Saturday, June 1, 2013

"புனித லோஞ்சினஸ்"--"Saint lonjinus"

 "புனித லோஞ்சினஸ்"

மத்திய இத்தாலியில் அந்த மாந்துவா என்னும் ஊரில் அமைந்துள்ள அழகிய பெரும் ஏரி, அன்று என்றுமில்லா மக்கள் கூட்டத்தால் நிறம்பி வழிந்தது. யாவருக்கும் நிற்ககூட இடமில்லை. அவ்வளவு கூட்டம். காரணம் சில நிமிடங்களில் பரவிய ஒரு வதந்திதான். மழலை பேசும் ஒரு கைக்குழந்தையை அழைத்துக்கொண்டு காற்று வாங்கவும் பொழுது  போக்கவும் இந்த ஏரிக்கறைக்கு வந்திருந்தாள் ஒரு தாய் ஒருத்தி. அப்போது ஒரு ரோமை வீரன் கையில் ஒரு நீண்ட வேலுடன் அவள் கண்முன்னே தோன்றினான்..அவன் எங்கிருந்து
வந்தான் என்றே அவளுக்குத்தெரியவில்லை.
    இருப்பினும் அவள் ” ஐய்யா, தாங்கள் யார்? எங்கிருந்து வருகின்றீர்கள்” என்றாள். வந்தவன் எதுவும் பேசவில்லை. ஆனால் அவன் கண்களிலிருந்து திரளான கண்ணீர் பெருகியது. அவள் ” ஐய்யா, தங்களுக்கென்ன அவ்வளவு துக்கம்…ஏன் இப்படி அழுகின்றீர்கள்” என்றாள்..வந்தவனின் கண்களினின்று வழிந்த கண்ணீர் சற்று நேரத்தில் ஒரு அருவி ஆயிற்று.
அந்த அருவி இந்த மாந்துவா ஏரியில் சேர்ந்து அந்த ஏரியை நிறைத்தது. சற்று நேரத்தில் நடந்துவிட்ட இந்த அதிசயத்தைப்பார்த்த அப்பெண்மணி பெரும் திகிலுற்றாள். அந்த வீரனை திகிலோடு பார்த்தாள். அவன் ” அம்மணி…நான் இதே ஊரைச்சேர்ந்தவன் தான்..நான் பிறந்ததுமிங்குதான். வளர்ந்ததும் வாழ்ந்ததும் இங்குதான்..மரித்ததும் இங்குதான்..என்பெயர் லொஞ்சினுஸ்.. ஆண்டவறாகிய யேசுவை சிலுவையில் அடித்த பாவி நான்… இதோ இந்த ஈட்டியால் அவரைக்குத்திய பாவியும் நான் தான். ஆனல் அவர் இறந்த மூன்றாம் நாள்
உயிரோடு எழும்பினார்.. அதற்கு சாட்ச்சியும் நான் தான் ” என்று சொல்லியபடி காற்றில் கறைந்துபோனான்..அவள் கைகுழந்தை ” அம்மா…அதோ லொஞ்சினுஸ்..யேசுவோடு ” என்றது. அன்றிலிிருந்து அந்த குழந்தை தன் மழலையை விட்டுவிட்டு திருத்தமாகப்பேச ஆரம்பித்தது.
அந்த பெண்மணிக்கு தான் கண்டதை நம்புவதா…இல்லை கேட்டதை நம்புவதா.. இல்லை இதற்க்குசாட்ச்சியாக தன் குழந்த மழலையில் பேசியதை நம்புவதா என்று எதுவும் புறியாமல் அவளும் உறக்க அழுதாள். இவள் அழுவதைக்கண்ட மக்கள் காரணம் கேட்டபோது அவளும் சற்று முன் அங்கு நடந்த சம்பவத்தை விவரித்தாள்..மக்கள் இந்த சம்பவத்தை நம்பினார்கள். காரணம்… திடீரென ஏற்பட்ட ஒரு நீரோடையும் ஏரியில் ஏற்பட்ட வெள்ளபெருக்கும். அதுமட்டுமல்ல…அந்த நீரோடையின் தண்ணீர் உப்பு கறித்தது.
அது லொஞ்சினூஸின் கண்னீர் ஓடை அல்லவா..ஆனால் ஏரியின் நீர் காலம் காலமாக நல்ல தண்ணீர் ஏரி..ஆனால் அதுவும் அன்று உப்பு கறித்தது. எல்லாம் அந்த லொஞ்சினூஸின்  கண்ணீரால் வந்த வினை.
    பிறகு அடுத்த நாள் அந்த ஏரி தன் பழைய நிலைக்கு திரும்பியது. அதன் சுவையும் நல்ல நீரானது.. அந்த மாந்துவா நகர மக்கள் இந்த நிகழ்ச்சியினால் மனம் கஸிந்து மீண்டும்  என்றாவது ஒரு நாள் லொஞ்சினூசை காண மாட்டோமா என்று ஒருவித ஏக்கத்தோடு தினமும் இந்த ஏரிக்கறைக்கு வருவதை வாடிக்கை ஆக்கிக்கொண்டார்கள். அவர்கள் நம்பிக்கையும் வீண் போகவில்லை..என்றாவது ஒருநாள் வீரன் ஒருவன் கையில் ஒரு வேலுடன் இந்த ஏரிக்கரையில் சில நிமிடத்தில் தோன்றி மறைவதை அனேகர் பார்த்திருக்கின்றார்கள்.
இந்த நிகழ்ச்சிக்குப்பிறகு அந்த மாந்துவா நகர ஏரியும் லொஞ்சினுஸ் ஏரி என்று பெயர் பெற்றது.
        அன்று ஜெருசலேம் அதோணிக்கோட்டையில் தன் பாசரையில் அமர்ந்திருந்தான் போஞ்சிபிலாத்தின் அரண்மனை அதிகாரி அபியத்தார்..அப்போது அவன் முன்பாக பவ்வியமாக மண்டியிட்டு ராணுவ வணக்கம் செய்தான் ஒரு ரோமை வீரன். ” சொல் காஷியுஸ்…உன் கண்தான் மாறு கண்ணே தவிர உன் புத்தி கூர்மையானது. அது வைத்த கண் மாறாது என்று எனக்குத்தெரியும்.. என்ன விஷயம்…பாஸ்காத்திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி…சந்தேகப்படும்படியான நிகழ்வுகளும் நபர்களும் ஏதேனும் உண்டா… விபரமாகச்சொல் ” என்றார் அபியத்தார்.
” எஜமான்…சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய இருகின்றன.. தங்கள் உத்திரவின்பேரில் நான் தலைமை குரு கைப்பாஸின் வீட்டிற்குச்சென்றேன். அங்கு எனக்கு ஒரு நண்பன் மூலம் அவர் வீட்டின் உள்ளே செல்வது எனக்கு சாத்தியம் ஆகியது. அங்கு நான்கண்ட காட்ச்சிகளும் நான் கேட்ட பேச்சுகளும் அப்படியே என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது “.
” காஷியுஸ்..நீ கண்ட காட்சிகளையும் கேட்ட பேச்சுகளையும் எனக்கு அப்படியே சொல் ” என்றார் அபியத்தார்.
” எஜமான்…யேசுவின் சீடர் இஸ்காரியோத்து நகரைச்சேர்ந்த யூதாஸ் என்பவர் தலைமைகுரு கைபாசிடமும் அவர் மாமனார் அன்னாஸிடம் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தர். பேச்சு அந்த கலிலேயா யூத ராபீயைப்பற்றி இருந்தது. கடைசியில் ஒரு வழியாக முப்பது வெள்ளிக்காசுக்கு யேசுவை காட்டிக்கொடுப்பதாக ஒத்துக்கொண்டான் அந்தப்பாவி.”
” அடப்பாவி மனுஷா… யேசுநாதர் எபேற்ப்பட்ட மனிதர்…எவ்வளவுபெரிய தீர்க்கதரிசி… நான் முதலாய் அவரது போதனையாலும் அவர் செய்த புதுமையினாலும் அவர் பேரில் பெரும் மதிப்பு வைத்திருக்கின்றேன்.. அவருக்கா இப்படிப்பட்ட ஒரு கதி…இதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய் காஷியுஸ் “
” ஏஜமான்… இந்த யேசுநாதரைப்பற்றி நானும் கொஞ்சம் தெரிந்து வைத்திருக்கின்றேன். அவர் கடவுள் அவதாரம் என்றெல்லாம் மக்கள் பேசிக்கொள்வதை நானும் கேட்டிருக்கின்றேன். ஆனால் இவரால் தங்கள் செல்வாக்கு மக்கள் மத்தியிலிருந்து எடுபட்டு போய்விடும்..அவர் பெரிய மெசியா என்று ஆகிவிட்டால் மக்கள் அவர் பின்னே  போய்விடுவார்கள்..பிறகு ஆட்சி முதல் அதிகாரம் வரை தங்கள் கையைவிட்டுப்போய்விடும். தேவாலய வருமானமும் போய்விட்டல் பிறகு சோற்றுக்கு சிங்கி அடிக்க வேண்டுமே என்ற கவலையினாலும் பொறாமையினாலுமே இந்த தேவாலய குருக்கள் யேசுவை கொல்லத்துடிக்கின்றார்கள்..ஆனலும் இந்த யூதாசுக்கு புத்தி ஏன் இப்படிப்போய்விட்டது.? தன் எஜமானை போயும் போயும் முப்பது வெள்ளிக்கசுக்காவா காட்டிக்கொடுக்க வேண்டும். மனிதர் சுத்த ஈனப்பிறவி போலிருக்கின்றது…நானாக இருந்தால் குறைந்தது மூவாயிரம் தங்கக்காசுகள் கேட்டிருப்பேன். அந்த யூத ராபிக்கு விலை அதிகம் கேட்டிருக்க வேண்டும்.. அதைத்தரவும் அந்த தேவாலாய குருக்கள் சம்மதித்திருப்பார்கள்…அவர்களுக்கு என்ன விலை கொடுத்தாவது யேசுவின் உயிர் வேண்டும்.”
” சரி ,…பிறகு என்ன நடந்தது..”
” தங்களுக்குள் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டார்கள்.. அதன்படி யூதாஸ் யேசுவைக்காட்டிக்கொடுக்க வேண்டுமெனவும் அதற்குக்கைமாறாக முப்பது வெள்ளிக்காசுகள்  பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் உறுதி செய்துகொண்டார்கள். அதற்கு அடையாளமாக தங்கள் அங்கியின் ஒரு பகுதியை தங்கள் குல வழக்கப்படி கிழித்துக்கொண்டர்கள்.இனி இருபுறத்தாரும் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றிகொள்ளவேண்டும். இது கடவுள் மேல் ஆணை. என்று பேசிக்கொண்டார்கள் “
” சரி … இது எப்போது நிகழும். “
” எஜமான்..எனக்குத்தெரிந்து இது பாஸ்காப்பண்டிகைக்கு முன்பாகவே இருக்கும் என்று தோன்றுகின்றது.. யேசுநாதர் இந்த பாஸ்காப்பண்டிகைக்கு வருவார்.. அப்போது  அவரைப்பிடித்துவிடாலாம் என்று பேசிக்கொண்டிருந்ததாக என் நண்பன் தெரிவித்தான் “
” காசியுஸ்..அப்படியானால் . என் கணக்கு சரியாக இருந்தால் யேசுநாதரை பிடித்து விசாரணை நடத்தி கொல்ல உத்திரவிடப்படவேண்டுமானால் குறைந்தது மூன்று நாள்  தேவைப்படும்..இன்று புதன் கிழமை…இன்றிலிருந்து யூதாசையும் அவர் மற்ற சகாக்களையும் ஒரு கண் வைத்து ஒற்றாடல் செய்..மீதி காரியங்களை நான் பார்த்துக்கொள்கிறேன். ஜாக்கிரதை… ராத்திரி நேரத்தில் கண் சரியாகத்தெரியவில்லை என்று கோட்டை விட்டு விடாதே ” என்றார் அபியத்தார்..தனக்கு ஒற்ரைகண் என்பதை பச்சையாகவே சொல்லுகின்றார்
என்று காஷியசுக்கு தெரிந்திருந்தாலும் அவரை நேரடியாக எதிர்க்க அவனால் முடியாதே…அவன் பதவி அப்படி. அபியத்தார் பதவி அப்படி.. மற்றபடி வேறு யாரும் தன்னை இப்படி குறை கூறினால் நடப்பதே வேறு…இருப்பினும் அவனது நண்பர்கள் அவரன் பொட்டைக்கண்ணன் என்றும் மாறுகண்ணன் என்றும் அடிக்கடி கேலி செய்வதை  வாடிக்கையகக்கொண்டிருந்தனர். அந்த மாதிரியான நேரங்களில் அவனது கோபத்தை அன்று அவனிடம் மாட்டும் கைதிகளிடம் காட்டி அவர்களை ஒரு வழிஆக ஆக்கிவிடுவான்.
   ஆனால் அவனுக்கு அபியத்தாரிடாம் அன்று தன் கோபத்தை அடக்கிகொண்டு ” உத்தரவு எஜமான்” என்று அவரிடமிருந்து விடை பெற்றான் காஷியுஸ் என்னும் பொட்டைகண்ணன். அவர்கள் எதிர்பாத்தபடியே பெரிய வியாழன் இரவில் ஜெத்சேமெனித்தோட்டத்தில் யேசுநாதர் தன் சீடர்களுள் ஒருவரான யூதாஸால் முத்தமிட்டு காட்டிகொடுக்கப்பட்டார். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் ராயப்பர் தன் உடைவாளை உருவி கைப்பாஸின் தலைமைக்காவலனை வெட்டினார்..அப்போது அவன் விலகிக்கொள்ளவே அவன் காதில் வெட்டு விழுந்ததுல் அந்தக்காது வெட்டுப்பட்டு தரையில் விழுந்தது. அவன் பெயர் மால்க்குஸ். ஒரு வழியாக யேசுவை தலை குரு கைப்பாசின் அரண்மனைக்கு இழுத்துச்சென்றனர்.
    தன்னைப்படைத்த தேவாதி தேவனுக்கு ஏற்பட்ட கதியைக்கண்டு ஜெத்சமெனித்தோட்டத்தின் மரங்கள் பலமாக ஆடியபடி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன .. ஜெத்ஸமெனி தோட்டத்தின் சுற்றுப்புற சுவரும் இளகியது. அதன்மீது இருந்த பாறை ஒன்றில் யேசுநாதர் தன் கையை வைத்து சற்று நேரம் நின்றார். இளகி இருந்த அந்தப்பாறை அப்படியே அவரது கையை தன்னில் ஒற்றிக்கொண்டது. இன்று வ்ரை யேசுவின் கை அச்சு அந்த பாறையில் இருக்கின்றது.
     கைப்பாஸின் அரண்மனையில் யேசுநாதர் விசாரணைகாக நின்றிந்தார்.. அப்போது ராயப்பர் யேசுவுக்கு நேரப்போகும் கதியைப்பார்க்க அவரும் அங்கு வந்திருந்தார். அப்போது  வேலைகாரபெண் ஒருத்தி ராயப்பரைப்பார்த்து ” நீயும் அந்த கலிலேயனுடன் இருந்தவன் தான்..உன் முகத்தைப்பார்த்தாலேயே தெரிகின்றது நீ ஒரு கலிலேயன் என்று” என்றாள். உடனே ராயப்பர் ” அம்மணி.. எனக்கு அந்த ஆளைத்தெரியாது… எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது..நீ வேறு யாரையோ நினைத்துக்கொண்டு என்னை சொல்லுகின்றாய் ” என்றார். அப்போது தலைமைகுருவின் காது அறுபட்டவனான மல்குஸுவின் உறவினன். நம் பொட்டைக்கண்ணன் காஸியசுடன் சேர்ந்து கொண்டு ” யோவ் கலியேயா..இவனுக்கு வேண்டுமானால் கண் பொட்டையாக இருக்கலாம்.. ஆனால் எனக்கு நல்ல கண்தான்… உண்மையை சொல்…நீயும் அந்த கலிலேயனுடன் சுற்றிக்கொண்டிருந்தவன் தானே. உன்னை நாங்கள் தோட்டத்தில். அந்த ராபீயுடன் பார்க்கவில்லை.. நீ கூட மால்குஸை வெட்டவில்லை.. அந்த ராபீயும் அவனுக்கு காதை சொஸ்த்தமாக்கவில்லை… யாரிடம் விடுகிறாய் கதை. உண்மையை ஒத்துக்கொள் ” என்றான்..
      உடனே ராயப்பர் ” ஐய்யா.. உண்மையில் எனக்கு யேசுநாதர் யார் என்றே தெரியாது அந்த யேசு நாசமாகப்போக” என்று சபிக்கவும் ஆணையிடம் துவங்கினார். உடனே கோழி கூவிற்று..[ அந்த இடம் இன்று வரை கோழிகூவிய ஆலயம் [ காலிகந்து] எனபடுகின்றது the church of caliganth ].
பெரிய வியாழன் அன்று இராப்போஜன அறையில் யேசுவிடம் ராயப்பர் ” ஆண்டவரே உமக்காக நான் உயிர் விடவும் தயங்க மாட்டேன் என அதற்கு யேசு ” ராயப்பா.. நீ கோழி  இருமுறை கூவுமுன் மும்முறை மறுதலிப்பாய்” என்ற வார்த்தைகள் அவருக்கு ஞாபகத்தில் வந்தன. அவ்வளவுதான்.. தன் உயிர் மேல் உள்ள ஆசையால் அதை இழக்க விரும்பாமல்  தன் எஜமானை மறுதலிக்க முன்வந்ததைப்பற்றி ராயப்பர் மிகவும் மனம் வருந்தினார்.. தான் எப்பேர்ப்பட்ட கோழை என்பதை நினைத்து நினைத்து தன்மீதே அவருக்கு வெறுப்புவந்தது.
அப்போது தன் எஜமானும் தன் ஆண்டவருமாகிய யேசுநாதர் தன்னை நோக்கி பார்த்த பார்வையில் அவர் என்ன சொல்ல விரும்புகின்றார் என்பதை அவர் உணர்ந்துகொண்டார்..
” ராயப்பா.. இவ்வளவுதானா உன் வீரம்…என்னோடு மரிப்பதானால் கூட உனக்கு சம்மதம் என்று நேற்றுதானே சொன்னாய்.. இன்று உனக்கு என்ன வந்தது… மனிதனின் உடல்  பலஹீனமானதுதான்.. பாவம் நீ என்னதான் செய்வாய் என்று தன் முகத்தை திருப்பிக் கொண்டார்.. இது ராயப்பரை மேலும் துன்பத்திலாழ்த்தியது. உடனே அவர் அவ்விடம் விட்டு  அகன்றார்..வெளியில் சென்று அழுதார் அழுதார் அப்படி அழுதார். தன் அழுகை யாருக்கும் தெரியாவண்ணம் எவ்வளவோ அடக்கினாலும் அவரை மீறிக்கொண்டுவந்தது அந்த அழுகை..
    இந்த நேரம் பார்த்துதானா யேசுவின் தாய் மரியாள் யேசுநாதருக்கு என்ன ஆயிற்று என்று தெரிந்துகொள்ள அவரிடம் வந்தார்.. அவவளவுதான் ராயப்பர்…தன்னை மீறி வந்த  அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் “ஓ” என்று அழுதுகொண்டே மாதாவின் காலில் விழுந்து ” அம்மா… என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா… என்னை மன்னித்துவிடுங்கள். நான் பெரும் கோழை ஆகிவிட்டேன்… தங்கள் மகனும் எஜமானுமாகிய என் யேசுநாதரை என்னால் கப்பாற்றத்தான் முடியவில்லை… ஆனால் அவரை மறுதலிக்கவும் செய்தேனே  அம்மா…தங்கள் முகத்தில் விழிக்கக்கூடவும் தங்களை அம்மா என்றழைக்கவும் நான் தகுதி இழந்து விட்டேன்…என்னை மன்னியுங்கள்…இந்த பாவியை மன்னியுங்கள்.. .நான் யூதாஸைவிட கேவலமாகிப்போனேன்….அவனாவது யேசுவை இவர் யேசுதான் என்று உறுதியாகக்கூறி அவரைகன்னத்தில் முத்தமிட்டு காட்டிக்கொடுத்தான்..
ஆனால் பாவி நானோ என் எஜமானை நான் அறியேன் என்று மறுதலித்ததுமல்லாமல் அவரை சபிக்கவும் செய்தேன் ஆணை இடவும் செய்தேனே… பாவி நான்..பாவி நான் என்று நெஞ்சு நெஞ்சாக அடித்துக்கொண்டு அழுதார்..
   தன் மகனுக்கு நேர்ந்த கதி பற்றி அறிந்துகொள்ள வந்திருந்த தேவ தாயாருக்கு நம் ராயப்பரை சமாதானப்படுத்துவதர்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ” போதும் ராயப்பா… போதும்… இது எல்லாம் நடக்கத்தான் வேண்டும் என நாம் நன்றாக அறிவோம்… மனம் தெளிவயாக. எங்கே நம் மகன் … அவருக்கு என்னவாயிற்று என்று தன் மகனை கண்களாள் தேடினார்…
   அபோது காஷியுஸ் தன்நண்பனிடம் ” யார் இந்த பெண்மனி ” என்றான். அதற்க்கு அவன் ” அடே பொட்டைகண்ணா…உனக்கு இதுகூடவா தெரிய வில்லை.. அவர் தான் இதோ  கைது செய்யப்பட்டு வந்திருக்கும் யேசு என்னும் யூத ராபியின் தாயார் ” என்றார். தன் நண்பன் தன்னை அனைவர் முன்னிலையிலும் பொட்டைகண்னா என்று சொல்லுவது அவனை கோபம் கொள்ள் வைத்தது. இருப்பினும் தன் கண்டனத்தை அவனிடம் வெளிபடையாகவே கூறினான்..” இதோ பார் நண்பா.. பொதுவில் என் குறையை பற்றிப்பேசாதே..இத்துடன் உன் நட்ப்பைநிறுத்திக்கொள்.” என்றான்.. ஆனாலும் தன் குறையை நினைத்து தன்னை மிகவும் நொந்துகொண்டான்..
    ஒரு வழியாக யேசுநாதருக்கு.போஞ்சிபிலாத்தினால் சிலுவை சாவு தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனையை நிறைவேற்ற ரோமை வீரர்கள் பொறுப்பு
ஏற்றுக்கொண்டார்கள். அபியதார் தலைமையில் காசியுஸ் யேசுவையும் அவரோடு இரு கள்வர்களும் கல்வாரிமலைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்..காஸியுஸும் அவனோடு மற்ற பல வீரர்களும் யேசுவை படுத்திய பாடு வார்த்தையில் சொல்ல முடியாது. காஷியுஸ் தனக்கு பொட்டைக்கண் என்பதால் பலர் மத்தியில் ஏற்பட்ட அவமானங்கள் எல்லாம் ஏதோ யேசுநாதரால் தான் ஏற்பட்டது என்றுநினைத்துக்கொண்டாற்போல் அவரை எவ்வளவு கொடுமைப்படுத்த முடியுமோ அவ்வளவு கொடுமைப்படுத்தினான். அவரை காலால் உதைத்தும்…அடித்தும் காறி உமிழ்ந்தும் கெட்ட வார்த்தைகளால் திட்டியும் வெகுவாக அவமானப்படுத்தினான்.அதில் தான் ஒருவித இன்பத்தையும் கண்டான்.. தன்னை பொட்டை கண்ணன் என்று சொல்லியவர்களை தான் பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு யேசுவை படாத பாடு படுத்திவிட்டான்.
” வளர்ப்பு சரி இல்லை “
     ஒரு வழியாக யேசு நாதருக்கு தன் தாயாரை சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதாவது அதற்கான ஒரு வாய்ப்பை தானே ஏற்படுத்திக்கொண்டார்.. அதற்காகவே அவர் சிலுவையை ஒருமுறை தன் மீதே போட்டுக்கொண்டு கீழே விழுந்தார்.. காஸியசும் மற்ற வீரர்களும் அவர் மீதிருந்த சிலுவையை தூக்குவதற்குள் தன் தயாரை சந்தித்தார். வலியாலும் வேதனையாலும் சோர்வுற்றிருந்த தன் மகனின் திருமுகத்தை தன் கரங்களால் அணைத்துக்கொண்டார் அவர் தாயார்..இருவரது கண்களினின்று கண்ணீர் பெருகியது. அப்போது.இந்த நிகழ்ச்சியாய் பார்த்துக்கொண்டிருந்த காஸியுஸ் ” அம்மா… இப்போது அழுது என்னம்மா பிரயோஜனம்.. அவனுக்கு சின்ன வயதிலிருந்தே நல்ல புத்தி சொல்லி வளர்த்திருந்தால் உனக்கும் இந்த நிலை வந்திருக்காது.. உன் மகனுக்கும் இந்த நிலை வந்திருக்காது.. இப்போது அழுது எந்த பிரையோஜனமும் இல்லை.. எழு.. எழு… இனிமேலாவது உன் எதிர்காலத்தை நல்ல விதமாக அமைத்துக்கொள்…ஒன்று பிள்ளைகளுக்கு சொல் புத்தி இருக்க வேண்டும் .அல்லது சொந்த புத்தியாவது இருக்கவேண்டும்.. இரண்டுமே இல்லையென்றால் இப்படி ஊரில் இவன்போல அடிபட்டு சாக வேண்டியதுதான். புத்தி இல்லாத பிள்ளைகளை பெற்றுவிட்டால் உன்போன்ற தாய்மர்களின் கதி அதோகதி தான்..பாவம் நீ என்ன செய்வாய்.. போய் ஆக வேண்டிய  காரிங்களைப்பார் .. யோவ் .. எழுந்திரைய்யா… நேரம் வேறு ஆகிக்கொண்டிருக்கின்றது” என்றான்
   காசியசின் வாயிலிருந்து வந்த ஒவ்வொரு வார்த்தையும் யேசுவின் தாயாருக்கு நெஞ்சில் ஈட்டியால் குத்தியது போல் ஆயிற்று.. என் வளர்ப்பு சரியில்லைய்யா. அடப்பாவி..நீயும் ஒரு தாய்க்குப் பிறந்தவனா.. என் மகன் யார் என்று தெரியுமா உனக்கு.. என்று பரிசுத்த தேவ தாயாரின் உள்ளம் குமுறிற்று. இதனால் மனம் நொந்து போன மரியாள் தனக்கு பின்னாலிருந்த தூணில் சாய்ந்தாள். தன் திருமகனின் நிலையாலும் தன் வளர்ப்பு சரிய்ில்லை என்ற காஸியஸின் வார்த்தையாலும் குத்துப்பட்ட தேவதாயாரின் நிலை கண்ட அந்த தூணும் மனம் இளகியதுபோல் தன்னை இளக்கிக்கொண்டு அவரது கரங்களை தன்னில் அச்சாக பதித்துக்கொண்டது. மேலும் யேசுவும் மாதாவும் நின்றிருந்த அந்த கல்பாவப்பட்ட தரையானது அவர்களின் பாதச்சுவடுகளை தன்னில் பதித்துக்கொண்டது..இன்றுவரை அவர்கள் பாதம் பதித்த அந்த அச்சுகளை இந்த தாய் மகன் சந்திப்பு நடந்த ஸ்த்தலத்தில் காணலாம்.
காஸியஸின் முறட்டுத்தனமான தாக்குதலால் நிலை குலைந்து போன யேசு நாதருக்கு இரு ரோமன் சிப்பாய்கள் உதவினர்.. அவர்கள் தண்ணீர் பருகும்போது பாக்குமட்டையில் செய்யப்பட்ட தம்ளரால் சற்றே தண்னீர் அள்ளி யேசுவை ஆகடியம் செய்வதுபோல் அவரிடம் குடிக்க கொடுத்தனர். அவர்களின் உள்ளத்தில் உள்ள நல்ல குணத்தை அறிந்துகொண்ட யேசுவும் அந்தநீரை வாங்கிப்பருகினார். பிறகு அவரை கொல்கோத்தாவுக்கு இழுத்துச்சென்று அவரையும் மற்றும் இரு கள்வர்களையும் சிலுவையில் அடித்துக்கொள்வதற்காக அதர்கான தயாரிப்பு வேலையில் ஈடு பட்டனர். அதுவரை அங்கிருந்த ஒரு குகையில் யெசுவை காவலில் வைத்தனர். காசியுஸ் யேசுநாதரின் கழுத்தில் கையை வைத்து கல்தா கொடுத்து அவர் புட்டத்தில் தன் காலால் எட்டி உதைத்து ” உள்ளே போங்கள் மஹா ராசா ” என்று கூறி காவலுக்கு இருவரை அமர்த்தினான். அன்றிலிருந்து இன்று வரை யேசுவுக்கு நேர்ந்த இந்த சடங்கு உலகம் முழுவதும் உள்ள பொலிஸ் ஸ்டேஸன் முதல் சிறைச்சாலை வரை அங்கே செல்லும் எல்லா கைதிகளுக்கும் தவறாது நடக்க ஆரம்பித்தது.
    சிலுவை நடப்படும் குழிகளும் சிலுவை மரங்களும் தயாரான பிறகு யேசுவை அழைத்து ” எஜமான்… சொர்க்கம் பரலோகம் பற்றி எத்தனை தடவை கூறி இருப்பீர்கள்… இப்போது அங்கே நிரந்தரமாக போகப்போகிறீர்கள்… வாருங்கள் மஹாப்பிரபூ ” என்று நக்கலாக அழைத்து அவரை சிலுவையில் அடிக்க கூட்டிச்சென்றான் காஸியுஸ். யேசுவை நிர்வாணமாக்கி அவரை சிலுவைமீது கிடத்தி அவரின் இடதுகையில் ஆணியால் அறைந்து அந்த கையை சிலுவையோடு பிணைத்தார்கள், யேசுவின் வலது கையை இழுத்து ஏற்கனவே
அடையாளமிட்ட இடத்தில் வைத்து ஆணி அடிக்கலாம் என்றால் அவரது இடதுகையில் ஆணியால் ஏற்பட்ட காயத்தால் அவரின் பல நரம்புகள் உள் இழுத்துக்கொண்டன. அதனால் லேசில் அவரது வலது கை நீளவில்லை. அப்போது காஸியுஸ் யேசுவின் வ்லது கையை பற்றி இழுத்தவனை ” அடே பரதேசிப்பயலே… ராத்திரி முழுசும் தண்ணீர் அடித்துவிட்டு
எவகூட படுத்துபுட்டு இப்பவந்து முக்கறே.. அடேய் சோதாப்பயலே…இப்படி இழுக்கனுண்டா என்று மிகவும் கொச்சையாக தரம்கெட்ட முறையில் பேசி யேசுவின் மணிக்கட்டை ஒரு  கயிற்றால் கட்டி தன் இடதுகாலை தரையில் ஊன்றி வலதுகாலால் யேசுவின் திரு மார்பில் உதைத்துக்கொண்டு இழுத்தான். அப்போது யேசுவின் வலது முழம்கைஎலும்பு ” மலுக்” என்னும் சப்த்தத்துடன் விலகியது. இதனால் அவரது வலது கையின் நரம்புமண்டலம் தன் கட்டுப்பாட்டை இழந்தது. ஒரு வழியாக யேசுவின் வலது கை அணியால் அடிக்கப்பட்டது. திருச்சிலுவை உயர்த்தப்பட்டபோது யேசுவின் வலது கை எந்த கட்டுப்பாட்டுக்கும் வராமல் ஆங்கில எழுத்தான ” L ” போல் ஆயிற்று.
      யேசுவின் திருச்சிலுவைப்பாடுகள் வார்த்தையில் சொல்லி மாளாது.            யேசுவுக்கான மரண நேரம் வந்ததும் அவர் சிலுவையில் மரணித்தார்.. அப்போது சூரியன் தன்னொளி கொடாது மறைந்து போனான். கிராணம் பீடித்தது. வானில் இடி இடித்தது. இந்த நிகழ்ச்சியைக்கண்ட மக்கள் அனைவரும் மிகுந்த திகிலுற்றனர். அதிகமாக திகில் கொண்டவ்ன் நம் காசியஸ் தான்.. இந்த யேசுவுக்கு தன்னால் எப்பேற்ப்பட்ட கொடுமைகள் ஏற்பட்டன..தான் இந்த யேசுவின் பேரில் ஏன் இவ்வளவு கொடுமையாய் நடந்துகொண்டோம்.. இதோ இவர் இப்போது மரணிக்கும்போது உலகமே ஆஞ்சி நடு நடுங்குகின்றனவே.. உண்மையிலேயே இவர் கடவுளின் திருமகன்தான். ஐய்யோ நான் என்ன செய்வேன்.. நான் பெரும் கொடுமைகாரனும் மிகுந்த பாவியும் ஆனேனே… ஆண்டவா என்னை மன்னியும். யேசுவே என்னை மன்னியும் என்று மிகுந்த மனஸ்த்தாபதோடு அழுது மன்றாடினான். இதேபோல அவனுடன் சேர்ந்துகொண்டு யேசுவை துன்புறுத்திய மற்ற இரு ரோமை வீரர்களும் அழுது மன்றாடினார்கள். ஆயிற்று… எல்லாம் நடந்து முடிந்துவிட்டது..உயிரோடு சிலுவையில் இருக்கும் அனைவரையும் கொல்லுங்கள் என்றார் அபியத்தார்.
யேசுவை அவர் உயிரோடிருகின்றரா என்று சோதித்தான் காஸியுஸ். ” எஜமான்.. யேசு மரித்துவிட்டார் ” என்றான்..” இருபினும் அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்து ” என்றார் அபியத்தார். எனவே லொஞ்சினுஸ் தன் ஈட்டியால் யேசுவின் திரு மார்பில் குத்திதிறந்தான். அதன் வழியாக வெளியேறியது யேசுவின் உடலிலிருந்த மிச்ச ரத்தம். வெளியேறி காஸியஸின் கண்களில் பட்டது. அப்போதுதான் அந்த பேரதிசயமும் நடந்தது. ஒரு கண் பொட்டையான காஸியஸ் அந்த கண்ணில் பார்வை பெற்றான்.. அப்போதே அவன்
யேசுவின்பால் ஈர்க்கப்பட்டு மனமாற்றம் அடைந்தான்..மற்ற இரு கள்வர்களையும அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கக்கண்டு அவர்கள் கால்களை குண்டாந்தடியால் அடித்து  உடைத்துக்கொண்றார்கள். கொன்றுபோட்ட அந்த இரு கள்வர்களின் உடலையும் சிலுவையினின்று இறக்கி தெரு நாயை இழுத்துச்செல்வதுபோல இழுத்துக்கொண்டுபோய் அருகிலிருந்த நகர கோட்டை வாசலுக்கு சற்று தள்ளி அவசரம் அவசரமாக புதைத்தார்கள். அவர்களை ஏன் என்று கேட்க்க நாதி இல்லை. அவர்கள் உடலை கேட்டு வாங்கிச்செல்லவும் ஆட்க்கள் இல்லை.
      யேசுவின் திரு மரணம் நிறைவேறிய பிறகு அவரது உடல் அடக்கம் நடைபெற்றது. அவரது அடக்கத்திர்காக அவரது மரித்த திரு உடல் சிலுவையினின்று இறக்கப்பட்டது.  யேசுவின் மரித்த திருவுடலை மாதா தன் மடியில் போட்டுக்கொண்டு புலம்பித்தீர்த்தாள். அவரது திரு உடலினின்று வெளிப்பட்ட அனைத்து இரத்தக்காயங்களையும் மாதாவே தன் கரம் கொண்டு கழுவினாள். அதற்க்கு வேண்டிய தண்ணீரையும் கடற்காளானையும் காஸியுஸ் தன் கைப்பட கொண்டு வந்து கொடுத்தான்..பிறகு அவரது திரு உடலை கீழே கொண்டுவந்து ஒரு நீண்டகல் பலகையில் வைத்து யேசுவின் ஈமச்சடங்குக்கு தேவையான அனைத்துக்காரியங்களையும் செய்தார்கள். பிறகு யேசுநாதர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.
    அப்போது ஒரு பெரும் பிரச்சனை எழுந்தது. யேசுநாதர் உயிரோடு இருந்த பொழுது அவர் இறந்த பின் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவார் என்று அவரது சிஷ்யகோடிகள்  கூறக்கேட்டோம் எனவே அவருடைய கல்லறைக்கு பலத்தகாவல் போடப்படவேண்டும் என்று யூத குருமார்கள் கேட்டுக்கொண்டார்கள். அதன்படி காஸியுசின் தலைமையில் யேசுவின் கல்லறைக்கு பலத்த காவல் போடப்ப்பட்டது. யேசுவும் தான் கூறியபடியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்…இதற்க்கு காஸிய்ஸும் அவனோடு இருந்த மற்ற ரோமை வீரர்களும் சாட்ச்சியம் கூறினார்கள். யேசு உயிர்த்த செய்தியை அந்த நேரமே காஸியுஸ் ஓடிச்சென்று போந்திபிலாத்துவிடம் அறிவித்தான்.
” காஸியுஸ்… உண்மையைக்கூறு.. நீ ஒன்றும் குடித்திருக்க வில்லையே ?” என்றான் பிலாத்து.
” இல்லை எஜமான்…எனக்கும் குடிப்பழக்கம் உண்டுதான். ஆனால் யேசுவின் வார்த்தைகள் எந்த அளவு உண்மையானவை என்று அறியவே நான் விழித்திருந்து காவல் காத்தேன்.”
” சரி..அப்படியானால் நீ கண்டவற்றை அப்படியே எனக்கு விவரி ” என்றார் போஞ்சிபிலாத்து.
” என் எஜமானே… நேற்று இரவில் வானத்திலிருந்து இறங்கிவந்த வானவர் இருவர் மிகுந்த ஒளிப்பிரகாசத்தோடு எங்கள் கண்முன்னே தோன்றினார்கள்..அந்த ஒளி கண்கூசும்படி  இருந்தது. சற்றும் சிரமமின்றி சீல் செய்ய்யப்பட்டிருந்த அந்த பதிமூன்றடி விட்டமும் இரண்டடி அகலமும் கொண்ட அந்த வட்டக்கல்லை அப்புறப்படுத்தினர். அப்போது அந்த
கல்லறையினுள்ளே யேசு நாதர் மிகுந்த ஒளியுடனும் மாட்சிமையுடனும் எழுந்ததை நாங்கள் எங்கள் கண்ணாறக்கண்டோம். பின்னர் வானவர் மறைந்தனர். யேசுநாதரை சுற்றி இருந்த
கோடித்துணி கல்லறையினுள் இப்போதும் இருக்கின்றது ” என்றான். மிகுந்த ஆச்சர்யம் அடைந்தான் போஞ்சி பிலாத்து. ஆனால் இதை நம்ப மறுத்தனர் யூத சாஸ்த்திரிகள். யேசுவின் சீடர்கள் ரோமை வீரர்கள் தூங்கும்போது அவரது உடலை எடுத்துக்கொண்டு போய் அவர் உயிர்த்துவிட்டார் என்று கூறுவதாக கதைகட்டிவிட்டார்கள்…
    ஆனால் காஸியுசும் அவனுடன் இருந்த மற்ற ரோமை வீரர்களும் யேசு நாதர் உயிர்த்தெழுந்தார் என்பதர்க்கு சாட்சியமாக பொதுமக்கள் கூடுமிடங்களிலெல்லாம் போய் யேசுநாதர் உயிர்த்தார் அதர்க்கு நாங்கள் சாட்ச்சிகள் என்று உறக்கக்கூறினார்கள். இது யூத குருமார்களுக்கு மிகுந்த தர்ம சங்கடத்தையும் எரிச்சலையும் ஏற்ப்படுத்தியது.
    பரிசுத்த ஆவி திருவிழாவுக்குப்பிறகு இராயப்பர் கையால் சிலோவாம் குளத்தில் ஞானஸ்நானம் வாங்கிய முதல்மனிதர் காஸியஸ் தான். அவரோடு மற்ற இரு ரோமை வீரர்களும் திருமுழுக்கு பெற்றனர்.. ஞானஸ்நானம் பெற்றபிறகு காஸியுஸ் லொஞ்சினுஸ் என்று அழைக்கப்பட்டார்.
    ஜெருசலேமில் கிரிஸ்த்துவம் புற்றீசல் போல் வெகுவேகமாகப்பரவியது. இதைக்கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தனர் யூத மத குருமார்கள். இந்த யேசு நதரைக்கொல்வதன் மூலம் எல்லாப்பிரச்சனைகளும் முடிவுக்கு வந்துவிடும் என்று பார்த்தால் நிலைமை கட்டுக்கடங்காமல் வெகு வேகமாக அல்லவா பரவுகின்றது.. எனவே ஜெருசலேமில் கிரிஸ்த்துவத்துக்கு தடை விதிக்கப்படுகின்றது.. இறந்த யேசு கிறிஸ்த்துவைப்பற்றி இனி யாரும் பொதுவில் பிரசங்கிக்கக்கூடாது என்றும் மீறி செயல்படுபவர்களுக்கு கடுமையான தண்டனை
கிடைக்கும் என்றும் யூத மத குருக்கள் அறிவித்தார்கள்..ஆனால் யேசுநாதரைப்பற்ரிய எந்த தடையும் உடைக்கப்பட்டது.. இதர்க்குக்காரணம் அந்த இராயப்பரும் அவருடைய மற்ற அப்போஸ்த்தலர்களும் போதாக்குறைக்கு இந்த மூன்று ரோமை வீரர்களான காஸியசும் அவன் கூட்டாளிகளும் தான்.. யேசுவின் சீடர்களை பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில் காஸியஸையும் அவன் நண்பர்களையும் கதை முடிப்போம் என்று முடிவு செய்தார்கள். இதை அறியவந்த காசியசும் [ லொஞ்சினுஸ்] அவன் நண்பர்களும் இருவரும் தலைமறைவானார்கள்.
    தப்பிச்சென்ற லொஞ்சினுஸும் அவன் இரு நண்பர்களும் துருக்கியிலுள்ள கப்பதோக்கியாவுக்கு சென்று அங்கு யேசுவின் நற்செய்தியை பறை சாற்றினார்கள்.அனேகர் மனம் மாறி யேசுவை பின்பற்றினார்கள். [ சில சரித்திர ஆராய்ச்சியாளர்கள் லொஞ்சினுஸ் பிறந்தது கப்பதோக்கியாவில்தான் என்றும் அதனால்தான் அவன் அங்கு சென்று தன் வேத போதக அலுவலை ஆரம்பித்தான் என்றும் கூறுகின்றார்கள்]. பிறகு லொஞ்சினுசும் அவ்ர் நண்பர்கள் இருவரும் இத்தாலியிலுள்ள மாந்துவா நகர் வந்து யேசுவின் நற்செய்தியை அறிவித்தனர்.
ஆனால் விதி இங்கும் அவர்களைத்துரத்தியது. லொஞ்சினுசும் அவர் நண்பர்கள் இருவரும் துறவரம் அடைந்து டீக்கன் அந்தஸ்த்தில் இருந்தனர். அவர்களின் தோற்றமே மாறிப்போய் இருந்தது. அந்த நகர மக்களுக்கு லொஞ்சினுசின் கதை தெரிந்திருக்க நியாயமில்லை.
    அந்த மாந்துவாநகர ஏரிக்கறையிலிருந்து சில காத தூரத்தில் தங்களுக்கென ஒரு குடிசையை அமைத்துக்கொண்டு விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தனர். தன் இரண்டு  நண்பர்களையும் மேலும் சற்று தூரத்தில் குடிசைபோட்டு அவர்களையும் தனியே வைத்து விவசாயம்போக மீதி நேரங்களில் வேத போதக அலுவலை மேற்கொண்டார் லொஞ்சினுஸ். இப்படியாக இரண்டு வருடம் கழிந்தது
இந்த இரண்டுவருட இடைவெளியில் ஜெருசலேமில் பெரும் மாற்றங்கள் நடந்தன. யேசுநாதரைப்பற்றிய பக்தி பல மதத்தவரிடையேயும் பல இனத்தவரிடேயும் பலத்த மாற்றத்தை  ஏற்படுத்தியது. இந்த மன மாற்றத்தின் விளைவாக கிரிஸ்த்துவம் வெகுவாக வளர்ச்சி அடைந்ததால் எப்படியும் அதை மேற்கொண்டு பரவவிடாமல் தடை செய்யும் முயற்ச்சியில்
ஈடுபட்டனர் யூத குலகுருக்கள்.
    . ஆனல் எவ்வளவுக்கெவ்வளவு தடுத்தார்களோ அவ்வளவுக்கவ்வளவு வீறு கொண்டு எழுந்தது கிரிஸ்த்துவம். கப்பதோர்க்கியாவிலிருந்து வந்த யூதர்கள் பலர் கிரிஸ்த்துவர்களாக மாறக்காரணம் லொஞ்சினுஸும் அவன் இருநண்பர்களும்தான் என்றும் மேலும் அவன் இப்போது இத்தாலியிலுள்ள மாந்துவாவில் இருகின்றான் என்று கேள்விபட்டதுமே தலைமை குருக்கள் அன்னாசுக்கும் கைப்பாசுக்கும் வயிற்றில் புளியைக்கறைத்தது. அவர்கள் கதையை முடித்துவிட்டுதான் மறுவேளை என்று பிலாத்துவை அணுகினர்.
அரசியலும் மதமும் கைகோர்த்துக்கொண்டால் அன்றி அந்த நாட்டில் அமைதியாக ஆட்சி செய்ய முடியாதென இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து வைத்திருந்தான் பிலாத்து. எனவே காஸியசும் அவன் நண்பர்கள் இருவரும் சரியான முறைப்படி ராணுவத்தில் இருந்து ஓய்வுபெறவில்லை… அவர்கள் ராணுவத்திலிருந்து ஓடிவிட்டனர் என்று காரணம் காட்டி அவர்கள் மூவரின் உயிருக்கும் உலை வைத்தனர். இதற்காக கொலைஞ்சர் மூவரை இத்தாலியிலுள்ள மாந்துவா நகருக்கு அனுப்பி அவர்கள் மூவரையும் தீர்த்துக்கட்ட அனுப்பினான் பிலாத்து. அந்த கொலைஞர்கள் மூவரும் மாந்துவா வந்து லொஞ்சினுஸிடமே காஸியசைப்பற்றி விசாரித்தனர்.
லொஞ்சினுஸ் தன்னை யார் என்று காட்டிக்கொள்ளாமல் தான் ஒரு துறவி என்றும் இன்னும்கூட சுற்று வட்டாரத்தில் சில துறவிகள் இருப்பதாகவும் கூறி அவர்களையும் அறிமுகம் செய்துவைத்தார்.. துறவிகள் பொய் சொல்லமாட்டார்கள் என்று நம்பிய அவர்கள் ஒரு மூன்று மாத காலம் அவர்களுடனே இருந்து தாங்கள் தேடிவந்த நபர்களை கண்டுபிடிக்க முடியாமல் மீண்டும் ஜெருசலேம் செல்ல விரும்புவதாக கூறினார்கள். அப்போது லொஞ்சினுஸ் அவர்கள் வந்த காரியம் நிச்சயம் நிறைவேறும் எனக்கூறி தன்னை வெளிப்படுத்தினார்.
    வந்த வீரர்களுகு ஆச்சர்யமான ஆச்சர்யம் அடைந்தனர்..அவர்களும் மன மாற்றம் அடைந்தனர். ஆனால் அரசாங்க ஆணையை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்ததை முன்னிட்டு தங்கள் மனதை கல்லாக்கிகொண்டனர். லொஞ்சினுஸும் அவரின் இரு நண்பர்கள் தாங்கள் வேத சாட்சிமுடிபெற வேண்டும் எனவும் தங்கள் அரசாங்க ஆணையை  நிறைவேற்றிகொள்ள தடை ஏதும் இல்லை எனவும் தங்களையே அவர்களிடம் கையளித்தனர். அந்த மாந்துவா ஏரிக்கருகில் உள்ள மலையில் அவர்கள் மூவரையும் கூட்டிச்சென்று அவர்களின் தலையை வெட்டி அங்கேயே புதைத்தனர். ஆனல் லொஞ்சினுஸின் தலையை மட்டும் சாட்ச்சிக்காக அவர்கள் வேலினால் குத்தி அப்படியே ஜெருசலெம் கொண்டுவந்தனர்.
தேவாலய குருக்கள் அது லொஞ்சினுஸ் தலைதான் என்று உறுதிபடுத்திக்கொண்ட பின்னர் நகரின் சாக்கடை தேங்கும் ஒருஇடத்தில் போட்டுச்சென்றனர். லொஞ்சினுஸ் வேத சாட்ச்சியாக மரிப்பதற்க்குமுன் தான் கையோடு கொண்டுவந்திருந்த யேசுவின் திரு இரத்தம் அடங்கிய கடற்காளானை பாதுகாப்பாக தன் இல்லத்திலேயே ஒரு ஜாடியில் போட்டு மூடி புதைத்துவைத்திருந்தார். இதுபலநாள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆண்டவரின் சித்தப்படி புனித ஆந்திரேயர் கனவில் லொஞ்சினுஸ் தோன்றி யேசுவின் புனித இரத்தம் புதையுண்டிருக்கும் ஜாடி இருக்குமிடத்தை காண்பித்தார். புனித ஆந்திரேயர் பின்னர் அந்த இடத்தை தோண்டி அந்த புனிதபொருட்க்கள் அடங்கியுள்ள ஜாடியை எடுத்து அந்த மாந்துவா நகர மகளிடம் கொடுத்து லொஞ்சினுஸ்பற்றிய சரித்திரத்தையும் கூறினார்.
    லொஞ்சினுஸ் சரித்திரம் பற்றி அறிய வந்த பிறவியிலேயே குருடான மாந்துவா நகர் விதவைப்பெண் ஒருத்தி தன் ஒரே மகனுடன் கல்வாரி மலைக்கு வந்தாள்.. எப்படியாவது  லொஞ்சினுசுக்கு பார்வை கிடைத்ததுபோல ஆண்டவர் தனக்கும் பார்வை அளிப்பார் என்னும் விசுவாசத்தோடு கல்வாரி மலைக்கு வ்ந்தாள்.. ஆனால் அவளுக்கு அங்கு  விதிவிளையாடியது..அந்த குருட்டுப்பெண்ணின் பதினைந்து வயதுடைய ஒரே மகன் திடீரென இறந்தான்.. தனிமரமானாள் அந்த விதவை.. அந்த நேரத்தில் அவளுக்கு ஆறுதலாக துணைக்கு ஓடி வந்தார் லொஞ்சினுஸ். தன் தலை புதையுண்டு இருக்கும் இடத்தைக்காட்டி அதை அவளே எடுத்துக்கொடுத்தால் ஆண்டவராகிய யேசு அவளுக்கு பார்வைகொடுப்பது உறுதி என்று கூறி மறைந்துபோனார்.. அவளும் விடாமுயற்சியுடன் தனக்கு உதவ வந்தவர்களிடம் தன் கதையைகூற அவர்களும் உதவிக்கு வந்தனர்.. இந்தபெண் லொஞ்சினுஸ் கூறிய இடத்தை கண்டுபிடித்து அந்த சாக்கடையில் இறங்கினாள். அவள் கழுத்துவரை அமிழ்ந்து கைகளால் அவர் தலையை கண்டுபிடித்து அதை வெளியே கொண்டுவந்தாள்.. அவளுக்கு உடனே பார்வைகிடைத்தது. லொஞ்சினுஸ் கூறியபடியே அவளுக்கு நிகழ்ந்தது. ஆண்டவர் வாக்கு மாறாத தேவன் என்பது நிருபணம் ஆயிற்று.
   இந்த பிறவி குருட்டுப்பெண்ணுக்கு பார்வை கிடைத்ததும் மீண்டும் தன்னுடைய சொந்த ஊராகிய இந்த மாந்துவா நகருக்கு நம் லொஞ்சினுஸ் தலையை தன்னோடு கொண்டு வந்தாள். பலகாலம் அந்த தலை அவளுடைய பாதுகாப்பில்தான் இருந்தது. அவளுக்குப்பின் காலம் செல்லச்செல்ல யார் யார் கையிலெல்லாம் மாறி மாறி இப்போது ஜெர்மனியில்  இருக்கின்றது. ஆனாலு இது லொஞ்சினுஸ் தலைதான் என்று நிரூபிக்கக்கூடிய நம்பத்தகுந்த ஆதாரம் இல்லை. லொஞ்சிமுஸ் வாழ்ந்த காலத்தில் ஏழையாக இருந்தாரோ அல்லது வசதியானவராக இருந்தாரோ தெரியாது. ஆனால் இன்று அவரது கபாலத்தில் பொதித்துவைக்கப்பட்டுள்ள வைரங்களும் முத்துக்களும் கோடானகோடிபெறும். கொடுத்துவைத்தவர்தான் லொஜினுஸ்.அவரது கபாலம் தற்போது துன்ெஸ்ன்பெர்க்… ஜெர்மனியில் ஒரு ஆலயத்தில் உள்ளது. இந்த ஆலயத்திற்கு ஏறாள்மான பிறவிக்குருடர்கள் தங்களுக்கு கண்பார்வை வேண்டி திரு யாத்திரையாக வ்ந்து வேண்டிச்செல்கின்றனர்.
பிற்காலத்தில் இந்த மாந்துவா ஊரில் ஒரு மிகப்பெரிய ஆலயம் ஒன்று உருவாகியது. அந்தக்கோவிலின் அருளிக்கமாக யேசுவின் திரு இரத்தம் அடங்கிய கடற்காளான் வைக்கப்பட்டுள்ளது. இன்றுவரை அது பொதுமக்களின் பார்வைக்கு மிகுந்த ஆடம்பரமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தைக்காண கானக்கண் கோடி வேண்டும்..
யேசுவின் மார்பைப்பிளந்த லொஞ்சினுசின் வேல் தற்போது ஹொஃப்பெர்க் அரண்மனை.. வியன்னாவில் உள்ளது. அந்த வேலானது இழுத்துவிட்டால் நீளக்கூடிய அமைப்பு உள்ளதாகவும் மும்முறை நீளத்தை மாற்றும் அமைப்புள்ளதும் ஆகும். தற்போது அதன் நடுவில் வெள்ளியால் ஒரு கவசம் செய்து அதன் மீது இது லொஞ்சினுள் ஈட்டி என்று எழுதி வைத்துள்ளார்கள்.

புனித லொஞ்சினுஸ் எங்களுக்காக வேண்டிகொள்ளும்.

No comments:

Post a Comment