளம் கொண்ட தேவாலயங்கள் அவன் முகத்தில் கவலை
ரேகையை தோற்றுவித்தன.
        காரணம் இல்லாமல் இல்லை. அவனுக்கு கிறிஸ்த்துவர்களை கண்டாலே பிடிக்காது..அவன் காலத்தில் அலை அலையாய் மக்கள் கிரிஸ்த்துவத்துக்கு மாறினார்கள். ரோமர்களுக்கு  அக்காலத்தில் எந்தப்பக்கம் திரும்பினாலும் எதிர்ப்புகிளம்பி தனித்தனி நாடுகளாகப்பிறிந்து போகக்கூடிய சூழ்நிலை இருந்ததால் மக்களை ஒன்றுபடுத்தும் பொருட்டு தேவையான கடும்
நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டிய சூழ்நிலை இருந்ததது. இந்த நிலையில் கிறிஸ்த்துவம் ஒன்றுபோல் எல்லா நாடுகளிலும் அலைஅலையாய் பெருகவே எங்கே இவர்கள் எல்லாம்   ஒன்றுகூடி கிளர்ச்சி செய்து நாட்டில் புரட்சியை ஏற்படுத்தி அரசாங்கத்தை கவிழ்த்துவிடுவார்களோ என்ற பயம் காரணமே இல்லாமல் அவர்களுக்கு ஏற்பட்டது. கிறிஸ்த்துவத்தை அவர்கள்
சரியாக புறிந்துகொள்ளாததே அதற்குக்காரணம்..மீளவும் அரசாங்கப்பிரதிநிதிகள் நாடாளும் சக்கரவர்த்திகளுக்கு தவறான போதனைகளை தங்கள் சுய நலன்களுகாக போட்டுக் கொடுத்ததும் ஒரு காரணம். இதன் காரணமாக கிறிஸ்த்துவம் ரோமை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது. எப்படியாவது எந்த விதத்திலாவது மக்கள் ஒருமித்த கருத்துகளுகாக ஒன்று  கூடாதிருக்க இப்படியும் ஒரு காரணம் சொல்லப்பட்டது. ரோமைய குடி உரிமைமக்கள் தங்கள் ராஜ விசுவாசத்தை காட்டவும் தங்கள் தெய்வங்களை மறவாதிருக்கவும் ரோமையின்
ஆதிக்கத்திலிருந்த மக்கள் அனைவரும் கட்டாயமாக சத்தியபிரமாணம் எடுக்க வலியுறுத்தப்பட்டார்கள். அரசனையும் தெய்வங்களையும் ஒன்றாக இணைத்து கடவுளுக்குறிய   மரியாதையும் ஆறாதனையும் செய்விக்க வற்புறுத்தப்பட்டார்கள்.. அதற்கு உடன்படாதோர்கள் ராஜ விசுவாசமற்றோர் என முத்திரைகுத்தப்பட்டு கொடுமையன மரணத்திற்கு தீர்வை
இடப்பட்டனர்.
          அன்றைய கான்ஸ்டாண்டினேபிள்ஸ் பட்டிணம் ரோமுக்கு வெளியே மிகவும் தொலை தூரத்தில் இருந்ததால் கிறிஸ்த்துவம் இங்கே வெகுவாகப்பரவி இருந்தது. அதன் ஆதிக்கத்தில் இருந்த எப்பேசு பட்டிணம் பல அப்போஸ்த்தலர்கள், புனித பால் மற்றும் புனித தெகீலா போன்றோரின் ஊழியத்தால் கிறிஸ்த்துவ மதம் மிகவும் செழிப்பாக பரவி இருந்தது. யேசுநாதரின்   தாயார், அவரது அன்புசீடர் புனித அருளப்பர், சுவிஷேஷகறான புனித லூக்கா ஆகியோரின் புனித கல்லரைகள் இந்த எப்பேசுஸ் பட்டிணத்தில் இருகின்றன. இதில் தேவ  தாயாரின் கல்லரை இங்கு இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அவர் கடைசியாய் வாழ்ந்து மரித்த வீடு இங்கு உண்டு.
      இங்கு கிறிஸ்த்துவம் மிக ஆழமாக வேறூன்றியுள்ளதைக்கண்ட அரசன் திராஜன் தேசியன் மிகவும் கோபம் கொண்டான். தன் அரசாங்க அதிகாரிகள் அனைவரையும் ஒன்றுகூட்டி  சரியாக வசைபாடினான்.இந்த எஃபேசுப்பட்டிணத்தில் ரோமைய அரசாங்க ஆணை சரியாக அமுல்படுத்தாதன் காரணம் என்ன? என்?. என்று வார்த்தையில் வறுத்தெடுத்துவிட்டான்.  அவர்கள் சொன்ன பதில் அரசனை திடுக்கிட வைத்தது.. " அரசே இந்த எப்பேசுப்பட்டிணத்தின் இளவரசர்கள் என்னும் அளவிற்கு பெரும் அதிகாரமும் செல்வமும் கொண்ட ஒரு குடும்பத்தை சேர்ந்த ஏழுபேர் கிறிஸ்த்துவமதத்தை பின்பற்றியதால் மக்கள் எல்லோரும் அவர்களிப் பின்னால் போய்விட்டர்கள்... மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீதிருந்த பயமும்   போய்விட்டது. பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்களே அனைவருமாக கிறிஸ்துவர்களாகிப்போனதால் அரசாங்கத்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. எல்லாம் அந்த ஏழுபேர்களால்  வந்த வினை" என்றார்கள்..திராஜன் தேசியன் கண்கள் கோவைப்பழம்போல் சிவந்தன.." கூப்பிடு அந்த ஏழுபேர்களையும்... அவர்களை என்ன செய்கின்றேன் பார்" என்று கர்ஜித்தான்
     திராஜன் தேசியன். ராயனின் உத்திரவின்பேரில் அந்த சகோதரர் ஏழுபேரும் கைது செய்யப்பட்டு அரசன் முன் விசாரணைகாக நிறுத்தப்பட்டனர்.ஒவ்வொருவராக பெயர் சொல்ல  அழைக்கப்பட்டனர்.
" மேக்சிமியன் " " உள்ளேன் ஐய்யா"
" மால்க்குஸ் " " உள்ளேன் ஐய்யா"
" மார்ட்டின் " " உள்ளேன் ஐய்யா"
" செராபின்" " உள்ளேன் ஐய்யா"
" ஜான் " " உள்ளேன் ஐய்யா"
" டயோனிசு " " உள்ளேன் ஐய்யா"
"கான்ஸ்டன்டைன் " " உள்ளேன் ஐய்யா"
இந்த ஏழு பேரையும் ஏற இரங்கப்பார்த்தான் அரசன் தேசியன். அடுத்த கேள்வி " உங்களில் மூத்தவன் யார்?"
" ஐய்யா நான் தான் ... என் பெயர் மால்குஸ் " என்றான். அடுத்த கேள்வி " நீங்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகளா?"
" இல்லை ஐய்யா... நானும் என் தம்பி மால்குசும் உடன் பிறந்தவர்கள்.. மற்றவர்கள் என் சித்தப்பா மற்றும் பெரியப்பா பிள்ளைகள்.."
" உன் தகப்பனார் யார்"
" ஐய்யா என் தகப்பனார் தான் இந்த ஊரின் ஆளுனர்.. அவர் இப்போது இல்லை . அவர் இறந்துவிட்டார். என் தாயாரும் இப்போது இல்லை" என்றான் மாக்சிமியன்.
" உங்களை நினைத்தால்தான் பாவமாக இருகின்றது..நான் உங்கள் மேல் மிகவும் கரிசனம் உடையவனாக இருகிறேன். நீங்கள் ஏன் கிறிஸ்த்துவர்களாக மாறினீர்கள்?"
" அரசே, கிறிஸ்த்துவம் என்பது கடவுளால் ஏற்படுத்தப்பட்டது. யேசுகிறிஸ்த்துவே அதன் கடவுள்...அவரே இந்த உலகைப்படைத்தவர்...வானமும் பூமியும் அவரது படைப்புகளே.இந்த
உலகிலும், நீரிலும் நிலத்திலும் வாழ்பவை, காண்பவை காணாதவை அனைத்தையும் படைத்தவர் அவரே...அவர் எங்களை அழைத்தார்.. அவரது அழைப்பை நாங்கள்   ஏற்றுக்கொண்டோம்."
" அரசே இந்த மாக்ஸிமியன் பேச்சில் வல்லவன்... இவனிடம் பேச்சுக்கொடுத்தால் நீங்கள் அவன் வயமாகிவிடுவீர்கள். இப்படித்தான் அவன் பல பேர்களை கிறிஸ்த்துவர்களாக  மாற்றிவிட்டான் . இவனிடம் பேச்சுக்கொடுப்பதை தவிர்ப்பது தங்களுக்கு நல்லது" என்றான் அரண்மனை திவான்.
மேலும் அரண்மனை திவானை பேச விடாமல் தன் கண் அசைவின் மூலம் தடுத்தார் மன்னர் தேசியன். " மாக்ஸிமியா... உனக்கு சரித்திரம் சரியாகத்தெரியவில்லை என நினைகிறேன்..உன் யேசுநாதர் எப்படி இறந்தார் தெரியுமா.? எங்கள் அகஸத்து ராயனின் பிரதிநிதியான ஆளுனர்
போஞ்சிபிலாத்து பாலஸ்த்தீனத்தில் பதவி வகித்தபோது அவரால்தான் யேசுநாதருக்கு சிலுவை சாவு என்னும் கேவலமான மரணம் விதிக்கப்பட்டது. அதன்படி அவரை சிலுவையில் அறைந்து கொண்றனர். போதாததற்கு அவர் கள்வர்களுள் ஒருவறாக எண்ணப்பட்டார்...இவர் எல்லாம் கடவுள் என்றால் நான் வணங்கும் அப்போல்லோ, ஜுபிடர் போன்ற தெய்வங்களை
எல்லாம் என்ன வென்று சொல்வது" என்றான் மன்னன் திராஜன் தேசியன்.
" அரசே தங்களிடம் வாதாடுவதாக தவறாக நினைக்க வேண்டாம்...தாங்கள் வணங்கும் அப்போல்லோ..ஜூபிடர்..வீனுஸ் போன்ற தெய்வங்கள் எல்லாம் உயிர் இல்லாத கிரஹங்கள்  இவற்றைப்படைத்ததே எம் யேசு கிறிஸ்த்துதான். அவர் கள்வர்களும் ஒருவறாக எண்ணப்படுவார்..அவர் சிலுவையில் அறைந்து கொல்லப்படுவார் என்பதை எல்லாம் யேசுநாதருக்கு
முன்பே 800 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இசையாஸ் இறைவக்கினர் அவறைபற்றி எழுதிவைத்துவிட்டார். உங்கள் தெய்வங்களின் சிலைகள் எல்லாம் வெறும் கல்லும் மரமும்   ஆகும்.. இவை அனைத்தும் அக்கினியில் போடுவதற்கு மட்டுமே பயன்படுமே தவிர வேறு எதற்கும் பயன்படாது. மேலும் எம் கடவுள் யேசுநாதர் இறந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
இதற்கும் ஆதாரம் இருகின்றது. யேசுநாதர் மட்டும் சொன்னபடியே அவர் மரித்து மூன்றாம் நாள் உயிர்தெழாமல் இருந்திருந்தால் நாங்கள் அவரை நம்பியும் இருக்க மட்டோம்... கடவுளாகவும் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டோம்" என்றான் மாக்ஸிமியன்.
       மாக்சிமியனின் இந்த நியாயங்களை ஏற்றுக்கொள்லவில்லை மன்னன் தேசியன்.." போதும் மாக்சிமியா...உன் பேச்சு அளவுகடந்து போகின்றது. இத்தோடு நிறுத்திக்கொள் உன்   பிரசங்கத்தை. எனக்கு ஒரே பதில் தான் தேவை...யேசுகிறிஸ்த்துவை விட்டுவிடுகிறேன் என்று ஒரு வார்த்தை சொல்..உன் தகப்பனார் வகித்த அந்த ஆளுனர் பதவி உனக்காக
காத்திருகிறது..உன் சகோதரர்களுக்கும் தகுதியான பதவியை நாம் தருவோம்...எனக்கு சாதகமான பதிலை இன்றே நீ தரவேண்டும் என்பது அவசியமல்ல..உன் தகப்பனார் வகித்த  பதவியை முன்னிட்டும் உன் பிறப்பின் குல கௌரவத்தை முன்னிட்டும், உங்கள் வாலிப வயதை முன்னிட்டும் நாம் உம்மை மன்னிகிறோம்...நாம் மூன்று நாள் அரசாங்க விஜயமாக
ஸ்மிர்னா நகர் போகவேண்டி இருப்பதால் நாம் திரும்பவந்து உம்மை பார்ப்போம்... ஆகவே இன்றுபோய் நாளை மறு நாள் திரும்ப வா...இப்போது நீவீர் அனைவரும் போகலாம்" என்றான்   மன்னன் தேசியன்.
      மாக்சிமியனுக்கு நாளை மறுநாள் என்ன நடக்கும் என்பது இப்போதே தெரிந்துவிட்டது. தன் வீட்டுக்கு வந்த அவன் தம் தம்பிகளை அழைத்து," சகோதரர்களே நாளை மறு நாள்  நம்முடைய இவ்வுலக வாழ்க்கை முடிந்துவிடும். அதன்பின் நாம் நித்திய பேரின்பவீட்டுக்கு சென்றுவிடுவோம்..அங்கு நம்முடைய இவ்வுலக செல்வங்கள் எதுவுமே பயன்படாது.. எனவே   நாம் இன்றே நம் செல்வங்களை எல்லாம் விற்று ஏழைகளுக்கு கொடுத்துவிடுவோம்..ஆண்டவறாகிய யேசு கிறிஸ்த்து நம் அனைவரையும் தன் வானக வீட்டிற்கு அழைத்து செல்வது
உறுதி.. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ". என்றான். அதற்கு சகோதரர் அனைவரும் ஒருமித்த குரலில் " அண்ணா, உன் முடிவே எங்கள் முடிவு..ஒன்றாகவே வாழ்ந்தோம் ஒன்றாகவே  சாவோம்...ஒன்றாகவே பரலோகத்துக்கு செல்வோம்... சாவு எப்படி வந்தால் என்ன..என்றைக்கோ ஒரு நாள் நாம் சாகத்தான் போகின்றோம்.. அதை நல்ல முறையில் யேசுவுக்காக
ஒப்புகொடுப்போம். வேதனையில் ஆண்டவரை சந்திப்பதும் அவருக்கு உகந்ததே... அவர் நமக்காக கடினமாக பாடுபட்டு மரிக்கவில்லையா? அவ்வாறே நாமும் மரிப்போம். இவ்வாறு  மரிப்பதை கடவுள் நமக்காக கொடுத்த பாக்கியம் என்று நம்பி அவருக்கு நன்றி செலுத்துவோம்... என்ன இருந்தாலும் கடினமான பாடுகள் என்று நினைக்கும்போது பயமாகத்தான்
இருகின்றது" என்றனர். மாக்சிமியன் அவர்களை அணைத்துக்கொண்டு " இனிமேல் எல்லாம் அவன் செயல்" என்றான்.
      அதன்படியே அவர்களுடைய சொத்துக்கள் எல்லாம் விற்று  ஏழைகளுக்கு கொடுத்தார்கள். விற்கமுடியாத சொத்துக்கள் அனைத்தையும் ஏழைகளுக்கு தானமாக கொடுத்தார்கள். அடுத்தநாள் வரை சாப்பிடவேண்டிய அளவுக்கு மட்டும் சில   வெள்ளிக்காசுகளை தங்களுடனே வைத்துக்க்கொண்டார்கள்.. இனிமேல் தங்குவதற்கு இடமிலை...ஊருக்கு வெளியே சீலியா என்னும் ஒரு மலை இருகிறது. அதில் ஒரு குகை   இருகின்றது. அந்த குகையில் யாரும் தங்குவதில்லை. ஒரு இரண்டு நாள் இரவும் பகலும் அங்கு தங்குவதால் யாருக்கும் நம் இருப்பிடம் தெரிந்துவிடப்போவதில்லை.. வாருங்கள்
போவோம் " என்றான் மாக்சிமியன். அந்த நாள் இரவு அங்கே கழிந்தது. அடுத்த நாள் காலை தன் தம்பி மால்குஸை ஊருக்குள் அனுப்பி சாப்பிட ரொட்டிகளை வாங்கி வர அனுப்பினான்   மாக்சிமியன்.
      அடுத்த நாள் ஆரம்பித்தது அக்கிரமம். அந்த எஃபேசு பட்டிணம் முழுவதும் இருந்த கிறிஸ்த்துவர்களை சல்லடைபோட்டு தேடிபிடித்து ஆளுனன் முன் விசாரணைகாக  நிறுத்தப்பட்டார்கள். யேசுவை மறுதளித்தவர்கள் உயிரோடும் அவர்கள் உடமையோடும் விடுவிக்கப்பட்டார்கள். மறுத்தவர்கள் கொடுமையாக சித்திரவதைபடுத்தப்பட்டு   கொல்லப்பட்டார்கள். எஃபேசுப்பட்டிணமே கதிகலங்கிப்போயிற்று. மக்களுக்கு பயம் வருவிக்கும் விதமாக பொதுமக்கள் கூடும் இடங்களிலேயே தண்டனை நிறைவேற்றப்பட்டது..
         கிறிஸ்த்துவர்களின் சடலங்கள் நாய்களும் நரிகளும் தின்னும் உணவாயிற்று. இது சுகாதாரக்கேடு என்பதால் சாதாரண குடிமக்களும் விடுவிக்கப்பட்ட கிறிஸ்த்துவர்களும் சடலங்களை  அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட வற்புறுத்தப்பட்டனர். இந்த காரியங்களை விடுவிக்கப்பட்ட கிறிஸ்த்துவர்கள் தங்கள் சகோதர கிறிஸ்த்துவனுக்கு செய்யும் தர்ம காரியமாக கருதி  விருப்பத்துடனே செய்தார்கள். இதைக்கண்ட மற்றவர்களும் இந்த கிறிஸ்த்துவர்களின் முன்மாதிரிகைகளைக்கண்டு "வாழ்வின் முடிவு எப்படி இருந்தால் என்ன...ஆனாலும் இவர்கள்  கடவுளின் மீது கொண்ட நம்பிக்கை அசைக்கமுடியாததாக இருந்தது..உண்மைக்கு சாட்ச்சியம் சொல்ல தங்கள் உயிரையும் பணையம் வைத்த இவர்கள் அல்லவா சுத்த வீரர்கள். இவர்கள் வணங்கும் தெய்வம்தான் உண்மையான தெய்வமாக இருக்க முடியும் " என்று அந்த சூழ்நிலையிலும் யேசுவை ஏற்றுக்கொண்டவர் அனேகர். இப்படியாக யேசுவை கடவுளாக ஏற்றுக்கொண்டதினால் அடுத்த நாளே தாங்களே ஆளுநன் முன்பாக நேரில் ஆஜராகி தங்கள் விசுவாசத்தை அறிக்கை இட்டார்கள்.. அதன்பலனாக அவர்கள் அனைவரும் தெருவில்
சிலுவை மரணத்துக்கு ஆட்ப்படுத்தப்பட்டார்கள்.
      இவர்களையும் புதைக்க ஆள் இல்லமையால் ராணுவத்தைவிட்டு புதைக்க சொன்னார்கள். தாங்களே கொண்று தாங்களே புதைக்கவும் வேண்டும் என்னும் அவல நிலைக்கு ஆட்படுத்தப்பட்ட ராணுவத்தினர் வேறு வழி இல்லாமல் அந்த பிரதான சாலை நெடுகிலும் ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு   குழிகளை வெட்டி அவர்கள் அனைவரையும் சாலையின் இருமருங்கிலும் போட்டுப்புதைத்தனர்.. இந்த கல்லரைகள் இன்றளவும் அன்று நடந்த கொடுமைகளுக்கு சாட்ச்சியாக இருகின்றன.நடந்தது என்னவோ கொடுமைதான் என்றாலும் ராணுவம் என்பது வேறு விஷயம்..கடுமையான போரில் முன்னனியில் நிற்கும் ராணுவ வீரணுக்கு மனசாட்சி என்பதே   இருக்காது. அவனைப்பொருத்தவரையில் எதிராளி அல்லது பகைவன் என்பவன் அழிக்கப்படவேண்டும் . அதாவது போரில் பகைவன் கொல்லப்பட வேண்டும்.. அப்போதுதான் நாடு
நிம்மதியாக இருக்க முடியும்..தங்களுடைய தொழில் நாட்டைப்பாதுகாப்பதும் எதிராளிகளை அழிப்பதும்தான்... ஆனால் இங்கே கொல்லப்படுபவர்கள் யார்..அப்பாவி மக்கள் அல்லவா?  இவர்களை நாம் ஏன் கொல்ல வேண்டும்?..இங்கு நடபது போர் அல்லவே? தலைவன் கட்டளைக்கு கீழ்படிவதைத்தவிர நமக்கு வேறு கடமை கிடையாதே...ஆனாலும் இது அக்கிரமம்..  அப்பாவி மக்களை கொல்வதில் என்ன நியாயம் இருகிறது? என்று நினைத்த பல ராணுவ வீரர்கள் இந்த வேத கலாபனை முடிந்த பின்னர் மனம் மாறி யேசுவை ஏற்றுக்கொண்டார்கள்.
        இரண்டு நாட்க்களில் நடந்த கொடுமையான வேத கலாபணையில் பலரது மரணத்தை நேரில் கண்ட மால்குஸ் தன் சகோதரர்களிடம் சென்று நடந்த அந்த கொடுமைகளை எல்லாம்   ஒன்றுவிடாமல் விவரித்தான். இதைகேட்ட சகோதரர் அனைவர்களும் பெரும் திகிலுற்றனர். இருப்பினும் கடவுள் தங்கள் விசுவாசத்தைக்காக்கும் பொருட்டு கைகளை உயர்த்தி  ஜெபத்தில் ஏடுபட்டனர். அடுத்தநாள் நடைபெறப்போகும் நீதி விசாரணையில் மன்னன் திராஜன் தேசியன் முன்னிலையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் . என்ன பேச வேண்டும்  என்று மனதுக்குள் ஒத்திகை பார்த்துக்கொண்டனர். மிச்சம் மீதி இருந்த சிறிதளவே இருந்த ரொட்டிகளை அனைவரும் ஒன்றாகப்பங்கிட்டு உண்டனர்.. எல்லோரையும் உறக்கம்   ஆட்கொண்டது. கடவுள் அவர்கள் ஏழுபேரையும் மீளாத்துயிலில் ஆழ்த்தினார்.
அடுத்தநாள் தன் நீதி விசாரணைகாக அந்த ஏழுபேரையும் ஆஜர்படுத்தச்சொன்னான் மன்னன் தேசியன்..ஆனால் அவர்கல் யாவரையும் ஊரில் காணவில்லை என அவனுக்கு   அறிவிக்கப்பட்டது. பெரும் கோபம் கொண்டான் மன்னன் திராஜன். தான் குறிப்பாக சொல்லியும் அவர்களைக்காணாததால் எப்படியும் அவர்களை தேடிக்கழ்ண்டுபிடித்து தன்
முன்னர் கொண்டுவரும்படி ஆணையிட்டான். பெரும் படைவீரர்கள் கிளம்பி அவர்கள் ஏழு பேரையும் தேடிக்கண்டுபிடிக்க புறப்பட்டனர். ஊருக்குள் எங்கு தேடியும் அவர்களைக்காண வில்லை ஆகையால் நகருக்கு வெளியே தேடினர். அப்போது அவர்கள் பார்வையில் தென்பட்டது அந்த சீலியாமலை. அந்த சீலியா மலையில் இருந்த குகையில் அந்த ஏழு சகோதரர்களும்
தூங்கிக்கொண்டிருந்ததை கண்டனர் படை வீரர்கள்.. உடனே விஷயம் மன்னர் தேசியனுக்கு அறிவிக்கப்பட்டது. இவர்களைக்காணவிரும்பிய மன்னன் தேசியன் தானே படையோடு வந்த  பகலிலும் உறங்கிக்கொண்டிருந்த அந்த சகோதரர் ஏழு பேரையும் கண்ட மாத்திரத்தில் கடும் கோபம் கொண்டு," ஓ...நீங்கள் என்னிடமிருந்து தப்பித்து போக நினைத்தீர்களோ..ஆனால்
ஆண்டவன் உங்களை இன்று என் கையில் அல்லவா ஒப்படைத்துவிட்டான்..இனிமேல் அந்த யேசுநாதரே நேரில் வந்தாலும் உங்களை என்னிடமிருந்து காப்பாற்ற முடியாது..அடேய்,  யார் அங்கே...இவர்களை அப்படியே உயிரோடு சமாதி ஆக்கி விடுங்கள்...ஜீவ சமாதி என்று இதற்குப்பெயர் " என்றான். உடனே அரசனின் ஆணை நிறைவேற்றப்பட்டது..
     இந்த அநீதியைகாண சகிக்காத தியோடர் மற்றும் ரூப்பஸ் என்னும் இரண்டு கிறிஸ்த்துவர்கள் உடனே ஒரு காரீயத்தால் ஆன பலகை தயார் செய்தார்கள்.அதில் இந்த ஏழு பேர்களின்   பெயர்கைள்யும் எழுதி அவர்கள் வேத சாட்ச்சிகளாய் மரித்தவிதமும் காலமும் அதில் பொறித்து அந்த கல்லறையில் சித்தால் போல வேலை செய்து யாரும் பார்காதபோது அந்த சுவற்றில்  இந்த காரீயத்தால் செய்த பலகையை எல்லோரும் சென்ற பிறகு பதித்துவைத்தார்கள்.
" வினாச காலே விபரீத புத்தி " அதாவது மனிதனுக்கு ஒரு கெட்டகாலம் என்று வரும்போது அவனது புத்தியும் அதற்குத்தகுந்தாற்போல் விபரீதமாக வேலை செய்து அவனை   அழிவுக்கு உள்ளாக்கும் என்பது ஒரு சமஸ்கிருத ஸ்லோகம். அதேபோல் மன்னன் திராஜன் தேசியன் இந்த எப்பேசுப்பட்டிணத்தில் தான் வந்த வேலை முடிவடைந்தது என்று தன்   தலைமை செயலகம் உள்ள ரோமுக்கு சென்றான்.அங்கு அவனுக்கு ஒரு பெரும் தலைவலி காத்திருந்தது. அதாவது இத்தாலிக்கு கிழக்கே உள்ள பால்கன் நாடுகளில் பல்கேரியாவிலுள்ள   அப்ரிட்டுஸ் என்னுமிடத்தில் காத்தியர்கள் எனப்படுபவர்களை அடக்க ஏற்பட்ட போரில் கலந்துகொள்ள திராஜன் தேசியனும் அவன் மகன் ஹெரேனியனும் பெரும் படையோடு
சென்றார்கள்..துரதிர்ஸ்ட்டவசமாக அந்தப்போரில் அவரது மகன் ஹெரேனியன் அம்பு பாய்ந்து கொல்லப்பட்டான். ஆனாலும் கலங்காத மன்னன் தேசியன் " அதனால் என்ன ...என் மகன்   ஒருவன் இறந்தான் என்றால் மொத்த சைனியமும் அழிந்ததாக அர்த்தமில்லை... எனவே அவனுகாக துக்கம் அனுஷ்டிக்க வேண்டாம்..ஆக வேண்டியதைப்பாருங்கள் என்றான்...
ஆனாலும் விதி அவர்களுக்கு எதிராக வேலை செய்தது. இல்லாவிட்டால் ரோமையர்படை அந்த டூனபே ஆற்றை போர்களமாக பயன்படுத்திக்கொள்ளுமா?.ரோமர்களின் மொத்த   சைனியமும் அந்த டுனபே ஆற்றின் சகதியில் மாட்டிக்கொண்டது. இந்த சந்தர்ப்பத்தை நன்றாகப்பயன்படுத்திக்கொண்ட எதிரிகளான காத்தியர்கள் ரோமர்களை பந்தாடிவிட்டனர்.
        அந்தப்போரில் மன்னன் திராஜன் தேசியன் மடிந்தான். சில சரித்திர ஆசிரியர்கள் இவை எல்லாம் திராஜன் தேசியனின் படைத்தளபதி த்ரிபோனியன் காலூஸென்பவன் செய்த  அப்பட்டமான சதி என்கிறார்கள்.
ரோமை பேரரசின் வரலாற்றில் போர்களத்தில் மடிந்த ஒரே அரசன் இந்த திராஜன் தேசியன் தான் என்ற பெருமையோடு அவன் சரித்திரம் முடிந்தது. அவனது ஆட்சிக்காலம்  கி.பி.249 ல் துவங்கி 251ல் இரண்டே ஆண்டுகளில் முடிந்தது என்றாலும் இந்த இரண்டு ஆண்டுகளில் அவனது அதிகாரத்துக்கு உட்பட்ட நாடுகளிள் கிறிஸ்த்துவர்கள் பட்ட   துன்பங்கள் வார்த்தையில் சொல்லி முடியாது. மன்னர் திராஜன் தேசியன் காலமானார் என்ற செய்தி வந்ததுமே இங்கு எப்பேசுப்பட்டிணத்தில் பெரும் சோகம் நிலவியது. மன்னர்
இப்போதுதானே வந்து போனார். அதற்குள் அவருக்கு இப்படியா ஒரு சோக முடிவு ஏற்பட வேண்டும் என்று அங்கிருந்த மக்கள் அவருக்காக துக்கம் கொண்டாடினார்கள்.
       அவர் நினைவாக ஊருக்கு மத்தியில் திராஜன் நீர்நிலை என்ற ஒரு ஞாபக சின்னம் எழுப்பினர். இப்போதும் எப்பேசில் அந்த மன்னர் திராஜன் நினைவிடம் சிதிலமாக உள்ளது.   கால சக்கரம் மிகவும் வேகமாக சுழன்றது... இதற்கு நடுவில் ரோமை பேரரசில் பல மான்னர்கள் முதல் பல சாதாரண மன்னர்கள் வரை தோன்றினர். ஒருவழியாக கான்ஸ்ட்டான்டி   நேபிள்ஸ் நகரில் ஒரு நல்ல மனிதர் அரசன் ஆனார் அவர்தான் அர்காடியன் எனப்பட்டவர்.. இவருக்கு ஒரு மகன் இருந்தார். இவர்தான் கிறிஸ்த்துவ உலகம் போற்றும் தியோடிசியன்   எனப்பட்டார். ஆண்டவறாகிய யேசு கிறிஸ்த்து இவரை வைத்து கிறிஸ்த்துவர்களுக்கு பெரும் சகாயம் பல செய்தார். ஆனால்   எக்காலத்தும் கிறிஸ்த்துவர்களுக்கு எதிரியாகிய சாத்தான்
இந்த நாட்டின் மக்களிடையே ஒரு பெரும் விஷக்கொள்கையை பரப்பினான்... அதாவது உயிர்த்தெழுதல் இல்லை. கடவுள் ஆதாமைப்படைத்ததுமுதல் உலகம் முடியும் வரை உள்ள   மக்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மடிந்துபோனால் மீண்டும் உயிர்தெழுவது இல்லை. எல்லாம் இந்த உலகத்தோடு முடிவடைந்து விடும்..ஆண்மா கடவுளிடம் சென்றுவிடும்..
உடல் இந்த உலகிலேயே தங்கி அழுகிப்போய் மண்ணோடு மண்ணாகிவிடும்..என்பதுதான் அந்த விஷக்கொள்கை. அந்த காலத்திலேயே இந்த தப்பான கொள்கையை திருச்சபை   மிகவும் வண்மையாக கண்டித்தது. அப்போஸ்த்தலர்களின் விசுவாச அறிக்கையில் " சரீர உத்தானத்தை விசுவாசிக்கிறேன், நித்திய ஜீவியத்தை விசுவாசிகிறேன்" என்னும் சத்திய
பிரமாணங்களை நம்புங்கள்.உங்கள் விசுவாச அறிக்கையை புதுப்பித்துக்கொள்ளுங்கள் என்றும் யேசு நாதரின் உயிர்ப்பையும் இறந்த லாசரின் உயிர்ப்பையும் விளக்கி உலகம் முடிந்த   பின் மறுபடியும் உயிர்ப்பு உண்டு. பொது தீர்வை நாளில் அனைவரும் உயிர்த்தெழுவர்..பின் ஆண்டவரின் இரண்டாம் வருகை இருக்கும் . பொதுத்தீர்வையின்போது ஆண்டவருகாக   மரித்தவர்களும் நல்ல ஆண்மாக்களும் மோட்ச்சம் போவது உறுதி...அக்கிரமிகளும் தீய ஆண்மாக்களும் நரகம் போவது உறுதி என்றும் தங்களுடைய கொள்கைகளை ஆணித்திரமாக   போதித்தார்கள்.
           இந்தக்காலத்தில் வாழ்ந்த ஸ்மிர்னாவை சேர்ந்த புனித பொலிகார்ப் என்னும் ஆயர், " ஆண்டவறாகிய யேசு கிறிஸ்த்துவின் வேதனை நிறைந்த பாடுகளையும், அவரது மரணத்தையும்,   அவருடைய உயிர்ப்பையும், அவருடைய உத்தானத்தையும் விசுவாசிக்காதவர்கள் சாத்தானின் தலைச்சன் பிள்ளைகள்" என மிகவும் கடுமையாகவும் பிரசங்கித்தார். ஆனாலும் அந்த
தவறான போதனை என்னவோ மிகவும் வேகமாகவும் அதிகமாகவும் பரவியது.
      மன்னர் தியோடீசியன் இந்த தப்பறையான கொள்கை தன் ஆட்சிகாலத்தில் மிகவும் வேகமாக பரவி வருவதைக்குறித்து மிகவும் கவலைப்பட்டார்.
  " ஆண்டாவா...என் மக்களை   இந்த தவறான கொள்கையிலிருந்து காபாற்ற மாட்டாயா? இதற்குத்தகுதியான நபர் யார்? அவர் எங்கே இருகிறார்? தயவுசெய்து அவரையும் அவரது இருப்பிடத்தையும் காண்பியும்.
நான் அவரை வரவேற்க காத்திருக்கிறேன்" என்று மண்டியிட்டு அழுது மன்றாடினார்.. அவரது மன்றாட்டு கேட்க்கப்பட்டது. மன்னன் திராஜன் தேசியன் காலம் துவங்கி மன்னர்   தியோடீசியன் காலம் வரை சுமார் 300 வருடங்களாக இந்த எஃபேசுப்பட்டிணத்தின் வெளிப்பகுதியில் அமைந்திருந்த சீலியா மலையின் குகையில் மீளாத்துயிலில் ஆழ்ந்திருந்த அந்த ஏழு
சகோதரர்களையும் துயில் களைய ஆண்டவறாகிய யேசுநாதர் சித்தம் கொண்டார். அவரது சித்தப்படி அக்காலத்தில் இந்த மலையின் சொந்தக்காரனாகிய தாலியுஸ் என்பவர் இந்த   மலைப்பகுதியை பார்வையிட வந்தார். இந்த மலையில் இருந்த ஒரு குகை பலகாலமாக மூடப்பட்டிருப்பதைக்கண்டு அதிசயித்து இந்த வாயிலை நாம் திறந்தால் நம் ஆடு மாடுகளுக்கு   ஒரு நல்ல தங்குமிடம் கிடைக்கும் என்று அதற்கான ஏற்பாடுகளை செய்தார். அதன்படி அந்த குகையின் வாயில் திறக்கப்பட்டது. ஆனால் உள்ளே சென்று பார்க்க அவர் தவறினார்.  தன் வீட்டிற்கும் அவர் திரும்பி சென்றுவிட்டார்.
          இந்த சூழ்நிலையில் மீளாத்தியிலில் ஆழ்ந்திருந்த அந்த சகோதரர் ஏழு பேரும் உறக்கம் கலைந்து எழுந்தனர். அவர்களைப்பொருத்தவரையில் நேற்று தூங்கி இன்று எழுந்ததாகத்தான்   நினைத்தனர். காலையில் பசி எடுக்கவே பெரியவன் மாக்சிமியன் தன் தம்பி மால்குசை அழைத்து ஊருக்குள் சென்று சாப்பிட ரொட்டி வாங்கி வரும்படி பணித்தான். அதற்காக   தன்னிடமிருந்த ஒரு வெள்ளி தெனாரியம் என்னும் நாணயத்தை அவனிடம் கொடுத்தனுப்பினான். மால்குஸ் ஊருக்குள் செல்லும்போது பல ஆச்சரியங்கள் அவனுகாக   காத்துக்கொண்டிருந்தன. 300 வருட ஆட்சி மாற்றமும் ஊருக்குள் நிலவிய கிறிஸ்த்துவ மதமாற்றமும் அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை. எங்கு நோக்கினும் கிறிஸ்த்துவ  மதச்சின்னமாகிய சிலுவை பொருத்திய வீடுகள், தேவாலயங்கள் என்று திரும்பிய பக்கம் எல்லாம் தோன்றவே தான் வந்திருப்பது எப்பேசுப்பட்டிணமா அல்லது வேறே எதேனும் பட்டிணமா என்று மால்குசுக்கு புறியவில்லை. 300 வருடமாக அவன் போட்டிருந்த ஆடைகள் முதலாய் நைந்துபோகவுமில்லை..நிறம் முதலாய் மங்கிப்போகவும் இல்லை..அவன் தோற்றம் முதலாய்  நேற்று தூங்கி இன்று எழுந்ததுபோல்தான் இருந்தது. ஆனால் எப்படியோ கடை வீதியில் நுழைந்தான். அந்த ஊர் மக்கள் இவனை ஒரு மாதிரியாகப்பார்த்தனர். தோற்றத்தில் இவன்   இந்த ஊர் காரன்போல் தெரிந்தாலும் அவன் அணிந்திருக்கும் ஆடைகள் மிகப்பழமையான காலத்தைச்சேர்ந்தது. இது எப்படி...ஒரு வேளை இவன் அயலூர்காரனா? என்றவகையில்
பார்த்தனர் . நம் மால்குஸ் இவர்களை அணுகி," ஐய்யா, இது எப்பேசுப்பட்டிணம் தானே " என்றான்..
       அவர்களும் ஆமாம் என்றனர்.மால்குஸ் அவர்களை விட்டு விலகி ஒரு ரொட்டிக்கடை  காரனை நோக்கி தனக்கு ஒரு ரொட்டி வேண்டும் என்று கேட்டு தன்னிடமிருந்த அந்த வெள்ளி தினாரியத்தை கொடுத்தான். ரொட்டிக்கடைக்காரன் அந்தக்காசையும் மால்குஸ்சையும்  மாறி மாறி பார்த்தான்.." ஐய்யா, நீர் எந்த ஊர்?" என்றான். " ஏன்...நான் இதே ஊர்காரன் தான்... இது எப்பேசுபட்டிணம்தானே" என்றான் மால்குஸ்.
ரொட்டிகடைகாரன்," ஐய்யா.. இது உம் காசுதானே?" என்றான். " ஆம்... இது என் காசுதான்...இதில் உமக்கு என்ன சந்தேகம் " என்றான் மால்குஸ்.
" ஐய்யா, உமக்கு இந்த காசுகள் எப்படிகிடைத்தது. எங்கிருந்து கிடைத்தது?"
" ஐய்யா,இது என்னுடைய காசுகள் தான். ரொட்டியைக்கொடு"
" இல்லை ஐய்யா..நீர் இந்த காசுகளை எங்கிருந்து கொண்டுவந்தீர் என்று சொல்லாதவரை உமக்கு ரொட்டி கிடைகாது."
" அதுதான் ஏன் என்று கேட்கிறேன்..உன் ரொட்டிக்கு இன்னும் அதிக விலை கொடுக்க வேண்டுமா...நேற்றுகூட நான் இந்த விலைக்குதானே வாங்கினேன்"
" ஐய்யா நீர் பேசுவது சுத்த பைத்தியக்காரத்தனம்...இந்த காசுகள் செல்லாதவை..முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவை...ஆயினும் இன்றைக்கு இதற்கு விலை அதிகம்.உமக்கு  எதேனும் புதையல் கிதையல் கிடைத்ததா?"
" அட முட்டாளே..நீ என்ன பேசுகிறாய் என்று எனக்கு விளங்கவில்லை. நானும் இதே எப்பேசுப்பட்டிணத்தை சேர்ந்தவன் தான் .என் தந்தையார்தான் இந்த எப்பேசுவின் ஆளுநறாக   பணிபுறிந்தார். நேற்றுகூட மன்னர் திராஜன் தேசியன் எங்களை பார்த்து கிறிஸ்த்துவை கைவிட சொன்னார்.. அது எப்படி ஒரே நாளில் அவர் மனம் மாறிவிட்டார். கிறிஸ்த்துவன் என்று
சொன்னாலே கொன்றுபோடும் அவர் ஒரே நாளில் மனம் மாறியது யேசுநாதர் எவ்வளவு சக்தி உள்ள தேவன் என்பதைக்காட்டுகிறது. சரி சரி..உனக்கு எதற்கு இந்த கதை எல்லாம். எனக்கும் என் சகோதரர்கள் ஏழு பேருக்குமாக ஏழு ரொட்டி கொடு.பணம் போதவில்லை என்றால் மேலும் தினாரியம் தருவேன்" என்றான் மால்குஸ்.
      தலையில் அடித்துக்கொண்டான் ரொட்டிக்கடைக்காரன்..அடக்கடவுளே இப்படியும் பைத்தியக்காரன் உலகில் இருக்க முடியுமா என்று நினைத்தவனாக," ஐய்யா...நான் முட்டாள்   அல்ல..நீர்தான் முட்டாள்..உமக்குப்பைத்தியம் பிடித்துவிட்டது என்று நினைகிறேன்.. மன்னன் திராஜன் தேசியன் இறந்து இன்றோடு சரியாக 372 வருடம் ஆகிறது. உம்மோடு
பேசிக்கொண்டிருந்தால் என் வியாபாரமும் போய்விடும் எனக்கும் பைத்தியம் பிடித்துவிடும் ..நீர் வேறு ஆளைப்பாரும் என்று அவனை அனுப்பிவிட கடையின் முன் ஒரு பெரும் கூட்டம்  கூடிவிட்டது.
      " பொறு...இவன் சொல்வதிலும் ஏதோ இருகின்றது. அவன் உடையும் அவன் வைத்திருக்கும் காசும் அதர்க்கு ஆதாரம்..இவனை நம் ஆளுனரிடம் ஒப்படைப்போம்..அவர் இவனை   விசாரிக்கட்டும் " என்றான்..இதற்கு எல்லோரும் ஒப்புக்கொள்ளவே மால்குஸ் ஆளுநனிடம் கொண்டு செல்லப்பட்டான்.." ஐய்யா...உங்களை நான் மிகவும் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்.  என்னை அங்கே கூட்டிப்போகாதீர்கள். அங்கே மன்னன் திராஜன் தேசியன் இருப்பான்..அவன் என்னையும் என் சகோதரர்கள் அனைவரையும் நிச்சயம் கொன்றுபோடுவான்...தயவு செய்து வேண்டாம்...என்னை அங்கே கொண்டு போகாதீர்கள் " என்று அலறினான்.ஆனால் யாரும் அவனை விடுவதாக இல்லை. ஒருவழியாக மால்குஸை ஆளுநரிடம்   ஒப்படைத்தார்கள்.
       ஆளுநர் அவனிடம் எவ்வளவோ தயவாய் நடந்துகொண்டாலும் மால்குஸ் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லியதால் மிகுந்த எரிச்சல் பட்டார். ஆனாலும் அவன் சொல்வதில் ஏதோ   உண்மை இருப்பதை புறிந்துகொண்டவராய் அப்போதைய ஆயராக இருந்த மரியானுக்கு செய்தி அனுப்பினார்.. இந்த ஆயர் அவர் காலத்திலேயே எப்பேசுப்பட்டினத்தில் புனிதராக   மதிக்கப்பட்டவர். அவரும் ஆளுநரை சந்திக்க வந்தார்.அவர் மால்குஸைப்பார்த்து," மகனே மால்குஸ்...நீ என்னிடம் உண்மையைதான் பேச வேண்டும்...புறிந்ததா.." என்றார்.
அதற்கு மால்குஸ், " ஆண்டவரே, என் தேவனே..நன் என் ஆண்டவறாகிய யேசுகிறிஸ்த்துவின் பேரிலும் அவரது திருத்தாயார் புனித கன்னி மரியாளின் பேரிலும் சத்தியம் செய்கிறேன். நான் சொல்வதெல்லாம் உண்மை " என்றான். அப்படியானால் உனக்கு இந்தக்காசு எங்கிருந்து கிடைத்தது என்று சொல்" என்றார். அதற்கு மால்குஸ்," ஆண்டவரே, இது எங்களுடைய   காசுதான். மன்னன் திராஜனின் கோபத்திற்கு ஆளாகமல் யேசுவை மறுதளிக்க விருப்பமும் இல்லாமல் இந்த உலக வாழ்கையை வெறுத்து எங்கள் சொத்துக்களை எல்லாம் விற்று   ஏழைகளுக்கு கொடுத்ததுபோக இரண்டு நாள் சாப்பட்டிற்கு போக மீதம் இன்னும் சில காசுகளும் என் சகோதரனிடம் இருகின்றன. வேண்டுமானால் வந்து பாருங்கள்" என்றான். அதற்கு
ஆயர் ," நீ சொல்வது உண்மையானால் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்... இல்லை என்றால் எங்களை எல்லாம் ஏமாற்றியதற்காக உன்னை சபிப்பேன்" என்றார்.
     இப்படியாக ஆயரோடும் அந்த நகர ஆளுநருடனும் மால்குஸ் உடனும் ஒரு பெரும் கூட்டம் அவனப்பின் தொடர்ந்து வந்தது. அந்த சீலியா மலையை அடைந்தபோது அந்த மலையின்   உரிமையாளன் தாலியுஸ் மிகுந்த ஆச்சரியப்பட்டு," ஆண்டவரே என் தேவனே...இந்த அடிமையின் இடத்திற்கு தேவரீர் வருகை எப்படிப்பட்டதோ" என்றான். அதற்கு ஆயர் மரியான்
," மகனே தாலியுஸ்.. இந்த மனிதனை இதற்கு முன்னோ பின்னோ பார்த்திருகிறாயா?" என்றார். இந்த ஏழு சகோதரர்களைப்பற்றி ஏதும் அறியாத தாலியுஸ்," ஆண்டவரே, என் தேவனே..  இவனை நாம் இதுவரை பார்த்ததே இல்லை" என்றார். அப்படியானால் இவன் எப்படி மிகச்சரியாக உன் தோட்டத்துக்கு வந்தான்...அவனைப்பின் தொடர்ந்து நாங்களும் வந்திருகிறோம்"   என்றார். தாலியுஸ் மிகுந்த ஆச்சரியப்பட்டு மால்குஸைப்பின் தொடர்ந்து அந்த உடைத்து திறக்கப்பட்ட குகைக்குள் பிரவேசித்தார்... அங்கே அவர்கள் கண்ட காட்சி அனைவரையும்
திடுக்கிட வைத்தது. தன்னுடைய மலையில் அதனுள் இருந்த மூடப்பட்ட குகையில் ஏழுபேர் வாழ்ந்ததெப்படி" என்றனர்.
       மூத்தவன் மாக்சிமியன்," தம்பி மால்குஸ்... வந்துவிட்டாயா...திராஜன் தேசியனைப்பார்த்தாயா...அவர் என்ன சொன்னார்...உன் உயிருக்கும் உடமைக்கு சேதம் ஒன்றுமில்லையே..  அனைவருக்கும் ரொட்டி வாங்கி வந்தாயா? கொண்டுவா ...பசிவந்துவிட்டது" என்றான்.இதற்குள் ஆயரும் ஆளுநனும் உள்ளே வந்துவிட்டனர். இந்த ஏழு பேரையும் பார்த்த மாத்திரத்தில்
ஆயர் என்ன நடந்தது என்று உடனே புறிந்து கொண்டார். ஆளுநர் வந்து," தம்பி ...நீங்கள் யார்..எத்தனை காலமாக நீங்கள் இங்கே வசிக்கிறீர்கள்..நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்?" என்றான்.. அதற்கு மாக்சிமியன்," ஐய்யா.. நாங்கள் இதே எப்பேஸு பட்டிணத்தை சேர்ந்தவர்கள் தான்..திராஜன் தேசியன் ராயன் எங்களுக்கு மூன்று நாள் கெடு விதித்து யேசுவை விட்டு விடும்படியும் அரசனையும் அவர்தம் தெய்வங்களையும் ஆராதிக்கும்படியும் கட்டளை இட்டார். ஆனால் நாங்கள் ஏழுபேரும் எங்கள் யேசுவை மறுதளிக்க முடியாதென   கூறிவிட்டோம். மூன்றுநாள் கெடுமுடிய இன்னும் இரண்டு நாள் இருந்ததால் தம்பி மால்குஸை நகருக்குள் அனுப்பி நாங்கள் சாப்பிட ரொட்டி வாங்கிவர அனுப்பினோம்.. அன்று நாங்கள் உண்டு நேற்றுதான் கண் விழித்தோம். தம்பி மால்குஸும் அதற்குள் வந்து விட்டான்..வேறு என்ன விஷயம்?" என்றான். அதற்கு ஆளுநன்," தம்பி உன்னிடமிருக்கும் காசுகளை
என்னிடம் காண்பி" என்றான்.. மாக்சிமியனும் தன்னிடமிருந்த மீதி தெனேரிய காசுகளைக்கொடுத்தான்.
        இதற்குள்ளாக அந்த சுவற்றில் ரகசியமாக தியோடர் மற்றும் ரூப்பஸ்
ஆகியோரால் பதித்துவைக்கப்பட்ட அந்த காரீயத்தால் செய்துவைக்கப்பட்ட அவர்கள் பெயர்கொண்ட பலகை கண்டுபிடிக்கப்பட்டு அது ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி இந்த   ஏழுபேர்களின் பெயரும் படிக்கப்பட்டு அவர்கள் சரிதையும் வாசிக்கப்பட்டு உண்மையை புரிந்துகொண்டார் ஆயர் மாரியான் அவர்களோ. இதைக்கண்ட ஆளுநர் மிகுந்த   ஆச்சரியப்பட்டு," தம்பி நீ சொல்வதை நாங்கள் நம்புகிறோம் என்று தடாலென அவர்கள் அனைவரின் கால்களில் விழுந்து வணங்கினார்...ஆயர் அவர்களும் கூட இந்த ஏழுபேர்களின்   முன்பாக விழுந்து " ஓ...கடவுள் அருளாள் உயிர்த்தெழுந்துள்ள மக்களே நீங்கள் பாக்கியவான்கள்...கடந்த 372 வருடம் அளவாக நீங்கள் தூங்கினீர்களோ அல்லது மரித்து   உயிர்த்தெழுந்தீர்கேளோ ..நாம் அறிவோம்...ஆண்டவனின் வல்லமையால் நீங்கள் உயிரோடு இருப்பது இறந்தபின் நித்திய ஜீவியத்திற்கு உடல் மீண்டும் உயிர்த்தெழும் என்பதற்கு
கடவுள் உங்களை சாட்ச்சியாக எழுப்பியுள்ளார். இதைத்தவிர வேறு சாட்ச்சியம் நமக்குத்தேவை இல்லை" என்றார்.
       கடவுள் ஒரு ஏழுபேரை இந்த எப்பேசுப்பட்டிணத்தில் 372 வருடம் அளவாக தூங்க வைத்து மீண்டும் உயிரோடு எழுப்பியுள்ளார் என்ற செய்தி அந்த எப்பேசுப்பட்டிணம் முழுவதும்   காட்டுத்தீபோல் பரவியது. கான்ஸ்டாண்டினேப்பிள்ல்ஸ் மன்னர் தியோடெசியனுக்கும் இந்த செய்தி அறிவிக்கப்பட்டது. இந்த சேதியைக்கேட்ட மாத்திரத்தில் மன்னர் " ஆண்டவறாகிய   யேசு கிறிஸ்த்துவின் திருநாமம் வாழ்த்தப்படுவதாக..அவரது திருத்தாயார் அன்னை மரியாளின் திரு நாமமும் வாழ்த்தப்படுவதாக..சரீர உத்தானத்தை விசுவாசிகிறேன்...நித்திய  ஜீவியத்தை விசுவாசிகிறேன் என்னும் விசுவாசப்பிரமாணங்கள் சத்தியமானவை என்பதை ஆண்டவறாகிய யேசு கிறிஸ்த்து நிரூபித்துவிட்டார்" என்றார். உடனே எப்பேசுப்பட்டினத்திற்கு
விரைந்து வந்தார்...பெருத்த ஆரவாரத்துடன் மன்னர் தியோடீசியன் வரவேற்கப்பட்டார்.. இதை எதையுமே மன்னர் கவனித்ததாக தெரியவில்லை... நேரே உயிர்த்தெழுந்த அந்த   சகோதரர் ஏழு பேரையும் சந்தித்து அவர்கள் காலில் விழுந்து வணங்கினார். மன்னர் அவர்கள் ஏழு பேரையும் வந்து சந்தித்த அடுத்தநாள் அந்த ஏழுபேரும் மீண்டும் மரணமடைந்தார்கள்.
       அது அந்த எப்பேசுப்பட்டிண மக்கள் அனைவருக்கும் மிகுந்த சோகமூட்டியது.  மன்னர் தியோடீசியனும் ஆளுநரும் ஆயரும் அடைந்த துக்கத்துக்கு அளவே இல்லை. இருப்பினும் ராஜ மரியாதையுடன் அந்த ஏழுபேரின் உடல்களும் அதே குகையில்   அடக்கம் செய்யப்பட்டன. மன்னர் தியோடீசியன் தன் அரண்மனை கஜானாவைத்திறந்து அளவிடமுடியாத அளவுக்கு தங்கமும் வெள்ளியும் கொண்டுவந்து அவர்கள் அனைவருக்கும்
தங்கத்தாலேயே பெட்டிகள் செய்ய விரும்பினார்.. ஆனால் கடவுள் சித்தம் வேறாக இருந்தது. அன்று இரவே அந்த சகோதரர்கள் ஏழுபேரும் அரசன் கனவில் தோன்றி தங்களுக்கு   தங்கமும் வெள்ளியும் வேண்டாம்..அவற்றை நாட்டின் முன்னேற்றதிற்காக பயன்படுத்துமாறும்...வெறுமனே சாதாரணமுறையில் மண்ணில் அடக்கம் செய்யப்பட வேண்டும் எனக்கூறி
மறைந்து போனார்கள். அன்றிலிருந்து மரணத்துக்குப்பின் சரீர உயிர்ப்பையும் உத்தானத்தையும் நித்திய ஜீவியத்தையும் மக்கள் விசுவாசித்தார்கள். தப்பறையான கொள்கை தகர்ந்து  போனது.
        இதே சரித்திர நிகழ்ச்சி இஸ்லாமியர்களின் புனித குரானிலும் சூரா18 ல் விவரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் கூற்றுபடி இவர்களோடு இவர்கள் வளர்த்த ஒரு நாயும் துயில்கொண்டதா கவும் அவர்களோடு அதுவும் உயிர்த்தெழுந்ததாகவும் கூறப்படுகிறது. ஜோர்டானில் அவர்கள் குறிப்பிடும் இந்த ஏழு சகோதரர்களின் கதையில் வரும் அந்த குகைக்கல்லறையில்
ஒரு நாயின் எலும்புகூடும் உள்ளதாக கூறப்படுகிறது.
அருளப்பர்,11:25 ," உயிர்தெழுதலும் வாழ்வும் நானே..என்னிடம் நம்பிக்கைகொள்பவர் இறப்பினும் வாழ்வர்...உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் ". எஃபேசு பட்டிணத்தில் இந்த ஏழு சகோதரர்களின் மரணத்திற்குப்பிறகு இந்த சீலியா மலையின் பெயர் பையோஸ் மலை என்று பெயர்பெற்றது.. இன்று வரை
அதே பெயரோடு அழைக்கப்படுகிறது. இந்த சரித்திர நிகழ்ச்சி கி.பி.5 ஆம் நூற்றாண்டுக்குப்பிறகு கிரேக்க மொழியிலிருந்து பல மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது.
    இந்த  கதையின் மீதிருந்த விருப்பத்தால் பல நாடுகளில் இந்தக்கதை இங்குதான் நடந்தது என்றும் அந்தந்த ஊர்களின் பெயர்கள், நபர்களின் பெயர்கள் கூட மாற்றப்பட்டு நடைமுறையில்   புழங்கி வருகிறது..இதனால் சில நாடுகளில் இவர்கள் 300 வருடம் தூங்கினார்கள் என்கிறார்கள்..இன்னும் சில நாடுகளில் 180 ஆண்டுகள் தூங்கினார்கள் என்கிறார்கள்.
எப்படிப்பார்த்தாலும் 180 வருடம் என்றாலும் 300 வருடம் என்றாலும் 372 வருடம் என்றாலும் கால வித்தியாசம் மிக அதிகம்..300 ஆண்டுகள் மூடிய குகைக்குள் அன்ன ஆகாரம் இன்றி, நீரும் இன்றி, காற்றும் இன்றி தூங்கினார்கள் என்பது ஆண்டவனின் அருளே அன்றி வேறு இல்லை.

Monday, December 9, 2013

" நாக தேவன் கோயிலும் நரகத்தின் வாயிலும் "




                 " நாக தேவன் கோயிலும் நரகத்தின் வாயிலும் "
     கி.பி.முதல் நூற்றாண்டின் இறுதியில் தன் உதவியாளர் கொண்டு வந்து கொடுத்த இரண்டு கல் சிற்பங்களையும் பார்த்த அந்த கிரேக்க புதைபொருள் ஆராய்ச்சியாளர் ஸ்டிராபோவுக்கு தலை சுற்றிப்போனது... காரணம் இல்லாமல் இல்லை. இந்த பகுதி முழுக்க பாம்பு சிலைகள் நிறைய கிடைத்திருந்தாலும் இதைப்போன்ற பாம்பு சிற்பத்தை அவர் இதுவரை பார்த்ததே   இல்லை.. அது ஒரு பறவை நாகம் போன்ற சிலை.. ஓநாய் போன்ற தலையும் அதன் கூறிய பற்களும் நீண்டு விறிந்திருந்த இறக்கைகளும் பாம்பு உடலும், நான்கு கால்களும் கொண்ட   ஒரு பறவை நாக சிற்பம் அதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில்லை. மற்றும் ஒரு சிலை.. இது முற்றிலும் வித்தியாசமானது. மூன்றுதலை நாய்..அதன் கோர முகமும், கூறிய பற்களும்
காண்போரை அதிற்சிக்குள்ளாக்கும்.
       இந்த இரண்டு சிலைகளையும் கையில் வைத்திருந்த அந்த ஆராய்ச்சியாளருக்கு லேசாக மயக்கம் வந்தது. அவரின் முதுகுத்தண்டின் ஆரம்பம் முதல் கடைசிவரை சில்லென்றார்போல்  ஒரு உணர்வு ஏற்பட்டது. அவரது உள்ளங்கையிலிருந்து ஒரு நரம்பு புடைத்துக்கொண்டே வந்தது. வெகு விரைவில் அந்த புடைத்த நரம்பு மூளையை தாக்கவே அவர் தான் காண்பது
கனவா அல்லது நனவா என்னும் நிலைக்கு ஆளானார். அவர் கண்ட காட்சி இதுதான்.
      அவர் கையிலிருந்த அரக்கப்பாம்பு சிற்பம் உயிர் பெற்று எழுந்தது...உடனே அது விஸ்வ ரூபம் எடுத்தது. வாயில் நெருப்பை கக்கிக்கொண்டு வானில் பறந்தது. மயில் அகவும்   என்பதற்கொப்ப அதன் குறல் இருந்தது. அதன் குறலொலி உலகம் முழுக்க எதிரொலித்தது. அதன் குறலைக்கேட்ட மக்கள் யாவரும் பயத்தால் கண்களை மூடிக்கொண்டு தலை குப்புற
விழுந்து " எகித்னா...எங்களை ஒன்றும் செய்யாதே... எகித்னா...உனக்கு என்ன வேண்டும் ..அவசியம் அதை நான் தந்துவிடுகிறேன்..எகித்னா... எங்களை ஒன்றும் செய்து விடாதே"   என்று மன்றாடி அழுவார்கள். ஒரு வழியாக அந்த அரக்கப்பாம்பு தன் சுய ரூபம் எடுத்து தன் வசிப்பிடமான ஒரு குகைக்கோயிலை அடைந்தது. அந்த குகை வாயிலில் ஒரு மூன்றுதலை
நாய் காவல் காத்துக்கொண்டிருந்தது. இந்த வினோதமான இரண்டு விலங்குகளும் அதனதன் ஆசனத்தில் அமர்ந்தன. கோயில் பூசாரி வந்து மாடுகளையும், கன்றுகளையும் பலி கொடுப்பார். அவருக்கு சன்நதம் வரும்போதெல்லாம் ஊர் மக்கள் வந்து தங்கள் எதிர்காலம் பற்றி குறி கேட்ப்பர். பூஜாரி சொல்லும் குறிப்புகள் மிகச்சரியாக இருக்கும்.
   அழகிய மனைவியை வைத்திருப்பவன் வந்து குறிகேட்டால் தொலைந்தான் அவன். பூஜாரி அவளை அடைய என்னென்ன எத்தனங்கள் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்வான். அவள் மறுத்தால்   பூஜாரி அவள் மீது களங்கம் கற்பித்து அந்த தெய்வங்களுக்கு பலியாக அந்த குகையினுள் தூக்கிப்போடச்செய்வான். அந்த குகைக்குள் வீழ்ந்தவர்கள் உயிரோடு எழுந்ததாக சரித்திரம்   இல்லை. தங்கள் குறைகளைக்களையவும் தங்கள் எதிர்காலத்தை நல்ல விதமாக அமைத்துக்கொள்ளவும் இந்த பூஜாரிகளுக்கு அள்ளிள்ளிக்கொடுத்தே போண்டியாகப்போனவர்கள்
அதிகம்.
     ஒரு காலக்கட்டத்தில் " ஆண்டவா எங்களை இந்த அரக்கப்பாம்பின் தொல்லையிலிருந்தும் இந்த பாழாய்ப்போன பூஜாரிகளின் தொல்லயிலிருந்தும் எங்களைக்காப்பாற்ற யாராவது
வரமாட்டார்களா " என்று ஏங்கி ஏங்கி தங்கள் கரங்களை உயர்த்தி கத்தி கதறி அழுதர்கள்.
      காட்சி விலகியபின்னர் ஆராய்ச்சியாளர் ஸ்டிராபோவுக்கு இப்போது எல்லாம் புறிந்து போயிற்று. " ஓஹோ.. அந்த பறவை நாகப்பாம்பின் நரக வாசல் எனப்படும் ப்ளூடோனிக்யக்கோயில்   இதுவாகத்தான் இருக்க வேண்டும் " என்று உறுதி செய்து, பாழடைந்த அந்த பெரும் மண்டபத்தின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த குகையின் வாயிலை முகர்ந்து பார்த்தார். அதன்   முகப்பில் பெரும் புகை மண்டலம் இருந்தது.. சகிக்கமுடியாதபடி கந்தகத்தின் நெடி வீசியது. இதை உறுதிப்படுத்தும்படி தன்னிடமிருந்த சில பட்ச்சிகளை அதனுள்ளே போட்டார்..
    என்ன துரதிர்ஷ்ட்டம்.. உள்ளே பறந்துபோன அந்த பட்சிகள் பறக்கமுடியாமல் சிறகடித்து சிறகடித்து அதுவும் முடியாமல் போகவே பொத்து பொத்தென கீழே விழுந்து செத்தன.
" ஆம்... சரித்திரம் கூறும் நரக வாசல் எனப்படும் ப்ளூட்டோனியக்கோயில் இதுதான் என்றார்.
        இந்தக்கதை ஆரம்பிக்கும்போது கலிலேயாக்கடற்கரையில் கூட்டம் அளவுக்கதிகமாக இருந்தது. அது கி.பி. 30 ஆம் வருடம். யேசுநாதர் என்னும் ஒரு யூத ராபி செய்யும் அருங்குறிளும்  அற்புதங்களும் மக்கள் மத்தியில் பெரும் பேச்சாக இருந்தது....அவர் அப்போதுதான் ஜோனாவின் மகன் சீமோனையும் அவர் தம்பி ஆந்திரேயரையும் தன் அப்போஸ்த்தலர்களாக தெரிந்து  கொண்டிருந்தார். இவர்கள் பெத்சாயித்தா பட்டிணத்தை சேர்ந்தவர்கள்...இதே ஊரைச்சேர்ந்த ஒரு பெரும் பணக்காரர் வீட்டுப்பிள்ளையான ஒரு அழகிய வாலிபனும் யேசுநாதரைக்காண
கலிலேயாவுக்கு வந்திருந்தார். ஒரு முப்பது வயதைக்காட்டும் முகமும் அழகிய கண்களும் தீர்க்கமான நாசியும் இவர் எதற்கும் லேசில் மசிய மாட்டாதவர் என்னும் தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தன. இந்த நிலையில் யேசு நாதர் " பிலிப்பே...என்னை பின்பற்றி வா" என்றார். யேசுநாதரின் வசீகரிக்கும் முகமும் கண்களும் பிலிப்பை ஏதோ செய்தன. பதில் ஏதும் பேசவில்லை  பிலிப்பு. அந்த நேரமே பிலிப்பு யேசுநாதரை தன் எஜமானறாக ஏற்றுக்கொண்டார்..இந்த அழைப்பு தனக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட பூர்வ ஜென்ம பந்தம் என்று நம்பினார்.
      இந்த உறவால் பிலிப்பு தன் நண்பன் நாத்தானியேலை யேசுநாதருக்கு அறிமுகப்படுத்தவேண்டி அவரை சந்தித்தார்..அப்போது நாத்தானியேல் " நசரேத்தூரிலிருந்து நல்ல செய்தி ஏதேனும் வரக்கூடுமோ " என்றார்.. அதற்கு பிலிப்பு " வந்து பாரும் " என்றார். பிலிப்பும் நாத்தனியேலும் யேசுநாதரைப்பற்றி பலவிஷயங்கள் பேசினர். உண்மையில் நாத்தானியே யேசுவின்
பால்ய சினேகிதர். இருவரும் யேசுவை சந்தித்தபோது யேசுநாதர்," இதோ ஒரு உண்மையான இஸ்ராயேலன்.. இவரிடத்தில் குறையொன்றும் நாம் கண்டதில்லை" என்று கூறினார்.
அதற்கு நாத்தானியேல் ," யேசுவே நீவீர் எம்மை கண்டுகொண்டது எப்படி? " என்றார். அதற்கு யேசு நாதர்," நாத்தானியேல் ..நீர் அத்தி மரத்தடியில் பிலிப்புவிடம் பேசும்போதே நாம் உம்மை கண்டு கொண்டோம் " என்றார். யேசுநாதர் நாத்தானியேலையும் தம் அப்போஸ்த்தலராக தேர்ந்துகொண்டார். யேசுவும், நாத்தானியேல் என்னும் பார்த்தலோமியோவும், பிலிப்பும்
இணை பிரியா தோழராகினர். கூடுமானவரை இவர்கள் மூவருக்கும் ஒத்தவயதே இருக்கும். காலம் மிகவும் வேகமாக சுழன்றது.
    ஒரு முறை யேசுநாதர் தாக்பா என்னுமிடத்தில் மலைப்பிரசங்கம் செய்தார். யேசுநாதரின் பல பிரசங்கங்களில் இந்த மலைப்பிரசங்கம் மிகவும் புகழ் பெற்றது. இப்படி ஒரு பிரசங்கத்தை உலகில் எந்த நாட்டிலும் எந்த மஹானும் செய்ததில்லை..நேரம்போனது தெரியாமல் மக்கள் யேசுவின் பேச்சில் மயங்கியபடியே கேட்டுக்கொண்டிருந்தனர். பிரசங்கம் முடிந்ததும் மக்களுக்கு
பசி வந்தது..யேசு," பிலிப்புவே இந்த மக்களுக்கு உணவுக்கு ஏதேனும் ஏற்பாடு செய்ய முடியுமா" என்றார். அதற்க்கு பிலிப்பு " ஆண்டவரே,, இவ்வளவு மக்களுக்கு எங்கிருந்து உணவு  கொடுக்க முடியும்..இரண்டு நூறு தெனாரியத்துக்கு ரொட்டி வாங்கினாலும் அனைவருக்கும் கொடுத்து கட்டுபடி ஆகாதே..மேலும் இவ்வளவு பேருக்கு எங்குபோய் ரொட்டி வாங்க
முடியும்" என்றார்..இருப்பினும் யேசுநாதர் அத்தனை பேரையும் பந்தி அமரச்செய்து உணவு பரிமாற ஏற்பாடு செய்யச்சொன்னார். கூட்டத்திடில் ஒரு பையனிடத்தில் கிடைத்த ஐந்து அப்பத்தையும் இரண்டு மீன்களையும் ஆசீர்வதித்து தன் பரமபிதாவிடம் வேண்டி அங்கிருந்த ஐந்தாயிரம் பேருக்கும் வயிறார உணவு பரிமாறினார். மற்ற அப்போஸ்த்தலர்களை
பார்க்கிலும் பிலிப்பு யேசுநாதரை அதிகம் கவனிப்பார். யேசுநாதர் ஒவ்வொரு புதுமையை செய்யும் போதும் அவர் கண்களையும் கைகளையும் உயர்த்தி தன் பரலோக பிதாவிடம் மன்றாடுவதும் அந்த புதுமை நிறைவேறியபின் தாம் அவருக்கு நன்றி கூறுவதையும் பிலிப்பு கவனிக்கத்தவறுவது இல்லை.
ஒரு முறை யேசுநாதர் தன் அப்போஸ்த்தலர்களை அழைத்து அவர்களுக்கு சகல உறுதிளையும் சக்திகளையும் கொடுத்து," நீங்கள் இருவர் இருவறாகச்சென்று என் பெயறால் சகல   மனிதருக்கும் போதியுங்கள்...நோயாளிகளை குணமாக்குங்கள்.. என் பெயரால் பேய்களை ஓட்டுங்கள்...என்னில் விசுவாசம் கொள்பவனுக்கு அனைத்தும் கிடைக்கும்...என் தந்தை என்னை அனுப்பியதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்.. அதாவது ஓ நாய்களிடையே ஆட்டுக்குட்டிகளைப்போல " என்றார். இந்த வார்த்தைகளிலும் யேசுநாதர் என் தந்தை
என்னை அனுப்பியதுப்போல என்கின்றார். ஒரு நாளைக்கு அவர் தந்தையைப்பற்றி அவரிடமே கேட்டுவிடவேண்டியது தான் என்று மனதுக்குள் தீர்மானித்துக்கொண்டார் பிலிப்பு.
அதற்கான ஒரு சந்தர்ப்பமும் ஒருநாள் வந்தது. தன் சந்தேகத்தை பிலிப்பு யேசுவிடம் கேட்டேவிட்டார்.
" ஆண்டவரே... தேவறீர் என்னை மன்னிக்க வேண்டும்...நீங்கள் இரவில் எங்களோடு தங்குவதே இல்லை... எங்கேயாவது தனிமையில் சென்று இரவு முழுவதும் ஜெபித்துக்கொண்டே  இருகின்றீர்...பகலிலும் உறங்குவதே இல்லை..சற்று நேரம் ஓய்வு கொள்வதோடு சரி...நீங்கள் யாரிடம் ஜெபிக்கிறீர்..என்றார்..யேசுநாதர் பிலிப்புவைக்கூர்ந்து நோக்கினார்.
" பிலிப்புவே ..நான் வான்வீட்டிலிருக்கும் என் பரம தந்தையிடமே ஜெபிக்கிறேன்..இரவில் நான் ஜெபிப்பது அடுத்த நாளைக்கான பிரசங்கம் மற்றும் புதுமையைக்குறித்தும் அதற்க்கு   வேண்டிய காரியங்களைக்குறித்தும் என் பரமபிதாவிடம் மன்றாடுவேன்.. அவர் சொல்வதையே நானும் சொல்வேன்... அவர் செய்யச்சொல்வதையே நானும் செய்வேன்" என்றார்.
இத்தகைய பதிலால் திருப்த்தியடையாத பிலிப்பு," ஆண்டவரே..தேவறீர் அடிக்கடி எம் தந்தை எம் தந்தை என்று கூறுகிறீர். ஆனால் ஒரு நாளும் அவரைகாட்டியதில்லை..ஆகவே  தேவறீர் எங்களுக்கு உம் பரலோக தந்தையை காட்டியருளும்" என்றார்.
யேசுநாதர்," பிலிப்புவே...நீர் கேட்பது என்னவென்று உனக்கு விளங்கவில்லை போலும்.. வானகத்திலுள்ள என் பரம தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருகின்றோம்..
என்னை அறிபவன் என் தந்தையை அறிவான்..என்னைப்பார்கிறவன் என் தந்தையை பார்க்கிறான்..எனக்கு செவி கொடுகிறவன் என் பரம தந்தையின் குரலுக்கு செவி கொடுக்கிறான்..இதில் என் தந்தையை காட்டு என்று நீ கேட்பது எப்படி? இவ்வளவு காலமும் என்னோடு பழகி இருந்தும் இதை நீ புறிந்துகொள்ளாதது எப்படி" என்று அவர் மீது சற்றே
கடிந்துகொண்டார். இருப்பினும் பிலிப்புவுக்கு யேசுவின் இந்த பதில் அவ்வளவாக திருப்தி அளிக்கவில்லை. அது எப்படி இவர் அவருக்குள்ளும்...அவர் இவருக்குள்ளும் எப்படி..
. எப்படி..என்று மண்டையைக்குடைந்துகொண்டார்.
 ஆனால் இதற்கான பதில் பிலிப்புவுக்கு அப்போது விளங்கவில்லை. யேசுநாதர் இறந்து அவரும் பரலோகம் சென்று பரிசுத்த
ஆவியானவர் தேவ தாயார் மீதும் அப்போஸ்த்தலர்கள் மீதும் இறங்கிவந்து அவருடைய ஏழு வரங்களான ஞான்ம்,புத்தி,வல்லமை,அறிவு, திடம்,பக்தி,தெய்வபயம் அனைத்தும்  கிடைத்தபிறகு, பிலிப்புவுக்கு என்றில்லை...அப்போஸ்த்தலர்கள் அனைவருக்கும் தமதிரித்துவத்தின் ரகசியம் அனைத்தும் புறிந்தது..மோட்ச்சம் என்பதும் உலகம் என்பதும் நரகம்
என்பதும் என்னவென்று புரிந்தது.. படைப்பின் சத்துவங்கள் அனைத்தும் புரிந்தது...உடல் என்பது என்ன... ஆன்மா என்பது என்ன என்று அனைத்தும் திட்டவட்டமாக புரிந்தன.
படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக.. மனுவைபடைத்தான் தன்னை வணங்க என்பதும் இந்த உலகமெல்லாம் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஆகும் வரை இந்த   படைப்புகள் அனைத்தும் அதனதன் வேலைகளை செவ்வனே தொடரும் என்பதும் புரிந்தது..தன்னால் படைக்கபட்ட மனிதன் சாத்தானின் சோதனையால் தோல்வியுற்று நித்திய
வாழ்வை இழந்துபோனான் என்றாலும் பரலோக பிதா இந்த மனித ஜென்மத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்ததால் அவனுக்கு நித்திய வாழ்வுகொடுக்கும்பொருட்டு தன் ஒரே பேரான   மகனை இந்த உலகத்தை மீட்க அனுப்பினார் என்றும் அப்படிவந்தவர்தான் யேசு என்னும் பெயரில் வந்த இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரன் என்றும் புரிந்துகொண்டார்கள்..
அப்படி அவர் இந்த உலகத்துக்கு வர மனித சந்ததிக்கு பிறவாமால் மூன்றாம் ஆளாகிய பரிசுத்த ஆவி என்னும் சர்வேசுரனின் வல்லமையால் கன்னிமரியினின்று பிறந்தார் என்றும் புரிந்துகொண்டார்கள்...
    இனி இந்த உலகில் தங்கள் பணி யேசுகிறிஸ்த்துவை உலகம் முழுவதற்கும் அறிவிக்கவேண்டியதுதான் என்றும் உணர்ந்துகொண்டார்கள்..
இந்த சூழ்நிலையில் ஒருநாள் பிலிப்பு சமாரியாவில் வேதபோதக அலுவலை மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் ஆண்டவரின் ஆவியால் நிரப்பப்பட்டு ஜெருசலேமிலிருந்து காசா செல்லும் ராஜ பாட்டையில் எத்தியோப்பியா நாட்டின் காந்தைஸ் ராணியின் ஒரு அமைச்சனை சந்திக்கச்சொன்னார். அந்நேரமே பிலிப்பு அந்த ராஜபாட்டையில் தோன்றினார். அந்த
வழியே தன் அலுவலை முடித்துவிட்டு தேவாலையத்தையும் பார்த்துவிட்டு தன் தாய் நாடு திரும்ப காசா பட்டிணம் திரும்பிக்கொண்டிருந்த அந்த எத்தியோப்பிய அமைச்சர்   இசையாஸ் தீர்க்கதரிசியின் 53ஆம் பகுதியின் பாடல்கள் அடங்கிய ஓலைச்சுருளை வாசித்துக்கொண்டிருந்தார். சில இடங்களில் அதன் பொருள் அவருக்கு விளங்கவில்லை. இந்த
நேரத்தில் அங்கு வந்துகொண்டிருந்த பிலிப்பு இந்த எத்தியோபிய அமைச்சரை சந்தித்து பேசினார். அவரும் பிலிப்புவை வரவேற்று தன் அருகில் அமர்த்திக்கொண்டார்..
    பிலிப்பு இசையாஸ் தீர்க்கதரிசியின் வசனங்களில் யேசுநாதரின் பாடுகளைப்பற்றியும் அப்போது அவர் எப்படி இருந்தார் என்றும் அவர் எப்படி இறந்தார் என்பதுபற்றியும் தான் கண்டதும் கேட்டதும்   இசையாஸ் பாடல்களில் எப்படி நிறேவேறியது என்றும் விளக்கினார். இந்த விளக்கங்களில் திருப்தியடைந்த அந்த எத்தியோப்பியன்," பிலிப்புவே..இதோ இங்கே தண்னீர் இருகின்றது..  நான் ஞாஸ்நானம் பெறுவதில் தடை என்ன என்றார்...
      பிலிப்புவும் அவர் விரும்பியபடியே அவருக்கு அங்கேயே ஞானஸ்நானம் கொடுத்தார். அந்த எத்தியோபிய மந்திரியின் வழியாக எத்தியோப்பியாவில் கிறிஸ்த்துவம் பரவியது.
       அந்த எத்தியோப்பிய மந்திரி ஞாஸ்நானம் பெற்ற இடம் இன்னும் இருக்கின்றது. [கி.பி.724 முதல் 728] வரை இப்பகுதியை திரு யாத்திரை மேற்கொண்ட வில்லிபால்ட் என்பவர் எழுதிய   பாலஸ்த்தீன பயணக்கட்டுரையில் இந்த இடத்தப்பற்றி குறிப்பிடும்போது அங்கு ஒரு பழங்கால தேவாலயம் இருந்ததாகவும் அது அக்காலத்தில் புகழ்பெற்ற மடபா வரைபடத்தில்   இடம்பெற்றிருந்ததாகவும் குறிப்பிடுகின்றார். இன்று அந்த இடம் பெய்த்சூர் என்னுமிடத்திற்கருகில் ஐன் அல் திர்வா என்னும் இடத்தில் இருகின்றது. இந்த பெய்த்சூர் என்னுமிடம்தான்  குழந்தை யேசுவை சந்திக்க வந்த மூன்று ராஜாக்கள் கடைசியாக தங்கிய இடம்..அன்று ராஜ பாட்டையாக இருந்த இடம் இன்று ஒத்தையடிப்பாதையாக மாறிவிட்டது.
        இப்படியாக இந்த உலகம் முழுமைக்கும் யார் யார் எங்கெங்கு போக வேண்டும் என்பதற்காக தங்களுக்குள்ளே சீட்டு போட்டார்கள். நம் பிலிப்புவுக்கும் நாத்தானியேல் என்னும்   பார்த்தலோமியோவுக்கும் ஸ்மிர்னா பட்டிணத்திற்குப்போகும்படி வந்தது. அப்போது பேதுரு என்னும் ராயப்பர் கூறினார் ," யேசுவில் இனிய என் சகோதரர்களே...இன்று பிறியும் நாம்
மீண்டும் இந்த உலக வழ்வில் சந்திக்கப்போவதே இல்லை...யேசு நம்மை நம்மில் இருந்து ஆட்சி செய்வாறாக...அன்று யேசுநாதர் நம்மிடம் கூறியதை சற்றே ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்...என் பரலோக தந்தை என்னை அனுப்பியதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்... அதாவது ஓநாய்களின் மத்தியில் ஆட்டுக்குட்டிகளைப்போல...இதே வார்த்தைகளையே நானும் உங்களுக்குச்சொல்கிறேன்...யேசு என்னை உங்களுக்குத்தலைவராக ஏற்படுத்தியதால் அவரின் ஆசீர்வாதத்தையே நானும் உங்களுக்கு கொடுகிறேன்..
       பிலிப்புவே...பார்த்தலோமியோவே.. நீங்கள் போகும் தேசம் என்னவென்று உங்களுக்குத்தெரியுமா?...கொடுமையான மிலேச்சர்களும் சிலைவழிபாடு செய்பவர்களும் மலிந்த நாடு அது.  யூதர்களுக்கு தலை நகர் ஜெருசலேம் என்றால் சாத்தானின் தலை நகர் ஸ்மிர்னாவாகும்...சாத்தானை அதன் நரகக் குகை வாயிலிலேயே சந்திக்க யேசு உங்களை   தேர்ந்தெடுத்திருகிறார்.. அவரின் வல்லமையால் நீங்கள் சாத்தானை வெல்வது உறுதி. யேசுவுக்கு சாட்சிகளாக நீங்கள் திகழ்வீர்களாக... சென்று வாருங்கள்.." என்று அவர்களை
கட்டித்தழுவி முத்தமிட்டு அனுப்பினார். இப்படியாகவே அனைத்து அப்போஸ்த்தலர்களும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி பிரியாவிடைகொடுத்து பிரிந்தனர்.
                     " ஸ்மிர்ணா என்னும் ஒரு பெரும் பட்டிணம்."
யேசு கிறிஸ்த்து மனிதாவதாரமாக இவ்வுலகிற்கு வருவதற்கு 133 ஆண்டுகளுக்கு முன்னே ரோமர்கள் இந்த நாட்டை கபளீகரம் செய்துகொண்டார்கள். தங்கள் ஆதிக்கத்தை   நிலைநாட்ட தங்களின் தெய்வங்களையும் தேவர்களையும் பற்றிய கதைகளை அவர்கள் பரப்பினர். தங்களுடைய தெய்வங்களின் கோயில்களையும் அரண்மனைகளையும் மஹால்களையும் கட்டினர். இன்றைக்கு இந்த பட்டிணம் துருக்கி தேசத்தின் தென் மேற்கில் உள்ளது. இன்று ஸ்மிர்ணா என்னும் பெயர் மாறி இஸ்மீர் என்று அழைக்கப்படுகிறது. இந்த பட்டிணம் துருக்கி   தேசத்தின் ஒரு மாநிலமாக உள்ளது.. இந்த மாநிலத்தின் ஒரு மாவட்டம் தான் எப்பேசுஸ் என்னும் பட்டிணம்.
      யேசு கிறிஸ்த்துவின் மறைவுக்குப்பிறகு ஜெருசலேமில் வேத
கலாபணை ஆரம்பித்த பொழுது யேசுவின் பிரியமான சீடரும், சுவிஷேஷகரும்,அப்போஸ்த்தலர்களுள் ஒருவருமான புனித ஜான் என்னும் அருளப்பர் யேசுவின் தாயாறாகிய புனித மரியாளை தன்னுடன் அழைத்துக்கொண்டு இந்த எப்பேசு பட்டிணத்துக்குதான் வந்தார். தேவ தாயார் இந்த எப்பேசுப்பட்டிணத்தில்தான் கடைசிக்காலம் வரை வாழ்ந்து மரித்து
கல்லறையில் அடக்கம் செய்ய்யப்பட்டதாக ஒரு சரித்திரம் சொல்லுகிறது. இப்போதும் இந்த எப்பேசு பட்டிணத்தில் தேவதாயார் கடைசியாய் வாழ்ந்து மரித்த வீடு உள்ளது.
  ஆண்டவறாகிய யேசுநாதர் இதையும் ஒரு அர்த்தத்தோடுதான் செய்திருகிறார் என்று சொல்லத்தோன்றுகிறது. இந்த ஸ்மிர்ணாப்பட்டிணம் சாத்தானின் தலை நகராக உள்ளதால் அதை அடக்க அதன்
ஜென்ம விரோதியான மரியாளின் சமாதியும் இங்கிருப்பது மிகவும் பொருத்தமானதாகவே உள்ளது. ஆதி ஆகமத்தில் கடவுள் பாம்பை சபிக்கும்போது ," கன்னி கருத்தாங்கி ஆண்மகவை  பெற்றெடுப்பாள்.. அவள் உன் தலையை நசுக்குவாள்..ஆனால் நீயோ அவளை ஜெயிக்க முற்படுவாய்..அவள் குதிகாலை தீண்ட முற்படுவாய். ஆனால் அது உன்னால் முடியாது..." என்னும் வேத வாக்கியங்களை நினைவுக்கு கொண்டு வாருங்கள்..ஆக தேவ தாயார் அங்கிருக்கும் வரை சாத்தானின் கொட்டமனைத்தும் அடக்கப்பட்டுவிடும்..அவன் தலை
தூக்கும்போதெல்லாம் தேவ தாயாரானவள் அவன் தலை தூக்காதபடி அவனை மிதித்துக்கொண்ட இருப்பார். ஆக சாத்தானின் தலை நகர் இங்கிருக்கிறது... மேலே சொன்ன நாக தேவனின் கோயிலும் நரகத்தின் வாயிலும் எங்கிருகின்றது?. அது இந்த எஃபேசுப்பட்டிணத்திலிருந்து அடுத்த மாகாணமான பைஜீரியாவிலிருக்கின்றது. எப்பேசுப்பட்டிணத்திலிருந்து
250 மைல் தொலைவில் கிழக்கே சென்றால் அங்கே இருக்கின்றது இந்த நாக தேவன் கோவிலும் நரகத்தின் வாசலும்.. இங்குதான் வந்தார்கள் நம் அப்போஸ்த்தலர்களான   நாத்தானியேலும், பிலிப்பும்.
                    " நாக தேவன் கோவிலும் நரகத்தின் வாசலும் "
     " ஓப்பியோர்மே" என்னும் பெயர் இந்த பட்டிணத்திற்குறியது. கிரேக்கர்களும் ரோமானியர்களும் தாங்கள் வழிபடும் பாம்புதேவனுக்கு ஓப்பியோர்மே என்பது பெயர். இந்தப்பட்டிணத்தில்  அனேக பாம்புக்கோயில்கள் இருந்தாலும் இந்த ஓப்பியோர்மே என்னும் பாம்புக்கோயில் பிரசித்தி பெற்றது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. நெருப்பை கக்கும் அரக்கப்பாம்பு இந்த
கோயிலின் கருவறையிலே இருக்கும். எப்போதாவது தன் அரக்கத்தன்மையோடு நெருப்பைக்கக்கிக்கொண்டு விசுவ ரூபம் எடுத்து வெளிவரும்...கண்ணில் பட்டோரை   கடித்துக்குதரும்...பலரை உயிரோடு விழுங்கும். திரும்பிச்செல்லும்போது நரக வாசல் எனப்படும் புளூட்டோனியக்குகைக்கோயிலில் போய் மறையும்.. மக்களுக்கு இந்த அரக்கப்பாம்பின்   மீது இருந்த பயம் நம் நாத்தானியேலும் ஃபிலிப்பும் வரும்வரை இருந்தது.
        பிலிப்புவுக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருந்தார்கள். அதில் இரண்டு பெண்பிள்ளைகள் திருமணமே செய்துகொள்ளாமல் தங்கள் வாழ்க்கையை கடவுளுக்கு அர்ப்பணித்துவிட்டார்கள். கடைசிப்பெண் திருமணம் ஆனவர்..அவரும் தன்னை தேவ ஊழியத்துக்கு ஒப்படைத்துவிட்டார். எஃபேசில் வாழ்ந்து வந்தார். பிலிப்பின் சகோதரி மீரியம்
என்பவரும் பிலிப்பின் கூடவே வந்து தன்னையும் தேவ ஊழியத்துக்கு அர்ப்பணித்திருந்தார். இவர்கள் ஒரு கூட்டணியாய் இந்த பாம்புப்பட்டிணமாகிய ஓப்பியோர்மே நகரில் வந்து தங்கி
தங்களின் வல்லமையான் பிரசங்கத்தினாலும் செய்த அருங்குறிகளாலும் பலர் யேசுவை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களிள் குறிப்பிடத்தகுந்தவர் ஸ்தாக்கீஸ் என்பவர்.
      அவர் தன் மனைவி மக்கள் அனைவருடனும் யேசுவை ஏற்றுக்கொண்டார். தன் வீட்டிலேயே நம் அப்போஸ்த்தலர் நாத்தானியேல் பிலிப்பு அவர் பிள்ளைகள் அவர் சகோதரி மீரியம் அனைவரையும் தங்க வைத்துக்கொண்டார். அவர்களின் ஊழியத்துக்கான அனைத்து தேவைகளையும் ஸ்த்தாக்கீஸே கவனித்துக்கொண்டார். எனவே கடவுளின் ஆசீர்வாதம் அவர் மீதும்   அவருடைய குடும்பத்தார் அனைவருக்கும் ஏறாளமாக கிடைத்தது. பிலிப்பும் நாத்தானியேலும் செய்த அரும்குறிகளில் ஒன்று இறந்த மனிதன் ஒருவரை உயிர்த்தெழ வைத்தது என்று
ஒரு சரித்திரக்குரிப்பு கூறுகிறது. இதனால் சாத்தான் மிகுந்த கோபம் கொண்டான். நாத்தானியேலையும் பிலிப்புவையும் பழிவாங்க தக்க சந்தர்பத்திர்காக காத்திருந்தான்.
    ஒரு நாள் இந்த ஓப்பியோர்மே நகர ஆளூனனின் மனைவி நக்னோறா என்பவள் பிலிப்பின் வல்லமையான பிரசங்கத்தைக்கேட்டாள். பிரசங்கம் முடிந்ததும் அவள் தன்னை பிலிப்புவிடமும் நாத்தனியேலிடமும் அறிமுகப்படுத்திக்கொண்டாள். " ஐய்யா..நான் ஒரு எபிரேயப்பெண்..என் தந்தையார் பேசும் எபிரேய பாஷையிலேயே நீர் பேசுவதால்
நான் உம்மை என் தந்தையாகவே பாவிகிறேன்..எனக்கு பார்வைக்கோளாறும் பெண்களுக்கே உண்டான பல சொல்லமுடியாத நோய்களும் எனக்கு உண்டு. தாங்கள் எனக்காக ஜெபித்து  என் நோயிலிருந்து விடுதலைதர முடியும் என நம்புகிறேன்... தேவறீர் என் மீது இரக்கம் வைக்க வேண்டுகிறேன்" என்றாள்..பிலிப்பும் நாத்தானியேலும் அவளுக்காக ஜெபிக்க அப்போதே
முற்றிலும் குணமடைந்தாள் நக்னோறா. அவள் அடைந்த மகழ்சிக்கு அளவே இல்லை.ஆனால் நக்னோறாவின் மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. தன் மனைவி நக்னோறா குணமடைந்தது அவள் கணவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை..அதுவும் இரவில் அவள் தனிமையில் ஜெபிக்கும்போது அவள் இருந்த அறை முழுவதும் ஒளி வெள்ளத்தால் சூழப்பட்டிருப்பதைக்கண்ட ஆளுனன் தன் மனைவி தான் வணங்கும் நாக தேவனை வழிபடாமல் யேசு என்னும் புதிய தெய்வத்தை வணங்குவதை அவனால் சகித்துக்கொள்ள
முடியவில்லை. "யேசுவை நீ கும்பிடக்கூடாது.. நம் முன்னோர்கள் வணங்கிவந்த ஒர்பியோமே என்னும் நாக தேவனையே வணங்க வேண்டும்" என்று அவளுக்கு ஆணை யிட்டான்.
     இதனால் நக்னாறா அடைந்த துன்பம் வார்த்தையில் அடங்காது. இருப்பினும் தைரியமாக தன் கணவனிடம், " இவ்வளவு காலமும் நான் நீர் வணங்கிவந்த நாக தேவனைத்தானே   வணங்கி வந்தேன்..அவனால் எனக்கு குணம் கிடைத்ததா...இல்லையே... யேசு என்னும் தேவன் தானே எனக்கு குணம் அளித்தார்... அவரைக்கும்பிடுவதில் என்ன தவறு இருக்க
முடியும்... வேண்டுமானால் நீர் என் சவாலை ஏற்றுக்கொள்ளும்...இதுவரை நான் என் கண்ணால் ஏற்பட்ட துன்பத்தை உனக்குத்தருகிறேன்...உன் நாக தேவன் உனக்கு குணம் கொடுகிறாறா பார்ப்போம்...நீர் குணமானல் நான் யேசு என்னும் தெய்வத்தை கும்பிடுவதை நிறுத்திக்கொள்கிறேன் " என்றாள். சவாலை ஏற்றுக்கொண்டான் அவள் கணவன்.
     அதன்படி அவன் கண்களில் புறை நோயை ஏற்படுத்தினார் யேசு கிறிஸ்த்து.. அவள் கணவனுக்கு நாளுக்கு நாள் பார்வை குறைந்துகொண்டே வந்தது. இதைக்கண்டு பயந்த அவன்  தன் மனைவி நக்னோறாவின் தலை முடியை பற்றி இழுத்துவந்து ஸ்த்தாக்கியாஸ் வீட்டு முன்பாக வந்து," அடேய் பிலிப்பு,, பார்த்தலோமியோ...உங்களுக்கு தைரியமிருந்தால்  நாங்கள் வணங்கும் எங்கள் பாம்பு தெய்வமான் ஓப்பியோர்மே முன்னிலையில் உங்கள் சாமார்த்தியத்தை காட்டுங்கள்..சவாலில் தோற்றவர் கொல்லப்படவேண்டும் .நீவிர் ஜெயித்தால்  நானும் என் நாட்டு மக்களும் யேசுகிறிஸ்த்துவை ஏற்றுக்கொள்கிறோம். எங்கள் நாக தேவன் உங்களைத்தின்னாமல் விடமாட்டார். சவாலை ஏற்றுக்கொள்கிறீர்களா அல்லது உயிரை
விடப்போகிறீர்களா?" என்றான். அப்போது பிலிப்பும் நாத்தானியேலும் தாங்கள் சவாலை ஏற்றுக்கொள்வதாகக்கூறினார்கள்.
   அடுத்த நாள் காலை அந்த ஓர்பியோமே எனப்படும் நாக தேவன் ஆலயத்தில் சவாலை ஏற்றுக்கொள்ள காத்திருந்தனர் பிலிப்பும் பார்த்தலோமியோவும்..நாக தேவனின் பூஜாரிகள்  பூஜையை ஆரம்பித்தார்கள்.." ஓ...நாக தேவா வருக...ஓ ...ஓர்ப்பியோமே வருக...ஓ .ஏகித்னா தேவனே வருக வருக... விரைந்து வருக..வருகவே வருக..." பாடிக்கொண்டும்  ஆடிக்கொண்டும் தங்கள் நாக தேவனை போட்டியில் கலந்துகொள்ள அழைத்தார்கள்... அப்போது வானம் இருண்டது...அந்த நாக தேவனின் ஆலயத்திலிருந்து கரும்புகை வெளிவந்தது.
நாக தேவனின் கோயில் பூஜாரி சந்நதம் வந்து அலறினான்.." இதோ எல்லாம் வல்ல ஓப்பியோர்மே தேவன் வருகிறார்...சக்தியுள்ள ஏகித்னா தேவன் வருகிறார்..அனைவரும் விழுந்து  ஆராதியுங்கள் " என்று உடல் எல்லாம் நடுங்க ஆடிக்கொண்டே வந்தார். கொஞ்ச நேரத்தில் அந்த ஆலயத்திலிருந்த அத்தனை பாம்பு சிலைகளும் உயிர் பெற்று அசைந்தன. பொத்து
பொத்தென்று அவை கீழே விழுந்து ஊர்ந்து வந்தன. இதக்கண்ட மக்கள் மிகுந்த அச்சத்தால் ஆட்பட்டு " ஏகித்னா...எங்களை மன்னியும்..உன் வல்லமை அறியாத எங்களை   மன்னியும்..நாங்கள் வழி தப்பி யேசு என்னும் பிற தெய்வத்தை ஏற்றுக்கொண்டது பெரும் தவறு என்று உணறுகிறோம்..எங்களை மன்னித்துக்க்கொள்...மன்னித்துக்கொள்.. "
என்று அலறினர்.
அந்த நாக தேவனின் ஊர் முழுக்க இருந்த அத்தனை கோயில்களிலும் இருந்த பாம்பு சிலைகள் உயிர் பெற்று எழுந்தன. அவை அனைத்தும் பெரும் திரளாக வந்து மக்களை விரட்டிக்கொண்டு வந்தன. அந்த ஊர் மக்கள் முழுவதும் சுமார் 20000 பேர் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று அனைவரும் ஒரே கோரசாக " நாக தேவா எங்களைக்காப்பாற்று " என்று கதறியபடியே தங்கள் கைகளை உயர்த்தியபடி சரணாகதியாக இந்த நாக தேவனின் பெரிய கோயிலை அடைந்தார்கள். அந்த பெரியகோயிலின் முன்னே நின்றிருந்த நம்
ஃபிலிப்பும், பார்த்தலோமியோவும் யாருக்கும் பயப்பட்டாதாகவும் தெரியவில்லை..எதற்கும் பயப்பட்டாதாகவும் தெரிய வில்லை..கண்களை மூடினால் அது பயத்தின் அடையாளம் என்று  எதிரிகள் நினைப்பார்கள் என்று அவர்கள் கண்களைக்கூட மூடவில்லை... ஆனால் அவர்கள் யேசுவின் மீது கொண்ட பக்த்தியின் அடையாளமக சற்றே கண்களை மூடி" ஆண்டவரே
இரக்கமாயிரும்.கிரிஸ்த்துவே இரக்கமாயிரும்.உன் அடியோர் மீது உம் கருணை கண்களை திருப்பியருளும்..இந்த சவால் எனக்கும் சாத்தானுக்கும் அல்ல ..உமக்கும் சாத்தானுக்கே உண்டானது...இனிமேல் இது என் காரியம் அல்ல..நீரே பார்த்துக்கொள்ளும்" என்றார்..
       அடுத்து துவங்கியது சாத்தானின் ஆட்டம்.. அந்த நாக தேவனின் கருவறையிலிருந்து சிற்பமாக இருந்த அரக்கப்பாம்பு உயிர் பெற்று எழுந்து வந்தது. கோயிலை விட்டு  வெளிவரும்போது ஆண்களும் பெண்களும் பூஜாரிகளும் சாமிவந்து ஆடினர்கள்... அவர்கள் எழுப்பிய பெரும் சப்த்தம் காண்பவர் அனைவருக்கும் பெரும்   திகிலூட்டின..குழந்தைகள்பயத்தால் வீர் வீர் என கத்திக்கதறினர். வெளியே வந்த அரக்கப்பாம்பாகிய ஓர்பியோமே, " யார் இந்த பரதேசிகள் ?" என்றான்..
அதற்கு கோயில் தலைமை பூஜாரி, " மஹாப்பிரபூ...இந்த பரதேசிகள் பாலஸ்த்தீனத்திலிருந்து வந்தவர்கள்...உங்கள் வல்லமை தெரியாமல் உங்களை சவாலுக்கு அழைத்தவர்கள்..
யேசு என்னும் அன்னிய தெய்வத்தை இங்கே வந்து பிரசங்கிக்கிறார்கள்... நம்முடைய மக்கள் பலரும் இந்த மூடர்களை நம்பி அந்த யேசுவை கடவுளாக ஏற்றுக்கொண்டார்கள்..
உமது வல்லமையால் நீர் யார் என இந்த உலகத்துக்கு காட்டும். வழி தப்பிப்போன நம் மக்களுக்கும் இந்த பரதேசிகளுக்கும் நல்ல பாடம் கொடுத்தருளும். நீர் ஜெயித்து இந்த பரதேசிகளை யும் இங்கு கிறிஸ்த்துவர்களாக மாறிப்போனவர்களையும் விழுங்கிவிடும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்றான்.
அதற்கு நாக தேவன்," அப்படியா...பூஜாரி....கவலைப்படாதே...நாம் இவர்கள் அனைவரையும் அழித்து சங்காரம் செய்துவிடுவோம்" என்று வானுக்கும் பூமிக்குமாக எழுந்து நின்றான்.
      அவனது விஸ்வ ரூபத்தைக்கண்ட மக்கள் அனைவரும் அச்சத்தால் ஆட்கொள்ளப்பட்டனர். அனைவரையும் திகில் ஆட்க்கொண்டது.
" அடேய் மனிதப்பதரே...என்னிடமா உன் வேலையைகாட்டுகிறாய்...உன்னை என்ன செய்கிறாறேன் பார் " என்றபடி தன் வாயைத்திறந்துகொண்டு பிலிப்புவின் முன் நின்றான்
     ஏகித்னா என்னும் தேவன். விஸ்வ ரூபமெடுத்திருந்த ஏகித்னாவின் வாய் திறக்க திறக்க அது ஒரு குகைபோல் தோன்றியது.. வாயில் கந்தக நாற்றம் சகிக்கமுடியாததாக இருந்தது.
திடீரென வானில் ஒரு பெரும் ஆரவாரம் கேட்டது. பெரும் இடிச்சத்தம் பளீீரென்னும் மா பெரும் மின்னலுடன் கேட்டது. வானில் அதிதூதறாகியா அர்ச். மிக்கேல் சம்மனசு தோன்றினார்.
" பிலிப்புவே...பார்த்தலோமியுவே...இவனுக்கு அஞ்சாதீர்கள். இவனை நான் பார்த்துக்கொள்கிறேன்... இவனிடமிருந்து வெளிப்படும் விஷமும் ஊரில் தோன்றியுள்ள பாம்புகளிடமிருந்து   வெளிப்படும் மூச்சுக்காற்றுகளும் பொது மக்களை தாக்கதபடி நான்கு திசைகளுக்கும் சேர்த்து ஆண்டவறாகிய யேசு கிறிஸ்த்துவின் பெயறால் சிலுவை அடையாளம் இடுங்கள்". என்றார்
பிலிப்புவின் சகோதரி மீரியமும் பிலிப்புவின் பிள்ளைகள் மூவரும் அந்த பெரும் கூட்டத்தினரிடையே சென்று எல்லா திசைகளுக்கும் சேர்த்து ஆண்டவறாகிய யேசுவின் பெயறால்  சிலுவை அடையாளமிட்டனர். அவ்வளவுதான்..ஊர் மக்களைச்சுற்றியுள்ள எல்லா பாம்புகளும் புஸ் புஸ் என்று சீறித்தள்ளின..ஆனால் அவற்றால் நகரக்கூட முடியவில்லை.
" அடேய் ஏகித்னா... உன் சாமார்த்தியத்தை என்னிடம் காட்டு..உன்னைச்சுற்றி ஆண்டவறாகிய யேசுவின் பெயரால் சிலுவை அடையாளமிடப்பட்டுள்ளது...நீ எங்கும் நகரக்கூட முடியாது. வா... என்னிடம் வா..." என்றார் அதிதூதறான மிக்கேல் சம்மனசானவர். சாத்தானாகிய ஏகித்னா என்றும் ஓர்பியோமே என்றும் அழைக்கப்பட்ட அந்த அரக்கப்பாம்பு எழுந்து நின்றது. அதுவரை பல்லி போல தரையில் ஊர்ந்து வந்த அந்த அரக்கப்பாம்பு தன் பின்னங்கால்கள் இரண்டையும் தரையில் ஊன்றிக்கொண்டு மனிதர் போல் நின்றுகொண்டு அதிதூதர் மிக்கேல் சம்மனசானவரிடம் போரிட எழுந்தான். ஆரம்பித்தது உக்கிரமான போர்.
ஃபிலிப்பும், பார்த்தலோமியோவும் ஆண்டவறாகிய யேசுக்கிறிஸ்த்துவை நோக்கி மன்றாடினர். " சாந்த்தூஸ்... சாந்த்தூஸ்..சாந்த்தூஸ்...தோமினே தேயுஸ் சாபாவோத்" அதாவது
பரிசுத்தர்...பரிசுத்தர்..,பரிசுத்தர்..
மூவுலகின் தேவனாகிய ஆண்டவர் பரிசுத்தர்...
வானமும் பூமியும் உமது மகிமையால் நிறைந்துள்ளன..
உன்னதங்களில் ஓசான்னா....
ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசீர்பெற்றவர்...
உன்னதங்களிலே ஓசான்னா...என்னும் திருப்பாடலை பாடிக்கொண்டிருந்தனர்...அது காற்றில் நிறைந்து எங்கும் எதிரொலித்தது. அந்த போரினால் எகித்த்னா தேவன் என்னும்
அரக்கப்பாம்பு விடும் மூச்சுக்காற்று பெரும் விஷமாய் காற்று மண்டலத்தை நிறைத்தது. அது மேக மண்டலத்தை கரு நிறமாய் மாற்றியது. ஆனால் அதிதூதரின் நெருப்பு கத்தியிலிருந்த   ஒரு ஓளி வெள்ளம் வந்து அதன் விஷத்தை முறியடித்து காற்று மண்டலத்தை சுத்தமாக்கியது. உடனே காற்று மண்டலம் கரு நிறத்திலிருந்து தூய வெண்ணிறமாக மாறியது.
இவர்களுகிடையே நடந்த போர் மக்களுக்கு இடியாகவும் மின்னலாகவும் தோன்றியது.. அடிக்கடி வானம் கறு நிறமாகவும் மீண்டும் வெண்ணிறமாகவும் மாறி மாறி தோன்றியது.
நடக்கும் இந்த உக்கிரமான போரில் ஏகித்னா என்னும் பாம்பு அரக்கனுக்கு தோல்விக்கான அறிகுறி தோன்றியது. அவன் இறக்கைகள் இரண்டும் வெட்டப்பட்டு பூமியில் விழுந்தன..
இதன் வேதனையால் பெரும் கூச்சல் எழுப்பினான் ஏகித்னா. அவன் உடம்பில் பல வெட்டுக்காயங்கள் தோன்றின. ஆங்காங்கே ரத்தம் பீறிட்டுக் கொட்டியது. அந்த ரத்தம் பூமியின்மீது  அவன் கோயில்களின் மீது பெரும் நெருப்புத்துண்டங்களாக விழுந்ததால் அந்த கோயில்கள் தீப்பிடித்து எரிந்தன. கடைசியாக ஒரு பெரும் மரணக்கூச்சல் எழுந்தது.
அதிதூதராகிய அர்ச். மிக்கேல் சம்மனசானவர், " அடேய் ஏகித்னா...இந்தப்பெயரில்தானே எம் மக்களை வஞ்சித்துவந்தாய்..இன்றோடு தொலைந்தாயடா நீ" என்று அந்த அரக்கப்பாம்பு தேவனாகிய ஏகித்னாவின் நெஞ்சில் தன் நெருப்பு பட்டயத்தால் ஆழமாக சொருகினார். அவ்வளவு தான்...மரணக்கூச்சலிட்டு சாய்ந்தான் ஏகித்னா என்னும் நாக தேவன்.
ஏகித்னா தேவனின் மரணக்கூச்சல், கேட்டவர்கள் அனைவரின் காதுகளையும் செவிடாக்கியது. கடைசியில் செத்து வீழ்ந்தான் ஏகித்னா..அவன் தரையில் விழுந்த போது சாதாரண நாகப்பாம்பு போன்ற தோற்றத்தோடு விழுந்தான்..சற்று நேரத்தில் அந்த பாம்பு உருவம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துபோனது.. அத்துடனா போயிற்று... நகரில் தோன்றி இருந்த
அத்தனை பாம்புகளும் காற்றில் கறைந்து போயின. நரக வாசல் எனப்படும் அந்த ப்ளூட்டோனியக்கோயிலில் இருந்த அந்த மூன்று தலை நாயும் மரித்துப்போய் காற்றில் கறைந்து போனது.
" வெற்றி... வெற்றி...ஆண்டவறாகிய யேசு கிறிஸ்த்துவுக்கே வெற்றி..ஆண்டவறாகிய யேசுவின் திரு நாமம் வாழ்த்தப்படுவதாக " என்று மக்கள் அனைவரும் வாழ்த்தொலி எழுப்பி ஆண்டவறாகிய யேசுவின் வெற்றியை கொண்டாடினார்கள்.அந்த பாம்பு நகரின் மக்கள் எல்லோரும் யேசுவின் வல்லமையை புரிந்துகொண்டார்கள். இந்த நேரத்தில் ஊருக்கு வெகு தொலைவிலிருந்த ஒரு எரிமலை வெடித்து சிதறியது. பெரும் அக்கினி குழம்புகள் சீறிப்பாய்ந்து வெளி வந்தன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டான் ஆளுனன்.
   " என் நாட்டு மக்களே...இந்தப்பரதேசிகள் ஏதோ மாய வித்தைகள் செய்து நம் பாம்புக்கடவுளை கொண்றுவிட்டார்கள்... இதனால் வெறுப்புற்ற நம் ஏகித்னா தேவன் நம்மைப்பழிவாங்க  அவர் இருப்பிடமான எரிமலையை தூண்டி விட்டுள்ளார்.. எனவே இந்த பரதேசி சாமியார்களை அடித்தே கொல்லுங்கள்... இந்த நாட்டிலுள்ள கிறிஸ்த்துவர்களைக்கொல்லுங்கள்..
இவர்களுக்கு புகலிடம் அளித்த அந்த ஸ்த்தாக்கியையும் அவன் குடும்பத்தையும் தீ வைத்துக்கொளுத்துங்கள் " என்றான்.
ஆளுனனின் மனைவி நக்னோரா பதறியடித்து எழுந்தாள்..." இல்லை...இது அநியாயம்...சவாலில் நீர் தோற்றுவிட்டீர். அதன்படி நீர் கொல்லப்பட வேண்டும்..ஆனாலும் இப்போதும்   ஒன்றும் காலம் கடந்து போய்விடவில்லை...நான் பிலிப்புவிடம் கேட்டு உனக்கு உயிர் பிச்சை வாங்கித்தருகிறேன்... மன்னிப்புக்கேட்டுக்கொள்." என்றாள். அதற்க்கு ஆளுனன்
" அடியே பாதகி...நீ என்ன எனக்கு உயிர் பிச்சை வாங்கித்தருவது...நான் அல்லவா அவர்களுக்கு பிச்சை போட வேண்டும்" என்றவனாய் " மக்களே இந்த பரதேசி சாமியார் இருவரையும்  அவன் குடும்பத்தாரையும் பிடித்துக்கட்டுங்கள்.. உயிர் போகும் வரை கல்லால் அடியுங்கள்" என்றான். அதுவரை யேசுவுக்கே புகழ் என்று வாழ்த்திய மக்கள் நன்றி மறந்து " கொல்லுங்கள் பிலிப்பையும் பார்த்தலோமியுவையும் " என்றார்கள். உடனே ஆரம்பித்தது கலவரம். கலகக்காரர்கள் ஸ்த்தாக்கியாவின் வீட்டை சூறையாடினார்கள்.. வீட்டிற்கு தீ வைத்தார்கள். வீடு  தீயால் முற்றிலுமாக கொழுந்து விட்டு எரிந்தது.. இப்படியாக பல கிறிஸ்த்துவர்களின் வீடுகள் குறிவைத்து தாக்கப்பட்டு தீக்கிறையாக்கப்பட்டது.
பார்த்தலோமியோவும் பிலிப்பும் கைதியாக்கப்பட்டு அந்த பாம்புதேவன் கோயிலின் தூண்களோடு சேர்த்து கட்டப்பட்டார்கள். பிலிப்புவின் சகோதரி மானபங்கம் செய்யப்பட்டார்.
ஆனால் கடவுள் அவள் மீது இரக்கம்கொண்டு ஒரு பெரும் அக்கினி ஜுவாலையை அவள் மீது அனுப்பி மக்கள் யாவருக்கும் அவளது நிர்வானம் தெரியாதபடி பாதுகாத்தார்.
இந்த துரதிஸ்ட்டமான சம்பவங்களாள் மிகவும் பரிதவித்துப்போனாள் ஆளுனனின் மனைவி நக்னோரா...அப்போது ஆளுநனுக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன..இதனால்   மேலும் கல்நெஞ்சனானன் ஆளுநன்..." மக்களே இந்த இரண்டு பரதேசி சாமியார்களையும் கல்லால் எரிந்து கொல்லுங்கள் " என்றான்.. மக்கள் புத்தி இழந்து நன்றி மறந்து அவர்கள்
இருவர் மீதும் கல்லால் எரிய ஆரம்பித்தனர். இந்த அக்கிரமத்தைக்கண்ட நக்னோரா," ஆண்டவர் மீது ஆணை..நீதியுள்ள சர்வேசுரன் உனக்கு கொடுமையான தண்டனை வழங்கட்டும்...  ஏற்கனவே நீர் என்னிடம் தோற்றதால் என் கண் நோய் உனக்கு உண்டானது...இப்போது அது முற்றிலுமாக உன்னை பாதிக்கட்டும். இந்த அப்பாவி மனிதர்கள் மீது வீனே கொலைபழி   சுமத்துகிறாய்..இதை அவர்கள் தெய்வம் ஒருபோதும் மன்னிக்காது. இப்போதும் கேட்கிறேன். அவர்களை விடுதலை செய்" என்றாள்.
" அடப்பைத்தியக்காரி... இவர்களை விடுதலை செய்தால் என்ன நடக்கும் தெரியுமோ? சவாலில் நான் தோற்றதர்காக நான் சாக வேண்டும்..எனக்கு இதில் உடன்பாடு இல்லை..   நான் வாழ வேண்டும்.. அதற்க்கு அவர்கள் சாக வேண்டும்" என்றான்..
கடுமையான் கல் வீச்சால் அப்போஸ்த்தலர்களாகிய பிலிப்பும் பார்த்தலோமியோவும் படுகாயமடைந்தனர். அப்போது பிலிப்பு தன் நண்பர் பார்த்தலோமியோவிடம் தங்கள் நாட்டு தாய்   பாஷையான எபிரேயத்தில், " பார்த்தலோமியோ... நான் நம் நண்பர் ஜானை [சுவிஷேஷகறாகிய அருளப்பரை] காண விரும்புகிறேன்" என்றார்.
அப்போது ஆளுனன்," என் மக்களே கல்லால் அடிப்பதை நிறுத்துங்கள்.. நம் நாக தேவனை கொண்ற இவர்களுக்கு கொடுமையான சிலுவை சாவை கொடுப்போம்" என்றான்.
அவன் மனைவி நக்னோரா பரிதவித்து " வேண்டாம்... வேண்டாம்.. இது அநீதி.. இது அக்கிரமம்..இந்த புண்ணியவான்களின் மீது இரக்கம் வையுங்கள்.. அவர்களைக்கொல்லாதீர்க்ள் "  என்று கதறி அழுதாள்.. ஆனால் யாரும் அவள் பேச்சை காதுகொடுத்து கேட்ப்பதாக இல்லை. வெறிபிடித்த மக்கள் கூட்டம் அவர்கள் இருவர் மீதும் பாய்ந்தது.. அப்போஸ்த்தலர்களாகிய
பிலிப்பும் பார்த்தலோமியோவும் நிர்வானமாக்கப்பட்டார்கள். அவர்களைக்கட்டிவைத்து அடித்த அந்த கல் தூணில் தலைகீழாக வைத்து பெரும் ஆணிகளால் அவர்கள் காலைத்துளைத்து  தூணோடு பிணைத்தார்கள். அவர்களின் பாரம் தாங்கும் படியாக அவர்களின் இருபக்கத்துடைகளிலும் பெரும் இரும்பு ஊக்குகளை செலுத்தி அவற்றையும் தூணோடு பிணைத்தார்கள்,.
   இந்த சூழ்நிலையில் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலால் அந்த வழியே வந்தார் சுவிஷேகரான அருளப்பர். நகரின் மத்தியில் பெரும் அமளிக்கிடையே மூன்று பேர்   துன்புருத்தப்படுவதுகண்டு மனம் இளகியவறாய் அங்கிருந்த மக்களிடம் " இங்கு என்ன நடக்கிறது.. யார் இவர்கள்? என்று கேட்டார். அந்த அளவுக்கு அவர்கள் அடையாளம் காண முடியாதபடி அடிபட்டிருந்தனர். அந்த மக்கள், " ஐய்யா ..உம்மைப்பார்த்தால் ஊருக்கு புதிதாய் தோன்றுகிறது..இவர்கள் வேதம் போதிக்க வந்த பரதேசிகள்..ஒருவர் பெயர் பிலிப்பு.. மற்றவர் பெயர் பார்த்தலோமியோ.. அந்தப்பெண் பிலிப்பின் சகோதரி மீரியம்..இவர்கள் நாங்கள் வழிபட்டுவந்த பாம்பு தேவனாகிய ஏகித்னாவை கொன்று போட்டதால் நாங்கள் அவரை  கொல்லும்படிக்கு தூணோடுதூணாக அறைந்துள்ளோம் " என்றனர்.
   அதற்கு அருளப்பர்," உங்கள் ஏகித்னா தேவன் உண்மையில் சக்த்தி உள்ளவர் என்றால் இவர்களை அல்லவா  கொண்றிருக்க வேண்டும்... மாறாக இவர்கள் உங்கள் தெய்வத்தை கொண்றதனால் இவர்கள் வணங்கும் தெய்வம் அல்லவா சக்தி வாய்ந்தது...தோல்வியை ஒப்புக்கொள்ளாமல்  ஜெயித்தவர்களை கொல்வது எந்த விதத்தில் நியாயம்?" என்றார். இத்தகைய பதிலால் திடுகிட்ட மக்கள், " அடேய் ...நீயும் இவர்களில் ஒருவனா...பிடித்துக்கட்டுங்கள் இவனையும்... சிலுவைச்சாவுக்கு இவனையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்றனர். இந்த வர்த்தமானங்களைக்கேட்ட பிலிப்பும் பார்த்தலோமேயும் பெரிதும் கலங்கினர். இதற்கு மேலும் பொறுக்கமாட்டாத
பிலிப்பு," மதியீனர்கேள்...உங்களை நாங்கள் இந்த பெரும் அரக்கப்பாம்பின் கொடுமையிலிருந்து காப்பாற்றியது பெரும் தவறு.. நன்றி கொன்ற மக்கள் நீங்கள்.." என்றார்.
     இந்த அக்கிரமத்தைக்காண சகிக்காத நக்னோரா," பிலிப்புவே இந்த நன்றி மறந்த மக்களை சபித்து நரக அக்கினியில் தள்ளும்...இதற்கெல்லாம் காரணமான என் கணவனை நீதியுள்ள  சர்வேசுரன் அவரை நித்திய நரகத்தின் அடி ஆழத்தில் புதைக்கட்டும். இந்த மக்கள் ஒருவரையும் விடாதபடி பூமி பிளந்து விழுங்கும்படி சபியும்...சபியும் " என்று வயிறெரிந்து கூறினாள்.
அப்போது ஒருவன் அருளப்பரை கயிற்றால் கட்டினான்... உடனே வந்தது கோபம் பிலிப்புவுக்கு... தன்னை மறந்தார்...தான் யேசுவின் அப்போஸ்த்தலன் என்பதையும் மறந்தார். தன் கண்முன்னே தன் சகோதரி மானபங்கப்படுத்தப்பட்டாள்...தன்சகோதரன்போன்ற அப்போஸ்த்தலன் பார்த்தலோமியோ தன்னோடு அடித்து நொறுக்கப்பட்டார்... தன் எஜமானனும்
கடவுளுமாகிய யேசுவின் இனிய சகோதரனும் யேசுவின் தாயாரை சுமார் பதினெட்டு ஆண்டுகாலம் தன்னோடு வைத்துக்காப்பாற்றியவருமான அருளப்பனையும் அல்லவா இப்போது கொல்லப்பார்கிறார்கள்...முடியாது...இதை நான் அனுமதிக்க முடியாது.....இந்தப்பாவிகளை நான் சபிக்கிறேன்...என்னுள்ளே வாசம் செய்யும் என் ரட்ச்சகரே யேசுநாதா...உம் பெயரால்  நான் இந்த மக்களை சபிகிறேன்.. பூமி பிளந்து இந்த மக்கள் நரக அக்கினியில் மூழ்கட்டும்" என்றார். அவ்வளவுதான்... இடியான இடி இடித்தது...பளீர் பளீர் என்னும் மின்னல்கள்
வானில் தோன்றி மறைந்தன..அவர்கள் இருந்த பூமி டமேல்...டமேல் என்று பிளந்தது.. அந்த நாகதேவன்கோயில் முதல் நரகத்தின் வாசல் வரை பூமி பிளந்தது...இந்த அதிற்ச்சியில்   நாகதேவன் கோயில் முதல் நரக வாசல் எனப்படும் ப்ளூடோனியக்கோயில் வரை அந்த நகரில் இருந்த அத்தனை ரோமர்களின் தெய்வங்களின் கோயில்களும் டமேர் டமேர் என்ற பெரும்
சப்த்தத்தோடு கீழே இடிந்து விழுந்தன. எதிரிகள் அத்தனை பேரும் நரக நெருப்பில் அமிழ்தப்பட்டார்கள்.. விதிவிலக்காக அந்த நாட்டிலிருந்த பரிசுத்தர்களும் பத்தினிப்பெண்களும்  அவர்கள் கரங்களில் இருந்த குழந்தைகளும் யாதொரு சேதமுமின்றி அவர்கள் நின்ற இடத்திலேயே நின்றுகொண்டிருந்தார்கள். மற்ற இடங்களிலெல்லாம் பூமி பிளந்து நரக நெருப்பு   தெரிந்தது.
    அந்த நெருப்பினூடே ஓங்கி அழும் மனித குரல்கள் கேட்டன...பிலிப்புவே பார்த்தலோமியுவே எங்களை மன்னியும் ...எங்களை மன்னியும்..அறியாமல் செய்த பிழை இது..  யேசுவின் வல்லமையை உணர்ந்திருந்தும் அவரை மதியாமலும் ஏற்றுக்கொள்ளாமலும் இருந்தோம்...இப்போது எங்கள் பிழை உணருகிறோம்... எங்களை மன்னித்தருளும்.. என்று  கதறி அழுதனர்..
      அந்த நாளில் 85 வயதைக்கடந்த பிலிப்பு தன் கோபத்தை அடக்காமல் அந்த அக்கிரமிகளை தண்டிக்கும்படியாக யேசுவின்பெயரால் சபித்து அவர்கள் அனைவரையும் நராக நெருப்பில்  போட்டது அவர் வயதுக்கும் அவரின் அப்போஸ்த்தலிக்க வாழ்க்கைக்கும் பொருந்தாத செயல் என்று அருளப்பர் கூறினார். " பிலிப்புவே...நம் யேசுநாதர் நமக்கு இப்படியா படிப்பினை
கற்பித்தார். தீமை செய்தவனுக்கு நீரும் தீமை செய்யலாமோ..உமக்கும் அவர்களுக்கும் இப்போது என்ன வித்தியாசம்.. தனக்கு தீமை செய்தவனுக்கும் நன்மையே செய் என்றல்லவா நம்   யேசு சொல்லி இருகிறார். என்ன இருந்தாலும் நீர் செய்தது தவறு.. எனவே நீர் மீண்டும் யேசுவிடம் கேட்டு அவர்கள் ஆனைவரையும் நரக நெருப்பினின்று விடுதலைசெய்யச்சொல்லும்.
இதை உம்மைத்தவிர வேறு யாரும் செய்ய முடியாது..உடனே ஆரம்பியும்... யேசுவிடம் மன்றாடும்" என்றார். பிலிப்பு தன் பிழை உணர்ந்தார்.. அவர் கண்களில் கண்னீர் கரகர வென்று   வழிந்தோடியது.
    அப்போது நக்னோரா " பிலிப்புவே, நீர் யாரை வேண்டுமானாலும் மன்னித்து விடுதலை செய்யும்... ஆனால் என் கணவரை மட்டும் நீர் மன்னிக்கவோ விடுதலை செய்யவோ கூடவே கூடாது" என்றாள்.
பிலிப்பு உடனே தன் வேண்டுதலை ஆரம்பித்தார்..தன் பாவத்தையும் இந்த அக்கிரமிகள் பாவத்தையும் மன்னிக்க மிகவும் உருக்கமாக வேண்டினார். அப்போது யேசுநாதர் அவருக்குதரிசனம் கொடுத்து," பிலிப்புவே, நீர் உம் தவறுகளை உணரும் பட்சத்தில் நானும் உம் மீதும் இந்த மக்களின் மீதும் இரங்குகிரேன். இதோ அவர்களை நரக நெருப்பினின்று விடுவிகிறேன்
என்று கூறி தன் சிலுவையை நரகத்தில் இறக்கினார். அது சிலுவையாய் இறங்கி ஒரு பெரும் ஏணியாக மாறியது. அதைப்பிடித்துக்க்கொண்ட மக்கள் அதன்வழியாக மேலே ஏறி வந்தார்கள். ஆனால் அப்படி வெளியே வராத ஒரு மனிதரும் இருந்தார் அவர்தான் நக்னோராவின் கணவன்.
   .நரக நெருப்பிலிருந்து வெளி வந்த மக்கள் அனைவரும் யேசுவின்
வல்லமையால் பெரும் அக்கினிக்குழம்பிலிருந்து விடுதலை ஆனதினால் யேசுவைப்பற்றி புகழ் பாடல் பாடிக்கொண்டே வந்தார்கள்.
மீண்டும் யேசுநாதர்," பிலிப்புவே...உம்கோபம் நியாயமானது என்றாலும் நமக்கு அதில் உடன்பாடு இல்லை..நீர் எம்கட்டளையை மீறிவிட்டீர்...உமக்கு தீமை செய்தவர்களை நீர் மன்னித்திருக்க வேண்டும். அதைவிடுத்து நீர் அவர்களை சபித்தீர்... அப்போஸ்த்தலர்களுக்கு நாம் கொடுத்துள்ள உறுதிமொழியின்படி நீர் பூலோகத்தில் எதைக்கட்டுவாயோ அதை
நாமும் பரலோகத்தில் கட்டுவோம்...நீர் எதெல்லாம் பூலோகத்தில் கட்டவிழ்ப்பீறோ அதெல்லாம் நாமும் பரலோகத்தில் கட்டவிழ்ப்போம் என்ற நியதியின்படி நீர் கேட்டுக்கொண்டதற் கொப்ப நாமும் அவர்களை நரகத்தில் போட வேண்டியதாயிற்று. நீர் கேட்டுக்கொண்டதால் இப்போது நானும் அவர்களை நரகத்திலிருந்து விடுதலை செய்ய்ய வேண்டியதாய் இருகிறது.
உன் கோபத்தினால் நரகத்திற்கு போனவர்கள் தலைமுடி கூட கருகாமலும் கட்டிய துணிகூட தீயாமலும் அவர்கள் மேனி கூட பொசுங்காமலும் நாம் அவர்களைக்காத்தோம்..
இதற்கு தண்டனையாக நீர் இறந்து நாற்பது நாள் வரை உன் ஆன்மா பரலோகத்தில் நுழைய முடியாது. அந்த நாற்பது நாளும் முடிந்து அடுத்த நாள் நாம் உம்மை எம்மோடு சேர்த்துக்கொள்வோம்..நீர் மரித்து புதையுண்ட இடத்தில் ஒரு திராட்சை செடி ஒன்று முளைக்கும்... அதன் கணிகளைப்பறித்து சாறு பிழிந்து நாற்பது நாளும் பலிபூசை நிறைவேற்று..
உன்னோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கும் நம் அப்போஸ்த்தலன் பார்த்தலோமியோ அர்மீனியா சென்று அங்கு நம் காரியங்கள் முடிந்து வேத சாட்ச்சியாக மரிப்பார்...உன் சகோதரி மீரியம் ஜோர்டான் நாட்டுக்கு சென்று நமக்காக சாட்சியமாக மரிப்பாள்...உம் புதல்வியரும் உம்முடைய இடத்திலேயே அடங்குவர்...உமக்குப்பின் உம் சீடர் தாக்கீஸை ஆயறாக நியமி " என்று கூறி மறைந்து போனார்...
யேசுநாதர் கூறியபடி பார்த்தலோமியோ சிலுவையினின்று இறக்கப்பட்டார். பிலிப்பின் சகோதரி மீரியமும் விடுவிக்கப்பட்டர். ஆனால் மக்கள் யாவரையும் பிலிப்பு தன் அருகில் நெருங்கவோ தன்னை தொடவோ அனுமதிக்கவில்லை.. தன்னை விடுதலை செய்ய மக்கள் விரும்பியும் அவர் இது யேசுவின் சித்தம் என்று கூறி சிலுவையினின்று இறக்கிவிட அனுமதிக்கவே இல்லை...சிலுவையிலே அவர் ஆறு நாட்க்கள் துன்பப்பட்டார்..ஏழாம் நாள் அவர் இறந்தார். அவரை கல்லறையில் நல்லடக்கம் செய்தனர்...
   அவர் இறந்த மூன்றாம் நாள் அவர் கல்லறையிலிருந்து ஒரு திராட்ச்சை கொடி ஒன்று கிளம்பியது...தடதடவென்று வளர்ந்து கனிகள் பல தந்தது.. அதன் சாற்றைவைத்தே நாற்பது நாளும் பலிபூசை நடத்தப்பட்டது.
அவர் இறந்த நாற்பது இரவும் பகலும் மக்கள் அவர் மீது வைத்த அன்பினாலும் நம்பிக்கையினாலும் தூங்காமல் விழித்திருந்து ஜெபம் செய்தபடியே இருந்தார்கள்.
அவர் இறந்த நார்பத்தொன்றாம் நாள் பிலிப்பு பார்த்தலோமியோவுக்கு தோன்றி தான் யேசுவோடு கலந்துவிட்டதாகக்கூறி மறைந்து போனார்.
பிலிப்பின் மக்கள் இருவர் வயோதிகம் காரணமாக மரித்து தந்தை பிலிப்பு அடங்கிய இடத்திலேயே அடங்கினர். அவரது மூன்றாவது மகள் எப்பேஸு பட்டிணத்தில் மரித்தார்..
சுவிஷேகரான் புனித அருளப்பர் வெகு முதிர்ந்த வயதில் எப்பேஸு பட்டிணத்தில் காலமானார்.. அவரது க்ல்லறை இன்றும் எஃபேசு பட்டிணத்தில் இருகின்றது.
பிலிப்பின்இந்த மூன்று பிள்ளைகளின் கல்லறை இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை... பிலிப்பு கூறியபடியே பார்த்தலோமியோ தாக்கீஸுக்கு அந்த பாம்புபட்டிணத்தின் முதல் ஆயறாக அபிஷேகம் செய்தார்.
பிலிப்புவின் காலத்துக்கு முன்பே ரோமர்கள் இந்த நாக தேவன் ஆலயத்தோடு பல தேவர்களின் கோயில்கலையும் கட்டி இருந்ததால் அந்த ஊர் உன்னத நகர் எனப்பெயர் பெற்றது .
அதாவது ஹீரியோபொலிஸ் எனப்பட்டது.. பிலிப்புவின் கல்லறை இந்த ஹீலியோபொலிஸ் என்னும் இடத்தில் இருப்பதாக இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த பல ஆயர்களும்  பல வரலாற்று ஆசிரியர்களும் எழுதி வைத்திருகின்றார்கள். இந்த ஹீலியோபொலிஸ் நகரில் இருந்த எரிமலைகள் வெடித்து அடங்கிய சம்பவங்கள் பல உண்டு..அப்படியாக ரோமர்கள்
காலத்திலேயே கொதிநீர் ஊற்றுகள் பல இருந்தது..அவை பல மருத்துவ குணங்களைக்கொண்டதாக நம்பப்பட்டுவந்தது. இப்போதும் சில இடங்களில் வெந்நீர் ஊற்றுகள் உள்ளன.
..அடுக்கடுக்கான மடிப்பு மலைகள் போல அழகழகான வெண்மை சுண்ணாம்பு படிவங்களில் இந்த சுடு தண்னீர் உற்றுகள் வழிந்தோடி அற்புதமான காட்சி அமைப்பாக மாறியுள்ளன.   அவை அனைத்தும் மருத்துவ குணமுடையதாகையால் ரோமர்கள் காலத்திலிருந்து இன்றுவரை இங்கு சுற்றுலாப்பயணிகள் கூட்டம் எப்போதும் அலை மோதுகிறது..
இந்த இடம் இப்போது பம்முகலே என அழைக்கப்படுகிறது..
ரோமர்கள் காலத்திலிருந்து மத்திய தரைகடலிலிருந்து எஃபேசுஸ் பட்டிணம் துவங்கி துருக்கியின் தென் கிழக்கிலுள்ள அனதோலியா பட்டிணம் வரை ஒரு ராஜபாட்டை போடப்பட்டது.  அது இந்த பைரேஜியா பட்டிணத்திலுள்ள ஹீலியோபோலிஸ் பட்டிணம் வழியே தான் சென்றது...இப்போதும் இந்த சாலை நடை முறையில் உள்ளது. இந்த சாலை வாழியே தான் புனித
சின்னப்பர் தன் இரண்டாம் வேத போதக அலுவலை ஆரம்பித்தார். வியாபார நிமித்தமாக துருக்கியின் தென் மேற்கிலுள்ள எஃபேசுஸ் பட்டிணமும் அதன் தென் கிழகிலுள்ள   கடற்கறை நகரமான அனதோலியாவும் தரை வழியே இணைக்கப்பட்டதால் ராஜ்ஜிய விரிவாக்கமும் வாணிக விரிவாக்கமும் ரோமர்களுக்கு மிகுந்த லாபத்தை தரும் கேந்திரப்பட்டிணமாக
விளங்கியது. இதனாலும் கிரிஸ்த்துவ மதம் அந்தப்பகுதியில் வேகமாகப்பரவியது.
பிலிப்பின் மரணத்திற்குப்பிறகு இந்த ஹீரியோபோலிஸ் பட்டிணம் பரிசுத்தர்களின் பட்டிணம் எனப்பெயர் பெற்றது.. அவ்வளவு வேத சாட்ச்சிகள் பலகால கட்டங்களில் இங்கு   அடக்கம் செய்யப்பட்டு இருகிறார்கள். கி.பி. 8 ஆம் நூற்ராண்டுக்குப்பிறகு இயற்கையின் சீற்றத்தால் பூமி அதிர்ச்சி உண்டாகி மொத்த ஹீலியோபோலிஸ் நகரமும் அடியோடு வீழ்ந்து போனது. அதற்குப்பிறகு இந்த ஹீலியோபோலிஸ் பட்டிணம் தழைக்கவே இல்லை. இந்த ஹீலியோபோலிஸ் என்னும் பட்டிணத்து இடிபாடுகளை உலக பாரம்பரிய சின்னங்களைப்பாதுகாக்கும் யுனெஸ்கோ நிருவணம் தன் பொருப்பில் எடுத்துக்கொண்டது, ஒரு வருடத்துக்கு 15 லட்ச்ம் சுற்றுலாப்பயணிகள் இந்த பட்டிணத்தையும் அதிலுள்ள புனித
பிலிப்பு அப்பொஸ்த்தருடைய கல்லறைகோயிலையும் தரிசித்து செல்கிறார்கள்.
முதல் நூற்றாண்டிலிருந்து இன்று வரை புனித பிலிப்பின் பக்திமட்டும் கிறிஸ்த்துவர்கள் மத்தியில் குறையவே இல்லை. இப்போதும் புனித பிலிப்பின் அருளிக்கங்கள் ரோமில் வத்திக்கானில் அப்போஸ்த்தலர்களுக்கான தேவாலயத்தில் ஊள்ளது. புனித பிலிப்புவே எங்களுகாக வேண்டிகொள்ளும். ஆமீன்.