Friday, December 26, 2025

“ அவள் பெயர் ஆக்ளே “

 

  “ அவள் பெயர் ஆக்ளே “இந்த கதையை எழுத ஆரம்பிக்கும் முன்னர் நான் நிறைய விஷயங்களை விளக்க வேண்டி உள்ளது. இதற்காக நாம் இயேசு பிறந்த காலத்து பெத்லஹெய்ம் குகையை பார்க்க செல்வோம். சுவாமி இயேசு ராஜா கால்நடைகளுக்கு தீவனம் வைக்கும் தொட்டியில் துணி ஒன்று போர்த்தப்பட்டு அதன்மீது கிடத்தி வைக்கபட்டுள்ளார். இப்போது குழந்தை இயேசுபிரானை பார்க்க இடையர்கூட்டம் வந்தது. அந்த கபடற்ற ஆன்மாக்களான இடையர்களை தேவதாயார் வரவேற்றார். “ அப்பா இந்த அம்அவர்களுக்கு தங்க சத்திரத்தில் இடம் கிடைக்காததால் மிகவும் தவித்துதான் போனார்கள். வேறு   வழி இல்லாததால்  நான்தான் இந்த இடத்தை அவர்களுக்கு காட்டினேன் “ என்றான் தேவதாயார் மிகுந்த மகிழ்சியுற்று ஆம் இவன் சொல்வது முற்றிலும் உண்மை. மகனே உன் பெயர் என்ன ? உனக்கு நான் நன்றி சொல்கிறேன். உன் பெயர் என்ன ?

  அம்மா.. என்பெயர் அபிரகாம். என் அப்பா பெயரும் அபிரகாம்தான். என்அப்பாதான் எங்கள் இடையர் கூட்டத்தின் தலைவர் மற்றவர்கள் என் உறவினர். நாங்கள் சிறுவர்கள் மொத்தம் பன்னிரெண்டு பேர் இவர்களை உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் தயவு செய்து அறிமுகம் செய்து வையுங்கள்.. இவன் ஈசாக்கு… இவன் யாக்கோபு என்று ஒவ்வொருவாரின் பெயரை சொல்ல சொல்ல மாதா தன் திருமகனின் காதில் அவரவரின் பெயர்களை சொல்லிக்கொண்டே வந்தார். குழந்தை இயேசுவும் தனக்கு ஏதோ புறிந்ததுபோல தலையை ஆட்டிக்கொண்டு தன் மகிழ்ச்சியை ஊஊஊ என்று கூறிக்கொண்டு ஆமோதித்தது. குழந்தை இயேசுவை காண வந்த இடையர்கள் ஒன்றும் சும்மா வந்துவிடவில்லை.

அவரவர் சக்திகேற்ப பால்..பாற்கட்டி.ரொட்டிகள் பழங்கள் குழந்தைக்கு குளிரில் போர்திக்கொள்ள தோல் ஆடைகள் போன்றவற்றை கொண்டுவந்து அவற்றை மாதாவிடம் கொடுத்துஅம்மாநாங்கள் பொருளாதாரத்திலும் பிறவியிலும்  மிகவும் தாழ்ந்தவர்கள்.   தாங்களோ உயர்குடியில் வந்தவர்கள் எங்கள் தாழ்நிலை பாராமல் எங்கள் காணிக்கையை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றனர். மாதா மிகவும் சந்தோஷப்பட்டு அவற்றை  ஏற்றுக்கொண்டுஎன் மக்களே  ஆண்டவன் படைப்பில் ஏற்றத்தாழ்வு  எதுவும் இல்லை. நீங்கள் கொண்டுவந்த காணிக்கைகள் அனைத்தும் எங்களுக்கு தேவையானவைதான், சுத்த இதயத்துடன் கொடுக்கும் எந்த காணிக்கையையும் இறைவனும் ஏற்பார்என்றார்  அப்போது ஒரு சிறுவன் தன்னிடமிருந்த சில கூழாங்கற்களை சுவாமிக்கு காணிக்கையாக கொடுத்தான். அவற்றில் ஒரு கல் சிகப்புகல். இந்தக்கல்லின் அழகை பார்த்த தேவ தாயார் மகனே இந்தக்கல் உனக்கு ஏது? இது மிகுந்த விலைபெருமே.இந்த கல்லை நான் பத்திரமாக வைத்திருப்பேன். என் மகனுக்கு விளையாடும் பருவம் வந்ததும் அவனுக்கு கொடுப்பேன்என்றார் அப்போது அன்ட இடையர்கூட்ட தலைவர் அப்ரஹாம் “ அம்மா உங்கள் குழந்தையை சற்று நேரம் என்னிடம் கொடுங்கள்.குழந்தையை சற்றுநேரம் தூக்கிவைத்து கொஞ்சி மகிழ ஆசிக்கிறேன். “ என்றார் இந்த குழந்தை வளர்ந்து பெரியவனாகும் வரை நானும் உயிரோடு இருக்க ஆசைப்படுகிறேன் ஆனால் இயற்கைக்கு மாறாக நான் வாழ முடியாது. என் முதுமை என்னை அழைக்கிறது. ஆனாலும் ஒருநாள் இந்த குழந்தை என்னை தேடிவந்து என்னை பார்க்கும். அதுவரை என் ஆன்மா சாந்தி அடையாது அவருக்காக காத்திருக்கும் “ என்றார்.

 இந்த கல்லைப்பற்றிய ஒரு செவிவழி கதை உண்டு. இந்த கதையின் முடிவில் அதைபற்றி சொல்வேன்.

சுவாமிக்கு ஆறுமாதமாக வயதிருக்கும். அப்போது குழந்தையை கொல்ல கொடுங்கொலன் மஹா ஏரோது தேடுகிறான் என சம்மனசு எச்சரிக்கை வந்ததை அடுத்து உடனே திருக்குடும்பம் எகிப்த்துக்கு சென்றது. இந்த நிகழ்வை அடுத்தது நிகழ்ந்தது பயங்கரம் எருசலேமிலும் பெத்லஹேமிலும் இரண்டு வயதுக் உட்பட்ட நூற்றுக்கணக்கான ஆண் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தபடுகொலைகள் நடத்தபடுவதற்கு முன்னரே திருக்குடும்பம் எகிப்த்திற்கு தப்பிச்சென்றுவிட்டது. குழந்தை இயேசுவுக்கு ஒன்பது வயது ஆகும்வரை திருக்குடும்பம்  எகிப்த்திலேயே வழ்ந்து வந்தனர்.அதற்குள்ளாக பாலஸ்தீனத்தில் அரசனாக இருந்த மஹா ஏரோது அவன் காலத்தில் செய்த அக்கிரமங்களுக்கு ஏற்ப கொடூரமான நோய்வாய்பட்டு அவன் உயிரோடு இருக்கும்போதே அவன் உடலில் இருந்த புழுக்கள் அவனை அரித்துதின்றன.மிகுந்த கொடூரமான் வேதனையுடன் அவன் மரித்தான் அடுத்ததாக மகா ஏறோதின் ஒருமகன் ஏறொது அர்கிலாவுஸ் என்பவன் யூதேயாவின் அரசனாக ஆட்சிக்கு வந்தான். அவன் தன் தந்தையைவிட கொடூரமாக ஆட்சி நடத்தினான். இந்த யூதேய நாட்டின் மண்டாலாதிபதியாக  இருந்த ரோமைய ஆட்ச்சியாளர் போஞ்சிபிலாத்து  அவன் ஆட்சியை பறித்து அப்போது கலிலேயா. சமாரியா பகுதிகளுக்கு சிற்றசனாக இருந்த ஏரோது அந்திபாசுவிடம் ஒப்படைத்தனர். இப்போது ஏறொது அந்திப்பாஸ் யூதேயா, சமாரியா மற்றும் கலிலேயா பகுதிகளுக்கு சிற்றரசன் ஆனான்.இருப்பினும் அவன் ரோமைய பேரரசுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியதாக இருந்தது.

   இந்த சூழ்நிலையில் திருக்குடும்பம் எகிப்த்திலிருந்து பாலஸ்தீனம் திரும்பினர்.மிக நீண்ட நடைப்பயணம் அது. நடைப்பயணம் சோர்வாக இருக்கும்போது இயேசு அந்த இடையர் சிறுவன் கொடுத்த சிகப்பு கூழாங்கற்களை தூக்கிபோட்டு விளையாடிக்கொண்டே வருவார். ஒருமுறை இயேசு அந்தக்கல்லை வேகமாக  மேலே தூக்கிப்போடவே அது கீழே விழாமல் மேலே மேலே சென்று வானிலேயே நின்றுகொண்டது. அந்தக்கல் இன்றளவும் அங்கேயே நின்றுகொண்டிருக்கின்றது.   காலங்கள் ஓடின. சுவாமி இயேசுராஜாவுக்கு இப்போது வயது 32.

   சுவாமி இயேசுவுக்கு தான் பிறந்த ஊராம் பெத்லஹெய்மை பார்க்க ஆசை ஏற்படவே தன் பரிவாரங்களுடன் பெத்லஹெய்ம் வந்தார். அவர் தன் பால்ய சினேகிதர்களை பார்க்க விரும்பினார். ஆனால் அங்கு யாருமே இல்லை. அவருடைய நண்பர்கள் அனைவரும் சிதருண்டு போய் இருந்தனர். சரி இந்த இடையர்கூட்டம் வாழ்ந்த இடத்தை பார்த்து அங்கிருந்த மக்களிடம் விசாரித்ததில் இடையர்தலைவர் அபிரஹாம் கல்லரையை கண்டுபிடித்தனர். இயேசு அந்தக்கல்லறையை திறக்க சொன்னார். கல்லரை திறக்கப்படவே அதிலிருந்த அபிரகாம் உடல் அழுகிபோகாமல் இருந்ததை கண்டனர்..அப்போது இயேசுநாதர் “ என் நண்பா நீர் ஆசைபட்டபடியே இதோ நான் வந்துவிட்டேன். நீர் இனிமேல் நித்தியத்தில் இளைப்பாருவாயாக. உனக்கு சமாதானம்  உண்டாகட்டும் “ என்றார். ஆனால் ஒருபெரும் மக்கள் கூட்டம் இயேசுவை சுற்றி வளைத்தது. இயேசுவே நசரேயனே இங்கிருந்து ஓடிப்போ. உன்னால் நாங்கள் பட்ட கஸ்டங்களும் போதும். நஸ்டங்களும் பொதும். மேலும் எங்களுக்கு துண்பம் வருவிக்காதே.. போய்விடு “ என்றனர். காரணம் இதுதான்.சுவாமி பெத்லஹெய்ம் குகையில் பிறந்தது பற்றியோ மூன்று அரசர்கள் வந்தது பற்றியோ திருகுடும்பம் எகிப்த்து தப்பிசென்றதுபற்றியோ உள்ளூர் மக்களுக்கு உண்மையில் எதுவுமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே விசாரணை என்ற பெயரில் பெரிய ஏறொது பெரும் சித்திரவதையை அந்த பெத்லஹெய்ம் மக்களிடையே அவிழ்த்துவிட்டான். இந்த கலவரத்தில் பல நூறு குழந்தைகள் கொல்லப்பட்டனர். அவற்றை காப்பாற்றபோன தாய் தந்தையரும் கொல்லப்பட்டனர். பலரது வீடுகளும் சூறையாடப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதற்கெல்லாம் காரணம் இந்த இயேசுதான்.. எனவே இயேசுவை மிகுந்த அவமரியாதைக்கு உட்படுத்தினர். இயேசுவும் கணத்த இதயத்துடன் தன் பிறந்த மண்ணைவிட்டு வெளியேறினார். ஆனாலும் தன் இடையர்குல  நண்பர்களை சந்திக்க தீவிரமாக முயன்றார்.

   வந்தது வந்துவிட்டோம் அருகிலுள்ள  மலைநாடாகிய ஜெட்டாவில் யோவான் ஸ்நாபகர் வீட்டில்  தன் சொந்த பந்தங்களை பார்த்துவருவோம் என்று யேசுநாதர் மலைநாட்டுக்கு சென்றார் இந்த இடத்தில் நேயர்களுக்கு சில சரித்திர நிகழ்வுகள் சொல்ல ஆசைப்படுகின்றேன்.

யோவான் ஸ்நாபகரின் தாயார் எலிசபெதம்மாவும்  மாதாவின் தாயார் அன்னம்மாவும் ஒன்றுவிட்ட சகோதரிகள். எலிசபெதம்மாவின் தாயார் பெயர் இஸ்மேரியா. மரியாவின் தாயார் அன்னம்மாள். அன்னம்மாவின் தாயார் பெயர் எமரென்ஷியா. ஆக இஸ்மேரியாவும் எமெரென்ஷியாவும்   எம்ரோணியம்மாள் என்னும் ஒருதாய் வயிற்று பிள்ளைகள்

எலிசபெத்தம்மாள் மூத்தவர். வயது முதிர்ந்தவர். அன்னம்மாள் இளையவர். எலிசபெத்தம்மாவுக்கு ஆண்டவரின் கிருபையால் தன் முதிர்ந்த வயதில் யோவான் ஸ்நாபக அருளப்பர்  பிறந்தார். யோவான் பிறந்த பொழுதுதான் மாசில்லா குழந்தைகள் படுகொலை சம்பவம் நடந்தது. இப்படி ஒரு படுகொலையை மஹா ஏரோது  திட்டமிட்டிருபதை அறிந்த  எலிசபெத்தம்மாளின் கணவர் சக்காரியாஸ் தன் மனைவியை எச்சரிக்க     ஜெருசலேமிலிருந்து ஜெட்டாவிலுள்ள தன் வீட்டுக்கு ஓடோடி வந்தார். ஆனால் அதற்குள் விதிவிளையாடிவிட்டது.  எலிஸபெத்தம்மாளின் கண்முன்னே அவர் கணவர் சக்காரியாஸ் மஹா ஏறோதின் வீரர்களால் வெட்டி படுகொலை செய்யபட்டார். எலிஸபெத்தாம்மாவையும் அவர்குழந்தை யோவானையும் அவர்கள் வசித்த குகை மூடிக்கொண்டது. அதனால் அவர்கள் இருவரும் உயிர் தப்பினர். குகை திறந்துகொண்டதும்  எலிஸபெத்தம்மாள் தன் கணவரை தன் வீட்டுத்தோட்டத்திலே புதைத்தார்.யோவான் ஸ்நாபருக்கு  ஐந்து வயதாகும்போது பரிசுத்த ஆவியின் ஆணைப்படி எலிசபெத்தம்மாள் தன் கு,மாரனை ஜெட்டாவில் பாலைநிலுத்திலுள்ள ஒரு குகையில் வைத்துவிட்டு தன் வீட்டிற்கு திரும்பினார். யோவானை பரிசுத்த ஆவியானவர் வளர்த்தார். அந்த குகை இன்றளவும் ஒரு திரு யாத்திரை ஸ்தலமாக இருகின்றது.(saint john, desert monastery ) என்றழைக்கப்படுகின்றது. எலிசபெத்தம்மாளுக்கு தன் மகனை பார்க்க ஆசைவரும்போதெல்லாம் பாலைவனத்திலுள்ள அந்த குகைக்கு சென்று தன் மகனை பார்த்துவருவார். இப்படியாக ஒருமுறை பார்க்கவந்தபோது எலிசபெத்தாமாள் அங்கேயே மரித்தார்.அவரது உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது. அவரது அடக்கதிற்கு இயேசு,மரியாள் மற்றும் சூசை ஆகியோர்  எகிப்த்திலிருந்து வான் வழியில் மேகங்களின்மீது அமர்ந்து வந்ததாகவும் நல்லடக்கம் முடிவுற்றதும் மீண்டும் எகிப்த்திற்கு  வந்தபடியே சென்றுவிட்டதாகவும் சில கிழக்குரீதி  திருச்சபபைகள் கூறுகின்றன.

சில காலம் கழித்து  எலிசபெதம்மாளின் எலும்புகள் எடுக்கப்பட்டு ஜெட்டாவிலுள்ள அவர்கள்  வீட்டின் பின்புறமுள்ள குடும்ப கல்லறையில் அவரது கணவர் சக்காரியாஸ் உடனே அடக்கம் செய்யப்பட்டது. பலகாலம் கழித்து தலைவெட்டப்பட்ட யோவான் ஸ்நாபரின் உடலும் இதே கல்லரையில் அடக்கம் செய்யப்பட்டது. இத்தகைய காரணங்களுக்காகவும், தன் பால்ய சினேகிதர்களை தேடி கண்டுபிடிப்பதற்காகவும் இயேசு நாதர் ஜெட்டாவுக்கு வந்தார். ஜெட்டாவில் அவருக்கு பல அதிர்ச்சி தரும் சம்பவங்கள் காத்துக்கொண்டிருந்தன. அங்கு ஒரு ஆட்டு மந்தை மேய்ந்து கொண்டிருந்ததை பார்த்த இயேசு நாதர் ஆவர்களை அணுகி பெத்லஹெய்மின் இடையர்கள் அபிரகாம் ஈசாக்கு ஆகியோரைபற்றி விசாரித்தார். அந்த இடையர் கூட்ட தலைவன்,” ராபி.. இது நீர்தானோ… நான் காண்பது கனவா அல்லது நனவா. அன்று நான் கண்ட குழந்தை இயேசு நீர்தாமோ.நான் காணும் கண்கள் பாக்கியம் பெற்றன உம் அழகிய திருமுகமும் உம் தாயாரின் திருமுகமும் ஒரே சாயலாகையால் உம்மை நான் எப்படி மறப்பேன். உம் கண்கள் ஒளிவிடும் நீலமணிக்கு ஒப்பானவை. இந்தப்பார்வையின் வசீகரத்தை நான் எப்படி மறப்பேன் “ என்று கண்ணீர் சிந்தி அழத்துவங்கினார். இயேசுநாதர் . ஆபிரகாமை கட்டித்தழுவிக்கொண்டு ஆறுதல் பலசொல்லி அவனைத்தேற்றினார்.

   ஆண்டவரே உமது பால்ய நண்பர்கள் நாங்கள் பனிரெண்டு பேர்.அவர்களைப்பற்றி பிறகு சொல்கிறேன். ஆனால் ஈசாக்கின் நிலைதான் மிகவும் பரிதாபாம். உம்திருக்குடும்பம் எகிப்த்துக்கு தப்பிச்சென்றதும்  மஹா ஏறோதின் வீரர்கள் வந்து எங்கள் இடையர்கூட்டத்தை விசாரணை என்னும்பெயரில் அடித்துதுவைத்தனர். இதில் பாவம் ஈசாக்கின் இடுப்பு எலும்பு முறிந்து போயிற்று. இப்போது அவன் பிழைப்புக்காக ஜெட்டாவின் முச்சந்தியில் பிட்சை எடுக்கின்றான் ஆண்டவரே. இந்த கொடுமையை நான் என்னவென்று சொல்வேன் ..ஆனாலும் பிச்சை இட வரும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அவ்வப்போது உம்மைபற்றியும் கதைகதையாக சொல்வான்.” இயேசுவின் கண்கள் கண்ணீர் சொறிந்தன.

அடுத்துவந்தது கட்டளை “ ஈசாக்கை என்னிடம் வரச்சொல்லுங்கள்”

“ஆண்டவரே அவன் நடக்க முடியாதவன்”

|ஈசாக்கை என்னிடம் வரச்சொல்லுங்கள்”

 “ ஈசாக்கு… உன்னை இயேசுநாதர் எழுந்து வரச்சொல்லுகின்றார் “ வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தான் ஈசாக்கு. அப்போதுகூட அவனுக்கு இடுப்பில் ஒட்டுத்துணிகூட இல்லை. இந்த நாள் வரை அவனுக்கு அவ்வப்போது  உணவூட்டி பராமரித்துவந்த அந்தப்பெண் தன் முக்காட்டால் அவன் இடுப்பில் போர்த்தினாள். இந்த செயலுக்காக சுவாமி அவளுக்கு தன் நன்றிகலந்த பார்வையை செலுத்தினார். அப்போதே அவளைப்பிடித்திருந்த தரித்திரம் அவளைவிட்டு அகன்றது.

“ ஆண்டவரே …உமக்கு நன்றி சொல்லவோ அல்லது பிரதிபலன் செலுத்தவோ என்னிடத்தில் ஒன்றுமில்லை.இந்த ஏழையையும் ஒருபொருட்டாக எண்ணி என்னைத்தேடிவந்து என்னை மீட்டீரே சுவாமி..உமக்காக என் இரத்தமெல்லாம் சிந்தினாலும் போதாது. நான் உமக்கு என்ன செய்ய வேண்டும்.”

ஈசாக்கு… என் நண்பா.. நீ எனக்காக பட்ட துன்பம் எல்லாம் நான் அறிவேன். அந்த துன்ப நேரத்திலும் நீ என்னை மறாவாமல் எனக்கு சாட்ச்சியாக வாழ்ந்தாய் அல்லவா. எனக்கு அது போதும் இப்படிப்பட்ட ஆன்மாக்களையே நான் விரும்புகிறேன் தேடியும் வருகிறேன்.” ஆண்டவரே அடுத்தது எங்கே ?

“ இங்கே உள்ள என் பெரிய பாட்டி அம்மா எலிஸபெத்தம்மாள் வீட்டுக்கு.”

“வேண்டாம் ஆண்டவரே.. தயவு செய்து அங்கே போகவேண்டாம் “

ஏன் என்னை அங்கே போக வேண்டாம் என்கிறீர்கள். பெண்களிடையே பிறந்தவர்களுள் யோவானைப்பார்க்கிலும் பெரியவர் வேறு யாரேனும் உளரோ? அப்பேற்பட்ட புண்ணியவானும் அவருடைய தாயார் புண்ணியவதி எலிசபெத்தம்மாளும் ஆவருடைய தந்தையார் புண்ணியவான் பெரியகுரு சக்காரியாசும் துயில் கொள்ளும் இந்த வீட்டை நான் பார்க்க ஆசைப்படுகிறேன். என்னை அழைத்துச்செல்லுங்கள்”

“ ஆண்டவரே  வேண்டாம். முன்பு சொர்கத்துக்கு இணையான அந்த வீடு இப்போது நரகத்துக்கு இணையாக தீட்டுபட்டுவிட்டது. எல்லாம் அந்த வேசியால் வந்த வினை.”

 “ வேசியால் வந்த வினையா ? யார் அவள்? அவள் ஊர் என்ன பேர் என்ன ? அருளப்பா (சுவிஷேஷகர் ) விளக்கமாக கூறு.”

“ ஆண்டவரே… ஒருசமயம் தற்போதுள்ள பாலஸ்தீன அதிபதி ஏறோது அந்திபாஸ் ராஜாங்க விஷயமாக இத்தாலியிலுள்ள ரோமாபுரிக்கு சென்றான். பொழுதுபோக்கிற்காக ரோமின் பட்டிணத்தை சுற்றிபார்க்கும்போது அங்குள்ள அடிமைசந்தை அவன் கண்ணில் பட்டது.அங்கு அழகுப்பதுமையாய் இருந்த இந்த பெண்ணை பார்த்ததும் அவள் மேல் இச்சை கொண்டு அவளை விலைக்கு வாங்கிக்கொண்டான். தன் நாடு திரும்போது இந்த பெண்ணையும் தன்னுடனே கொண்டுவந்துவிட்டான்,அவனுக்கு ஏற்கனவே பல மனைவியர். எனவே இவளை யாருக்கும் தெரியாமல் இருக்க ஜெட்டாவில் ஐன்கரீம் என்னுமிடத்திலுள்ள உங்கள் மூதாதையர் இல்லத்தில் குடி அமர்த்தினான். அந்த வீட்டை யோவான் ஸ்னானகரின் உறவின் முறையான அருளப்பர் என்பவர் பராமரித்து வந்தார். ஏறொதின் வைப்பாட்டிக்கு தன் வீட்டில் குடி யிருக்க அவர் மிகுந்த ஆட்சேபம் தெரிவிக்கவே ஏறோதன் மிகுந்த சினம் கொண்டு அருளப்பரை அடி மேல் அடியாக அடித்து துவைத்து வெளியே துறத்தி அவளை அங்கு குடியமர்த்தினான். அந்த பெண்ணை  அந்த வீட்டிலிருந்த புண்ணிய ஆன்மாக்கள் பலவாறாக துன்புறுத்தவே ஏறொதனிடம் தனக்கு வேறு வீடு கொடுக்கக்கேட்டாள். ஏறொதன் ராஜாங்க விஷயமாக அடிக்கடி வெளியூர்  செல்லவேண்டி இருந்ததால் இவள் கோரிக்கையை தள்ளிப்போட்டு வந்தான். இவளது ஜென்ம புத்தி போகுமா… ஏரொதன் இல்லாத காலங்களில் தன்னைசுற்றியுள்ள ஊர்களிலிருந்த பெரும் பணக்கார்களுக்கு அழைப்புவிடுத்து அவர்களை தன் வலையில் போட்டுக்கொள்வாள். இவ்விதமாக பெரும் காசுபணம் சம்பாரித்தாள் ஆக்ளே.

“ அவள் பெயர் என்னா?

ஆவள் பெயர் ஆக்ளே.  ஆக்ளே என்றால் அவள் தாய் மொழியில் கேவலம்… அருவருப்பு”

“ அப்படியானால் நான் அந்தப்பெண்ணை அவசியம் சந்திக்க வேண்டும். “

: வேண்டாம் ஆண்டவரே…அவள் பெரும் கைகாரி..அவளால் மதியிழந்து, மானம் இழந்து தன் செல்வம் அனைத்தும் இழந்துபோனவர் ஏறாளம அவள் வல்லவனையும் தட்டும் வழுக்குப்பாறை போன்றவள் .வேண்டுமானால் நானும் வருகிறேன்

“ அருளப்பா என் சுயகௌரவத்திலும் கட்டுப்பாட்டிலும்  உனக்கு நம்பிக்கை இல்லையா?

“ அப்படி இல்லை ஆண்டவரே. ஆக்ளே விஷயம் அப்படி அதனால்தான்….

“ சரி வா என்னோடு. ஆக்ளேயின் வீட்டு வாசலில் நிறுத்திகொள்.”

தன் வீட்டு வாசலில் காலையிலேயே இரண்டு வாலிபர்கள் வந்திருப்பதைகண்ட ஆக்ளே பெறிதும் மகிழ்ந்து வரவேற்றாள் ஆக்ளே. அருளப்பர் வெளியே நின்றுகொண்டார். இயேசுவைகண்ட ஆக்ளே,” வரவேண்டும் வரவேண்டும் இந்த அடிமைக்கு சந்தோஷம். தரவேண்டும். என்ன அழகு…. என்ன தேஜஸ்… அடடா இந்த நாட்டில் இப்படி ஒரு அவதார புருஷனை நான் கண்டதே இல்லை. இன்றைக்கு நான் நரி முகத்தில்தான் விழித்திருக்க வேண்டும் “ என்றாள். தன் ஆடை குலைந்திருப்பதுபற்றியோ ஒரு யூத ராபியின் முன் நிற்பதுபற்றியோ அவள் கொஞ்சமும் கவலைபட்டதாகவோ இல்லை வெட்க்கப்பட்டதாகவோ தெரியவில்லை.. அவள் இயேசுவை தொட முற்பட்டாள்.

“ விலகிச்செல் பெண்ணே “ என்றார் இயேசு அதட்டும் குறளில்.. “ ஐய்யா… இதுவும் நன்றாகத்தான் இருகின்றது. கோபத்திலும் நீர் அழகானவராகவே தெரிகின்றீர்.நானும் என் அனுபவத்தில் எத்தனையோ பேரை பார்த்திருகின்றேன்.. ஆனால் யாரும் உம்மைபோல் இருந்ததில்லை..என்மனம் உம்மை அடைய தவியாய் தவிக்கின்றது. வீணே நாடகம் வேண்டாம் “ என மஞ்சதிற்கு அழைத்தாள்.

  இயேசுவின் நீலமணிக்கண்கள் ரத்த சிகப்பாய் மாறின.” விலகிப்போ அசுத்தமானவளே… நான் என் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தவே வந்துள்ளேன்.. போ அப்பாலே “ என்று அவள் உச்சந்தலையில் ஒரு தட்டு தட்டினார். அவ்வளவுதான். அவள் தலையில் ஆயிரம் இடிகள் விழுந்தது போல்  மயங்கி கீழே விழுந்தாள்.

 இயேசுநாதர் ஆந்த வீட்டுத்தோட்டத்தில் ஒரு மண்டபம் இடிந்திருபதைக்கண்டு அங்கிருந்த தோட்டக்காரனை விசாரித்தார்.

“ ராபி… அந்தக்கொடுமையை நான் என்னவென்று சொல்வேன். இந்த வீட்டில் சில அசாதாரண காரியங்கள் நடப்பதாக இந்த வீட்டு எஜமானி கூறியதை அடுத்து  ஏறோதன் இந்த கல்லறைகளை இடித்துதள்ளிவிட்டான். நான் மனம் பொறுக்காமல் அந்த புண்ணியவான்கள் எலும்புகளை  எடுத்து அந்த கல் பெட்டியில் போட்டு வைத்திருகின்றேன். இவற்றை பாதுகாப்பான ஒரு இடத்தில் வைத்துக்காப்பாற்றுங்கள் “ என்றான்

இப்படியாக யோவன் ஸ்நானகர். அவர்தந்தை சக்காரியாஸ்.தாயார் எலிசபெதம்மாள் ஆகியோரின் எலும்புகள் பிற்காலத்தில் மிகுந்த வணக்கத்துடன் எடுத்து செல்லபட்டு சமாரியாவிலுளா செபஸ்தே என்னுமிடத்தில் அடக்கம் செய்யபட்டன. முதுபெரும் இறைவாக்கியர் எலியாசின் கல்லறையும் இங்குதான் இருகின்றது.காலத்தின் கொடுமையால் இந்த கல்லறைகள் முஸ்லீம் தர்க்காவாக மாற்றப்பட்டுள்ளன.

சரி… இப்போது ஆக்ளேயை ப்ற்றி கதைக்கு வருவோம்..இயேசுநாதரால் தலையில் தட்டப்பட்ட ஆக்ளே உடனே மூர்ச்சையானாள். அவளுக்கு சுய நினைவு வந்ததும் தன்னில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளதை உணர்ந்ததாள். இதுநாள்வரை அவள் அறிந்திராத வெட்க்கம் மாணம் அச்சம் போண்ற பெண்மைக்கே உறித்தானா நான்கு குணங்களையும் உணர்ந்தாள் அச்சமும் நாணமும் அவளை பிடுங்கித்தின்றன. உடனே உள் அறைக்கு சென்று குளித்து தூய வெண்பணிபோன்ற ஆடைவுடுத்தி இத்தாலிய பளிங்குச்சிலைபோன்ற தோற்றத்துடன் இயேசுவுக்காக காத்துக்கொண்டிருந்தாள்.

தன் மூதாதையர்களுக்கான  அஞ்சலி முடிந்ததும் இயேசுநாதர் ஆக்ளேவின் முன்பாக வந்துநின்றார். இப்போது ஆக்ளே இயேசுநாதரின் காலடியில் வீழ்ந்து கண்ணீர்பல சொறிந்தாள். இப்போது ஆக்ளே இயேசுவின் பாதங்களில் வீழ்ந்திருப்பதை இயேசுநாதர் தடை செய்யவில்லை. ‘ அம்மணி இனிமேலும் நீ பாவம் செய்யாதே. சமாதானத்தில் வாழ்வாயாக “ என்றார்.

  இதற்குப்பிறகு ஆக்ளேயினுடைய வாழ்க்கை முற்றிலுமாக மாறிபோயிற்று இயேசு இல்லாத வாழ்க்கை அவளுக்கு வெறுமையாகிபோயிற்று. ஒரு சில நாட்களுக்குபிறகு

 ஆக்ளே யூதாசை கூப்பிட்டு ஆள் அனுப்பினாள். பரம சந்தோஷத்துடன் அக்ளே வீட்டுக்கு பறந்தோடி வந்தான் யூதாஸ் அவனை வரவேற்ற ஆக்ளே, “ ஐய்யா யூதாஸ் அவர்களே இந்த பை நிறைய தங்கக்காசுகளும் தங்க நகைகளும் உள்ளன.இவை என் தாயால் என் வாழ்கைக்கு சீதனமாக கொடுக்கபட்டவை. நான் தவறான வழியில் சேர்த்த பொருட்களை நானே தானம்  செய்துவிட்டேன், என் தாய் எனக்கு கொடுத்த இந்த தங்க காசுமற்றும் நகைகளை இயேசுநாதரின் தர்ம செயல்களுக்கு கொடுக்கும்படி உம்மிடம் ஒப்படைக்கவே உம்மை அழைத்தேன். ஏற்றுக்கொள்வீராக “ என்றாள்.

   ஆக்ளே நீ ஒரு விஷயத்தை யோசித்துப்பார். உனக்கு அபூர்வமான அழகும் ஏறாளமான செல்வமும் இருகின்றது. நீ ஏன் ஒருவனை திருமணம் செய்துகொண்டு நல்ல ஒரு வாழ்க்கை வாழக்கூடாது. நீ சம்மதித்தால் நானே உன்னை கல்யாணம் செய்துகொள்கிறேன் நீ என்ன சொல்கிறாய்? “ என்றான் யூதாஸ். யூதாசிடமிருந்து இப்படியொரு பதில்வரும் என்று சற்றும் எதிர்பாராத ஆக்ளே,” ஐய்யா யூதாசே…என்னிடம் வரும் ஆண்களின் கண்பார்வையை வைத்தே அவர்களின் நோக்கத்தையும் குணத்தையும் புறிந்துகொள்ளும் கலையை  நன்றாக கற்றவள் நான். பெண்ணால் சாதிக்க கூடிய அனைத்து  கலைகளையும் அறிந்தவள் நான். என் தாயார் எனக்கு என்ன நோக்கதிற்காக ஆக்ளே என்று பெயர் வைத்தாளோ என் வாழ்க்கையும் அவ்வாறே கேவலமானதாக அமைந்துவிட்டது. நானும் என் வயதில் எத்தனையோ ஆண்களைப்பார்த்துவிட்டேன் ஆனாலும் உம்மைப்போல் காசு ஆசைபிடித்தவனையோ பெண்ணாசை பிடித்தவனையோ நான் பார்த்தது இல்லை.

நான் இயேசுநாதரை பார்த்து இரண்டுநாள் கூட ஆகவில்லை. அதற்குள் நான் அவருடைய அடிமை ஆகிவிட்டேன் ஆனால் நீர் அவருடைய சீடராய் அமைந்திருந்தும் உன்னை அவரால் புறிந்துகொள்ள முடியாதது எப்படி? அப்படியானால் அவருக்கு உம்மால் ஏதோ பெரிய காரியம் ஆக வேண்டும். போய் அவருக்கு உத்தமமான சீடராக இருக்க முயற்சி செய்யும்  போய்வாரும்” என்றாள்.

    இதற்குபிறகு ஆக்ளே சரித்திலிருந்து மறைந்து போனாள். அவளை எங்கு தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. சில நேரங்களில் யூதேய பாலைவனங்களிலும் சில நேரங்களில் எகிப்த்திய பாலைவனங்களிலும் வெண்ணாடை  அணிந்த ஒருபெண் தன்னந்தனியே செல்வதை பலரும் பார்த்திருப்பதாக பல கதைகள் நிலவி வருகின்றன.

ஆக்ளெ தன்னிடமிருந்து மறைந்துகொண்டதை அறியவந்தான் ஏரோது.அதனால் அவன் அடைந்த ஏமாற்றத்திற்கு அளவே இல்லை.ஆகளேயை மனம் மாற்றியது இயேசுநாதர்தான் என்று அறியவந்த ஏறோதன் தன் வைராக்கியத்தை  காட்ட தக்க சமயத்துக்காக காத்திருந்தான்.அந்த சந்தர்பமும் ஆவனுக்கு அமைந்தது.

     இயேசுநாதர் போஞ்சிபிலாத்துவால் தீர்வையிடும் முன்னர் அவர் கலிலேயன் என்பதால் அப்போது ஜெருசலேமில்  முகாமிட்டிருந்த ஏரோதனிடம் விசாராணைக்கு அனுப்பினான். இப்போது இயேசுவின் உயிர் தன் கையில் என்பதை அவருக்குக்காட்ட “ இதோபாரும் ராபி நீர் மஹாசக்தி படைத்துடுள்ள ராபி என்பதை நான் அறிவேன்.. எனக்கு ஒரெயொரு காரியம் மட்டும் செய்யும் உன்னை விட்டுவிடுகிறேன்..என் ஆக்ளேவை என்னிடம் விட்டுவிடும். அவளுக்காக நான் எதையும் செய்வேன்/ என்னை எதிற்க இந்த கலிலேயா சமரியா மற்றும் யுதேயாவில் எவனுக்கும் தைரியம் இருந்ததில்லை;”என்றான். மேலும் பல கேள்விகளைக்கேட்டான் ஆனால் இயேசுநாதர் அவனுக்கு பதில் ஏதும் கூறாதபடியினால் அவரை போஞ்சிபிலாத்துவிடம் திருப்பி அனுப்பிவிடவே இயேசுநாதருக்கு சிலுவை மரணம் தீர்ப்பு ஆகியது. சுவாமி இயேசுராஜா தன்னை நம்பி தன் வாழ்க்கையை ஒப்படைத்த ஆகளேவுக்காகவும் தன் உயிரை பணயம் வைத்தார்.அவளுக்குமட்டுமல்லாது இந்த உலகில் பிறப்பெடுத்த அனைத்து மனித ஜென்மங்களுக்காகவும்   சாத்தானின் அடிமைதலையிலிருந்து தம் மக்களை மீட்க்க தன் உயிரை பணையம் வைத்தார்.

       நேயர்களுக்கு அந்த சிகப்புக்கல் கதையை தொடர்கிறேன். ஸ்வாமி  இயேசுநாதரால்  மேலே  தூக்கி வீசப்பட்ட் அந்த சிகப்புக்கல் மேலே நிலைபெற்றுக்கொண்டு ஒரு கிரகமாக நின்றது.

      ஒருமுறை இயேசுநாதர் தன் சீடர்களுடன் பிலிப்பு செசாரியாவுக்கு வந்தார். இங்குதான் இராயப்பரை ஒரு மாடத்தின் மேல் நிற்கவைத்து,” இராயப்பா…நீ ராயாய் இருகின்றாய் இந்த பாறையின்மேல் என் திருச்சபையை கட்டுவேன்.நரகத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளாது” என்றார். அப்போது அதுவரை அந்த குகையில் வாழ்ந்துவந்த மனித தலையும் ஆட்டுஉடம்பும் கொண்ட பான் என்னும் கிரேக்க தெய்வம் பாதாளங்களில் இறங்கியது. அதனால் அன்று துவங்கி இன்றுவரை இந்த பான் என்னும் தெய்வத்திற்கு பூஜைகள் ஏதும் நடைபெறுவதில்லை.

   பெரிய வெள்ளியன்று இயேசு சிலுவையில் மரிக்கவே அவருடைய ஆன்மா பாதாளங்களில் இறங்கவே அங்கே தங்கியிருந்த பான்தேவதை இனிமேலும் அங்கிருக்க முடியாது என்று பாதாளத்திலிருந்து வெளியேறி வான் வெளியிலிருந்த சிகப்புக்கல் கிரகத்தில் குடியேறியது. ஈஸ்ட்டர் அன்று இயேசுநாதர் வெற்றி வீரராய் உயிர்த்தெழவே அண்ட வெளியிலும் இயேசு வெற்றிவீரராய் பவனிவரவே அதிதூதரான புனித மிக்கேல் சம்மனசானவர் பான் தேவனை தன் வாளாள் ஒரே வீச்சில் வெட்டிக்கொண்றார். அடுத்து அதிதூதரின் வாள் லூசிஃபேரின் மீது இறங்க உயர்த்தப்பட்டது. அப்போது இயேசுநாதர்’” மிக்கேலே பொறும். லூசிபேர் என் பரமபிதாவிடம் இன்னும் இரண்டாயிரம் ஆண்டு தவணை கேட்டிருகின்றான். பரமபிதாவும் அவன் சவாலை ஏற்றுக்கொண்டுள்ளார். ஆகவே அவனை இப்போது விட்டுவிடும் “ என்றார்

சுவாமி இயேசுநாதர் லூசிஃபேருக்கு தவணையாகக்கொடுத்த இரண்டாயிரம் ஆண்டுகள் முடிந்துவிட்டன. நாம் எந்த காலகட்டத்தில் இருக்கின்றோம் என்பதை நேயர்கள் புறிந்துகொண்டால் சரிதான்.

   இயேசுவின் பால்ய சினேகிதர்கள் பண்ணிரெண்டு பேர்கள் அல்லவா. இந்த கதையை பொருத்தமட்டில் அவருடைய மூன்றுபேர்களின் கதைமட்டுமே இதுவரை சொல்லி இருகிறேன். மீதி ஒன்பதுபேரின் கதையை சொல்வதற்கு இப்போது இடமில்லை. காலம் அனுமதித்தால் மீதிபேர்களின் கதி என்னவாயிற்று என்பதைபற்றி பிறகு சொல்லுவேன்.

இயேசுவின் திரு நாமம் என்றென்றும் வாழ்த்தப்படுவ்தாக,

Tuesday, November 4, 2025

சிரியா நாட்டில் யேசுவின் முதல் பெண் வீர மங்கை புனித தேக்லா

       

 சிரியா நாட்டில்  யேசுவின் முதல் பெண் வீர மங்கை புனித தேக்லா

    சவுல் பவுலாக மாறியபிறகு   முன்னர் எந்த அளவுக்கு வெறித்தனமாக கிறிஸ்த்துவையும் கிறிஸ்த்துவர்களையும் வெறுத்தாரோ அந்த அளவுக்கு பன்மடங்கு அதிகமாக கிறிஸ்த்துவையும் கிறிஸ்த்துவர்களையும் நேசித்து யேசுவைப்பற்றி போதிக்க ஆரம்பித்துவிட்டார். கிரிஸ்த்துவும் அவரிடமிருந்து பல புதுமைகளை செய்யவே கிறிஸ்த்துவைம் பற்றிய தெளிவான சிந்தனை மக்களிடையே வெகுவாக பரவ ஆரம்பித்தது  இப்படியாக அவர் இன்றைய துருக்கி நாட்டின்  ஒருபகுதியான ஐகோனியும் என்னும்  ஊருக்கு வந்தார் ஐகோனியும் என்னும் பெயர் தற்போது கோணியும் ன்றழைக்கப்படுகின்றது. 

இந்த  கோணியும் பட்டிணத்தில் ஒரு உயிர்குடியில் வாழ்ந்தவள்  தியோக்லியோ என்னும் ஒரு பெண். இந்த பெண்ணுக்கு பிறந்தவள்தான் தேக்லா என்னும் ஒரு பருவ மங்கை.   பெண்கல்வி இல்லாத அந்த காலத்திலேயே தன் மகள் தேக்லாவுக்கு தத்துவம் தர்க்கம் போன்ற பல சாஸ்த்திரங்களை பயிற்றுவித்தாள். தன் மகள் தேக்லா அழகிலும் அன்பிலும் பண்பிலும் சிறந்து விளங்குவதைக்கண்டு தாய் தியோகிளியொ மிகவும் பெருமை பட்டுக்கொண்டாள். இப்படி இருக்கையில் ஒரு நாள்……

வந்தது  வினை.

எங்கிருந்தோ வந்தது ஒருகுரல். காண்போரையும் காண வைக்கும் கேட்போரையும் கேட்கவைக்கும் ஒரு அற்புத காந்தக் குரல் இந்தக குரலுக்குறிய மனிதர் யார்? அவர்தான் புனித பால். அவரது சொற்பொழிவு எல்லோரையும் பிரம்மிக்க வைத்தது. புனித பாலின் பிரசங்கத்தால் பெறிதும் கவரப்பட்ட தேக்லா மூன்று நாட்கலாக தன் வீட்டு ஜன்னலைவிட்டு நகரவே இல்லை. தேக்லா தன் நிலை மறந்தாள் தன் பேர் மறந்தாள். தன் ஊர்மறந்தாள். தன் உறவை மறந்தாள். தான்னைபெற்ற தன்தாய் தியோகிலாவை மறந்தாள் அவள் அறிந்ததெல்லாம் இயேசு…இயேசு…இயேசு மட்டும்தான்.

தன் பெண் தேக்லாவின் மனமாற்றத்தை கவனித்த தியோகிலா எல்லாம் அந்த ரோமையன் சொட்டைத்தலையனால் (புனித பவுல்) வந்த வினை. போனால் போகிறது என்று போதிப்பதற்கு இடம் கொடுத்ததால் எனக்கு இத்தனை மோசம் வந்தது. என் மகளுக்கு ஏதேதோ மந்திரம் மாயம் செய்து அவளுக்கு துற்புத்தி சொல்லி முழுவதுமாக மாற்றி வைத்துவிட்டான்.அந்த ரோமையன்  ( புனித பால் ) அவன் நாசமாகப்போக. இருக்கட்டும் அவனையும் அவளையும் நான் என்ன செய்கிறேன் பார் என்று கர்கித்தாள் உடனே தன் தம்பி தாமிரிஸ் என்பவனை அழைத்தாள் அவன் வந்தவுடன் தம்பி. உன்மனதில் என்ன இருக்கின்றது என்பதை  நான் நன்றாக அறிவேன் உனக்கு என் மகள் தேக்லாவை திருமணம் செய்துகொள்ள ஆசை . அப்படித்தானே. நான் சம்மதிகின்றேன். உடனடியாக திருமணத்திற்கு ஏற்பாடு செய். என்றாள். மாப்பிள்ளை தாமிரிஸ் மிகுந்த சந்தோஷத்துடன் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்துவிட்டான். ஆனால் அது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. தேக்லா திருமணத்திற்கு  சம்மதிக்கவில்லை. இதனால் மனமுடைந்துபோனான் மாப்பிள்ளை தாமிரிஸ்.. அவனுடைய கோபம் புனித பால் மீது திரும்பியது. தனக்கு திரும ண நிச்சயமான பெண்ணை மனமாற்றம் செய்வித்தததாகவும் ரோமைய சாம்ராஜ்ஜியதிற்குட்பட்ட நாடுகளில் தடை செய்யபட்ட கிறிஸ்தவ மதத்தை போதித்ததற்காகவும் இவ்விதமாக பல கன்னிப்பெண்களின் திருமண ஆசையை  சிதைத்ததற்காகவும் புனித பவுலின்மீது குற்றம் சாட்டப்பட்டது. அபோதைய ரோமையகவர்னராக இருந்த ஐகோணியம் அதிபதி புனித பாலுக்கு சவுக்கடிகளும் நாடு கடத்தும் தண்டனையும் கொடுத்தார். புனித பால் அதன்படி சிறையில் அடைக்கபட்டார். இந்த சிறையில் தேக்லாவும் புனித பவுலும் இருந்ததற்கு சாட்ச்சியமாக புனித பவுலையும் தேக்லாவையும் சுவர் ஓவியமாக வரைந்து வைத்திருக்கின்றனர்.. அந்த சிறையும் அதிலுள்ள சுவ்ர் ஓவியங்களும் இன்றளவும் உள்ளன. இந்த சுவ்ர் ஓவியங்களினால் புனித பவுல் மற்றும் தேக்லா ஆகியோர் எப்படி இருந்திருப்பார்கள் என்று நாம் அறிந்துகொள்ளலாம்.

   சிறையில் புனித பால் சவுக்கடிகள் பல பட்டதினால் மிகவும் சோற்வுற்றிருந்தார் இதை கேள்விபட்ட தேக்லா தன் நகைகளையும் பணத்தையும் எடுத்துக்கொண்டு சிறைக்காவலர்களிடம் லஞ்சம் கொடுத்து புனித பாலுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து மூன்று நாட்க்கள் அவருடனே தங்கிவிட்டாள். வயதுவந்த தன் மகள் தேக்லா மூன்று நாட்களாக வீட்டில் இல்லாத்தால் அவள்தாய் தியோகிலாவும் அவள் சகோதனும் முறைமாப்பிள்ளையும் ஆன தாமிரிசும் தன் கோபத்தின் உச்சிக்கே சென்றனர் அதனால் தன் மகள் என்றும் பாராது  தாயும் தான் நிச்ச்யித்த பெண் தனக்கு துரோகம் செய்துவிட்டாள் என்று மாப்பிளையும் ரோமைய ஆளூனரிடம் முறையிடவே தேக்லாவுக்கு  உயிரோடு எரித்துக்கொல்லும் மரண தண்டனை தீர்ப்பாயிற்று. அதன்படி அந்த ஐகோணியும் பட்டிணத்தில் இருந்த ரோமர்களின் விளையாட்டரங்கத்தில்  நடுவே ஒரு பெரும் மேடையின் நடுவே இருந்த ஒரு பெரும் தூண் ஒன்றில் சங்கிலிகளால் கட்டப்பட்டாள் தேக்லா.

ஆட்டம் ஆரம்பித்தது.

ஐகோணியத்தின் ரோமை ஆளுநன் காஸ்டில்லோ வந்து தன் இருக்கையில் அமர்ந்தான். தன் உரையை ஆரம்பித்தான். “ தேக்லா…ரோமையின் அளுகைக்கு உட்பட்ட எல்லா நாடுகளிலும் கிறிஸ்த்துவமதம் தடை செய்யபட்டிருகின்றது. இது தெரிந்தும் நீ அதை ஏற்றுக்கொண்டாய். நீ உயர்குடியில் பிறந்ததை முன்னிட்டு உனக்கு ஒரு வாய்ப்பு தருகின்றேன் இயேசுவை இனிமேல் கனவில்கூட நினைப்பதில்லை என சத்தியம் செய். உனக்கு உயிர்பிச்சை தருகின்றேன் “ என்றான்.

  இதற்கெல்லாம் மசிபவளா தேக்லா.” ஆளுனறேஎன்தேகமெல்லாம் தீயால்; எரிந்து சாம்பல் ஆனாலும் நான் என் நேச இயேசுவை ஒரு நாளும் மறுதலிக்க மாட்டடேன்.”  என்றாள்.  ஒரு சிறுபெண்ணிடம் தான் தோற்றுவிட்டதால் கடும் கோபம் கொண்டான் ஆளுனன். அடுத்து அவன் வாயிலிருந்து வந்தது இடிமுழக்கம்.  கொளுத்துங்கடா அந்த சிருக்கியை. “ அவ்வளவுதான் தேக்லாவை சுற்றி அடுக்கப்படிருந்த மரங்கள் மளமளவென்று தீயை கக்க ஆரம்பித்தன. தேக்லாவின் உதடுகள் பரலோகத்தில்  இருக்கின்ற என்னும் ஜெபத்தை சொல்லிக்கொண்டிருந்தன. அப்போது வானிலிருந்து இறங்கியது ஒருபெரும் சூரைக்காற்று. இயற்கை பெரும் கோரத்தாண்டவம் ஆடிற்று. திடீரென பெரும் மழை கொட்டியது. இதனால் தேக்லா காப்பாற்றப்பட்டாள். இதைகண்ட   மக்கள் அனைவரும் தேக்லா வணங்கும் தெய்வம் உண்மையில் சக்திமிகுந்த தெய்வம் என்று பெரும் குரலில்  யேசுவை வாழ்த்திப்போற்றினர்.

தேக்லாவின் தாயார்,” மகளே தேக்லா நீ வணங்கும் தெய்வம் உண்மையில் சக்தியுள்ள தெய்வம்தான் என்பதை நான் கண்ணாறக்கண்டு கொண்டேன். இனிமேல் உன் விருப்பதிற்கு மாறாக நான்  நடக்கப்போவதில்லை. உன் எதிர்கால வாழ்விலும் நான்  தலையிடப்போவதிலை. என்மகள் எப்போதும் சரியான முடிவைதான் எடுப்பாள் என்பதில் எனக்கு எப்யோதுமே நம்பிக்கை உண்டு. நீ இப்போது போ.   என்றைக்காவது ஒரு நாள் உன் தாயை பார்க்கவேண்டும் என்னும் எண்ணம் உனக்கு வந்தால் அப்போது  என்னிடம் வா. அப்போது இந்த கிழவி இருப்பேனோ  என்னவோ  தெரியாது. ஆனாலும் என் வீடு உனக்காக எப்போதும் திறந்தே இருக்கும். போய்வா “ என்மகளே தெக்லா “ என்று அவளை கட்டி அணைத்து முத்தமிட்டு வழியனுப்பி  வைத்தாள்

அந்தியோக்கியாவில் பயங்கரம்.

 புனித பாலும் தேக்லாவும் திருத்தொண்டிற்கு  போகும் இடங்களில் எல்லாம்  மக்களை நல்வழிப்படுத்தியும் அற்புதங்கள் பல செய்துகொண்டும் எண்ணற்ற மக்களை கிறிஸ்த்துவர்களாக மதம் மாற்றினர். இப்படியாக துருக்கியின் தென் பகுதியில் அமைந்துள்ள அந்தியோக்கியா என்னும் பட்டிணத்துக்கு வந்தனர். இந்த அந்தியோக்கியா பட்டிணத்தில்தான் புனித பேதுரு  முதன்முதலாக இயேசுவின் திருச்சபையை ஸ்தாபித்தார். அதுமுதலே  இயேசு கிறிஸ்துவை பின்பற்றியவர்கள் கிறிஸ்த்துவர்கள் என்று அழைக்கபட்டனர் .தேக்லா தான் ஒரு பெண் என்பதை மறைத்து ஆண்போல தன்னை மாற்றிக்கொண்டு பெண்களிடத்தில் இருக்க வேண்டிய அச்சம், மடம், நாணம், கற்பு என்னும் புண்ணியங்களைபற்றி பிரசங்கித்து பல  கன்னிப்பெண்களின் வாழ்கையை மாற்றினாள். ஒருநாள்  தேக்லாவின்  உண்மை வெளிப்பட்டது. இதைகண்டவன் அந்தியோக்கியாவின் ஆளுநன்  அலெக்சாண்டர்  என்பவன்.

     தேக்லா இவ்வளவு பெரும் அழகியா… அவளை எப்படியும் அடைந்து விட வேண்டும் என்னும் ஆசையால் தூதுவிட்டுப்பார்த்தான்… ஆசைகாட்டிப்பார்த்தான்….மிரட்டியும் பார்த்தான். தேக்லா எதற்கும் மசியவில்லை. ஒருநாள் தனிமையில் ஒரு தெருவின் ஒரத்தில் தேக்லா வரும்போது  ஏற்கணவே குடிபோதையில் இருந்தவனுக்கு காம போதையும் ஏறிவிட்டதால்  தேக்லாவை கற்பழிக்க முயன்றான். இதனை எதிபாராத தேக்லா தன்னை சுதாரித்துக்கொண்டு அவனுடன் போராடினாள் தேக்லா அவனை அடித்து துவம்சம் செய்துவிட்டாள். அவன் அங்கி கிழந்தது. கிரீடம் கீழ விழுந்தது. முகத்தில் ஏற்பட்ட காயத்தால் இரத்தம் வழிந்தது. இந்த களேபரத்தில் கூட்டம் கூடிவிட்டது. ஆளுனன் அலெக்சாண்டரின் மானம் கப்பல் எறியது. இதனால் ஏற்பட்ட அவமானத்தாலும் கோபத்தினாலும் அடுத்தநாள் அரசவையை கூட்டி தேக்லாவுக்கு கொடூரமான மரணதண்டனை வழங்கினான் அதுவும் சிங்கங்களுக்கு இறையாகக்கூடிய கொடிய மரணம். இதற்காக ஆணும் பெண்னுமாய் நான்கு சிங்கங்கல்  வரவழைக்கப்பட்டு நாங்கு நாட்களாக பட்டிணிபோடப்பட்டன. அந்த நாங்கு நாட்க்களும் தேக்லாவும் பட்டிபோடப்பட்டு சிறையில் வைக்கபடார். தனது முடிவு நெருங்கிவிட்டாதால் அதை தைரியமாக சந்திக்க தன்னை தயார் செய்தாள். அவள் மனதில் தாவீது ராஜாவின் சங்கீதம் இப்படியாக ஓடிக்கொண்டிருந்தது.

   என் ஆயர் ஆண்டவர் எனக்கென்ன குறைவு எனக்கென்ன குறைவு.

   இருள் சூழ்ந்த பகுதியில் நான் நடந்தாலும்

    மருள் கொண்ட வாழ்வு எனை வதைத்தாலும்

    இறைவா என் நெஞ்சில் நீர் என் றும் உள்ளீர்

 ஆயிற்று…. ஐந்தாம் நாள் வந்தது. அந்தியோக்கியாவின் ரோமர்களின் மரண விளையாட்டு அரங்கம் நிரம்பி வழிந்தது. பலவிதமான சாகஸ விளையாட்டுகள் அரங்கேறின. போட்டிகளில் தோற்றவர்களுக்கு மரணம்தான் பரிசு. ஜெயித்தவர்களுக்கு மலர்கிரீடம் பரிசு. கடைசியில் எல்லோரும் எதிர்பார்த்திருந்த சிங்கம்தழுவுதல் போட்டி. தேக்லா சங்கிலிகளால் கட்டப்பட்டநிலையில் அரங்கத்தைச்சுற்றி  இழுத்து வரப்பட்டாள். முன்னோட்டமாக  மாரணதண்டனை கைதிகள் பலர் பலவிதமான  முறையில்  கொல்லப்பட்டனர். கடைசியில் தேக்லாவின் முறை வந்தது. பல மக்கள் மிகுந்த ஆரவார ஒலி எழுபினர். ஆனால் ரகசிய கிறிஸ்த்துவர்கள் பலர் வாய்விட்டு அழ முடியாமல் முகத்தை மூடிக்கொண்டு விம்மிவிம்மி அழுதனர். தேக்லா மரண அரங்கத்தின் நடுவில் நின்றாள். கூண்டில் அடைபட்ட சிங்கங்கள் திறந்து விடபட்டன. நாங்கு நாட்க்கள் பட்டிணியிருந்த சிங்கந்கள் வெறிகொண்டு வெகு மூர்க்கமாக தேக்லாவின் மீது பாய வந்தன..ஆனால் இங்குதான் ஆண்டவரின் அருள் தேக்லாவின் மீது இறங்கியது.

 அந்த நான்கு சிங்கங்களும் தேக்லாவின் பாதத்தின் முன் அமர்ந்து அவள் காலை நாய்க்குட்டிகள் போல் நக்கிக்கொண்டிருந்தன. ஆளுநன் மற்றுமல்லாது அந்த அரங்கத்திலிருந்தவர்கள் அனைவரும் பிரம்பித்து நின்றனர். சிலா கிறிஸ்த்தவர்கள் பயம் நீங்கி  “இயேசு கிறிஸ்த்துவே உமக்கு புகழ் “என்றனர்    வெறி கொணெடான் ஆளுநன் அலெக்சாண்டர். “ அந்த சிங்கங்களை கொல்லுங்கள் “ என்றான். வீரர்கள் சிங்கங்களின்மீது அம்பு போடவே அவை சுய நினைவு பெற்றன.  ஆண் சிங்கங்கள் தேக்லா மீது பாய  பெண் சிங்கங்கள் அதனை அனுமதிக்கவில்லை. இதனால கோபமுற்ற ஆண் சிங்கங்கள் பெண் சிங்கங்கள் மீது பாய்ந்து அவற்றை கொண்று திண்றன.பசி தீர்ந்த ஆண் சிங்கங்கள் அவள் காலடியில் சாதுவாய் சாய்ந்தன. இவ்விதமாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து  தேக்லாவை சிங்கங்களின் வாயிலிருந்து  காப்பாற்றினார். ஆளுநன் தேக்லாவைப்பார்த்து  “ அடியே சின்ன சிறுக்கி,  இன்றைக்கு என்னிடமிருந்து தப்பித்துக்கொண்டாய்…. எனக்கும் ஒரு காலம் வரும். அப்போது காட்டுகிறேன் பார் நான் யாரென்று.. இப்போது போ என் முகத்தில்  இனி விழிக்காதே “ என்று கர்ஜித்தான்.

இதுவரை தேக்லா எத்தனையோ பேருக்கு புனித பவுல் ஞனஸ்நானம் கொடுத்திருந்தாலும்  ஏதோ காரணத்திற்காக தனக்கு அவர்  திருமுழுக்கு கொடுக்கவில்லை. இப்போது புனித பவுல் கையால் திருமுழுக்குபெரும் வாய்ப்பும் இல்லை அவர் ரோமுக்கு சென்றுவிட்டார்.  தான் இன்னும்  ஞானஸ்நானம்  பெறாததை  உணர்ந்த தேக்லா தனக்குத்தானே ஞானஸ்நானம் கொடுக்க அருகில் இருந்த ஒரு பெரிய ஏரிக்கு சென்றாள் அங்கேயும் அவளுக்கு காத்துக்கொண்டிருந்தது ஒருபெரிய ஆபத்து.

   அந்த ஏரியில் பல கடற்சிங்கங்கள்(seal ) இருந்தன. ஏதாவது இறையைகண்டால் அதன் தந்த கோரைப்பற்கலால் குத்தி குதறி தின்றுவிடும் குணம் கொண்டவை. இந்த ஏரியில்தான் நம் தேக்லா தனக்குத்தானே  ஞானஸ்நானம் கொடுக்க குதித்தாள். இங்கும் இயசுவின் வல்லமை வெளிபட்டது. தேக்லா தனக்குத்தானே ஞானாஸ்நானம் கொடுத்துக்கொண்ட பிற்பாடு அங்கிருந்த கடல் சிங்கங்கள் தேக்லாவை தாக்கிக்கொல்ல நெருங்கின தேக்லா தண்ணீருக்குள்ளேயே ஞாஸ்நானம் பெற்றுக்கொணடாள். அவள் தண்ணீரின் மேற்பரப்பிற்கு வருவதற்குள்ளாகவே  பெரும் இடியும்  மின்னலும் அந்த ஏறியில் இறங்கின. அதனால் ஒரு பெரும் தீப்பிளம்பு ஏரிமுழுவதும் பரவிற்று. அதனால் தேக்லாவைத்தவிர அந்த ஏரியில் இருந்த எல்லா  உயிரினாங்களும் மடிந்தன. தண்ணீருக்கு வெளியே வந்த தேக்லா நடந்ததை அறிந்து ஆண்டவராம் இயேசுக்கு நன்றிபல கூறினாள். மீண்டும் தேவ ஏவுதலால் புனித பால்  ரோமில் இருப்பதை அறிந்து ரோம் சென்றாள்.

ரோமில் பலகாலம் புனித பாலுடன் இணைந்து பல புதுமைகள் செய்து அவள் குருநாதருக்கு உதவியாக இருந்தாள். புனித பால் தியோக்லாவை அவள்  பிறந்த ஐக்கோணியத்துக்கு அனுப்பி அங்கு இறைப்பணிக்கு அனுப்பினார். தான் பிறந்த நாட்டில் தன்தாய் வீட்டில் அவளதுதாயார் இன்னும் உயிரோடு இருப்பதை அறிந்து மிகவும் சந்தோஷம் அடைந்தாள் அவளது முறை மாமன் ஏற்கனவே மரித்திருந்தான். தனது தாயார்  மறைந்த பிறகு சிரியாவுக்கு ஊழியத்திற்காக வந்தாள். இங்கும் வந்தது தொல்லை. அந்தியோகிய  அலெக்சாண்டரை நினைவிருகின்றதா ? இவன் இங்கும் வந்து தனக்கு தொல்லை கொடுப்பான் என்று தேக்லா கனவிலும் நினைத்திருக்க மாட்டாள்.

“ அடியே தேக்லா உன்னை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடுவேன் என்று நினைத்தாயா …உன்னை என்ன செய்கிறேன் பார்    என்று அவள்மீது பாய்ந்தாள். தேக்லா அவனை தள்ளிவிட்டு ஓடினாள். அடேய்  தீவட்டி தடியர்களே ஓடுங்கள் … பிடியுங்கள்… அவளை கூட்டாக சேர்ந்து  கற்பழிப்போம் “

தேக்லாவுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு பலம் வந்ததோ….தன்னை தாக்க வந்தவர்களை தள்ளிவிட்டு ஓடினாள் ஓடினாள்… வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள். முடிவாக ஒருமலை குறுக்கிட்டது. அதற்கப்பால் பெரும் கல் மலைதான் .இதற்குமேல் தன்னால் தப்பிக்க முடியாது என்று உணர்ந்த தேக்லா தன் இருகரம் கூப்பி “ ஆண்டவரே இயேசுவே இனிமேல்  என்னால் முடியாது….உம் சித்தம் போல் எனக்கு ஆகட்டும் “ என்றாள் அப்போது அந்த அதிசயம் நடந்தது. தேக்லாவுக்கு முன்னால் இருந்த அந்த ஒற்றைக்கல் மலை இரண்டாக பிளந்து வழி ஏற்பட்டது. மீண்டும் ஓடினாள். எதிரிகளும் பின்தொடர்ந்து ஓடி வந்தனர். தேக்லா அந்த உயரமான கல்மலையில் ஏறினாள். அதன் உச்சிக்கே சென்றுவிட்டாள் அங்கு ஒரு பெரும் குகை இருந்தது. தன்னை பாதுகாப்பதற்காக அந்த குகையினுள் சென்றாள். உடனே அந்த குகை தேக்லாவை உள்ளே வைத்துக்கொண்டு முற்றிலுமாக மூடிக்கொண்டது. இந்த மலைப்பகுதியில் பல குகைகள் உள்ளன. எங்கும் குடிக்க தண்ணீர் கிடைக்காது.  அலெக்ஸாண்டர் தேக்லாவை எங்கு தேடியும் காணாதபடியினால் “ இனிமேல் தேக்லாவை தேடுவது வீண் வேலை. இங்கு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்து. இந்த பகுதியில் எங்கும் தண்ணீர் கிடையாது. ஆகவே நாம் இங்கிருந்து ஓடிப்போவோம் என்று தப்பிச்சென்றனர்.

  ஆக நம் புனிதை தேக்லாவை உயிருடன் பார்த்த கடைசி நபர் அலெக்ஸாண்டராகத்தான் இருக்க முடியும். இங்கும் ஆண்டவராகிய இயேசு ஒரு புதுமை செய்தார். மூடிக்கொண்ட குகையினுள் தேக்லா வாழ்வதற்காக ஒரு இனிமையான் சுனையை ஏற்படுத்தினார். அந்த சுனை இன்றளவும் இனிமையான நீரை கொடுத்துக்கொண்டிருகின்றது. இந்த குகையினுள் தேக்லா எப்படி இறந்தார்… எப்போது இறந்தார் என்பது யாருக்கும் தெரியாது.

தேக்லா பற்றிய மேலும் சில தகவல்கள். தேக்லா அந்த குகையிலிருந்து  வெளியே வந்து மீண்டும் புனித பாலை சந்திக்க ரோம் சென்றதாகவும் அப்போது ரோமில் புனித பால் தலைவெட்டப்பட்டு இறந்துவிட்டதாகவும் அவரை ரோமிலே புதைத்துவிட்டதாகவும் கூறப்படவே தேக்லாவும் அங்கேயே தங்கி தேவ ஊழியம் செய்து தன் தொன்னூராம்  வயதில் வேத சாட்ச்சியாக மரித்துப்போனதாகவும் அவரை புனித பால் கல்லறைக்கு அருகில் உள்ள குகைக்கல்லறயில் புதைதிருப்பதாகவும் இதற்க்கு சாண்றாக அவரது கல்லறையின் மேல் தேக்லாவின் சுவர் ஓவியம் இருப்பதாகவும்  கூறப்படுகின்றது. 

புனித பாலின் கல்லறை புணருத்தாரம் செய்யும்போது  புனித பாலின் திருவுருவம் ஒரு மொசைக் தட்டில் வரையப்பட்டிருந்ததால் அதன்மூலம் புனித பாலின் உருவம் எப்படி இருந்திருக்கும் என நாம் உணர்ந்துகொள்ள முடியும்.

 தேக்லா புனித பாலை சந்திக்க முடியாதலால் ரோமிலிருந்து மீண்டும் தன் தாய் நாடான ஐகூணியத்திற்கு வந்ததாகவும் தன் முதிர்ந்த வயதில் அங்கேயே மரித்ததாகவும் அவரது கல்லறை இன்றளவும்  அங்கேயே இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இப்படியாக தேக்லாவுக்கு பல  இடங்களில் பல கல்லறகளிருப்பதால்  ஆதாரமில்லாத எதையும் ரோமன் கத்தோலிக்க திருச்சபை ஏற்பதில்லை எனவே தேக்லாவை புனிராக அங்கீகரிக்கவில்லை என்று ஒரு செய்தி. ஆனால் கிழக்கு ரீதி திருச்சபைகள் தேக்லாவை புனிதையாகவும் புனித பாலின் இணை அப்போஸ்த்தலராகவும் அங்கீகரித்திருகின்றனர்..

 சிரியாவில் டமஸ்கஸ் நகருக்கு தென்பகுதியில் உள்ள மௌலாலா என்னும் ஊரில்தான் தேக்லா மறைந்த அந்த குகை உள்ளது. இங்குள்ள கிறிஸ்த்துவர்கள் இயேசுநாதர் பேசிய அர்மாயிக் மொழியையே இன்றளவும் பேசுகின்றனர். அவர்களுக்கு தேக்லா என்றால் உயிர். தேக்லாவின் திருவிழா செப்டெம்பர் 24 இன்றளவும் இங்குள்ள கிறிஸ்த்துவர்கள் மௌலாவின் குகையில்  தேக்லாவின் திருவிழாவை வான வேடிக்கையுடன் கொண்டாடி வருகின்றனர். இப்போதும் தேக்லாவின் குகை மௌலால  நகரில் ஒரு சிறந்த யாத்திரை ஸ்தலமாக உள்ளது.

இப்போதும் மௌலாலா குகையின் மீது ஒரு பெரும் மடாலயம் உள்ளது அரமாயிக் மொழியில் மோலாலா என்றால் திறந்திடு என்பது அர்த்தமாம்.