Thursday, February 27, 2014

" ஞான சௌந்தரி என்னும் புனித கத்ரீனம்மாள் "




                          " ஞான சௌந்தரி என்னும் புனித கத்ரீனம்மாள் "

               அன்று ரோமர்களுக்கும் கார்தேஜியர்களுக்கும் நடைபெற்ற போரில் வெற்றியை நிர்ணயித்தது வீரன் ஒருவனால்தான் என்றால் அது மிகையாகாது. ஆம்....அந்த ரோமையன் போரில் செய்த சாதனை மகத்தானது. அவனைக்கண்ட மாத்திரத்தில் கார்த்தேஜியர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள்..ஒன்பது அடிக்கும் சற்றே குறைந்த உயரமும் அதற்கேற்ற
சரீரமும் கொண்ட அவன் நடந்து வருவது ஏதோ ஒரு நடமாடும் மாமிச மலை அசைந்து அசைந்து வருவது போன்ற தோற்றம் ஏற்படுத்தியது. கார்த்தேஜியர்கள் ரோமையர்களுக்கு  எதிரான போரில் பெரும் ஆப்ரிக்க காட்டு யானைகளை பயன்படுத்தினார்கள். அவைகளுடைய கெட்ட குணம் என்னவென்றால் தான் தாக்கப்படும்போது அவைகள் தங்களை
வளர்த்தவர்கள் மீதே பாயும். அப்போது அவைகள் விசுவாசத்தை மறந்துவிடும்.. அவைகள் இந்திய யானைகளைப்போல் விசுவாசம் அற்றவை. அவைகளை பழக்குவதும் கடினம்..எனவே   அவைகளை போரின்போது பயன்படுத்துவது தற்கொலைக்கு சமம்...அவைகளுக்கு காயம் ஏற்படாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.. அது போரின் போக்கையும் அவற்றை வழி
நடத்துபவரின் சாமார்த்தியத்தையும் பொருத்தது. இத்தகைய தந்திர உபாயங்களை அறிந்துகொண்ட ரோமையர்கள் அந்த ஆப்ரிக்க காட்டு யானைகளை அவர்களுக்கு எதிராக திருப்பி விடும்படி மிகவும் மூர்க்கமாக தாக்கினர்.. இதனால் கோபமுற்ற அந்த காட்டு யானைகள் வளர்த்தவர்கள் மீது திரும்பி தாக்கின. இப்படியாக ஜெயதேவி ரோமர்களின் பக்கம் தன்
பார்வையை திருப்பினாள்.
      இனி கார்தேஜியை காப்பாற்றவே முடியாது... தோல்வி நிச்சயம் என்றறிந்த கார்தேஜிய மன்னர் ஹன்னிபால் நாட்டைவிட்டு ஓட வேண்டியதாயிற்று. ரோமையர்களுக்கு கார்த்தேஜிய   போரில் வெற்றி நிச்சயம் என்றதும் நாட்டிற்குள் புகுந்து கண்ணில் பட்ட ஆண்கள் குழந்தைகள் முதியவர்கள் அனைவரையும் கொண்றனர். பெண்களை மானபங்கப்படுத்தினர். நாட்டை
சூறையாடினர். இந்தப்போரில் தங்களின் வெற்றிக்கு காரணமான அந்த மனித அரக்கனாக விளங்கிய வாலிபனை ரோம் மறக்கவில்லை..சாதாரண சிப்பாயாக இருந்தவனை நூற்றுவர்   தலைவனாக்கினர். அவன் இந்த போர்க்களத்தில் செய்த சாதனை அவன் வாழ்நாள் முழுவதும் பேசப்பட்டது. பின்னே இருக்காதா..போர்க்களத்தில் எமன் என்றும் போர் வியூகங்களை
வகுப்பதில் பெரும் கில்லாடியாக விளங்கியவனும் கருணை என்பதை கண்ணிலேகூட காட்டாத மஹா மூர்க்கன் என்று பெரும் பெயர் எடுத்திருந்த கார்த்தேஜிய மன்னர் ஹன்னிபால்ட்டின் போர் உபாயங்களை உடைத்தவனை.... அவருடைய ராணுவ அறிவை பதம்பார்த்தவனை.... ரோம் மறக்குமா என்ன... எனவே அடுத்து எகிப்த்தில் தங்களுடைய
அரசுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்துவந்த பெர்பர்களை அடக்க இவனது தலைமையில் ஒரு பெரும் படையை ரோம் அனுப்பியது.  எகிப்த்துவந்த சில நாட்க்களிலேயே அங்கிருந்த   பெர்பர்களை தன் கூறிய அறிவாலும் போர் உபாயங்களினாலும் கொடூர தாக்குதலினாலும் எதிரியை நிலைகுலைய வைத்தான் அந்த மனித உருகொண்ட அரக்கன். இப்போது அவன்
ரோமர்களின் எகிப்த்திய ராணுவ கமாண்டர்..அடுத்து மெசாப்படோமியா...
அப்போது மெசப்படோமியாவில் ரோமிய அரசாங்கப்பிரதிநிதியாக இருந்தவர் அலெஃஸாண்டெர் செவெருஸ் என்பவர்.
           .இவர் பெரும் குழப்பவாதி. எதிலும் தாமதமான முடிவுகளை
எடுப்பவர். அலமானி யுத்தத்தில் ரோமர்களுக்கும் ஜெர்மானியர்களுக்கும் நடந்த போரில் தன் வீரர்களுக்கு சம்பளமே கொடுக்காமல் போரை நடத்தியதால் அதிருப்த்தி அடைந்தனர் அவரது ராணுவத்தினர். இப்போது மெசப்படோமியாவிலும் இதே கதையை இவர் நடத்தியதால் நம் மனித அரக்கனாக விளங்கிய நம் கதாநாயகன் தலைமையில் ஒரு பெரும் கலவரம்
ஏற்படுத்தப்பட்டு அதில் அலெக்ஸாண்டர் செவெருஸ் கொல்லப்பட்டார்... நம் கதாநாயகன் சீசராக ஏற்படுத்தப்பட்டார். இதன் காரணமாக இவர் அப்போதைய ரோமைய   கான்ஸ்டாண்ட்டிய மஹா சக்கரவர்த்தியாக விளங்கிய தியோக்குலேசியனை சந்திக்க வேண்டியதாயிற்று.
      இந்த சந்திப்பு இன்றைய இத்தாலியின் வடக்கிலுள்ள மிலான் பட்டிணத்தில் நடந்தது. இவனைக்கண்ட மாத்திரத்தில் தியோக்குலேசியன் கூறினான்," அடேங்கப்பா... என்ன மனிதன் இவர்.. வேத காலத்தில் பிலியஸ்த்தியனான கோலியாத்தை விட இவன் உயரத்திலும் சரீரத்திலும் உயர்ந்தவனாகவும் அறிவில் சிறந்தவனாகவும் அல்லவா   தெரிகின்றார்... ரோமைய பேரரசுக்கு இத்தகைய ஒரு சீசர் தேவைதான்... இவரை நானும் சீசராகஅங்கீகரிக்கிறேன்..வாழ்க மன்னர் சீசர் மாக்சீமியன்" என்றார். அதைத்தொடர்ந்து பெரும்   குரல்கள் எழும்பின..." வாழ்க ...மாமன்னர் சீசர் மாக்சிமியன்...வாழ்க...வாழ்க" என்னும் கரகோஷங்கள் காதைப்பிளந்தன. பிறகு காலம் மாறியது. நம் சீசர் மாக்சிமியன் ரோமின்   சர்வாதிகாரியாக அகஸ்ட்டசாக அமர்ந்தார்.
           தன்னுடைய சாம்ராஜ்ஜியத்தை சேர்ந்த நாடுகளுக்கு தன் அரசாங்க விஜயமாக கார்த்தேஜுக்கும் பின் எகிப்திற்கும் விஜயம் செய்தார்..ஒரு சாதாரண சிப்பாயாக இருந்து ஒரு   பேரரசனாக உயர்த்தப்பட்டபின் எகிப்த்திற்கு வருவதால் அவருக்கு மிகவும் விஷேஷமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.. இந்த கால கட்டத்தில் எகிப்த்தின் வடக்குப்பகுதியில்
மத்தியதரைக்கடல் பகுதியில் பெரும் துறைமுகப்பட்டிணமாக விளங்கியது அலெக்ஸாண்டிரியா பட்டிணம். அந்த பட்டிணத்தின் ரோமை ஆளுநறாக பதவி வகித்தவர் காண்ஸ்டைன்   என்பவர். அவருக்கு பதினெட்டு வயதில் ஒரு அழகுப்பதுமை போல் பெண் ஒருத்தி இருந்தாள் டாரத்தி என்னும் பெயரோடு. அவளுக்கு கல்வியின் மீது இருந்த ஆர்வம் காரணமாக
அவள் அவள்வயதுக்குள் படிக்க வேண்டிய அனைத்து கல்விகளையும் கற்றிருந்தாள்.அரசியல், பூலோகம், கணிதம், வான சாஸ்த்திரம், மருத்துவம் அனைத்தும் அவளுக்கு அத்துபடி ஆனது. சாதாரணமாக அழகிருக்கும் பெண்களாகட்டும் அல்லது ஆண்களாக இருக்கட்டும் அழகோடு அறிவும் சங்கமிப்பது அபூர்வம். ஆனால் நம் டாரதிக்கு அனைத்தும் நிறைவாக
இருந்தது. அவள்தாயார் அவள் அழகைப்பற்றியும் அறிவைப்பற்றியும் மிகவும் பூரித்துப்போவாள். இருப்பினும் காலாகாலத்தில் இவளை திருமணத்தில் இணைத்துவிட மனதாக இருந்தார்.
           ஆனால் மகள் டாரத்தி ஒரே வார்த்தையில் தன் தாயாரை வாய் அடைத்துவிடுவாள். " அம்மா...நீ எனக்கு பார்க்கும் மாப்பிள்ளை என்னைவிட அழகிலும், அறிவிலும், குலம்   கோத்திரத்திலும், வசதி வாய்ப்புகளிலும் உயர்ந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் சொல்லு..நான் திருமணம் செய்துகொள்கிறேன்" என்பாள். ஆனால் இவள் போடும்   கட்டளைகளின்படி தன்னுடைய கண்ணுக்கெட்டிய சொந்தபந்தங்களில் யாருமே இல்லை. எனவே வேறு குலம் கோத்திரந்தில் தகுதியான மாப்பிள்ளையை பார்க்க ஆரம்பித்தாள்.
       நம் டாரத்தியின் தாயார் ரகசியத்தில் ஒரு கிறிஸ்த்துவள். எனவே இந்த மாப்பிள்ளை விஷயத்தில் தனக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒரு உத்தமமான வயதான குருவை சந்தித்து  ஆலோசனை கேட்டார். அவர் யேசுநாதருடைய வாலிப வயதுடைய படம் ஒன்றை இவரிடம் கொடுத்து அவர் மகளுக்கு கொடுக்க சொன்னார். இந்த படத்தை பார்த்ததும் யேசுநாதர்  யார் என்றே அறிந்துகொள்ளாமல் அவர் அழகில் மயங்கி அவரை கல்யாணம் செய்துகொள்ள சம்மதித்தாள் டாரத்தி. மேலும் யேசுநாதர் சிறு குழந்தையாக தன் தாயாரோட் இருக்கும்   படமும் அவளிடம் கொடுக்கப்பட்டிருந்ததால் டாரத்தி," உன்மையில் என் மணாளனின் தாயார் எவ்வளவு அழகு...எனவேதான் அவரது திரு மகனும் அவ்வளவு அழகோடு இருகிறார்.
இவர்கள் இருவரது முகமும் குணமும் பார்க்கும்போதே தெரிகின்றது. மணந்தால் யேசுநாதரையே மணப்பேன்..இல்லையேல் இறப்பேன்..இது உறுதி " எனசபதம் எடுத்துக்கொண்டாள்.
          அன்று இரவு அவளுக்கு ஒரு கனவு ஒன்று காண நேர்ந்தது. அதில் தேவதாயாரானவர் தன் திருமகன் குழந்தை யேசுவை தன் கரங்களில் ஏந்திக்கொண்டு," மகனே பார்..நம் டாரத்தி  வந்திருகின்றாள்..நான் அவளை வரவேற்றிருகிறேன்...உனக்கு அவளை பிடித்திருகின்றதா..பார்.." என்றார். ஆனால் குழந்தை யேசு டாரத்தியை பார்க்க மனதில்லாமல் ," யாரம்மா இந்த
டாரத்தி..என்ன அசிங்கமாக இவள் இருகின்றாள்... இவள் எல்லாம் ஒரு அழகா...இவள் முக அழைவிட இவள் ஆன்மா மிகவும் அசிங்கமாக உள்ளது. அந்தரத்தில் அழுக்காறும்   கோபமும் திமிரும் இவளை ஆட்சி செய்கிறது.. இவள் குலமும் கோத்திரமும் நம்மைவிட மிகவும் தாழ்ந்திருகின்றது..வசதிவாய்ப்புகளில் இவளிடம் அப்படி என்ன கொட்டிக்கிடக்கிறது..  வெறும் தூசு. இவளை நான் பார்க்கவே விரும்பவில்லை... இவளை அப்பாலே போக சொல்லுங்கள்..ஞாஸ்நானத்தாலும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தாலும் இவள் மீண்டும்   பிறக்கட்டும் நான் அப்போது பார்த்துக்கொள்கிறேன்..இப்போது இவளை போகச்சொல்லுங்கள்" என்றார்..     கனவு முடிந்தது...தன் உணர்வு திரும்ப பெற்றவளாய் தன் தாயாரிடம் தன்
கனவைப்பற்றி தெரிவித்தாள் டாரத்தி. அவளது தாயார் அவளை அழைத்துக்கொண்டு அந்த தூயவறான முதிய குருவானவரிடம் கூட்டிச்சென்றாள். அப்போதுதான் அந்த குருவானவர்   டாரத்திக்கு யேசுநாதர் யார் என்றும், அவரது மீட்ப்பின் திட்டத்தையும அவரது கடவுளின் தன்மைகள் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறினார். அபோதே மனம் மாறினாள் டாரத்தி..
ரகசியத்தில் அவளுக்கு ஞாஸ்நானமும் புது நன்மையும் உறுதிப்பூசுதலும் கொடுக்கப்பட்டது. இப்போது அவளின் பெயர் காத்தரீன். அவள் கிறிஸ்த்துவிலும் பரிசுத்த ஆவியிலும் புது   வாழ்க்கையை ஆரம்பிக்கவே அவள் சொல்லமுடியாத அழகில் திகழ்ந்தாள்... ஏற்கனவே அறிவில் சிகரத்தை தொட்டிருந்தவளுக்கு பரிசுத்த ஆவியானவரின் ஏழு வரங்களான ஞானம்,
புத்தி,விமரிசை, அறிவு, திடம்,பக்தி, தெய்வபயம் ஆகிய வரங்கள் சேர்ந்துகொண்டதால் ஞான சௌந்தரியாகவும் அறிவில் ஞான சூரியனாகவும் திகழ்ந்தாள். அந்த இரவில்   யேசுநாதரைப்பற்றிய நினைவாக துயில்கொண்டாள். அன்று அவளுக்கு ஒரு கனவு ஏற்பட்டது. அன்று ஒருநாள் கனவு ஏற்பட்டதுபோலவே இன்றும் தேவதாயார் தன் திருமகன்
குழந்தை யேசுவை கையில் ஏந்திக்கொண்டு," மகனே பார்..யார் வந்திருக்கின்றாள் என்று பார்..நம் மகள் காத்தரீன் அல்லவா வந்திருகின்றாள்...அவளுக்கு உன்னை திருமணம்   செய்துகொள்ள வேண்டுமாம்..பார்" என்றார். அதற்கு யேசுநாதார், " வா காத்தரீன்..என் தாயார் எனக்கு நல்ல மணவாட்டியைதான் எனக்கு ஏற்பாடு செய்திருகிறார்கள். உன்னை எனக்கு  மிகவும் பிடித்து இருகிறது. உன் காலம் முடிந்ததும் என் வான்வீட்டில் நான் உன்னை திருமணம் செய்துகொள்வேன். அதுவரை இதை வைத்துக்கொள்" என்று தன் பிஞ்சு கரங்களால்  காத்தரீனின் கரங்களை பிடித்து அவள் கையில் தன் மோதிரம் ஒன்றை அணிவித்தார். கனவு கலைந்தது..
           அடுத்தநாள் காலையில் காத்தரீன் முகம் கழுவி துடைத்தபோது தன் கரத்தில் யேசுநாதர் கனவில் தனக்கு அணிவித்த மோதிரம் இப்போது தன் கரங்களில் இருக்கக்கண்டு   மிகுந்த ஆச்சரியப்பட்டாள்." ஓ...அப்படியானால் எனக்கு திருமணம் நடந்து முடிந்து விட்டது..இது யேசுநாதர் என் திருமண அடையாளமாக அணிவித்த கல்யாண மோதிரம்..நான்   மிகுந்த பாக்கியசாலி..நான் விரும்பிய யேசுநாதரை கணவனாக அடைந்துவிட்டேன்..இது எனக்கு உறுதியாகிவிட்டது " என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் தாயாரை அணுகி ," அம்மா. எனக்கு யேசுநாதருடன் நேற்றே திருமணம் நடந்துவிட்டது...இனிமேல் எனக்கு வேறு ஆடவனுடம் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்னும் ஆசையை இத்துடன் நிறுத்திக்
கொள்" என்று கூறி தன் கல்யாண மோதிரத்தைக்காட்டினாள்..காத்தரீனின் தாயாருக்கு இதை நம்புவதா ...இல்லை நம்பாமல் இருப்பதா என்றே தெரியவில்லை. இத்தகைய ஒரு   மோதிரத்தை தன் வம்சாவழியில் யாரிடத்திலும் அவள் கண்டதில்லை. அவள் கூறும் செய்தியும் நம்பும்படியாகத்தான் இருக்கிறது.. இது எங்கு போய் முடியும் எப்படி முடியும் என்று   மிகவும் குழம்பிப்போனாள் அவள் தாயார். அடுத்த நாள் தன்மகளின் வாழ்நாள் இப்படி திசைமாறிப்போகும் என்று அந்த தாயாருக்கு தெரிந்திருக்க சற்றேனும் நியாயமில்லை...ஆம்.. அன்று விதி பலமாகத்தான் வேலை செய்தது.
      அந்த புகழ்பெற்ற அலெக்ஸாண்டிரியா துறைமுகப்பட்டிணதிற்கு வருகை தந்த பேரரசர் மாக்ஸிமியனை மிக்க ஆரவாரமாக வரவேற்றார் ஆளுனர் காண்ஸ்டைன். அந்த பெரிய உருவம்   கொண்ட மாமிச மலை என்றும் போர்க்களத்தில் மனித அரக்கன் என்றும் பேர் பெற்றிருந்த மாக்ஸிமியன் என்னும் ரோமைய சக்கரவர்த்தி வெகு ஆடம்பரமாக வந்தார்.. அந்த நெடிய
உருவம்கொண்ட சக்கரவர்த்திக்கு நாங்கள் மிகு நெருக்கமானவர்கள் என்று காட்டிக்கொள்ள பெரும் அரசியல்வாதிகளும் அவர்தம் அழகிய பெண்களும் அவருக்கு மிக நெருக்கமாக வர  அவரது நீண்ட நெடிய கரங்களால் அந்த அழகிய பெண்களை தழுவிக்கொண்டு மிகவும் சந்தோஷமாக நடந்துவந்தார் சக்கரவர்த்தி மாக்ஸிமியன். பேரரசர் மாக்ஸிமியனின் சிரியா தேசத்தை
சேர்ந்த பேரழகியான மனைவி அகஸ்த்தா என்றும் எத்ரோபியா என்றும் அழைக்கப்பட்ட மஹாராணியின் கண்களில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. தன் பார்வையாலேயே மற்ற   அரசவைப்பெண்களை வெளியேற்றினாள் அவள். ஆனால் என்ன செய்வது ..பேரரசரின் கைகளில் கட்டிக்கொள்ளப்பட்ட பெண்களின் நிலைமை அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்வது   போல் இல்லை. அவர்களுக்கு இஸ்ட்டம் இருக்கிறதோ இல்லையோ...இனிமேல் அவராக விட்டால் ஒழிய அவரிடமிருந்து மீள முடியாது.[ இப்படியாக பேரரசர் மாக்ஸிமியன் பல ரோமைய   செனட்டர்களின் வயிற்றெறிச்சலை கட்டிக்கொண்டதால் அதுவே மாக்ஸிமியனின் முடிவுக்கும் ஒரு காரணமாகப்போயிற்று.]
           அரசாங்க விருந்து எல்லாம் நல்லபடியாக முடிந்து மாலையில் களியாட்டம் ஆரம்பம் ஆனது.அந்த அலெக்ஸாண்டிரியா பட்டிணத்திலிருந்த ரோமையர்களின் விளையாட்டரங்கம்  பேரரசரின் வருகையால் மிகவும் களை கட்டிப்போயிருந்தது. போதாததற்கு மன்னர் மாக்ஸிமியனின் பிறந்த நாள் விழாவும் சேர்த்து கொண்டாடப்பட்டதால் கொண்டாட்டத்திற்கு
கேட்கவா வேண்டும். அந்த ஆப்ரிக்க தேசத்திலிருந்த ரோமையர் ஆதிக்கத்திலிருந்த அத்தனை நாடுகளின் அரசர்களும் அவர் தம் பிரதிநிதிகளும் பேரரசர் மாக்ஸிமியனின் பாதம்  பணிந்து கப்பம்கட்டி இன்னும் அரசருக்கு பிடிக்கும் தங்கம், வெள்ளி,முத்து, பவளம், வைரம், வைடூரியமென்று அனைத்துவிதமான பரிசுகளும்கொடுத்து அவரை
கௌரவப்படுத்திக்கொண்டு தங்கள் பதவிகளையும் பட்டங்களையும் காப்பாற்றிக்கொண்டும் அவற்றை புத்துப்பித்துக்கொள்ளவும் செய்தனர்...மன்னர் மாக்ஸிமியன் தன் வாழ்நாளில்   இப்படியொரு கொண்டாட்டத்ததையும் களியாட்டத்தையும் கண்டதே இல்லை என்ற அளவுக்கு மிகவும் சந்தோஷப்பட்டுப்போனார்..பெண்கள் விஷயத்தில் மன்னர் மாக்ஸிமியன் பெரிய   ஆள் என்பதால் எத்தனை எத்தனையோ காமக்களியட்டங்கள் நிறைந்த அசிங்க நடனங்கள் நடத்தமுடியுமோ அனைத்தும் மன்னர் முன்னிலையில் நடத்திக்காட்டப்படன.
         அடுத்ததாக ஆரம்பமானது பயங்கரம்.
     பல பராக்கிரமமான வீரர்கள் வீர விளையாட்டு என்னும் போர்வையில் ரத்த வெறியோடு மோதிக்கொண்டார்கள். தோற்ற வீரன் உயிரை இழக்க வேண்டும் என்பது விதி ஆதலால்   நடந்த வீர விளையாட்டுக்கள் பயங்கரத்தை உண்டுபண்ணின. அதில் எத்தனையோ நல்ல பராக்கிரம சாலிகள் தோற்று உயிர் இழந்தார்கள். ஜெயிக்க வேண்டும் என்னும் வெறியாலும்
தோற்றால் உயிர் தறிக்காது என்பதாலும் ஜெயிக்கும் முயற்சியில் பல சதிவேலைகள் நடந்தன. அந்தக்காலத்திலேயே பந்தயங்கள் கட்டப்பட்டு அதற்கேற்ப வீரர்களின் தலை எழுத்து  நிர்ணயிக்கப்பட்டன. இத்தகைய போட்டிகள் முடிந்ததும் மனிதனும் மிருகமும் என்னும் சாக்கில் பல வீர விளையாட்டுக்காரர்கள் அரங்கத்தில் நிராயுதபாணிகளாய் நிற்க வைக்கப்பட்டு  சிங்கம் புலி கரடிகளால் வேட்டையாடப்பட்டனர்.
        அடுத்தபடியாக அரசாங்க விரோதிகள் என்னும் போர்வையில் அனேக கிறிஸ்த்துவர்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என நிராயுதபானியாய் அரங்கத்தின் நடுவில் நிற்க   வைக்கப்பட்டு இந்த சிங்கம் புலி, கரடிகளால் கடித்துக்குதறி மிகவும் கொடூரமாய் கொல்லப்பட்டனர். இதற்குள் மாலைநேரம் வரவே கடைசி காட்சி என்று அனேக பனைமரங்கள்
நடப்பட்டு அவற்றின் உச்சி மீது கிறிஸ்த்துவர்கள் கட்டப்பட்டு உயிரோடு சொக்கப்பனையாய் கொளுத்தப்பட்டனர்..இந்த அக்கிரமமத்தை காண சகிக்காத சாதாரண மக்கள் பலர்  " ஐய்யோ...இந்த அக்கிரமத்தை காண சகிக்கமுடியவில்லையே...ஐய்யோ கடவுளே...இந்த பாவப்பட்ட அப்பிராணி கிரிஸ்த்துவர்கள் செய்த பாவமென்ன...இந்த அநீதியைக்கேட்ட ஆளே
இல்லையா" என்று கதறி அழுதனர்..இருப்பினும் தங்கள் அழுகையை யாரேனும் கண்டால் தங்கள் கதியும் இப்படித்தான் ஆகும் என்பதால் கண்னீரை மறைத்து துடைத்துக்கொண்டனர்.
      அப்போது ஒரு பெண்," அடேய் மாக்ஸிமியா...நிறுத்து இந்த அநியாயத்தை" என்று கர்ஜித்தாள்.  இந்த கர்ஜனையில் பேரரசர் மாக்ஸிமியனின் சப்த நாடியும் ஒரு நிமிடம் அப்படியே நின்று போயிற்று. அரசனின் கோபம் அவன் கண்களில் ரத்த சிகப்பாக தெரிந்தது. தன் நிலையை  ஒரு வினாடியில் சுதாரித்துக்கொண்ட பேரரசன் மாக்ஸிமியன்," யாரது என் பேர் சொல்லி கூப்பிட்டது" என்று அவனும் கர்ஜித்தான். அவனுடைய கர்ஜனையில் அந்த அரங்கமே   குலுங்கியது. மக்கள் எல்லோரும் அடுத்து என்ன ஆகுமோ என்று பயத்தால் நடுங்கினர். மீண்டும் மாக்ஸிமியன்," யார் என்னை பெயர் சொல்லி கூப்பிட்டது.. பேர் சொல்லி கூப்பிட்ட தைரியம் செயலிலும் இருக்க வேண்டும்.. அதற்கு தைரியம் இருப்பவர் என் முன்னே வரட்டும்" என்றான்...அப்போது ," அது நான் தான் மாக்ஸிமியா " என்று சபை நடுவிலிருந்து  வெளிப்பட்டாள் கன்னி ஒருத்தி... அவள் வேறு யாரும் அல்ல. நம் அலெக்ஸாண்டிரியாவின் ஆளுநனின் மகள் டாரத்தி எனப்பட்ட காத்தரீன் தான்.
" பெண்ணே...நீ யார்... இத்தனை பேர் முன்னிலையில் உன் பேரரசனை பேர் சொல்லி அழைக்க உனக்கு என்ன தைரியம்" என்றான் மாக்சிமியன்.
" மாக்சிமியா...நீ தவறு செய்தவன்.. தவறு செய்தவனுக்கு மரியாதை கிடைக்காது..." என்றால் காத்தரீன்.
" பெண்ணே நீ ஏதோ முடிவோடுதான் இங்கே வந்திருகிறாய். என்னை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இத்தனை பேர் முன்னியிலையும் என்னை ஒரு பேரரசன் என்றும்   பாராது என்னை பெயர் சொல்லி அழைத்திருக்கிறாய்..சற்று முன் எத்தனை சிற்றரசர்கள், பேரரசர்கள் எல்லோரும் என் காலில் விழுந்து பணிந்தார்களே... எல்லாம் எதற்காக.. எல்லாம்   நான் எப்பேர்பட்ட பேரரசன் என்பதர்காக. என் முன்னிலையில் என் எதிரி கூட நிற்க அஞ்சுவான். ஆனால் நீ ஒரு பெண்ணாக இருந்தும் என்னை பேர் சொல்லி அழைத்துவிட்டாய். நீ மட்டும் ஒரு ஆணாக இருந்திருந்தால் இன்னேரம் உன்னை என் கையாலேயே ஒரே அடியில் அடித்தே கொன்றிருப்பேன்..உன் நல்ல நேரம் நீ பெண்ணாக இருந்துவிட்டாய்..அதுவும்
அழகிய பெண்னாக..உன் தோற்றமும் பொலிவும் நீ ஒரு அரச குமாரியாக இருக்கக்கூடும்..போகட்டும் உன்னை நான் மன்னித்தேன். உன் குற்றச்சாட்டு என்ன?"
" நீ ஒருபாவமும் அறியாத கிறிஸ்த்துவர்களை வீனாக வதைக்கிறாய். அவர்கள் செய்த குற்றம் என்ன?"
" பெண்ணே.. அவர்கள் கிறிஸ்த்துவர்களாகப்பிறந்ததுதான் அவர்கள் செய்த குற்றம். நம் ரோமைய சாம்ராஜ்ஜியத்தில் கிறிஸ்த்துவ மதம் தடை செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்த்துவை ஏற்றுக் கொள்பவர்கள் தேச துரோகிகள்..அவர்கள் ரோமைய அரசனையும் அவர்தம் தெய்வங்களையும் மதிக்காதவர்கள்..அவர்களுக்கு மரணதண்டனை காத்திருகிறது என்று தெரிந்தும்   கிறிஸ்த்துவர்கள் அதை ஏன் ஏற்றுக்கொள்கிறார்கள்?. அதுசரி... இதை எல்லாம் கேட்க நீ யார்? நீ ஒரு கிறிஸ்த்துவளா?"
"ஆம்...நான் ஒரு கிறிஸ்த்துவள். அரசே யாரும் கிறிஸ்த்துவர்களாகப்பிறப்பதில்லை. மாறாக கிறிஸ்த்துதான் அவர்களில் பிறக்கின்றார். கிறிஸ்த்துவம் என்பது ஒரு வாழும் முறை.
யேசுகிறிஸ்த்துவே அவர்களை அழைக்கிறார். அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் விருப்பத்தை பொறுத்தது. அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று சொல்ல இந்த   உலகில் யாருக்கும் உரிமை இல்லை. கிறிஸ்த்துவத்தை ஏற்றுக்கொண்டால் உயிர் போகும் என்று தெரிந்திருந்தும் அதை ஏற்றுக்கொள்கின்றார்கள் என்றால் அது என்ன சாமானிய   காரியமா? சாகும் முன் ஒருவன் கொடுக்கும் வாக்குமூலம் உண்மையானது என்று கருதப்படும் அல்லவா..அப்படியே இந்த கிறிஸ்த்துவர்களும் உண்மைக்கு சாட்ச்சியம் கொடுக்க   தங்கள் இன்னுயிரை கொடுகின்றார்கள் என்றால் அந்த மதம் உண்மையானது என்றல்லவா கருதப்பட வேண்டும் . அதை விடுத்து அதை ஏன் தடை செய்ய வேண்டும்?"
" பெண்ணே நிறுத்து உன் பிரசங்கத்தை. அதை காதுகொடுத்து கேட்க நன் தயாராக இல்லை..உன் பூர்வீகம் என்ன..உன் தாய் தகப்பன் யார்?"
" மாக்ஸீமியா... அதெல்லாம் உனக்கு தேவை இல்லாத விஷயங்கள்.. இருப்பினும் நீ கேட்டுவிட்டதால் நான் பதில் சொல்கிறேன். என் பெற்றோர் இதோ கைகட்டி வாய் பொத்தி  நிற்கிறாரே ஆளுனர் காண்ஸ்டன்டைன் அவர்தான் என் தகப்பனார்...அவருக்கு அருகில் இருகிறாரே ...அவர்தான் என் தாயார்...பூர்வாசிரமத்தில் என் பெயர் டாரத்தி...இப்போது   காத்தரீன்..இப்போது நான் உலகமஹா பேரரசர் யேசுராஜாவின் பத்தினி..நாங்கள் ஆளப்பிறந்தவர்கள்..ரோமை சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்தாரே ரோமுலுஸ்... அவருக்கு துணை  நின்றார்களே நூற்றுவர் எனப்படும் பத்ரீசியர்கள்... அவர்கள் வழிவந்த நாங்கள் உண்மையில் அரச குடும்ப வாரிசுகள்...உன்னைப்போல் குறுக்கு வழியில் வந்து ஆட்சியைப்பிடித்தவர்கள்
அல்ல.."
" பெண்னே..நீ என்னை மிகவும் அவமானப்படுத்துகிறாய்... அடேய்.. யாரங்கே ...இந்த திமிர் பிடித்த சிறுக்கியை கைது செய்து சிறையில் அடையுங்கள். நாள் முழுவது கட்டிவைத்து   உயிர் போகும் மட்டும் சவுக்கால் அடியுங்கள்.. இந்த மாக்ஸிமியனை இவள் என்னவென்று நினைத்துக்கொண்டாள்...நாளைக்கு காண்பிகிறேன் நான் யாரென்று" என்று உறுமினான்.
       அப்போது காத்திரீனின் தாயும் தகப்பனும் பேரரசன் மாக்ஸிமியனின் காலைப்பிடித்துக்கொண்டு கதறினர். " அரசர் பெருமானே... என் மகளுக்கு நிச்சயம் பைத்தியம்தான் பிடித்திருக்க   வேண்டும். ஏதோ வயதுக்கோளாறு... அவளை மன்னித்துவிடுங்கள்.. எங்களுக்குத்தெரிந்து அவளுக்கு திருமணமானதோ..கிறிஸ்த்துவள் ஆனதோ தெரியாது..எங்களுக்கு அந்த
யேசுநாதர் யார் என்றும் தெரியாது.. இவளுக்கு எப்படி புத்தி இப்படி போனது என்றும் தெரியது. என் மகளின் மனதைக்கெடுத்த அந்த யேசுநாதர் நாசமாகப்போக" என்று சபித்தார்.
     ஆனாலும் மாக்ஸிமியனின் கோபம் தணியாமல் அந்த ஆளுநரையும் அவர் மனைவியையும் தன் கால்களால் எட்டி உதைத்தான். " இரு..இரு..உங்களை நாளைக்கு வந்து பார்த்துக் கொள்கிறேன்" என்றுகூறி விருட்டென சென்றுவிட்டான். அந்த நாள் முழுவதும் அவன் அடைந்திருந்த பெருமையும் சிலாக்கியமும் சந்தோஷமும் அந்த மாலையில் மறைந்துபோய்
பெரும் அவமானத்தால் முகம் சிறுத்து கடுகடுவெனும் கரும்சிருத்தையைப்போல் உறுமிக்கொண்டே சென்றான் அந்தக்கொடுங்கோலன். அடுத்தநாள் விசாரணை ஆரம்பமானது.
" என்ன...அந்த சிறுக்கி சவுக்கடி வாங்கி செத்துப்போனாளா இல்லை இன்னும் உயிரோடு இருக்கின்றாளா " என்றான் மாக்ஸிமியன். "அரசே அவள் உயிரோடுதான் இருகின்றாள்"  என்று பதில் வந்தது. ரத்த விளாறுகளாய் அடிபட்டிருந்த காத்திரீனா அரசன் முன் விசாரணைக்காக அழைத்துவரப்பட்டாள்.
" என்ன பெண்ணே...ராத்திரி நன்றாக தூங்கினாயா...விருந்து பலம்தான் போலிருகிறது...அரசனை பகைத்துக்கொண்டால் விருந்து எப்படி இருக்கும் என்று தெரிந்துகொண்டாயா?"
" மாக்ஸீமியா... இதற்கெல்லாம் பயந்து நடுங்கும் கோழை அல்ல நான்..என் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் என்னைக்கண்டு பயந்து ஓடுகிறாய்..உண்மையில் நீதான் கோழை."
" அடிப்பெண்னே...நானா கோழை...நான் கோழையாக இருந்துதான் இத்தனை பெரிய பதவிக்கு வந்திருகிறேனாக்கும்...ரோமை ராஜ்ஜியமும் இத்தனை பெரிதாக வளர்ந்திருக்குமாக்கும்..பெண்ணே... ஏனோ உன்னைக்கண்டு என்மனம் தவிகிறது..உன் மீது கோபம் கொள்ளவும் மாட்டேன் என்கிறது." என்றான் எகத்தாளமாக.
அவன் உள் மனதை புறிந்துகொண்ட காத்தரீன்," மாக்ஸீமியா... உன்னை நான் எச்சரிக்கிறேன்...நான் உலகமஹா பேரரசர் யேசுராஜாவின் பத்தினி.. இதோபார் எனக்கு அவர் அணிவித்த கல்யாண மோதிரம்...உலகமஹா பேரரசரின் பத்தியியுடன் உரையாடிக்கொண்டிறோம் என்னும் அச்சமும் மரியாதையும் உனக்கு இருக்கட்டும்" என்றாள்.
      ஒருவிதமான அதிகாரத்தோரணையுடன் பேசும் காத்ரீனாவிடம் இனிமேல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் உணர்வு அப்போது மாக்ஸீமியனுக்கும் ஏற்பட்டது. " பெண்னே காத்ரீனா..உனக்கு உன் தந்தை கூறியபடி பைத்தியம்தான் பிடித்திருக்க வேண்டும்.இல்லைஎன்றால் என்னிடம் இப்படிப்பேசுவாயா?. உன்னுடன் இனிமேல் எனக்கு பேச ஒன்றும்
இல்லை. உன் கேள்விகளுக்கு பதில் கூற என் சார்பாக என் மந்திரிப்பிரதாணிகள் உன்னுடன் பேசுவார்கள்...அவர்கள் உன்னை வாதில் வென்று உன்னை அவமானப்படுத்துவது   உறுதி.. நாளைக்கு ஆரம்பமாகும் என் கச்சேரி " என்றான்... அன்றும் காத்தரீன் சிறையில் அடைக்கப்பட்டு மஹா மூர்க்கமான தண்டனைகளுக்கு ஆட்ப்படுத்தப்பட்டாள்.
                 அடுத்த நாள் ஒரு ஐம்பது பேர் காத்தரீனுடன் வாதம் புறிய அரண்மனையில் காத்துக்கொண்டிருக்க காத்தரீன் மஹா கேவலமான முறையில் அடிபட்டு ரத்தவிளாறான  திரேகத்துடன் சபைக்கு அழைத்துவரப்பட்டாள். இருப்பினும் அவள் முகத்தில் சோர்வோ, துன்பமோ ஏதும் தென்படவில்லை. இதைக்கண்ட ஒரு அரண்மனை மருத்துவன் அவள்
மட்டில் மிகுந்த ஆச்சர்யப்பட்டான். வாக்குவாதம் ஆரம்பமனது. பலதரப்பட்ட கேள்விகள்...அந்த ஐம்பதுபேரும் ஐம்பதுவிதமான தலைப்புகளில் அவளை கேட்டு அவள் பதில்தர  முடியாதபடி இருக்கும்போது அவளை தகுந்த விதத்தில் அவமானப்படுத்தவேண்டும் என்ற கட்டளைபடி சவாலான கேள்விகளைக்கேட்டனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி  எதுவும் நடக்கவில்லை. அனைத்திற்கும் அவள் தக்கபடி பதிலளித்தாள்...பரிசுத்த ஆவியாரின் அனைத்துகொடைகளும் அவளிடம் குடிகொண்டிருந்ததால் அவளை எந்த   விதத்திலும் கேள்விகேட்டு மடக்கமுடியவில்லை. இப்போது காத்தரீன் முறை வந்தது... அவள் கேட்ட எந்தவிதமான கேள்விகளுக்கும் அந்த ஐம்பது பேரில் ஒருவருக்குகூட பதில்கூற  தெரியவில்லை. காத்தரீன் கேட்ட கேள்விகளுக்கு மாக்ஸீமியனின் மந்திரிகள் அனைவரும் பதில்கூறத்தெரியாத மாணவன் போல விழித்தனர். அவளது கேள்விகளால் பதில்கூற  முடியாதவர்களுக்கு காத்தரீன் தகுந்த முறையில் பதிலும் விளக்கமும் கொடுத்தாள். அவர்கள் அனைவரும் மிகவும் திகைத்துப்போய் இத்தகைய அறிவு இந்த சின்னப்பெண்ணுக்கு  எங்கிருந்து வந்தது..இத்தனை காலமும் நாம் முயன்று கற்றுக்கொண்டவைகள் எல்லாம் இந்த சின்னப்பெண்ணுக்கு முன்னால் ஒன்றும் இல்லை..ஆகவே பெண்ணே நீயே கூறுவாயாக... " உனக்கு இத்தனை வயதில் இந்த அறிவு எப்படி ஏற்பட்டது?" என்றனர். அப்போது காத்தரீன் அவர்களுக்கு யேசுவைப்பற்றியும் அவரது திருத்தாயார் தேவாமாதாவைப்பற்றியும், பரிசுத்தபிதா, பரிசுத்தசுதன், பரிசுத்த ஆவி ஆகிய இவர்களின் தமதிருத்துவ ரகசியம், யேசுநாதரின் மனிதாவதாரம், அவரது பாடுகள், அவரது உயிர்ப்பு, அவரது உத்தானம் ஆகியவற்றைப்பற்றியும் பரிசுத்த ஆவியாரின் திரு வருகைபற்றியும் எடுத்துறைத்தாள்.
      அப்போது மாக்ஸீமியன் அங்கு வரவே தன் மந்திரிகள் அவளிடம் வாதில் தோற்று அவமானம் அடைந்தனர் என்று அறிவிக்கப்படவே மிகவும் கோபம் கொண்டான் மாக்ஸீமியன்.  அடங்காத கோபத்துடன் தன் மந்திரிகளைப்பார்த்து," ஒரு பதினெட்டு வயது பெண்ணுக்கு இருக்கும் அறிவும் துணிச்சலும் உங்களீடம் இல்லாமல் போனதெப்படி? அப்படியானால்
நீங்கள் அறிவில் பிரகஸ்பதி என்று பட்டம் வாங்கியதெல்லாம் வெறும் பித்தலாட்டமோ ? இப்படியாகத்தான் இத்தனை காலமும் கழித்தீறோ? உங்கள் அறிவை நம்பி இவள் முன்னிலையில்  நீங்கள் ஜெயிப்பீர்கள் என்று உங்களை அனுப்பியதற்கு எனக்கு நல்ல பாடம் கற்றுக்கொடுத்துள்ளீர்கள்... எனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்" என்று உறுமினான்
மாக்ஸீமியன்.
    அப்போது அந்த மந்திரிகளில் ஒருவர் துணிவுடன், " பேரரசர் எங்களை மன்னிக்க வேண்டும். நாங்கள் எத்தனையோ மன்னர்களிடமும் சான்றோர்களீடமும் சொற்போரில்   எத்தனையோ முறை வெற்றி கண்டதுண்டு. எங்கும் யாரிடத்திலும் தோற்றதே இல்லை.. அதனாலேயே எங்களுக்கு பிரகஸ்பதி என்னும் பட்டமும் கிடைத்ததுண்டு. ஆனால்
இந்தப்பெண் சாதாரணமான மனுஷியே அல்ல. ஞானத்தின் அதிபதி இவள் நெற்றியில் குடிகொண்டுள்ளார். அவரது பரந்த அறிவு இந்த உலகம் என்றில்லாமல் அகில உலகிலும் ஆட்சி செலுத்தும். அவளை வெற்றிகொள்ள அந்த ஞான தேவனே நேரில் வந்தால் ஒழிய இவளை வேறு எந்த மனிதராலும் வெற்றி கொள்ளவே முடியாது. எங்களை மன்னிக்க வேண்டும் மஹா
பிரபூ" என்றனர்.
        தன் பிரதிநிதிகளாக அனுப்பப்பட்டவர்கள் அவள் முன்னிலையில் அவமானமாக தோற்கடிக்கப்பட்டதால் தானே தோற்றதாகக்கருதினான் மாக்ஸீமியன். எனவே இந்த அவமானத்தை   தாங்காத மாக்ஸீமியன் அந்த ஐம்பது மந்திரிகளையும் பனைமரத்தில் கட்டிவைத்து உயிரோடு கொளுத்தச்சொன்னான். இருப்பினும் காத்தரீனின் பரிசுத்தமான அழகில் கவரப்பட்ட அவன்," பெண்ணே நான் உனக்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறேன்...நான் உன்னை என் மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன்... இந்த ரோமைய, பைசாந்திய எகிப்த்திய, மஹாராணியாக ஆக்குகிறேன்.என்னை ஏற்றுக்கொள்... அந்த யேசுகிறிஸ்த்துவை கைவிட்டுவிடு... ஒன்றும் அவசரம் வேண்டாம். உன்னை இந்த கடினமான சித்திரவதைகளினின்று விடுவித்து அழகு மிகு மஞ்சத்தில் உன்னை ஏற்றிவைத்து அழகு பார்ப்பேன்" என்றான் அந்த ராட்ச்சதன்.
      கொடும் கோபமடைந்தாள் காத்தரீன். " அடே முட்டாள் நாயே...என்னை யார் என்று நினைத்துக்கொண்டாய்...நான் இந்த அகில உலகத்தையும் இன்னும் என்னென்ன  உலகமெல்லாம் உண்டோ அத்தனை உலகத்தையும் படைத்து காத்து நடத்திவரும் யேசுநாதரின் பத்தினி நான்.. நீ போடும் பிச்சைகாசுக்கும் அற்ப பதவி சுகத்துக்காகவும் உன்பின்னே   சுற்றிவந்து தங்கள் உடலை விற்றுப்பிழைக்கும் இந்த அரசவைப்பெண்கள் போல் நானும் இருப்பேன் என்று என்னை அவ்வளவு சொல்ப்பமாக நினைத்துக்கொண்டாயோ. உன் பதவியும் பட்டமும் என் கால் தூசிக்கு சமம். நான் என் பரலோக பர்த்தாவை அடையும் நாள் வெகு தொலைவில் இல்லை... நடத்திக்கொள் உன் நாடகத்தை" என்றாள்.
      தங்களைப்பற்றி தரக்குறைவாக பேசிய காத்தரீனாவை தங்கள் பலம்கொண்ட மட்டும் தங்கள் கைகளை நெருக்கி பிசைந்துகொண்டு அந்த அரசவைப்பெண்கள் தங்கள் வாழ்வைக்கெடுக்க வந்த இந்த
பெண் காத்தரீனா " நாசமாகப்போக " என்று சாபம் கொடுத்தார்கள்.
       இத்தகைய பதிலை சற்றும் எதிர்பாராத மன்னன் மாக்ஸீமியன் பெரும் கோபமுற்று, " இன்னும் ஏன் நிற்கிறீர்கள்... இந்த ஐம்பது நிர்மூடர்களையும் உடனே பனைமரத்தில் ஏற்றிவைத்துக்கொளுத்துங்கள் " என்றான்.
காத்தரீனாள் பரிசுத்த ஆவியிடம் மன்றாடி அவர்கள் ஒவ்வொருவர் மீதும் சிலுவை அடையாளமிட்டு மன்றாடவே அந்த ஐம்பதுபெரும் ஒரே குரலாக பரிசுத்த அவியானவரால் ஆசீர் நிறையப்பட்டு," பரிசுத்தர்...பரிசுத்தர்...பரிசுத்தர்...மூ உலகின் தேவனாகிய ஆண்டவர் பரிசுத்தர்...யேசுவே ஆண்டவர்... யேசுவே இரண்டாமாளாகிய சர்வேசுரன்.. அவரே இந்த   உலகத்துக்கு மனிதாவதாரமாக வந்தவர்... பிதாவாகிய சர்வேசுரனை விசுவாசிகிறோம்...சுதனாகிய சர்வேசுரனை விசுவாசிக்கிறோம்...பரிசுத்த ஆவியகிய சர்வேசுரனை
விசுவாசிகிறோம்..தமதிருத்துவமாகிய ஏக சர்வேசுரனை விசுவாசிகிறோம் என்று மேலும் மேலும் பல விசுவாச சத்தியங்களை கூறிக்கொண்டிருக்கும்போதே பனைமரத்தில் கட்டப்பட்டு  அவர்கள் அனைவரும் உயிரோடு கொளுத்தப்பட்டனர். காத்தரீன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டாள். அங்கு அவளுக்கு மீண்டும் சித்திரவதை ஆரம்பமானது. அடுத்த நாள்....
      சில அரசாங்க விஷயங்களை முன்னிட்டு மாக்ஸிமியன் தொலைதூரம் செல்ல வேண்டி இருந்ததால் காத்தரீனை வந்து பார்த்துக்கொள்கிறேன்..அதுவரை சித்திரவதை தொடரட்டும்
என்று கூறிச்சென்றான். மாக்சீமியனை நேருக்கு நேராக பார்த்து கேள்விகள்பல கேட்ட அந்த அதிசயப்பெண் யார் என்றாள் மாக்ஸீமியனின் மனைவி அகஸ்த்தா. தன் கணவன் ஊரில்   இல்லாதபோது அரண்மனையில் சிறையில் வாடும் காத்திரீனாவை ராணுவ தளபதி போர்பைரி என்பவனுடன் சேர்ந்து சந்தித்தாள். காத்த்ரீனாவின் கொள்ளை அழகில் சொக்கிப்போனாள்
அவள். அவளிடம் உரையாடும்போது காத்தரீனுடைய முகம் பரலோக காந்தியால் சூழப்பட்டிருப்பதைக்கண்டார் அகஸ்த்தா. இதை தளபதி போர்பைரியும் கவனித்தான். அந்த   அரண்மனை சிறையில் இருந்த சுமார் இரு நூறு வீரர்களும் கண்டனர்..அந்த நேரமே காத்தரீன் அவர்கள் அனைவருக்கும் யேசுகிறிஸ்த்துவை போதித்து பரிசுத்த ஆவியின் வல்லமையால்
அனைவரையும் கிறிஸ்த்துவர்களாக மாறச்செய்தாள்.. அவர்கள் அனைவரும் யேசு கிறிஸ்த்துவை ஏற்றுக்கொள்வதாக கூறினர். இதை மன்னன் மாக்ஸீமியன் முன்னிலையிலும் அறிக்கையிடுவதாக கூறினர். சில நாட்க்களில் மன்னன் மாக்ஸீமியன் தலை நகருக்கு திரும்ப வந்தான்.
அன்றைய நாள் காத்திரீனின் கடைசி நாளாக இருந்தது. அது நவம்பர் 25.கி.பி.305. அன்றைய விசாரணையில் வழக்கமான விசாரணைகள் வழக்கமான பதில்கள். முடிவில்   மாக்ஸிமியன் காத்தரீனை சக்கரத்தில் ஏற்றிகொல்லுங்கள் என்றான்.
    அப்போது அவன் மனைவி அகஸ்த்தா," அன்பரே வேண்டாம்...காத்தரீன் புனிதவதி..இதற்கு நானே சாட்ச்சி.. அவளது கடவுளின் வல்லமை அவளிடம் விளங்குகிறது..அந்த தேவாதிதேவனின் பத்தினியை ஒன்றும் செய்யாதீர்... கடவுளின் கோபாக்கினைக்கு நீர் உள்ளாக வேண்டாம் " என்றாள்.
கடும்கோபம் கொண்டான் மாக்ஸீமியன்.." ஆஹா...கடைசியில் அவள் உன்னிடமே அவள் வேலையைக்காட்டிவிட்டாளா..உன்னையும் கிறிஸ்த்துவளாக மாற்றிவிட்டாளா ...இப்படி  எத்தனை பேர் கிளம்பிவிட்டீர்கள்...உயிர்மீது ஆசை இல்லாதவர்கள் இந்த அரங்கத்தில் வந்து யேசுகிறிஸ்த்துவை கடவுளாக ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்லுங்கள்" என்று  கொக்கரித்தான். அப்போது அவன் மனைவி அகஸ்த்தா அவன் முன்னே வந்து " அன்பரே நான் முதலில் வருகிறேன்...நான் யேசு கிறிஸ்த்துவை கடவுளாக ஏற்றுக்கொள்கிறேன் "   என்றாள்.. அடுத்து அவன் தளபதி போர்பைரி வந்து," அரசே நான் யேசு கிறிஸ்த்துவை கடவுளாக ஏற்றுக்கொள்கிறேன்" என்றான்.. அடுத்தாக அந்த இரு நூறு சிறைச்சாலை வீரர்களும்
வந்து தாங்களும் யேசு கிறிஸ்த்துவை கடவுளாக ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்கள். அப்படியே வெலவெலத்துப்போனான் மன்னன் மாக்ஸிமியன்.. தன் மனைவி உட்பட தன்   அருமை தளபதி போர்பைரி உட்பட தன் ராணுவ வீரர்கள் பலர் உட்பட கிறிஸ்த்துர்கள்... அப்படியானால் இனி யாரை நம்புவது...இருப்பினும் " என் மனைவியையும் என் தளபதியையும்
என் வீரர்கள் பலரையும் கிறிஸ்த்துவர்களாக மாற்றிய அந்த யேசு கிறிஸ்த்துவை வெறுக்கிறேன்... இவர்களை மனம் மாற்றிய காத்தரீனை வெறுக்கிறேன்..இவர்கள் அனைவரும்   மரணத்தீர்வைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.. அதிலும் இதற்கெல்லாம் காரணமான அந்த சின்ன சிறுக்கி காத்தரீனை சக்கரத்தில் சுற்றி சித்திரவதைசெய்து கொள்ளுங்கள்" என்று   கூறிவிட்டு அரங்கத்தை விட்டு வெளியேற எத்தனித்தான்..
           அப்போது அவன் மகன் மாக்சென்டைன் அவன் தகப்பன் காலில் விழுந்து ," அப்பா...கோபம் வேண்டாம் அப்பா...சற்றே என் வார்த்தைக்கு செவி கொடுங்கள். என் அம்மாவுக்கு  உயிர் பிச்சை கொடுங்கள்... என்ன இருந்தாலும் அவர் என்னை பெற்றவர்... அவருக்கு உயிர் பிச்சை கொடுங்கள் " என்று தன் தகப்பனின் காலைக்கட்டிக்கொண்டு அழுதான்.   அப்போது மக்ஸீமியன்," மகனே மாக்சென்டைன்..முதலில் அழுவதை நிறுத்து..அழுவது அரசனுக்கு அழகல்ல. அவளுக்காக நீ கலங்காதே...ஒரு ரகசியம் சொல்கிறேன் கேள்... அவள்   உன் தாய் அல்ல. உனக்கும் எனக்கும் இவள் போனால் வேறு ஒருத்தி கிடைப்பாள். இதுதான் நமக்கு அழகு." என்றான். அப்படியே நிலை குலைந்து போனான் அவன் மகன் மாக்சென்டைன். அரச கட்டளை உடனே நிறைவேற்றப்பட்டது.
       மாமன்னன் மாக்ஸீமியனின் மனைவி அகஸ்த்தா, தளபதி போர்பைரி அவர்களுடைய ராணுவ வீரர்கள் இரு நூறு பேரின் தலைகளும் மன்னன் மாக்ஸீமியன் முன்னிலியிலேயே வெட்டப்பட்டன. தன் காதல் மனைவியும் அழகுப்பதுமையுமான அகஸ்த்தா தன் ஆணையினாலேயே தன் கண்முன்னே கொல்லப்படுவதைப்பற்றி மன்னன் மாக்ஸீமியன் கொஞ்சமும்
கவலைப்பட்டதாக தெரியவில்லை. அவன் கோபமெல்லாம் அந்த சின்னச்சிறுக்கி காத்தரீன் மீதே திரும்பியது. " இனிமேல் அவள் கதையை முடித்துவிட்டுத்தான் மறு வேலையை   பார்க்கப்போக வேண்டும் " என்றான் மாக்ஸீமியன். அடுத்துவந்தது காத்தரீன் முறை.
       அக்காலத்தில் ஒரு சித்திரவதை சாதனம்தான் சக்கரம்.. இதைப்பற்றி நேயர்களுக்கு சற்றே தெரிந்திருப்பது அவசியம்.
நம் ஊர் மாட்டு வண்டிச்சக்கரம் போல் ஒரு பெரும் சக்கரம் தயாரிக்கப்படும். அதன் ஆரக்கால்களும் வெளி விளிம்பும் கூராக்கப்பட்ட இரும்புப்பட்டயத்தால் செய்யப்பட்டிருக்கும்.  சக்கரத்தின் அச்சு பூமியில் நாட்டப்பட்டிருக்கும். தண்டனை பெற்றவர் இந்த சக்கரத்தின் மீது கிடத்தப்பட்டு கை. கால்களை கட்டிவைப்பர். பின் அந்த சக்கரம் சுழற்றப்படும்.
       தண்டணை நிறைவேற்றுபவர் தன் கைகளில் பெரும் குண்டாந்தடியோ அல்லது கத்தியோ அல்லது கோடாரியோ கொண்டு சுழற்றிவிடப்படும் மனிதரை ஓங்கி அடிப்பார். அடி எங்கு படுகிறதோ அந்த பகுதி வெட்டப்படும்..சீக்கிரமே உயிர் போவதென்பது அந்த நபரின் அதிர்ஸ்ட்டத்தை பொருத்தது. முதல் அடியிலேயே தலை வெட்டப்பட்டால்...மனிதர்
கொடுத்துவைத்தவர்.. மரணம் விரைவில் நடந்துவிடும். மாறாக அடி எங்கெங்கு படுகிறதோ அந்த பகுதியிலுள்ள பாகங்கள் வெட்டப்படு மனிதர் கொடுமையான வேதனைகள் அனுபவித்து இறுதியில் மரணமடைவார். இதிலும் சில சதி வேலைகள் நடக்கும்..பழிவாங்கும் எண்ணத்துடன் செயல்படும் மனிதர்கள் சக்கரத்தை மிக மெதுவாக சுழலவிடுவார்கள்.
தன் விருப்பம் போல கைகள், கால்கள் என வெட்டிமுடித்து கடைசியில் தலைக்கு வருவார்கள். எப்படியும் தண்டனை பெற்றவர் கொடுமையான வாதனை நிறைந்த மரணத்தை   அடைவார்.
      இப்படியோரு மரணத்திற்குத்தான் காத்தரீன் தீர்வை இடப்பட்டார். அந்த சக்கரத்தின் மீது அவள் கிடத்தப்பட்டபோது ஒரு புதுமை நடந்தது. காத்தரீனின் காவல் சம்மனசு அந்த சக்கரத்தை சுக்கு நூறாக உடைத்துப்போட்டது. அந்த ஆரக்கால்களூம் வெளி விளிம்பும் சுழன்று சுற்றி நின்றுகொண்டு கைகொட்டி ஆகடியம் செய்து வேடிக்கப்பார்த்த பலரின் தலையை சீவியது. பலர் குற்றுயிறாய் கீழே விழுந்து துடித்தனர். பலர் கை கால் இழந்தனர். இதைக்கண்ட மக்கள் பலர் இந்த புதுமையைக்கண்டு அப்போதே யேசுநாதரை கடவுளாக ஏற்றுக்கொண்டனர். ஆனால் மன்னன் மாக்ஸீமியன் பெரும் கோபம் கொண்டான்... எப்படியும் காத்தரீனை கொன்றே ஆக வேண்டும் என ஆணையிட்டான். எனவே காத்தரீன்  சிரச்சேதத்திறகு ஆட்படுத்தப்பட்டாள். பெரும் வீரன் ஒருவனின் பெரும் வாள் வானுக்கு எழும்பியது. அதேபோல் காத்தரீனின் கண்களும் வானத்தைப்பார்த்தன. பின் தான்
வெட்டப்படுவதற்குத்தோதாக தலையை குனிந்துகொடுத்தாள். ஒரே வெட்டில் காத்தரீனின் தலை துண்டிக்கப்பட்டது.. அப்போதும் நடந்தது ஒரு பெரும் அதிசயம். வெட்டப்பட்ட அவள்  உடலிலிருந்து அவளது ரத்தம் சிகப்பு நிறத்துக்குப்பதிலாக வெண்மை நிறத்தில் ஓடியது. அரங்கத்திலிருந்த அத்தனை பெரும் கூட்டமும் இந்த அதிசயத்தைக்கண்டு காத்தரீன் ஒரு
தெய்வப்பெண்...அவன் ஒரு தேவதை.. அவள் நீடூழி வாழ்க என்று தங்களையும் மறந்து கூவினர்.
      இவ்வளவு நேரமும் ரத்த வெறியுடன் பார்த்துக்கொண்டிருந்த மன்னன் மாக்ஸீமியன் பெரும் வெட்கமடைந்தான்..இனம்புறியாத பெரும் அச்சமும் திகிலும் அவனை ஆட்கொள்ளவே   அவன் அரங்கத்தைவிட்டு சப்த்தம் போடாமல் வெளியேறினான்.
      அன்றைய இரவில் காத்தரீனுடைய காவல் சம்மனசு அவள் திரு உடலை அவள் சிரசுடன் சேர்த்து எடுத்துச்சென்று அக்காலத்தில் எவருமே நெருங்க பயப்படும் சீனாய் மலையின்  உச்சியிலிருந்த ஒரு பெரிய பலகைப்பாறையில் கிடத்தியது. அப்போதும் ஒரு புதுமை நடந்தது. கடினமான அந்த பலகைப்பாறையும் இளகி நம் காத்தரீனின் திரூஉடலின் சாயலை
தன்னில் பதிப்பித்துக்கொண்டது. பக்தி பரவசத்துடன் அதைக்காணவிரும்பும் யாவருக்கும் இன்றும் அந்த திருச்சாயல் தெரியும். சீனாய் மலையில் இருக்கும் இந்தப்பாறை மோயீசனுக்கு  கடவுள் பத்துக்கட்டளை கொடுத்த இடத்தின் அருகிலேயே உள்ளது. இந்த சீனாய் மலையைப்பற்றியும் சில விஷயங்கள் நேயர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
      ஏறகுறைய 2500 அடி உய்ரமுள்ள இந்த சீனாய் மலையின் உச்சியில்தான் மோயீசனுக்கு கடவுள் பத்துக்கட்டளை கொடுத்தார் என்கிறது யாத்திரை ஆகமம். எனவே இந்த மலையின் உச்சியில் ஒரு தேவாலயம் அதன் நினைவாக கட்டப்பட்டுள்ளது. அதற்கு அருகிலேயே முஸ்லிம்களும் இந்த நிகழ்ச்சியை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு மசூதியை
கட்டுவித்துள்ளார்கள். இந்த மலையின் ஒரு இடத்தில் எலியாஸ் தீர்க்கதரிசி பலகாலம் தங்கி இறைவனை கண்டடைந்தார். இந்த சீனை மலையின் அடிவாரத்தில்தான் மோசனுக்கு கடவுள் எரியும் முட்புதரில் காட்சிகொடுத்தார். அந்த எரியும் முட்புதரின் வாரிசாக இன்றும் அதே இடத்தில் அந்த முட்புதர் இருகின்றது. மோயீசனின் காலத்திலிருந்து இன்றும் அந்த முட்புதர் அழியாமலிருப்பதே ஒரு பெரும் அதிசயம் தான். அன்றிலிருந்து இன்று வரை ஆந்த முட்புதர்முன் செல்லும் பக்தர்கள் யாத்தெரீகர்கள் யாவரும் காலில் காலணிகள்   அணிவதில்லை. காரணம் கடவுளே அந்த இடத்தை," மோயீசா..நீ நிற்கும் இடம் பரிசுத்தமானது... எனவே நீ உன் காலணிகளை கழற்றிவிடு" என்றுகூறியதால் யாருக்கும் இங்கு காலணியுடன் செல்ல அனுமதி இல்லை. இந்த முட்புதர் போன்ற ஒரு செடி இந்த சீனாய் பாலைவனத்தில் எங்குமே இல்லை. அது ஒரு தனித்துவமானது. மேலும் இந்த முட்புதரிலிருந்து   பதியன்போடப்பட்ட செடியும் வேறெங்கும் வளருவதுமில்லை. உயிர் வாழ்வதும் இல்லை. இதே ஒரு பெரும் அதிசயம் தான்.
             இத்தகைய பரிசுத்தமான இடத்தில் காண்ஸ்டாண்டிய மன்னன் ஜஸ்டினியன் யேசுநாதரின் மறு ரூபமான நினைவாக ஒரு தேவாலயத்தை கி.பி.527லில் கட்டினார். இந்த கோயிலி லுள்ள ஒரு கல்வெட்டு ஜஸ்டீனியனும் அவர் மனைவி தியோடாராவும் இக்கோவிலைகட்டியதாக கூறுகின்றது. அவர் அந்த கோயிலுக்கு பயன்படுத்திய கதவுகள் இன்றளவும்
உபயோகத்தில் உள்ளன. இவருக்குப்பின் வந்த முஸ்லீம் மதத்தை தோற்றுவித்த முஹமது நபி இக்கோவிலையும் அங்கு வாழும் துறவிகளையும் மேலும் சீனாய் மலை மீது இருக்கும்
பத்துக்கட்டளைக்கோவிலுக்கும் இந்த இடங்களைக்காணவரும் பக்தர்களுக்கும் பாதுகாப்பு கொடுப்பதாக கொடுத்துள்ள உறுதிப்பத்திரமும் இன்றளவும் இந்த கோயிலில் இருக்கிறது.
   அடிக்கடி மலைக்கள்வர்களாள் இந்தக்கோயில் கொள்ளை அடிக்கப்படுவதை தடுக்க பெரும் கோட்டைமதில் அமைக்கப்பட்டுள்ளன. கி.பி. ஒன்பது அல்லது பத்து நூற்றாண்டுகளுக்குப்பின் நம் புனித காத்தரீன் பக்தி முயற்சி பரவ ஆரம்பித்த உடன் ஒரு வெளிப்படுத்துதல் மூலம் காத்தரீனின் சிரசும் அவரது பல எலும்புகளும் இந்த சீனாய் மலைமீது கண்டுபிடிக்கப்பட்டு அவை வெகு பூச்சிதமாக இந்த சீனாய் மலையின் கீழே உள்ள யேசுநாதரின் மறு ரூபக்கோயிலில் கொண்டுவந்து வைக்கப்பட்டன. அன்றிலிருந்து யேசுநாதர் தன் பத்தினியின் பெருமையை உலகம் தெரிந்துகொள்ள பல புதுமைகள் செய்தார்.
     எனவே இந்த முட்புதர் அமைந்துள்ள இந்த யேசுவின் மறு ரூபக்கோவில் புனித கத்தரீன் மடாலயம் என்று பெயர் பெற்றது. அவரது பக்த்தி முயற்சியை முன்னிட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு அவருடைய அருளிக்கங்கள் பல கொண்டு செல்லப்பட்டன. இந்த காத்தரீன் மடாலயத்தில் இப்போதிருப்பது அவரது திரு சிரசும் அவரது கை எலும்பும் தான். இருப்பினும்
அவரது விரலில் அன்று யேசுநாதரால் அணிவிக்கப்பட்ட அந்த மோதிரம் இன்றளவும் நாம் காணும்வண்ணம் உள்ளது. அவரது கபாலத்தில் இன்னும் அவரது முடி அழியாமல் உள்ளது   பெரும் அதிசயம்தான்.
     இந்த காத்தரீன் மடாலயத்தில் யேசுநாதரின் மறு ரூபமும், ஸ்நாபக அருளப்பரின் மரணமும், நம் காத்தரீனின் படமும் அவசியம் காண வேண்டியவை. நம் காத்தரீனின் படத்தில்   காத்தரீன் ஒரு இளவரசி என்பதற்காக தலையில் அவருக்கு ஒரு கிரீடமும் அரச ஆடையும், அவர் பெரும் படிப்பாளி என்பதற்காக புத்தகங்களூம்,அவரைக்கொல்லப்பயன்படுதப்பட்ட  சக்கரமும், அவர் தலைவெட்டிக்கொல்லப்பட்டார் என்பதால் ஒரு கத்தியும் அவர் வேத சாட்ச்சியாய் மரணித்தார் என்பதற்காக ஒரு ஓலையும் அழகாக கி..பி. ஒன்பதாம் நூற்றாண்டிலேயே வரையப்பட்டதாக சொல்லப்படுகிறது. எனவே அந்த கொலைகருவியான சக்கரம் நம் புனிதையான காத்தரீன் பெயராலேயே காத்தரீன் சக்கரம் எனவும் பெயர் பெற்றது.
       நம் புனிதை கத்தரீனையும் தன் மனைவி அகஸ்த்தாவையும் அவருடைய படைத்தளபது போர்பைரியனையுமவனுடன் இருநூறு ராணுவ வீரர்களையும் தன் ஒரே கட்டளையால்   சிரச்சேதம் செய்த மன்னன் மாக்ஸீமியனின் கதி என்னவாயிற்று என்று நேயர்களுக்கு நான் அவசியம் கூறுவேன். மன்னன் தன் ராட்சத வலிமையால் பல போர்களில் வெற்றி அடைந்திருந்தாலும் அவனுக்கிருந்த அளவுக்கதிகமான காம இச்சை பல செனட்டர்களின் குடும்பங்களையும் அரச குடும்ப இளவரசிகளின் வாழ்கையையும் நாசமாக்கியது. மன்னன்  மாக்ஸீமியன் போர் தந்திர உபாயங்களில் சிறந்தவனானாலும் பொதுமக்களையும் அரசியலையும் சரியாக நிர்வகிக்க தெரியாதவன். எனவே மக்கள் இவனை ஓரம்கட்டினர். தானாக விருப்ப
ஓய்வு கொடுத்து தனக்கு பதில் தன் மகன் மாக்சென்டீனியனை சீசர் ஆக்கினான். அவன் மீதும் மக்கள் வெறுப்புற்றனர். இறுதியாக தகப்பன் மகன் இருவருடைய பதவிகளையும் பறித்து  அவர்களை தெருவில் ஓட ஓட துறத்தித்துறத்தி அவர்கள் இருவரையும் தலையை வெட்டிக்கொண்றதாக ஒரு சரித்திரம் கூறுகின்றது. மரம் எந்தப்பக்கம் சாய்ந்திருகின்றதோ
அந்தப்பக்கமே விழும்...மேலும் ஜீவியம் எப்படியோ மரணமும் அப்படியே என்ற கிறிஸ்த்துவ பழமொழி உண்மையாயிற்று.
          இந்த காத்தரீன் மடாலயத்தை சுற்றி சுற்றி பல மடாலயங்கள் அமைந்துள்ளன. அன்று மோசே தன் மக்களுக்கு தாகம் தீர்க்கும் விதமாக கடவுளிடம் பேசும்போது கடவுள்   மோசேயை ஒரு பெரும் குன்று போன்ற பாறையைக்காட்டி அதை தடியால் ஒரு முறை அடிக்க சொன்னார். மோசையும் அந்தப்பாறையை அடிக்கவே அதிலிருந்து தண்ணீர் உடனே
வெளிப்பட்டது அந்த இடம் இன்றும் ஏழு கன்னியர் மடாலயம் எனப்படுகின்றது.
      மோசே பத்துகட்டளைகளை வாங்கி வருவதற்குள் நன்றிகொன்ற இஸ்ராயேலர்கள் தங்களுக்கென ஒரு பொன் கன்று செய்து வழிபடவே கோபமடைந்த சர்வேசுரன் அவர்கள் அனைவரையும் பூமி பிளந்து நரகத்தில் வீழ்த்திய இடமும் இங்கே அருகில் உள்ளது.
         பாரோமன்னனின் தண்டனைக்கு பயந்து தப்பிவந்த மோசே இந்த மலைஅடிவாரத்தில் சுற்றி வரும்போது ஜெத்ரோவின் ஏழுபெண்கள் கால்நடைகளை மேய்த்துவரும்போது   அவர்களிடம் வம்புசெய்த பிலிஸ்த்தியரை துரத்தி அந்த பெண்களுடைய கால்நடைகளுக்கு தண்ணீர் புகட்டினார் அல்லவா.. அந்த ஏழு பெண்களில் செப்போரா என்பவளிடம் மயங்கி   அவளையே திருமணம் செய்துகொண்டார் மோசே. அவர்கள் சந்தித்துக்கொண்ட ஒரு குகையும் இந்த மலை அடிவாரத்திலேயே அந்த நீர் சுனையின் அருகிலேயே உள்ளது.   அந்த நீர் நிறைந்த சுனை இன்றளவும் நல்ல குடிநீராகவே உள்ளது. அந்த சுனை இந்த மலை அடிவாரத்திலேயே உள்ளது. இந்த இடங்கள் எல்லாம் அன்று மோசே காலத்தில் எப்படி
இருந்ததோ அப்படியே இன்றளவும் உள்ளது.
      யேசுநாதருக்காக மத்திய துருக்கியில் செபெஸ்த்தே என்னுமிடத்தில் நாற்பது வீரர்கள் பனிக்குளத்தில் மூழ்கடிக்கப்பட்டு அதிலும் மரணிக்காதவர்களை தலைவெட்டிக் கொள்ளப்பட்டனர். அவர்கள் நினைவாக நாற்பது வேத சாட்சிகள் மடாலயம் ஒன்றும் இங்கு அருகில் உள்ளது.
ஞான சௌந்தரியான புனித காத்தரீனம்மாவே எங்களுகாக வேண்டிக்கொள்ளும்.. ஆமென்.





























No comments:

Post a Comment