Saturday, June 15, 2013

"வினை விதைத்தவனும் திணை விதைத்தவனும்"



"வினை விதைத்தவனும் திணை விதைத்தவனும்"

       சுவாமி ஏசு ராஜாவின் வாழ்க்கையில் பல அதிசய நிகழ்ச்சிகள் நடைபெற்றிருந்தாலும் அவை எல்லாமே விவிலியத்தில் சொல்லப்படவில்லை. எனக்குத்தெரிந்த சில ஸ்வாரஸ்யமான
நிகழ்வுகளை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஸ்வாமிக்கு அப்பொது வயது 33.அவரது வேத போதக அலுவலில் அவர் மிகத்தீவிரமாக ஈடுபட்டுகொண்டிருந்த நேரம் அது. அவர் தன்னுடைய அப்போஸ்தலர்களை அழைத்துக்கொண்டு தான் பிறந்த மண்ணைப் பார்க்க ஆவல் கொண்டு பெத்லஹேமுக்கு வந்தார்.அவரது காலத்தில் அவரது நாட்டில் அவரது காலடித்தடம் படாத இடமே இல்லை.அவர் வாழ்ந்த பல இடங்களுக்கும் அவர் பலமுறை சென்றிருந்தாலும் இந்த முறையே பெத்லஹேமுக்கு வருவது தன் வாழ்நாளில் கடைசி முறையாக இருக்குமென்று அவரது உள்மனதில் அவர் நன்றாகவே அறிந்திருந்தார். எனவே இந்த முறையில் பெத்லஹேமுக்கு வந்தபோது அவருக்கும் பல ஆச்சர்யங்கள் காத்திருந்தன.எல்லாம் அவன் செயல். பெத்லஹேமுக்கு நுழைகையில் வாழ்ந்துநொடித்த ஒருபெரியவரை பார்த்தார் யேசுநாதர். அவரும்யேசுநாதர் யார் என்று அறிந்துகொண்டவராய் தன்னால் இயன்றமட்டும் ஓடிச்சென்று அவரை எதிர்கொண்டு வரவேற்று அவர் காலில் விழுந்து " யேசுபெருமானே நீவீர் வாழ்க" என்று முகமன் கூறி வரவேற்றார். யேசுநாதரும் அவரை அள்ளி எடுத்து அணைத்து " ஐயா பெரியவரே, நீர் வாழ்க.இந்த தள்ளாத வயதிலும் உம் அன்பு எம்மை புல்லரியவைக்கின்றது. உம் அன்புக்கு நன்றி. பெத்லஹெய்மின் நுழைவாயிலில் உம் வீடு இருப்பதால் உம் வீட்டைத்தாண்டித்தானே யாவரும் ஊருக்குள் செல்லவேண்டும்.இந்த வரவேற்பு எல்லோருக்கும் கிடைத்தால் பயணிகள் யாவரும் உம்மை வாழ்த்துவார்களே என்றார்.அதற்கு அவர் " யேசுவே நான் என் நினைவு தெரிந்து என் குடும்ப வம்சாவழிகள் யாவரும் இபடியாகத்தான் செய்கிறொம். எங்கள் வீட்டைத்தாண்டித்தான் இந்த ஊருக்குள் யாவரும் செல்ல வேண்டியிருப்பதால் வெகு தொலைவிலிருந்துவரும் பயணிகள் யாவருமே என் வீட்டில்தான் தாகம் தணித்துச்செல்வர். இதை நாங்கள் பெரும் பேறாகக்கருதி என் காலம்வரை செய்துகொண்டுதான் இருக்கிறேன்.என் பிள்ளைகளும் இவ்வாறே செய்யவேண்டும் எனபழக்கப்படுத்தியிருக்கிறேன். தேவரீர் பெரியமனதுவைத்து என் வீட்டிற்குவந்து தாகம் தணித்துச்செல்ல மிகவும் வேண்டுகிறேன்". என்றார். ஆண்டவரும் மனம் உவந்து தன் சீடர்களுடன்.அவ்வீட்டிற்குள் வந்தார். அந்த வீடு பெரும் பேறு பெற்றது. அந்த வீட்டிற்குள் நுழைந்ததும் ஆண்டவர் யேசு ஏதோ தன்வீட்டிலிருப்பதைப்போன்று உணர்ந்தார். ஆண்டவர் யேசு பெரியவரை நோக்கி, ஐயா, தங்கள் மனைவி எங்கே? உங்கள் பிள்ளைகள் எங்கே?என்றார்.       அதற்குப்பெரியவர் நீண்ட பெருமூச்செறிந்து " யேசு பெருமானே என் பிள்ளைகள் வேலை விஷயமாக ஊருக்குள் போயிருக்கிறார்கள். என் மனைவியாதியின்நிமித்தம் வீட்டில் தனி அறையிலேயே இருக்கிறாள். விசேஷமாக அவள் ஆண்களைப்பார்க்க விரும்புவதில்லை. எல்லாம் அவள் திமிரால் வந்த வினை" என்றார்.யேசுநாதர் ஆச்சர்யமாக " என்ன வியாதி அவர்களுக்கு?" என்றார். பெரியவர் கூறினார் "பெரும்பாடு ஐயா பெரும்பாடு" என்றார். 32 வருடங்களாக அவளுக்கு இந்த உதிரப்போக்கு இருக்கிறது, பார்க்காத வைத்தியம் இல்லை. அவளுக்கு வைத்தியம்.பார்த்தே நாங்கள் வறியநிலைக்கு ஆளானோம்" என்றார்.
யேசுநாதர் மிகவும் வருத்தமுற்றவராய், "ஐயா, அவர்களைக்கூப்பிடுங்கள்" என்றார்.பெரியவர் உள்ளறைக்குச்சென்று தன் மனைவியை கைத்தாங்கலாக அழைத்துவந்தார்.
       அளவுக்குஅதிகமான இரத்தப்போக்கினால் அவள் மிகவும் மெலிந்து நடக்கவும் சக்தியற்றவளாய் கணவனின் துணையுடன் யேசுவின் பாதம்பணிந்தாள். சுவாமி அவள்மீது மிகவும் பரிவுகொண்டு "அம்மணி நீங்கள் குணம் பெறுவீர்களாக" என்றார். உடனே அவளுக்கு உதிரப்போக்கு குணமாகியது. அவள் அதிசயித்தாள். ஆனந்தக்கூத்தாடினாள். சுவாமியின் முகத்தை ஏறெடுத்து நோக்கினாள். அவள் கண்கள் ஆச்சர்யத்தினால் விரிந்தன." ஆம். ஆம். இதே கண்கள்தான். இதே முகம் தான்". என்றாள் மிக்க மகிழ்சியுடனே. அவள் கணவனுக்கு ஒன்றுமே புரியவில்லை."நீ இப்பொதுதானே யேசுவைப்பார்கிறாய். இதற்கு முன் யேசுவை நீ பார்த்தேயில்லையே" என்றார்..அதற்கு அவள் "ஆம். நான் இதற்குமுன் இவரைப்பார்த்தே  இல்லைதான். ஆனால் இவரது தாயாரைப்பார்திருக்கிறேன். அந்த மாதரசிக்குறிய அதே முகமும் அதே கண்களும் அதே தலைமுடியும்கூட இவருக்கும் இருக்கின்றன" என்றாள்.  " சுவாமி உங்களுக்கு நினைவில்லையா? இன்றைக்கு சுமார் 32 வருடங்களாக இருந்துவந்த இந்த பெரும்பாடு எனக்கு ஏன் ஏற்பட்டது தெரியுமா? எல்லாம் என் அகம்பாவதால் வந்த வினை என் திமிரால் வந்த வினை நீங்கள் மறந்திருக்கலாம்.ஆனால் நான் மறக்கவில்லை. அப்பா மகனே யேசுராஜா.நானும் உன் தாயாரும் ஒரே வயதுடையவர்கள்தான். இன்றைக்கு 32 வருடங்களுக்கு முன்பாக அன்று இதோ இருக்கிறாரே என் கணவர், அவரது வயதையொத்த அவரது பால்யசினேகிதர் யோசேப்பு என்ற பெரியவர் தன் இளவயது மனைவியை
என் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார். அப்போது அந்த மாதரசி நிறைமாத கர்பிணியாக இருந்தார். அப்போது என் வீட்டில் ஏதோ விஷேஷம். அதிகமான கூட்டம் இருந்தது. மேலும் மக்கட்தொகை கணக்கெடுப்பிற்காக அதிதிகளாக வந்திருந்தவர்களும் அதிகம்பேர் இருந்தனர். அனைவரையும் நான் நன்றாகவே கவனித்தேன். இருப்பினும் எனது கணவரின் பால்ய
சினேகிதர் வந்திருக்கிறார் என்றதும் அவருக்கும் தனி அறை ஏற்பாடுசெய்துகொடுத்து அவர்களை கவனிக்க ஆட்களையும் ஏற்பாடு செய்துகொடுதேன். விருந்து முடிந்ததும் விருந்தினர் அனைவரும் சென்றபின் என் கணவருடன் அவரது நண்பரையும் அவரது மனைவியையும் மரியாதையின் நிமித்தம் சந்திக்கசென்றேன். அப்பப்பா.... அந்த மாதரசியின் முகசௌந்தர்யம் என்னை தடுமாற வைத்தது.
அவரது முகம் தெய்வீகமானது.அற்புதமான பேரழகானது. அவரைக்கண்டமாத்திரத்தில் அவரது காலடியில் வீழ்ந்தேன். அவரும் என்னை வாழ்த்தினார்.ஆசீர்வதித்தார். ஆனால் எனக்குள்  இருந்த தீய ஆவி எனக்குள் பல சந்தேகங்களை ஏற்படுத்தியது. என் கர்வமும் திமிரும் என் கண்முன்னே எழுந்தன. பெண்ணுக்குப்பெண்ணே அசரவைக்கும் பேரழகியான அந்த
மாதரசியை என் மனம் வெறுத்தது. எங்கே என் கணவர் என்னைவிட்டுவிட்டு அவர்பின்னே போய்விடுவாரோ என்று பயந்தேன். ஆகவே விடிந்ததும் அவர்களை வெளியேற்றுவதிலேயே  குறியாக இருந்தேன். மறுநாள் அவர்களை வெளியேற்றிவிட்டுத்தான் மறு வேலை பார்த்தேன். அடுத்த நாள் அந்த மாதரசிக்கு பெத்லஹேமில் ஒரு குகையில் மாட்டுத்தொழுவத்தில்
ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்திருப்பதாக என் கணவர் கூாறினார்.   ஆனால் அந்தபெண்மணிமீது எனக்கிருந்த வர்மத்தினால் அவரையோ அவரது குழந்தையையோ அவரது   நண்பரையோ நான் பார்க்க விரும்பவில்லை. ஆனால் என் கணவர் அவர்களைப்பார்த்துவந்தார். நடந்துமுடிந்த என் செயல்களாள் என் கணவர் அடைந்த வருத்தம் வார்த்தையில் சொல்லி மாளாது" என்றார்.
     அடுத்து அவள் கணவர் பேசினார்." என் நண்பன் யோசேப்பு தன் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்வித்து பெயர் சூட்ட எனக்கு சொல்லியனுப்பினார். எனக்கு என் மனைவியுடன் சென்று பார்த்துவர ஆசைதான். ஆனால் அவள் பிடிவாதமாக மறுத்துவிட்டாள். நான் என் நிலையை யோசேப்பிடம் சொல்லி என்னை மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.
அவர் என்னை ஆதரவாக அணைத்துக்கொண்டு மீண்டும் என்னை தன் நண்பணாக ஏற்றுக்கொண்டார். யேசுபெருமானே சற்றுமுன்பு தாங்கள் என்னை அணைத்தபோது ஏற்பட்ட பரவசம் என் நண்பண் யோசேப்பு என்னை அணைப்பது போலவே ஏற்பட்டது.  பரிசுகள் கொடுத்து நண்பா யோசேப்பு உன் மகனை என்னிடம் சற்றுநேரம் கொடு என்றேன். அவரும்
மகிழ்வுடன் தன் மனைவியிடமிருந்து தன் குழந்தையை வாங்கி என்னிடம் கொடுதார். அப்பொது அந்த குழந்தை ஆடையின்றியிருந்தது.  என் கையிலேயே சிறுநீர் கழித்தது. நான் மிகுந்த பரவசமானேன்.அப்பொது நான் புதிதாய் வைத்திருந்த லினென் துணியினால் ஆன சிறிய துண்டினால் அந்த குழந்தையை சுற்றினேன்" என்றார். மீண்டும் அவர் மனைவி பேசினாள்." பிறகு என் வாழ்வில் விதி விளையாடியது. அந்த நாட்களில் நான் மிகுந்த அழகியாய் இருந்ததால் மிகுந்த கர்வமுள்ளவளாக மாறினேன். மிகுந்த திமிர் பிடித்தவளாக ஆனேன். யாரையும் மதிப்பதில்லை. எவரையும் எடுத்தெரிந்து பேசினேன். விளைவு?. என் செல்வம்.. என் சுற்றம்.. எல்லாம் என்னை விட்டுப்பிரிந்தது. யேசுவின் தாயாகிய மரியாளைப்பற்றி  உயர்வாக நினையாமல் எங்கே என் கணவர் என்னைவிட்டுவிட்டு அவர்பின்னே போய்விடுவாறோ என்று நினைத்த பாவத்திற்காக நீதியுள்ள ஆண்டவர் என்னை சபித்தார். பெரும்பாடு  என்னைப்பற்றிக்கொண்டது. என் வாழ்க்கையே சோகமாயிட்று. எனக்கு உலகமே வெறுத்துப்போயிற்று. ஐயா யேசு ராஜா தாங்கள் தங்கள் தாயார் முகம் பார்த்தும் தந்தையார் முகம் பார்த்தும்  என்னை தயவுசெய்து மன்னியுங்கள். இதோ நீங்களிப்பொது இருக்கும் இந்த அறையிலேயே உங்கள் தாயாரும் தந்தையாரும் தங்கியிருந்த்தார்கள்" என்றாள். ஸ்வாமி சற்றுநேரம்  மௌனமாயிருந்து அம்மணி, தாங்களும் தங்கள் கணவரும் என் தகப்பனாருக்கு பால்யசினேகிதர்கள் என்றுஅறியும்போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. என் தாயரையும் தந்தையாரையும் உங்கள் விருந்தினராக வைத்து கவனித்ததற்கு மிக்க நன்றி. ஐயா பெரியவரே, தாங்கள் என்னை குழந்தையாய் இருக்கையில் தூக்கிவைத்து கொஞ்சியதற்கும் நன்றி. இதற்கு நானும் உங்களுக்கு ஏதாவது கைமாறு செய்யவேண்டுமென்று கூறி தன் அங்கியில் கைவிட்டு ஒரு சிறிய துண்டை அவரிடம் கொடுத்தார். அது அந்த பெரியவர் அவருக்கு அவர் குழந்தையாய் இருக்கையில் கொடுத்த துண்டாகும். பெரியவர் அதிசயித்து ஸ்வாமி, தாங்கள் அதை உபயோகப்படுத்தவே இல்லையா? என்று கேட்டார்.    யேசுவும் அதற்க்கு மறுமொழியாக பெரியவரே இது அன்றிலிருந்து அப்படியே என்னிடமே இருக்கிறது என்றார். பெரியவர் அந்த துண்டை வாங்கி அப்படியே தன் கண்களிள் ஒற்றிக்கொண்டார்.
     யேசுநாதர் தன் நிர்வானத்தை மூட தான் குழந்தையாய் இருக்கையில் அந்த பெரியவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்ததுபோல அவருடைய மகனுக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தார்.  அதாவது யேசுநாதர் சிலுவையில் நிர்வாணமாக அறையப்பட்டு உயிர்போகும் நிலையில் இருந்தார். தன் பரிசுத்த தாயார் முன்பாகவும் பரிசுத்த பெண்கள் பலர் முன்பாகவும் உலகத்தின்
முன்பாகவும் முழுநிர்வாணமாக வானுக்கும் பூமிக்கும் நடுவாக சிலுவையில் நின்றுகொண்டிருந்தார். அவரது பிறப்பு உறுப்பிலிருந்தும் புட்டங்களிலிிருந்தும் ஏற்கனவே பட்ட கசை  அடிகளாள் இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. வலி ஒரு பக்கம் என்றால் அவமானம் ஒரு பக்கம். உயிர் போகும் வலியைவிட மானம் போகும் வலி ஒரு பக்கம். இதனால் அவரது  மனவலி மிகவும் அதிகமாயிற்று. அப்பொது அந்தப்பெரியவரின் ஒரு மகன் தான் புதிதாய் வாங்கி வந்திருந்த ஒரு பெரிய லினெந் துண்டை எடுதுக்கொண்டு கல்வாரிமலைமீது வேகமாய் ஏறிவந்துகொண்டிருந்தார். சுவாமி உயிர்போகும் நிலையில் கடைசியாய்ப்பார்த்தது தன் தாயாரைத்தான். .அதற்குமுன்பாக அந்த பெரியவரின் மகனைத்தான். பிறகு சுவாமி சிலுவையில் மரித்தார். அவர் மரித்தவுடனே இவர் யேசுவின் நிர்வாணத்தை அந்த சிலுவை மரத்தோடு சுற்றி மூடினார். அந்த பாக்கியம் அவருக்கு கிடைத்தது. பல வருடங்களுக்குப்பிறகு அவர் கிரிஸ்துவராக மாறி புனிதர் ஆனார்.
      பிறகு யேசுநாதர் தன் சீடர்களுடன் பெத்சூர் என்ற இடதிற்கு வந்தார். இந்த இடத்தில்தான் மூன்று ராஜாக்கள் சுவாமியைப்பார்க்க கடைசியாய் தங்கிய இடம்.இந்த  இடத்தில்தான் ஸ்வாமி குழந்தையாய் பிறந்தபோது ஆடு மேய்க்கும் இடையர்களும் வாழ்ந்தனர். அவர்களின் தலைவன் ,உப தலைவன் மற்றும் அவரவர் குடும்பங்களும் வாழ்ந்தன.
        சுவாமி கடைசிமுறையாய் இந்த ஊருக்கு வரும்போது அப்போதைய இடையர் கூட்டத்தலைவன் மற்றும் அவனது உறவினர்கள் பலரும் யேசுவைக்கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.  சுவாமி தன்னை குழந்தையாய் இருக்கும்போது வந்து சந்தித்த இடையர் தலைவன் சமாதிக்குச்சென்று அஞ்சலி செய்தார். அப்போது அங்கு ஒர் அதிசயம் நடந்து இருந்தது. கல்லரையை திறந்தபோது மூன்று வருடங்களுக்கு முன் இறந்து போயிருந்த அந்த இடையர் தலைவனின் சடலம் அழியாமலிருக்கக்கண்டனர். அப்போது சுமார் 45 வயது மதிக்கதக்க ஒருவன் வயலில் வேலை செய்துகொண்டிருந்தான். அவன் தன் வேலையை அப்படியே போட்டுவிட்டு யேசுவின் காலடியில் விழுந்து நமஸ்கரித்தான். யேசுவும் அவனை பரிவோடு எழுப்பி நலம் விசாரித்தார். அப்போது அவன் கூறினான். "யேசுவே தேவரீர் குழந்தையாய் அந்த பெத்லஹெய்ம் குகையில் தீனித்தொட்டியில் படுதிருந்தபோது தானும்10 வயது சிறுவனாக அவரை தன் தகப்பனாருடன் வந்து சந்தித்ததாக" நினைவுகூர்ந்தான். சுவாமி மிகவும் மகிழ்சியடைந்தார். யேசுவே தங்களுக்கு விருத்தசேதனம் செய்விக்கப்பட்டபோது தானும் அவ்விழாவில் கலந்துகொண்டதாகவும் அவரது தகப்பனார் யேசேப்பு தனக்கு ரொட்டிகளும் பழங்களும் உலர் பேரீட்சை பழங்களும் தேனும் இன்னும் பலவும் கொடுத்ததாகவும், மீண்டும் 3 ராஜக்கள் வந்து சென்றபோது தானும் அவன் தகப்பனாரும் அவர்களுக்கு சுமைதூக்கிகளாக உதவி செய்ததாகவும் அதனால் சந்தோஷமான அந்த 3 ராஜாக்களும் தனக்கும் தன் தகப்பனாருக்கும் சில தங்க க்காசுகளை கொடுத்ததாகவும் அவற்றை இன்றளவும் பத்திரப்ப்படுத்தி வைத்திருப்பதாகவும் கூறி அந்த முக்கோணவடிவிலான தங்க காசுகளை அவரிடம் காண்பித்தான். யேசுநாதரும் மிகவும் ஸ்வாரஸ்யமாக இந்த கதையை கேட்கத்தொடங்கினார். மீண்டும் யேசுநாதரின் தாயாரும் தகப்பனாரும் இந்த விளைச்சள் நிலம் வழியே எகிப்த்துக்கு தப்பிச் செல்லும்போது ஏரோதின் ஆட்க்கள் அவர்களைப்பற்றி தன் தகப்பனாரிடம் விசாரித்ததாகவும் அதற்கு அவனது தகப்பனார் " நாங்கள் சோளம் விளைவிக்கும்போது ஒரு யூத வயோதிக தம்பதியரும் ஒரு கைக்குழந்தையும் இவ்வழியே வந்தார்கள். ஆனால் நீங்கள் இப்போது சோளம் அறுவடை நேரத்தில் வந்து விசாரிக்கிரீர்களே "என்று சொன்னபோது அந்தப்புதுமை நடந்தது. அன்று விதைக்கப்பட்ட அந்த சோளப்பயிர்கள் பார்க்கும்போதே தடதடவென்று வளர்ந்து அறுவடைக்கு தயாராய் நின்றது.  நாங்கள் அனைவரும் அதிசயித்துப் போனோம்." என்றான். யேசுநதரும் ஆர்வத்துடன் " பிறகு என்ன நடந்தது"? என்று ஒன்றும் தெரியாதவர் போல் கேட்டார். அவன் கூறினான்  "யேசுவே,அன்றைய சேவகர்கள் "விதைப்பிற்கும் அறுவடைக்கும் ஆறு மாதம் இடைவெளி
நாம் தவறான ஆட்க்களை தேடுகிறோம் " யென்று பின்சென்றுவிட்டார்கள் என்று கூறினான்.யேசுநாதர் மகிழ்ந்து," நண்பா, உனக்கு என்ன வேண்டும்" என்றார். அவனும்" நண்பா யேசுவே எனக்கு உன் அன்பு எப்பொதும் வேண்டும், என் நிலம் நன்றாகத்தான் விளைகிறது.சோளம் தவிர வேறு எதுவும் விளைவதில்லை. நிலம் நிறைய கற்களாகவேஇருக்கிறது.எவ்வளவுமுயன்றும் வேலை.மாள முடியிவில்லை. இதுதான் கவலையாக இருக்கிறது" என்றான். யேசுவும் அந்த நிலத்தை ஆசீர்வதிக்கவே அந்த நிலத்திலிருந்த கற்கள் அனைத்தும்
பொடிப்பொடியாகி நல்ல மண்ணாக மாறியது. யேசுநாதர் ஆசீர்வாதம் பட்டாலே போதும். எப்பேர்ப்பட்ட கல் நெஞ்சமும் நல் நெஞ்சாக மாறிவிடும். இவனே தினை விதைத்தவன்.

       யேசுநாதர் தன் சீடர்களுடன் நல்ல வயலாக இருந்த ஒர் இடத்தில் பிரவேசித்தார். அந்த இடத்தின் சொந்தக்காரன் ஒரு கல் நெஞ்சன். அவனுக்கு யேசுநாதரைக் காண ஏனோ  பிடிக்கவில்லை.பிறவியிலேயே அவன் ஒரு தற்குறி. " நம் முன்னோர்கள் சொல்லாத எந்தக்கருத்தை யேசுநாதர் சொல்லிவிடப்போகிறார். அவர் தன்னை மெசியா என்றல்லவா சொல்லிக்
கொள்கிறார். இது தேவ தூஷணம் அல்லவா. இது தானே நமக்கு ஆகாத விஷயம். அவர் மட்டும் இந்தப்பக்கம் வரட்டும்.நன்றாக நான்கு கேள்விகள் கேட்காமல் அவரை விடப்போவதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தான்.அவனுக்கும் சுமார் 45 வயது இருக்கும்.அப்போது பார்துதான் யேசுநாதரும் அவன் வேலை செய்துகொண்டிருந்த நிலம் வந்து
கொண்டிருந்தார். அவனுக்கு கோபம் தலைக்குமேல் வந்துவிட்டது. தேவ தூஷணங்களைக்கக்கிக்கொண்டே யேசுவின் முன் வந்தான். "வாய்யா யேசு நாதா, நீ என்ன பெரிய மெசியா  என்ற நினைப்பா?" என்று ஏக வசனத்தில் அவரைத் திட்ட ஆரம்பித்துவிட்டான். யேசுநாதர் அவன் அறியமையை பெரிது படுத்தாமல் " நண்பா, உனக்கு என்ன வேண்டும்" என்றார்.
   அதற்கு அவன் " போய்யா உன் வேலையைப்பார்துக்கொண்டு போ. என்னை என்ன சபிக்கவா வந்தீர். உன் சாபம் எல்லாம் என்னிடம் ஒன்றும் பலிக்காது" என்று தூஷணம் கக்கினான்.
யேசுநாதரும் அமைதியாக" நண்பா,நீ என்ன செய்துகொண்டிருக்கிராய்?"என்றார். அவன் மிகுந்த கோபப்பட்டு "என்ன. பார்த்தால் தெரியவில்லையா?, விதைக்கறேன். ஐய்யா
விதைக்கிறேன். கற்களை விதைக்கிறேன்" என்று மிகவும் திமிறாகப்பேசினான். யேசுநாதரும் அமைதியாகச்சொன்னார். "உன் விருப்பப்படியே உனக்கு ஆகட்டும். விதை ஒன்று போட சுறை ஒன்று முளைக்காது. நீ கற்களைத்தானே விதைக்கிறாய். நீ கற்களையே அறுவடை செய்வாய்." என்று கூறி வருத்தத்துடன் சென்று விட்டார். அவ்வளவு தான். அவர் பார்வையிலிருந்து மறைந்த உடனே அவர் சொற்படியே ஆயிற்று. அவன் விதைத்த விதைகள் யாவும் கற்களாய் விளைந்தன. ஒன்றுக்கு நூறாய், ஆயிரமாய்,விளைந்தன. அவன் எதை விளைவித்தாலும் அவை அதே அளவுள்ள கற்களாகவே விளைந்ததால் அவன் நிலம் முழுக்க ஆழமாய் விளைந்து கொண்டே இருந்தது. அவன் விளை நிலம் முழுக்க கற்களாய் விளைந்ததால் விரைவிலேயேஅந்த நல்ல நிலம் யேசுவின் சாபத்தால் பாழ்பட்டுப்போய்விட்டது. எவ்வளவு பயங்கரம். அவன் நாடோடியாய் மாறினான். கடைசிவரை அவன் திருந்தவே இல்லை.
      யேசுநாதர் மேல் அவன் கொண்ட வர்மம் இன்னும் அதிகமாக ஆனது. யேசுநாதரை. எப்படியாவது பழி வாங்கிவிட வழி தேடினான். அவனுக்கும் ரோமானியர்களுக்கும் எப்படியோ பழக்கமாகி ஒரு சிப்பாயாக மாறினான். நாட்கள் பல சென்றன. அவனுக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைதது. யேசுவை கசையால் அடிக்கும் ஆட்க்களிள் இவனும் ஒருவன் ஆனான். இப்போது அந்த சந்தர்ப்பத்தை மிகச்சரியாய் பயன்படுதிக்கொண்டு தன் வர்மம் அனைதும் ஒன்றுகூட்டி அவரை அடிமேல் அடி அடித்தான். பிறகு முட்களாள் ஆன ஒரு முடியைப்பின்னி அவர் தலையில் சூடி யூதர்களின் ராஜாவே வாழ்க என்று ஒரு பிரம்பால் ஓங்கி அடித்தான். அவர் தலைமீது பட்ட. அந்த அடியில் ஒரு நீண்ட முள் யேசுவின் நெற்றியைக்கிழித்துக்கொண்டு அவரது கண்ணுக்கும் நாசிக்கும் இடையே "நச்" என்று இறங்கியது. கொடுமையான அடி அது. இந்த அடியால் பூலோகமே குலுங்கியது. பரலோகமும் கிடுகிடுத்தது,மோட்ச்ச வாசிகள் அனைகவும் ஸ்வாமிக்கு ஏற்பட்ட இந்த துன்பத்தைக்கண்டு கண்ணீர் சிந்தினர். இந்த அடியால் யேசுநாதர் பட்ட துண்பம் எப்பேற்பட்டது என்பதை வார்த்தையில் சொல்லி மாளாது.
       இந்த அடியினால் ஏற்பட்ட இரத்தப்பெருக்கு அவர் கண்களிள் இறங்கி அவரது வலது கண் ஒரு கோழி முட்டைஅளவு வீங்கிப்போய்விட்டது. கண் திறக்க முடியாத அளவு மூடிக்கொண்டது. தன் அடி அவர் சிரசில் சரியாகப்பட்டுவிட்டதா என்று சரிபார்க்க அவரது திரு முகத்தை தன் கைகளாள் திருப்பிப்பார்துக்கொண்டான். அவரது நெற்றியிலும்
கண்களிளும் குபு குபு என்று வழிந்த இரத்தசகதியைப்பார்தும் திருப்தியில்லாதவனாய் மீண்டும் வர்மம் அதிகமாகி அவரது முகத்தில் காறி உமிழ்ந்தான். தன் பழி வாங்குதலை வெற்றிகரமாய் நிறைவேற்றிய திருப்தியில் தன் வீட்டிற்குச்சென்றான். எல்லாம் கொஞ்சம் கால அவகாசத்தில் முடிந்துவிட்டது. யேசுநாதர் இறந்தபின் இவன் நிலைமையும் மாறிவிட்டது.
      இவன் நிலை மட்டும் அல்ல அந்த நாட்டில் வாழ்ந்த பலரது நிலைமையும் மாறிவிட்டது. ஜெத்சமனி தோட்டத்திலிருந்து கல்வாரி மலையில் யேசு மரிக்கும்வரை யார் யார் யேசுநாதரை



தொட்டார்களோ அல்லது அடித்தார்களோ அவர்கள் அனைவரும் பிறகு யேசுவின் சாட்சிகளாய் மாறினர். அனைவரையும் யேசுநாதர் தடுத்தாட்க்கொண்டார். ஆனால் அவன் நிலம் மட்டும் மாறவே இல்லை. அது இன்றளவும் கல் விளைந்த பூமியாகவே, வினை விதைத்த பூமியாகவே நமக்கு சாட்சியமாக இன்றளவும் உள்ளது.

2 comments:

  1. Great Work...Could you please share me your whatsapp number in punithargalcompetition@gmail.com. Thanks.

    ReplyDelete
    Replies
    1. Dear reader. I am very glad to see your response. My whats app no is 8903841185. Donot hesitate to call me at any time. I am a retired exe engineer in N.L. C ltd.

      Delete