Tuesday, June 4, 2013

" புனித பார்த்தலோமியோ நாத்தானியேல் "



" புனித பார்த்தலோமியோ நாத்தானியேல் "

        நினைவிருக்கிறதா.... கானா ஊர் கல்யாணத்தை நேயர்கள் அவ்வளவு விரைவாகவும் எளிதாகவும் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நான் நினைகிறேன்... கல்யாண    மாப்பிள்ளையே நம் நாத்தானியேல் தானே.. இப்போதும் இந்த மாப்பிள்ளையின் வீடு கானா ஊர் கல்யாண வீட்டின் பின் பகுதியில் சரிவில் நடந்தால் தூய பார்த்தலோமியோவின்
வீடு என்று இப்போதும் ஒரு வீட்டையே ஆலயமாக ஆக்கி இருகின்றார்கள். இந்த வீட்டின் சாவி இந்த கானா ஊர் கல்யாண வீட்டிலேயே கிடைக்கும். கேட்டால் கொடுப்பார்கள்.
       யேசுநாதரின் வல்ல செயல்களைப்பற்றி பிலிப்பு தன் தோழனாகிய நாத்தானியேலிடம் கூற " நஸரேத்தூரிலிருந்து நல்ல செய்தி ஏதேனும் வரக்கூடுமோ " என்று கேட்டார்.. எனவே பிலிப்பு நாத்தானியேலை அழைத்துக்கொண்டு யேசுவிடம் வந்தபோது அவர் " நீ அத்திமரத்தின் அடியில் இருக்கும்போதே நான் உன்னை கண்டுகொண்டேன்...இதோ
ஒரு உண்மையான இஸ்ராயேலன்...இவரிடத்தில் நான் குறை ஒன்றும் காணவில்லை " என்று நாத்தானியேலைப்பற்றி யேசு நாதர் நற்சான்று கொடுத்தார்.
இப்படி யேசுநாதரால் பாராட்டப்பட்ட நாத்தனியேல் உண்மையில் யேசுநாதருடைய பால்ய சிநேகிதர். சிறு வயதில் யேசுநாதரும் நாத்தானியேலும் ஜெருசலேம் தேவாலயத்தில்
இவ்வாறு பேசிக்கொண்டார்கள். நாத்தானியேல் யேசுவிடம் " கடவுள் நைல் நதியை ரத்தமாக மாற்றியது பெரும் விந்தைதான்.. அவருக்கு இது ஒரு பெரும் சவால்தானே " என்றார்.
அதற்கு யேசுநாதர் " நாத்தானியேல் கடவுளுக்கு இது மிகவும் எளிதான காரியம்...அவருக்கு கஸ்ட்டமான காரியம் என்று ஒன்று இருக்குமானால் அது மனிதர்களின் இதயங்களை  மாற்றுவதாகத்தான் இருக்கும்... இந்த அண்ட சராசரங்களை எல்லாம் ஒரு வார்த்தையில் படைத்த அவருக்கு மனித மனங்களை மாற்றுவதுதான் பெரும் சவாலான காரியமாக இருக்கும்.. இந்த உலகங்களும் மற்ற கோள்கள் அனைத்தும் அக்ரினைகள்.. ஆனால் மனித மனம் அப்படிப்பட்டதல்ல..அவன் உடல் வேறாகவும் ஆண்மா வேறாகவும் இருந்தாலும்  இரண்டையும் சேர்த்து ஒன்றுக்குள் ஒன்றாக படைக்கப்பட்டிருகின்றான். கடவுளின் சூட்ச்சமம் இங்குதான் இருக்கின்றது. இதை உணர்ந்துகொள்ளும் மனிதர்கள் ஞானிகள் ஆகிறார்கள்...உணர்ந்துகொள்ளாதவர்கள் மிகவும் சாதாரணமான மனிதப்பிறவிகளாக உலாவிவருகின்றார்கள்.. மனித இதயங்களில் கடவுள் வரவேண்டுமானால்   அவன் ஆண்மாவை திறந்துவைத்து கடவுளை வரவேற்கவேண்டும். கடவுளும் அத்தகையோரது ஆண்மாக்கல் பிரவேசிக்க வருவார்...நீ அழையாத உன் வீட்டுக்கு நான் எப்படி   வரமுடியும்... நான் அழைக்கவில்லை என்றால் நீ என் வீட்டுக்கு எவ்வாறு வர முடியும்.. புறிந்ததா நாத்தானியேல். நீ வேண்டுமானால் பார்.. உன் திருமண நாளில் நான்
அங்கிருப்பேன்...அப்போது ஆண்டவரின் வல்லமையை நீ காண்பாய்..." இவ்வளவு காரியங்களையும் நாத்தனியேல் தன் நினைவுக்கு கொண்டுவந்திருந்தார்.
     யேசு நாதர் ஏற்கனவே தனக்கு சொல்லியபடியே தன் திருமணத்தின் போது ரஸம் தீர்ந்துபோனபோது யேசுவின் தாயாரின் வேண்டுகோளை ஏற்று தண்ணீரை திராட்ச்சை   இரஸமாக மாற்றினார். அப்போது யேசுநாதர் " நாத்தானியேல்...அன்று நான் உனக்கு சொல்லியது ஞாபகம் இல்லையோ..அன்று கடவுள் நைல்நதியை ரத்தமாக மாற்றினார் என்று
அதிசயப்பட்டாயே..இன்று தண்னீரை திராட்சை இரஸமாக மாற்றியதைப்பற்றி என்ன நினைகின்றாய்... இனிமேலும் பார்.. கடவுள் செய்யும் வல்ல செயல்களை இன்னும்  அதிகமாகக்காண்பாய்... என்றார்..
அப்போது கல்யாணாப்பந்தி மேற்பார்வையாளன் நாத்தானியேலை அணுகி ," ஐய்யா..சொல்கின்றேனே என்று தவறாக நினைக்கவேண்டாம்..எல்லோரும் நல்ல ரஸத்தை   முதலில் பறிமாறிவிட்டு பிறகு மட்ட ரஸத்தை அடுத்த சுற்றுக்கு பரிமாருவார்கள்...அனால் நீங்கள் நல்ல இரஸத்தை இதுவரை மறைத்துவிட்டீர்களே...எங்கே வாங்கினீர்கள்..எனக்குத் தெரிந்து இத்தகைய ரஸத்தை குடித்தது நம் தலைமுறையை சேர்ந்தவர்களே அல்லர்.. சாலமோன் ஞானிதான் இத்தகைய ரஸத்தை குடித்தவர்.. அந்த சுவையில் மயங்கிய அவர்
அவருக்குப்பிறகு வேறு யாரும் இத்தகைய ரசத்தை குடிக்கவும்கூடாது தயாரிக்கவும் கூடாது என்று ஆணையே இட்டுவிட்டர்...இதனால் எம் முன்னோர்கள் அத்தகைய ரசத்தின்
கலவை சேர்மானத்தை பலநாள் மறைத்துவைத்து முடிவில் மறந்தே போயினர்..அந்த ரசத்தின் ருசி இப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைகின்றேன் " என்றான்.
       பிறகு யேசுநாதர் மணமக்களுக்குப்பரிசாக ஆளுக்கொரு பழம் கொடுத்தார்.. அந்த பழத்தின் வடிவம் இதுவரை நம் முன்னோர் பார்த்திராதது..அதன் சுவையையும் அறிந்திராதது.  ஆம்... அந்தப்பழத்தை பார்த்ததும் இருவரே...அதன் ருசி அறிந்ததும் இருவரே.. அந்த இருவரும் வேறு யாரும் அல்ல... நம் ஆதித்தாய் ஆதித்தகப்பனாராகிய ஆதாமும் ஏவாளும் தான்.
ஆம்... உண்மை.... கடவுள் எந்த காரணத்திர்காக அந்த ஞானப்பழத்தை படைத்தாரோ அந்த காரியம் முடிவடைந்த பிறகு அந்த மரம் அதன் உண்மையான தன்மையை இழந்தது.
     ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபின் அந்த ஏதேன் தோட்டம் சுழன்று எரியும் பட்டயத்தால் ஒரு சம்மனசானவரால் காவல் காக்கப்படுகின்றது. மனிதர்களின் பார்வையினின்று அந்த எதேன் தோட்டம் மறைக்கப்பட்டுள்ளது. எந்த மனிதரும் அங்கு செல்லவும் முடியாது... காணவும் முடியாது. இப்படியாகத்தான் ஆண்டவரே, நீர் பூட்டிய வீட்டை உம்மையன்றி
வேறு யாவரும் திறக்கவும் முடியாது... நீர் திறந்த வீட்டை உம்மையன்றி வேறு யாவரும் பூட்டவும் முடியாது என்னும் ஜெபம் உருவாகிருக்க வேண்டும்.
ஆனால் யேசுநாதர் கடவுளும் மனிதரும் ஆனவராதலால் அவர் அங்கு சென்று அந்த ஞானப்பழங்கள் இரண்டை பறித்துவந்து இந்த நாத்தானியலுக்கு ஒன்றும் அவர் மனைவிக்கு
ஒன்றுமாய் கொடுத்தார். மண மேடையில் வீற்றிருந்த நாத்தானியேலும் அவர் மனைவியும் இந்த பழங்களை அதிசயமாய் பார்த்தார்கள். அங்கிருந்த விருந்தினர்களும் அந்த பழங்களை  அதிசயமாய் பார்த்தார்கள்..நம் நாட்டில் இப்படியோரு பழத்தை நாம் இதுவ்ரை பார்த்ததில்லையே... நம் முன்னோர்கள் கூட பார்த்ததில்லையே...நம் பிதாப்பிதா யாக்க்கோபு காலத்தில்
இருந்த தூதாயீ என்னும் பழம் கூட இப்போது நம் நாட்டில் புழக்கத்தில் இல்லை... அந்த இனமே இப்போது அழிந்துவிட்டது.. ஒருவேளை இதுதான் அந்த தூதாயீ பழமோ என்று  அதிசயபட்டனர்..
       இப்படியாக ஆளாளுக்கு ஒவ்வொன்றாய் இப்பழத்தைப்பற்றி விவாதித்துக்கொண்டிருக்கையில் மணமக்கள் அந்த பழங்களை உண்டனர்.. அவ்வளவுதான்.. இருவரும் மயக்ககுற்று  சாய்ந்தனர். அவர்கள் வாயிலிருந்தும் கண்களிலிருந்தும் நாசியிலிருந்தும் காதுகளிலிருந்தும் அடர்ந்த கரும்புகை வெளியேறியது..இதைப்பார்த்த மணமக்களின் பெற்றோர்
அலறிச்சாய்ந்தனர். கல்யாண வீடு துக்கமயமானது..இப்போது யேசுநாதர், " யாரும் இப்போது கலவரப்பவேண்டாம். ஆண்டவரின் அரும் காரியம் ஒன்று இவர்களிள் நிறைவேறுகின்றது.. கவலைப்படவேண்டாம் என்றார்.. சற்று நேரத்தில் மணமக்கள் மயக்கம் தெளிந்தனர்.. அவர்கள் யேசுவின் பாதம் பணிந்து," ஆண்டவரே...தேவரீர் எம்மை தெரிந்துகொண்டமைக்கு
நான் நன்றி செலுத்துகின்றேன்... எம் நிலையை நாங்கள் உணருகின்றோம்..உத்திரவு கொடுங்கள் ஸ்வாமி " என்றனர். " நாத்தானியேல் இப்போது வேண்டாம்.. காலம் வரும்வரை  காத்திரு " என்றார்.. அப்போது நாத்தானியேல் " ஆனால் ஆண்டவரே...நானும் என் மனைவியும் இன்றிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு தவ வாழ்வை மேற்கொள்வோம்.. பிறகே   இவ்வுலக வாழ்க்கையை துவங்குவோம்.. இது உறுதி " என்றார்..
      யேசுவின் பால்ய நண்பர் நாத்தானியேலுக்கு கொடுத்த அந்த கல்யாணப்பரிசைப்போல் யேசுவின் நண்பர்களும் சகோதரர்களுமான மற்ற அப்போஸ்த்தலர்களுக்கு அவர் எந்த பரிசையும்  கொடுக்கவில்லை.. மற்ற அப்போஸ்த்தலர்களைவிட தன் பால்ய ஸ்னேகிதன் நாத்தானியேலின் மேல் அவர் கொண்டிருந்த அன்பு அப்பேர்ப்பட்டது. நாத்தானியேலும் மற்ற
அப்போஸ்த்தலர்களைக்காட்டிலும் யேசுநாதர் யார் என்று சிறுவயது முதலே அறிந்திருந்ததாலும் அவரது திருமண நாளில் யேசுநாதர் யார் என்று முற்றிலும் அறிந்து கொண்டதாலும் அவர் யேசுவை மற்றவர்களைவிட அதிகமாய்த்தெரிந்து அப்போதிலிருந்தே அவரை மனுமகனாகவும் கடவுளின் அவதாரமாகவும் விசுவாசித்து தன் குருவாக ஏற்றுக்கொண்டார்.
அதனால் தான் தன் திருமண நாளில் அந்த ஞானப்பழம் உண்டு அதன் மயக்கத்திலிருந்து விடுபட்ட பின்னர் அதுவரை தன் நண்பணாகப்பார்த்த யேசுவை அவர் அதன் பிறகு " ஸ்வாமி " என்று அழைக்கலானார்.        அன்றிலிருந்த அவரது ஊழியத்திற்கு சேவை செய்ய தயாரானர். உண்மையான அன்பு உயிரைவிட மேலனது. அதனால்தன் யேசுநாதர், " தன் நண்ப்னுக்காக உயிரைக்கொடுப்பதைக்காட்டிலும் மேலான அன்பு வேறு இல்லை " என்றார். இதற்கு உதாரணம் கொடுப்பதுபோல் அமைந்தது
நாத்தானியேலின் மரணம்.. தன் நண்பனும், குருவும், தலைவனுமாகிய தன் யேசுநாதருக்கு உண்மை நண்பனாக, உண்மை சீடனாக அவர் மரித்தவிதம் மிகவும் கொடுமையானது.
        வேறு எந்த அப்போஸ்த்தலர்களும் இவர்போல் கொடுமையாக மரித்திருப்பார்களோ என்பது கேள்விக்குறிதான்.  நாத்தானியேல் யேசுவின் அன்பான மதிப்புமிக்க சீடர்தான் என்பதை கூறியதே அஸ்ட்டரோத் என்னும் ஒரு கொடிய சாத்தான் தான் .இதைப்பற்றிய ஒரு கதை பின்வருமாறு.
நாத்தானியேல், யூதா ததேயு, மற்றும் பிலிப்பு ஆகிய அப்போஸ்த்தலர்கள் யேசு நாதரின் மறைவுக்குப்பிறகு வேத போதக அலுவலை முன்னிட்டு அன்றைய ஆசிய மைனர் எனப்படும்   இன்றையதுருக்கியை தங்களுடைய மத்திய சேவை மைய்யமாகக்கொண்டு செயல்பட்டனர். ஏனென்றால் துருக்கி நாட்டின் பூலோக அமைப்பு அப்படிபட்டது. இன்றும் துருக்கியின் ஒரு
பகுதி ஐரோப்பவிலும் மற்றோரு பகுதி ஆசியாவிலும் இருகின்றது. இந்த ஆசியாவியும் ஐரோப்பாவையும் ஒரு சிறிய இடத்தில் பிறிப்பது போஸ்போருஸென்னும் சிறிய ஜலசந்தி தான்.
        இந்த நதியில் தான் தூய கிரிஸ்த்தோபர் என்னும் கடின உழைப்பாளி ஆட்க்களையும் பொருட்க்களையும் சுமந்துகொண்டு இக்கரையிலும் அக்கரையிலும் சேர்ப்பதுமான தொழிலை   செய்து வந்தார். அதனாலேயே அவர் வாகன ஓட்டிகளின் பாதுகாவலர் என அழைக்கப்படுகின்றார்.
யேசுநாதர் காலத்தில் அதாவது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முனபாக அவர் காலத்தில் இருந்த மக்களுக்கு பூலோக அறிவு எவ்வளவு இருந்திருக்கும் என்பதை
நேயர்களுக்கு சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அக்காலத்தில் இந்தியா என்பது எத்தியோப்பியாவில் ஆரம்பித்து கிழக்கு ஆசியா நாடுகள்வரை என்பது அவர்கள் கருத்தாக இருந்தது.
     அதாவது இந்தியா என்பது இந்த உலகின் கடைக்கோடியில் இருந்த ஒரு நாடு என்றவரையில் தான் அவர்கள் அறிந்திருந்தது. அந்த தூர தேசம் ஒரு பகுதியில் பகல் என்றால் மறுபகுதி  இரவாக இருக்கும் என்று நம்பினார்கள். ஆக இந்த இந்த இந்தியாவுக்கு தன் வேதபோதக அலுவலை ஆரம்பிக்க நம் நாத்தானியேல் விரும்பினார். எத்தியோப்பாவை சுற்றிகொண்டு
அரேபியா வழியாக இந்தியாவந்தார். இன்றைய பம்பாய் பட்டிணத்தில் கல்யாண் என்னும் ஊரில் அவர் வேதம் போதித்தார். அவர்காலத்தில் எபிரேய மொழியில் எழுதப்பட்ட   மத்தேயு எழுதிய சுவிஷேத்தின் மூலப்பிரதிகளில் ஒன்றை இந்த ஹிந்து வேத பண்டிதர்களிடம் கொடுத்து யேசுவைப்பற்றிய நற்செய்திகளை அறிவிதார் என்று அவரது சரித்திரம்
கூறுகின்றது.
இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பதை அக்காலத்திய சரித்திர ஆசிரியர்களான எசுபியுஸ் மற்றும் தூய போந்தினுஸ் போன்றவர்களின் ஆதாரங்களைப்பார்ப்போம்.
மூன்றாம் நூற்றாண்டில் செசாரியாவில் வாழ்ந்த எஸுபியுஸ் கிரிஸ்த்துவர்களின் சரித்திர ஆசிரியர் என்று நம்பப்படுகின்றார். இவரது கூற்றின்படி தூய பாந்தினுஸ் என்பவர் இந்த   மூன்றாம் நூற்றாண்டுகளில் இன்றைய இந்தியாவுக்கு வேதபோதக அலுவலைமுன்னிட்டு வந்ததாகவும் இன்றைய பாம்பாயின் அருகில் கல்யாண்பகுதிகளில் வாழ்ந்த வேத
விற்பன்னர்களான பிராமணர்களை சந்தித்ததாகவும் அவர்களோடு வேதம் சம்பந்தமாக பேசும்போது அவர்கள் யேசு கிரிஸ்த்துவை அறிந்துள்ளதாகவும் மேலும் இந்த விஷயங்களை
தங்கள் மூதாதையர்கள் தூய பார்த்தலோமியோ மூலம் அறிந்துகொண்டதாகவும் அதற்கு ஆதாரமாக அவர் தங்களுக்கு கொடுத்துச்சென்ற வேத நூலான மத்தேயுவின் கையால்
எழுதப்பட்ட பைபிளை ஆதாரமாகக் காட்டியதாகவும் அவர்தன் புத்தகத்தில் எழுதிவைத்துள்ளதை எசுபியுஸ் ஆதாரமாகக்காட்டுகின்றார்.
பிறகு பார்த்தலோமியோ வடக்கே சென்று துருக்கியிலுள்ள ஹிலியோபோலிஸ் என்னுமிடத்தில் தூய பிலிப்பை சந்தித்ததாகவும் பிறகு லைகோனியா மற்றும் அர்மெனியா சென்றதாகவும்
அவரது சரித்திரம் கூறுகின்றது. இந்த சந்திப்பை புனித கிரிஸ்த்தோத்தோம் என்பவர் உறுதிப்படுத்துகின்றார். அவர்காலத்தில் புனித பார்த்தலோமியோ கால் நடையாக எந்தெந்த
நாடுகளுக்கு சென்றார் என்பதையும் அவர் அந்தந்த நாடுகளில் எவ்வளவு துன்பப்பட்டார் என்பதையும் நினைத்தால் அவர் தன் நண்பனும் குருவும் கடவுளுமான யேசுநாதரின் மீது   எவ்வளவு ஆழமான நட்பு கொண்டிருந்தார் என்பதும் அவரது வேதபோதக அலுவலில் எவ்வளவு ஆர்வம் கொண்டிருந்தார் என்பது விளங்கும். அவர் செல்லாத நாடுகள் குறைவு..அங்கு   அவர் பட்ட பாடுகள் அதிகம். அவர் பார்க்காத சிறைகள் இல்லை. யேசுநாதரும் தன் நண்பரான பார்த்தலோமியோவை மகிமைப்படுத்த விரும்பினார். அதர்க்காகவே யேசுநாதர்   பார்த்தலோமியோவை அர்மீனியாவுக்கு அனுப்பினார்.
      அந்தக்காலத்திய அர்மீனியாவில் அஸ்ட்டரோத்து என்னும் தெய்வமும் பாக்கீர் என்னும் பிரசித்தம். இவர்கள் இருவரும் அண்னன் தம்பிகளாக சரித்திரத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இந்த அஸ்ட்டரோத்து என்னும் தெய்வம் பாக்கீர் என்னும் தெய்வமும் மக்களை அச்சுருத்தி நரபலி முதல் பலவிதமான பலிகலை பெற்றுக்கொண்டு மக்கள் மத்தியில் பல விதமான
குழப்பங்களையும் கலகங்களையும் நோய்களையும் பரப்பி பின் தன் வல்லமையால் குணப்படுத்தி மக்களை தன் அடிமைகளாக பல காலம் வைத்திருந்தது. எனவே இந்த அர்மெனியாவில்   அஸ்ட்டரோத் கோவிலில் மக்கள் கூட்டம் எப்போதும் அலைமோதும்..இந்த கோவிலுக்குத்தான் நம் பார்த்தலோமியோ வந்து ஒரு யார்த்திரீகர் போல தங்கினார்.. அவர் தங்கிய நாளிலிருந்து  அஸ்ட்டரோத் தேவன் வாயே திரக்கவில்லை.
ஒரு சில நாட்க்கள் பொறுத்துப்பார்த்த மக்கள் பக்கத்து நாட்டிற்குச்சென்று பாக்கீர் என்னும் தெய்வத்திடம் இதர்க்கான காரணம் கேட்டனர். அதற்க்கு பாக்கீர் என்னும் தேவன்  கூறியதாவது..." அஸ்ட்டரோத்து கோவிலுக்கு உண்மையான கடவுளும் தேவனுமாகிய யேசுவின் சீடரும் நண்பனுமாகிய பார்த்தலோமியோ வந்து தங்கியதுதான் காரணம். அவர் என்  சகோதரனாகிய அஸ்ட்டரோத்தை கொடும் நெருப்புச்சங்கிலியால் கட்டி நரகத்தில் போட்டுவிட்டார். அங்கு அஸ்ட்டரோத் படும் பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. மூச்சுகூட விடமுடியாமல்  அவர் கஸ்ட்டப்படுவதைப்பார்க்கும்போது எனக்கு மனதுக்கு மிகவும் கஸ்ட்டமாக இருக்கின்றது " என்றது.
   அதற்க்கு மக்கள் " என்ன...நம் தேவன் அஸ்ட்டரோத்தைக்கூட கட்டிப்போடும் ஒருவர் இருக்கின்றாரா ? அவர் எப்படிப்பட்டவர் ? அவரைப்பற்றி மேலும் கூறுவாயாக " என்றனர்.
" சாத்தான் ஓதிய வேதம் "
பாக்கீர், " பார்த்தலோமியோ யார் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றீர்கள்...மனிதர்களில் அவர் அசாதாரணமானவர்...உண்மையான தேவனும் கடவுளும் உண்மையான மனிதனாகவும்  அவதரித்த யேசுவின் அருமை நண்பர் அவர்...யேசுநாதர் மரித்து பரலோகம் சென்று இப்போது இருபத்தாறு ஆண்டுகள் ஆகின்றது.. இந்த இருபத்தாறு ஆண்டுகளாக இந்த மனிதர்  பார்த்தலோமியோ சாப்பிட்டதும் இல்லை... தண்னீர் குடித்ததும் இல்லை...உடை மாற்றியதும் இல்லை... அவரது ஆடைகள் கசங்கியதும் இல்லை... அழுக்கு ஆனதும்
இல்லை...துவைக்கப்பட்டதும் இல்லை.. மங்கியதும் இல்லை...அவரைச்சுற்றி ஆண்டவரின் சம்மனசுக்கள் எப்போதும் வாசம் செய்கின்றனர்... அவர் அறியாத பாஷைகள் இல்லை...எந்த  நாட்டிலும் அவருக்கு செல்வாக்கு உண்டு.. அவர் எந்த மாதிரியான மக்களுடனும் பேசுவார்.. ஏன் என்றால் பேசுவது அவரல்ல.. அவரது தெய்வம் யேசுதான் அவர் வழியாகப்பேசுகின்றார்.
நாம் நினைப்பதை எல்லாம் அவரைசுற்றி உள்ள சம்மனசுக்கள் அவருக்கு அறிவித்துவிடும். அவர் எங்கு போக வேண்டும் ..யாரை சந்திக்கவேண்டும்...என்ன பேசுவதென்பதெல்லாம்  அவருடைய யேசு அவருக்கு அறிவித்துவிடுவார்.. அவர் பகலில் ஏழு முறையும் இரவில் ஏழு முறையும் ஆண்டவனை தொழுகின்றார்.. அவர் முகம் எப்போதும் பரிசுத்தமாக இருக்கும்.  அவர் முகத்தில் எப்போதும்தெய்வீக கலை இருக்கும்.. எப்போதும் ஒருவித பரலோக காந்தி அவர் முகத்தில் சுடர் விடும்...துன்பம் என்பதே அவரிடம் இருக்காது." என்றது.
    இந்த வர்த்தமானங்களை எல்லாம் கேட்ட மக்கள் மிகுந்த ஆச்சர்யம் அடைந்து " பக்கீர்...அவரிடம் உண்மையான தெய்வம் குடிகொண்டுள்ளார் என்பதை அறியும் போது மிகுந்த   ஆச்சர்யம் ஏற்படுகின்றது.. அத்தகைய மனிதரை நாங்களும் பார்க்க விரும்புகின்ரோம்.. அவர் எப்படி இருப்பார் என்பதையும் அவரை எங்கே காண முடியும் என்பதையும் நீவீர் எங்களுக்கு
தெரியப்படுத்த வேண்டுகின்றோம் " என்றனர்..
    பாக்கீர் கூறியதாவது, " பார்த்தலோமியோ காற்றைப்போலானவர். அவர் போகும் இடமும் தெரியாது..அவர் வரும் இடமும் தெரியாது. அவர் யாரிடத்திற்குப்போகவேண்டுமோ அங்கே அவர்  தவறாது சென்றுவிடுவார். அவர் யேசுவின் சித்தப்படியே செல்பவர்..யேசுவின் சித்தப்படியே செய்பவர். நீங்கள் சந்திக்க விரும்பினாலும் அது நடவாது. மாறாக அவர் உங்களை சந்திக்க  விரும்பினால் மட்டுமே அது சாத்தியம் ஆகும்..நீங்கள் கேட்டுக்கொண்டதால் சொல்கிறேன்.. அவர் உருவம் நெட்டையும் இல்லை...குட்டையும் இல்லை...மத்தியமானவர்.குண்டும்
இல்லை.. ஒல்லியும் இல்லை. கருத்த கலைந்த கேசமும் அது மறைத்த காதுகளும்..நீண்ட தீர்க்கமான நாசியும்...பெரிய கண்களும்....சிவந்த முகமும்...உயர்ந்த நெற்றியும் நறுக்கிய  தாடியும் நடுவில் வெள்ளை முடிகளும்... நீண்ட அங்கியும் செம்பழுப்பு சால்வையும்..பிறவிமகான் போன்ற தோற்றமும்கொண்டவர் அவர்..நீங்கள் ஒருவேளை அவரை சந்தித்தால்
உங்களுக்கு புண்ணியமாகப்போகட்டும்... அந்த மனிதரை தயவுசெய்து என்னிடத்திற்கு அழைத்துவந்துவிடவேண்டாம்... என்சகோதரன் அஸ்ட்டரோத்துக்கு ஏற்பட்ட கதிதான் அப்புறம்
எனக்கும் ஏற்ப்படும்.. பிறகு உங்களுக்கு குறி சொல்லவும் பலிகொடுக்கவும் உங்களுக்கு வேறு தெய்வம் கிடைக்காது " என்றது.
இந்த நேரத்தில் அஸ்ட்டரோத்துக்கோவிலில் தங்கியிருந்த பார்த்தலோமியோ ஜெபம் செய்யத்துவங்கினார். அப்போது அந்த கோவிலில் பல காலமாக அசுத்த ஆவியினால்  பீடிக்கப்படிருந்த ஒருவன் " பார்த்தலோமியோ....என்னை வதைக்காதே...நீ செய்யும் ஜெபம் தீயாய் என்னை சுடுகின்றது. மனமிரங்கி என்னை விட்டுவிடு....நான் இவனைவிட்டுப்போய்விடுகின்றேன்...உனக்குப்புண்ணியமாகப்போகட்டும் " என்றது. அப்போது பார்த்தலோமியோ.." அசுத்தப்பசாசே...இவனைவிட்டு ஓடிப்போ... மீண்டும் இவனிடம் வராதே"
என்றார்.. அவ்வளவுதான்...அந்த சாத்தான் பெரும் கூச்சலிட்டுக்கொண்டு அவனை விட்டு நீங்கியது. அங்கிருந்த மக்கள் அனைவரும் திக்பிரமை அடைந்தவர்களாய்   பார்த்தலோமியோவைக்கண்டுகொண்டார்கள்.
    அந்த அஸ்ட்டரோத்து கோவிலில் இந்தநிகழ்ச்சியை கண்ணுற்ற வேறு ஒரு நபர் அந்நாட்டின் அரசன் பொலிமியுஸ். அந்த அரசனுக்கு பேய் பிடித்த ஒரு மகளும் இருந்தாள்..  அவளைப்பீடித்திருந்தது பொல்லாத பேய். பேய் அவளை பீடிக்கும் சமயங்களில் அவள் முகம் விகாரமடையும்.. அருகில் நெருங்கும் யாவரையும் கடித்து குதறிவிடுவாள்...எனவே  அவளை சாதாரண நேரங்களிலிலேயே எப்போதும் கணத்த இரும்பு சங்கிலியால் கட்டிப்போட்டே வைத்திருப்பர்..பேய் வரும் சமயங்களில் இந்த இரும்பு சங்கிலியையும் அவள் கடித்து   எறிந்துவிடுவாள். எனவே அரசன் பொலிமியுஸ் பார்த்தலோமியோவை கண்டு தன் மகளை சாத்தானின் கொடும் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டுமென மிகவும் கேட்டுக்கொண்டான்..
பார்த்தலோமியோவும் அந்த அரசன் பொலிமியுஸ் மகளின் மேல் இரக்கம் கொண்டு அரசனின் அரண்மனைக்கு வந்தார். அங்கு அவள் நிலை கண்டு மனமிரங்கி " சாத்தானே.. நான் உனக்குச்சொல்லுகிறேன்... இந்த பெண்னை விட்டு ஓடிப்போ.." என்றார். அவளைப்பீடித்திருந்த அசுத்த ஆவி சப்த்தம் போடாமல் அவளை விட்டு ஓடிப்போனது..அப்போது   பார்த்தலோமியோ " அரசே..இந்த பெண் முற்றிலும் குணமடைந்துவிட்டாள்..இவள் மயக்கம் தெளிந்து எழுந்த பின் இவளுக்கு நல்ல உணவு கொடுத்து நல்ல ஓய்வு கொடுங்கள்..நாளை  உங்களை வந்து சந்திக்கிறேன் " என்றார்.
     தன் மகள் முற்றிலும் சாத்தானின் பிடியிலிருந்து குணமடைந்துவிட்டாள் என்று அறிந்த அரசன் பொலிமியுஸ் தன் நன்றியை தெரிவிக்க அடுத்தநாள் பல ஒட்டகங்கள் சுமக்கும்   அளவுக்கு தங்கமும் வைரமுமாக கொண்டுவந்து பார்த்தலோமை சந்திக்க அவர் தங்கியிருந்த அந்த அஸ்ட்டரோத்து கோவிலுக்கு வந்தான். ஆனல் அவர் அங்கில்லை.. மூன்று நாள்
வரை தேடித்தேடி அலுத்துவிட்டான் அரசன் பொலிமியுஸ். நான்காம் நாள் அதிகாலை அரசன் கண்விழித்துப்பார்க்கும்பொழுது அவர் முன்னே நின்றிருந்தார் பார்த்தலோமியோ..
     " அரசே என்னை சந்திக்க பொன்னும் வெள்ளியும் கொண்டுவந்தீர்கள்... எதெற்காக இதெல்லாம்... இந்த மண்ணுலக செல்வங்களின் மேல் எனக்கு விருப்பம் இல்லை.. மாறாக என்   தெய்வம் யேசுநாதர் குடிகொண்டிருக்கும் பரலோக உலகத்தின்மீதே எனக்கு விருப்பம் அதிகம் உள்ளது.. இந்த செல்வங்கள் எல்லாம் வெகு விரைவில் மக்கிப்போய்விடும் ஆனால்
பரலோக செல்வம் எந்த காலத்திலும் மக்காது.. மங்காது... அழியாது." என்றார் பார்த்தலோமியோ என்னும் நாத்தானியேல்.
" ஐய்யா பர்த்தலோமியோ அவர்களே...நான் என் தெய்வம் என்று வணங்கிவந்த அஸ்ட்டரோத்து என்னை கை விட்டுவிட்டது. அதர்க்கு சக்தி இல்லை என்று நான்   உணருகின்றன்.. உம் தெய்வம் அதனினும் சக்தி வாய்ந்தது என்றும் உணருகின்றேன்.. எனக்கு உம் தெய்வத்தைப்பற்றி அறிந்துகொள்ள மிகுந்த ஆவலாக உள்ளது.. தயவு செய்து.
உமது தெய்வத்தைப்பற்றி எனக்கு போதியுங்கள் " என்றான் அரசன் பொலிமியுஸ்.
   இந்த சந்தர்ப்பத்திற்காகத்தானே கடவுள் அவரை இந்த நாட்டிற்கு அனுப்பினார். எனவே பர்த்தலோமியோ அரசன் பொலிமியுஸுக்கு இஸ்ரேலிய தெய்வத்தைப்பற்றி பெரும் கதையாக  உபதேசித்தார். பிதா.. சுதன்...பரிசுத்த ஆவி என்னும் இவர்களின் தனித்தன்மையும் அவர்களின் கூட்டுறவாகிய ஏக பரிசுத்த தமதிரித்துவத்தைப்பற்றியும், இந்த உலகத்தைப்படைத்தது  பற்றியும், பிறகு ஆதாம் ஏவாள் படைப்புபற்றியும், அவர்களது கீழ்ப்படியாமை என்னும் பாவத்தால் சாத்தானின் ஆதிக்கம் எவ்வாறு இந்த உலகில் தோன்றியது என்பது பற்றியும்,
அதன் தீவினையிலிருந்து கடவுள் தான் படைத்த இந்த மனித ஜென்மங்களை மீட்ப்பதற்கான திட்டம் என்ன என்பது பற்றியும், கன்னிமாதா படைப்புபற்றியும், அவர் வழியாக யேசுவின்  மனிதாவதாரம் பற்றியும், அவரது வரலாறு, அவரது போதனைகள், அவரது வல்லமையான நற்செயல்கள் பற்றியும், இறந்தவனையும் உயிர்பெறச்செய்த அரும் செயல் பற்றியும், அவர்
பாடுகள் பலபட்டு மரித்தது பற்றியும் மூன்றாம் நாள் அவர் உயிர்த்தது பற்றியும், உயிர்த்த நாற்பதாம் நாள் அவர் பரலோகம் சென்றது பற்றியும் அரசனுக்கும் அங்கிருந்த அவர் மனைவி   அவரது இரு ஆண்மக்கள் மற்றும் சாத்தானின் பிடியிலிருந்த அவர் மகள் அனைவரும் இத்தனை காரியங்களையும் மிகவும் கவனமாக கேட்டுக்கொண்டு வந்தனர்.
இருப்பினும் அரசன் பொலிமியுஸுக்கு அந்த சாத்தான் அஸ்ட்டரோத்தின் மீது இருந்த பாசம் போகவில்லை. எனவே " பார்த்தலோமியோ அவர்களே... நீங்கள் கூறும் காரியங்களை  எல்லாம் கேட்ப்பதற்கு நன்றாகத்தான் இருகின்றது. இருப்பினும் ஒரு சந்தேகம்.. எம் தெய்வம் தற்போது நரகத்தில்தான் இருகின்றாறா? இதை அவர் வாயாலேயே நான் கேட்க்க
விரும்புகின்றன். நீரும்... உம் தெய்வமும் உண்மையானது என்று அஸ்ட்டரோத்துவின் வாயாலே சொல்லட்டும்.. அவரது சாட்ச்சியத்தை என் நாட்டு மக்களும் கேட்கட்டும்.. அப்போது  நானும் என் மனைவி மக்களும் என் நாட்டு மக்களும் உம் தெய்வத்தை எம் தெய்வமாக ஏற்றுக்கொள்கிறோம்... இது சத்தியம். " என்றான்.
" அரசே ..நீரும் உம் மக்களும்... உம் நாட்டு மக்களும் நாளை அதிகாலையிலேயே அஸ்ட்டரோத்து கோயிலுக்கு வந்து சேருங்கள்.. நாளை நடக்கப்போகும் காரியங்களையும் பாருங்கள்  என்றார். அடுத்த நாள் அதிகாலையில் அஸ்ட்டரோத்தின் கோயில் நிரம்பி வழிந்தது. அந்தக்கோயில் பூஜாரிகள் நிறைய பலிகளை செலுத்தியும் அஸ்ட்டரோத் சாமி வரவே இல்லை.
      பிறகு பார்த்தலோமியோ அதற்கு ஆணையிடவும் அஸ்ட்டரோத்து அதன் சிலை வழியாக பேசியது. " நிறுத்துங்கள்... பூஜையையும், பலியையும் நிறுத்துங்கள்..இனிமேல் எனக்கு பலிகள்  கொடுப்பது தேவையற்றது. என் சக்தி அணைத்தும் போய்விட்டது.. நான் இப்போது நரகத்தில் இருக்கின்றேன்... எல்லாம் இந்த யேசுவின் சீடர் பார்த்தலோமியோவினால் வந்த வினை...
அவர் எல்லாம் வல்ல ஆண்டவராகிய யேசுவின் சீடர்...அவரது ஆணைப்படியே நான் நரகத்துக்குச்சென்றேன்...இப்போதும் அவரது ஆணைப்படிய நான் நரகத்திலிருந்து வந்து  உங்களோடு பேசுகின்றேன்..பார்த்தலோமியோ வணங்கும் தெய்வம் தான் உண்மையான தெய்வம்...அவரது அன்பு சீடர் பார்த்தலோமியோ மிகவும் சக்தி வாய்ந்தவர். அவர் வாயிலிருந்து  வரும் வார்த்தைகள் யாவும் யேசுவின் வார்த்தைகளே...யேசு அவர் வாயிலிருந்து பேசுகின்றார்." என்றது.
" நீ இந்த மக்களை எவ்வாறு அடிமைப்படுத்துகின்றாய் சொல் " என்றார் பார்த்தலோமியோ.
" நான் இந்த மக்களை சகல விதமான காம விகாரங்களுக்கும் உட் படுத்துவோம்..இந்த மனிதர்களுக்கு கடின வியாதியை வரவழைப்போம். நமக்கு தூப ஆராதனை மற்றும் பலிகளை  கேட்போம்... நமக்கு இவர்கள் பலி கொடுத்தால் அவர்கள் ஆண்மாக்குள் புகுந்து அவர்களை மீளமுடியாதபடி நம் வசமாக்கிக்கொள்வோம். அவ்வப்போது அவர்களுக்கு சுகம் கொடுத்து
நம்மை முற்றிலும் நம்ப வைப்போம் " என்றது.
" அரசே...போதுமா...உம் தெய்வம் அஸ்ட்டரோத்து பேசியதை கேட்டாயா... இன்னும் சட்சியம் வேண்டுமோ ?" என்றார்.
அரசன், " போதும் ஐய்யா போதும்... இந்த துர்தேவனிடமிருந்து என்னையும் என் நாட்டு மக்களையும் காப்பாற்றுவீராக " என்றான்.
அப்போது பார்த்தலோமியோ " அஸ்ட்டரோத்...நீ..நரகத்திலிருந்துதான் வந்திருக்கின்றாய் என்பதை நிரூபீ " என்றார். அப்போது அந்த கோவில் முழுவதும் கொடும் துர் நாற்றம் வீசியது...
கந்தகம் எரியும் நாற்றம் அது. மேலும் பலவிதமான அசுத்த நாற்றம் வீசியது. அந்த நாட்டு மக்கள் இதற்க்கு முன் இப்படியொரு நாற்றத்தை தன் வாழ் நாளில் நுகர்ந்திருக்க மாட்டார்கள்.
" சரி... உன் அழகிய திருமுகத்தை கொஞ்சம் காட்டு.. இந்த நாட்டு மக்கள் இதுவரை எப்படிபபட்ட தெய்வத்தை இது நாள் வரை வணங்கிவந்தோம் என்று தெரிந்துகொள்ளட்டும் "
என்றார் பார்த்தலோமியோ..
அப்போது அஸ்ட்டரோத்தின் சிலை அசைந்து ஆடியது.. கிரேக்க சாஸ்த்திரமுறைப்படி அழகாக அமைக்கப்பட்டிருந்த அந்த சலவைக்கல் சிலை உயரே எழுந்தது...யாவரும் சிலை உயிர்   பெற்று எழுகின்றதோ என்று அதிசயமாகப்பார்த்தனர். ஆனல் பயங்கரம் அதர்க்குப்பின் இருப்பது அப்போது அவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.அந்த அஸ்ட்டரோத்தின் மனித
உருவ தலை நாய்த்தலையாக மாறியது..சீரும் நாயின் பற்க்கள் வெகு விகாரமாக மாறியது. அதன் கண்கள் நெருப்பைக்கக்கின... நாசியிலிருந்து கொடும் புகை வெளியேறியது.. அதன்  நாற்றம் சகிக்க இயலாமலிருந்தது. அதன் கைகள் விறிந்து பெரும் இறக்கைகளாக மாறின.. உடம்பு பெரும் அரக்கப்பாம்பாக மாறியது... அதன் தலை முதல் வால்வரை ரோமம்கரடு
முரடாய் அசிங்கமாய் தோன்றியது.. அதன் முதுகுப்பகுதியில் முட்கள் முள்ளம்பன்றிக்கு இருப்பனபோல் அமைந்திருந்தன..இத்தகைய தோற்றத்துடன் தோன்றிய அஸ்ட்டரோத்து தேவன்  பெரும் சிம்ம கர்ஜனை செய்தான்.. அது அந்த நாடு முழுவதும் எதிரொலித்தது. அந்த கர்ஜனையை கேட்ட குட்டிகுட்டி தெய்வங்கள் அவர்களும் தங்களாளியன்ற மட்டும் கத்தி
குறலெலுப்பின. அந்த நாடே பரிதவித்து அஞ்சி நடுங்கியது. இந்த காட்ச்சியைககண்ட மக்கள் பலர் பயத்தால் மயங்கி விழுந்தனர்.
" போதும் நிருத்து " என்னும் ஒரு சிம்ம கர்ஜனை வானில் கேட்டது. அப்போது வானில் ஒரு பேரதிசயம் நடந்தது. நான்கு சம்மனசுக்கள் வானில் தோன்றினர். வின்னகம் திறந்தார்போல்
ஒரு காட்ச்சி தென்பட்டது. " மக்களே. இந்த அஸ்ட்டரோத்தின் கொடுமையிலிருந்து உங்களைக்காக்க ஆண்டவன் சித்தம் கொண்டார்.. இந்த பேய்த்தேவன் எப்படிபட்டவன் என்பதை   நீவீர் கண்டீர் அல்லவா.. நம் பார்த்தலோமியோ எல்லாம் வல்ல ஆண்டவராகிய யேசுவின் அன்பார்ந்த சீடர்...அவருக்கு செவிகொடுங்கள்.இப்போதே மனம் மாறுங்கள்...
இந்த அஸ்ட்டரோத்தின் அதிக்கத்திலிருந்து நீவீர் விடுதலை அடைய வேண்டுமானால் உங்கள் மனதை ஆண்டவர்பால் திருப்புங்கள்..ஆண்டவரகிய யேசுகிரிஸ்த்துவை உங்கள்
கடவுளாக ஏற்றுக்கொள்வதாக அறிக்கை இடுங்கள்.. இப்போதே உங்கள் நெற்றியில் இவ்வாறு சிலுவை அடையாளை போடுங்கள் " என்று சிலுவை அடையாளத்தை வரைந்து காட்டினார்.
    மக்கள் எல்லோரும் அவ்வாறே செய்தனர். அப்போது அஸ்ட்டரோத்தின் ஆரவாரம் அனைத்தும் அடங்கி இருந்தது. மக்கள் எல்லோரும் யேசுவைப்போற்றினர். யேசுவுக்கே புகழ் .. ஆமீன் என்றனர். சம்மனசுக்கள் வின்னில் மறைந்தனர்.. அப்போது பார்த்தலோமியோ, " அஸ்ட்டரோத்...நீ மறுபடியும் இங்கு வரவேண்டாம்... நீ உன் இடத்திற்கே செல்...இந்த மனித
ஜென்மம் இதுவரை கால்படாத இடத்திலும் மனிதரோ வேறு உயிரினமோ வாழமுடியாத இடத்தில் நீ சென்று மறைந்துகொள்... நடுத்தீர்வை நாள் வரை நீ வெளியே வரவே கூடாது .. இது  என் யேசுவின் மேல் ஆணை " என்றார்... அப்போது அஸ்ட்டரோத் பெரும் கூச்சலிட்டுக்கொண்டு அனைவரும் பார்க்க மறைந்து போனான்.
     பிறகு மன்னன் பொலிமியுஸ் அணைப்படி அந்த அஸ்ட்டரோத்தின் சிலையையும் மற்றும் குட்டிகுட்டி தேவதைகளின் சிலைகலையும் உடைத்துப்போட்டார்கள்.. போதாததர்க்கு அந்த   கோவிலையே உடைத்து தரைமட்டமாக்கி போட்டுவிட்டார்கள்.. அரசன் தன் மனைவி மக்களுடன் ஞானஸ்நானம் பெற்றான்.. தன் நாட்டு மக்கள் அனைவரையும் கிரிஸ்த்துவர்களாக   மாற்றினான். தன் நாட்டையே ஒரு கிரிஸ்த்துவ தேசமாக அறிவித்தான்.
" இந்த கிரிஸ்த்துவப்பாதிரி பார்த்தலோமியோ நாசமாய்ப்போக..நன்றாக வாழ்ந்த நம் வாழ்வில் அவர் மண்ணை அள்ளிப்போட்டுவிட்டாரே" என்று கதறி அழுதபடி அஸ்ட்டரோத்தின் பூஜாரிகள் அடுத்த நாட்டில் ஆட்சி செய்துகொண்டிருந்த மன்னன்பொலிமியுஸின் மூத்த அண்ணன் அஸ்த்த்ராகஸிடம் சேர்ந்து முறையிட்டனர். மன்னன் அஸ்த்தராகஸ் கடும் சினம்  கொண்டான்." என்ன..?...நம் தெய்வம் அஸ்ட்டரோத்து விரட்டியடிக்கப்பட்டாறா?...நம் தெய்வம் பால்தாதும் விரட்டியடிக்கப்பாட்டறா? என்ன கொடுமையடா சாமி இது..இவர்களையும்  ஒருவன் விரட்டி இருகின்றானா ?.. யாரவன் ? அவன் எந்த நாட்டை சேர்ந்தவன்.. அவனை இப்போதே கைது செய்து என்னிடம் இழுத்து வாருங்கள்.. நான் அவனை யார் என்று
பார்த்துவிடுகின்றேன்.." என்று கொக்கரித்தான். " அரசே நிதானம் தேவை... எதிரி எப்பேற்பட்டவன் என்பதை தெரிந்து செயல்பட வேண்டும்.. அந்த பார்த்தலோமியோ பெரும் மாய   வித்தைகாரன். சித்து விளையாட்டுக்களில் அவன் நிபுணன்..அவனை கைதுசெய்து இங்கு கொண்டுவருவது மிகவும் சிரமம்.." என்றனர்.
" அப்படியானால் நம் நாட்டில் உள்ள கைதேர்ந்த மாய வித்தைகாரர்களையும் ஆயிரம் வீரர்களையும் அழைத்துக்கொண்டு போய் அவனை கைது செய்து இங்கு அழைத்து வாருங்கள்"  என்றான் மன்னன் அஸ்த்திரகாஸ்.        ஆண்டவராகிய யேசு கிறிஸ்த்துவும் தன் பால்ய நண்பனும் அப்போஸ்த்தலருமாகிய பார்த்தலோமியோவை மாட்ச்சிமை படுத்தினார். அதன் விளைவு  பார்த்தலோமியோ கைது செய்யப்பட்டார். அவரது முடிவு நெருங்கியது..பார்த்தலோமியோவுக்கு தன் முடிவு நெருங்கி தன் நண்பனாகிய யேசுவிடம் போய்ச்சேரும் நாள் நெருங்கிவிட்டதை
அறிந்து மிகவும் மகிழ்ந்தார்.
" ஓ... நீ தான் அந்த பர்த்தலோமியோ என்னும் பரதேசியா ? உம்மால் தான் என் சகோதரன் மதம் மாறினாறா?.. என் சகோதரனையும் மதம் மாற்றி எம் தெய்வத்தையும் நாடு கடத்தின  குற்றத்திற்க்கு என்ன தண்டனை தெரியுமா? " என்று சீறினார் மன்னன் அஸ்த்திரகாஸ்..." அரசே,...உம் சகோதரன் உண்மை என்றால் என்ன என்று புறிந்துகொண்டார்... உண்மையான
தெய்வம் எது என்று புறிந்து ஏற்றுக்கொண்டார்..மாற்றியது நானல்லா.. எம்பெருமான் யேசுதான் அவரை மனம் மற்றினார். உண்மைக்கு சாட்ச்சியம் கூறத்தான் எம் தெய்வமும்   இவ்வுலகத்திற்கு வந்தார். அதர்க்காகவும் தன் உயிர் தந்து உண்மையை நிலைநாட்டினார். தானே உண்மையான கடவுளும் உண்மையான மனிதனும் என்று நிரூபித்தார். உம் கடவுள்
தான் உண்மையானது என்றால் அவர் ஏன் ஓடி ஒளிய வேண்டும்?. உம் மந்திரவாதிகள் உண்மையான கடவுளின் அடியவர்கள் என்றால் போய்த்தேடி கண்டுபிடிக்க வேண்டியது தானே?  முடியுமா உங்களாள் ? " என்றார் பார்த்தலோமியோ.
" அரசே,... இவனிடம் அதிகம் பேச வேண்டாம்.. இவன் பேச்சில் கில்லாடி..பேசிப்பேசியே அனைவரையும் தன்பால் ஈர்த்துக்கொள்வான்..இவன் கதையை உடனே முடிக்கும் வழியைப்
பாருங்கள். இப்படிப்பேசித்தான் உம் சகோதரன் பொலிமியுஸ் இவனிடம் நன்றாக மாட்டிக்கொண்டு மதம் மாறினார்.. இனியும் இவனை விட்டு வைத்தால் நம் அனைவருக்கும் நல்லது   அல்ல." என்று நன்றாகப்போட்டுக்கொடுத்தார்கள்.. அதுவும் நன்றாக வேலை செய்தது.     மன்னன் அஸ்த்திரகாஸுக்கு கோபம் தலைக்குமேல் ஏறிக்கொண்டிருந்தது.
" பார்த்தலோமியோ..என்னிடம் உம் பாச்சா பலிக்காது..எம் தம்பியை மதம் மாற்றிய குற்றத்திற்காகவும் எம் தெய்வத்தை நாடுகடத்திய குற்றத்திற்காகவும் உமக்கு என்ன தண்டனை தெரியுமா?...மன்னிப்புக்கேட்டுக்கொள்..என் தெய்வம் அஸ்ட்டரோத்தை திருப்பிக்கொடுத்து அதை கடவுளாக ஏற்று அதற்க்கு தூப ஆறாதனை காட்டினால் உமக்கு மன்னிப்பு வழங்க நான் தயார்..என்ன சொல்கிறாய் ?" என்று சீறினான் மன்னன் அஸ்ட்திரகாஸ்.
" அரசே,... என்னால் நாடுகடத்தப்பட்ட உம் தெய்வம் இனி இந்த உலகம் உள்ள வரை திரும்ப வறாது. அதை நான் திரும்ப வரவழைத்து என்னிடம் தோற்றுப்போன அதற்கு நான்  தூப ஆராதனை காட்ட வேண்டும்... அதைகடவுளாக ஏற்றுக்கொள்ள வேண்டும்... அதனிடம் மன்னிப்புக்கேட்ட வேண்டும் என்பதெல்லாம் நகைப்புக்கிடமாக அல்லவா இருக்கின்றது."
" பார்தலோமியோ... என்னிடம் உன் கேலியும், நையாண்டியும் வேண்டாம்...இனிமேல் உன்னைகாப்பாற்ற உன் தெய்வத்தால் கூட முடியாது. நான் இப்போதே தீர்ப்பு கூறுகின்றேன்...
இந்த கிரிஸ்த்துவப்பரதேஸியை உயிர் போகும் வரை சாட்டையால் அடித்து அப்பொதும் இவன் சாக வில்லை என்றால் தலையை வெட்டிக்கொல்லுங்கள்...தண்டனை கடுமையாக இருக்கட்டும்." என்றான் மன்னன் அஸ்த்திரகாஸ்.
" அரசே, இதற்கெல்லாம் நான் பயப்படப்போவதில்லை...என்பெருமான் யேசு நாதர் கூறிய அதே வர்த்தைகளைத்தான் நானும் உனக்குக்கூறுகின்றேன். மேலிலிருந்து உமக்கு
அருளப்படாதிருந்தால் உமக்கு என்மீது எவ்வித அதிகாரமும் இராது. நடத்துங்கள் உங்கள் காரியத்தை... யேசுவுக்கே புகழ்." என்றார் பார்த்தலோமியோ.
இவ்விதமாக பார்த்தலோமியோ என்னும் நாத்தானியேல் அளவுக்கதிகமான் சவுக்கடிகளாலும் பிறகு தலை வெட்டப்பட்டும் கொல்லப்பட்டர் என்று சில சரித்திர ஆராய்ச்சியாளர்கள்  கூறுகின்றார்கள்... ஆனால் மேலும் பல சரித்திர ஆராச்சியாளர்கள் பார்த்தலோமியோ அப்போஸ்த்தலர் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு உயிருடன் தோல் உறித்து எடுக்கப்பட்டார்  என்றும் அப்படியும் அவர் சில நாள் உயிருடன் இருந்ததாகவும் இதைப்பொருக்க மாட்டாத மன்னன் அஸ்த்திரகஸ் அவரை தலை கீழாக சிலுவையில் அறைந்து கொல்லும்படி  உத்திரவிட்டதகவும், அதுவரையும் கூட அவர் யேசுவைப்பற்றி சாகும்வரையிலும் பிரசங்கித்துக்கொண்டே இருந்ததாக கூறிகிறார்கள்.
அதினால் தான் அர்ச்சிஸ்ட்ட பார்த்தலோமியோ என்னும் அப்போஸ்த்தலர் படங்களில் அவரது கையில் ஒரு வாள் ஒன்று கட்டாயம் இருக்கும். பார்த்தலோமியோவின் சீடர்கள்  அவரது திருச்சடலத்தை பூச்சிதமாக அரசாங்க மரியாதையுடன் அவர் மரித்த இடத்தில் அர்மேனியாவில் அடக்கம் செய்து அங்கேயே ஒரு மடாலயம் கட்டினார்கள்.
இதனால் கோபமுற்ற மன்னன் அஸ்த்திரகாஸ் உடனே அவரது சடலத்தை எடுத்து அவரது உறித்துஎடுக்கப்பட்ட தோலையும் எலும்புகளையும் மூட்டையகக்கட்டி கடலில்  வீசச்செய்தான்
[அவைகள் கடவுளின் சித்தப்படி இத்தலியிலுள்ள லிப்பாரி தீவில் ஒதுங்கியது. அங்கு அவருக்கு அவர் பெயரில் தேவாலயம் ஒன்று எழுப்பபட்டது. மீண்டும்
அவரது அருளிக்கங்கள் ரோம் நகரில் டைபர் நதியின் தீவில் உள்ள ஒரு தேவாலயத்தில் வைக்கப்பட்டு அந்த தேவாலயத்திற்கு பார்த்தலோமியோ தேவாலயம் என்றே பெயரும்  சூட்டப்பட்டுள்ளது. இத்தாலியில் மிலான் நகரில் பார்த்தலோமியோவின் தோல் உறிக்கப்பட்ட சிலை ஒன்று அவரது பெயர் கொண்ட ஒரு தேவாலயத்தில் உள்ளது. அதைப்பார்த்தவர்
நிச்சயம் கண்ணீர் விடுவது உறுதி.. அவரது வெண்கலச்சிலை கருநிறமாக காண்போரை கவர்ந்திழுக்கும்.. தூய பார்த்தலோமியோவின் தோல் உறியப்பட்ட அவரது திருமேனியின்   ஒவ்வொரு நரம்பும் திசுவும் படு சுத்தமாக வடிவமைக்கப்படுள்ளது. ரோம் நகரில் வத்திக்கானில் மைக்கேல் அஞ்சலோ வரைந்த கடைசி நியாயத்தீர்ப்பு என்னும் ஓவியத்தில்
தூய பார்த்தலோமியோ தன் கையால் தானே தன் தோல் உறித்துள்ள காட்சி படமாக வரையப்பட்டுள்ளது. அதில் மைகேல் அஞ்சலோ பார்தலோமியோவின் முகத்திற்கு பதிலாக தன்  முகத்தை வரைந்துள்ளார்.

மன்னன் அஸ்த்திரகாஸ் தன் தம்பியின் நாட்டில் வேத கலாபணையை பரப்பினான்.. இந்த வேதகலாபணையில் மன்னர் பொலிமியுஸ் மனைவி மகள் மற்றும்   பிள்ளைகள் அனைவரும் கொல்லப்பட்டார்கள்.. சில வருடம் கழித்து நாட்டில் அமைதி திரும்பியது.. மன்னர் பொலிமியுஸ் மீண்டும் மன்னர் ஆனர்.. ஆனால் அதில் மகிழ்சியுறாத   மன்னர் பொலிமியுஸ் துறவரம் மேற்க்கொண்ட்டார்.. பிறகு பிஷப் ஆனார்.. மக்களுக்காக நாட்டையும் மதத்தையும் ஏற்றுக்கொண்டார்.. நாட்டில் நல்லாட்சி நடந்தது.
ஆனால் இவ்வளவுக்கும் காரணமான அவரது சகோதரன் அஸ்த்திரகாஸை சாத்தான் அடித்துக்கொண்றது.
இந்த அருமையான அப்போஸ்த்தலர் பார்த்தலோமியோவின் கல்லறை இருந்த மடாலயம் இன்று பக்தர்கள் யாரும் சென்று தரிசிக்க முடியாதபடி உள்ளது. அரசாங்க எல்லை

























பிரச்ச்னைகள் இனம் மதம் போன்ற காரணங்களால் பார்த்தலோமியோவின் கல்லறை மடாலயம் இடித்து நொருக்கப்பட்டுவிட்டது என்பது அனைவருக்கும் ஒரு வருத்தமான செய்திதான்.

No comments:

Post a Comment