Tuesday, June 4, 2013

" அதோ எழுந்து வருகின்றவள் யார்? " தொடர்ச்சி 3.




" அதோ எழுந்து வருகின்றவள் யார்? " தொடர்ச்சி 3. மூன்று ரோஜாக்கள்.

உதய வானில் ஒரு விடிவெள்ளி.

       இந்த கதை ஆரம்பிப்பது கன்னிமரியாளின் பிறப்பிற்கு நான்கு தலைமுறைகளுக்கு முன்பாக.அன்னாளில் தலைமை குருவாக இருந்தவர் அர்க்காவுஸ் என்னும் தொன்னூரு வயதைக்கடந்த பெரும் முதியவர். அவர் மிகச்சிறந்த பக்தியும் தெய்வச்சிந்தனையும் வாழ்நாள் எல்லாம் எல்ல நற்பண்புகளும் நிறைந்து வாழும் மகானாக விளங்கினார். ஆரோனின் வழித்தோன்றல்களில் வந்த கடைசிப்பகுதியில் வரப்போகும் மெசியாவின் வழித்தோன்றல் பற்றி அறிவிக்கப்படும் என்னும் இறைவாக்கு அவருக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. தங்கள் குலத்தை சேர்ந்த லேவி இனப்பெண் ஒருத்திக்கு வரப்போகும் மெசியாவுக்கு தாய் ஆகப்போகும் பாக்கியம் உண்டு என்ற ஆணித்தரமான விசுவாசம் அக்குலப் பெண்களுக்கு இருந்ததால் அப்பெண்கள் கற்பெனும் பண்பை தங்கள் வாழ்நாள் எல்லாம் உயிரினும் மேலாக போற்றி வளர்த்தனர்.தங்கள் வாழ்வில் எப்பொதும் சுத்தம் ..சுத்தம்.. சுத்தம் ... அப்படி ஒரு சுத்தம். தங்கள் உள்ளங்களிருந்து இல்லம் வரை அனைதிலும் சுத்தமே அவர்கள் தாரக மந்திரமாக விளங்கிற்று. ஆண்களும் சரி, பெண்களும் சரி, தங்கள் குடும்ப உறுப்பினர் யாவரின் மீதும் கண்னும் கருத்துமாய் போற்றி வளர்த்தது கற்பு என்னும் பெரும் புண்னியமே. இதையும் மீறி பாவம் செய்தவன் கதி அதோகதி ஆகும். அவர்கள் இறைவனின் திருசன்னிதிக்கு வரவே அஞ்சுவர். தவறு நடந்திருந்த்தால் உடனடி தண்டனை தப்பாது. இறைவனின் சந்நிதியில் குற்றம் நிருபணமானால் சாவு நிச்சயம் என்ற உறுதியான நம்பிக்கை அவர்களிடையே இருந்தபடியால் அந்த லேவி இன ஆண்களும் பெண்களும் கடவுளுக்கு மிகவும் பயந்த்த வாழ்வை மேற்கொண்டனர்.
       வரப்போகும் மேசியாவை வரவேற்க லேவி இனப்பெண்கள் நான் தயார், நீ தயார் என போட்டி போட்டுக்கொண்டு தவ வாழ்வை மேற்கொண்டனர். அப்படியானால் அந்த லேவி குலத்தில் யாரும் தவறே செய்யாமல் தெய்வப்பிறவியாகவா வாழ்ந்தார்கள்?. அப்படியும் ஒன்றிரண்டு நடந்தது உண்டு. கடவுளின் திருசந்நிதியில் அவர்கள் குற்றம் வெளிப்படுத்தப்பட்டு அவர்களை தம் இனத்தைவிட்டே வெளியேற்றி விடுவர்.பிற்பாடு அவர்கள் கதி அதோகதி தான். எனவே அந்த லேவி இனத்தைச்சேர்ந்தவர்கள் மிகக்கவனமுடன் வரப்போகும் மீட்பருக்காக ஆழ்ந்த உள்ளார்ந்த புறிதலில் மிகுந்த கவனமான தயாரிப்புடன் கண்னும் கருத்துமாய் மெசியாவை எதிர்பார்த்து வாழ்ந்து வந்தார்கள்.
      இப்படி இருக்கையில் அந்த அர்க்காவுஸ் என்னும் மகான் தன் வாழ்நாளில் கடைசிபகுதியில் இருப்பதை உணந்து மிக்க பக்திசிரத்தையுடன் கடவுளை வேண்டிகொண்டு வந்தார்.  இவ்வாறு அந்த முதியவர் சதா இறைவனின் சந்நிதியில் வேண்டி வரும் போது வேளையாள் ஒருவன் வந்து " ஐய்யா, உங்களைப்பார்க்க எம்ரோணி என்னும் ஒரு பெண் வந்துள்ளாள். தங்கள் உத்திரவுக்காக காத்திருகிறாள்." என்றான். பெரியவரும் உள்ளே வர அனுமதித்தார். வந்தவள்,"ஐய்யா,என் திருமண வாழ்க்கையை பற்றி சில அறிவுரைகள் வேண்டும். எனக்குள்  தேவ அழைப்பு இருப்பதாக உணர்கிறேன். நான் இல்லறம் ஏற்பதா? அல்லது துறவறம் ஏற்பதா ? என்று தெரியவில்லை.தாங்கள் தயவு செய்து எனக்காக இறை வேண்டல் செய்து
எனக்கு தெரிய படுத்த வேண்டும்." என்றாள். அதற்கு தலைமைகுரு, " மகளே எம்ரோணி, நீ நாளை இதே வேளையில் இங்கு வா . நாம் உனக்காக இறை வேண்டல் செய்து உன்   எதிர் காலம் பற்றி அறிவிப்போம்" என்றார். அவள் சென்ற பிறகுதலைமைகுரு செபத்தில் ஈடுபட்டார். அவருக்கு உதய வானில் ஒரு வெள்ளி தோன்றியிருப்பதாக புறிந்தது.
                    " பூத்தது ரோஜாப்பூ"

     செக்கச் செவேல் என்று நீண்டு வளர்ந்த சீனாய் மலைத்தொடரில் ஒரு மலை தான் ஓரேபூ. இந்த மலையின் உச்சியில் தான் மோயீசன் கடவுளிடமிருந்து பத்து கட்டளை பெற்றார்
     இந்த மலையின் உச்சியில்தான் எலியாஸ் தீர்க்கதரிசி வாழ்ந்த குகையும் உள்ளது. அக்காலத்தில் மிகுந்த பக்தி உள்ளவர்களைத் தவிர வேறு யாவரும் இந்த எலியாஸ் குகைக்கு செல்ல அஞ்சுவர். பிற்காலத்தில் இந்த சீனாய் மலையும் எலியாஸ் குகையும் திருபயணிகள் வந்து தரிசிக்கும் புண்ணிய ஸ்தலம் ஆயிற்று. யூதர்கள் தங்கள் வாழ்நாளில் கார்மேல் மலை,இந்த ஓரேபூ மலை, மற்றும் ஜெருசலேம் தேவாலயமாகிய இடங்களை திருப்பயணமாக தரிசிப்பதை ஒரு பெரும் புண்ணியமாக கருதினர்.    அடுத்த நாள் இந்த முதியவரான குலகுரு தன்னுடைய குருத்துவத்திற்கான ஆயத்த ஆடையை அணிந்துகொண்டு எலியாஸ் குகைக்கு ஏறிசென்றார். குகையின் உள்ளே விலாசமான ஆலயம் போன்ற அமைப்பு இருந்தது. அங்கே பக்திக்கு ஏதுவான பல பொருட்க்கள் இருந்தன. அக்காலத்தில் உடன்படிக்கைப்பேழையும் அங்கு இருந்த்தது, மேலும் முக்கியமாக ஆரோனின் கைத்தடியும் அங்கிருந்தது. மேலும் பல  புண்ணியவாங்களின் சில எலும்புகளும் மோயீசனின் சில உடமைகளும் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு மிகவும் பக்தி பரவசமாக தூபங்களும் ஏற்றப்பட்டு இருந்தன.எலியாஸ் குகை  முழுவதும் தூப புகையால் நிரம்பி இருந்தன. இப்போது தலைமைகுருவின் வேண்டுதல் ஆரம்பமானது.வரப்பொகும் மெசியாவைக்குறித்தும் இந்த எம்ரோணி என்னும் பெண்ணின்   எதிர்காலம் குறித்தும் வேண்டுதல் நிறைவேற்றப்பட்டது.   அப்போது அந்த அதிசயம் நடந்தது. காய்ந்து சுக்கு போன்று இருந்த அந்த நாணலால் ஆன ஆரோனின் கைத்தடியில்   ஒன்றிரண்டு இலைகள் தோன்றின. பின் ஒரு மொட்டு ஒன்று தோன்றி மலர்ந்தது. இந்த எம்ரோணி என்னும் கன்னிப்பெண்னைப்பற்றிய வேண்டுதல் ஆரம்பமானபோது தலைமை  குருவுக்கு ஒரு காட்சி ஒன்று அருளப்பட்டது. அதாவது ஒரு ரோஜா பூ செடியில் மூன்று கிளைகள் தோன்றின. மூன்றிலும் தலா ஒரு ரோஜாப்பூ தோன்றியது. பின்பு காட்சி மறைந்தது.

     தலைமை குருவுக்கு எல்லாம் புறிந்துவிட்டது. இந்தப்பெண் வழியாக மீட்பு ஆரம்பமாகிவிட்டதை அறிந்து மிகவும் குதூகுலமானார்.பூஜைகள் அனைத்தும் முடிந்ததும் பெரியவர் வந்து  அந்த கன்னிப்பெண்னிடம் " மகளே எம்றோணி, நீ பாக்கியவதி. நீ திருமணம் செய்துகொள்வதுதான் ஆண்டவரின் திருவுளம். உன் வழியாகவே ஆண்டவர் தன் மீட்பு திட்டத்தை  ஆரம்பித்துள்ளார். ஆகவே உன் பெற்றோர் விருப்பபடியே நீ திருமண வாழ்வை துவங்குவாயாக" என்று வாழ்த்தி அனுப்பினார். ஒரு நல்ல நாளில் எம்ரோணிக்கு திருமணம்
ஏக தடபுடலாக நடந்தேறியது.எம்ரோணியை கரம் பிடித்த கணவான் பெயர் ஸ்டோலனஸ் என்பதகும். கடவுள் இவர்களுக்கு இரு பெண் குழந்தைகளைக் கொடுத்தார். மூத்தவள் பெயர்  எமரென்ஷியா என்றும் இளையவள் பெயர் இஸ்மேரியா என்றும் அழைத்தனர். தக்க காலம் வந்ததும் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.மூத்தவள் எமெரென்ஷியா
அப்ராஸ் தம்பதிகளுக்கு மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன. மூத்த குழந்தை எலிசபெத். இவரே யேசுநாதரின் முன்னொடியான ஸ்னாபக அருளப்பரை பெற்றவர்.
      இவர் கணவர் பெயர் சக்காரியாஸ். அடுத்தவள் பெயர் ஏலேயு. இவரது திருமண வாழ்வு நல்ல விதமாக இல்லை போலும். எனவே அவள் கணவர் இறந்தபின் மறுமணம்   செய்துகொள்ளவில்லை. அவள் காலம் முழுவதும் விதவையாகவே வாழ்ந்தாள். [இந்த விதவைப்பெண்தான் தேவாலயத்தில் தனக்கிருந்த ஒரே காசையும் காணிக்கையாக உண்டியலில் போட்டவள் என்று யேசுநாதர் தன் உவமைக்கதையில் கூறினார்.] கடைசி பெண் ரோடா.இவருக்கு ஒரு மகன் பிறந்தார். இவரது கணவரும் இறந்தபின் இந்தப்பெண்ணும் வாழ்நாள் முழுவதும் விதவையாக வாழ்ந்தாள்.இந்த மூன்று பெண்களும் தங்களுடைய   சொத்துக்களை எல்லாம் கோயிலுக்கும் ஏழை எழியவர்களுக்கும் தான தர்மங்களாக செய்து செய்து வறிய நிலைமைக்கு போனார்கள்.
      அடுத்தவள் இளையபெண் இஸ்மேரியாவை பார்ப்போம். இஸ்மேரியா எலியுத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூத்த குழந்தையாக சோபி என்னும் பெண்   குழந்தை பிறந்தது. இந்தக்குழந்தை ஆளானபின் சாலமோன் என்பவருக்கு திருமணம் செய்துவைத்தார்கள். சோபி சாலமோன் தம்பதிகளுக்கு சலோமி என்னும் பெண் குழந்தை
பிறந்தது. இந்த சலோமிக்கு தக்க வயதுவந்ததும் சபதேயுவை திருமணம் செய்து வைத்தார்கள். இந்த தம்பதிகளுக்கு பிறந்தவர்கள் தான் சந்தியாகு என்னும் பெரிய யாக்கோபும்   சுவிசேஷகரான அருளப்பரும் ஆவர். [ இவர்கள் இருவரும் பிற்காலத்தில் யேசுவின் சீடர்கள் ஆயினர்.]
      இளையவள் இஸ்மேரியாவுக்கு தன் தாயார் கூறிய சில அருங்குறிகள் மற்றும் தெய்வ வாக்குறுதிகள் அவள் நினைவுக்கு வந்தன. " மகளே இஸ்மேரியா, நீ என் வயிற்றினில்  இருக்கையில் சம்மனசானவர் ஒருவர் என்முன் தோன்றி பிறக்கப்போகும் இப்பெண் வழியே தோன்றும் ஒரு வாரிசு வழியே மேசியாவின் வருகை இருக்கும் என்று கூறியது எனக்கும்
என் கணவருக்கும் ஒரு மாயத்தோற்றம் போலிருந்தது. இருப்பினும் அது உன் வாழ்வில் நிறைவேறும் என்னும் நம்பிக்கையும் உள்ளது,நீயும் நம்பு". என்றார்.இந்த நினைவுகள்  இஸ்மேரியாவுக்கு அடிக்கடி வரவே தன் கணவருடன் மீண்டும் ஓரேபூ மலைக்கு சென்று தலைமை குருவை சந்தித்து இறை வேண்டல் செய்தார். அவரும் அந்த தம்பதியினருக்கு
ஆறுதல் பல கூறி ஆண்டவரின் வார்த்தையின் மீது நம்பிக்கை வைக்கும்படி கூறினார். ஆயிற்று !... வருடம் இரண்டு மூன்று என்று வாழ்க்கை உருண்டோடிகொண்டே போயிற்று..
         இப்படியாக பதினெட்டு ஆண்டுகள் ஓடிச்சென்றுவிட்டன. அதிசயம்.!..ஆனால் உண்மை. ஆண்டவன் வாக்கு பலித்தது. இஸ்மேரியா மீண்டும் கருத்தாங்கினாள்.  ஆண்டவருடைய தூதன் இஸ்மேரியா முன்பாகத் தோன்றி " இஸ்மேரியா... உனக்கு சமாதானம் என்று முகமன் கூறி ஆண்டவருடைய திருவுளம் உன்னில் நிறைவேறப்போகிறது.
பிறக்கப்போவது பெண் குழந்தை ஆகும். இவள் வழியாகவே மேசியாவின் வருகை இருக்கும். அதற்கு அடையாளமாக இந்தபெண் குழந்தையின் உடலில் ஒரு குறியீடு ஒன்றும்  தோன்றும்." என்று கூறி மறைந்தார். இதே காட்சியை அவரது கணவரும் கண்டார். அதிகாலையில் இருவரும் தாங்கள் கண்ட காட்சி பற்றி பேசிக்கொண்டனர். அளவில்லாத  மகிழ்ச்சி கொண்டனர். தக்க காலம் வந்ததும் இஸ்மேரியா அழகிய பெண் குழந்தையைப் பெற்றார். பிள்ளையின் வயிற்றில் " M "என்ற குறியீடு ஒரு மச்சம் போல் ஒளிர்ந்தது.
இந்த பென் குழந்தைக்கு ஆன்னி என்று பெயரிட்டனர். தக்க காலத்தில் குழந்தையை கோயிலில் காணிக்கையாக ஒப்புகொடுத்தனர். அப்போது ஆன்னிக்கு வயது ஐந்து. அந்த  வயது முதற்கொண்டு பதினேழு வயதுவரை ஜெருசலேம் தேவாலயத்திலேயே வளர்ந்து வந்தாள்.அன்பிலும் தெய்வ பயத்திலும் இறைபற்றிலும் அவளுக்கு நிகர் அக்காலத்தில் யாருமே
இல்லை.கோயில் குருக்கள் இந்த ஆன்னி என்னும் பெண்னைபற்றி மிகவும் அதிசயித்துப்போயினர். ஆன்னி பதினேழு ஆண்டுகள் தேவாலயத்தில் கழித்த பிறகு தன் தாய் வீட்டிற்கு  வந்தாள். அங்கு அவளுக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. அவளுக்கு ஒரு தங்கை பிறந்து வளர்ந்திருந்தாள். அவள் பெயர் மாரா.
       இஸ்மேரிய எலியா தம்பதியினருக்கு ஏராளமான செல்வம் இருந்தது. ஏராளமான கால்நடைகளும் நில புலங்களும் அவர்களுக்கு பல இடங்களில் இருந்தது. கலிலேயாவிலும்  சமாரியாவிலும் ஜபுலேன் பள்ளத்தாக்கிலும் ஜெருசலெமை சுற்றிலும் பல இடங்களிலும் நிலங்கள் வீடுகள் என்று ஆண்டவர் அவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்திருந்தார். இருப்பினும்
செல்வ செருக்கு என்பது அவர்கள் பாரம்பரியத்தில் கிடையாது. கடவுள் மீது மிகுந்த பக்தியும் பயமும் பற்றும் உடையவர்களாயவ் அவர்கள் வாழ்ந்து வந்தனர்.
       ஒருநாள் தாய் இஸ்மேரியா " மகளே ஆன்னி,உனக்கு தகுந்த பிராயம் வந்துள்ளபடியால் நீ திருமணம் செய்துகொள்ளவேண்டும்." என்று அறிவுரை கூறினார்.    ஒரு சமயம் கலிலேயாவில் உள்ள செப்போரிஸ் என்னும் ஊரிலிருந்து செபுலேன் சமவெளிக்கு சிலகாலம் தங்கியிருக்க இஸ்மேரியா குடும்பத்தார் சென்றனர்.அங்கே தங்கள் உறவினர்   எலிஸபெத்தம்மாளின் கணவர் சக்கரியாஸ் குடும்பமும் தங்கி இருந்தது. சக்கரியாஸ் தாவீதின் கோத்திரத்தை சேர்ந்தவர். அவரது வம்சாவளியில் வந்த எலியாகீம் என்றும் ஜோவாக்கீம்    என்றும் சுவக்கீன் என்றும் அழைக்கப்படும் கணவானுக்கு ஆன்னியை இறைவனின் சித்தப்படி திருமணம் செய்து வைத்தர்கள். சுவக்கீன் நல்ல மனிதர் என்றும் பணம் காசுக்கு ஆசைப்படாத மனிதர் என்றும் மிகுந்த கடவுள் பக்தி உடையவர் என்று எலிஸபெத்தம்மாள் கூறியதாலேயே தன் தாய் இஸ்மேரியா இவரை தன் கணவனாக தேர்ந்தெடுத்தார் என்று ஆன்னிக்கு புரிந்தது .

     ஆன்னிக்கும் சுவக்கீனுக்கும் எல்லா விஷயங்களிலும் ஏழாம் பொருத்தம் தான். அன்னம்மள் என்னும் ஆன்னிக்கு சிறிய முகம். ஒற்றை நாடி உடம்பு. அசத்தும் அழகு என்று  இல்லாவிடினும் அமைதியான முகம். ஒளி வீசும் கண்கள்.மிகப்பெரும் பணக்காரி.ஆனாலும் சிறந்த கடவுள் பக்தி உள்ளவள். ஆனால் சுவக்கீன் அப்படி அல்ல. பெயர் தான் தாவீதின்   கோதிரமே தவிர அப்படி ஒன்றும் செல்வந்தர் அல்லர். குட்டையானவர். பரந்த முகம் .இரட்டை நாடி உடம்பு. எப்படித்தான் அன்னம்மாள் இவரை கணவராக ஏற்றுக்கொண்டாரோ   தெரியாது. ஆனால் திருமணத்திலும் கடவுள் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்ட அன்னம்மாள் இது இறைவன் விதித்தது என்று அவரை கணவராக ஏற்று மதித்து வாழ்ந்து வந்தார்.
        இந்த ஏற்றத்தாழ்வு சுவக்கீனுக்கும் புறிந்தே இருந்தது. அவர்கள் இருவரையும் பிணைத்து வைத்தது அவர்களது கடவுள் பக்தி தான். தனக்கு வாழ்க்கைப்பட்டவள் எப்பேற்பட்ட  பணக்காரி, அவள் தன்னை எப்படி மதித்து நடப்பாள் என்ற தயகத்துடனே அவர்கள் திருமண வாழ்க்கைஆரம்பித்தது. ஆனால் வேற்றுமையில் ஒற்றுமையை ஆண்டவன்  ஏற்படுத்துகிறான் என்பதை சுவக்கீன் வெகு விரைவில் புறிந்துகொண்டார். தன் மனைவி எப்பேற்பட்ட புண்ணியவதி என்பது சுவக்கீனுக்கு வெகு விரைவிலேயே
புறிந்துவிட்டது.இருவரும் கற்பென்னும் புண்ணியதிலும் இறைபக்தியிலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்லர் என்பதையும் புறிந்துகொண்டனர்.இருப்பினும் அடக்கம் என்னும்   புண்ணியம் அவர்களுக்குள் சிறந்து விளங்கியதால் பொதுவாக யார் முன்னிலையிலும் அவர்கள் சேர்ந்து சிரித்து யாரும் பார்த்ததில்லை.அப்படியோரு தம்பதிகள் அவர்கள்.
       இதற்குள்ளாக தாய் இஸ்மேரியா வயதாகிய காரணத்தால் மரணப்படுக்கையில் வீழ்ந்தார்.தன் சொத்துக்கள் அனைத்திற்கும் தன் இரண்டாம் மகள் அன்னம்மாளை நிர்வாகியாக  நியமித்து தன் கண்களை மூடினார்.மிகவும் திரளான சொத்துக்களுக்கு அன்னமாளும் சுவகீனும் பொறுப்பாளி ஆனார்கள்.இவர்களின் திருமண வாழ்வின் பரிசாக ஒரு பெண்
குழந்தையை பெற்று அதற்கு மேரி என்னும் பெயர் சூட்டினர்கள். அவள் தன் தகப்பனையே உறித்து வைத்து வந்திருந்தாள்.தாய் இஸ்மேரியாவுக்கு ஏற்பட்ட அதே அனுபவம் மகள்  அன்னம்மவுக்கும் ஏற்பட்டது.
      தன் தாய் வழியாக தனக்கு அருளப்பட்ட தெய்வ வாக்கு என்னவாயிற்று ?.தன் வயிற்றில் குறிக்கபட்ட " M"..என்னும் மச்சம் எதற்காக? தனக்குப்பிறந்த இந்த பெண் மேரி தான்   தனக்கு வாக்களிக்கபட்ட மகளா? அப்படி ஒரு செய்தி தனக்கு இன்னும் வெளிகாட்டப்படவில்லையே... ஏன்?..அப்படியானால் இந்தப்பெண் வாக்களிக்கப்பட்ட பெண் அல்ல.. !...
    அப்படியானல் என் வழியே மீட்ப்பர் வருவார் என்ற செய்தி எப்போது வரும் ?.. ஆண்டவரே இது என்ன சோதனை என்று வாழ்வில் முதன் முதலாக கவலைப்பட ஆரம்பித்தள் ஆன்னி.  இல்லை.... என் தெய்வம் உண்மையானது...எனக்கு அருளப்பட்ட தெய்வ வாக்கும் ஒரு போதும் பொய் ஆகாது....என் வயிற்றிலே பிறக்கப்போகும் குழந்தை மேசியாவாக இருக்குமோ ..
    அது பெண்ணாகப் பிறந்துவிட்டாள்.?...என்ன ஆனாலும் சரி..நான் நம்பிக்கை இழக்கமாட்டேன்...எனக்கு மீட்பு பற்றிய செய்தி வரும் வரை நான் தவம் இருப்பேன்.ஆண்டவரே,  இரக்கமாயிரும்...என் வேண்டுதலுக்கு செவி சாய்த்தருளும்...என்று அழுது புலம்பி தவ வாழ்வை மேற்கொண்டார். தன் கருத்தையும் தன் நம்பிக்கையின் ஆதாரத்தையும் தன் கணவர்
சுவகீனிடம் கூறி ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்தார். அந்த முடிவு தான் தனிகுடித்தனம். அவளது தகப்பன் எலேயு அதற்கான ஏற்பாடுகள் செய்தார்.ஆன்னியின் ம்கள் மேரியை  தன்னுடனே வைத்துக்கொண்டு அவளுக்கு உறிய பங்கை பிரித்துக்கொடுத்தார்.
    மருமகன் சுவக்கீன் சொதுக்களை மிகச்சரியாய் நிர்வகித்ததால் அவை பல மடங்கு பெருகி இருந்தன. அவர்கள் தங்கள் சொத்துக்களை மூன்றாகப் பிரித்து ஒரு பகுதியை   கடவுளுக்கும், ஒரு பகுதியை ஏழை எளியவர்களுக்கும் மீதமுள்ள பகுதியை தங்கள் குடும்பத்திற்குமாக செலவளித்தனர். அந்த மூன்று பகுதிகளும் மும்மடங்காக பலுகின. ஒருவழியாக  திரளான செல்வங்களுடன் கர்மேல் மலையில் ஆடம்பரமான ஒரு வீட்டில் தனிக்குடுத்தனம் புகுந்தனர் ஆன்னி சுவக்கீன் தம்பதியினர். காலங்கள் உருண்டோடின. தங்களுக்கு ஒரு  மகள் இருக்கிறாள் என்ற எண்ணமே அவர்களுக்கும் மறந்து விட்டது. உலகமும் மறந்துவிட்டது. சக்காரியாஸ் அன்னம்மாள் தம்பதியினருக்கு முதுமை ஆரம்பித்துவிட்டது.
         கடவுள் மேல் உள்ள பக்தியும் நம்பிக்கையும் மட்டும் அவர்களுக்கு குறையவே இல்லை. தாய்க்கு இட்டது தனக்கு என்னும் பலமொழி உண்மையாயிற்று. தாய் இஸ்மேரியாவுக்கு   ஏற்பட்டது போலே தனக்கும் ஏற்பட்டதே என்று வருந்தினாள். வருடம் ஒன்று இரண்டு என்று ஓடிகொண்டே இருந்தது.ஆனால் மேசியாவை பற்றிய் செய்தி மட்டும்
இன்னும் வரவேயில்லை.
     ஆ.... வேதனை....வேதனை..ஆன்னியின் நிலையைவிட சுவக்கீன் நிலைமை இன்னும் பரிதாபம். ஏற்கனவே இவர்களுக்குள் வயது வித்தியாசம் அதிகம். எனவே  இவரது நிலைமை இன்னும் மோசம் ஆகிற்று. தன் வாலிபம் தன்னைவிட்டு போய்விட்டதை சுவக்கீன் உணர்ந்தார். மிகுந்த ஏமாற்றத்துடன் கலக்கமும் அடைந்தார். தன் வம்சாவழியில்  மேசியா பிறப்பார் என்று நம்பி வாழ்ந்து வந்தவருக்கு பெருத்த ஏமாற்றம்.தனக்கு பிள்ளையே இல்லமல் போய்விட்டதே என்ற கவலை மேலும் அவரது முதுமையை வெளிக்காட்டியது.
    எனவே கோவில் கோவிலாக அலைய அரம்பித்தார்.பலப்பல வேள்விகள் , தான தருமங்கள்.... ஆனால் இன்னும் ஆண்டவன் அருள் கிடைக்கவில்லை. புத்தி பேதலிக்க அரம்பித்தது.  ஒரு நாள் தன் மனைவியிடமும் வேறு யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் தன் கால் போன போக்கில் கிளம்பிவிட்டார் சுவக்கீன். தன் கணவர் மேல் மிகுந்த பாசமும் நேசமும்
கொண்டிருந்த ஆன்னி மிகுந்த துயருற்றாள்.அவர் போகும் இடமெல்லாம் தெரிந்து வரவும் அவருக்கு தேவையான உதவிகளை செய்துவரவும் எப்போதும் ஆட்களை அனுப்பி   கண்கானித்தபடியே இருந்தார் ஆன்னி. இவ்விதமாக இருபது வருடங்கள் ஓடி விட்டன.

" எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என் தலைவன் என்னைவிட்டு சென்றானடி இன்று வேறுபட்டு நின்றானடி" கவிஞர் கண்ணதாசன்.
        இந்த இருபது ஆண்டுகளில் தன் கணவர் தன்னைப்பார்க்க ஒரு முறை கூட தன் வீட்டிற்க்கு வரவே இல்லையே என்று அன்னம்மாள் தவித்த தவிப்பு வார்த்தையில் சொல்லி மாளாது.  பாவம் அன்னம்மாள்.... அவள் மீது கடவுளின் கருணைக்கண் பட்டது. காலம் கனியுற்று ஆண்டவனின் மனிதாவதாரத்திற்கான ஏற்பாடுகள் விண்னில் துவங்கிவிட்டன.
ஒருநாள் ஆன்னி படுத்திருந்தபோது ஆண்டவரின் தூதர் அவருக்கு தோன்றினார்." ஆன்னி உனக்கு சமாதானம்". என்று முகமன் கூறினார். " உன் வயிற்றில் பிறக்கப்போகும் பெண்  குழந்தை மூலம் மேசியா பிறப்பார்.அந்த பெண் குழந்தைக்கு குழந்தை பிறந்த இருபதாம் நாள் மேரி என்னும் பெயர் வைப்பாயாக. அதற்கு அடையாளமாகத்தன் உன் வயிற்றில் " M "
என்னும் அடையாளக்குறி போடப்பட்டது." என்று " மேரி " என்னும் பெயரை சுவற்றில் செம்பொண் நிறத்தில் பதித்துக்காட்டினார். அதற்கு அன்னம்மள் " சுவாமி, என் கணவர் என்னை  விட்டுப்பிறிந்து இருபது ஆண்டுகள் ஆயிற்று. என்னை நிரந்தரமாக பிறிந்துவிடுவாரோ என்று அஞ்சுகிறேன்.அவரை விரைவில் என்னிடம் சேர்த்து வையுங்கள்." என்று வேண்டினார்.
       அதற்கு தூதர் " ஆன்னி, இதே செய்தியை நாம் உன் கணவரிடமும் தெரிவிப்போம். நீ உடனே புறப்பட்டு ஜெருசலேம் செல்லக்கடவாய்.
அங்கே உன் கணவனை தேவாலயத்தின் முன்னே தங்க வாயிலில் சந்திப்பாய் " என்றுகூறி மறைந்தார். வானதூதர் கூறியபடியே அவள் கணவருக்கும் காட்சி அருளப்பாட்டது,   அப்போது அவர் ஜோர்டான் நாட்டில் பெத்தானியாவுக்கு அப்பால் தவமிருந்துவந்தார். அவரும் உடனே புறப்பட்டு தகுந்த ஏற்படுகளுடன் ஜெருசலேம் தேவாலயம் புறப்பட்டு வந்தார்.
கணவரும் மனைவியும் தேவ தூதர் அறிவித்தபடியே தேவாலயத்தில் தங்க வாயிலில் சந்தித்து கொண்டனர். தேவாலயத்தில் ஏராளமான தான தருமங்களும் பலி பொருட்களும்   கொடுக்கப்பட்டன. கோவிலின் தலைமை குரு ரூபன் சுவக்கீனை தனியே அழைத்துச்சென்று உடன்படிக்கை பெட்டகதின் முன்னே கொண்டுபோய் விட்டார். பின் அவரை தனியே   விட்டு சென்று விட்டார். ஆலயம் தூப புகையால் நிறம்பிற்று. ஆண்டவரின் தரிசனம் ஆரம்பம் ஆனது.
        சுவக்கீன் தன்னிலை மறந்தார். தன் ஆவி தன்னை விட்டுப்போவதாக உணர்ந்தார்.ஆண்டவரின் தூதர் அவரின் முன்னே தோன்றி வரப்போகும் மீட்ப்பின் திட்டத்தை   அவருக்கு அறிவித்தார். அவருக்கு காட்சிகள் பல தோன்றின. உலகம் உண்டானதுமுதல் ஆதாம் ஏவாள் தோற்றம் மற்றும் அபிரகாம், ஈசாக்கு, யாக்கோபூ என்னும் முது பெரும்  பிதாபிதாக்களின் தோற்றம் கட்சிகளாக தோன்றின.  இப்போது சுவக்கீன் இந்த காட்சியில் தன்னையும் கண்டார். தனக்குப்பிறக்கப் போகும் தேவதாயரைக்கண்டார். பிறகு தன் பேரனாக   பிறக்கப்போகும் யேசு என்னும் மேசியாவைக்கண்டார். அவர்வழியாக இந்த மக்கள் அடையப்போகும் மீட்பைக்கண்டார். மேலும் பல கண்டறியாதன கண்டார். காட்சிகள் மறைந்தன.
      தன் சுய உணர்வு பெற்று தான் ஆண்டவரின் தூதருடன் உரையாடுவதை உணர்ந்தார். ஆண்டவரின் தூதர் சுவக்கீனுக்கு உடன்படிக்கை பெட்டகத்திலிருந்து ஒரு  பொற்கிண்ணத்தை எடுத்து அதில் தேவ பானம் ஊற்றி சுவக்கீனுக்கு கொடுத்தார். இதற்கு முன் இந்தப்பொற்கிண்ண்தில் பானம் பண்ணியவர் தந்தை அபிரகாம் மட்டுமே.   அவருக்கும் இதே போன்ற காட்சி அருளப்பட்டது. அவருக்கு அடுத்தபடி இத்தகைய காட்சிகளைக்கண்டது சுவக்கீன் மட்டுமே.வான தூதர் கூறியதாவது, "சுவக்கீன், உன் வழியாக
ஆண்டவரின் மீட்பு திட்டம் ஆரம்பமாகிறது.ஆண்டவரின் திருவுளத்திற்கு முதுமை ஒரு பொருட்டல்ல. இவ்விதமே தந்தை அபிரகாமுக்கும் நடந்தது. கல்லிலினின்றும் மக்கள்   செல்வத்தை பிறப்பிக்கவல்லவர் ஆண்டவர் என்பதை மறவாதே.உன் மனைவியை அழைத்துசெல்."என்றார்.
    என்னதான் தனக்கு சுய நினைவு வந்தாலும் தான் காண்பது கனவல்ல நனவு தான் என்றாலும் சுவக்கீனால் தன்னை நம்பமுடியவில்லை.கோவிலின் மூலஸ்த்தானத்திலிருந்து  வெளி வரும்போது தேவ ஆவி தன்னை வழி நடத்துவது போலும் காற்றில் மிதந்தபடி நடப்பதைப்போலவும் உணர்ந்தார். அவரது தோற்றத்தைக்கண்ட அன்றைய தலைமை குரு ரூபன்
என்னும் முதியவர் சுவக்கீன் தேவ ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்டுள்ளார் என்று உணர்ந்து அன்றைய பலியாய் ஏராளமான பலிகலை கடவுளுக்கு ஒப்புகொடுத்தார்.
     அன்றைய விஷேஷமாக தேவாலயத்தின் ஏழு மாடக்கால் விளக்கு தண்டுகளும் முழுமையாக ஏற்றப்பட்டன.மிகப்பெரும் விஷேஷ காலங்களில் மட்டுமே ஏழு விளக்கு தண்டுகளும்  ஏற்றப்படுவது மறபு. சாதாரண நாட்க்களில் ஒன்றிரண்டு விளக்குத்தண்டுகள் மட்டுமே ஏற்றப்படும்.அன்று தன் சார்பாக ஒப்புகொடுக்கப்பட்ட அத்தனை பலிகளிலும், பூஜைகளிலும்
பங்கேற்க அன்னம்மாளும் சுவகீனும் முன்னிலை நின்றனர். மாலை ஆனது. தன் மனைவியை ஏற்றுக்கொண்டு சுவக்கீன் தங்க வாயிலில் மீண்டும் தேவாலயம் நோக்கி கும்பிட்டனர்.
    அப்போது வானிலிருந்து இறங்கி வந்த ஒரு ஒளிவட்டம் ஆன்னம்மாள் சுவக்கீன் இருவரையும் சூழ்ந்தது. தேவ அன்பில் இணைந்து கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர்  பரவச நிலையில் ஆலிங்கணம் செய்து கொண்டனர்.அந்த தேவ ஒளி வெள்ளத்தில் அவர்கள் இருவரும் தூய்மைபடுத்தப்பட்டனர். ஏற்கனவே சுத்தம்மாக்கப்பட்டவர்கள் மீண்டும்
சுத்திகரிக்கப்பட்டனர். சற்று நேரத்தில் ஒளி வெள்ளம் மறைந்தது. அன்னம்மாளும் சுவக்கீனும் மறுபடியும் மனிதாவதாரம் எடுத்தவர்போன்று உணர்வுபெற்றவர்களாய் ஜெருசலேமில்   தங்கள் இல்லம் நோக்கி சென்றனர்.


"மேரி என்னும் மரியாளின் அமல உற்பவம் "

     பலகாலம் பிறிந்திருந்த அன்னாள் சுவக்கீன் தம்பதியினர் மீண்டும் சேர்ந்து வாழ தொடங்கினர். இனிவரும் காலங்களில் என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பதை  அறிந்திருந்த சுவக்கீன் தன் மனைவி அன்னாளிடம் தான் கண்டது பற்றியும் கேட்டது பற்றியும் தான் பிறிந்திருந்த நாட்க்களில் தனக்கு ஏற்பட்ட மனவருத்தம் சலிப்பு சஞ்சலம்
மற்றும் வழிப்பயணங்கள் ஆகியவைபற்றி கதை கதையாய் கூறினார். வயதான சுவக்கீனுக்கு மீண்டும் வாலிபம் வரப்பெற்றவராய் சில காலம் தான் வாழ்ந்து வந்தஒரு மலை குகைக்கு  தன் மனைவி அன்னாளை கூட்டிசென்றார். அந்த குகையில் தான் எலியாஸ் தீர்க்கதரிசி சிலகாலம் தங்கி இருந்தார். இந்த புனிதமான குகையில் அன்னாள் சுவக்கீன் தம்பதியினரும்
சிலநாட்கள் தங்கினர். இந்த குகையில்தான் அன்னம்மாள் கருவுற்றள். தேவ மாதா என்று அழைக்கப்படப்போகும் மேரி என்னும் மரியாள் அமல உற்பவமாக அவள் தாய் அன்னம்மாள்  திருவயிற்றில் அவதரித்தாள். ஏறக்குறைய இரண்டு மாத காலம் இந்தக்குகையிலேயே அவர்கள் வாழ்ந்தார்கள். இந்தக்குகை இன்றளவும் பரிசுத்த குகையாக சிறந்த யாத்திரை ஸ்தலமாக  உள்ளது. [மேலும் பின்நாட்களில் யோசேப்பும் மரியாளும் குழந்தை யேசுவும் எகிப்துக்குசெல்லும் வழியில் இந்த குகையிலும் தங்கி சென்றார்கள்.]
[இன்று இந்த இடம் தூய ஜார்ஜ் மடாலம் ஆக வாடி குவில்ட் saint george monastrர் . wadi quilt என்று ஜெரிக்கோவில் இருகின்றது.'
        மாதாவின் அமல உற்பவத்தை உறுதி செய்துகொண்டபின் அன்னாள் சுவக்கீன் தம்பதியினர் மீண்டும் ஜெருசலேம் தேவாலயம் சென்று ஏராளமான பலிகலும் பூஜைகளும்  தான தருமங்களும் நன்றி பலியாய் செலுத்தி மீண்டும் தாங்கள் வாழும் ஊராகிய கர்மேல் மலையை அடைந்தனர்.

" மீண்டும் அதோ எழுந்து வருகின்றவள் யார் ?. "

     அன்றோர் நாள் அன்னை அன்னாள் கண்ட காட்சியாவது. தான் காண்பது காட்சியா, கனவா, நனவா என்று சொல்லமுடியாத ஒரு பரவச நிலை. அவள் படுத்துதான் இருந்தாள்.  அப்போது அவள் தங்கி இருந்த அந்த அறை முழுவதும் ஒரே ஒளிப்பிரவாகமாய் மாறியது. கண் கூசும்படியான ஒளிப்படலம் அது.வானோர் கீதங்கள் முழங்க உன்னதங்களிலே
ஓசான்னா என்ற ஒலிப்பாடல் மென்மையாய், தொடர் தொடராய் கேட்டுகொண்டே இருந்தது.வானோர் ராகமெடுத்துப்பாடும் இந்தப்பாடலைகேட்கும் மனிதனோ, விலங்கோ பறவையோ
உயிரினமோ அப்படியே ஸ்தம்பித்துப்போவது உறுதி.எங்கும் இனிமை...இனிமை...இனிமை. எங்கும் பரிசுத்தம்....பரிசுத்தம்...பரிசுத்தம்...இந்த பரிசுத்தத்திற்குள் ஒன்றுக்குள் ஒன்றாய்  சுழலும் மூன்று ஒளிப்பந்துகள் ஊடுறுவிப்பார்க்கத்தோன்றும்படியும் மூன்றும் ஒரே ஒளிப்பந்தமாகவும் தோன்றியது. அந்த ஒளிபந்துகள் தூய தம திரித்துவம் ஆகும்.  அந்த
ஒளிப்பிரவாகத்திலிருந்து சிதறியது ஒரு சிறிய ஒளிப்பிழம்பு.
இந்த சிதறிய ஒளிப்பிழம்பு சற்று திடப்பொருளாகி, ஊடுறுவித்தோன்றும் ஒரு மனித உருவமாகி, அதோ ஒரு அழகிய பெண் உருவமாகி, இதோ நான் காணும் தோற்றமாகி புன்னகை  பூக்கும் முகமாகி என் முன்னே நடந்து வரும் இவள் யார்.?..இதோ ஓர் ஏணி பரலோகத்தையும் பூலோகத்தையும் இணைக்கிறது. ஓ...இது யாக்கோபு கண்ட ஏணியா ?.ஆம்..!.
     அதுவே தான்..!... அதில் சந்தேகமே இல்லை. இதோ இந்த ஏணி ஏன் என் முன்னே நிற்கிறது. இந்த பெண் ஒவ்வொரு படியாக இறங்கிவருகிறாள். இதோ கடைசிப்படி.
      அடுத்த அடி என்மீது தான்....அட இது என்ன விந்தை. இந்தப்பெண் மீண்டும் ஊடுறுவிப்பாயும் உருவமாகி ஒளியாகி, காற்றாகி என்னுள்சென்று மறைகிறாள். மறைந்தேவிட்டாள்.
அவ்வளவு தான். காட்சி மறைந்துவிட்டது.
   சுய நினைவு வந்தவளாக அன்னை அன்னம்மாள் வாரி சுருட்டிகொண்டு நிமிர்ந்து எழுந்து அமர்ந்தாள்.அப்போதுதான் உணர்ந்தாள் தன் கற்பத்தில் உள்ள கரு அசைந்ததை .  அவள் அடைந்த மகிழ்சிக்கு அளவே இல்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய், ஆண்டாண்டுகாலமாய் காத்திருந்த மனித குலத்திற்கு இறைவன் அளித்திருந்த வாக்குறுதியை
நிறைவேற்றப்போகும் ஒரு தெய்வப்பெண் தன் வயிற்றில் அவதரித்து இருக்கிறாள். திரியேக தேவனின் பிரசன்னத்திலிருந்து உருவாகியிருக்கும் ஒரு தெய்வபெண் தன் வயிற்றில்  கருவாகியிருப்பதை அறிந்து அன்னாள் ," ஆஹா, நான் எப்பேற்பட்ட பாக்கியவதி, நான் இருப்பது மண்னுலகா அல்லது விண்னுலகா?. மகளே மரியா நீயும் பாக்கியவதி.இந்த
மனித குலத்தை உய்விக்கப்போகும் மேசியாவை இந்த உலகுக்கு கொண்டு வரப்போகும் நீ பாக்கியவதி. கடவுளுக்கே தாயாகப்போகும் நீ பாக்யவதி.இல்லை இல்லை. உன்னைவிட  நான்தான் பக்கியவதி.. ஏன் தெரியுமா?. நீ சுமக்கப்போவது மேசியாவை மட்டும். ஆனால் நான் சுமப்பது யாரைத்தெரியுமா ?..திரியேக சர்வேசுரனின் அவதாரம். பரிசுத்த பிதாவின்
குமார்த்தியும் பரிசுத்த சுதனின் தாயரும் பரிசுத்த ஆவியின் பத்தினியுமாய் இருக்கப் பேறு பெற்ற உன்னையல்லவா...!...தேவன் ஸ்துதிக்கப்படுவாறாக. அவரது திரு நாமம்  ஸ்துதிக்கப்படுவதாக..ஆஹா.,,,மகளே மரியா...நீ நீடூளி வாழ்க. வருங்கால சந்ததிகள் உன்னை பெண்களுக்குள் நீ பேறு பெற்றவள் என்று போற்றுவார்கள். நீ ஆசீர் பெற்றவள் என்று  போற்றுவார்கள்.ஆனால் உன்னை மகளாகப் பெறப்போகும் நான் உன்னைவிட பாக்கியசாலி." இப்படியாக வாழ்த்தினாள். வாழ்த்தினாள் வாழ்த்திக்கொண்டே இருந்தாள். கடவுளின்   தாயாரைப்புகழ்வது கடவுளுக்கும் பிடித்தமான செயல்தான்.இப்படியாக அன்னம்மாளுக்கு நாள் போனதோ, நேரம் போனதோ தெரியவில்லை.நாட்க்கள் கிடு கிடு என்று  உருண்டோடிவிட்டன. ஒன்பது மாதங்களும் ஓடிவிட்டன.
      மகா பரிசுத்த மாதாவின் அமல உற்பவம் தொடர்பாக பல வருடங்களுக்கு முன்பாகவே வானில் பல அருங்குறிகளை கடவுள் வெளிப்படுத்தி இருந்தார். தேவ தாயாராகிய   மரியாள் பிறப்பதர்க்கு சுமார் என்னூரு ஆண்டுகளுக்கு முன்பே வானில் ஒரு வால் நட்சட்திரம் தோன்றியது. அதில் கன்னி ஒருத்தி கையில் தராசு ஒன்றை தாங்கியிருந்தாள்.
     அந்த தராசின் வலதுபுறத்தட்டில் கோதுமை கதிர்களும் இடதுபுறத்தட்டில் திராட்சைக்கனிகளும் இருந்தன. இரு தட்டுகளும் ஒரே நிறைகொண்டவையாக இருந்ததால் தராசு  சம நிலையில் இருந்தது.அதாவது மீட்பராம் யேசு தன்னை அப்பமாகவும் இரசமாகவும் மாற்றி தன்னை எப்போதும் இந்த உலகில் நிலை நிறுத்தி நடுத்தீர்க்கிறவராய் வரப்போகிறார்
என்பதற்கு முன் அடையாளமாய் அக்காட்சி இருந்தது.  இப்படி ஒரு காட்சியைத்தான் அன்றைய வான சாஸ்த்திரிகள் கண்டார்கள். இந்த காட்சியானது இன்றைய லெபனான் என்று  சொல்லப்படும் நாட்டில் காணப்பட்டதாக அன்றைய வான சாஸ்திர குறிப்பு கூறுகின்றது. இந்த குறிப்பு மெசப்பட்டோமியா, சுமேரிய,பாரசீகம்,சோராஸ்டிரம், அரேபியா, இந்தியா
போன்ற நாடுகளுக்கும் பரவி இருந்தது.
[இக்காட்சியின் அடிப்படையில் தான் பிற்காலத்தில் யேசு நாதரின் வருகையை அறிவிக்கும் வால் நட்சத்திரம் அமைந்ததை மூன்று ஞானிகளும்
கண்டார்கள். ஆக, இந்த தகவல்களின் அடிப்படையில் குறுக்கு வழியாக ஜெருசலேம் வராமல் பாபிலோனியவை சுற்றிக்கொண்டு லெபனான் வழியே வந்து முன்னோர்களின்   வால்நட்சத்திர குறிப்பை ஆறாய்ந்து யேசுவின் பிறப்பையும் தங்களுடைய மூதாதையர்களின் வம்சாவழியையும் கண்டுகொண்டார்கள். அதாவது யேசுநாதரை கண்ட   மூன்று ஞானிகளும் அன்று 800 ஆண்டுகளுக்கு முன்புவானில் தோன்றிய வால் நட்சத்திரத்தைக்கண்ட வான சாஸ்த்திரிகளின் வழ்சாவழியினரே என்ற உண்மையைக்கண்டு   அதிசயித்துப்போயினர்.] அன்று கன்னி மேரியை விண்மீனில் கண்ட வான சாஸ்த்திரி ஒருவர் பாடிய பாடல் இவ்வாறு இருந்தது.
" ஆஹா, நான் காண்பது என்ன கனவா அல்லது நனவா ?
இங்கு நிற்பவள் மண்னுலக மங்கையா அல்லது விண்னுலக நங்கையா ?
என்னழகு... என்னழகு...என்னழகு...
அவள் நடையழகும் உடையழகும் இடையழகும்,
அவள் கண்னழகும் பெண்னழகும் பொட்டழகும்,
என் கண்னை விட்டகலா நிற்கிறதே,
அருகில் சென்று யார் என்று பார்ப்போம். ---.[ தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்]
கி.மு. 800--500. சற்றேறக்குறைய இதே கால கட்டதில் இன்றைக்கும் இதே பெயரில் அமைந்திருக்கும் கார்மேல் மலை முகட்டில் உள்ள குகையில் எலியாஸ் தீர்க்கதரிசி  வாழ்ந்து வந்தார்.அன்றைய வணங்காக்கழுத்துடைய இஸ்ராயேல் மக்கள் தங்கள் கடவுளின் வல்லமையை அறிந்திருந்தும் நன்றி மறந்து பால் மற்றும் அஸ்ட்டரோத் என்னும் பொய்த்  தேவர்களுக்கு சிலைவழிபாடு செய்து விலங்குகள் மற்றும் மனிதர்கள் விஷெஷமாக கடவுளுக்கு உறியவர்கள் என்று சொல்லப்படும் தலைச்சன் ஆண் பிள்ளைகளை பலியிட்டனர்.
      இதனால் இஸ்ராயேல் தேவனின் கோபத்திற்கு ஆளானார்கள்.எனவே தேவன் அந்த மக்களுக்கு சுமார் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மழையே பெய்விக்காமல் அந்த  நன்றிகெட்ட இஸ்ராயேல் மக்களை சபித்துவிட்டார்.கடும் பஞ்சம் நிலவியதால் மக்கள் தாகத்தால் தவித்துப்போனர்கள்.எனவே இஸ்ராயேல் மக்கள் எலியாஸ் இறைவாக்கினரிடம்  சரணடைந்து ஆண்டவரின் கோபம் தணிக்கும்படி மன்றாடினார்கள்.வேண்டுதல் கேட்க்கப்பட்டது. ஆண்டவரும் மனமிரங்கி மழை வருவிக்க இசைந்தர். இந்த கார்மேல் மலையின்
உச்சியில் இருந்த குகையில் வழ்ந்த எலியாஸ் இறைவாக்கினர் தன் சீடரை அழைத்து அருகில் உள்ள மத்தியதரைக்கடலில் மழைத்தோற்றம் ஏதும் தெரிகிறதா என்று பார்த்து வர  ஏவினார். அவரும் போய்ப்பார்த்து அப்படி ஒன்றும் தெரியவில்லை என்றார்.
     மீண்டும் இரண்டாம் முறையும் போய்ப்பார்த்துவரச்சொன்னா. அவர் மீண்டும் அதே பதிலையே சொன்னார். பிறகு மீண்டும் மூன்றாம் முறையும் பார்த்து வரச்சொன்னார்.  அவரும் பார்த்துவந்து வானில் கரு மேகங்கள் தோன்றுவதாகக்கூறினார். அன்று மாலையில் சற்று மழை பெய்த்தது. அப்படி ஒன்றும் பரவலாகப் பெய்யவுமில்லை, கணமாகவும்  பொழியவும் இல்லை.அந்த கார்மேல் மலையை சுற்றியும் அருகிலும் பெய்தது. அதாவது தவித்த வாய்க்கு தண்ணீர் ஊற்றியது போலே. அன்று பெய்த மழை பிற்காலத்தில்   ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் காத்திருந்த இஸ்ராயேல் மக்களுக்கு வறண்டுபோன உள்ளங்களுக்கு ஆறுதல் அளிக்கும் மீட்ப்பின் செய்தியாக கருதப்படுகிறது.
     அதாவது அந்த மழையை மாதாவின் வருகையாகவும் கருதலாம்.இதில் விஷேஷம் என்னவென்றால் அன்று மழை பெய்த இடங்கள் எல்லாம் பிற்காலத்தில் அன்னம்மாள்  சுவக்கீனுக்கு சொந்தமான இடங்கள் ஆகும். யாவும் ஆண்டவனால் முன் குறித்தபடியே நடந்தேறி வந்தது.
        " மாதாவின் ஜனனம்."
    அனாதிகாலம் முதல் அனாதையாக இருந்த சர்வேஸ்வரன் தனக்கென ஒரு தாயை ஏற்படுத்திக்கொண்டார். அந்த தாயாரை விண்ணிலிருந்த பேறுபெற்ற பக்தி சுவாலகர்  சம்மனசுகள் எல்லோருக்குமாய் அறிமுகப்படுத்தினார். அன்று வானில் எழுந்த கரகோஷங்களுக்கும், வாழ்த்தொலிகளுக்கும் அளவேயில்லை.கடவுளின் தாயார் இந்த பூமியில் ஜனிக்கப்போகிறார்கள்.  கடவுள் தான் ஆசையாய்ப்படைத்த மனிதனை மீட்க்க சித்தம் கொண்டு இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேஸ்வரனை மனிதாவதாரமாக இவ்வுலகுக்கு   அனுப்ப சித்தம் கொண்டார். அதற்காக முதலில் அவரது தாயாரைப்படைத்து உலகுக்கு அனுப்பிவைக்க சித்தம் கொண்டார்.அவரது சித்தப்படியே மாதா இவ்வுலகுக்கு மனுவாகப்பிறக்க  தீர்மானம் செய்யப்பட்ட நாள் செப்டம்பர் 7 ஆம் தேதி இரவு. தேவ மாதா பிறந்து வளர்ந்து ஆளாகி தமது பரிசுத்த குமாரனை ஈன்று பின்பு யேசுநாதரும் இறந்து, தேவதயாரும் இறந்து
சுமார் 250 ஆண்டுகள் ஆகியும் தேவ மாதாவின் பிறப்பு உலகில் மனிதரால் கொண்டாடப்படவே இல்லை. ஆனால் வானம் கொண்டாடியது. பூமி கொண்டாடியது.இயற்கை   கொண்டாடியது. புல்லினங்கள் கொண்டாடின.   எப்படி தெரியுமா ?.ஆண்டாண்டுகாலமாய் செப்டம்பர் 7 ஆம் தேதியும் 8 ஆம் தேதியும் கார்மேல் மலையை சுற்றி ஒரு ஒளி வட்டம்  பகலிலும் ஒளிப்பிரவாகம் இரவிலும் தோற்றியது.  இனம் புறியாத வானோர் கீதங்களும் வாழ்த்து பாடல்களும், ஸ்துதிப் பாடல்களும் அந்த இரண்டு இரவும் பகலும் அமானுஷ்யமாக  கேட்டுக்கொண்டே இருந்தது. கார்மேல் மலையிலிருந்த அனைத்து விதமான மலர்களும் திடீர் திடீரென பூத்துக்குலுங்கி அந்த கார்மேல் மலையையே ஸ்வர்க்கலோகமாய் மாற்றி   அமைத்தன.அந்தப்பூக்களினின்று வெளிப்பட்ட சுகந்தங்கள் மனிதர்களை ஸ்வர்கலோகப் பேரின்பதிற்க்கு அழைத்துச்சென்றன.
      வானில் பறக்கும் பறவைக்கூட்டங்கள் கூக்கூவென குரலெழுப்பி தாங்களும் தேவ கீதங்கள் இசைக்க ஆசைப்படுவன போல அகமகிழ்ந்து கூவின. அந்த கார்மேல் மலையைசுற்றி  அனைத்து புல்லினங்களும் பறவைகளும் கூட்டம்கூட்டமாக சுற்றிச்சுற்றி வந்தன. எல்லாம் அந்த செப்டம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்க்களுக்கு தான்
இந்த காட்சிகள்.பிறகு அங்கு எதுவுமே நடக்காதது போல் எல்லாம் மாயமாய் மறைந்துவிடும். பிற்காலத்தில் இந்த அதிசயங்களைகண்ட துறவி ஒருவர் இதன் காரணங்களை அறிய   முற்பட்டார், அந்த கார்மேல் மலை அடிவாரத்தில் வாழ்ந்துவந்த துறவிகள் கூறிய காரணம் இதுதான்.அதாவது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்களில்
இந்த மலையை சுற்றி தோன்றும் அதிசயங்கள் யாவும் உண்மையே. இவை காலம் காலமாய் நடப்பதேயன்றி வேறில்லை.  நாங்கள் இந்த மலை அடிவாரத்தில் தான், கார்மேல் மலையில்   வசித்த எலியாஸ் தீர்க்கதரிசியின் சீடர்களாய் இங்கு வழி வழியாய் வாழ்ந்து வருகிறோம். அந்த இரண்டு நாட்க்கள் தான் அன்னை மரியாள் இந்த பூமியில் அவதரித்த நாள்.
      இங்கு மனிதர்கள் தான் அவளது பிறந்த நாளை கொண்டாடுவதே இல்லை. ஆனால் இயற்கை அவரது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இதற்கு பிறகு தான் பிற்கால கிரிஸ்துவர்கள்   மரியாளின் பிறப்பை கொண்டாட ஆரம்பித்தார்கள்.
      எல்லாம் சரி தான். விண்னில் சம்மனசுகள் மரியாளின் பிறந்த நாளை கொண்டாடும் ஆரவாரம் மண்னில் கேட்கிறதே எப்படி? பூமியில் மனம்திரும்பும் ஒரு பாவியைக்குறித்து  விண்னில் மிகுந்த சந்தொஷம் உண்டாகும் என யேசு நாதர் கூறவிலையா ? மனம்திரும்பும் ஒரு பாவிக்கே மோட்சத்தில் இவ்வளவு ஆரவாரம் என்றால் வின்னில் யேசுநாதர் பிறப்பு
பற்றியும் அவரது தாயார் பிறப்பு பற்றியும் எவ்வளவு விஷேஷவிதமாகக் கொண்டாடப்படும் என்பதை நாம் புறிந்து கொள்ளலாம். அந்த சந்தோஷமான வானோர் பாடல்களே கார்மேல்   மலையில் கேட்கப்பட்டது.
       அன்று கார்மேல் மலையில் வாழ்ந்துவந்த அன்னம்மாளுக்கும் மாதா பிறக்கப்போகும் தேதி அறிவிக்கப்பட்டது. பரலோகப்பேரின்பம் தன் வயிற்றிலிருப்பதை உணர்ந்து அன்னாள்  மூன்று வாரங்களுக்கு முன்பே தன் ஒன்று விட்ட சகோதரிகளான எலிசபெத்தம்மாளின் உடன் பிறந்த சகோதரிகளான விதவைப்பெண்கள் ஏலேயுக்கும், ரோடாவுக்கும் தூரத்து
உறவினரான செரபீனா என்றும்[ பிற்காலத்தில்] வெரோனிக்காவுக்கும் தன் உடன் பிறந்த தங்கையான மாராவுக்கும் ஆளனுப்பி தனக்கு பிள்ளை பேற்றுக்கு வந்துவுதவுமாறு   கேட்டுக்கொண்டார். இவர்கள் எல்லாம் நசரேதூருக்கு அருகில் உள்ள செபுலேன் மற்றும் செப்போரிஸ் ஆகிய இடங்களில் வசித்து வந்தனர்.அவர்களும் செய்தி அறிந்து அன்னாளுக்கு
பேறு கால உதவி புறிய தத்தம் உறவினர்களுடன் கார்மேல் மலையில் அன்னாள் வீட்டிற்கு வந்தனர்.ஆயிற்ரு..!... செப்டம்பர் 7 ஆம் தேதி இரவு அன்னாளுக்கு பேறு கால  அறிகுறிகள் ஆரம்பித்தது. அவள் இருந்த அறை முழுவதும் ஒளி வெள்ளம் சூழ்ந்தது. மோட்ச பேரின்ப பாடல்கள் சங்கீத ரீங்காரம் கேட்ப்பது போல் ஒலித்துக்கொண்டே இருந்தது.
            அந்த அறையின் மேற்பகுதி மறைந்து ஒளி வெள்ளமாய் மாறியது. அன்னாள் ஸ்துதிக்கத்தொடங்கினாள். அவள் தலை மாட்டில் பூஜைப்பொருட்க்கள் ஒரு அழகிய பழங்கால   பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. அன்னாள் அதைத்திறந்து அதில் ஒரு கற்றை முடி இருந்ததைக்கண்டு தன் வயிற்றின் மேல் அதை வைத்துக்கொண்டார். அது தன் முதுபெரும்   தந்தை, பிதாப்பிதாவாகிய அபிரகாமின் மனைவி சாராளின் கேசம் ஆகும்.   தங்களின் முன்னோர்கள் அதை இத்தனைக்காலமும் பத்திரப்படுத்தி வைத்திருந்தார்கள். அந்த பெட்டியில்   மேலும் பல பொருட்க்கள் இருந்தன
        அதாவது தங்கள் பிதாபிதாக்களின் நினைவாக போற்றப்படும் சில பொருட்க்களும் சில எலும்புகளும் இருந்தன. அவைகள் தந்தை அபிரகாம் மற்றும் மோயீசனின் சில உடைகள்  சில பிதாபிதாக்களின் சில எலும்புகள் போன்றனவாம். அந்தப்பெட்டியை மீண்டும் மூடி தீபங்கள் ஏற்றப்பட்டன. நறுமணப்பொருட்க்களும் எறிகப்பட்டு அந்த அறை முழுவதும்
கோயிலில் உள்ளதுபோல் தோற்றம் காணப்பட்டது.
     அன்னம்மள் அன்று காட்சி கண்டதுபோல் யாக்கோபின் ஏணி வானினின்று இறங்கி அன்னம்மாளின் வயிற்றின் மீது நின்றது. இதைக்கண்ட அந்த பரிசுத்த பெண்கள்   அதிசயித்து போனார்கள். திடீரென்று மீண்டும் ஒளி வெள்ளம் மிகுந்த பிரகாசமாய் தோன்றியது. அந்த ஒளி வெள்ளமானது அன்று சீனாய் மலையில் பரிசுத்த தூவா பள்ளத்தாக்கு  என்று இன்றும் அழைக்கப்படும் இடத்திலிருந்து மோயீசனுக்கு தோன்றிய எரியும் முட்செடியிலிருந்து வந்தது. அந்த எரியும் முட்செடி தலைகீழாய்தோன்றி அத்தனை ஒளி
வெள்ளத்தையும் அன்னம்மாளின் திரு வயிற்றில் குவித்தது. பரிசுத்த பெண்கள் அனைவரும் அறையில் நடக்கும் அதிசயங்களைகண்டவர்களாய் செய்வதறியாது மெய் மறந்து  நின்றனர்.
      திடீரென குழந்தை அழும் குரல் கேட்டது.... ஆம் ..தெய்வத்தாய் மேரி என்னும் மரியாள் ஜனித்துவிட்டார்....!....அந்த ஜனிப்பின் ஜுவாலையில் அந்த அறை முழுவதும்   தங்க மயமாய் காட்சியளித்தது. அந்த அறை முழுவதும் தெய்வலோகம் போன்ற மாயையை ஏற்படுத்தி இருந்தது. சற்று நேரத்தில் எல்லா ஒளி வெள்ளங்களும் மறைந்து சகஜ நிலைக்கு  திரும்பின. காட்சிகள் யாவும் மறைந்தன. பரிசுத்த சகோதரிகள் பார்க்கும்போது அன்னம்மாள் கையில் மரியாள் அழகிய கை குழந்தையாய் பரலோக ஜோதியுடன் சாந்த்த சொரூபியாய்  வீற்றிருந்தாள். மரியாளின் அழும் குரல் கேட்டபிறகு தான் அங்கிருந்த பெண்கள் அனைவருக்கும் சுய நினைவு வந்தது. குழந்தையை முதன்முதலாக பெற்றுக்கொண்டவள்   அன்னாளின் தங்கை மாரா.அன்று மரியளை கையில் எடுத்து தூக்கியவர் தான், கடைசிவரை மாதாவை கைவிடவில்லை. ஆம் ,.. இந்த மரியாளையும்   அவரது புத்திரன் யேசுநாதரையும் கைதொட்டு தூக்கி வளர்த்து ஆளாக்கி பின் மரியாளின் மரணம்,மற்றும் துக்க காரியங்கள் யாவும் முடியும் வரை அனைத்தையும் செய்து முடிக்கும்  பேறு பெற்றவள் இந்த மாராவே.

ஆக, அர்க்காஉஸ் என்னும் அன்றைய தலைமைகுருவுக்கு மாதாவின் ஜனனம் வரை என்ன நடந்தது என்பது தெரியாது. ஆனால் அவருக்கு காட்டப்பட்ட திருக்காட்சியில்   தோன்றிய ரோஜாசெடியில் விளைந்த அந்த மூன்று ரோஜாக்கள் யார் யார் என்பது இப்போது நேயர்களுக்கு தெரிந்திருக்கும் என் நான் நினைக்கிறேன்.எம்ரோணி என்னும் ரோஜா  செடியில் விளைந்த எலிஸபெதம்மாள்,அன்னம்மாள், மற்றும் மரியாள் என்னும் இந்த மூன்று ரோஜாக்கள் இந்த உலகம் உள்ளவரை வாடா மலர்களாய் என்றும் வாசமுள்ள மலர்களாய்  இருக்கும்.
    மாதாவுக்கும் ரோஜாப்பூவுக்கும் நெருங்கிய உறவு உண்டு. மலர்களின் ராணி ரோஜா. மாதாவின் திருமண வாழ்க்கையில் இடம்பெற்ற இடம் நசரேத்தூர். நசீரா என்னும் அரபு  சொல்லுக்கு அழகிய ரோஜா என்று பொருள். நசீரா என்ற சொல்லின் திரிபு தான் நசரேத்தூர் என்று ஆனது.அதனால் தான் தேவ இரகசியங்களைகொண்டிருக்கிர ரோஜா என்கிற   புஷ்பமே என்று மாதாவின் பிரார்த்தனையில் சொல்லுகிறார்கள் போலும்.
     மாதா மரியாளின் காலத்திற்க்குப்பிறகு அவர் பிறந்து வளர்ந்த கார்மேல் மலையில் இருந்த வீடு கவனிப்பார் யாரும் இல்லாமல் சிதைந்து போயிற்று. மரியாளுக்கு ஐந்து வயதாகும் போது  அவரது தந்தை சுவக்கீன் மறைந்தார். மாதாவுக்கு நான்கு வயதாகும் போது அவரை ஜெருசலேம் தேவாலயத்தில் காணிக்கையாக ஒப்புகொடுத்து 12 வயதுவரை அங்கேயே வளர்ந்து
வந்தார். அவரது தாய் அன்னம்மாள் கார்மேல் ம்லையை விட்டுவிட்டு மீண்டும் செப்பொரிஸ் என்னுமிடத்தில் தன் தகப்பனாருடன் சேர்ந்து வாழ்ந்தார். யேசு நாதருக்கு 18 வயது   ஆகும் போது அவரது பாட்டி அன்னம்மாள் மறைந்தார். யேசுநாதருக்கு 26 வயதாகும்போது அவரது தகப்பனார் யோசெப்பு மறைந்தார். பின்னர் தன் மகன் யேசுநாதர் 33 வயதில்
சிலுவையில் மரித்தபின் தன் மகனாக அங்கிகரிகப்பட்ட சுவிசேஷகரான அருளப்பருடன் தற்போது துருக்கி என்று அழைக்கப்படும் நாட்டிலுள்ள ஏபேஸூ பட்டிணத்தில் தனது 66 ஆம்  வயதில் மரித்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். எபேஸு பட்டிணத்தில் உள்ள புல் புல் மலையில்[nightingale mountain] மாதா மரியாள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை இன்று வரை கண்டு பிடிக்கப்படவில்லை. அவர் மரித்த மூன்றாம் நாள் தனது ஆத்ம சரீரத்துடன் பரலோகம் சென்றார்.அவரது சடலம் வைத்திருந்த பெட்டியில் அவரது சடலதிற்க்குபதிலாய் ரோஜா மலர்களே நிறைந்திருந்ததாக அப்போஸ்தலர்கள் சாட்சிகூறுகிறார்கள்.
     மாதா மரியாளின் பிறப்பும் சரி, இறப்பும் சரி, அதுபற்றிய இடங்கள் இன்று வரை சர்ச்சைகுறியதாகவே இருக்கின்றது. இஸ்ரேல் நாட்டில் ஜெருசலெம் நகரில் பெத்சாய்தா  குளத்தருகில் மாதா மரியாள் பிறந்த வீடு மற்றும் குகை என்றும் அது அன்னாளின் வீடு என்றும் ஒரு பெரிய அரண்மனை போன்ற தேவாலயம் ஒன்றை காட்டுகிறார்கள்.அதே போல்    மாதாவின் திருக்கல்லறை ஒன்றும் ஒலிவமலை சரிவில் அமைந்துள்ளது.மாதா மரியாளின் விருப்படியே அது கட்டப்பட்டது. ஆந்திரேயர் [St. Andrew ] தான் அக்கல்லரையை   வெட்டினார்.மாதாவின் கடைசிகாலத்தில் சீயொன் மலையிலுள்ள ஒரு வீட்டில் வாழ்ந்தார். அது [ the church of dormition ] தூங்கும் மாதா ஆலயம் என்று அழைக்கப்படுகிறது.
      இதே வீட்டிலேயே அவர் மரித்தார் என்று பாரம்பரியம் கூறுகிறது.
மாதா மரியாளையும் அவரது யேக மைந்தன் யேசுவின் சரித்திரத்தையும் அங்குலம் அங்குலமாக விவரித்துள்ள திருக்காட்சியாளர் புனித காதரின் எம்மரிக் என்னும் ஜெர்மானிய  கன்னியாஸ்திரி அவர்கள் எழுதியுள்ள மாதாவின் வாழ்க்கை மற்றும் யேசுவின் பாடுகள் என்னும் புத்தகதிலிருந்து குறிப்பு எடுத்து இந்த கட்டுரையை எழுதி உள்ளேன்.அவரின்   கூற்று படி ஜெருசலேமில் மாதா பிறந்ததாகக்கூறப்படும் அன்னாளின் வீடு என்பது அன்னாளின் காலத்தில் ஒரு தங்கு மிடமாகவே [ கல்யாண மண்டபம் ] இருந்தது.   மாதா தேவாலயத்தில் காணிக்கையாக ஒப்புகொடுக்கப்பட்ட போதும், மாதாவுக்கும் சூசையப்பருக்கும் திருமணம் நடந்தபோதும் சுவாமி யேசுவை காணிக்கையாக ஜெருசலெம்  தேவாலயத்தில் ஒப்புகொடுக்கபட்டபோதும் இந்த மண்டபத்தில் தான் சகல வைபோகங்களும் நடந்ததாக தன் திருக்காட்சியில் கண்டு எழுதிஇருக்கிறார்.
பிற்கால கிரிஸ்தவர்கள் இந்த இடங்களை பத்திரப்படுத்தி தூய அன்னாளின் வீடு என்று அழைத்தனர். எது எப்படியோ மாதாவின் ஜனனம், அவரது அமல உற்பவம் அனைத்தும்   நான் அறிந்து உங்களுக்கு என்னாள் இயன்றமட்டும் எடுத்து கூறியுள்ளேன். இன்றைக்கும் மாதா பிறந்த இடம் கர்மேல் மலைமீது எழுப்பப்பட்டுள்ள உத்தரிய மாதா ஆலயம் தான்  என்று கூற தகுந்த காரணம் உண்டு.  ஏனென்றால் அந்த ஆலயம் அமைந்துள்ள இடம் ஒரு காலத்தில் அன்னம்மாள் சுவக்கீன் வாழ்ந்த வீடு இருந்த இடம் என்ற பாரம்பரியம் உண்டு.
அதோ எழுந்துவருகின்றவள் யார் ? முற்றிற்று. நன்றி.... வணக்கம்.

No comments:

Post a Comment